திருநீற்றுச் சுவடு
ShareChat
click to see wallet page
@193036147
193036147
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #📅பஞ்சாங்கம்✨ #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பக்தி #காலை வணக்கம்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - தினம் ஒரு திருமந்திரம் சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஒரார்  2021 அவமாம் மலம்ஐந்தும் ஆவ தறியா  செய்து  தலைப்பறி கின்றார் தவமான நவமான தத்துவம் நாடாகி லாரே 5 பொருள் நின்று அறிந்து ஓரார்  ` சிவமாகிய சிவமாகவே அருள் விளங்கும் நின்று  சிவசக்தி) அருள்  தங்களுக்குள்  ணா்த்துவதை அறிய மாட்டார்கள்  ' அறியார் அவமாம் மலம் ஐந்தும் ஆன்மாவை ஆவது மறைக்கம்  ஐந்து மலங்கள் உள்ளிட்ட கன்மம் மாபை தங்களை வீணாக்குவதை அவமாம்) ரமாட்டார்  ೧ೆ தலைப்பறிதின்றார் செய்து_ சிவ உ்மையா தமான ஞானம் துலைப்பறி ன்றிர புறச் சடங்குகளைச் கின்றார்) செய்து தவமாக நினைக்கின்றனர் ` நவமான தத்துவம் நாடாகிலாரே தங்களுக்குள் இருக்கும் சிவதத்துவத்தை மெய்பொருளை) ஆராய்ந்து  பார்க்க மாட்டாாகள் அருளையும் தங்களை மறைக்கும் மலங்களின் தன்மை 4 OLu தத்துவத்தையும் உணராமல் யையும்  தவங்களை மட்டும் செய்வது பயனற்றது ` சிவ கோநடம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் சிவமா கியஅருள் நின்றுஅறிந்து ஒரார்  2021 அவமாம் மலம்ஐந்தும் ஆவ தறியா  செய்து  தலைப்பறி கின்றார் தவமான நவமான தத்துவம் நாடாகி லாரே 5 பொருள் நின்று அறிந்து ஓரார்  ` சிவமாகிய சிவமாகவே அருள் விளங்கும் நின்று  சிவசக்தி) அருள்  தங்களுக்குள்  ணா்த்துவதை அறிய மாட்டார்கள்  ' அறியார் அவமாம் மலம் ஐந்தும் ஆன்மாவை ஆவது மறைக்கம்  ஐந்து மலங்கள் உள்ளிட்ட கன்மம் மாபை தங்களை வீணாக்குவதை அவமாம்) ரமாட்டார்  ೧ೆ தலைப்பறிதின்றார் செய்து_ சிவ உ்மையா தமான ஞானம் துலைப்பறி ன்றிர புறச் சடங்குகளைச் கின்றார்) செய்து தவமாக நினைக்கின்றனர் ` நவமான தத்துவம் நாடாகிலாரே தங்களுக்குள் இருக்கும் சிவதத்துவத்தை மெய்பொருளை) ஆராய்ந்து  பார்க்க மாட்டாாகள் அருளையும் தங்களை மறைக்கும் மலங்களின் தன்மை 4 OLu தத்துவத்தையும் உணராமல் யையும்  தவங்களை மட்டும் செய்வது பயனற்றது ` சிவ கோநடம் வண்முகம் - ShareChat
#🔍ஜோதிட உலகம் 🌍 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 லக்ஷ்மி நரசிம்மர் தரிசனம்* ஸ்ரீ லட்சுமி நரசிம்ம கராவலம்ப ஸ்தோத்திரம் (ஆதிசங்கரர் அருளியது - சுருக்கம்) ஸ்ரீமத் பயோநிதி நிகேதந சக்ரபாணே போகீந்தர போகமணிரஞ்ஜித புண்யமூர்த்தே யோகீச சாஸ்வத சரண்ய பவாப்தி போத லக்ஷ்மீ ந்ருஸிம்ஹ மம தேஹி கராவலம்பம் பொருள்: பாற்கடலில் வசிப்பவனே, சக்ரபாணியே, ஆதிசேஷனின் ரத்தினங்களால் அலங்கரிக்கப்பட்ட புண்ணிய மூர்த்தியே, யோகிகளின் தலைவனே, நிரந்தரமான புகலிடமே, பவக்கடலைக் கடக்கும் தோணியே! லக்ஷ்மி நரசிம்மரே, எனக்கு உமது கரம் கொடுத்து (கராவலம்பம்) ஆதரிக்க வேண்டும். இன்று, *புதன்கிழமை*
