ShareChat
click to see wallet page
search
சமையல் வேலைக்கு அழைத்துச் சென்று சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை- நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு. செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ் (63). இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார், சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட சாமிதாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat