arukanimembers
ShareChat
click to see wallet page
@781094736
781094736
arukanimembers
@781094736
Local Media Kanyakumari district
*கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பகுதியில் பணம் கொடுக்கல் வாங்கல் தகராறில் கனகப்பபுரத்தை சேர்ந்த டெம்போ டிரைவர்.பிரபாகரன்(47) என்பவர் மீது அருவாள் கொண்டு தாக்குதல் நடத்திய,9 லட்சம் ரூபாய் கடன் வாங்கிய மதியழகன் வெறிச்செயல்- இதில் வெட்டுக்காயம் அடைந்து சிகிச்சையில் இருந்த பிரபாகரன் பலி-அதனை தொடர்ந்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அஞ்சுகிராமம் போலீசார் கொலையாளி மதியழகனை(52) கைது செய்து சிறையில் அடைத்தனர்.* #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - அஞ்சுனிரமம்  NNJUGRAIN 08688 )w அஞ்சுனிரமம்  NNJUGRAIN 08688 )w - ShareChat
கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு * கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.R.ஸ்டாலின் IPS அவர்கள் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை குறித்து செயல்பட்டு வருகிறார். * நீதிமன்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார்கள். * கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவர் தாசன் @ இயேசு அமலதாசன் பொது குடிநீர் குழாயை பிச்சைக்குடியிருப்பு மீன் சந்தை பகுதியில் இருந்து மாற்றிய விவகாரத்தில் ஏற்பட்ட முன் தகராறின் காரணமாக, அவர், அவரது சகோதரி மற்றும் தாயார் கடைக்கு சென்றுகொண்டிருந்த போது, குற்றவாளிகள் ஆயுதங்களுடன் கூடி வழிமறித்து தாக்கினர். * அதில் கம்பி மற்றும் அரிவாளால் பல இடங்களில் தாக்கப்பட்டதால், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து அஞ்சுகிராமம் காவல் நிலையத்தில் குற்ற எண் 468/2011 U/S 147,148,120(b),341,323,302 IPC இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. * அந்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நீதிபதி இக்குற்றத்தில் ஈடுபட்ட 1. திருநெல்வேலி மாவட்டம் ரஜ கிருஷ்ணபுரத்தை சேர்ந்த ரவிமணி என்பவரின் மனைவி ரஞ்சிதம் 2. அழகப்பபுரம் மங்கம்மாள் சாலை பகுதியை சேர்ந்த நவமணி என்பவரின் மகன் கண்ணன் 3. திருநெல்வேலி மாவட்டம் ராஜகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த ரவிமணி என்பவரின் மகன் ஜெகன் 4. ராஜகிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்த பாண்டியன் என்பவரின் மகன் பாக்யராஜ் 5. ராஜகிருஷ்ணபுரம் ரவிமணி என்பவரின் மகன் ஸ்ரீனிவாசன் 6. ராஜ கிருஷ்ணபுரம் ரவிமணி என்பவரின் மகன் சங்கர் * ஆகியோருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். * நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு குற்ற வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த கன்னியாகுமரி உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர், அஞ்சுகிராமம் காவல் நிலைய ஆய்வாளர் ஆகியோரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
குமாரகோவில் ஜங்சன் அருகே விபத்து - இருசக்கர வாகனத்தில் வந்த பெண் படுகாயம் * கன்னியாகுமரி மாவட்டம், குமாரகோவில் ஜங்சன் அருகே உள்ள ஜயங்கார் கேக் ஷாப் பகுதியில் இன்று வாகன விபத்து ஏற்பட்டது. * ரோகிணி கல்லூரி வாகனம், பொலேரோ கார் மற்றும் ஹோண்டா ஆக்டிவா இருசக்கர வாகனம் ஒன்றன்பின் ஒன்றாக மோதியதாக கூறப்படுகிறது. * இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் பயணம் செய்த மல்லிகா (62) என்பவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் அருகிலுள்ள முத்து நியூரோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். * இதில் பொலேரோ கார் ஓட்டுநருக்கும் காலில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மேல்சிகிச்சைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். * விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள் தக்கலை காவல் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ROHINI 23c ELG HER 11174 4$ 6139 ROHINI 23c ELG HER 11174 4$ 6139 - ShareChat
கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டி இசக்கி அம்மாள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்ற ஆடின் டேனியல் என்ற வாலிபர் கைது.தனிப்படை போலீசாருக்கு. மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் பாராட்டு. கன்னியாகுமரி மாவட்டம் தெரிசனங்கோப்பு பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த மூதாட்டி இசக்கி அம்மாள் கழுத்தில் கிடந்த தங்கச்சங்கிலியை பறித்து சென்ற நபரை தனிப்படை போலீசார் தேடிவந்த நிலையில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் படி நாகர்கோவில் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. லலித் குமார் அவர்களின் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் திரு. அஜய் ராஜா தலைமையில் சிறப்பு உதவி ஆய்வாளர் ரமேஷ் தலைமை காவலர் கிருஷ்ண பிரசாத் தலைமை காவலர் அமுதன் மற்றும் சிவகுமார் ஆகியோர் சேர்ந்த தனிப்படை அமைக்கப்பட்டது.அங்கு உள்ள சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் தேடிய நிலையில் குலசேகரம் பகுதியை சேர்ந்த ஆடின் டானியல் என்ற வாலிபரை தனிப்படை போலிசார் கைது செய்து விசாரணை குற்றவாளியை வெகு விரைவாக கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின் வெகுவாக பாராட்டினார்கள். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