🔍ஜோதிட உலகம் 🌍 - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🔍ஜோதிட உலகம் 🌍 #📅பஞ்சாங்கம்✨ ஏன் மோதிரம் அணியக்கூடாது?* நடுவிரலில் மோதிரம் அணியக்கூடாது என்பதற்கு சில காரணங்கள் கூறப்படுகின்றன. சாஸ்திரப் பிரகாரம் நடுவிரலில் பெரும்பாலும் மோதிரம் அணிவதில்லை. மோதிரத்தின் தங்கம் சூரியனைத் குறிக்கிறது. நடுவிரல் சனி கிரகத்திற்கு சொந்தமானது. சூரியனும் சனியும் எதிரிகளாக இருப்பதால் நடுவிரலில் மோதிரம் அணிவது தவறான பாதிப்புகளை ஏற்படுத்தும். சூரியன் சூடான கிரகம். சனியோ குளிர்ச்சியானது. சூரியன் வலிமை நன்மதிப்பு பலம் மற்றும் மரியாதையை குறிக்கிறது. சனி கிரகமோ விடாமுயற்சி மற்றும் கட்டுப்பாட்டை குறிக்கிறது. சனி மற்றும் சூரியனின் எதிரெதிர் சக்தியால் நடுவிரலில் மோதிரம் அணிவதால் பணக்கஷ்டம் மற்றும் வேலையில் பல பிரச்னைகள் ஏற்படும். ஜோசியம் படி நடுவிரலில் மோதிரம் அணிவதால் தந்தை மகன் இருவருக்குமிடையே பிரச்னைகள் ஏற்படும் என்று நம்பப்படுகிறது. மேலும் இப்படி அணிபவர்களுக்கு தன்னம்பிக்கை குறையும். நடுவிரலில் மோதிரம் அணிபவர்களுக்கு கணவன் மனைவி இடையே நல்ல புரிதல் இருக்காது. எதிரெதிர் சக்திகளை கொண்டதை விரலில் அணிந்தால் இன்னல்களே ஏற்படும். ஆகவே நடுவிரலில் மோதிரம் அணிவது தவிர்க்கப்படுகிறது.🌹
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat
#🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 தோஷ நிவர்த்தி தரும் பிரம்ம தேவன் திருத்தலம்!*🌹 புஷ்கரம் என்பது ஒரு புண்ணிய தலமாகும். இங்கு பிரம்மாவுக்கு தனிக் கோயில் உள்ளது. டெல்லி - மும்பை ரயில் மார்க்கத்தில் அஜ்மீர் ரயில் நிலையத்திலிருந்து 12 மைல் தொலைவில் இது அமைந்துள்ளது. இங்குள்ள புஷ்கரிணியில் நீராடி பிரம்மா கோயிலில் பிரம்மாவை பூஜித்தால் நம் தலையில் பிரம்மா எழுதிய எழுத்து, அதாவது ஜாதக விதிகள் என்று சொல்லக்கூடியவை மாறி விடுவதாக ஐதீகம். இந்த க்ஷேத்திரத்தில் தாமரைப் பூ விழுந்ததனால் புஷ்கரம் என்று இதற்கு பிரம்மா பெயரிட்டதாகப் புராண வரலாறு கூறுகின்றது. புஷ்கரம் என்றால் தாமரைப்பூ என்று அர்த்தம். இந்தப் புஷ்கரத்தில் பிரம்மா யாகம் செய்தபோது இடையில் நாரதர் புகுந்து கலகம் செய்தார். பிரம்மாவைப் பற்றிய சில பொய்ச் செய்திகளை அவருடைய மனைவியான சாவித்திரியின் காதில் ரகசியமாகப் போட்டு கலகமூட்ட, சாவித்திரி அந்தப் பொய்களை உண்மை என்று நம்பி, பிரம்மாவிடம் கோபித்துக் கொண்டு யாகத்திலிருந்து எழுந்து சென்றார். யாகம் செய்யும்போது மனைவி இல்லாமல் யாகம் செய்யக் கூடாது என்ற ஒரு விதி இருப்பதால் பிரம்மா, கோப குலத்தைச் சேர்ந்த வேறொரு கன்னிகையைத் திருமணம் செய்து அவளுக்கு காயத்ரி என்று பெயர் சூட்டி யாகத்தைத் தொடர்ந்தார். இதைக் கண்ட சாவித்திரி பொங்கி எழுந்து பிரம்மா உள்ளிட்ட மும்மூர்த்திகளுக்கும் தேவர்களுக்கும் சாபம் இட்டார். சாவித்திரி சபித்ததால் பிரம்மாவுக்கு இத்தலத்தை தவிர, வேறு எந்த இடத்திலும் கோயில் இல்லை என்பது புராண வரலாறு. சிம்ம ராசிக்காரர்கள் இந்தக் கோயிலுக்கு ஒரு முறையாவது சென்று வருதல் நலம். ஜாதகத்தில் குரு நீசம், அஸ்தமனம், பகை பெற்று இருப்பவர்களும் இங்கு ஒரு முறை சென்று இத்தல புஷ்கரணியில் நீராடி, பிரம்மாவை வழிபாடு செய்து வந்தால் குரு தோஷம் நீங்கப் பெற்று நலமுடன் வாழலாம் என்பது பலரது நம்பிக்கை.🌹
🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 - ShareChat
