
saravanan
@ethumillay
Video Grapher. side velay, BALE SECTION, TEXTILE.
#gopura tharisanam ஒரு கோபுர தரிசனம்:"*
*காலை சூரிய உதயத்தில்...*
*கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம்||*
*கோபுர தரிசனம் - பாவ விமோசனம்...*
*இன்றைய கோபுர தரிசனம்.*
*அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் திருக்கோயில்,*
திருவோணம் நட்சத்திரக்காரர்களின் கோயில்
*மூலவர் : பிரசன்ன வெங்கடேசப்பெருமாள்.*
*அம்மன்/தாயார் : அலர்மேல் மங்கை.*
*திருப்பாற்கடல் போஸ்ட்-632 508,*
*காவேரிப்பாக்கம்,*
*வாலாஜாபேட்டை தாலுக்கா,*
*வேலூர் மாவட்டம்.*
*காலை 7.30 மணி முதல் மதியம் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.*
*+91 4177 254 929, 94868 77896, 94861 39289.*
*╔•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╗*
*★❀·.:::::::பகிர்வு::::::::.·❀★*
*சோழ.அர.வானவரம்பன்* *Mobile No +918072055052*
*╚•═•-⊰❉⊱•═•⊰❉❉⊱•═•⊰❉⊱═•╝*
*!!♤♤♤♤♤♤♤ S.R.V.♤♤♤♤♤♤♤!!*
*சிறப்பு : வைகுண்ட ஏகாதசி, பிரதோஷம்,சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இது போன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும்.*
*திருவோணம் நட்சத்திரக்காரர்களின் பொது குணம் : தெய்வீக வழிபாட்டில் பக்தியும், பெரியவர்களிடத்தில் மரியாதையும் கொண்டிருப்பர். பொது விஷயங்களில் ஆர்வத்துடன் பங்கேற்பர். மற்றவர்களைப் புரிந்து கொள்வதில் வல்லவர்கள். பிறருக்கு உதவி செய்யும் எண்ணம் கொண்டிருப்பர் நிலபுலன்களை அதிகம் பெற்றிருப்பர்.*
*இக்கோயில் கிருஷ்ணதேவராயரால் கட்டப்பட்டது. கோயில் பிரகாரத்தில் ஆண்டாள், பாமா, ருக்மணியுடன் நவநீத கிருஷ்ணன், பக்த ஆஞ்சநேயர், ஒன்பது நாகதேவதைகள், அஷ்ட நாக கருடாழ்வார் உள்ளனர். கோயில் எதிரில் புண்டரீக தீர்த்தம் உள்ளது. இக்கோயில் இந்து சமய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது.*
*திருவோணம் நட்சத்திரக்காரர்கள் தங்களுக்கு ஏற்படும் தோஷங்கள் நீங்க இத்தல இறைவனை வழிபாடு செய்கின்றனர். கல்வியில் சிறந்து விளங்க நினைப்பவர்கள், காது, மூக்கு, தொண்டை சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், வக்கீல்கள், ஆடியோ சம்பந்தப்பட்ட தொழில் செய்பவர்கள், திருமணத்தில் தடை உள்ளவர்கள் இங்கு அடிக்கடி வந்து வழிபாடுசெய்து பலனடைகிறார்கள்.*
*திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு நெய்விளக்கேற்றி, துளசி அர்ச்சனை செய்தால் நினைத்த காரியம் நடக்கும் என்பது நம்பிக்கை. திருமணத்தடை நீங்க 108 விரளி மஞ்சளை மாலையாக கோர்த்து தாயாருக்கு சாற்றி அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு.*
*திருவோண நட்சத்திர தலம் : 27 நட்சத்திரங்களில் பெருமாளுக்குரிய திருவோணமும், சிவனுக்குரிய திருவாதிரையும் மட்டுமே திரு என்ற அடைமொழியுடன் கூடியது. சந்திரபகவான் தான் பெற்ற சாபத்தினால், அவனது கலைகள் தேயத்தொடங்கியது. இதனால் இவனது 27 நட்சத்திர மனைவியருள் ஒருவரான திருவோண நட்சத்திர தேவி மிகவும் வருத்தமடைந்தாள். உடனே அவள் இத்தலத்தில் பெருமை அறிந்து, இங்குள்ள பெருமாளை வேண்டி தவமிருந்தாள். இவளது தவத்தில் மகிழ்ந்த பெருமாள், ஒரு மூன்றாம் பிறை நாளில் சந்திரனுக்கு காட்சி தந்து அவனது தோஷத்தை போக்கினார். அன்றிலிருந்து இத்தலம் திருவோண நட்சத்திர தலமானது.*
