
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 மலை மீது கட்டப்படுவதன் காரணம் தெரியுமா?*
இந்தியாவில் பல கோயில்கள் மலை மீதுதான் அமைந்திருக்கின்றன. மலைக்கோயில்கள் இல்லாத மாவட்டங்கள் குறைவுதான் என்பதோடு, புனித யாத்திரைகள் வழிபாடுகள் எல்லாம் இந்தியாவில் அதிக நம்பிக்கைகளுடன் பார்க்கப்படுகின்றன. பிரசித்தி பெற்ற பல கோயில்கள் உயர்ந்த மலைகள் மற்றும் குன்றுகளில் காணப்படுகின்றன. அந்த வகையில், மலைகளின் மீது கோயில்கள் கட்டப்பட்டதற்கான காரணத்தை இந்தப் பதிவில் தெரிந்து கொள்வோம்.
மற்ற மதங்களை விட இந்து மதத்தில் மலைக்கோயில்கள் அதிகம் உள்ளன. கேதார்நாத், பத்ரிநாத், வைஷ்ணவி தேவி கோயில், அமர்நாத் குகை கோயில், திருப்பதி வேங்கடாசலபதி கோயில், பழனி முருகன் கோயில், சபரிமலை ஐயப்பன் கோயில் என மக்கள் படையெடுக்கும் பல கோயில்கள் மலைகளிலும் குன்றுகளிலும்தான் அமைந்துள்ளன. இதற்குப் பின் வெறும் ஆன்மிகக் காரணங்கள் மட்டுமில்லை, அறிவியல் காரணங்களும் உள்ளன.
பஞ்சபூதம்: வேதங்கள், புராணங்களின்படி, பஞ்ச பூதங்களான நீர், காற்று, நெருப்பு, பூமி, வானம் இவற்றில் இருந்து இந்தப் பிரபஞ்சம் உருவானதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பஞ்சபூதங்கள் அனைத்திலும் கடவுள்கள் நீக்கமற நிறைந்து வீற்றிருக்கிறார்கள். இதில் பூமியின் மகுடமாக மலைகள் உள்ளன. இந்த மகுடத்தை கடவுள்களுக்கு கம்பீரமாகக் கருணையுடன் சூட்டும்விதமாக புனிதத் தலங்களும், கோயில்களும் மலைகளில் கட்டப்பட்டுள்ளன.
மலைகளின் வடிவமைப்பு: மலைகள் சுத்தமாகவும், அமைதியாகவும் இருப்பதால் இந்த மலைகளில் உள்ள கோயில்களில் அமர்ந்தால் மன அமைதி தானாகவே தேடி வரும். எவ்வளவு மனக்கஷ்டம் இருந்தாலும் மலையேறி சென்று தெய்வ தரிசனம் செய்தால் மனம் இலகுவாகி, கஷ்டங்கள் காணாமல் போய்விடும்.
அப்படிப்பட்ட சூழலில் உள்ள நேர்மறை ஆற்றலை உடலுக்குள் பரவச் செய்யும் வடிவமைப்பு மலைகளில் காணப்படுகின்றது. நேர்மறை ஆற்றல்களின் மொத்த உருவமாக மலைகள் உள்ளன. பூமியின் அரண் போல காணப்படும் மலைகளில் தெய்வங்களுக்கு கோயில் கட்டுவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.
மலைகளில் ஏறி இறைவனை தரிசிக்கும்போது உடலில் உள்ள மூட்டுகளும் நரம்புகளும் வலிமை பெற்று உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மன அமைதியையும் மன உறுதியையும் நல்குவதால் மலைக் கோயில்கள் மனிதர்கள் மனதில் அதிகம் இடம் பெற்று பிரபஞ்சத்தில் சிறப்புற்று விளங்குகின்றன.🌹
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி தரும் அதிசய சிவலிங்கம்!*
சிவ - பார்வதி திருமணம் கயிலாயத்தில் நடந்தபோது, தென் திசை உயர்ந்து, வட திசை தாழ்ந்தது. இதை சமன் செய்ய அகத்தியரை தென் திசை செல்ல சிவன் உத்தரவிட்டார். சிவனின் கட்டளையை ஏற்ற அகத்தியர், பல தலங்களில் தங்கி சிவ பூஜை செய்து சென்றார். ஓரிடத்தில் சிவன் அகத்தியருக்கு திருமணக் காட்சி தந்தார். இந்தக் காட்சி எந்நாளும் உலக மக்களுக்குக் கிடைக்க வேண்டும் என அகத்தியர் வேண்ட, ‘எனக்கு (லிங்கத்திற்கு) தேன் அபிஷேகம் செய்யும் காலத்தில் இத்தல லிங்கத்தில் பார்வதியும் என்னோடு இணைந்து தோன்றுவாள்’ எனக் கூறி மறைந்தார்.
