Thangamani
ShareChat
click to see wallet page
@449220596
449220596
Thangamani
@449220596
ஐ லவ் ஷேர்சாட் .ஷேர்சாட் இஸ் ஆசாம்
Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - யோவான் 10:9 நானேவாசல் என்வழியாய் ஒருவன்உட்பிரவேசித்தால் அவன் ரரட்சிக்கப்படுவான் அவன்உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக்கண்டடைவான் சபழ் சபப யோவான் 10:9 நானேவாசல் என்வழியாய் ஒருவன்உட்பிரவேசித்தால் அவன் ரரட்சிக்கப்படுவான் அவன்உள்ளும் புறம்பும் சென்று மேய்ச்சலைக்கண்டடைவான் சபழ் சபப - ShareChat
தேவனே, மவுனமாயிராதேயும், பேசாமலிராதேயும், தேவனே, சும்மாயிராதேயும். சங்கீதம் 83:1 இதோ, உம்முடைய சத்துருக்கள் கொந்தளித்து, உம்முடைய பகைஞர் தலையெடுக்கிறார்கள். சங்கீதம் 83:2 உமது ஜனத்துக்கு விரோதமாக உபாய தந்திரங்களை யோசித்து, உமது மறைவிலிருக்கிறவர்களுக்கு விரோதமாக ஆலோசனைபண்ணுகிறார்கள். சங்கீதம் 83:3 அவர்கள் இனி ஒரு ஜாதியாராயிராமலும், இஸ்ரவேலின் பேர் இனி நினைக்கப்படாமலும் போவதற்காக, அவர்களை அதம்பண்ணுவோம் வாருங்கள் என்கிறார்கள். சங்கீதம் 83:4 இப்படி, ஏதோமின் கூடாரத்தாரும், இஸ்மவேலரும், மோவாபியரும், ஆகாரியரும், சங்கீதம் 83:5 கேபாலரும், அம்மோனியரும், அமலேக்கியரும், தீருவின் குடிகளோடுகூடிய பெலிஸ்தரும், சங்கீதம் 83:6 ஏகமனநிர்ணயமாய் ஆலோசனைசெய்து, உமக்கு விரோதமாய் ஒப்பந்தம்பண்ணிக்கொண்டிருக்கிறார்கள். சங்கீதம் 83:7 அசீரியரும் அவர்களோடேகூடக்கலந்து, லோத்தின் புத்திரருக்குப் புயபலமானார்கள். (சேலா.) சங்கீதம் 83:8 மீதியானியருக்குச் செய்ததுபோலவும், கீசோன் என்னும் ஆற்றண்டை எந்தோரிலே அழிக்கப்பட்டு, சங்கீதம் 83:9 நிலத்துக்கு எருவாய்ப்போன சிசெரா, யாபீன் என்பவர்களுக்குச் செய்ததுபோலவும், அவர்களுக்குச்செய்யும். சங்கீதம் 83:10 அவர்களையும் அவர்கள் அதிபதிகளையும் ஓரேபுக்கும் சேபுக்கும், அவர்கள் பிரபுக்களையெல்லாம் சேபாவுக்கும் சல்முனாவுக்கும் சமமாக்கும். சங்கீதம் 83:11 தேவனுடைய வாசஸ்தலங்களை எங்களுக்குச் சுதந்தரமாக நாங்கள் கட்டிக்கொள்வோம் என்று சொல்லுகிறார்கள். சங்கீதம் 83:12 என் தேவனே, அவர்களைச் சுழல் காற்றின் புழுதிக்கும், காற்றுமுகத்தில் பறக்கும் துரும்புக்கும் சமமாக்கும். சங்கீதம் 83:13 நெருப்பு காட்டைக் கொளுத்துவதுபோலவும், அக்கினி ஜூவாலைகள் மலைகளை எரிப்பதுபோலவும், சங்கீதம் 83:14 நீர் உமது புசலினாலே அவர்களைத் தொடர்ந்து, உமது பெருங்காற்றினாலே அவர்களைக் கலங்கப்பண்ணும். சங்கீதம் 83:15 கர்த்தாவே, அவர்களை உமது நாமத்தைத் தேடும்படிக்கு, அவர்கள் முகங்களை அவமானத்தாலே மூடும். சங்கீதம் 83:16 யேகோவா என்னும் நாமத்தையுடைய தேவரீர் ஒருவரே பூமியனைத்தின்மேலும் உன்னதமானவர் என்று மனுஷர் உணரும்படி, சங்கீதம் 83:17 அவர்கள் என்றைக்கும் வெட்கிக்கலங்கி, நாணமடைந்து அழிந்து போவார்களாக. சங்கீதம் 83:18 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - தீமோத்தேயு 48 [| சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானதுஇந்தஜீவனுக்கும் இதற்குப் பின்வரும்ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. கபிழ் பப்பி தீமோத்தேயு 48 [| சரீரமுயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது. தேவபக்தியானதுஇந்தஜீவனுக்கும் இதற்குப் பின்வரும்ஜீவனுக்கும் வாக்குத்தத்தமுள்ளதாகையால் எல்லாவற்றிலும் பிரயோஜனமுள்ளது. கபிழ் பப்பி - ShareChat
கர்த்தாவே, உம்முடைய வல்லமையிலே ராஜா மகிழ்ச்சியாயிருக்கிறார், உம்முடைய இரட்சிப்பிலே எவ்வளவாய்க் களிகூருகிறார்! சங்கீதம் 21:1 அவருடைய மனவிருப்பத்தின்படி நீர் அவருக்குத் தந்தருளி, அவருடைய உதடுகளின் விண்ணப்பத்தைத் தள்ளாதிருக்கிறீர். (சேலா.) சங்கீதம் 21:2 உத்தம ஆசீர்வாதங்களோடு நீர் அவருக்கு எதிர்கொண்டுவந்து, அவர் சிரசில் பொற்கிரீடம் தரிப்பிக்கிறீர். சங்கீதம் 21:3 அவர் உம்மிடத்தில் ஆயுசைக்கேட்டார், நீர் அவருக்கு என்றென்றைக்குமுள்ள தீர்க்காயுசை அளித்தீர். சங்கீதம் 21:4 உமது இரட்சிப்பினால் அவர் மகிமை பெரிதாயிருக்கிறது, மேன்மையையும் மகத்துவத்தையும் அவருக்கு அருளினீர். சங்கீதம் 21:5 அவரை நித்திய ஆசீர்வாதங்களுள்ளவராக்குகிறீர், அவரை உம்முடைய சமுகத்தின் மகிழ்ச்சியினால் பூரிப்பாக்குகிறீர். சங்கீதம் 21:6 ராஜா கர்த்தர்மேல் நம்பிக்கையாயிருக்கிறார்;, உன்னதமானவருடைய தயவினால் அசைக்கப்படாதிருப்பார். சங்கீதம் 21:7 உமது கை உமது சத்துருக்களெல்லாரையும் எட்டிப்பிடிக்கும், உமது வலதுகரம் உம்மைப் பகைக்கிறவர்களைக் கண்டுபிடிக்கும். சங்கீதம் 21:8 உமது கோபத்தின் காலத்திலே அவர்களை அக்கினிச் சூளையாக்கிப் போடுவீர், கர்த்தர் தமது கோபத்திலே அவர்களை அழிப்பார், அக்கினி அவர்களைப் பட்சிக்கும். சங்கீதம் 21:9 அவர்கள் கனியைப் பூமியிலிராதபடி நீர் அழித்து, அவர்கள் சந்ததியை மனுபுத்திரரிலிராதபடி ஒழியப்பண்ணுவீர். சங்கீதம் 21:10 அவர்கள் உமக்கு விரோதமாய்ப் பொல்லாங்கு நினைத்தார்கள், தீவினையை எத்தனம்பண்ணினார்கள், ஒன்றும் வாய்க்காமற்போயிற்று. சங்கீதம் 21:11 அவர்களை இலக்காக வைத்து, உம்முடைய அம்புகளை நாணேற்றி அவர்கள் முகத்திற்கு நேரே விடுகிறீர். சங்கீதம் 21:12 கர்த்தாவே, உம்முடைய பலத்திலே நீர் எழுந்தருளும், அப்பொழுது உம்முடைய வல்லமையைப் பாடிக்கீர்த்தனம்பண்ணுவோம். சங்கீதம் 21:13 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - யோபு 12:13 அவரிடத்தில் ஞாமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தன் ஆலோசனையும் புத்தியும் ண்டு 9 கனழ் tuuullu யோபு 12:13 அவரிடத்தில் ஞாமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தன் ஆலோசனையும் புத்தியும் ண்டு 9 கனழ் tuuullu - ShareChat
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. சங்கீதம் 102:1 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும், உமது செவியை என்னிடத்தில் சாயும், நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும். சங்கீதம் 102:2 என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது, என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. சங்கீதம் 102:3 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது, என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன். சங்கீதம் 102:4 என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. சங்கீதம் 102:5 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன், பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன். சங்கீதம் 102:6 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன். சங்கீதம் 102:7 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள், என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள். சங்கீதம் 102:8 நீர் என்னை உயரத் தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். சங்கீதம் 102:9 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன். சங்கீதம் 102:10 என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது, புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். சங்கீதம் 102:11 கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர், உம்முடைய