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 நவக்கிரகஆலயங்களையும் . ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் !!! ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட கால அட்டவணை படி உரிய வழி தடங்களில் பயணம் செய்து ஒன்பது நவக்கிரக ஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து அருள் பெற வேண்டுகிறோம். 1, திங்களூர் (சந்திரன்): தரிசனம் நேரம் :1மணி நேரம் காலை 6மணி ஒன்பது நவகிரக ஆலயங்களில் முதலில் ஆரம்பிக்கும் வேண்டியது திங்களூர்தான். நீங்கள் பேருந்தில் செல்ல விரும்பினால் கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திங்களூரை சுமார் 1 மணி நேர நேரத்தில் அடைந்து விட முடியும். இதற்கு சரியாக காலை 5.00 மணிக்கெல்லாம் கும்பகோணத்திலிருந்து நீங்கள் கிளம்ப வேண்டும். பின்னர் திங்களூர் கைலாசநாதர் கோயிலில் சுவாமி தரிசனத்தை ஒரு மணி நேரத்திற்குள் முடித்துக்கொண்டு 7 மணிக்கு ஆலங்குடி கிளம்பலாம். 2, ஆலங்குடி (குரு) : தரிசனம் நேரம்:1மணி நேரம் காலை 7.30மணி ஆலங்குடியை 30 நிமிடத்தில் அடைந்து விடலாம். பின்னர் ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் ஒரு மணி நேரத்திற்குள் சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 8.30 மணியளவில் கும்பகோணம் வழியாக திருநாகேஸ்வரம் கிளம்பலாம் காலை 8.30 மணிக்குள் இருந்து 9.00 மணிக்குள் காலை உணவை முடித்து கொள்ளலாம் 3, திருநாகேஸ்வரம் (ராகு) : தரிசனம் நேரம்:1மணி நேரம் காலை 9.30 கும்பகோணத்திற்கு வெகு அருகிலேயே 6 கிலோமீட்டர் தொலைவில் திருநாகேஸ்வரம் அமைந்திருப்பதால் 10 அல்லது 15 நிமிடங்களில், 10.00 மணியளவில் திருநாகேஸ்வரம் ராகு கோயிலை அடைந்து விட முடியும். நாகநாதசுவாமி பெரிய கோயில் என்பதால் தரிசனம் செய்து முடிக்க ஒரு மணி நேரம் ஆகும். பின்னர் கும்பகோணம் வழியாக செல்ல 21 கி.மீ தொலைவில் உள்ள சூரியனார் ஆலயம் செல்ல 10.30க்கு புறப்பட்டு 30 நிமிடத்தில் சென்று விடலாம். 4, சூரியனார் கோவில் (சூரியன்) : தரிசனம் நேரம்:1மணி நேரம் மதியம் 11.00மணி நீங்கள் 11.00 மணிக்கெல்லாம் சூரியனார் கோவிலை அடைந்து விடலாம். சூரியனார் கோவிலில் உள்ள சிவசூரியநாராயண கோவில் மற்ற நவகிரக கோயில்களை போல் அல்லாமல் சூரியனை முதன்மையாக கொண்டு நவக்கிரகங்களுக்கென தனித்து அமைந்த கோயில் எ‌ன்ற சிறப்பை பெற்றுள்ளது. இங்கு சூரிய பகவானை தரிசித்து முடித்தவுடன் 12.00 மணிக்கெல்லாம் கஞ்சனூர் கிளம்ப வேண்டும். 5, கஞ்சனூர் (சுக்கிரன்) : தரிசனம் நேரம்:1மணி நேரம் மதியம் 12.15 சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவிலேயே அமைந்திருப்பதால் மூலமாக 15 நிமிடங்களில் கஞ்சனூரை அடைந்து விடலாம். எனவே 12.15மணிக்கே உங்களால் அக்னீஸ்வரர் ஸ்வாமி கோவிலுக்கு சென்று விட முடியும். அதோடு 1.15 மணியளவில் கோயில் நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால் ஒரு மணி நேரத்திற்குள்ளாக சுவாமி தரிசனத்தை முடித்துக்கொள்ளவேண்டும். 6, வைத்தீஸ்வரன் கோயில் (செவ்வாய்) : தரிசனம் நேரம் :1மணி நேரம் மாலை 4மணி நவகிரக கோயில்கள் அனைத்திலுமே 1.15 மணிக்கு நடை சாத்தப்பட்டால் பின்பு 4 மணிக்கே கோயில் கதவுகள் திறக்கப்படும். எனவே 1.30 மணிக்கு கஞ்சனூரிலிருந்து மயிலாடுதுறை 20 கிலோமீட்டர் தொலைவிலுள்ள மயிலாடுதுறையை 2.