பல ரிஷிகள் இங்கு வந்து தங்கி ஈசனை வழிபட்டதால் இத்தலம் ‘ரிஷிவந்தியம்' என வழங்கப்பட்டது. காட்டை வெட்டும்போது மண்வெட்டியில் வெட்டுப்பட்ட சுயம்பு லிங்கம்தான் ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர். இன்றும் கூட வெட்டுப்பட்ட கீறலை சுயம்பு லிங்கத்தில் பார்க்கலாம்.
இந்தக் கோயில் துவாபர யுகத்தில் தோன்றியதென்று கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன. இத்தல அர்த்தநாரீஸ்வரர் தம்மை வந்து வழிபட்ட ஸ்ரீராமருக்கு ஞானத்தையும், அகத்தியருக்கு திருமணக் கோலத்தையும், பூஜை செய்த ரிஷிகளுக்கு நற்பலன்களையும், குகநமச்சிவாயருக்கு உணவளித்தும் அருள்புரிந்துள்ளார். அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் இத்தல ஈசனை வந்து வழிபட்டுள்ளனர்.
குருநமச்சிவாயரின் சீடரான குகநமச்சிவாயர் திருவண்ணாமலையிலிருந்து பல தலங்களை தரிசித்து விட்டு இத்தலம் வழியாக சிதம்பரம் செல்லும்போது பசி அதிகமானது. அவர் இங்குள்ள முத்தாம்பிகை அம்மனிடம் சென்று, ‘தாயிருக்க பிள்ளை சோறு’ என்ற செய்யுளை பாடினார். உடனே அம்மன் அவர் முன் தோன்றி, ‘நான் இங்கு ஈசனுடன் அர்த்தபாகம் பெற்றிருக்கிறேன். எனவே, இருவரையும் சேர்த்து பாடுவாயாக’ என்று கூற, குகநமச்சிவாயரும் அதன்படியே, ‘மின்னும்படி வந்த சோறு கொண்டு வா’ என்ற பாடலைப் பாடினார். இந்தப் பாடலைக் கேட்டதும் முத்தாம்பிகையம்மன் பொற்கிண்ணத்தில் சோறு கொண்டு வந்து குகநமச்சிவாயரின் பசியாற்றினாள் என்பது தல வரலாறு.
இக்கோயில் லிங்கத்திற்கு தேனபிஷேகம் செய்யும்போது, லிங்கத்தில் இடை நெளிந்த, கையில் கிளியுடன் அம்மன் காட்சி தரும் அதிசயத்தை ரிஷிவந்தியம் முத்தாம்பிகா சமேத அர்த்தநாரீஸ்வரர் கோயிலில் தரிசிக்க முடியும்.