*திருவோண நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தங்களது வாழ்நாளில் அடிக்கடியோ, அல்லது தங்களது பிறந்த நட்சத்திர நாளிலோ, ரோகிணி, அஸ்தம் ஆகிய சந்திரனுக்குரிய நாளிலோ, மூன்றாம் பிறை நாளிலோ இத்தல பெருமாளுக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்டால், கல்வி அறிவு வளரும் திருவோணம் பெருமாளுக்குரிய நட்சத்திரம் என்பதால் அனைத்து நட்சத்திரக்காரர்களும், தங்களது வேண்டுதல் நிறைவேற இங்கு பிரார்த்தனை செய்கிறார்கள்.*
*சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. சிவனும் பெருமாளும் ஒன்றாக அருள்பாலிப்பதால் பிரதோஷம் இங்கு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. பெருமாளின் 108 திவ்ய தேசத்தில் 107வது தலமான திருப்பாற்கடலை உடலுடன் சென்று பார்க்க முடியாது இந்த குறை தீர்ப்பதற்காகவே பெருமாள் இந்த திருப்பாற்கடலில் அருள்கிறார். எனவே இங்குள்ள பெருமாளை தரிசித்தால் 107வது திவ்ய தேசமான திருப்பாற்கடல் பெருமாளை தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதிகம்.*
*பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். இது போன்ற அமைப்பை காண்பது அரிது.*
*புண்டரீக மகரிஷி பெருமாள் கோயில்களுக்கு யாத்திரை சென்றார். நாராயண சதுர்வேதிமங்கலம் என்னும் தலத்தில் அவர் நுழைந்ததும், அங்கு சிவலிங்கம் இருப்பதைப் பார்த்தார் பெருமாள் கோயிலுக்கு பதிலாக சிவாலயத்துக்குள் வந்துவிட்டோமே என வெளியே வந்த போது, சிவன் ஒரு முதியவர் வேடத்தில் அங்கு வந்து, ரிஷியே! நீங்கள் உள்ளே சென்று வந்தது பெருமாள் சன்னதி தான் என்றார். ரிஷியோ மறுத்தார். முதியவர் மறுபடியும் ரிஷியை மூலஸ்தானத்திற்குள் அழைத்து சென்று, அங்கிருந்த ஆவுடையின் மேல் ஏறி நின்று பெருமாளாக பிரசன்னமாகி தரிசனம் தந்து, சிவன் வேறு, விஷ்ணு வேறு கிடையாது. இரண்டும் ஒன்று தான், என்றார். அத்துடன், அமர்ந்த கோலத்திலும் கிடந்த கோலத்திலும் தரிசனம் தந்து,ரிஷியே! உங்களால் திருப்பாற்கடல் சென்று இந்த மூன்று கோலங்களிலும் தரிசிக்க இயலாது என்பதால் இங்கேயே அந்த தரிசனத்தை தருகிறேன். உங்களுக்கு இந்த மூன்று கோலங்களையும் இங்கு காண்பித்ததால், இத்தலமும் இன்று முதல் திருப்பாற்கடல் என அழைக்கப்படும் என்று அருளினார். புண்டரீக மகரிஷிக்காக பெருமாள் பிரசன்னமானதால் (தோன்றுதல்) இங்குள்ள பெருமாள் பிரசன்ன வெங்கடேசப்பெருமாள் ஆனார் இவளுடன், அலர்மேலு மங்கை தாயார் அருள் செய்கிறாள்.*
*சிவபெருமானின் ஆவுடையில் பெருமாள் நின்ற கோலத்தில் இருப்பது, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என்ற மாபெரும் தத்துவத்தை குறிக்கிறது. இதுபோன்ற அமைப்பை காண்பது மிகவும் அரிது. பொதுவாக பெருமாள் கோயில்களில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, அதன் வழியாக உற்சவ மூர்த்தி வந்து பக்தர்களுக்கு தரிசனம் கொடுப்பார். ஆனால் இங்கு மட்டுமே மூலவருக்கு சொர்க்க வாசலுடன் சேர்த்து மூன்று வாசல்கள் உள்ளது. வைகுண்ட ஏகாதசி தினத்தில் இந்த சொர்க்க வாசல் திறக்கப்பட்டு மூலவரையே நேரடியாக தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கும். இது போன்ற அமைப்பை காண்பது அரிது.*
*இனிய காலை வணக்கம்.🙏💐*
*🌹அன்புடன்🌹*
*சோழ.அர.வானவரம்பன்.*
*+918072055052.*
🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
#innraya SINTHANAY சிந்தனை.*.( 27.04.2026)
...........................................................
*" தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள்''*
.....................................................
நம்மில் அநேகர் அறிவையும் ஆற்றலையும் அவரவர் தோற்றத்தோடு இணைத்து எடை போடுகின்றார்கள்.
சினிமாக்களில் கதாநாயகர்கள் அழகாக கம்பீரமாக கண்டு கண்டு பழகிப் போன நமக்கு, அறிவாளிகள், ஆற்றல் உள்ளவர்கள் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று தவறாக எடை போடுகின்றோம்..
”எப்பவுமே ஒருவருடைய தோற்றத்தை வைத்து அவர் திறமையை நாம் அறிய முடியாது. அவரின் செயலை வைத்துத் தான் அறிய முடியும்..
ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் திறமை உள்ளவராகக் கூட இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள் அவமானங்களில் இருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள்.
1930களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு பெரிய உற்பத்தி நிறுவனம் ஏராளமான இயந்திரங்களை தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் ஜப்பானுக்கு ஓர் இயந்திரம் தேவைப்பட்டது. அந்த நிறுவனம் ஜப்பானுக்குத் தேவைப்பட்ட இயந்திரத்தை அனுப்பி வைத்தது.
முதலில் நன்றாக வேலை செய்த அந்த இயந்திரம், சில நாள்களிலே வேலை செய்ய மறுத்தது. உடனே அதைத் தயாரித்த நிறுவனத்திற்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தது ஜப்பான்.
இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை, அதைச் சரிசெய்து கொடுப்பதற்கு உடனடியாக ஒருவரை இங்கே அனுப்பி வைக்கவும் என்ற செய்தியை அனுப்பியது.
அதைப் பார்த்த அந்த அமெரிக்க நிறுவனம் ஒருவரை உடனே அனுப்பி வைத்தது
வந்த நபரைப் பார்த்ததும் ஜப்பான் மற்றொரு அவசரச் செய்தியை அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பியது..
அந்த செய்தியில் நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் ஆள் மிகவும் இளைஞராக இருக்கிறார், அதனால் தயவு கூர்ந்து கொஞ்சம் வயதானவராக, அனுபவம் உள்ளவராக அனுப்பி வைத்தால் நல்லது என்று இருந்தது.
அதற்குப் பதில் அனுப்பிய அந்த அமெரிக்க நிறுவனம், ஏற்கனவே நாங்கள் அனுப்பியுள்ள இளைஞரையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்,
ஏனென்றால் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடித்தவரே அந்த இளைஞர் தான் என்று குறிப்பிட்டு இருந்தது.
ஆம்.,நண்பர்களே..,
ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை நாம் எளிதில் எடை போடக் கூடாது.நம் கணக்கு பல நேரங்களில் தவறி விடக்கூடும்.
மாறாக அனைவரையும் மரியாதையாகவும், கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..............)💐💐💐💐💐💐💐
#suya. சிந்தனை...!
.......................................
நம்மில் பெரும்பாலோனோர் எதற்கெடுத்தாலும் அடுத்தவரிடம் ஆலோசனை கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்...
அப்படி அடிக்கடி ஆலோசனை கேட்பதால் அவர்களின் சுயமாக சிந்திக்கும் திறன் குறைந்து விடுகிறது. அதுமட்டுமில்லாமல் தன்னம்பிக்கை குறையவும் வாய்ப்பு இருக்கிறது...
முன்னேற்றம் என்பது சுயமாக இருக்க வேண்டும். அதாவது சொந்தமாக ஆலோசிக்க வேண்டும். சொந்தக் காலில் நிற்கப் பழக வேண்டும்...
அடுத்தவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். தவறில்லை. ஆனால்!, அதனை அப்படியே நகலெடுத்தது போல கடைப்பிடித்தல் கூடாது...
அந்த ஆலோசனைகளை உங்கள் மனதில் ஊறப் போட வேண்டும். அதில் எதை எடுத்துக் கொள்ளலாம், எதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று ஆலோசிக்க வேண்டும்...
சில ஆலோசனைகள் உங்கள் வாழ்க்கைக்கும், உங்கள் மனநிலைக்கும், உங்கள் நடவடிக்கைக்கும், உங்கள் பழகும் விதத்திற்கும் ஏற்புடையதாக இருக்கும்...
அவற்றைத் துணிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும். வேறு சில ஆலோசனைகள் நல்லதாகவும், கடைப்பிடிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்...
ஆனாலும்!, உங்கள் மனோபாவத்திற்கு பொருந்தாததாக இருக்கும். எனவே அவற்றை ஒதுக்கித் தள்ளி விட வேண்டும்...
எல்லோரையும் ஒரே நேரத்தில் நிறைவடையச் செய்தல் என்பது இயலாத செயல். 'எடுப்பார் கைப்பிள்ளையாக' இருக்காமல் நாமாகவே நல்லது எது, கெட்டது எது என்பதை சுயமாக சிந்தித்து ஒரு செயலில் இறங்க வேண்டும்...
ஆம் நண்பர்களே...!
உங்கள் சுயத்தை தொலைக்காமல் நீங்கள், நீங்களாக இருங்கள். தைரியமாக உங்கள் கருத்தை சொல்லுங்கள். அல்லது கூற முயற்சி செய்யுங்கள்...!
மற்றவர்கள் ஏதாவது நினைப்பார்களோ என்று நினைத்தால் நம் கருத்தை என்றுமே கூற முடியாது!, நம் கருத்தை முன்வைப்பதன் மூலமே மேலும் மாற்றுக் கருத்துகளை நம் தவறுகளை நாம் இனம் காண முடியும், அப்போது தான் நம் எண்ணங்களை, தவறுகளை சரி செய்து நம்மை மேம்படுத்திக் கொள்ள முடியும்...!!
உங்கள் வாழ்க்கையை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். மற்றவர்கள் அல்ல மற்றவர்கள் சொல்லும் கருத்துக்களை கேட்டுக் கொள்ளுங்கள். ஆனால்!, முடிவு எடுப்பது என்னவோ நீங்களாகத் தான் இருக்க வேண்டும்...!!!
எதையும் சுயமாக சிந்தியுங்கள்...! ஆரோக்கியமாக வாழுங்கள்...!!
#sitham siva mayam.
*༺சித்தம் சிவமயம்༻*
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*🌹பிறைசூடி துதிபாடி🌹*
*💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
_*💫🪷பாடல்🪷💫*_
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
_🍁இன்பால்தயிர் நெய்யாடியை இளவெள்விடை யானைப்_
_🍁பொன்போலொளிர் சடையான்தனைப் பொழில்வக்கரை யானை_
_🍁வம்பார்குழல் வடிவாம்பிகை மணவாளனை நாளும்_
_🍁நம்பாவென அன்பால்தொழ நலியாவினை தானே._
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
*பொழிப்புரை :*
*_இனிய பால், தயிர், நெய் இவற்றால் அபிஷேகம் செய்யப் பெறுபவனை !! இளைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவனை !! பொன் போலத் திகழும் சடையை உடையவனை !! சோலை சூழ்ந்த திருவக்கரையில் உறைபவனை !! வாசக்குழலியான வடிவாம்பிகை கணவனை !! தினமும் பக்தியோடு, "நம்பனே" என்று அவன் திருநாமங்களைச் சொல்லி வழிபடுவாரை வினைகள் வருத்தமாட்டா !!_*
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
*꧁༺சிவசிவ༻꧂*
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
*💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫*
*💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫*
*💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫*
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
*🌹திருச்சிற்றம்பலம்*
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#vaalkkay malargal மலர்கள்: ஏப்ரல் 27
இல்லறத்திலேயே ராஜயோகம்
இயற்கையானது மெய்ப்பொருள், ஆற்றல், உணர்வு என்று மூன்று நிலைகளாக இருக்கிறது, இயங்குகிறது, அறிகின்றது. ஆற்றல் என்ற பிரிவில் பரமாணு முதலாக எல்லாத் தோற்றங்களும் அடங்கும். ஏனெனில், தோற்றங்கள் அனைத்தும் நுண் துகள்களாகிய ஆற்றலின் திணிவுநிலைகளேயன்றி வேறில்லை. இந்த மூன்று நிலைகள் ஆங்கிலத்தில் Being, Becoming, Knowing என்று வழங்கப்படுகின்றன. “உணர்வு” என்பதை “அறிவு” என்றும் “மனம்” என்றும் இடத்திற்கு ஒப்பக் கூறுகிறோம். உணர்வு எனும் இயக்கம் உணர்ச்சி, கணிப்பு, நினைப்பு, தெளிவு எனும் நான்கு செயல்களாக இயங்கி வருகின்றது. மெய்ப்பொருள் தானே ஆற்றலாகித் தன் நிலையை அறிந்து கொள்கின்றது என்பது தான் பொருள். இச்சுருக்கமே வேதங்களின் ரகசியமாகும்.
