ShareChat
click to see wallet page
search
ஸ்ரீ (969)🙏🏻🙏🏻🙏🏻ஶ்ரீ குலசேகராழ்வார் திருநட்சித்திர உற்சவம்-பதிவு 2 🙏🌺🍀☘️🌸🙏🏿 சேரலர்கோனும்,ஶ்ரீவைஷ்ணவக்கோனும் 🙏🔆⚜️🔱🏹🌞👌🙏🏿 இன்று(27/02/2026) சேர நாட்டை ஆண்ட,குலசேகர ஆழ்வார் அவதார திருநட்சித்திரம்-மாசி புனர்பூசம். குலசேகராழ்வார் தனியன்: 🔔🥁🎷🎸🎺🥁🔔 "குஷ்யதே யஸ்ய நகரே ரங்கயாத்ரா தினே தினே ! தமஹம் சிரஸா வந்தே ராஜாநம் குலசேகரம் !!" "எப்போதும் "ஸ்ரீரங்க யாத்திரை" பற்றிய பேச்சே/கோஷமே நிகழும், கொல்லி நகரைத் தலைநகராகக் கொண்ட அரசர் குலசேகரப் பெருமாள் திருவடிகளை அடியேன் தலையால் வணங்குகிறேன்." குலசேகர மன்னர்/ஆழ்வார் நாட்டுக்கு அதிபதி.ராமாநுஜர் ஶ்ரீ வைஷ்ணவ சாம்ராஜ்ய அதிபதி.முதல்அதிபதி, இரண்டாம் அதிபதியை எப்படி ஆட்கொண்டார் என்பதே இந்தப் பதிவின் சுருக்கம். 1.குலசேகரரின் பெருமாள் திருமொழிக்குத் தனியன் பாடிய உடையவர். 🙏☘🌺🙏🏿 ஸ்ரீ ராமாநுஜர் மூன்று ஆழ்வார்க ளுக்கு மட்டுமே தனியன் பாடினார். நம்மாழ்வார்(பெரியதிருவந்தாதி), திருமங்கைஆழ்வார்(பெரியதிருமொழி) குலசேகர ஆழ்வார்(பெருமாள் திருமொழி)--மூவருமே வேந்தர்கள் (நம்மாழ்வார்ரஆழ்வார்களின் தலைவராதலால்,அவரும் வேந்தரே). எதிராசரும் எதிகளுக்கு வேந்தர்!. பிரபந்நர்களுக்கு வேந்தர் !!அவர் குலசேகர ஆழ்வாருக்குப் பாடிய தனியன்: "இன்னமுதம் ஊட்டுகேன் இங்கேவா பைங்கிளியே !, தென்னரங்கம் பாடவல்ல சீர்ப்பெருமாள்-பொன்னஞ் சிலைசேர் நுதலியர்வேள், சேரலர்கோன் எங்கள், குலசேகரன் என்றே கூறு" (இதன் விரிவான விளக்கத்தை நேற்றைய முதல் பதிவில் பார்த்தோம்) 2.சாம்ராஜ்ய விரிவாக்கம் 👌☝️👏👍🏻 சேர நாட்டைச் சேர்ந்த ஆழ்வார், சோழர்களையும்/பாண்டியர்களையும் வென்று மூன்று நாடுகளையும் (திருவஞ்சிக்களம்/உறையூர்/மதுரை யைத் தலைநகராகக் கொண்டு) ஆண்டார்.தொண்டைமண்டலத்தைச் சேர்ந்த ராமாநுஜர் சோழநாட்டின் ஶ்ரீரங்கத்தில் கோலோச்சினார். ஆண்டாளுக்கு அண்ணனாகி பாண்டியர் குலபதியாகவும் ஆகிவிட்டார். சேர நாட்டின் ஒரு பகுதியாகிய மேல்கோட்டையிலும் ஆண்டார்.பல சோழ மன்னர்களும் கர்நாடகத்தை ஆண்ட விஷ்ணு வர்த்தன்(பிட்டி தேவராயன்), திருப்பதி பகுதியை ஆண்ட பல்லவ ராயன்,கலிங்க மன்னன் சோடகங்க தேவனும்,காஷ்மீர தேசத்து அரசனும் தங்கள் திருமுடிகளை சாம்ராஜ்யதி பதி எம்பெருமானார் திருவடிகளில் வைத்து,சீடர்களானார்கள்.மேலும் உடையவர் புறச்சமயத்தார் பலரையும் தம் வாதத்தால் வென்று அவர்களைத் தம் சீடர்களாக்கினார். 