||श्री:||ஸ்ரீ (969) #ராமாநுஜர்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே ஶரணம்
தான் ஏற்றிருக்கின்ற எட்டு வகை ஆயுதங்களும் தோல்வியைக் காணாமல் வெற்றியையே அளிக்கக் கூடிய அவ்வாயுதங்களைத் தம் எட்டு திருக்கரங்களில் ஏந்தியிருக்கின்ற,
காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள திருஅட்டபுயகரம் என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள எம்பெருமான் திருமால் முன்பொரு காலத்தில் நீர் நிறைந்துள்ள குளம் ஒன்றில் வலிமை மிக்க முதலை இறந்து போகும்படியாகத் தன் சக்ராயுதத்தைச் சரியான குறியுடன் விடுத்துத் துன்பத்துக்களாகியிருந்த கஜேந்திராழ்வானைக் காப்பாற்றியருளிய எம்பெருமான் திருமாலே ! இத்தகைய உன் திருவடிகளே அடியோங்கள் சரணடைவதற்குரிய சிறந்த நன்நெறியாகும்.
பேயாழ்வார் திருவடிகளே ஶரணம்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏


