ShareChat
click to see wallet page
search
#✝பைபிள் வசனங்கள் #⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் #✝பிரார்த்தனை #⛪ வேளாங்கண்ணி சர்ச் காலை ஜெபம்* "என் ஆன்மா ஆண்டவரின் கோவில் முற்றங்களுக்காக ஏங்கித் தவிக்கின்றது; என் உள்ளமும் உடலும் என்றுமுள இறைவனை மகிழ்ச்சியுடன் பாடுகின்றது. படைகளின் ஆண்டவரே! என் அரசரே! என் கடவுளே! உமது பீடங்களில் அடைக்கலான் குருவிக்கு வீடு கிடைத்துள்ளது; தங்கள் குஞ்சுகளை வைத்திருப்பதற்குச் சிட்டுக் குருவிகளுக்குக் கூடும் கிடைத்துள்ளது. உமது இல்லத்தில் தங்கியிருப்போர் நற்பேறு பெற்றோர்; அவர்கள் எந்நாளும் உம்மைப் புகழ்ந்து கொண்டேயிருப்பார்கள். எங்கள் கேடயமாகிய கடவுளே, கண்ணோக்கும்! நீர் திருப்பொழிவு செய்தவரின் முகத்தைக் கனிவுடன் பாரும்! வேற்றிடங்களில் வாழும் ஆயிரம் நாள்களினும் உம் கோவில் முற்றங்களில் தங்கும் ஒரு நாளே மேலானது; பொல்லாரின் கூடாரங்களில் குடியிருப்பதினும், என் கடவுளது இல்லத்தின் வாயிற்காவலனாய் இருப்பதே இனிமையானது. ஏனெனில், கடவுளாகிய ஆண்டவர் நமக்குக் கதிரவனும் கேடயமுமாய் இருக்கின்றார்; ஆண்டவர் அருளையும் மேன்மையையும் அளிப்பார்; மாசற்றவர்களாய் நடப்பவர்களுக்கு நன்மையானவற்றை வழங்குவார்". (திருப்பாடல் 84: 2-4, 9-11) இறைவா, இந்த அதிகாலை வேளையில் உம்மை போற்றுகிறோம். புகழ்கிறோம். நன்றி கூறுகிறோம். உலகில் உள்ள அனைத்து மனிதர்களையும் அன்பு செய்யும் எம் இறைவா, உமது கட்டளைகளைக் கடைபிடிப்போர்க்கு, உமது மேலான பேரன்பைப் பொழிந்தருளும். மனிதரின் ஆழ்மனதின் எண்ணங்களையும், தந்திரங்களையும், தீவினைகளையும் அறிந்த எம் இறைவா!, நாங்களும் புறத்தூய்மைக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் வெளிவேடக்காரராக இல்லாமல், அகத்தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் எளியவர்களாக, நாங்கள் என்றென்றும் இருக்க அருள்புரிவீராக. இறைவா, இந்த நாளை உமது பெயரால் துவக்குகின்றோம். ஆசீர்வதித்து வழிநடத்துவீராக. இயேசு, மரி, சூசை என் இருதயத்தையும், ஆத்துமத்தையும் உங்களுக்கு ஒப்படைக்கின்றேன். *ஆமென்.* விண்ணலகில் இருக்கிற...(1) அருள் நிறைந்த...(3) பிதாவுக்கும், சுதனுக்கும்...(1) *ஆமென்.*
✝பைபிள் வசனங்கள் - ShareChat