ShareChat
click to see wallet page
search
#innraya SINTHANAY சிந்தனை.*.( 29.03.2026). .................................. *" குழந்தைகளை விளையாட அனுமதியுங்கள்''* .................................. குழந்தைகளின் இயல்பான வளர்ச்சியில், ஆரோக்கியம் விளையாட்டுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்பதை பெற்றோர் உணர்வதே இல்லை இன்றைக்கு எத்தனை பெற்றோர் தங்களின் குழந்தைகளை விளையாட அனுமதிக்கிறார்கள்? . இன்றைய போட்டி நிறைந்த உலகில் கல்வி என்பது பிள்ளைகளின் வாழ்க்கையில் மிக முக்கியம் ஆனது என்பதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. அதே சமயம் குழந்தைகளின் ஆரோக்கியம் என்பதும் முக்கியமானது என்பதை பல பெற்றோர் மறந்து விடுகின்றனர். படிப்பில் தங்களின் பிள்ளை முதல் ஆளாக வர வேண்டும் என ஏதேதோ செய்து மெனக்கெடும் பல பெற்றோர்கள், அதே போல ஆரோக்கியமாக தன் பிள்ளை இருக்க வேண்டும் என்று நினைப்பதே இல்லை. இப்போது பல பள்ளிகளில் விளையாட்டு எனபது பெயர் அளவில் மட்டுமே இருக்கிறது. மேலும் பல குழந்தைகளுக்கு விளையாட்டுக்களின் பெயர் கூடத் தெரிவதில்லை... இன்றைய சூழலில் மாணவர்களைப் படித்து அதிக மார்க் வாங்கும் இயந்திரங்களாக உருவாக்குவதில் பள்ளிகளுக்கு இடையே பெரும் போட்டி ஏற்பட்டு உள்ளது. இதில் விளையாட்டு உட்பட வேறு தனித்திறமைகளை குழந்தைகளிடம் கண்டறிந்து அவற்றை வளர்க்க உதவும் பள்ளிகளும், ஆசிரியர்களும் மிகக் குறைவு. பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தாலும் குழந்தைகளுக்கு விளையாட வாய்ப்புகள் மிகவும் குறைவு. விடுமுறை நாட்களிலும் வீட்டுப்பாடம்,ட்யூசன் போன்றவைகள் குழந்தைகளின் நேரத்தை தீர்த்து விடுகிறது. விளையாட்டு என்பது உடலுக்கு மட்டும் பலம் சேர்ப்பது அல்ல. விளையாட்டு என்பது குழந்தைகள் சகமனிதர்களுடன் தயக்கமில்லாமல் பழகவும், வெற்றி தோல்விகளை எளிதாக எடுத்துக் கொள்ளவும், விட்டுக் கொடுக்கும் உதவும் ஒரு வழி. தாங்கள் விளையாடாமல் டி.வி.யில் மற்றவர்கள் விளையாடுவதை வேடிக்கை மட்டும் பார்க்கும் குழந்தைகள் எப்படி ஆரோக்கியமாக இருப்பார்கள்? தினமும் அதிகாலையில் இருந்து இரவு உறங்கும் வரை படிப்பும், எழுத்தும் என்று இருக்கும் குழந்தைகளுக்கு, உடல் நலம் இன்மையும் மனஉளைச்சலும் ஏற்படுவது இயல்பு. குழந்தைகளுக்குக் கல்வியைப் போலவே உடல் ஆரோக்கியமும் கிடைக்கும்படி செய்வதே பெற்றோரின் கடமை. *ஆம்.,நண்பர்களே..,* தினமும் மாலை நேரத்தில் குழந்தைகளை விளையாட அனுமதிக்க வேண்டும். அது அவர்களின் மன,உடல் நலத்திற்கு நன்மையைத் தரும் என்பதை உணர வேண்டும் குழந்தைகள் குழந்தைகளாக இருந்து குழந்தைப் பருவத்திற்கே உண்டான மகிழ்ச்சியை முழுமையாக அவர்கள் அனுபவிக்கட்டும். அதற்கு பெற்றோர் தடையாக இல்லாமல் உறுதுணையாக இருப்பது அவசியம். (ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி....)💐💐💐💐💐 -
innraya SINTHANAY - ஒரு ஆய்வுபடி குழந்தைகள் விளையாடுவதால் ஒடியாடி அவர்களின் கல்வித் திறன் மேம்படும் ஒரு ஆய்வுபடி குழந்தைகள் விளையாடுவதால் ஒடியாடி அவர்களின் கல்வித் திறன் மேம்படும் - ShareChat