மணிக்கெல்லாம் அடைந்து விடலாம். மயிலாடுதுறையிலேயே மதிய உணவை முடித்துக்கொண்டு ஆற அமர 3.00 மணியளவில் கிளம்பினால் கூட 15 கிலோமீட்டர் தூரமுள்ள வைத்தீஸ்வரன் கோயிலை 3.30 மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். பின்னர் கோயில் நடை திறந்து பின்பு சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு 5.00மணிக்கு வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து கிளம்பினால் சரியாக இருக்கும். 7, திருவெண்காடு (புதன்) : தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம் மாலை 5.15மணி வைத்தீஸ்வரன் கோயிலிலிருந்து 5.00 மணிக்கு கிளம்பினால் 16 கிலோமீட்டரில் அமைந்துள்ள திருவெண்காடு ஸ்தலத்தை 5.15மணிக்கு அடைந்துவிட முடியும். பின்னர் ஸ்வேதாரண்யேஸ்வரர் கோயிலில் வீற்றிருக்கும் புதன் பகவானையும், சிவபெருமானையும் 45 நிமிஷம் மணிநேரத்திற்குள் தரிசித்துவிட்டு 6.00மணிக்கு கிளம்ப வேண்டும். 8, கீழ்பெரும்பள்ளம் (கேது) : தரிசனம் நேரம்:45 நிமிடம் நேரம் மாலை 6.15மணி திருவெண்காட்டிலிருந்து 8 கிலோமீட்டர் தூரத்தில் அமையப்பெற்றுள்ள கேது பகவானின் கீழ்பெரும்பள்ளம் ஸ்தலத்தை 15 நிமிடங்களில் 6.15 அடைந்து விடலாம். ஜாதகத்தில் தவறான இடத்தில் கேது இருப்பதால் தோஷம் அடைந்த மக்கள், அதற்கு பரிகாரம் செய்ய இந்த கோயிலுக்கு வருகிறார்கள்.45 நிமிஷம் நேரத்திற்குள் தரிசனம் செய்து விட்டு 7.00மணிக்கு திருநள்ளாறு புறப்படலாம் 9, திருநள்ளாறு (சனி) : தரிசனம் நேரம்:1மணி நேரம் இரவு 8.00மணி நவகிரக ஸ்தலங்களின் சுற்றுலாவில் நீங்கள் இறுதியாக செல்லவிருக்கும் இடம் சனி பகவான் வீற்றிருக்கும் திருநள்ளாறு ஸ்தலம். கீழ்பெரும்பள்ளத்திலிருந்து சரியாக 7.00, மணிக்கு புறப்பட்டால் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திருநள்ளாறு ஸ்தலத்தை திருக்கடையூர், காரைக்கால் வழியாக ஒரு மணி நேரத்திற்குள் வேகம்மாக சென்றால் 8.00மணிக்கெல்லாம் அடைந்து விட முடியும். அதன் பின்னர் ஸ்ரீ தர்பாரன்யேசுவரர் திருக்கோவிலில் சனி பகவானையும்,e சிவபெருமானையும் ஒரு மணிநேரம் தரிசிக்கலாம். 9.30மணிக்கு திருநள்ளாறு ஆலயத்தோடு ஒன்பது (நவ) கிரகங்களையும் தரிசனம் செய்த மிகப்பெரிய மனநிறைவோடு பூர்வஜென்மh பாக்கியமாக இறைவனின் அருள் பெற்று புறப்படலாம். *நன்றி.*
திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 அழகர் கோவில் மலைப் பாதையில் அமைந்துள்ள மாளிகைபாறை கருப்பசாமி கோவிலும், அங்கு அருள்வாக்கு சொல்லி வந்த பாண்டி பூசாரி அவர்களும் பக்தர்களிடையே மிகவும் பிரபலமானவர்கள். மாளிகைபாறை கருப்பசாமிக்கு மிகவும் நெருக்கமான பக்தராகவும், அவர் மூலமாகப் பக்தர்களின் குறைகளைத் தீர்த்து வைத்தவராகவும் பாண்டி பூசாரி அறியப்படுகிறார். பாண்டி பூசாரி மற்றும் அருள்வாக்கு: அசைக்க முடியாத நம்பிக்கை: மாளிகைபாறையில் கருப்பசாமிக்கு பூசை செய்யும் போது, பாண்டி பூசாரி மீது சுவாமி இறங்கி (அருள் வந்து) சொல்லும் வாக்குகள் அப்படியே நடக்கும் என்பது மக்களின் நம்பிக்கை. குறைகளைத் தீர்த்தல்: