ShareChat
click to see wallet page
search
கர்த்தாவே, என் விண்ணப்பத்தைக் கேளும், என் கூப்பிடுதல் உம்மிடத்தில் சேர்வதாக. சங்கீதம் 102:1 என் ஆபத்துநாளிலே உமது முகத்தை எனக்கு மறையாதேயும், உமது செவியை என்னிடத்தில் சாயும், நான் கூப்பிடுகிற நாளிலே எனக்குத் தீவிரமாய் உத்தரவு அருளிச்செய்யும். சங்கீதம் 102:2 என் நாட்கள் புகையைப்போல் ஒழிந்தது, என் எலும்புகள் ஒரு கொள்ளியைப்போல் எரியுண்டது. சங்கீதம் 102:3 என் இருதயம் புல்லைப்போல் வெட்டுண்டு உலர்ந்தது, என் போஜனத்தைப் புசிக்க மறந்தேன். சங்கீதம் 102:4 என் பெருமூச்சின் சத்தத்தினால், என் எலும்புகள் என் மாம்சத்தோடு ஒட்டிக்கொள்ளுகிறது. சங்கீதம் 102:5 வனாந்தர நாரைக்கு ஒப்பானேன், பாழான இடங்களில் தங்கும் ஆந்தையைப்போலானேன். சங்கீதம் 102:6 நான் நித்திரையில்லாமல் வீட்டின்மேல் தனித்திருக்கும் குருவியைப்போல் இருக்கிறேன். சங்கீதம் 102:7 நாடோறும் என் சத்துருக்கள் என்னை நிந்திக்கிறார்கள், என்மேல் மூர்க்கவெறிகொண்டவர்கள் எனக்கு விரோதமாய்ச் சாபம் இடுகிறார்கள். சங்கீதம் 102:8 நீர் என்னை உயரத் தூக்கி, தாழத்தள்ளினீர், உமது சினத்திற்கும் கடுங்கோபத்திற்கும் உள்ளானேன். சங்கீதம் 102:9 ஆதலால் நான் சாம்பலை அப்பமாகப் புசித்து, என் பானங்களைக் கண்ணீரோடே கலக்கிறேன். சங்கீதம் 102:10 என் நாட்கள் சாய்ந்துபோகிற நிழலைப்போலிருக்கிறது, புல்லைப்போல் உலர்ந்துபோகிறேன். சங்கீதம் 102:11 கர்த்தராகிய நீரோ என்றென்றைக்கும் இருக்கிறீர், உம்முடைய பேர்பிரஸ்தாபம் தலைமுறை தலைமுறையாக நிற்கும். சங்கீதம் 102:12 தேவரீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர், அதற்குத் தயைசெய்யுங்காலமும், அதற்காகக் குறித்தநேரமும் வந்தது. சங்கீதம் 102:13 உம்முடைய ஊழியக்காரர் அதின் கல்லுகள்மேல் வாஞ்சைவைத்து, அதின் மண்ணுக்குப் பரிதபிக்கிறார்கள். சங்கீதம் 102:14 கர்த்தர் சீயோனைக் கட்டி, தமது மகிமையில் வெளிப்படுவார். சங்கீதம் 102:15 திக்கற்றவர்களுடைய ஜெபத்தை அலட்சியம்பண்ணாமல், அவர்கள் விண்ணப்பத்தை அங்கீகரிப்பார். சங்கீதம் 102:16 அப்பொழுது ஜாதிகள் கர்த்தருடைய நாமத்துக்கும், பூமியிலுள்ள ராஜாக்களெல்லாரும் உம்முடைய மகிமைக்கும் பயப்படுவார்கள். சங்கீதம் 102:17 பின்சந்ததிக்காக இது எழுதப்படும், சிருஷ்டிக்கப்படும் ஜனம் கர்த்தரைத் துதிக்கும். சங்கீதம் 102:18 கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும், சங்கீதம் 102:19 தம்முடைய உயர்ந்த பரிசுத்த ஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார். சங்கீதம் 102:20 கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில், சங்கீதம் 102:21 சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள். சங்கீதம் 102:22 வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார். சங்கீதம் 102:23 அப்பொழுது நான்: என் தேவனே, பாதி வயதில் என்னை எடுத்துக்கொள்ளாதேயும், உம்முடைய வருஷங்கள் தலைமுறை தலைமுறையாக இருக்கும். சங்கீதம் 102:24 நீர் ஆதியிலே பூமியை அஸ்திபாரப்படுத்தினீர், வானங்கள் உம்முடைய கரத்தின் கிரியையாயிருக்கிறது. சங்கீதம் 102:25 அவைகள் அழிந்துபோம், நீரோ நிலைத்திருப்பீர், அவைகளெல்லாம் வஸ்திரம்போல் பழமையாய்ப்போம், அவைகளை ஒரு சால்வையைப்போல் மாற்றுவீர், அப்பொழுது மாறிப்போம். சங்கீதம் 102:26 நீரோ மாறாதவராயிருக்கிறீர், உமது ஆண்டுகள் முடிந்துபோவதில்லை. சங்கீதம் 102:27 உமது அடியாரின் பிள்ளைகள் தாபரித்திருப்பார்கள், அவர்கள் சந்ததி உமக்கு முன்பாக நிலைபெற்றிருக்கும் என்று சொன்னேன். சங்கீதம் 102:28 Shared from Tamil Bible 8.7 https://play.google.com/store/apps/details?id=com.book.tamilbible #✝️இயேசு #✝பிரார்த்தனை #✝பைபிள் வசனங்கள் www.bible2all.com
✝️இயேசு - ShareChat
Tamil Bible (தமிழ் பைபிள்) - Apps on Google Play
Tamil Bible (தமிழ் பைபிள்) offline loaded with rich features enhancing users