3.'பெருமாளும்' 'எம்பெருமானாரும்' 🙏🙏🙏🙏🙏🙏🌹🙏🙏 ஆழ்வார்'குலசேகரப்பெருமாள்'ஆனார்.(ஶ்ரீராமபிரான் மீதிருந்த அபரிமித மான பக்தியால்,ஶ்ரீ ராமரே அவர் கனவில் தோன்றி 'பெருமாள்' என்று அழைத்தாராம்). ராமாநுஜரும்"எம்பெருமானார்" ஆனார்(அவருடைய ஆசார்யர் திருக்கோஷ்டியூர் நம்பிகளே எம்பெருமான் பெயருக்கு ஈடாக இவ்வாறு அழைத்தார்).மேலும் நித்யவிபூதிக்கும்,லீலாவிபூதிக்கும் உடையவரான ஶ்ரீ ரங்கநாதப் பெருமாளே இவரை 'உடையவர்' என்றுஅழைத்ததும் இங்கு கொள்ளத்தக்கது. 4.ஆழ்வாரின் பக்தி பாவமும், ஜகதாசார்யாரின் பக்திபாவமும் 🙏🌺🍀🌸☘🙏🏿 குலசேகரர் தம் அரசவையில்,தினமும் ஶ்ரீராமாயணம் படிக்கவும்/வியாக்யானம் செய்யச் சொல்லியும் கேட்பார்.இதிகாசத்தில் ஶ்ரீ ராமரை எதிர்த்துப் போரிட, 14000 கர தூஷணர்கள் வந்த செய்தி கேட்ட ஆழ்வார், நெஞ்சம் பதைத்துவிட்டார். ராமருக்கு உதவ தம் படைகளைத் திரட்டி உடனே புறப்பட வேண்டும் என்று தம் படைத்தளபதிக்கு உத்தரவிட்டார்.கதைசொன்னவர்/அமைச்சர்கள் எல்லோரும் அவரிடம் 'இது நடந்து முடிந்த கதையே.பல லட்சம் ஆண்டுகளுக்கே முன்னர் நடந்த,இந்தப் போரை ராமர் அநாயாச மாக வென்றுவிட்டார்.அவருக்கு எந்தத் துன்பமும் இல்லை' என்று சமாதானப் படுத்தினார்கள்.பக்தி பாவத்தில் தன்னை மறந்து இராமாயண காலத்துக்கே சென்று விட்டார். அரங்கன் பக்தியில் தம்மை ஒரு 'பேயன்'பித்தன்'உன்மத்தன் 'என்று பெருமாள் திருமொழி, மூன்றாம் பத்து முழுவதும் சொல்கிறார். இதே போல் உடையவருக்கும் சில வைபவங்கள் உண்டு. சந்தனு மண்டபத்தின் கீழைப்படி மேட்டில் அமர்ந்து பெரியகோவில் நிர்வாகத்தைக்கவனித்து வரும்போது, ஒவ்வொரு நாளும்/வேளையும் அரங்கன் நைவேத்தியத்துக்கு கொண்டு செல்லும் பிரசாதங்களை சரிபார்த்துஅனுப்புவார்.நைவேத்தியம் முடிந்து வரும்போது மீண்டும் திறந்து சரி பார்ப்பார்.எடுத்துச் சென்ற பிரசாதங்கள்,அப்படியே எண்ணிக்கை குறையாமலும்,கைபட்டுக் கலையாமலும் வருவதைக் கண்டு விம்மினார்.தம் நிர்வாகத்தில் செய்து அனுப்பும் பிரசாதங்களில், தான் ஏதேனும் குறைபாடோ என்று வேதனைப்பட்டார்.இப்படியே சில நாட்கள் சென்ற பின்,பொறுக்க மாட்டாமல் நேராக அரங்கனிடம் சென்று அழுது,புலம்பி "ஏன் இந்தப் பாராமுகம்" என்று கேட்டார். திடுக்கிட்ட அரங்கர் "உடையவரே,சிறந்த ஞானியான உமக்குத் தெரியாதா?