தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள வடகரை பகுதியைச் சேர்ந்தவர் முருகேஸ்வரி.. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு மதுரை சரவணன் என்பவருடன் முருகேஸ்வரிக்கு திருமணம் நடைபெற்று.. அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
தேனி முருகேஸ்வரி
ஆனால் திருமணத்திற்கு முன்பே பல பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தவர் சரவணன்.. போதாக்குறைக்கு மதுபோதைக்கும் அடிமையானவர்.. தினமும் குடித்துவிட்டு வந்து முருகேஸ்வரியை வன்கொடுமை செய்துள்ளார்.
இதனால் மனமுடைந்த முருகேஸ்வரி, கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு கணவரைப் பிரிந்து தன்னுடைய அம்மா வீட்டுக்கு வந்துவிட்டார்.. தங்களது வாழ்வாதாரத்துக்காக ஜவுளிக்கடையில் வேலை பார்த்து தன் குழந்தைகளைக் காப்பாற்றி வந்தார்.
கணவன், காதலன்
மதுரையில் உள்ள ஜவுளிக்கடையில் முருகேஸ்வரி பணிபுரிந்தபோது, கார்த்திக் என்பவருடன் முருகேஸ்வரிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. முருகேஸ்வரிக்கு ஏற்கனவே திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை அறிந்திருந்தும், கார்த்திக் அவரைத் தீவிரமாகக் காதலிப்பதாகவும், திருமணம் செய்துகொள்வதாகவும் உறுதியளித்தார். ஆனால் இதற்கு கார்த்திக்கின் வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பியது...
முருகேஸ்வரியை திருமணம் செய்ய கூடாது என்று அவரைக் குடும்பத்தினர் அடித்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலும் குடும்ப எதிர்ப்பை மீறி முருகேஸ்வரியை திருமணம் செய்துகொண்டு, பெரியகுளத்தில் குழந்தைகளுடன் குடியேறி தனிக்குடித்தனம் நடத்த துவங்கினார் கார்த்திக்...
சொத்துக்காக இப்படியா
வாழ்க்கை சீராக செல்லும் என்று நம்பியிருந்த நிலையில், திருமணமான 2 மாதங்களிலேயே கார்த்திக்கின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்கத் திட்டமிட்டனர். இதற்காக கார்த்திக்கை மிரட்டி அவர்கள் அழைத்துச் சென்றுவிட்டதாகத தெரிகிறது.
இது குறித்து முருகேஸ்வரி பெரியகுளம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையின் போது, முருகேஸ்வரியுடன் சேர்ந்து வாழ்வதாக கார்த்திக்கும் அவரது குடும்பத்தினரும் உறுதி அளித்ததால், அவர் புகாரைத் திரும்பப் பெற்றார். ஆனால், இந்த சமரசத்தின்போது கார்த்திக்கின் சொத்துகளில் உரிமை கோரக்கூடாது என முருகேஸ்வரியிடம் கட்டாயப்படுத்தி பத்திரத்தில் கையெழுத்து வாங்கியதாக கூறப்படுகிறது.
தேனி கலெக்டர்
மீண்டும் கணவருடன் வாழத் தொடங்கிய முருகேஸ்வரிக்குத் துன்பங்களே மிஞ்சின. கார்த்திக்கின் அம்மா சந்திரா மற்றும் குடும்பத்தினரின் தூண்டுதலால், கார்த்திக் தினமும் முருகேஸ்வரியை சித்திரவதை செய்து தாக்கியுள்ளார். ஒருகட்டத்தில் பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவிட்டு முருகேஸ்வரி வீடு திரும்பியபோது, வீட்டில் கணவர் கார்த்திக்கை காணவில்லையாம்.. எங்கேயே தன்னுடைய குடும்பத்துடன் சென்றுவிட்டது தெரியவந்தது..
முருகேஸ்வரி அவரைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, கார்த்திக்கின் குடும்பத்தினர் அவருக்கு வேறொரு திருமணம் செய்து வைக்கப்போவதாக சொல்லி, முருகேஸ்வரிக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
கண்ணீர் போராட்டம்
இப்போது முருகேஸ்வரி 8 மாதக் கர்ப்பிணியாக உள்ளார். உடல்நிலை காரணமாக வேலைக்கு செல்ல முடியாமலும், தனது 2 குழந்தைகளைப் பராமரிக்கத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாமலும் ஆதரவற்ற நிலையில் தவித்து வருகிறார்.
சட்ட ரீதியான பாதுகாப்பு இல்லாததாலும், உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாலும் வேறு வழியின்றி தனது இரு குழந்தைகளுடன் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து புகார் அளித்தார். தனது கணவரை மீட்டுத் தன்னுடன் வாழ வைக்க வேண்டும் என்றும், அவருக்குத் துணையாக இருந்து கொடுமை செய்த மாமியார் சந்திரா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கண்ணீர் மல்கக் கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளார் #📢பிப்ரவரி 12 முக்கிய தகவல் 🫠


