நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதல்வர்
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (06.03.2026) கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாண்புமிகு பால்வளத்துறை அமைச்சர் திரு.த.மனோ தங்கராஜ், தலைமையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு.ஸ்டாலின், இ.கா.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்கள். உடன் தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் திரு.என்.சுரேஷ்ராஜன், சட்டமன்ற உறுப்பினர்கள் திரு.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), திரு.ஜே.ஜி.பிரின்ஸ் (குளச்சல்), முனைவர் தாரகை கத்பர்ட் (விளவங்கோடு), நாகர்கோவில் மாநகராட்சி மேயர் திரு.ரெ.மகேஷ் உட்பட பலர் உள்ளார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்றவருக்கு தவறான சிகிச்சை வழங்கப்பட்டதில் வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தனியார் மருத்துவமனை மீது உறவினர் போலிசில் புகார் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் திருவிழா பாதுகாப்பு பணி
செல்போனை தவறவிட்ட ஆசாரிபள்ளத்தை சேர்ந்த அஸ்வினி என்ற பக்தரின் செல்போனை கண்டறிந்து ஒப்படைத்த போலீசார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் மேம்பாலத்தில் பேருந்து நிறுத்ததில் பயணிகள் அமருவதற்கு அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் உடைந்து கீழே விழுந்துள்ளது. பயணிகள் பேருந்துக்காக காத்து நிற்கும் நிலைமை ஏற்ப்பட்டுள்ளது. இதனால் இருக்கையை உடனடியாக சரிசெய்ய நடவடிக்கை எடுக்க பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தூக்கிலிட்டு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி தக்கலை அருகே ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்ற பா.ஜா.க இளைஞரணியினர் போலிசாரால் கைது #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பொதுமக்கள் மத்தியில் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர். R. ஸ்டாலின் IPS அவர்களின் 173(2) FIR உங்கள் உரிமை திட்டம்
* இல்லம்தேடி புகார்தாரர்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட 560 எப் ஐ ஆர்
* கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஜனவரி மாதம் 26ஆம் தேதி 173(2) திட்டம் FIR உங்கள் உரிமை திட்டத்தினை தொடங்கி வைத்தார்கள்.
* இத்திட்டத்தின் மூலம் இதுவரை 560 FIR புகார்தாரர்களுக்கு இலவசமாக ஊர்காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மூலமும், காவல் நிலையம் மூலமாகவும் வழங்கப்பட்டுள்ளது.
* புகார்தாரரின் இல்லம் தேடியே போலீசார் இலவச எஃப் ஐ ஆர் நகலினை வழங்கி வருவதால் போலீசார் மீதான நம்பகத் தன்மை அதிகரித்து புகார்தாரர்களின் தேவையற்ற அலைக்கழிப்புகள் தடுக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பல்வேறு காரணங்களால் பள்ளியை விட்டு வெளியேறிய 180க்கும் மேற்பட்ட குழந்தைகளை கன்னியாகுமரி மாவட்ட காவல்துறையின் நிமிர் (தி ரைசிங் டீம்) ஏப்ரல் 2025 முதல் மீண்டும் வகுப்புகளில் சேர்த்துள்ளனர்.
* வறுமை மற்றும் பிற பிரச்சினைகள் காரணமாக பள்ளிப் படிப்பை நிறுத்துபவர்கள் தொடர்ந்து கல்வி கற்க உதவுவதற்காக காவல் கண்காணிப்பாளர் டாக்டர் R. ஸ்டாலினால் இந்த குழு உருவாக்கப்பட்டது
* பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் சார்ந்த ADSP திரு.மதியழகன் கூறுகையில், நிமிர் குழுவில் ஒரு ஆய்வாளர் தலைமையில் 15 பெண் காவலர்கள் உள்ளனர்.
* 12 ஆம் வகுப்பு படிக்கும் ஒருவரின் தாய், தனது கணவர் குடும்பத்தை விட்டு வெளியேறியதால் தனது மகள் தொடர்ந்து படிக்க முடியவில்லை என்று கூறினார். "பள்ளி பதிவுகள் மூலம், நிமிர் குழு எங்களைக் கண்டுபிடித்து, ஆலோசனை வழங்கி, என் மகளுக்கு படிப்பைத் தொடர உதவியது.