குடும்பப் பிரச்சினைகள், தீராத நோய்கள், செய்வினை கோளாறுகள் அல்லது தொழில் நஷ்டம் என வருந்துபவர்கள் பாண்டி பூசாரியின் அருள்வாக்கை நம்பி தொலைதூரத்தில் இருந்தும் வருவார்கள். மிரட்டும் ஆக்ரோஷம்: கருப்பசாமி ஆக்ரோஷமான தெய்வம் என்பதால், பாண்டி பூசாரி அருள்வாக்கு சொல்லும் போது அந்த வீரம் அவர் பேச்சிலும் செயலிலும் வெளிப்படும். சமூக வலைத்தளங்களின் தாக்கம்: சமீப காலங்களில் பாண்டி பூசாரி அருள்வாக்கு சொல்லும் வீடியோக்கள் இணையதளங்களில் (YouTube, Instagram) வைரலாகி, இளைஞர்களிடையே மாளிகைபாறை கருப்பசாமி பற்றிய ஈர்ப்பை அதிகப்படுத்தியது. வழிபாட்டு சிறப்புகள்: சுருட்டு மற்றும் வேஷ்டி: பாண்டி பூசாரி சுவாமிக்குச் சுருட்டு ஏற்றி வைத்து, கருப்பு அல்லது வெள்ளை வேஷ்டி அணிந்து சாமியாடும் விதம் தனித்துவமானது. பதினெட்டாம் படி தொடர்பு: அழகர் கோவில் பதினெட்டாம் படி கருப்பசாமியின் ஒரு அம்சமாகவே மாளிகைபாறை கருப்பசாமி பார்க்கப்படுகிறார். இயற்கை சூழல்: அடர்ந்த காடு மற்றும் மலைப் பாறைகளுக்கு இடையே இந்தக் கோவில் அமைந்துள்ளதால், அங்குச் சென்று பூசாரியின் முன்னிலையில் சுவாமி தரிசனம் செய்வது ஒரு ஆன்மீக அனுபவமாக அமையும். முக்கிய குறிப்பு: தற்போது பாண்டி பூசாரி அவர்கள் காலமானாலும், அவர் அந்த இடத்திற்குச் சேர்த்த பெருமையும், மாளிகைபாறை கருப்பசாமி மீது அவர் ஏற்படுத்திய பக்தியும் இன்றும் குறையாமல் தொடர்கிறது. இப்போது அவரது வாரிசுகள் அல்லது மற்ற பூசாரிகள் அந்த வழிபாட்டு முறைகளைத் தொடர்ந்து வருகின்றனர் . . Follow more updates:- லந்தக்கோட்டை கருப்பசாமி . . #🖌பக்தி ஓவியம்🎨🙏 #பக்தி #🙇‍♀️பக்தி வீடியோஸ்🛐 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - o( Oesmmmed .8= ٤ 5 o( Oesmmmed .8= ٤ 5 - ShareChat
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #பக்தி #🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 ஒருநாள் மட்டுமே திறக்கப்படும் ரகசியக்கோயில்!* காஞ்சிபுரத்தின் 'பிறவாதீசுவரர்' மர்மம்! ‘நகரேஷு காஞ்சி’ என்று மகாகவி காளிதாசனால் போற்றப்பட்ட பெருமை உடைய நகரம் காஞ்சிபுரம். நகரங்களில் சிறந்தது காஞ்சி என்பது இதன் பொருள். தற்போது காஞ்சிபுரம் என்றழைக்கப்படும் இந்த நகரம் முற்காலத்தில் கச்சியம்பதி, சிவகாஞ்சி, விஷ்ணுகாஞ்சி, ஜைன காஞ்சி, புத்த காஞ்சி, திருஅத்தியூர், பல்லவேந்திரபுரி, காமபீடம், காமக்கோட்டம், பிரமபுரம், ஆதிபீடம், சிவபுரம், சத்யவிதரக்ஷேத்ரம் என பல பெயர்களால் அழைக்கப்பட்டுள்ளது. பல்லவ மன்னர்கள் கி.பி.300 முதல் கி.பி.850 வரை, அதாவது மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை காஞ்சிபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்தார்கள். இலங்கையை அடுத்த மணிபல்லவம் என்ற தீவிலிருந்து வந்த இவர்களுடைய கொடி சிம்மக் கொடியாகும். காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னர்களால் கட்டப்பட்ட ஏராளமான கற்றளி வகைக் கோயில்கள் அமைந்துள்ளன. இவற்றில் சிவகாஞ்சி பகுதியில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில் மற்றும் வைகுண்டப் பெருமாள் கோயில் ஆகிய இரண்டு கோயில்களும் உலகப்பிரசித்தி