பேர்பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். சங்கீதம் 102:12 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. சங்கீதம் 102:13 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். சங்கீதம் 102:14 கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். சங்கீதம் 102:15 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். சங்கீதம் 102:16 அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். சங்கீதம் 102:17 பின்சந்ததிக்காக இது எழுதப்படும், சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும். சங்கீதம் 102:18 கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், சங்கீதம் 102:19 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். சங்கீதம் 102:20 கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில், சங்கீதம் 102:21 சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள். சங்கீதம் 102:22 வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார். சங்கீதம் 102:23 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும், உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். சங்கீதம் 102:24 நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர், வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. சங்கீதம் 102:25 அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர், அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம், அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். சங்கீதம் 102:26 நீரோ மாறாதவராயிருக்கிறீர், உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. சங்கீதம் 102:27 உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள், அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன். சங்கீதம் 102:28 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - எரேமியா 27:5 பூமியையும் மனுஷனையும் Loo பூமியின்மேலுள்ளமிருகஜீவன்களையும் பலத்தினாலும் ஓங்கியஎன் என்மகா புயத்தினாலும் உண்டாக்கினேன் எனக்கு ஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன் கனிழ் பப்பிட எரேமியா 27:5 பூமியையும் மனுஷனையும் Loo பூமியின்மேலுள்ளமிருகஜீவன்களையும் பலத்தினாலும் ஓங்கியஎன் என்மகா புயத்தினாலும் உண்டாக்கினேன் எனக்கு ஷ்டமானவனுக்கு அதைக் கொடுக்கிறேன் கனிழ் பப்பிட - ShareChat
கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார், ஜனங்கள் தத்தளிப்பார்களாக, அவர் கேருபீன்களின் மத்தியில் வீற்றிருக்கிறார், பூமி அசைவதாக. சங்கீதம் 99:1 கர்த்தர் சீயோனில் பெரியவர், அவர் எல்லா ஜனங்கள்மேலும் உயர்ந்தவர். சங்கீதம் 99:2 மகத்துவமும் பயங்கரமுமான உமது நாமத்தை அவர்கள் துதிப்பார்களாக, அது பரிசுத்தமுள்ளது. சங்கீதம் 99:3 ராஜாவின் வல்லமை நீதியில் பிரியப்படுகிறது, தேவரீர் நியாயத்தை நிலைநிறுத்துகிறீர், நீர் யாக்கோபில் நியாயமும் நீதியும் செய்கிறீர். சங்கீதம் 99:4 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவர் பாதபடியிலே பணியுங்கள், அவர் பரிசுத்தமுள்ளவர். சங்கீதம் 99:5 அவருடைய ஆசாரியரில் மோசேயும் ஆரோனும், அவர் நாமத்தைப்பற்றிக் கூப்பிடுகிறவர்களில் சாமுவேலும், கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவர் அவர்களுக்கு மறுஉத்தரவு அருளினார். சங்கீதம் 99:6 மேகஸ்தம்பத்திலிருந்து அவர்களோடே பேசினார், அவர்கள் அவருடைய சாட்சிப்பிரமாணங்களையும் அவர் தங்களுக்குக் கொடுத்த கட்டளையையும் கைக்கொண்டார்கள். சங்கீதம் 99:7 எங்கள் தேவனாகிய கர்த்தாவே, நீர் அவர்களுக்கு உத்தரவு அருளினீர், நீர் அவர்கள் கிரியைகளினிமித்தம் நீதி சரிக்கட்டினபோதிலும், அவர்களுக்கு மன்னிக்கிற தேவனாயிருந்தீர். சங்கீதம் 99:8 நம்முடைய தேவனாகிய கர்த்தரை உயர்த்தி, அவருடைய பரிசுத்த பர்வதத்திற்கு நேராகப் பணியுங்கள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் பரிசுத்தமுள்ளவர். சங்கீதம் 99:9 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள்
