saravanan
ShareChat
click to see wallet page
@ethumillay
ethumillay
saravanan
@ethumillay
Video Grapher. side velay, BALE SECTION, TEXTILE.
#sthuthi panjagam. மகரிஷி அருளிய🌷....!* 〰〰〰〰〰〰〰〰〰〰〰 🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷🪷 *🙏"அருணாசல ஸ்துதிபஞ்சகம்💐"* ➰➰➰➰➰➰➰➰ *🌹"உபதேச நூன்மாலை* *புதன்கிழமை..* *தேவிகாலோத்தர ஞானாசார விசார படலம்* *🌹...!*♾♾♾♾♾♾♾♾♾♾♾ *ஈசன்:* 17.பூசை வணக்கம் புரிசெபஞ் சிந்தன மாசரிப்ப தேதுமே யங்கில்லை பேசுமது கேவலம் ஞேயமென்று கேளினிக் கிஞ்சிலன்ய மாவறிய வேண்டுவதின் றாஞ்சலன மேவி *பொருள்:* கவனத்துடன் கேட்பாய்! பரவஸ்துவானது, ஞானத்தினால் மட்டுமே அறியத்தகுந்தது. ஆகையினால் கொஞ்சமும் தனக்கன்னியமாக அந்தப் பரவஸ்துவை அறிய வேண்டியது இல்லை. மனதால் செய்யப்படும் பூஜை, புனிதமான ஜெபம் தேவாதா மூர்த்திகளைத் தியானிப்பது முதலான எதுவுமே தேவையில்லை. *🌷சிவாய நம🌷* *🌷ஓம் நமசிவாய🙏* *🌷அன்பே சிவம்🙏* *🌷திருச்சிற்றம்பலம்🙏* *தொடரும்...!* 🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪🪷🟪
sthuthi panjagam. - = = - ShareChat
#jai sree hanuman. கவசம்🌷...!* *பாடல்:19...!* யோவாரந்நிதி மல்பபல்வல மிவோல்லங்கய ப்ரகாபான் வித வைதேஹிகன ஸோக தாபஹரணோ வைகுண்ட பதி ப்ரிய: அக்ஷக்னோஜித ராக்ஷஸேஸ்வர மஹாதர்பா பஹாரிணே ஸோயம் வானரபுங்கவோ அவது ஸதாத்வஸ்மான் ஸமீராத் மஜ *விளக்கம்:* எந்த அனுமன் மிகுந்த ஆற்றல் கொண்டு பெரும் கடலையே சின்ன குட்டையைத் தாண்டு வது போல் தாண்டி ஸ்ரீசீதாதேவிக்கு மிகுந்த சோகத்தால் ஏற்பட்ட தாபத்தைப் போக்கினாரோ, ஸ்ரீவைகுண்டநாதரான ஸ்ரீராமனிடத்தில் பக்தி கொண்டாரோ, அக்ஷயகுமாரனை வதம் செய் தாரோ, யுத்தத்தில் ஜயிக்கப்பட்ட ராட்சசனான ராவணனுடைய அபரிமிதமான கர்வத்தை அடக் கினாரோ, அப்படிப்பட்ட வாயு குமாரனும் வானரசிரேஷ்டருமான ஸ்ரீஹனுமான் எப்பொழு தும் நம்மை காக்கட்டும். *💐ஆஞ்சநே கவசம்💐* *.....நிறைவு பெற்றது.....* 🟫🟧🟫🟧🟫🟧🟫🟧🟫🟧🟫🟫🟧🟫🟧🟫🟫🟫🟧🟫🟧🟫
jai sree hanuman. - ShareChat
#sosthiram வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்🙏...! *🪷சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீ ந்ருஸிம்ஹ பாரதி சுவாமிகளால் இயற்றப்பட்டது...!* *பாடல்:01...!* ஶ்ரீசேஷஶைல ஸுனிகேதன தி³வ்யமூர்தே! நாராயணாச்யுத ஹரே! நளிநாயதாக்ஷ । லீலாகடாக்ஷ! பரிரக்ஷித ஸர்வலோக! ஶ்ரீ வேங்கடேஶ! மம தே³ஹி கராவலம்ப³ம் ॥ *பொருள்:* சேஷாசலத்தில் எழுந்தருளியிருக்கும் திவ்யமூர்த்தியே, நாராயணா, அச்சுதா, ஹரியே உன்னை வணங்குகின்றேன். அனைத்து உலகத்தையும் விளயாட்டாகவே காத்தருளும் வேங்கடேசனே! எனக்கு உதவிட உன் திருக்கரத்தை அளிப்பாயாக. *மலரும்...* 🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧🔷🟧
sosthiram - ShareChat
#aalayam arivom. உ ✧───•► 🙏 ஆலயம் அறிவோம் 🙏 திருவாரூர் மாவட்டம் தமிழ்நாடு வேளுக்குடி அருள்மிகு ருத்ர கோடீஸ்வரர் ஆலயம். மூலவர் : ருத்ரகோடீஸ்வரர் அம்மன்/தாயார் : கோமளாம்பிகை பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன் ஊர் : வேளுக்குடி மாவட்டம் : திருவாரூர் மாநிலம் : தமிழ்நாடு திருவிழா: பிரதோஷம், சனிப்பிரதோஷம், சிவராத்திரி தல சிறப்பு: இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவர்களுக்கு பதிலாக சாண்டில்ய முனிவர் அமர்ந்திருப்பது தலத்தின் சிறப்பு. திறக்கும் நேரம்: காலை 6 மணி முதல் 10 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். முகவரி: அருள்மிகு ருத்ரகோடீஸ்வரர் திருக்கோயில்வேளுக்குடி, திருவாரூர் மாவட்டம். பொது தகவல்: இங்கு விநாயகர், முருகப்பெருமான், தட்சிணாமூர்த்தி, துர்கை ஆகிய அனைவரும் அற்புதத் திருமேனியராக அருள்பாலிக்கின்றனர். வசிஷ்டர், சாண்டில்ய முனிவர், நந்திதேவர், இந்திரன் மற்றும் நவக்கிரகங்கள் வழிபட்டு வரம் பெற்ற புண்ணிய தலம் இது. பிரார்த்தனை: மூலவர் மேற்கு நோக்கிய நிலையில், மயானத்தைப் பார்த்தபடி காட்சி தருவதால், இங்கு வந்து ஐந்து பிரதோஷங்களில் கலந்து கொண்டு பிரார்த்தித்தால், மனச் சஞ்சலங்கள் நீங்கும்; மாங்கல்ய பாக்கியம் நிலைக்கும்; தீராத கடனும் தீரும்; குடும்பத்தில் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள். நேர்த்திக்கடன்: சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர். தலபெருமை: கோயிலையும் அமைத்து, ஊரையும் உருவாக்கிக் கொடுத்த மன்னன், இந்த ஊரில் சதாசர்வ காலமும் வேதகோஷம் ஒலித்துக் கொண்டே இருக்கவேண்டும்; வேள்விகளும் யாகங்களும் அடிக்கடி நடக்கட்டும் எனும் நோக்கத்தில், சோழ தேசத்தின் அந்தணர்கள் சிலருக்கு இந்த ஊரை எழுதிக் கொடுத்து, அவர்களுக்கு வேண்டிய வசதிகளையும் வழங்கினான். வேதங்களுக்கு யாகங்களுக்கும் பெயர் பெற்று விளங்கிய வேள்விக்குடி, காலப்போக்கில் வேளுக்குடி என மருவியது. இந்தக் கோயிலுக்கு ஏராளமான நிலங்களையும், ஆடு - மாடுகளையும் அள்ளித் தந்திருக்கின்றனர், மன்னர் பெருமக்கள். இரண்டாம் குலோத்துங்க சோழன், நெடுங்காலமாகத் தொழு நோயால் தவித்து வந்தான். வேள்விக்குடிக்குச் சென்று, தீர்த்தக் குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்; குணம் பெறுவாய் ! என அசரீரி முழங்க... அதன்படி, இங்கு வந்து, குளத்தில் நீராடி, பிரதோஷ பூஜை செய்ய... தொழு நோய் நீங்கப் பெற்றான் என்கிறது கல்வெட்டு ஒன்று. தல வரலாறு: தாங்கிக்கொள்ளவே முடியவில்லை வசிஷ்டரால் ! அடடா... எத்தனைப் பெரிய தவறு செய்துவிட்டோம் ! என்று கண்கலங்கினார். ஸ்ரீராமரின் திருமணத்துக்கு மிகக் கவனமாகப் பார்த்துத்தானே முகூர்த்தத் தேதி குறித்துக் கொடுத்தோம். ஆனாலும், இப்படி ஆகிவிட்டதே... ! என்று தவித்து மருகினார். முனிவர் பெருமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு, இது உங்களின் தவறல்ல. நீங்கள் சரியாகத்தான் தேதியும் நேரமும் குறித்துக் கொடுத்தீர்கள். ஆனால், எந்நேரமும் தர்ப்பைப் புல்லை வாயில் வைத்திருக்கிற சக்ரவாகப் பறவை, தாங்கள் அருளிய அட்சரத்தைப் பிழையாக உச்சரித்ததால் வந்த குழப்பம் இது. ஆகவே, நீங்கள் ஏன் கலங்குகிறீர்கள் ? சக்ரவாகப் பறவை செய்த தவற்றுக்கு நீங்கள் என்ன செய்வீர்கள் ? எனச் சொல்லி ஆறுதல்படுத்தினர். ஆனால் அவரது மனம், சமாதானம் ஆகவே இல்லை. பறவையே செய்திருந்தாலும், என் மீதுதான் தவறு. என்னுடைய தவத்தில்தான் ஏதோ கோளாறு என்று சஞ்சலப்பட்ட வசிஷ்டர், அப்படியே சேத்திராடனம் புறப்பட்டார். வழியெங்கும் வனங்கள்; அழகிய தலங்கள். ஒவ்வொரு தலமாகச் சென்று, அங்கே சில காலம் தங்கியிருந்து, இறைவனை நினைத்து, தவத்தில் ஈடுபட்டார். இப்படியாக வந்த வசிஷ்டர், நெல்லி வனம் சூழ்ந்த பகுதிக்கு வந்ததார். அங்கிருந்து கிளம்ப யத்தனிக்கும்போது, இன்றைக்குச் சனிக்கிழமை. பிரதோஷமும்கூட ! சனிப் பிரதோஷம் சர்வ பாப விமோசனம். ஆகவே, இங்கு இந்த வனத்தில் ருத்ர ஜபம் செய்து, பிரதோஷ பூஜை செய்வாயாக என அசரீரி ஒலித்தது. ஆடிப் போனார் வசிஷ்டர். என்ன பாக்கியம்... என்ன பாக்கியம் ! என்று கண்கள் மூடி, சிவனாரைத் தொழுதார். அந்த நெல்லி வனத்தில் திருக்குளம் ஒன்று இருந்தது. அதில் நீராடினார். கரைக்கு வந்தவர், கோடி முறை ருத்ர ஜபம் செய்வது எனத் தீர்மானித்து, ஜபத்தில் இறங்கினார். வேள்வியில் ஈடுபட்டார். சனிக்கிழமையும் பிரதோஷமும் கூடிய வேளையில் மனமுருக சிவனாரைப் பிரார்த்தனை செய்ததன் பலனாக, மனதில் இருந்த சஞ்சலங்கள் யாவும் மறைந்தன. மனம் கொள்ளாத மகிழ்ச்சியுடன் வேள்வியையும், கோடி முறை ருத்ர ஜபத்தையும் சொல்லி நிறைவு செய்த வசிஷ்டருக்கு, அங்கே திருக்காட்சி தந்தருளினார் சிவபெருமான். பின்னாளில், இந்தத் தலத்தைப் பற்றியும், வசிஷ்டர் இங்கே வழிபட்டார் என்பதையும் அறிந்த மன்னன், இங்கே கோயில் எழுப்பினான். கோடி முறை ருத்ர ஜபம் செய்த தலம் என்பதால், இங்கே குடிகொண்டிருக்கிற சிவனாருக்கு ருத்ரகோடீஸ்வரர் என்று திருநாமம் சூட்டப்பட்டது. அதேபோல் வசிஷ்டர் வேள்வி செய்த