
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
நகரத்தார் உருவாக்கிய நெய்-நந்தீஸ்வரர் (கோவில்)(நெய்மணக்கும் கோவில் - நெய் மணக்கும் கிராமம் - நெய்கிணறு)
கட்டுரை : செந்தில்-நாகப்பன் வேந்தன்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூர் நகரத்தார் என்று சொல்லக்கூடிய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மிக அதிகமாக வாழ்கின்ற ஊர் செட்டிநாட்டு ஊர் என்றே சொல்லலாம். 1000 புள்ளிகள் கொண்ட இவ்வூரில் ஆறு கோவில் நகரத்தார் வாழ்கின்றனர்.
இவ்வூரின் சிறப்பம்சம் : ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர்
இவ்வூரில் உள்ள சிவன் கோவிலில் நந்தி எம்பெருமான் நெய்-நந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.
நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இவ்வூரில் மட்டுமே. அதனால் இவ்வூர் தமிழகத்து ஊர்களில் தனி சிறப்பிடம் பெறுகின்றது.
ஊரின் சிறப்பே நெய்-நந்தீஸ்வரர்தான் இவரின் அருள்திறம் ஊர் முழுக்க நிறைந்திருப்பதால் இவ்வூரிலிருக்கும் நகரத்தார் பெரும் தனவான்களாகவும் சிறந்த கல்விமான்களாகவும் வாழுகின்றனர். நெய் நந்தீஸ்வரரால் இவ்வூருக்கு - இவ்வூர் நகரத்தார்க்கு பெருமையும் புகழும் எந்நாளும் உண்டு.
இவ்வூருக்குள் நுழைந்தவுடன் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் நம் கண்ணுக்கு தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோவில்தான். இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் பெருமக்கள் பெருமுயற்சி செய்து பெரும்பணம் சேகரித்து இக்கோவிலை கட்டியுள்ளனர். நிர்வாகப் பொறுப்பையும் இவர்களே ஏற்றுள்ளனர்.
நந்திஎம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது
இக்கோவிலின் தனிச்சிறப்பு
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஒன்பதுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளதாம். சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோவிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர் என்றாலும் நெய் நந்தீஸ்வரரே இக்கோவிலின் சிறப்புக் கடவுளாக உள்ளார். அதனால் இக்கோவில் சிவன் கோவிலாக இருந்த போதிலும் நந்திகோவில் என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றது.
ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோவில் உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர் இவரின் மேனி முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லையாம். ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் இவர்.
இவரைப் பற்றி கேள்விப்பட்டு இவரைப் பார்க்க வந்தவர்கள் இன்றும் நல்ல நிலையில் வாழ்கின்றார்கள். கவியரசர் கண்ணதாசன் இவரை போற்றிப் பாடியுள்ளார்.
தொடர்வது இவரின் சிறப்புகள்
பிரம்மாண்ட நெய் உருவம் - ஆன்மீக ஆச்சர்யம் - பெருமையின் அணிகலன் - இந்தியாவின் தனிச்சிறப்பு (உலகின்) எட்டாவது அதிசயம் - நெய்மீது அலாதி ப்ரியம் - யுகங்கள் பல கடந்தாலும் எந்த நிலையிலும் அருள்திறம் குறையாத இறை தன்மை - தனக்கு ப்ரியமான நெய்யினையே காணிக்கைப் பொருளாக வைத்திருப்பது - தன்னைப் பார்க்க வருகின்றவர்கள் வியப்பில் ஆழ்த்துவது "ரொம்ப சக்தியுள்ள நந்தி" என்று ஊராரின் பேச்சில்....
வேந்தன்பட்டியிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து காய்ச்சி நெய் எடுத்து நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளவோ செய்கின்றார்கள். இன்றும் இப்பழக்கம் இவ்வூர் மக்களிடம் இருந்து வருகின்றது.
நந்தி எம்பெருமானுக்கு "தன-ப்ரியன்" என்ற ஒரு பெயர் உண்டு. அதனால் தானோ என்னவோ இவ்வூர் மக்கள் நெய்-நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும் பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாக போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா என்ற ஒரு விழாவினை இவ்வூர் மக்கள் நடத்தி வருகின்றார்கள். நந்தி விழா தினத்தன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர். இந்த அதிசய விழா தமிழகத்து ஊர்களில் திருவண்ணாமலையிலும் வேந்தன்பட்டியிலும் தான் நடைபெறுகின்றது. மற்ற ஊர்களில் நடைபெறுவதில்லை.
நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்" ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது (பொதுவாக இந்த அமைப்பு நந்தி எம்பெருமானின் தோற்றத்தில் இருப்பதில்லை).
நெய் நந்தீஸ்வரருக்கு பசு நெய்தான் காணிக்கை பொருள். எனவே நெய் நந்தீஸ்வரரை பார்க்க வருகிறவர்கள் வரும்போது கலப்படமில்லாத சுத்தமான பசு நெய் கொண்டு வரவேண்டும்.
நெய் - நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துதல்
இப்படி ஒரு வேண்டுதலை நெய் நந்தீஸ்வரருக்கு இவ்வூர் மக்கள் நடத்தி வருகிறார்கள்.
இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடலில் நோய்கள் தோன்றினாலோ நெய் நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.
நோய்களோ பிரச்சனைகளோ தீர்ந்த பிறகு வெங்கல மணி ஒன்றும் பட்டுத்துண்டு ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி நெய்-நந்தீஸ்வரருக்கு சார்த்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
பிரதோசவிழா
நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் நந்தியை பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது.
மறுநாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய்கிணற்றில் கொட்டுகிறார்கள். நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில் கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லையாம்.
இவரை பார்ப்பதற்கு படையெடுத்து வருவோர் ஏராளம்.
பக்தி மணம் கமழ வருவோரெல்லாம் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரரைத் தரிசிப்பதோடு சிவகுடும்பத்துப் பிள்ளையான நந்திகேஸ்வரரையும் நெய்மணம் கமழ தரிசித்து மகிழ்கின்றார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய சந்தோஷத்தை நன்றியாகச் சொல்ல திரும்பத் திரும்பவும் வருகின்றார்கள்.
பஸ் வசதி
சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் உள்ளன. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி வருவதற்கு சிட்டி பஸ்களும், தனியார் பஸ்களும் நிறைய உள்ளன.
கோவில் திறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12 மணிவரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
செந்தில் நாகப்பன், வேந்தன்பட்டி
செல் : 9994036198, 9488815032 #✨பிரதோஷம்🕉️ #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🙏நந்தி பகவான் 🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✨பிரதோஷம்🕉️ திருப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே.
பொருளின் சுருக்கம்:
சிவபெருமான் சொற்களுக்குப் பொருளாய் இருப்பவன்; ஒளியுருவானவன். அந்தப் பெருமானின் பொன் போன்ற திருவடிகளை நாம் மனதாரத் தொழுதால், ஒருவேளை நம்மை ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டி கடலில் தூக்கி எறிந்தாலும் (அப்பர் பெருமானுக்கு நடந்த அதிசயம் போல), நம்மைத் தற்காத்து நற்கதி கொடுக்கும் துணை "நமச்சிவாய" என்னும் ஐந்தெழுத்து மந்திரமே ஆகும்.
மகா சிவராத்திரி நெருங்கும் வேளையில் இந்தப் பாடலைப் படிப்பது மிகவும் விசேஷமானது.
ஓம் அம் உம் சிவாய
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # உபதேசம்* *செய்த* *தகப்பன்சாமி...* *தந்தைக்கே பூஜை* *செய்யும் அபூர்வக்* *கோலம்!* 🙏✨
🦚🦚
ஓம் சரவணபவ! 🚩
முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு 'பிரணவ மந்திரத்தின்' பொருளை உபதேசம் செய்த கதையை நாம் அறிவோம். ஆனால், அதே முருகப்பெருமான் தன் தந்தைக்கே சிவபூஜை செய்யும் ஒரு உன்னதமான கோலத்தை நீங்கள் தரிசித்ததுண்டா? 🔱👦
அந்த அற்புதக் காட்சியைக் காண நாம் செல்ல வேண்டிய தலம்: மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி அருள்மிகு முருகன் திருக்கோயில்.
இந்தக் கோயிலின் கருவறைக்குள் நுழைந்தாலே ஒரு விதமான பேரமைதியும், தெய்வீக அதிர்வும் நம்மைத் தழுவுவதை உணர முடியும். அதன் பின்னணியில் உள்ள அந்த 'சிவ-சுப்ரமணிய' தத்துவத்தின் சிறப்புகள் இதோ:
📍 கருவறையில் ஒரு ஆன்மீக அதிசயம்:
இங்கு மூலவர் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கிறார். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால்:
முருகப்பெருமானுக்கு பின்புறம் ஒரு சிவலிங்கம் உள்ளது.
