ShareChat
click to see wallet page
search
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிடுகிறேன்: கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கெஞ்சுகிறேன். சங்கீதம் 142:1 அவருக்கு முன்பாக என் சஞ்சலத்தை ஊற்றுகிறேன்: அவருக்கு முன்பாக என் நெருக்கத்தை அறிக்கையிடுகிறேன். சங்கீதம் 142:2 என் ஆவி என்னில் தியங்கும்போது, நீர் என் பாதையை அறிந்திருக்கிறீர்: நான் நடக்கிற வழியில் மறைவாக எனக்குக் கண்ணிவைத்தார்கள். சங்கீதம் 142:3 வலதுபுறமாய்க் கண்ணோக்கிப்பாரும், என்னை அறிவார் ஒருவரும் இல்லை: எனக்கு அடைக்கலமில்லாமற்போயிற்று: என் ஆத்துமாவை விசாரிப்பார் ஒருவரும் இல்லை. சங்கீதம் 142:4 கர்த்தாவே, உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்: நீரே என் அடைக்கலமும், ஜீவனுள்ளோர் தேசத்திலே என் பங்குமாயிருக்கிறீர் என்றேன். சங்கீதம் 142:5 என் கூக்குரலுக்குச் செவிகொடும், நான் மிகவும் தாழ்த்தப்பட்டேன்: என்னைப் பின்தொடருகிறவர்களுக்கு என்னைத் தப்புவியும், அவர்கள் என்னிலும் பலவான்களாயிருக்கிறார்கள். சங்கீதம் 142:6 உமது நாமத்தை நான் துதிக்கும்படி, என் ஆத்துமாவைக் காவலுக்கு நீங்கலாக்கிவிடும்: எனக்கு நீர் தயவுசெய்யும்போது நீதிமான்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளுவார்கள். சங்கீதம் 142:7 Shared from Tamil Bible 8.5 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
✝️இயேசு - ShareChat
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users