தலம் என்பதால் இந்த ஊருக்கு வேள்விக்குடி எனும் பெயர் வந்தது. சிறப்பம்சம்: அதிசயத்தின் அடிப்படையில்: இத்தலம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. தட்சிணாமூர்த்திக்கு அருகில் சனகாதி முனிவர்களுக்கு பதிலாக சாண்டில்ய முனிவர் அமர்ந்திருப்பது தலத்தின் சிறப்பு. அமைவிடம்: திருவாரூர்-மன்னார்குடி சாலையில், திருவாரூரில் இருந்து சுமார் 12 கி.மீ., தொலைவிலும், மன்னார்குடியிலிருந்து 16 கி.மீ., தொலைவிலும் உள்ளது வேளுக்குடி. அருகிலுள்ள ரயில் நிலையம்: கும்பகோணம் அருகிலுள்ள விமான நிலையம்: திருச்சி, சென்னை தங்கும் வசதி: திருவாரூர் 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🔥சிவ சிவ 🌙 🙏 ஓம் சிவய நம ஓம் 🌷
aalayam arivom. - ShareChat
◄•───✧ உ ✧───•► 🙏 ஶ்ரீ வாமன புராணம் 🙏 (Enn iniya share shart nanbargalkkum thangal inimayaana kudumbathaarukkum irav vanakkam mukkiyamaaga thangal thaai thanathay avargalukkum irav vanakkam), #irav vanakkam பாகம்_09 நர நாராயணர்..!! பஹுருசன் என்ற பிராமணனுக்கும் அவள் மனைவி அகிம்சை ஆகியோருக்கும் ஹரீ, கிருஷ்ணன், நர நாராயணர்களென்று நான்கு புத்திரர்கள். சியவன மகரிஷி எதிரில் நைமிசாரணிய மகத்துவமும், சரசுவதி நதியில் நீராடவும் நைமிசாரணியத்துக்கு நர நாராயணர்கள் சென்று, அங்குத் தவம் செய்ய ஆரம்பித்தனர். பிரகலாதன் அவர்களை அணுகி தவம் செய்யும் உங்களுக்கு வில், அம்பு எதற்கு? நீங்கள் உண்மையில் தவம் செய்ய வந்தவர்களா? அல்லது போலியா? என்று கேட்டான். அப்போது நரன் சக்திக்கேற்ற பொருளை அருகில் வைத்திருப்பதில் தவறேதுமில்லை அல்லவா! என்றான். பிரகலாதன் கோபமடைந்து தருமநெறியில் ஒழுகும் நான் இங்கே இருக்கையில் பிராமணர்கள் வில், அம்பு கொள்வதோ? என்று கேட்டான். அதற்கு நரன் ஆம்! உலகில் எங்களை வெல்பவர் யாரும் இல்லை என்று கூற பிரகலாதன் எப்படியாவது நர, நாராயணர்களைத் தான் வெல்லப் போவதாகக் கூறித் தன் பரிவாரங்களைத் தூரத்தில் இருக்குமாறு பணித்தான். மேலும் தன் ராச்சியத்திற்குத் தன் பெரிய தந்தை இரணியாக்ஷனின் மகனான அந்தகாசுரனை அரசனாக்கித் தான் வில்லும், அம்பும் ஏந்தி நர, நாராயணர்களிடம் போர் தொடுத்தான். பல ஆண்டுகள் நிகழ்ந்த போரில் வெற்றி யார் பக்கம் என்று நிச்சயிக்க முடியாமல் இருக்கச் சிவபெருமானின் அறிவுரைப்படி பிரகலாதன் போரை நிறுத்தி நர நாராயணர்களைத் துதி செய்து தன் நகரம் ஏகினான். நர, நாராயணர்களின் தவத்தைக் கண்டு அச்சமுற்ற தேவேந்திரன் அதைக் கெடுக்க ரம்பையையும், மன்மதனையும் அனுப்பினான். அவர்கள் என்ன செய்தும் நரநாராயணர்களை ஒன்றும் செய்யவில்லை. அப்போது அவர்கள் தங்கள் தொடையைத் தேய்த்து ஓர் அப்சரசைத் தோற்றுவித்து அவளை இந்திரனுக்குப் பரிசாக அனுப்பினர். (தொடை-ஊரு). இவ்வாறு ஏற்பட்ட அவளுக்கு ஊர்வசி என்று பெயர். தொடரும்...✍ 🌹 வாழ்க வளமுடன் 🌹 🪐 வாழ்க வையகம் 🪐 🙏 ஶ்ரீ, ராம ஜெயம் 🌷