முருகப்பெருமானுக்கு முன்புறம் ஒரு ஸ்படிக லிங்கம் உள்ளது.
அதாவது, சிவபெருமானுக்கும் சிவலிங்கத்திற்கும் நடுவே முருகன் அமர்ந்து சிவபூஜை செய்யும் நிலையில் காட்சியளிக்கிறார். அசுரர்களை வதம் செய்த பின் தனக்கு ஏற்பட்ட பழி நீங்க, முருகன் இங்கு சிவனை நோக்கித் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் என்பதே இதன் வரலாறு.
🌟 சிவ-சுப்ரமணிய தத்துவம்:
"சிவனும் அவனது மைந்தன் முருகனும் வேறு வேறல்ல; இருவரும் ஒருவரே" என்கிற அத்வைத தத்துவத்தை இந்த கருவறை அமைப்பு நமக்கு உணர்த்துகிறது. தந்தையை வணங்கும் மகனாகவும், குருவை வணங்கும் சீடனாகவும் முருகன் இங்கு யோக நிலையில் அருள் புரிகிறார்.
🌿 குரா மரத்தடி ரகசியம்:
இக்கோயிலின் தல விருட்சம் 'குரா மரம்'. முருகப்பெருமான் முதலில் இந்த மரத்தடியில் அமர்ந்துதான் சிவனை வழிபட்டார். அதன் அடையாளமாக இன்றும் அங்கு ஒரு 'பத்ரலிங்கம்' உள்ளது.
ஒவ்வொரு நாளும் இரவு நடைபெறும் அர்த்தஜாம பூஜையின் போது, முதலில் கருவறையில் உள்ள முருகனுக்குப் பூஜை நடப்பதில்லை. மாறாக, குரா மரத்தடியில் முருகன் பூஜித்த அந்த 'பத்ரலிங்கத்திற்கு' தான் முதல் பூஜை (முதல் மரியாதை) செய்யப்படுகிறது. அதன் பிறகே கருவறைத் தெய்வங்களுக்குப் பூஜைகள் நடக்கின்றன.
✨ பலன்கள்:
தீராத பழி மற்றும் பாவங்களில் இருந்து விடுதலை பெற விரும்புவோர் இத்தல முருகனைத் தரிசிக்கலாம்.
மனக்குழப்பம் நீங்கி, தெளிவான அறிவு (ஞானம்) பெற இத்தல குரா மரத்தடியில் தியானம் செய்வது சிறப்பு.
தந்தையை வணங்கும் தனயனைத் தரிசிக்க ஒருமுறை திருவிடைகழி சென்று வாருங்கள்! மன அமைதி நிச்சயம். 🌸
அமைவிடம்: திருவிடைகழி (மயிலாடுதுறையிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவு).
🦚🦚
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🙏நந்தி பகவான் 🙏 இரண்டு
ஆன்மீக தகவல்கள் : 03
உயிரோட்டமுள்ள நந்தி:-
சிவசைலம் பரமகல்யாணி உடனுறை சிவசைலநாதர் கோவில்.
திருநெல்வேலியிலிருந்து மேற்கே சுமார் 57 கிமீ தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடனை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் உள்ள நந்தி சிலையின் முதுகில் உளியால் ஏற்பட்ட ஒரு தழும்புள்ளது.
ஒரு சமயம் தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு சாபம் ஒன்று ஏற்பட்டது. அதற்கு விமோசனமாக சிவசைலத்தில் எழுந்தருளி இருக்கும் இறைவனுக்கு எதிராக ஒரு நந்தியை பிரதிஷ்டை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டது.
அதன்படி இந்திரன் தேவர்களின் சிற்பியான மயனை அழைத்து நந்தி விக்கிரகம் ஒன்றை நிர்மாணிக்க கூறினான்.
சிற்ப சாத்திரங்களை முறைப்படி கற்ற மயனும் சிவசைலம் வந்து இந்திரன் கூறியபடி சிற்ப சாத்திர விதிமுறைப்படி ஓர் அழகிய நந்தியை உருவாக்கினான்.
சிற்ப சாத்திரங்களின் அனைத்து விதிகளின் படியும் முழுமையாக விளங்கிய அந்த கல் நந்தி இறுதியில் உயிர் பெற்று அங்கிருந்து செல்ல எழ முயற்சித்தது. மயன் தன் கையில் இருந்த உளியால் நந்தியின் முதுகில் அழுத்த நந்தி அவ்விடத்திலேயே நிலையாக தங்கியது.