அர்ச்சாரூபத்தில் இருக்கும் நான் எப்படி' உட்கொண்டு 'அருள முடியும். கண்டருளத்தானே முடியும்' என்று எடுத்துச் சொல்லி சமாதானம் செய்தார். இன்னொரு முறை அரங்கரை சேவித்து நின்ற உடையவர் துணுக்குற்று,பெருமாளின் முகம் வாடி யிருக்கிறதே; ஐலதோஷம் பிடித்திருக் கிறது போல;உடனே கஷாயம் காய்ச்சி எடுத்து வரச் சொல்லுங்கள்' என்று அருகிலிருந்த முதலியாண்டானிடம் பணித்தார். பெருமாளுக்கு தொடர்ந்து ஏழு நாட்கள் கஷாயம் நைவேத்யம் செய்யப்பட்டது!! 5.திருமால் அடியார்களிடம் குறையொன்றுமில்லை, என்று காட்டிய மேன்மை 🙏🍀🌺🌸🍀🙏🏿 தங்கள் அரசர் நாட்டு நிர்வாகத்தைக் கவனிக்காமல்,திருமால் அடியார்க ளுடன் எந்நேரமும் பொழுதைக் கழிக்கிறாரே, அவர்களிடம் இருந்து அரசரை எப்படியாவது பிரித்துவிட வேண்டும் என்று திட்டமிட்டனர் குலசேகரரின் அமைச்சர்கள்.அரசரின் விலை உயர்ந்த ரத்தின மாலை ஒன்றை எடுத்துமறைத்து வைத்து விட்டு,இந்த அடியார்களில் யாரோ தான் திருடி விட்டார்கள் என்று பழி சுமத்தினார்கள்.யார் என்று கண்டு பிடிக்க,ஒரு குடத்தில் பாம்பை விட்டு, அவர்கள் ஒவ்வொருவரையும் குடத்துக்குள் கை விடச் சொல்லலாம். யாரைப் பாம்பு கடிக்கிறதோ அவரே திருடர் என்றார்கள்.குலசேகரர், திருமால் அடியார்கள் இந்தக் குற்றத்தைச் செய்திருக்க மாட்டார்கள் என்று உறுதியாகக் கூறினார். இருந்தாலும் ராஜநீதிக்காக அந்தச் சோதனைக்கு அனுமதி அளித்தார். அடியார்களைச் சந்தேகிப்பது தம்மையே சந்தேகிப்பதற்கு ஒப்பானதால், தாமே முதல் ஆளாக பாம்புக் குடத்தில் கைவிட்டார் ! பாம்பு கடிக்குமா?? அரவு அணைத் துயின்றும் அரங்கனைப் பாடிய ஆழ்வாரை அரவு தீண்டுமா? அரங்கன் அடியார்களைப் பணிவது பற்றி பத்து பாசுரங்கள் பாடியுள்ளார் (2ம் பத்து).அடியார்களின் திருவடி பட்ட புழுதியில் உருண்டு புரள்வது, கங்கையில் நீராடுவதை விடப் புனிதமானது என்றும், அடியார்களின் பக்தி மேலீட்டால் அவர்கள் கண்களிலிருந்து பெருகும் கண்ணீர் ஆற்றில், நனைந்த சேற்று மண்ணை எடுத்து தம் சிரசில் பூசிக் கொள்வேன் என்றும் பாடியுள்ளார் (2-2&2-3) ராமாநுஜர்,பிள்ளை உறங்கா வில்லி தாசர் என்னும் மல்லர்குலத்து அடியாருக்குக் கொடுத்த ஏற்றத்தை, ஶ்ரீரங்கத்தைச் சேர்ந்த சில உயர்குலத்தாரோல் ஒத்துக் கொள்ள முடியவில்லை.அவர்கள் ராமாநுஜரிடமே இது பற்றிக் கேட்டனர். அவர்களுக்குப் பாடம் புகட்ட நினத்த உடையவர் அவர்களைவிட்டே, உறங்கா வில்லி தாசரின் வீட்டிலிருந்து நகைகளைத் திருடி வரச்சொன்னார். அப்போது தாசரின் மனைவி பொன்னாச்சியார் இவர்கள் நகைகளைக் கொண்டு செல்வதற்கு துணையாக நடந்து கொண்டது,இதை அறிந்த தாசர் ஏன் நன்றாகத் துணை புரியவில்லை என்று அவரைக் கடிந்து கொண்டது,ராமாநுஜர் கூப்பிட்டுக் கேட்ட போது, அடியார்களிடம் அவர்கள் அபசாரப்பட்டதற்கு(!!), மன்னிப்புக் கேட்டது எல்லாம் ஒரு சிறந்த வைபவம் (விரிவுக்கு அஞ்சி இந்த சுருக்கம்).