* நிமிர் குழு வாடகை வீட்டில் தங்க நிதி உதவி ஏற்பாடு செய்தது." திங்கட்கிழமை பொதுத் தேர்வு எழுதுவதற்கு எனது மகள் தயாராக இருப்பதாக அந்தப் பெண் கூறினார்.
* "நிமிர் போலீசார் நாம் படங்களில் பார்ப்பது போல் இல்லை. அவர்கள் மிகவும் அன்பான போலீசார்," என்று அவர் குறிப்பிட்டார்.
* மொபைல் போனுக்கு அடிமையான 11 ஆம் வகுப்பு சிறுவன் அடிக்கடி வகுப்புகளைத் தவிர்த்து, வீட்டிலேயே விளையாடுவான் என்று அவனது தாய் கூறினார்.
* போலீசார் அவனுக்கு ஆலோசனை வழங்கினர், மேலும் அவனைப் பள்ளி படிப்பை தொடர வைத்தனர்,
* மேலும் நிமிர் போலீசார் அவனது வருகையைக் கண்காணித்து வருவதாக அந்தப் பெண் கூறினார்.
* நிமிர் போலீசார் முறையான கள பார்வையிடுதல், குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு ஆலோசனை வழங்குதல் மற்றும் பள்ளிக் கல்வித் துறை மற்றும் பள்ளி அதிகாரிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பில் பணியாற்றுவதன் மூலம் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியவர்களை மீண்டும் சேர்க்க உதவுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தெரிவித்தார்.
* "வறுமை, குடும்ப சூழ்நிலைகள் மற்றும் வழிகாட்டுதல் இல்லாமை போன்ற காரணங்களால் பல குழந்தைகள் படிப்பை நிறுத்தினர்.
* அவர்களை மறுபடியும் கல்விக்கு கொண்டு வந்துள்ளோம். சிறார் குற்றங்களைத் தடுக்கவும், பாதுகாப்பான சமூகத்தை உருவாக்கவும் கல்வி ஒரு பயனுள்ள கருவியாகும்.
* நாங்கள் எங்கள் முயற்சிகளைத் தொடர்வோம், எந்தக் குழந்தையும் பின்தங்கியிருக்காமல் பார்த்துக் கொள்வோம்" என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்தார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
பத்துகாணி RC தேவாலயம் அருகே முக்கிய சாலையில் ஏற்பட்டிருந்த பள்ளத்தை எங்கள் கோரிக்கையை ஏற்று இன்று காங்கிரீட் மூலம் பள்ளத்தை சீரமைத்தனர்.
நடவடிக்கை எடுத்த நெடுஞ்சாலை துறைக்கு நன்றி
പത്തുകാണി ആർ.സി. ദേവാലയത്തിന് സമീപമുള്ള പ്രധാന റോഡിൽ ഉണ്ടായിരുന്ന കുഴി, ഞങ്ങളുടെ അഭ്യർത്ഥന സ്വീകരിച്ച് ഇന്ന് കോൺക്രീറ്റ് ഉപയോഗിച്ച് പുനരുദ്ധരിച്ചിട്ടുണ്ട്.
നടപടി സ്വീകരിച്ച ദേശീയപാത വകുപ്പിന് നന്ദി. #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
BSNL டவருக்கு என்ன தான் ஆச்சு?
கன்னியாகுமரி மாவட்டம் ஆறுகாணி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு வாரங்களாக BSNL சேவை திடீரென முடங்குகிறது. அரைமணி நேரம் கழிந்த பின் மீண்டும் சேவைக்கு வருகிறது. மேலும் பல இடங்களில் BSNL இணையதள சேவை கிடைப்பதில்லை என மக்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.
எனவே அதிகாரிகள் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்! #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
சமையல் வேலைக்கு அழைத்துச் சென்று சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவருக்கு 20 ஆண்டுகள் சிறை- நாகர்கோவில் நீதிமன்றம் தீர்ப்பு.
செண்பகராமன் புதூர் பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ் (63).
இவர் மனநலம் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததில் சிறுமி கர்ப்பமானார்,
சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நாகர்கோவில் மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா குற்றம் சாட்டப்பட்ட சாமிதாசுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நேற்று தீர்ப்பு வழங்கினார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்




![📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n - ShareChat 📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n n 00 (uu] [ சிௌ வழாகம்மா தனிகள் வழங்கும் விழா அரசு நசத்தட்டி பநிதி ஈலின் ஸ்டாலின் உதயர n - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_816582_1d4f7de_1772815252395_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=395_sc.jpg)