மெய்ப்பொருளே உணர்வாக இயங்கினாலும் உணர்ச்சி எனும் இயக்கம் புலன்களைக் கொண்டு தொடங்குகின்றதால் அது ஆற்றல் களமாகிய பேரியக்க மண்டலத்தில் ஒரு எல்லைக்குட்பட்டு இயங்குகிறது. அப்போது தன் முழு மதிப்பும், உணர்வாக எழுச்சி பெற்ற நோக்கமும் மறந்துபட்டு ஒரு மயக்க நிலையில் வாழ்ந்து இன்ப துன்ப அனுபவங்களைப் பெறுகிறது.
மனிதனிடம் தன்னிலையை அறியத்தக்க ஆறாவது அறிவு நிலை கூடியுள்ள போதும் அவன் உடல் ஐயுணர்வு உயிர்கள் மூலமே பரிணாம வரிசையில் தோன்றியதால் ஆறாவது அறிவு வளர்ச்சி பெறும் வரையில் ஐயுணர்வு மயக்கத்தில் தான் வாழ்ந்து வருகிறான். இந்த நிலையில் உணர்ச்சி மயமாகிப் புரியும் செயல்களின் விளைவாகப் பலவிதச் சிக்கல்களை வாழ்வில் ஏற்படுத்திக் கொண்டு துன்பங்களை அனுபவிக்கின்றான். தனது நோக்கம் குறித்து சிந்திக்கத் தொடங்கும் போது, தனது மூலம் நோக்கி ஆராயும் போது, சிறிது சிறிதாக மயக்க நிலையிலிருந்து விழிப்பு நிலை உண்டாகின்றது. முழு விழிப்பு நிலை பெற்று விட்டால், அந்த அறிவு நிலையை ஞானம் என்றும் மெய் விளக்கம் என்றும் கூறுகின்றோம். தனது மூலமும் பிறவி நோக்கமும் மறந்து புலன்கள் கவர்ச்சியில் சிக்குண்டு இன்ப துன்ப உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் நிலையை மாயை என்று கூறுகிறோம். மயக்க நிலை மாயை; விளக்க நிலை ஞானம். மயக்க நிலையிலிருந்து விளக்க நிலைக்கு மாற்றமடையும் முயற்சி நிலையே யோகம்.
- அருட்தந்தை வேதாத்திரி மகரிசி
🌹🌹🌹
#moothor bathil.
அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும்
கேள்வி: அருள்தந்தை அவர்களே! சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்குப் பெயர் வந்தது?
பதில்: “சத்து” என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். “சித்து” என்பது உயிரைக் குறிக்கும். “அனந்தம்” என்பது மனம் பல்வேறு நிலைகளில் இயங்கிக் கொண்டு இருப்பதைக் குறிக்கும். ஆக மெய்ப்பொருள் – உயிர் – மனம் இந்த மூன்று நிலைகளையும் சத்து – சித்து – அனந்தம் என்றும், அவற்றைச் சேர்த்து “சச்சிதானந்தம்” என்றும் வழங்குகிறோம்.
இதில் “சித்து” என்ற உயிரை முழுவதும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உயிரின் இருப்பை, தன்மையை, இயக்கத்தை உணர்ந்ததோடு, அதை நடத்தும் வல்லமையுடையவர்கள் சித்தர்கள். ஆகவே, சித்தர்கள் என்றாலே உயிரை உணர்ந்தவர்கள் என்பதுதான் விளக்கம்.
வாழ்க வளமுடன்!
அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி
(நாளையும் தொடரும்)
🌹🌹🌹
#uthirntha pookkal.
உதிர்ந்த பூக்களுக்காக *கண்ணீர் விடாதீர்கள்!*
மலர்கின்ற பூக்களுக்கு *தண்ணீர் விடுங்கள்!*
மறந்த உறவுகளுக்காக *கண்ணீர் விடாதீர்கள்!*
மலரும் உறவுகளுக்கு *கை கொடுங்கள்!*
வாசனை என்பது *சில நிமிடம் வரை!*
வறுமை என்பது *சில காலம் வரை!*
அழகு என்பது *வயது உள்ள வரை!*
நல்ல உறவு என்பது *உயிர் உள்ள வரை..!!*