ஒரு சலவைத்தொழிலாளிக்கு, அரங்கருக்குக் கைங்கர்யம் புரிய வாய்ப்பளித்து,அரங்கரிடம் சிபாரிசு செய்து அவர்கள் குலத்துக்கே மாட்சிமை பெற்றுத் தந்தார். (துவாபரயுகத்தில் ஶ்ரீ கிருஷ்ணருக்கு, உடை வழங்கமறுத்த(கம்சனுக்குப் பயந்து),அவர்கள் குலத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த பாவத்தை மன்னித்து !). 6.அரங்கர் மேல் அளப்பரிய பக்தி ! 🙏🙏🏿🙏🙏🏿🙏 குலசேகர மன்னர்,ஒவ்வொரு நாள் காலையிலும், திருவரங்க யாத்திரை க்குத் தயாராகி விடுவாராம்.ஆனால் நாட்டு நிர்வாகக் காரியங்கள், இதற்கு நாளும் தடையாகவே இருந்தன.எனவே என்று சென்று அரங்கரைச் சேவிப்போம் என்று ஏங்கி,ஏங்கிப் பாடினார். பெருமாள் திருமொழி முதல் மூன்று பத்துக்களும் அரங்கருக்கும்,அவர் அடியார்களுக்காகவும் பாடியுள்ளார். முதல் பாசுரமே அமுதம்: "இருளிரியச் சுடர் மணிகள் இமைக்கும் நெற்றி, இனத்துத்தி யணிபணம் ஆயிரங்களார்ந்த, அரவரசப் பெருஞ்சோதி அனந்தன் என்னும், அணிவிளங்கும் உயர்வெள்ளை அணையை மேவி, திருவரங்கப் பெருநகருள் தெண்ணீர்ப் பொன்னி, திரைக்கையால் அடிவருடப் பள்ளி கொள்ளும், கருமணியைக் கோமளத்தைக் கண்டு கொண்டு என், கண்ணினைகள் என்றுகொலொ களிக்கும் நாளே"(1-1) முதல் முறையாகத் திருவர ங்கம் வந்து 'உடையவர்' ஆன ராமாநுஜர், அதன்பின் நான்கு முறை ஆண்டு/மாதக் கணக்கில் திருவரங்கத்தை விட்டுச் செல்ல வேண்டியதாகி விட்டது. (திருமலைநம்பிகளிடம் ஶ்ரீஇராமாயணம் கற்க, திவயதேச யாத்திரை, மேல்கோட்டைகைங்கர்யங்கள்,திருமலை மூன்றாம்யாத்திரை என்று). ஒவ்வொரு முறையும், எப்போது திருவரங்கம் திரும்பி அரங்கரைச் சேவிப்பது என்று ஏங்கிக் கொண்டே இருந்தாராம். அதுவும் மேல்கோட்டையில் இருந்த போது(ஶ்ரீவைஷ்ணவத்திற்கு எதிராக இருந்த) கிருமிகண்ட சோழன் மறைந்தான் என்ற செய்தி வந்தவுடன் அரங்கனைச் சேவிக்க ஓட்டமும், நடையுமாக விரைந்து வந்தாராம். "பொன்னரங்கம் எனில் மயலே பெருகும் இராமாநுசன்" அல்லவா? 8.சேரன் மடத்து வாசிகள்: 🙏👌👏👍🏻🍀🙏🏿 குலசேகர ஆழ்வார் திருவரங்கத்தில் இருந்த போது அவர் 'சேரன் மடம்' என்னும் திருமாளிகையைக் (தற்போது வடக்கு வாசலுக்கு எதிரில் இருக்கும் ஶ்ரீ ரங்க நாராயண ஜீயர் மடம்) கட்டினார் என்றும், அவர் அங்கு சிலகாலம் வாசம் செய்ததாகவும் கூறுகின்றனர்.