ShareChat
click to see wallet page
search
பெங்களூரைச் சேர்ந்த சுரையா குரைஷி மற்றும் பிபி தபஸும் ஆகிய இரு சகோதரிகள்,5 ஆண்டுகால கடின உழைப்பிற்குப் பிறகு கைகளால் தைத்து (Hand-embroidered) உருவாக்கிய திருக்குர்ஆனை மதீனாவிற்கு அன்பளிப்பாக வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்... 5 வருடம் 5 மாதம் எடுத்துக் கொண்டு மென்மையான வெல்வெட் துணியில் ஊசி மற்றும் நூலைப் பயன்படுத்தி ஒவ்வொரு வசனத்தையும் கைகளால் தையல் வேலைப்பாடுகள் (Embroidery) மூலம் வடிவமைத்துள்ளனர்... இந்தத் திருக்குர்ஆன் மொத்தம் 604 பக்கங்களைக் கொண்டது. இது 5 தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது... தங்கை பிபி தபஸும் முதலில் பென்சிலால் துணியில் வசனங்களை எழுத, பின் இரு சகோதரிகளும் இணைந்து அதன் மேல் தையல் வேலைகளைச் செய்துள்ளனர். ஒவ்வொரு பக்கமும் முடிந்ததும் மார்க்க அறிஞரிடம் காட்டி பிழைகள் சரிபார்க்கப்பட்டன... பிப்ரவரி 2024 ஆம் ஆண்டு இந்த செய்தி பரலாக அறியப்பட்டது, ஜூலை 2025 ல் இந்தச் சகோதரிகள் தாங்கள் உருவாக்கிய புனிதப் பிரதியை அஜ்மீர் ஷெரீப் தர்காவில் சமர்ப்பித்தனர், தற்போது மார்ச் 2026 ல் மதீனாவிலுள்ள ஒரு நூலகத்திற்கு அன்பளிப்பாக வழங்க விருப்பம் தெரிவித்துள்ளனர்... • இதேபோன்ற ஒரு வரலாற்றுச் சம்பவம், பாகிஸ்தானைச் சேர்ந்த நசீம் அக்தர் என்பவரால் செய்யப்பட்டது. அவர் 32 ஆண்டுகள் செலவழித்து கைகளால் தைத்த திருக்குர்ஆனை ஜனவரி 2019-ல் மதீனாவில் உள்ள 'திருக்குர்ஆன் கண்காட்சியில்' (Holy Quran Exhibition) ஒப்படைத்தார்... #இறை அடியான்☝️ #🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🕋யா அல்லாஹ் #🤲துஆக்கள்🕋 #📗குர்ஆன் பொன்மொழிகள்
இறை அடியான்☝️ - இப்வாம் மார்க்கம் பெங்களூரைச்சார்ந்தஇரு சகோதரிகள்கையால் எழுதிய குர்ஆனை மதீனாவிற்கு அன்பளிப்பாக வழங்க விருப்பம்.! இப்வாம் மார்க்கம் பெங்களூரைச்சார்ந்தஇரு சகோதரிகள்கையால் எழுதிய குர்ஆனை மதீனாவிற்கு அன்பளிப்பாக வழங்க விருப்பம்.! - ShareChat