irav vanakkam - ஸ்ரீவாமன புராணம் ஸ்ரீவாமன புராணம் - ShareChat
#innraya SINTHANAY சிந்தனை.*.( 24.04.2026.) ........................................... *"இல்லறம் சிறக்க..''* .......................................... எல்லாருமே இல்வாழ்க்கை சிறந்து விளங்க வேண்டும் என்று தான் விரும்புவோம். ஆனால், யார் யாரெல்லாம் அந்தந்த சூழ்நிலைகளை சரியாக கடந்து போகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இல்லறத்தை அடுத்த கட்டத்திற்குக் எடுத்து செல்கின்றனர். இல்லத்தைப் பராமரிப்பதிலும் பிள்ளைகளுக்கு வளமான வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பதிலும் ஒரு பெண்ணின் பங்கு தலையாயது... அதுபோல,பொருளீட்டி வரக்கூடிய ஆண்களின் பங்கும் அளப்பரியது.. ஆனால்,இருவரும் வேலைக்குச் செல்லும் இந்த காலத்தில்,இது ஆணுக்கு, இது பெண்ணுக்கு என்று குடும்பப் பொறுப்புகளை இனம் பிரிக்க இயலாதபடி வாழ்க்கைச் சமத்துவம் ஆகி விட்டது.. இந்த சூழ்நிலையில் ஒரு குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்றால், கணவன் மீது மனைவியோ,மனைவி மீது கணவனோ, ஆதிக்கம் செலுத்தாமல் இருக்க வேண்டும். அன்பால் சாதிக்கும் மனநிலையைக் கொண்டு இருந்தால் தான் குடும்பத்தில் சண்டை, சச்சரவு இல்லாமல் மகிழ்ச்சியாக எல்லா வளமும் பெற்று பல்லாண்டு வாழ முடியும்.., *ஆம்.,நண்பர்களே.,* கடைசி வரை துணையாக இருக்கப் போவது குடும்பம். அதற்கு முதலிடம் கொடுங்கள்., உங்கள் வாழ்க்கைத் துணைவரை/துணைவியரை உலகின் முக்கிய மனிதராய் நடத்துங்கள்., குழந்தைகளுடன் கூடுதல் நேரத்தைச் செலவிடுங்கள்., பசுமையான நினைவுகளைக் குடும்பத்துக்குள் உருவாக்குங்கள்..,........🌹🙏🏻💐
innraya SINTHANAY - எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஆணுக்கு மனைவிதான் @ii மனைவிக்குகணவன் தான் வேறு எதுவும்இலலை அதற்கு இணை விழுதுகள் மரத்தைதாங்கலாம் Mu Mluiu MWMaithilyArunachalam] வேர் மட்டுமே அதைவாழ வைக்க முடியும் . கணவன் மனைவிஎனும்உறவும் தைப்போலதான் எத்தனை சொந்தங்கள் இருந்தாலும் ஆணுக்கு மனைவிதான் @ii மனைவிக்குகணவன் தான் வேறு எதுவும்இலலை அதற்கு இணை விழுதுகள் மரத்தைதாங்கலாம் Mu Mluiu MWMaithilyArunachalam] வேர் மட்டுமே அதைவாழ வைக்க முடியும் . கணவன் மனைவிஎனும்உறவும் தைப்போலதான் - ShareChat