✝️இயேசு - லூக்கா 1:77 தேவனடையஉருமன நமது இரக்கத்தினாலேஅவரு ய ஜனத்துக்குப் பாவம பப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும் அவருக்கு முன்னாக நடந்த போவாய்  கனிழ் பப்பிட லூக்கா 1:77 தேவனடையஉருமன நமது இரக்கத்தினாலேஅவரு ய ஜனத்துக்குப் பாவம பப்பாகிய இரட்சிப்பைத் தெரியப்படுத்தவும் அவருக்கு முன்னாக நடந்த போவாய்  கனிழ் பப்பிட - ShareChat
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:1 தேவாதி தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:2 கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:3 ஒருவராய்ப் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:4 வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:5 தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:6 பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது, சங்கீதம் 136:7 பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:8 இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:9 எகிப்தியருடைய தலைச்சன்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:10 அவர்கள் நடுவிலிருந்து இஸ்ரவேலைப் புறப்படப்பண்ணினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:11 பலத்த கையினாலும் ஓங்கிய புயத்தினாலும் அதைச் செய்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:12 சிவந்த சமுத்திரத்தை இரண்டாகப் பிரித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:13 அதின் நடுவே இஸ்ரவேலைக் கடந்துபோகப்பண்ணினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:14 பார்வோனையும் அவன் சேனைகளையும் சிவந்த சமுத்திரத்தில் கவிழ்த்துப்போட்டவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:15 தம்முடைய ஜனங்களை வனாந்தரத்தில் நடத்தினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:16 பெரிய ராஜாக்களைச் சங்கரித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது சங்கீதம் 136:17 பிரபலமான ராஜாக்களை அழித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:18 எமோரியரின் ராஜாவாகிய சீகோனை அழித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:19 பாசானின் ராஜாவாகிய ஓகை அழித்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:20 அவர்கள் தேசத்தைச் சுதந்தரமாகத் தந்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:21 அதைத் தம்முடைய தாசனாகிய இஸ்ரவேலுக்குச் சுதந்தரமாகவே தந்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:22 நம்முடைய தாழ்வில் நம்மை நினைத்தவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:23 நம்முடைய சத்துருக்களின் கையிலிருந்து நம்மை விடுதலைபண்ணினவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:24 மாம்சதேகமுள்ள யாவுக்கும் ஆகாரங் கொடுக்கிறவரைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:25 பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள், அவர் கிருபை என்றுமுள்ளது. சங்கீதம் 136:26 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com