#innraya SINTHANAY சிந்தனை.*.( 27.04.2026)
...........................................................
*" தோற்றத்தை வைத்து எடை போடாதீர்கள்''*
.....................................................
நம்மில் அநேகர் அறிவையும் ஆற்றலையும் அவரவர் தோற்றத்தோடு இணைத்து எடை போடுகின்றார்கள்.
சினிமாக்களில் கதாநாயகர்கள் அழகாக கம்பீரமாக கண்டு கண்டு பழகிப் போன நமக்கு, அறிவாளிகள், ஆற்றல் உள்ளவர்கள் கம்பீரமாக இருக்க வேண்டும் என்று தவறாக எடை போடுகின்றோம்..
”எப்பவுமே ஒருவருடைய தோற்றத்தை வைத்து அவர் திறமையை நாம் அறிய முடியாது. அவரின் செயலை வைத்துத் தான் அறிய முடியும்..
ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் திறமை உள்ளவராகக் கூட இருக்கலாம்.
அப்படிப்பட்டவர்கள் அவமானங்களில் இருந்து வாழ்க்கைக்கான உரத்தைப் பெற்றுக் கொள்பவர்கள் தான் அழகில் வெற்றியாளர்கள்.
1930களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் ஒரு பெரிய உற்பத்தி நிறுவனம் ஏராளமான இயந்திரங்களை தயாரித்து பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து கொண்டிருந்தது.
அந்த நேரத்தில் ஜப்பானுக்கு ஓர் இயந்திரம் தேவைப்பட்டது. அந்த நிறுவனம் ஜப்பானுக்குத் தேவைப்பட்ட இயந்திரத்தை அனுப்பி வைத்தது.
முதலில் நன்றாக வேலை செய்த அந்த இயந்திரம், சில நாள்களிலே வேலை செய்ய மறுத்தது. உடனே அதைத் தயாரித்த நிறுவனத்திற்கு அவசரச் செய்தி ஒன்றை அனுப்பி வைத்தது ஜப்பான்.
இயந்திரம் சரியாக வேலை செய்யவில்லை, அதைச் சரிசெய்து கொடுப்பதற்கு உடனடியாக ஒருவரை இங்கே அனுப்பி வைக்கவும் என்ற செய்தியை அனுப்பியது.
அதைப் பார்த்த அந்த அமெரிக்க நிறுவனம் ஒருவரை உடனே அனுப்பி வைத்தது
வந்த நபரைப் பார்த்ததும் ஜப்பான் மற்றொரு அவசரச் செய்தியை அமெரிக்க நிறுவனத்திற்கு அனுப்பியது..
அந்த செய்தியில் நீங்கள் அனுப்பி வைத்திருக்கும் ஆள் மிகவும் இளைஞராக இருக்கிறார், அதனால் தயவு கூர்ந்து கொஞ்சம் வயதானவராக, அனுபவம் உள்ளவராக அனுப்பி வைத்தால் நல்லது என்று இருந்தது.
அதற்குப் பதில் அனுப்பிய அந்த அமெரிக்க நிறுவனம், ஏற்கனவே நாங்கள் அனுப்பியுள்ள இளைஞரையே பயன்படுத்திக் கொள்ளுங்கள்,
ஏனென்றால் அந்த இயந்திரத்தைக் கண்டு பிடித்தவரே அந்த இளைஞர் தான் என்று குறிப்பிட்டு இருந்தது.
ஆம்.,நண்பர்களே..,
ஒருவருடைய தோற்றத்தையோ, உடையையோ வைத்து ஒருவரை நாம் எளிதில் எடை போடக் கூடாது.நம் கணக்கு பல நேரங்களில் தவறி விடக்கூடும்.
மாறாக அனைவரையும் மரியாதையாகவும், கண்ணியத்துடன் நடத்த வேண்டும்.
( ஆக்கம் உடுமலை சு.தண்டபாணி..............)💐💐💐💐💐💐💐