மனோரஞ்சிதம் மாலை....
மனோரஞ்சிதம் அரிதானது என்பதுடன், சுவாமி வழிபாட்டில் மிகவும் முக்கியமானது.
பூக்களுக்கான கவர்ச்சியான வண்ணம் இல்லாவிட்டாலும், தன் ரம்மியமான மணத்தால், அனைவரையும் மயக்கும் அற்புதம் மனோரஞ்சிதம் மலருக்கு உண்டு.
மலர்களில் வாசம் அதிகம் கொண்டது மனோரஞ்சிதம்.
இந்த பூ நுகரும் போது, நாம் நினைக்கும் பழத்தின் வாசனை வரும் என்றும் கூறப்படுகிறது.
இலை போன்ற தோற்றத்தில் பச்சை வண்ணத்தில் பூத்து, பின், வெளிர் மஞ்சள் நிறத்திற்கு இந்த பூ மாற்றம் அடையும்.
பூக்கும் போது, இலையை போன்றே காணப்படும்.மாலை நேரத்தில் மட்டுமே பூக்கக்கூடியது இது.
மனோரஞ்சிதம் பூத்தால், 200 அடி சுற்றளவிற்கு பூவின் வாசம் இருக்கும்.
மிகவும் அற்புதமான இதன் வாசம், மனதை மயங்கச் செய்யும்.
நீர் நிரப்பிய பாத்திரத்தில், ஒரு மனோரஞ்சிதம் பூவை வைத்தால், அந்த அறை முழுவதும் சுகந்தமான மணம் வீசும்.
இதன் மணத்திற்கு ஈடு இணையே கிடையாது.
மனதை மயக்கும் என்பதாலும், மனதில் நினைக்கும் பழத்தின் வாசத்தை தரும் என்பதாலேயே, இது மனோரஞ்சிதம் என, அழைக்கப்படுவதாக தெரிகிறது.
இதனால் நந்தியின் வலது கால் சற்று உயர்த்தப்பட்ட நிலையிலும் மற்ற மூன்று கால்கள் வளைந்திருக்கிறது.
உளியினால் மயன் அழுத்திய தழும்பை இன்றும் இந்த நந்தியின் மீது பார்க்க முடியும். இந்த நந்தியின் உடம்பில் இருக்கும் அணிகலன்களும் அது தன் வாலை பின்னங்கால் வழியாக வளைத்து வைத்திருப்பதும் அதன் அழகிற்கு மேலும் மெருகு ஊட்டுகின்றன.
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும்.
#✨பிரதோஷம்🕉️ #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 நமசிவாய வாழ்க👏
ஓம் மஹா தேவா🐂 போற்றி போற்றி 👏
ஓம் நந்தீஸ்வரா🐂 போற்றி போற்றி 🌸
ஓம் அம்மையப்ப🦁🐂 தெய்வமே போற்றி🦚 போற்றி 🤷
இன்று பிப்ரவரி 14✍️
மாசி 2🫅
சனி 🪐மஹாபிரதோஷம்🐂
அன்பான காலை🐓🌞 வணக்கங்கள்💐👏 வாழ்க வளமுடன் 🙌🌾
திருச்சிற்றம்பலம் 👏🔥 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏நந்தி பகவான் 🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨பிரதோஷம்🕉️ மடியில் கறந்த பால் மீண்டும் பசுவின் முலை சேராது
மோரிலிருந்து கடைந்து எடுக்கப்பட்ட வெண்ணெய் மீண்டும் மோர் சேராது
சங்கிலிருந்து வெளிவந்த ஓசை மீண்டும் சங்கை சேராது
உடலில் இருந்து பிரிந்த உயிர் மீண்டும் அவ்வுடலை சேர முடியாது
விரிந்த பூ மொட்டாகாது
மரத்திலிருந்து உதிர்ந்த காய் மீண்டும் மரத்தில் சென்று சேராது
ஆக இறந்தால் மீண்டும் பிழைப்பது இல்லை இல்லை இல்லையே
// ஆகவே உடம்பில் உயிர் உள்ள போதே நல்லறம் செய்து நாற்பாதங்களை கடைபிடித்து இறைவனை அடைந்து இறவா நிலை பெறவேண்டும் //
கறந்தபால் முலைப்புகா கடைந்தவெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை யுயிர்களு முடற்புகா
விரிந்தபூ வுதிர்ந்தகாயு மீண்டுபோய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை யில்லையில்லை யில்லையே
சிவவாக்கியம்
#✨பிரதோஷம்🕉️ #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🙏நந்தி பகவான் 🙏
இன்று #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #✨பிரதோஷம்🕉️ சனி பிரதோஷம்
*7 தலைமுறை பாவம் போக்கும் சனி மகா பிரதோஷ வழிபாடு*
பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது
சிவபெருமானுக்கு உகந்த விரதங்களில் முக்கியமானது பிரதோஷ விரதம். ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி திதியில் மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. சனிக்கிழமையுடன் திரயோதசி திதி இணைந்து வரும் நாள் சனி மகா பிரதோஷம் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில் நாளை (சனிக்கிழமை) சனி மகா பிரதோஷம் ஆகும்.
தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்த போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தை சிவபெருமான் உண்டது ஏகாதசி தினம் ஆகும். மறுநாளான துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருக்கும் சிவ பெருமான், 3-ம் நாளான திரியோதசி திதியில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா கால வேளையில் மயக்க நிலையில் இருந்து விழித்து, சந்தியா நிருத்த தாண்டவம் ஆண்டினார்.
பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் சிவபெருமானின் 5 விதமான தொழில்களான படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் ஆகியவற்றை குறிப்பதாகும். சிவ பெருமான், பார்வதி தேவியுடன் ஆனந்த தாண்டம் ஆடி, உலக உயிர்கள் அனைத்திற்கும் அருள் புரிந்த காலமே பிரதோஷ காலமாகும்.
பிரதோஷ வேளையான மாலை 4.30 மணி முதல் 6 மணி வரை மிகவும் சக்தி வாய்ந்தது என்கின்றன சாஸ்திர நூல்கள். சனிபிரதோஷ நாளில் செய்யும் வழிபாடு ஆயிரமாயிரம் மடங்கு புண்ணிய பலன்களைக் கொடுக்கும், நம் தீவினைகளை நீக்கும். பொதுவாகவே சனிக்கிழமைகள் சனிபகவானுக்கு உரியன. இந்த நாளில் ஆலயங்களுக்குச் சென்று சிவ வழிபாடு செய்து நவகிரகத்தில் சனிபகவானையும் வழிபட்டுவந்தால் சனியின் தொல்லைகள் தீரும்.
சனிபகவான் நேர் பாதையில் சஞ்சாரம் செய்யும்போது, ஏழரைச் சனி, அஷ்டம சனி, கண்டக சனி, அர்த்தாஷ்டம சனி நடப்பவர்களையுமே அதிக அளவில் பாதிப்பார். ஆனால் வக்ர காலத்தில் இந்தப் பலன்கள் மாறுபடும். அனைத்து ராசிக்காரர்களுக்கும் பாதிப்பு இருக்கும்
எல்லா சனிக்கிழமைகளிலும் சிவாலயம் செல்ல முடியாதவர்கள் குறைந்த பட்சம் சனி பிரதோஷ நாளிலாவது சென்று வழிபட வேண்டும். அவ்வாறு வழிபட்டால் ஓர் ஆண்டில் அனைத்து சனிக்கிழமைகளிலும் வழிபட்ட பலன் கிடைக்கும்.
தள்ளிப்போவது, குழந்தைப்பேறு தாமதமாவது, வேலை கிடைப்பதில் சிக்கல் என வக்ர சனியால் துன்புறும் அன்பர்கள் நாளை (சனிக்கிழமை) சனி மகாபிரதோஷ நாளில் வழிபாடு செய்வது அவசியம். குறிப்பாகத் தொந்தரவுகளை அனுபவித்துவரும் ராசிக்காரர்கள் இந்த மகாபிரதோஷ வழிபாட்டைச் செய்வது நல்லது.
பிரதோஷ நாளில் சிவாலயத்தை வலம் வந்து வணங்குவது மிக முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6 வரையுள்ள காலம் சூரியன் மற்றும் சுக்கிர ஓரையில் அமையும். இந்த நேரம் வெற்றி தரும் முகூர்த்தத்தைக் குறிக்கின்ற ஒரு நேரமாக உள்ளது.
சிவபெருமானைக் குறிப்பிடுகின்ற சூரிய ஓரையில் தொடங்கி, அம்பாளைக் குறிக்கின்ற சுக்கிர வேளையில் நிறைவுபெறும் பிரதோஷ பூஜையில் மகாலட்சுமியின் ஆசிகள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்பதால், சனி மகா பிரதோஷம் மிகவும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது.
நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலத்தில் சிவ பெருமானை தேவியோடும், முருகனோடும் சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்து கண்ணீர் மல்க உருகி வழிபட்டால் சகல விதமான நன்மைகளும் வந்து சேரும்
பிரதோஷ காலத்தில் சிவாய நம எனும் பஞ்சாட்சர மந்திரம் உச்சரிப்பது நாம் செய்த பாவங்கள் மட்டுமல்ல 7 தலைமுறையினர் செய்த பாவங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
திருச்சிற்றம்பலம் #🙏கோவில்
#மகா பெரியவா. #🙏🪔காஞ்சி மஹா பெரியவா ஆன்மீக சிந்தனைகள்🪔🙏 #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃
#😷சுகாதார ஹெல்த் டிப்ஸ் #😎Summer ஹெல்த் டிப்ஸ் #HEALTH #காலை வணக்கம் #🏋️உடற்பயிற்சி *நலம் பெறுவோம்* 🌿
🌿 *வளம் பெறுவோம்* 🌿
☘ *நாட்டுமருந்து வாட்சப்குழு* ☘
🍁 *9787472712* 🍁
பொம்பிலிமாஸ் (Pomelo) பழம் எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு குடும்பத்தைச் சேர்ந்தது. இது சுவையில் சற்று இனிப்பாகவும், புளிப்பாகவும் இருக்கும்.
இதன் மருத்துவப் பயன்கள் மற்றும் பயன்படுத்தும் முறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:
மருத்துவப் பயன்கள்
* *நோய் எதிர்ப்பு சக்தி:*
இதில் வைட்டமின் C அதிக அளவில் இருப்பதால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது. சளி, காய்ச்சல் வராமல் தடுக்க உதவும்.
* *செரிமானம்:*
* இதில் உள்ள நார்ச்சத்து (Fiber) மலச்சிக்கல் பிரச்சனையைத் தீர்த்து, செரிமான மண்டலத்தைச் சீராக வைக்கிறது.
* *இதய ஆரோக்கியம்:* இதில் பொட்டாசியம் சத்து நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தைக் (Blood Pressure) கட்டுப்படுத்தி இதயத்தைப் பாதுகாக்கிறது.
* *உடல் எடை குறைப்பு:*
* குறைந்த கலோரிகளைக் கொண்ட இந்தப் பழம், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்குச் சிறந்த தேர்வாகும்.
* *சரும ஆரோக்கியம்:* இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் (Antioxidants) சருமம் முதிர்ச்சியடைவதைத் தடுத்து, பொலிவைத் தருகின்றன.
சாப்பிடும் முறை
* *தோலை நீக்குதல்:* இந்தப் பழத்தின் தோல் மிகவும் கனமாக இருக்கும். ஒரு கத்தியால் மேல்பகுதியைச் செதுக்கிவிட்டு, உள்ளே இருக்கும் சுளைகளைத் தனியாகப் பிரித்து எடுக்க வேண்டும்.
* *சுளைகளின் தோல்:*
* ஆரஞ்சு பழத்தைப் போலச் சுளைகளின் மேலிருக்கும் மெல்லிய தோலையும் நீக்கிவிட்டு, உள்ளே இருக்கும் முத்துக்கள் போன்ற பகுதியை மட்டும் சாப்பிடுவது சிறந்தது. ஏனெனில் மேல்தோல் கசப்பாக இருக்கலாம்.
* *சுவையூட்டுதல்:* சுளைகளை அப்படியே சாப்பிடலாம் அல்லது லேசாக மிளகுத்தூள் மற்றும் உப்பு தூவிச் சாப்பிடலாம்.
* *ஜூஸ்:* இந்தப் பழத்தை மிக்ஸியில் போட்டு சாறு எடுத்தும் பருகலாம். இதில் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது அதிகப் பலன்களைத் தரும்.
*கவனிக்க வேண்டியவை*
நீங்கள் ஏதேனும் தீவிரமான மருந்து மாத்திரைகள் (குறிப்பாக இரத்த அழுத்தம் அல்லது கொலஸ்ட்ராலுக்காக) எடுத்துக் கொள்பவராக இருந்தால், இந்தப் பழத்தைச் சாப்பிடும் முன் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் இது சில மருந்துகளின் வீரியத்தைப் பாதிக்க வாய்ப்புள்ளது.