*ஆரல்வாய்மொழியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி-சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.* *கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி கணேசபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 20) கட்டிட தொழிலாளி. இவர் நேற்று ஆரல்வாய்மொழி பகுதியில் உள்ள ஒரு வீட்டின் கட்டுமான பணிக்காக சென்றுள்ளார். அங்கு கட்டிங் எந்திரம் மூலம் மரப்பலகையை அறுத்துக் கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் சுரேஷ் மயங்கி விழுந்து அவர் உயிரிழந்துள்ளார். ஆரல்வாய்மொழி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகிறார்கள்.* #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம். * கன்னியாகுமரி மாவட்டம் - மார்க்சிஸ்ட் கம்னியூஸ்ட் கட்சி தக்கலை வட்டார குழு சார்பில் தாலுகா அலுவலகம் முன்பு (11.0.2026) மாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது * வட்டார செயலாளர் சுஜா ஜாஸ்பின் தலைமை வகித்தார், மாநில குழு உறுப்பினர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லீமா றோஸ் துவக்க உரையாற்றினார் * முன்னாள் வட்டார குழு செயலாளர் சைமன் சைலஸ் விளக்க உரையாற்றினார் * மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் N.S கண்ணன் நிறைவுரையாற்றினார் * நிகழ்வில் சமையல் காலி சிலிண்டருக்கு மாலை போட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - சமையல் எரிவாயு விலை உயர்வைகண்டித்து CPI (M) கண்டன ஆர்ப்பாட்டம் 250  இடம் : தக்கலைதாலுகா அலுவலகம் முன்பு நாள் 1103.2026 நேரம் மாலை 430 சமையல்   எர்வாயு விலை உயர்வை கண்டித்து  PI (M) கண்டன் சமையல்  எரிவாயு ( ஆர்ப்பபடம் Mui  ுவிலை 3೦03' tu உயர்லை 001 88 143] இடம்  தக்கா ுகார MNAm @imini சமையல் எரிவாயு விலை உயர்வைகண்டித்து CPI (M) கண்டன ஆர்ப்பாட்டம் 250  இடம் : தக்கலைதாலுகா அலுவலகம் முன்பு நாள் 1103.2026 நேரம் மாலை 430 சமையல்   எர்வாயு விலை உயர்வை கண்டித்து  PI (M) கண்டன் சமையல்  எரிவாயு ( ஆர்ப்பபடம் Mui  ுவிலை 3೦03' tu உயர்லை 001 88 143] இடம்  தக்கா ுகார MNAm @imini - ShareChat
சிலம்பத்தில் உலக சாதனை படைத்த சிறுவனுக்கு காவல் கண்காணிப்பாளர் பாராட்டு * கன்னியாகுமரி மாவட்டம் மாதவலாயம் பகுதியைச் சேர்ந்த13 வயது மாணவன் அகமது அஜீஸ் சிலம்ப விளையாட்டில் உலக சாதனை படைத்தான். * நாகர்கோவில் சிவந்தி ஆதித்தனார் கல்லூரியில் நடந்த போட்டியில் கண் கட்டி 45 நிமிடம் தொடர்ந்து சிலம்பம் விளையாடி சாதனை நிகழ்த்தினான். * இந்த சாதனையை பாராட்டும் வகையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு அழைத்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். * நிகழ்ச்சியில் பெற்றோர், பயிற்சியாளர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - RC2P  RC2P - ShareChat
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடி சென்ற மர்மநபர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ShareChat
1949 ம் ஆண்டு சாது G.ஏசுநேசன் அவர்களால் துவங்கபட்ட குலசேகரம் மலவிளையில் அமைந்துள்ள ஆதி பெந்தேகோஸ்தே ஆலயத்தையும் அதன் ஊழியர்களையும் பற்றி போலி வலைதள கணக்குகளை உருவாக்கி மிகவும் மோசமான கீழ்தரமான போலி பதிவுகளை போட்டு கிறிஸ்தவ போதகர்களையும்,கிறிஸ்தவ விசுவாசிகளையும் கொச்சைபடுத்தும் நோக்கத்துடன் வலைதளங்களில் பதிவுகள் போடுவதை கண்டித்தும் சமூக விரோதிகளை கைதுசெய்து நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டு கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களை சந்தித்து ஆசாரிப்பள்ள ஆலய மீட்பு குழு மனு கொடுத்துள்ளனர் #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - ٢ ٢ - ShareChat
*ஈரான் போர் எதிரொலி இந்தியா முழுவதும் சமையல் கேஸ் சிலிண்டர் தட்டுபாடு கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் 5000 ஹோட்டல்கள் சமையல் கேஸ் இல்லாமல் மூடும் அபாய நிலை - சுமார் 35 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளதாக குமரி மாவட்ட ஹோட்டல்கள் சங்க தலைவர் ஷாஜகான் வேதனை தெரிவித்து உள்ளார்-மத்திய மாநில அரசுகள் மாற்று நடவடிக்கை எடுக்க கோரிக்கை‌.* #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 2== N 2== N - ShareChat