பெற்ற கலைநயமிக்க அபூர்வமான கோயில்களாகும். இதைத் தவிர, பலரால் அதிகம் அறியப்படாமல் ஆறு அபூர்வமான கோயில்கள் காஞ்சிபுரம் நகருக்குள்ளேயே பெரிய காஞ்சிபுரம் என தற்போது அழைக்கப்படும் சிவகாஞ்சி பகுதியிலேயே அமைந்துள்ளன என்பது வியப்பான உண்மை. கலைநயமிக்க இத்தகைய கோயில்களில் ஒன்றுதான் பிறவாத்தானேசுவரர் (பிறவாத்தானம்) என்று அறியப்படும் அருள்மிகு பிறவாதீசுவரர் கோயில். இக்கோயில் ஒவ்வொரு வருடமும் மகாசிவராத்திரி அன்று மட்டுமே திறக்கப்படுகிறது. காஞ்சிபுரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான சிவபக்தர்கள் மகாசிவராத்திரி அன்று இக்கோயிலுக்கு வருகை தந்து ஈசனை வழிபடுகிறார்கள். காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பிய இராஜசிம்ம பல்லவனால் (கி.பி.700 முதல் கி.பி.728 வரை ஆட்சியாண்டு) அமைக்கப்பட்ட ஒரு ஆலயம் ஸ்ரீபிறவாதீசுவரர் ஆலயமாகும். இந்த ஆலயமும் மணற்கற்களைக் (Sand Stone) கொண்டு கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது. இரண்டு அடுக்கு விமானத்தை உடைய இக்கோயிலின் கருவறை எண்கோண வடிவத்தில் காட்சி தருகிறது. முகமண்டபம் செவ்வக வடிவத்தில் அமைந்துள்ளது. வாமதேவ முனிவர் மறுபிறப்பிற்கு பயந்து பிறவாமை வரத்தினை அளிக்குமாறு தாயின் கருவில் இருக்கும்போதே இறைவனை வேண்டியதாகவும், இறைவன் கருவிற்குள் இருக்கும் வாமதேவ முனிவருக்குக் காட்சி தந்து காஞ்சிக்கு வந்து எம்மை பூஜித்தால் பிறவி அணுகாது என்று அருளியதாக வரலாறு. வாமதேவரும் பூமியில் பிறந்து பின்னர் காஞ்சிக்குச் சென்று லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றதாக தல வரலாறு. இதனாலேயே இக்கோயில் ஈசன் பிறவாதீசுவார் என்ற திருநாமம் பெற்றார். கருவறையில் லிங்கம் காட்சி தர, பின்புறச் சுவற்றில் சோமாஸ்கந்தர், பிரம்மா விஷ்ணுவோடு காட்சி தருகிறார். தேவ கோட்டங்களில் தெற்கில் தட்சிணாமூர்த்தியும், கிழக்கில் விஷ்ணுவும், வடக்கில் பிரம்மனும் அமைந்துள்ளனர். வெளிப்புறச் சுவர்களில் துர்கை, கஜலட்சுமி முதலான தெய்வங்களில் சிற்பங்கள் காணப்படுகின்றன. பல்லவ மன்னன் இராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் கட்டிய முதல் கோயில் இதுவெனவும் கூறப்படுகிறது. இக்கோயில் கம்மாளத் தெருவில் பச்சைவண்ணர் கோயிலுக்கு அருகில் அமைந்துள்ளது. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கே சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.🌹
🖌பக்தி ஓவியம்🎨🙏 - ShareChat
#🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 மருந்தாகி... மண்ணிவாக்கம் மண்ணீஸ்வரர் கோவில்* 108 தொண்டை மண்டல சிவாலயங்களில் ஒன்றான மண்ணீஸ்வரர் திருக்கோவிலை இக்கட்டுரையில் தரிசிக்கலாம் வாருங்கள். முதலாம் குலோத்துங்கன் 11ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தை எழுப்பியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமையான இந்த சிவாலயத்திற்கு விஜய நகர மன்னர்கள் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இது வரலாற்றுச் செய்தி. புராணச் செய்தி கூறுவது யாதெனில், காடாக இருந்த இந்த இடத்தில் ஒரு பெரிய வன்னி மரத்தின் வேரினை வேடன் ஒருவன் நோண்டிய