ShareChat
click to see wallet page
search
இந்தி எப்படி இந்தியாவில் பெரும்பான்மை மக்களின் மொழியானது? இந்தி இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் மொழி என்று சொல்வது போன்ற அப்பட்டமான பொய் வேறேதுமில்லை. ஏனென்றால் இந்தியாவிலுள்ள பல்வேறு மாநில மொழிகளை இனைத்து இதெல்லாம் இனி இந்திமொழிக்கு கீழ் வரும் என்று மாற்றியதால் தான் இந்தி அதிக மக்களால் பேசும் மொழியாக ஆனதே ஒழிய. தன்னிச்சையாக இந்தி பேசும் மக்கள் என்று எடுத்தால் மிக மிகச் சொற்பமே. உதாரணமாக: போஜ்புரி (~5,05,00,000 பேர்) இராஸ்தானி (~2,58,00,000 பேர்) சட்டிஸ்கரி(~1,62,00,000 பேர்) இன்னும் மாகஹி அல்லது மாகதி, நாக்புரி அல்லது சத்ரி, மைதிலி, கோர்தா அல்லது கோட்டா மற்றும் பஞ்சபர்கானியா. பஹாரி மொழிகளின் குழுவில் நேபாளி, குமாவோனி, கர்வாலி, ஜான்சாரி, சிர்மௌரி, சாம்பேலி, மண்டேலி, பார்மருயி அல்லது காடி, சுராஹி மற்றும் பரத்வாஹி ஆகியவை அடங்கும். துந்தாரி, கோஜ்ரி, ஹரௌதி, ஜெய்ப்பூர், கைராரி, மால்வி, மார்வாரி, மேவாரி, மேவதி, நிமாடி மற்றும் சோந்த்வாரி. இவையெல்லாவற்றையும் சேர்த்துத்தான் இந்தி மொழி பெரும்பான்மையான மக்கள் பேசும்மொழி என்ற பிம்பம் கட்டப்படுகிறது. ஒருவேளை நம் முன்னோர்கள் இந்தி மொழி திணிப்புக்கெதிராக 1938 & 1951 & 1965 என போராடாமல் இருந்திருந்தால் தமிழையும் இந்திக்கு கீழ் என்றோ கொண்டுவந்திருப்பார்கள். #மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்..! #🚨கற்றது அரசியல் ✌️ #💪 மே17 இயக்கம் #தமிழ்நாடு தமிழருக்கே!
மொழிப்போர் தியாகிகளுக்கு வீரவணக்கம்..! - ShareChat