தேவர்களின் தலைவனான இந்திரன் முன் ஈசன் தோன்றி, தனக்கும் பார்வதிக்கும் சேர்த்து அபிஷேகம் செய்யும்படியாகப் பணித்தார். அத்துடன் தினமும் நடைபெறும் தேனபிஷேக பூஜையில் அர்த்தநாரீஸ்வரராகக் காட்சி கொடுப்பதாகக் கூறி மறைந்தார். தேன் தானும் கெடாது, தன்னுடன் சேர்க்கும் பொருளையும் கெட விடாது. இதன்படி இன்றும் கூட தினசரி நடைபெறும் தேனபிஷேக பூஜையில் சுயம்பு லிங்கத்தில் அர்த்தநாரி ஈஸ்வரனாக ஒளி வடிவில் காட்சி தருகிறார் சிவபெருமான். மற்ற அபிஷேகம் நடைபெறும்போது லிங்க வடிவம் மட்டுமே காட்சி தரும்.🌹
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் மாதம் 13ம் நாள் 25-பிப்ரவரி-26, ரோஹிணி நக்ஷத்திரம் கூடிய புதன் கிழமை சௌம்யவாரம்
மாசில்லா பூரண சந்திர முகத்துடன் குளிர்ந்த அருளை பொழிந்திடும் சௌம்ய மூர்த்தி பகவான் கிருஷ்ணனை
மானுட ஜென்மம் எடுத்த பயனை நிறைவேற்ற பூரண பக்தியோடு உலகுக்கோர்க்கு நன்மை பயக்கும் காரியங்களை
செய்து கலையாத கல்வி, குறையாத செல்வம், நிறைவான வாழ்வு பெற்று இறைவன் பத்ம பாதங்களில் அகலாத மன நிறைவோடு அடைக்கலம் பெற்றிட போற்றி பாடி பூஜித்து வணங்கிடுவோம் வாரீர்
தேட தேட பல இடங்களிலும் உனை தேடி காணாது வருந்தி கடைசியில் நீ என் மனதிலேயே ஒளிந்திருக்க கண்டேனே
பட பட என எந்தன் உள்ளம் படபடக்க உன் கள்ளத்தனம் கண்டு மனம் உருகி மெய்சிலிர்த்து பக்தி பொழிந்தேனே
நட நட என உன்னோடு நடந்துவந்து நீ ராதா ராணியோடு நடனம் ஆடிட கண்டு அங்கேயே மெய்மறந்து நின்றேனே
தொட தொட என் கைகளால் உன் நடனம் ஆடி களைத்திருக்கும் சிவந்த தாமரை பாதங்களை பற்றி பிடித்துவிட ஆசை
விட விட நான் பற்றிய சிவந்த பாதங்களை விட்டு விடாமல் என் கருத்த சிகையில் அழுத்தி வைத்து கொண்டேனே
சுட சுட உனக்கு பிடித்த இனிப்பு பண்டங்களோடு பலகாரம் செய்து கையில் ஏந்தி ஊட்டி விட காத்து நிற்கிறேனே
அட அட ஆஹா எனக்கு ரொம்ப பிடிச்சது என அள்ளி அள்ளி உன் செவ்விதழ் சிவக்க அடைத்து கொள்ள கண்டேனே
மட மட என ஓடி வந்து உனக்கு புரையேறிடுமே என கவலையுடன் உன் செந்தாமரை கைகளை பிடிக்க வந்தேனே
கட கட என வரிசை வெண் பற்கள் தெரிய கன்னம் குழிய என்னை மயங்க வைக்கும் முகம் சிரிக்க கண்டேனே
கண்ணா , மணிவண்ணா , கார்முகில் வண்ணா , குழல் ஊதும் மன்னா, மலர்மாலைகள் அணிந்த என் துணைவா
🌷🪷🌹
#பக்தி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 மாவட்டம் நாதகிரி முருகன்: அகத்தியர் தவம் செய்த குகை; நோய் தீர சப்த கன்னியர் நீராடிய சுனை* .....
ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன்.
சப்தகன்னியர் நீராடிய சுனையின் தீர்த்தம் சகல பிணிகளையும் போக்க வல்லது. சுனையின் அடியில் விநாயகப் பெருமானின் பீடம் உள்ளது. தினமும் விநாயகருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபட்ட அம்மையார் இருவரின் ஜீவசமாதிகளும் சுனையின் அடியில் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
சித்தர்கள் இன்றும் அங்கே சூட்சுமமாக உலாவருவதாகவும் அங்கே சென்று தியானம் செய்தாலே மனம் நிம்மதி அடைகிறது என்றும் சொல்கிறார்கள். இப்படிப்பட்ட அற்புதமான இந்த மலைத்தலத்துக்கு ஒருமுறை சென்று வாருங்கள். முருகப்பெருமானின் திருவருள் ஸித்திப்பதோடு சித்தர்களின் ஆசியும் நிச்சயம் கிடைக்கும்.
😯😟😯😟😯
மேற்குத் தொடர்ச்சிமலைப் பகுதியே சித்தர் பூமிதான். அகத்தியர் அங்கே வாசம் செய்து சித்தர்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கி சிவத்தொண்டையும் முருக பக்தியையும் அனைவருக்கும் எடுத்துச் சொல்லிவந்தார்.