போது அதன் அடியில் சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டதாம். அதை வெளியில் எடுக்க முயன்ற போது அங்கேயே கோவில் கொள்ள விரும்புவதாக அசரீரி ஒலித்ததாம். அதன்படி இங்கே இந்த சிவாலயத்தை பிரம்மபிரான் முன்னிலையில் எழுப்பியிருக்கிறார்கள் தேவர்கள். மண்ணுக்குள்ளே இருந்து சுயம்புவாகக் கிடைத்த லிங்கமாதலால் இவருக்கு மண்ணீஸ்வரர் என்ற நாமம் உண்டாகியிருக்கிறது. தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்த போது, இந்தக் கோவிலில் வந்து ஒரு மண்டலம் தங்கியிருந்து சிவபூஜை செய்தால் தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று பிரம்மதேவர் அறிவுறுத்தியதன் பேரில் இந்திரனும் அவ்வாறே செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டிருக்கிறான். அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவர் இந்த மண்ணீஸ்வரர். இத்தலத்தில் மண்ணே மருந்தாக உள்ளதாக நம்பப்படுகிறது. பதஞ்சலி மகரிஷியின் சீடர் பளிங்கு மகரிஷி இங்கு ஜீவ சமாதி அடைந்து சிவனோடு ஜோதி வடிவமாக ஒன்றிணைந்திருக்கிறார். கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு கோபுரம் இல்லை. நுழைவு வாயிலைக் கடந்து பலிபீடம், கொடிமரம் தாண்டி நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். அவரே நம்மை ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறார். வழக்கமாக சிவாலயங்களில் நந்தியம் பெருமானின் திருவுருவச் சிலை சிவபெருமானை நோக்கிய வண்ணம் தானே இருக்கும். ஆனாலும் இக்கோவிலில் நந்தியம்பெருமாள் சிவனுக்கு எதிர் புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார். உள்ளே வரும் பக்தர்களை வரவேற்றுக் காக்கும் விதமாக அமைந்திருக்கும் நந்தி தேவரை வேறெந்த சிவாலயத்திலும் தரிசிப்பது அரிது. அவரை வணங்கி அர்த்த மண்டபத்தில் பிரவேசித்தால் துவார கணபதியும் துவார முருகரும் காட்சி தருகிறார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று மகா மண்டபத்தில் பிரவேசிக்கலாம். விநாயகரும், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானும் இருப் புறங்களிலும் நிற்க, கருவறைக்குள் நான்கு அடி உயரத்தில் சுயம்புலிங்கமாக மண்ணீஸ்வரர் அருள் பாலிக்கிறார். இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கி அருளிய மண்ணீஸ்வரப் பெருமானை மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டு, மகா மண்டபத்தில் உள்ள சிவகாமி சமேத ஆடலரசரையும் வணங்கிவிட்டு வெளியில் வந்தால் பிரகாரத்தில் வசந்த மண்டபம் உள்ளது. நாகத்தை கையில் கொண்டுள்ள தக்ஷிணாமூர்த்தியும் நர்த்தன கணபதியும் கருவறை சுவற்றில் இடப்புறத்தில் காட்சியளிக்கிறார்கள். பிரகாரத்தில் மிகச்சரியாக மண்ணீஸ்வரரின் பின்புறத்தில் (அதாவது வழக்கமாக லிங்கோத்பவர் வீற்றிருக்கும் இடத்தில்) மகாவிஷ்ணுவின் திருவுருவச் சிலை உள்ளது இக்கோவிலின் மற்றொரு சிறப்பு. பிரம்மதேவரும் விஷ்ணு துர்க்கையும் கருவறை சுவற்றின் வலப்புறத்தில் வீற்றிருக்கிறார்கள். பிரகாரத்தில் மகா கணபதிக்கும் பைரவருக்கும் சந்ததிகள் உள்ளன. தொடர்ந்து நவகிரகங்களும், சூரியர், சந்திரரும் காட்சி தருகிறார்கள். பிரகாரத்தை ஒரு வலம் வந்து