ShareChat
click to see wallet page
search
17 கிலோமீட்டர் பரப்பளவு உள்ள ஒரு காட்டை அழிக்க அதே அளவு தீப்பந்தம் தேவை இருக்காது.ஒரே ஒரு, சிறு பொறி போதும். பெரும் மலையை தகர்க்க அதன் அளவு உள்ள வெடி மருந்து தேவை இல்லை.ஒரு சின்ன ஜெலட்டின் குச்சி போதும். அப்படித்தான் நேற்று ஒரு தீப்பொறி கிளம்பி இருக்கிறது. மராட்டிய மாநிலம் நாசிக் நகரில் நடந்த குடியரசு தின விழாவில் பேசிய நீர்வளத் துறை அமைச்சர், குடியரசு தினத்தின் வரலாற்றைப் பேசும்பொழுது திட்டமிட்டு புரட்சியாளர் பாபாசாகேப் அம்பேத்கர் உடைய பெயரை தவிர்த்து விட்டு பேசி இருக்கிறார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக் கான மக்களுக்கு இது உவப்பாக இருந்ததா கசப்பாக இருந்ததா தெரியவில்லை. ஆனால் அந்த விழாவில் பங்கேற்றுக் கொண்ட வனத்துறை அதிகாரி மாதவி ஜாதவ் என்கிற புரட்சிக்காரர் அந்த நிமிடத் திலேயே பெருங்குரலெடுத்து கோஷமிட்டு தனது எதிர்ப்பை அந்த இடத்திலேயே பதிவு செய்து இருக்கிறார். "நெருப்பை பொட்டலம் கட்ட முடியாது" என்று ஒரு பழமொழி உண்டு. ஆம் பொட்டலம் கட்ட முடியாத நெருப்பாக மாறி அந்த சூழலையை சுட்டெரித் திருக்கிறார் பெருமிதத் திற்குரிய மாதவி ஜாதவ். அதே இடத்தில் கலகக் குரலால் எதிர்ப்பைதெரிவித்த அவர், "அதற்காக நான் யாரிடமும் மன்னிப்பு கூறப்போவதில்லை" என்று திட்டவட்டமாக சொல்லி இருக்கிறார். மாறாக, " என்னை நீங்கள் இடை நீக்கம் செய்யுங்கள் கவலை இல்லை. இடை நீக்கம் செய்யப்பட்ட பின் மணல் லாரி இழுக்கச் சொல்லுங்கள் கவலை இல்லை. சேற்றில் இறங்கி கூலி வேலை பார்க்க செய்யுங்கள் கவலையில்லை. ஆனால் அம்பேத்கர் அவமதிக்கபடுவதை, அம்பேத்கரை புறக்கணிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். என்று முழங்கி இருக்கிறார். ஒரு பெரும் புரட்சியின் துவக்கம் இது போல் ஒரு சிறு சம்பவமாக இருந்ததை வரலாறு நமக்கு சொல்லிச் செல்கிறது.AFSPA 1958 என்கிற ராணுவ சட்டத்தை எதிர்த்த பெருங்கலகமும் போராட்டமும் மனோரமாதேவி என்கிற ஒரு சமூக சேவையின் இறப்பால் துவக்கி வைக்கப்பட்டது என்பதை மணிப்பூரின் வரலாறு பேசுகிறது. கப்பல் படையெழுச்சியின் துவக்கம் புள்ளி கூட அப்படித்தான். எனவே இந்த எதிர்ப்பை இந்த கலகக் குரலை நாம் குறைத்து மதிப்பிடக் கூடாது. இங்கு இருக்கிற ஏவல் ஊடகங்கள் ஒரு போதும் இது போன்ற சம்பவங்களை செய்தியாக்காது. மாறாக ஒரு 13 வயது பணக்காரப் பெண், "மகளிர் உரிமை தொகையை யார் கேட்டார் எங்களுக்கு ஒன்றும் தேவையில்லை என்று சொன்னால் அதை ஒரு புரட்சி குரலாக மடைமாற்றி மெயின் ஸ்ட்ரீம் ஊடகத்திலிருந்து சமூக ஊடகங்கள் வரை எல்லாம் போட்டி போட்டுக் கொண்டு ஒளிபரப்பு செய்யும். எதைப்பரபரப்பாக்கவேண்டும் எதை நீர்த்துப்போக்கச்செய்யவேண்டும் என்கிற சூழ்ச்சிக்காரர்களின் கையில் ஊடகங்களின் குடுமி சிக்கியிருக்கிறது. அப்படிப்பட்ட கொடுங்காலத்தில் நாம் இருக்கிறோம். அந்த வியூகத்தை உடைத்துக் கொண்டு வெளியேறுகிற வல்லமை மக்கள் சக்திக்கு மட்டுமே இருக்கிறது . #👨மோடி அரசாங்கம்
👨மோடி அரசாங்கம் - MEW8 8 आराठी NEYS1E MEW8 8 आराठी NEYS1E - ShareChat