கேது எனும் பாம்பு... மனிதர்களுக்கு கூற வரும் கருத்து...
ஆத்மாவை உடல் எனும் போர்வையைக் கொண்டு மறைத்துள்ள மனித உடலினால் ஆன மனித பொம்மைகளின் மீது ...பற்று வைக்காதே.
மனித வாழ்க்கை எனும் பொம்மலாட்டத்தின் மீது ஆசை கொள்ளாதே.
மாயை எனும் நுட்பத்தினால் உண்டாக்கப்பட்ட மனித உடலின் தன்மையின் உண்மையை அறிய முயற்சி செய்.
அதாவது நான் என்பது என்ன.?நான் யார்.?
நான் என்பது உடலா மனமா
என்னிடம் இருக்கக்கூடிய அறிவா செல்வமா இது போன்ற கேள்விகளுடன் நான் யார்.? என்பதிலிருந்து தொடங்கு.
மனித வாழ்க்கையின் தன்மையையும் அதற்குள் ஒளிந்திருக்கும் உண்மையை அறி.
அதாவது
நான் எங்கிருந்து வந்தேன்
ஏன் இவர்களுடன் இருக்கிறேன்
தனியாக எங்கே செல்ல போகிறேன்
என்னுடைய இந்த வாழ்க்கையின் நோக்கம் தான் என்ன.
சுடாமல் தீயை உணர முடியாது .
படாமல் காயம் ஏற்படாது.
காயம் உண்டாகாமல் காயத்திற்கு மருந்து தேட முடியாது.
கேள்வி கேட்காமல் பதில் கிடைக்காது.
மனித உடலினாலும் மனித வாழ்க்கையினாலும் உண்டாக்கப்பட்ட மாயையின் தன்மையை அறி.
முதலில் நம்பு.
நம்பி கெடு.
நம்பாமல் கெடாதே.
நம்பி கெட்டால் தான்
மனித பொம்மைகளின் உண்மை நிலவரம் தெரியும்.
உண்மை தெரிந்தால் தான்
ஞானம் பெற முடியும்.
ஞானம் பிறந்தால் தான்
பித்து பிடித்தவனை போல அலைந்து சித்தம் தெளிந்து
இனியொரு பிறவி வேண்டாம்
மோட்சம் தான் வேண்டும்
என்கிற தீவிரமான சிந்தனையாலும் பயிற்சியாலும் முயற்சியாலும்.
ஆத்மாவை எல்லை இல்லாத முடிவற்ற பிரபஞ்சத்துடன் இணைத்துக் கொள்ள முடியும்.
மனிதனின் உடலுக்குள் ஒளிந்திருக்கும் ஆத்மாவை உன்னைத் தவிர யாராலும் உணர்ந்து கொள்ள முடியாது.
ஏனெனில்..
பட்டால் தான் பாடம். கெட்டால் தான் ஞானம். அதை...உணர்ந்தால்தான் மோட்சம்.
பந்தயத்தில் வெற்றி பெறுபவருக்கே பரிசு என்பது போல..
ஞானத்தை முகர்ந்து உணர்ந்து பித்து பிடித்து பைத்தியம் தெளிந்து பக்குவம் அடைந்தவர்களுக்கே மோட்சம்.
என்னுடைய முந்தைய பதிவில்
ராகு மனிதர்களைப் பற்றி கூறும் கருத்து என்கிற தலைப்பில் எழுதி உளளேன்.
அதையும் படித்தீர்களேயானால்
ராகுவின் பாவத்துவமும்
கேதுவின் சுபத்துவமும்
புரியவரும்.
உங்கள் ஜாதக
நிலைப்பாட்டை அறிய
ஜோதிடர்
Jaya Kannan
Call or WhatsApp
78100 22628 #✡️ஜோதிட பரிகாரங்கள் #✡️தோஷ பரிகாரங்கள் #👉🏼இன்றைய ராசிபலன்✡️ #🔍ஜோதிட உலகம் 🌍 #🚹உளவியல் சிந்தனை