எனவேதான் அங்கே உள்ள பல மலைத் தலங்களில் முருகப்பெருமான் கோயில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அத்தனை முருகன் கோயில்களும் சாந்நித்தியம் நிறைந்தவை. தனித்துவம் வாய்ந்தவை.
ஒருமுறை சென்று தரிசனம் செய்தால் மீண்டும் மீண்டும் தரிசனம் செய்யும் ஆவலைத் தூண்டுபவை. அப்படிப்பட்ட ஓர் ஆலயம்தான் நாதகிரி முருகன் கோயில்.
ராஜபாளையம் - தென்காசி மார்க்கத்தில், சிவகிரி தாலுகாவில் கூடலூர் எனும் பகுதியில் அமைந்துள்ளது இந்த மலைக்கோயில். மலைக்குமேல் அழகுற கோயில் கொண்டிருக்கிறார் பாலமுருகன்.
இத்தலத்தை அருணகிரியார் பாடியிருக்கிறார். பக்தர்கள் இதை சித்தர் மலை, தெய்வ மலை, சஞ்சீவி மலை, முக்திமலை, முருகாசலம், தவமலை, ஞானகிரி, பிரம்மகிரி, தீர்த்தகிரி, பதுமகிரி எனப் பல திருப்பெயர்களால் புகழ்கிறார்கள்.
வேலேந்திய வண்ணம் கட ஹஸ்தத்துடன் திகழும் முருகப் பெருமான், இங்கே அபய - வரத ஹஸ்தத்துடன் அருள்கிறார். இந்தத் திருக்கோலம் காண்போரை வியக்க வைப்பதோடு ஆகர்ஷிக்கவும் செய்கிறது.
கஷ்டத்தால் கலங்கும் பக்தர்களுக்கு அபயக் கரம் காட்டி அருளும் முருகனைக் கண்டதும் நம் கஷ்டங்கள் கலைந்தோடிப்போகின்றன. இங்கே முருகப்பெருமாள் சிவ, விஷ்ணு அம்சத்துடன் திகழ்வதாக ஐதிகம். அதனாலேயே வரத ஹஸ்தத்துடன் அமைத்தனர் என்கிறார்கள், பெரியோர்கள்.
இந்தப் பெருமானைத் தரிசித்த கணத்திலேயே நம் சங்கடங்கள் யாவும் விலகும் என்றும் கண்கண்ட தெய்வமாகத் திகழும் இந்த முருகனை வழிபட்டால் வேண்டுதல்கள் யாவும் விரைவில் நிறைவேறும் என்றும் சிலிர்ப்புடன் சொல்கிறார்கள், பக்தர்கள்.
புராணகாலத்தில், தேவேந்திரனின் மகன் சேந்தன் அசுரர்களுக்குப் பயந்து மறைந்து வாழ்ந்தான். பிறகு சிவபெருமானின் அருளாசிப்படி, இந்த மலைக்கு வந்து கடுந்தவம் புரிந்தான்.
அசுரர்களை அழித்த முருகப்பெருமான், சேந்தனுக்கு இந்த மலையில் அருள் வழங்கினாராம். இங்கே முருகனின் தரிசனம் கண்ட தேவர் கூட்டம், `ஓம் நமசிவாய’ என முழங்கிட, அந்த நாதம் கயிலாயத்தை எட்டியது. அதன் காரணமாக நாதகிரி எனும் பெயர் பெற்றது என்கிறது தலபுராணம்.
அசுரனை அழித்த முருகன் ஆனந்தமாக இம்மலையில் எழுந்தருளினார். அகத்தியர், வசிஷ்டர், விஸ்வமித்திரர், வாமதேவன் போன்று சித்தபுருஷர்களும் மகான்களும் நாதகிரி முருகனை வழிபட்டு அருள் பெற்றனர்.
இங்கு தவம் செய்த முனிவர்களும் சித்தர்களுமே மலையில் மரங்களாகவும், செடிகளாகவும், மலைக் கற்களாகவும் திகழ்கிறார்கள் என்பது நம்பிக்கை.
அகத்திய மாமுனிவர் தவம் செய்த இடங்களில், நாதகிரியில் திகழும் குகைக் கோயில் மிக முக்கியமானது. நாதகிரியின் மகிமையை உணர்ந்த பெரியோர்கள், இந்தத் தலத்துக்கு ஏற்ற வகையில் மிகவும் சிறப்பாக முருகனின் திருமேனியை இங்கு பிரதிஷ்டை செய்ய விரும்பினார்களாம்.
புளியங்குடி அருகிலுள்ள கற்பகநாச்சியார் மலையில் வெளிப்பட்ட கற்களைக் கொண்டு, சிறந்த சிற்பி ஒருவரின் மூலம் மூலவர் முருகனைச் செய்தனர். அடியார் ஒருவர் அந்த அற்புதத் திருமேனியை தலையில் சுமந்து வந்து நாதகிரியில் பிரதிஷ்டை செய்தாராம்.
மலையின் மீது கிழக்கு நோக்கி அருள்கிறார் முருகன். இங்கே, விநாயகர் பீடம், சப்த கன்னியர் சந்நிதி, அவர்கள் நீராடிய சுனை, ஹனுமனின் திருவுருவம், ராமரின் பாதச் சுவடு, காமதேனு லிங்கத்தின் மீது பால் சொரிவது போன்ற சிற்பக்காட்சி ஆகியவற்றை தரிசிக்கலாம்.
தெரிந்து கொள்வோம்....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📅பஞ்சாங்கம்✨ #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பக்தி #காலை வணக்கம்
#🔍ஜோதிட உலகம் 🌍 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 லக்ஷ்மி நரசிம்மர் தரிசனம்*
ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் (ஆதிசங்கரர் அருளியது - சுருக்கம்)
ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே
போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே
யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம்
பொருள்: பாற்கடலில் வசிப்பவனே, சக்ரபாணியே, ஆதிசேஷனின் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட புண்ணிய மூர்த்தியே, யோகிகளின் தலைவனே, நிரந்தரமான புகலிடமே, பவக்கடலைக் கடக்கும் தோணியே! லக்ஷ்மி நரசிம்மரே, எனக்கு உமது கரம் கொடுத்து (கராவலம்பம்) ஆதரிக்க வேண்டும்.
இன்று,
*புதன்கிழமை*
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ ஏன் மோதிரம் அணியக்கூடாது?*
நடுவிரலில் மோதிரம் அணியக்கூடாது என்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன.
சாஸ்திரப் பிரகாரம் நடுவிரலில் பெரும்பாலும் மோதிரம் அணிவதில்லை. மோதிரத்தின் தங்கம் சூரியனைத் குறிக்கிறது. நடுவிரல் சனி கிரகத்திற்கு சொந்தமானது. சூரியனும் சனியும் எதிரிகளாக இருப்பதால் நடுவிரலில் மோதிரம் அணிவது தவறான பாதிப்புகளை ஏற்படுத்தும்.
சூரியன் சூடான கிரகம். சனியோ குளிர்ச்சியானது. சூரியன் வலிமை நன்மதிப்பு பலம் மற்றும் மரியாதையை குறிக்கிறது. சனி கிரகமோ விடாமுயற்சி மற்றும் கட்டுப்பாட்டை குறிக்கிறது. சனி மற்றும் சூரியனின் எதிரெதிர் சக்தியால் நடுவிரலில் மோதிரம் அணிவதால் பணக்கஷ்டம் மற்றும் வேலையில் பல பிரச்னைகள் ஏற்படும்.
ஜோசியம் படி நடுவிரலில் மோதிரம் அணிவதால் தந்தை மகன் இருவருக்குமிடையே பிரச்னைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது.
மேலும் இப்படி அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை குறையும்.
நடுவிரலில் மோதிரம் அணிபவர்களுக்கு கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இருக்காது. எதிரெதிர் சக்திகளை கொண்டதை விரலில் அணிந்தால் இன்னல்களே ஏற்படும்.
ஆகவே நடுவிரலில் மோதிரம் அணிவது தவிர்க்கப்படுகிறது.🌹
#🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 தோஷ நிவர்த்தி தரும் பிரம்ம தேவன் திருத்தலம்!*🌹
புஷ்கரம் என்பது ஒரு புண்ணிய தலமாகும். இங்கு பிரம்மாவுக்கு தனிக் கோயில் உள்ளது. டெல்லி - மும்பை ரயில் மார்க்கத்தில் அஜ்மீர் ரயில் நிலையத்திலிருந்து 12 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது.
இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி பிரம்மா கோயிலில் பிரம்மாவை பூஜித்தால் நம் தலையில் பிரம்மா எழுதிய எழுத்து, அதாவது ஜாதக விதிகள் என்று சொல்லக்கூடியவை மாறி விடுவதாக ஐதீகம். இந்த க்ஷேத்திரத்தில் தாமரைப் பூ விழுந்ததனால் புஷ்கரம் என்று இதற்கு பிரம்மா பெயரிட்டதாகப் புராண வரலாறு கூறுகின்றது. புஷ்கரம் என்றால் தாமரைப்பூ என்று அர்த்தம்.
இந்தப் புஷ்கரத்தில் பிரம்மா யாகம் செய்தபோது இடையில் நாரதர் புகுந்து கலகம் செய்தார். பிரம்மாவைப் பற்றிய சில பொய்ச் செய்திகளை அவருடைய மனைவியான சாவித்திரியின் காதில் ரகசியமாகப் போட்டு கலகமூட்ட, சாவித்திரி அந்தப் பொய்களை உண்மை என்று நம்பி, பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டு யாகத்திலிருந்து எழுந்து சென்றார்.
யாகம் செய்யும்போது மனைவி இல்லாமல் யாகம் செய்யக் கூடாது என்ற ஒரு விதி இருப்பதால் பிரம்மா, கோப குலத்தைச் சேர்ந்த வேறொரு கன்னிகையைத் திருமணம் செய்து அவளுக்கு காயத்ரி என்று பெயர் சூட்டி யாகத்தைத் தொடர்ந்தார்.
இதைக் கண்ட சாவித்திரி பொங்கி எழுந்து பிரம்மா உள்ளிட்ட மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் சாபம் இட்டார். சாவித்திரி சபித்ததால் பிரம்மாவுக்கு இத்தலத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் கோயில் இல்லை என்பது புராண வரலாறு.
சிம்ம ராசிக்காரர்கள் இந்தக் கோயிலுக்கு ஒரு முறையாவது சென்று வருதல் நலம். ஜாதகத்தில் குரு நீசம், அஸ்தமனம், பகை பெற்று இருப்பவர்களும் இங்கு ஒரு முறை சென்று இத்தல புஷ்கரணியில் நீராடி, பிரம்மாவை வழிபாடு செய்து வந்தால் குரு தோஷம் நீங்கப் பெற்று நலமுடன் வாழலாம் என்பது பலரது நம்பிக்கை.🌹
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 நவக்கிரகஆலயங்களையும் .
ஒரே நாளில்
தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!!
ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம்.
1, திங்களூர் (சந்திரன்):
தரிசனம் நேரம் :1மணி நேரம்
காலை 6மணி
ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும்
வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம்.
2, ஆலங்குடி (குரு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 7.30மணி
ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம்
காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம்
3, திருநாகேஸ்வரம் (ராகு) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
காலை 9.30
கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம்.
4, சூரியனார் கோவில் (சூரியன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 11.00மணி
நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் என்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும்.
5, கஞ்சனூர் (சுக்கிரன்) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
மதியம் 12.15
சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும்.
6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) :
தரிசனம் நேரம் :1மணி நேரம்
மாலை 4மணி
நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும்.
7, திருவெண்காடு (புதன்) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 5.15மணி
வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும்.
8, கீழ்பெரும்பள்ளம் (கேது) :
தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம்
மாலை 6.15மணி
திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம்
9, திருநள்ளாறு (சனி) :
தரிசனம் நேரம்:1மணி நேரம்
இரவு 8.00மணி
நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும்,e சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம்.
9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது (நவ) கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்மh பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம்.
*நன்றி.*





![🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - - அருள்மிகு அரத்தநாாஸ்வரா திருக்கோயில் Coal ಭu <nಹ ~- ] - அருள்மிகு அரத்தநாாஸ்வரா திருக்கோயில் Coal ಭu <nಹ ~- ] - ShareChat 🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - - அருள்மிகு அரத்தநாாஸ்வரா திருக்கோயில் Coal ಭu <nಹ ~- ] - அருள்மிகு அரத்தநாாஸ்வரா திருக்கோயில் Coal ಭu <nಹ ~- ] - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_749544_5bfeda2_1771999748087_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=087_sc.jpg)