அதே சேரன் மடத்தில் தான் ராமாநுஜர்,தாம் ஶ்ரீரங்கத்தில் இருந்த சுமார் 60 ஆண்டுக் காலம் எழுந்தருளியிருந்தார்.அதுவும் ராமாநுஜர் முதன் முறையாக ஶ்ரீரங்கநாதப் பெருமாளைச் சேவித்த போதே,"உடையவரைச் சேரன் மடத்தில் விட்டு வாருங்கள்"என்று பெருமாளேஆணையிட்டார். 9.பெருமாளைக் குழந்தையாகப் பாவித்து அன்பு காட்டிய தாயுள்ளம் 🙏🍀🌸🙏🏿 ஆழ்வார்திருக்கண்ணபுரம் செளரிராஜப்பெருமாளை, ஶ்ரீராம பிரானாகப் பாவித்து,10 தாலாட்டுப் பாடல்களை அற்புதமாகப் பாடியுள்ளார்(8 ம் பத்து): "மன்னுபுகழ்க் கோசலைதன் மணிவயிறு வாய்த்தவனே!.... தசரன்தன் மாமதலாய்..... குலமதலாய்....இராகவனே தாலேலோ" மேல்கோட்டை உற்சவமூர்த்திப் பெருமாளைத் தேடி டில்லி பாதுஷா அரண்மனைக்குச் சென்ற ராமாநுஜர், அங்கு அமர்ந்து"வாராய் செல்வப், பிள்ளாய்;வாராய் செல்வப்பிள்ளாய்" என்று தாயன்புடன் அழைக்க அரண்மனை அந்தப்புரத்தில் இருந்த உற்சவர் பெருமாள் சலங்கை ஒலி சலசலக்க,பூமாலை மணம் கமழ, தத்தித் தத்தி நடந்து வந்து, ராமாநுஜர் மடிமீது ஏறி அமர்ந்து கொண்டாராம். அதிலிருந்து அந்தப் பெருமாள் ராமாநுஜரின் செல்ல(வ)ப் பிள்ளை (சம்பத்குமாரர்) ஆகிவிட்டார்.உற்சவர் திருநாமமே 'எதிராஜ சம்பத்குமாரர்' !! நமக்கும் அவர் செல்லப்பிள்ளை யாக என்றும் மேல்கோட்டை யில் அருள் பாலித்து வருகிறார். 10.'திருமலைமேல் ஏதேனும் ஆவேனே' என்று பாடினார் ஆழ்வார். திருவேங்கடவருக்கு எல்லாமே (கைங்கர்யங்களை) செய்தார் தேசிகேந்திரன் ராமாநுஜர ! 🙏🌺🍀🌸☘️🙏🏿 திருவேங்கடவரைப் பாடிய ஆழ்வார்(4ம் பதிகம்) திருமலை மேல் ஒரு குருகாகவோ,மீனாகவோ, மரமாகவோ,தம்பகமாகவோ,ஆறாகவோ,சிகரமாகவோ,பாதையாகவோ,படியாகவோ,ஏதேனும் ஆகவோ இருக்கவிரும்பினார்.ராமாநுஜர் முதல் முறை திருமலைக்கு வந்த போது, திருமலை மேல் தம் காலடி பட்டு ஏற மறுத்து விட்டார்; திருமலையே திருவேங்கடவரின் திருமேனி என்பதா லும்,ஆழ்வார்கள்யாரும் மலைமீது ஏறவில்லை ஆதலாலும் மறுத்தார். அவர் அப்போது குலசேகரஆழ்வாரின் இந்தப் பாசுரங்களையும் நினைத்துப் பார்த்திருப்பார்.ஆழ்வார் மலைமீது, எங்காவது,ஏதேனுமாக இருந்தால் அவர் மீது தம் காலடி பட்டுவிட்டால் என்னாவது என்றும் யோசித்திருப்பாரோ? ஏதேனுமாக இருப்பேன் என்று ஆழ்வார் பாடியிருந்தாலும், திருவேங்கடவருக்கு எல்லாமாக இருந்தேன் என்று சொல்லும் வகையில் மிகப் பெரிய கைங்கர்யங்க ளைச் செய்தார் ராமாநுஜர். வேங்கடவரைப் பெருமாள் என்று நிலைநாட்டியது ! அப்பனுக்குச் சங்காழி அளித்தது ! 