ShareChat
click to see wallet page
search
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் வைபோகம்* *அம்பிகையின் வைபோகம்* *த்ரிபுர சுந்தரி என்ற பெயரில் உள்ள தத்துவம்* : இவ்வாறு பரமசிவனுடைய "ஆஹோ புருஷிகா" என்ற அஹங்கார ரூபிணியான இந்த சக்தி த்ரிபுர சுந்தரி என்று விவரிக்கப்பட்டது ஏன்? இப்பெயரில் உள்ள ஆழ்ந்த கருத்துகளைப் பார்ப்போமா? அண்டசராசரங்களையும், மூவுலகங்களையும் வயிற்றில் அடக்கி ஈன்றவள் "ஜகத் ப்ரஸூதி". த்ரிபுரோபனிஷத்தின் ப்ரதான தேவதையான மஹாத்ரிபுரசுந்தரி வீடூஜீபீணீ (திஸ்ர: புர: த்ரிபதா) என்ற முதல் மந்திரத்தால், இந்தப் பிரபஞ்சத்தில் எவை எவை மும்மூன்றாய்க் கூறப்படுகின்றனவோ அவை யாவற்றிலும் விரிவடைந்து உறைந்திருப்பவள் என்று பொருள் கொள்ளப்படுகிறாள். (1) ஜோதி மண்டலம்: அக்னி, சூர்யன், சந்திரன் (2) குணங்கள்: ஸத்வ, ரஜஸ், தமஸ் (3) வேதங்கள்: ரிக், யஜுர், ஸாமம் (4) காலம்: இறந்தகாலம், நிகழ், எதிர், (5) காலை, நடுப்பகல், மாலை (6) லோகம்: பூலோகம், புவலோகம், ஸுவலோகம் (பூமி, ஸ்வர்கம், அந்தரிக்ஷம்) (7) ஆத்ம: ப்ராக்ஞன், வைச்வானரன், தைஜஸன் (8) சரீர: ஸ்தூல, சூக்ஷ்ம, காரண (9) நாடி: இடா, பிங்களா, சுஷும்னா (10) மூர்த்தி: ஸ்ருஷ்டி, ஸ்திதி, ஸம்ஹாரம் (11) சக்தி: இச்சாசக்தி, க்ரியாசக்தி, ஞானசக்தி (12) பிந்து: ரக்த, சுக்ல, மிச்ர (13) திரிபுடி: ஞானம், ஞாத்ரு, ஞேயம் (14) சப்த: பச்யந்தீ, மத்யமா, வைகரீ, (15) வாமா, ஜ்யேஷ்டா, ரௌத்ரி (16) சுத்தமாயா: அவ்யக்தம், மஹத், அஹங்காரம் (17) கூடம்: வாக்பவ, காமராஜ, சக்தி கட்டங்கள் (18) "அஷ்டாதசத்ரயம்" என்று 18 மும்மைகள் கூறப்பட்டிருக்கின்றன. பகிர்வுஸ்ரீராமஜயம் மந்திரம், யந்திரம், ரூபம் அனைத்தும் அவளின் மூன்று அங்கங்களாய் (புரங்களாய்) ஆனதால், த்ரிபுரா என்று அழைக்கப்படுகின்றாள். புரம் என்றால் தேஹம், அங்கம் என்று பொருள். ஸத், சித், ஆனந்தம் என்ற முப்புரங்களில் இருக்கும் த்ரிபுர சுந்தரியே, இவ்வுலகில் உள்ள எல்லா ஜீவன்களிலும், அன்னம், பிராணன், மனம் என்ற முப்புரங்களிலும் குடி கொண்டு கருணை புரிகிறான். இந்த ஸச்சிதானந்த ஸ்வரூபிணியை நம்முடைய மூன்று அங்கங்கிலும் (ஸ்தூல, சூக்ஷ்ம, காரண) குடி புகுந்து அருள் பாலிக்கவே நாம் மஹா த்ரிபுரசுந்தரியைத் தியானிக்கிறோம். சங்கர பகவத் பாதர் ஸௌந்தர்யலஹரியிலும், த்ரிபுரசுந்தரி ஸ்தோத்திரத்திலும் நமக்குக் காட்டும் அம்பிகை பரமசிவனிலிருந்து வேறுபடாத, பிரிக்கப்படாத மஹாத்ரிபுரசுந்தரியேதான்.🌹 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
🖌பக்தி ஓவியம்🎨🙏 - दानपर्ट Vishwaoni Devasth दानपर्ट Vishwaoni Devasth - ShareChat