ShareChat
click to see wallet page
search
#🙏கோவில் கழுகுமலை செவ்வாய் மற்றும் குரு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இங்கு வந்து வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் உடனே நீங்குகின்றன. குழந்தைகளுக்கு உண்டாகும் நோய்களிலிருந்து நிவாரணம் வழங்கும் தலமாகவும் இது விளங்குகிறது. தீராத நோயால் துன்பப்படும் குழந்தைகளின் பெற்றோர்கள், இந்தத் தலத்துக்கு வந்து தவிடு, வெல்லம் ஆகியவற்றோடு குழந்தையை கோயிலுக்குத் தானமாக அளிக்க வேண்டும். அதைப் பெற்றுக்கொண்ட கோயில் நிர்வாகத்தினர் குழந்தையை ஏலம் விடுவார்கள். அப்போது குழந்தையை ஒருவர் ஏலம் எடுப்பார். அதற்கென்று உறவினர் ஒருவரையும் அழைத்துவருவார்கள். அவர் ஏலம் எடுத்ததும் கோயில் நிர்வாகத்துக்குத் தவிட்டுக்கு உரிய தொகையைக் கொடுத்து குழந்தையைப் பெற்றுக்கொள்வார்கள். இப்படிச் செய்தால் குழந்தையைப் பிடித்திருக்கும் நோய்கள் அனைத்தும் விலகும் என்பது நம்பிக்கை.ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் நம் மனதை விட்டு நீங்காத அற்புதத் தலம் கழுகுமலை. வாய்ப்புக்கிடைக்கும் போது கழுகுமலை சென்று கழுகாசல மூர்த்தியை வழிபட்டு வாருங்கள். வாழ்வில் முருகனின் திருவருள் எப்போதும் நிறைந்திருக்கும்.🙏
🙏கோவில் - தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசலமூர்த்தி: பிள்ளைகளின் தீராத நோய் தீர்க்கும் பரிகாரத்தலம்! - ShareChat