மதீனாவின் மேதை:
11 கிராஅத்துகளில் குர்ஆனை மனனம் செய்து, சர்வதேச கணிதப் போட்டியிலும் முதலிடம் வென்ற சவூதி மாணவன் பிலால் ஹீஜைலி
மதீனா முனவ்வரா:
சவூதி அரேபியாவின் மதீனா முனவ்வரா நகரைச் சேர்ந்த மாணவர் பிலால் ஹீஜைலி, தனது அபாரமான திறமையால் உலகையே வியக்க வைத்துள்ளார். 2009 ஆம் ஆண்டு பிறந்த இவருக்கு ஒரு சுவாரஸ்யமான பின்னணி உள்ளது.
இவரது தந்தை ஒரு சவூதி அரேபியர், தாய் ஒரு சீன முஸ்லிம் பெண்மணி ஆவார். திருமணத்தின் போது, "மதீனாவிலேயே வசிக்க வேண்டும்" என்பதையே தனது மஹ்ராக (மணக்கொடை) அந்தத் தாய் நிபந்தனையாக விதித்திருந்தார்.
இவரது தாயார் பிலால் ஹீஜைலியை சுமந்திருந்த காலத்தில், சுமார் 100 முறை புனித குர்ஆனை (கத்ம்) முழுமையாக ஓதி முடித்துள்ளார் . ஒரு சிறந்த வளர்ப்பில் பிறந்த பிலால், தனது 7 ஆவது வயதிலேயே புனித குர்ஆனை முழுமையாக மனனம் செய்து முடித்தார். அதிகாலை சுபஹ் தொழுகைக்குப் பின் மனனம் செய்வதையும், இரவு தூங்குவதற்கு முன் அவற்றை மீட்டுவதையும் (Revision) இவர் வழக்கமாகக் கொண்டுள்ளார்.
தற்போது 11 விதமான கிராஅத்துகளில் (பல்வேறு ஓதல் முறைகள்) குர்ஆனை மனனம் செய்துள்ள இவர், மதீனாவின் அஸீஸியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இமாமாகவும் பணியாற்றி வருகிறார்.
ஆன்மீகத்தில் மட்டுமல்லாது கல்வியிலும் சிறந்து விளங்கும் பிலால், சீன கணிதப் போட்டியில் (Chinese Mathematics) சர்வதேச அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
#🤲இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் #🤲துஆக்கள்🕋 #🕋யா அல்லாஹ் #📗குர்ஆன் பொன்மொழிகள் #இறை அடியான்☝️


