உயிரிழந்தோரின் சடங்களில் இருந்து கொழுப்பை எடுத்து அதை ஊசி மூலம் தங்கள் உடலில் செலுத்திக் கொள்வதே இந்த முறை. மிகவும் வினோதமான மற்றும் சர்ச்சைக்குரிய இந்த டிரெண்ட் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அமெரிக்காவில் பெண்கள் தங்கள் மார்பகங்கள், இடுப்பு மற்றும் பின்புறத்தை அழகாகக் காட்டிக்கொள்ள, உயிரிழந்தோர் சடலத்திலிருந்து பெறப்பட்ட கொழுப்பை ஊசி மூலம் இந்தப் பாகங்களில் செலுத்திக் கொள்கிறார்களாம். இதை அவர்கள் ஃபில்லர்கள் போலப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இது அமெரிக்காவில் ஒரு புதிய மற்றும் சர்ச்சைக்குரிய அழகுசாதன டிரெண்டாக உருவாகியுள்ளது.
வினோதச் சிகிச்சை முறை
அங்கு அழகு சாதனப் பொருட்களை விற்கும் பிரபல நிறுவனம் இதை விற்று வருகிறது. இப்படித் தான் அங்கு வசிக்கும் 34 வயதான நிதி துறை வல்லுநர் தனது இடுப்பு மற்றும் பின்புறத்தை அழகாக மாற்ற இதுபோல ஃபில்லர்களை பயன்படுத்தியுள்ளார். அங்கு ஒரு முறை இந்தச் சிகிச்சைக்குக் கிட்டத்தட்ட ரூ.40 லட்சம் செலவழித்துள்ளனர்.
அதேநேரம் இது அங்கு சட்டத்திற்கு உட்பட்டே நடக்கிறது. இதற்காகச் சில விரிவான விதிமுறைகள் உள்ள சூழலில், அதை எல்லாம் அவர்கள் முறையாகப் பின்பற்றுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடுமையான ரூல்ஸ் இருப்பதால் இதில் மோசடிகள் நடக்காது என்றும் இந்த ஃபில்லர்கள் மறுசுழற்சி செய்யக்கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நம்ம ஊர் மாதிரி இல்லை! இத்தாலியில் இந்திய பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி.. இப்படி கூட இருக்குமா! செம
எப்படி?
உயிரிழந்த பிறகு சிலர் தங்கள் உடலை ஆய்வுக்காக ஒப்படைப்பார்கள். அப்படி ஆய்வுக்காகத் தங்கள் உடல்களை தானம் செய்தோரின் உறுப்பு மற்றும் திசுக்களில் இருந்து கொழுப்பு சேகரிக்கப்படுகிறது. பின்னர் அது கிருமி நீக்கம் செய்யப்பட்டு, சுத்திகரிக்கப்பட்டு, செல்லுலார் கொழுப்பு மேட்ரிக்ஸில் பதப்படுத்தப்படுகிறது. அதாவது அனைத்து டிஎன்ஏ மற்றும் உயிருள்ள செல்களும் அகற்றப்படுகின்றன.
பெரும்பாலும் மெலிதாக உள்ளவர்கள் நோயாளிகள், ஏற்கனவே லிபோசக்ஷன் செய்து கொண்டவர்கள், போதுமான கொழுப்பு இல்லாதவர்களுக்கும் இது செலுத்தப்படும். ஓசெம்பிக் மற்றும் மவுஞ்சாரோ போன்ற எடை இழப்பு மருந்துகளைப் பயன்படுத்திக் குறிப்பிடத்தக்க எடையைக் குறைத்தவர்களும் கூட தங்கள் உடலை அழகாகக் காட்டிக் கொள்ள இதைப் பயன்படுத்துவதாக அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர் டேரன் ஸ்மித் குறிப்பிடுகிறார்.
மயக்க மருந்து கூட தேவையில்லை
பாரம்பரிய அறுவை சிகிச்சையைப் போல இல்லாமல் இந்த சிகிச்சை செய்வது ரொம்பவே ஈஸியானதாம். மயக்க மருந்து கூட இல்லாமல் சாதாரண கிளினிக்குகளிலேயே இந்த ஃபில்லர்கள் செலுத்தப்படுகிறது. இடுப்பு, பின்புறம், மார்பகங்கள் அல்லது தோள்களில் தான் இவை அதிகம் பயன்படுத்தப்படுவதாக மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள்..
இது தொடர்பாக மருத்துவர்கள் மேலும் கூறுகையில், "வழக்கமான அழகு சார்ந்த அறுவை சிகிச்சையை விட இது காஸ்ட்லி தான். ஆனால், இது எளிமையானது. ஆபரேஷன் தேவையில்லை.. மயக்க மருந்து தேவையில்லை. தீவிரமான மருத்துவ நடைமுறைகள் தேவையில்லை. இதனால் இந்த வசதிக்காகவே மக்கள் அதிகத் தொகையைக் கட்டணமாகச் செலுத்துகிறார்கள்" என்றார்.
"இந்தியர்கள் எல்லாரும் சோம்பேறிகள்.." வாயை விட்டு வாங்கிக் கட்டி கொண்ட அமெரிக்க சுற்றுலா பயணி
எவ்வளவு செலவு?
இந்த வகைச் சிகிச்சை இப்போது தான் தொடங்கப்பட்டுள்ள நிலையில், இதற்கு அதிகப்படியான கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எவ்வளவு ஃபில்லர்கள் செலுத்தப்படுகிறது என்பதைப் பொறுத்து $10,000 முதல் $100,000 வரை, அதாவது 9 லட்சம் முதல் ரூ.90 லட்சம் வரை கூட கட்டணமாக வசூலிக்கிறார்களாம் #📢பிப்ரவரி 8 முக்கிய தகவல் 🫠