'அகலகில்லேன் இறையும் என்று அலர்மேல் மங்கைஉறைமார்பன் 'மார்பில் தாயார் பதக்கங்களை வைத்தது ! மாடவீதிகளை அமைத்தது ! பிரம்மோற்சவங்களைச் சிறப்பாக நடத்தியது! உள் பிரகாரச் சந்நிதிகளை அமைத்தது ! பக்தர்கள் அனைவருக்கும் எப்போதும் பிரசாதம் வழங்கியது ! திருப்பதியில் கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியைப் புணரமைத் துக் கட்டியது ! அந்தச் சந்நிதியில் குலசேகராழ்வார் பாடிய 'தில்லைநகர்ச் திருச்சித்திர கூட'கோவிந்தராஜப் பெருமாளைப் பிரதிஷ்டை செய்தது ! திருப்பதியைக் கோவில் நகரமாக உருவாக்கியது ! என்று இன்னும் பல,பல. 11.ராமாநுஜர் குலசேகர ஆழ்வாரின் சந்ததியாகவும் ஆனார். 🙏🌺🍀🌸🙏🏿 அரங்கரை மணம்புரிந்த சேரகுலவல்லித் தாயாரின் திருத்தகப்பனார் குலசேகர ஆழ்வார். பூமிப்பிராட்டி ஆண்டாளும் அரங்கரை மணம்புரிந்தார்.ஆண்டாளுக்கு அண்ணன் ஆனார் ராமாநுஜர் (நாறு நறும் பொழில் பாசுர வைபவம்). ஆண்டாள் அஞ்சுகுடியான ஆழ்வார்களின் குடிக்கு ஒரு சந்ததியாக விளங்கியதால்,அவரின் அண்ணனான ராமாநுஜரும் ஆழ்வார்களின்-குலசேகர ஆழ்வாரின் சந்ததியே!! குலசேகராழ்வார் வாழி திருநாமம்: 🥁🔔🎷🎸🪷🏵🌸🥁 அஞ்சன மாமலைப் பிறவி ஆதரித்தோன் வாழியே ! அணியரங்கர் மணத்தூணை அடைந்துஉய்ந்தோன் வாழியே ! வஞ்சிநகரந் தன்னில் வாழவந்தோன் வாழியே ! மாசிதனிற் புனர்பூசம் வந்துதித்தான் வாழியே ! அஞ்சலெனக்குடப்பாம்பில் அங் கையிட்டான் வாழியே ! அநவரதம் ராமகதை அருளுமவன் வாழியே ! செஞ்சொல்மொழி நூற்றஞ்சுஞ் செப்பினான் வாழியே ! சேரலர்கோன் செங்கமலத் திருவடிகள் வாழியே !!! (அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்) படங்கள்: திருவஞ்சிக்களம்(அவதாரஸ்தலம்) 1.ஸ்ரீஸ்ரீநிவாசப்பெருமாள்-குலசேகராழ்வார் கோயில். 2.ஸ்ரீநிவாசப்பெருமாள். 3,4,5,6,குலசேகராழ்வார் உற்சவம். 7. ஆழ்வார் திருவடியில் உடையவர். ஸ்ரீரங்கம்: 8.குலசேகராழ்வார் 9.ஆழ்வார் வீதிப் புறப்பாடு (சென்ற ஆண்டு) மன்னார்கோவில்(அம்பாசமுத்ரம்): 10.ஆழ்வார் கோயில்/ திருவரசு. 11,திருவரசில் குலசேகராழ்வார் 12. காணொளி--இன்று காலை திருவஞ்சிக்களம் திருமஞ்சனம். https://www.facebook.com/share/v/1FNETor4mR/ #ராமாநுஜர்
ராமாநுஜர் - குலசேகர ஆழ்வார் ಶೀsi _ Zelwa _ 10T6o/టణి] நௌப குலசேகர ஆழ்வார் ಶೀsi _ Zelwa _ 10T6o/టణి] நௌப - ShareChat