ShareChat
click to see wallet page
search
*🌺🌺 "இன்றைய* *சிந்தனை" 14.03.2026)* ---------------------- *"அறிவு தான் வளர்ச்சிக்கு."* .….............................. அறிவு தான் வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவை வளர்த்துக் கொள்வதில் ஆர்வம் காட்ட வேண்டும். எதையும் சிறப்பாக செய்வதற்கு மன ஈடுபாடு மட்டுமே போதாது.. அறிவுத் திறனும் தேவை. அத்தகைய அறிவை வளர்த்துக் கொள்வதற்கு தொடர்ந்து தேடலும் இருந்து கொண்டே இருக்க வேண்டும். அறிவு வளம் பெருகப் பெருக நம் சிந்தனையில் தெளிவும், செயலில் உறுதியும் உண்டாகும்.. தத்துவஞானி பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் அவர் வெளிநாட்டு பயணம் மேற்கொண்ட போது ஒரு நாட்டு விமான நிலையத்தில் சுங்கத்துறையை சேர்ந்த பரிசோதனை அதிகாரிகள் அவரிடம், " விலை மதிப்பு மிக்க பொருட்கள் இருந்தால் வெளியே எடுத்துக் காட்டுங்கள் என்று அதட்டிக் கேட்க.. அதற்கு அவர் கோபப்படாமல் மிகவும் சாந்தமாக " என்னிடம் இருக்கும் விலை மதிப்பு மிக்க பொருள் அறிவு ஒன்று தான். அதைத் தவிர வேறு எதுவும் என்னிடம் கிடையாது.. அதை உங்களுக்கு என்னால் தர முடியாது. மற்றும் உங்களால் என்னிடம் இருந்து அதை பறிமுதல் செய்யவும் முடியாது என்றார்.. ஆம்..அறிவு வளம் உங்களுக்குத் தெளிவையும், துணிவையும் நிச்சயம் பெற்றுத் தரும்.. *ஆம்..நண்பர்களே..* எதையும் சீர்தூக்கிப் பார்த்து உணரத்தக்க அறிவே உண்மையான அறிவு.எனவே, நாம் கற்றுக் கொண்ட அறிவை ஒவ்வொரு வாய்ப்புகளிலும் பயன்படுத்தி வாழ்க்கையில் முன்னேறுவதற்கு முயலுவோம்.. (ஆக்கம்.உடுமலை சு.தண்டபாணி....................)💐💐💐💐💐💐💐.. #உற்சாக பானம்# #உற்சாக பானம் #👪 cute family members 👪 #பொழுது போக்கு #கதை சொள்ளரோம்
உற்சாக பானம்# - அறிவுடையவர்களுக்கு 00 செல்லும் இடம் எங்கும் மதிப்பு அறிவுதான் அச்சத்தை முறிக்கும் அருமருந்து." அறிவுடையவர்களுக்கு 00 செல்லும் இடம் எங்கும் மதிப்பு அறிவுதான் அச்சத்தை முறிக்கும் அருமருந்து." - ShareChat