ShareChat
click to see wallet page
search
#moothor bathil. அன்பர்களின் கேள்விகளும் அருள்தந்தையின் பதில்களும் கேள்வி: அருள்தந்தை அவர்களே! சித்தர்கள் என்று ஏன் அவர்களுக்குப் பெயர் வந்தது? பதில்: “சத்து” என்பது மெய்ப்பொருளைக் குறிக்கும். “சித்து” என்பது உயிரைக் குறிக்கும். “அனந்தம்” என்பது மனம் பல்வேறு நிலைகளில் இயங்கிக் கொண்டு இருப்பதைக் குறிக்கும். ஆக மெய்ப்பொருள் – உயிர் – மனம் இந்த மூன்று நிலைகளையும் சத்து – சித்து – அனந்தம் என்றும், அவற்றைச் சேர்த்து “சச்சிதானந்தம்” என்றும் வழங்குகிறோம். இதில் “சித்து” என்ற உயிரை முழுவதும் உணர்ந்தவர்கள் சித்தர்கள். உயிரின் இருப்பை, தன்மையை, இயக்கத்தை உணர்ந்ததோடு, அதை நடத்தும் வல்லமையுடையவர்கள் சித்தர்கள். ஆகவே, சித்தர்கள் என்றாலே உயிரை உணர்ந்தவர்கள் என்பதுதான் விளக்கம். வாழ்க வளமுடன்! அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி (நாளையும் தொடரும்) 🌹🌹🌹
moothor bathil. - ShareChat