முடித்தால் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறாள் மரகதாம்பிகை. கலைவாணியின் ரூபமாக அழகோவியமாக நின்ற கோலத்தில் அம்மை அருள் பாலிக்கிறாள். இக்கோவிலின் தலவிருட்சம் வன்னி மரம் ஆகும். கோவிலுக்கு அழகிய குளம் ஒன்றும் சிறிய கோசாலை ஒன்றும் உள்ளது. பிரம்மாண்டமான அரச மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் கருவறையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுவது இக்கோவிலைப் பற்றிய மற்றொரு சுவாரசிய தகவலாகும். பிரம்மஹத்தி தோஷம் நாக தோஷம் போன்ற தீவிரமான தோஷங்கள் நீங்க அப்பனும், கல்வியில் சிறந்து விளங்க அம்மையும் இக்கோவிலில் அருள் செய்கிறார்கள். இப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த மரகதாம்பிகை உடனுறை மண்ணீஸ்வரர் திருத்தலம் அமைந்திருப்பது நம் சென்னையில் தான். தாம்பரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவிலும் வண்டலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரண்டே கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள மண்ணிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தான் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மோற்சவம் பிரதோஷம் என எல்லா விழாக்களும் சிறப்பாக இக்கோவிலில் நடைபெறுகின்றன. இந்தக் கோவிலின் பின்னால் கோமளவல்லி தாயார் உடனுறை மணிவண்ணப் பெருமாள் கோவிலும் உள்ளது. அவசியம் போய் வாருங்கள். அம்மையப்பரின் அருள் பெறுங்கள்.🍁
🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 - ShareChat
#பக்தி #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏻♥️சிவன் பக்தி வீடியோஸ்♥️🙏🏻 #🖌பக்தி ஓவியம்🎨🙏 சித்தர்கள் வாழ்ந்த பச்சைமலை சிவன் கோவில்!* குரோம்பேட்டை பச்சைமலை சிவன் கோவில்18 சித்தர்கள் வாழ்ந்த ஒரு குகை கோவிலாகும். தாம்பரம் சானடோரியம் பேட்டையில் உள்ள இந்த கோவிலுக்கு ஜனவரி 2024 அன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூலவர் அத்திரி ஈஸ்வரர், அனுசுயா ஈஸ்வரி. கிழக்கு நோக்கிய நுழைவாயிலுடன் கூடிய கோவில் இது. அம்பாள் ஸ்ரீ அனுசுயா ஈஸ்வரி தனி சன்னிதியில் தெற்கு நோக்கி அபய வரத ஹஸ்தத்துடன் நின்ற கோலத்தில் காணப்படுகிறாள். கஜப்ருஷ்ட விமானம். இந்த மலையில் குறும்பர் இன மக்கள் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வசித்து வந்தனர். கற்கால கருவிகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த மலையில் மூலிகைகள் இருப்பதால் ஆங்கிலேயர்கள் உலகத்திலேயே முதல் காசநோய் மருத்துவமனையை இங்கு அமைத்தனர். தூய்மையான பகுதி என்பதால் சானடோரியம் என்ற பெயரை வைத்தனர் சானடோரியம் என்றால் தூய்மையான பகுதி என்று பொருள். குரோம்பேட்டில் குமரன் குன்றத்தில் முருகன் வீற்றிருக்க, திருநீர் மலையில் விஷ்ணுவுக்கு கோவில் இருக்க, நடுவில் குரோம்பேட்டை சிக்னலுக்கு அருகில் உள்ள பச்சை மலையில் மிகவும் பழமையான சித்தர்கள் வழிபட்ட சிவன் கோயில் உள்ளது. பல சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய இடம் இது. சஞ்சீவி உள்ளிட்ட அபூர்வமான மூலிகைகள் நிறைந்த மலை இது. பச்சை மலை அடிவாரத்தில் காச நோய்க்கான சித்த மருத்துவமனை ஒன்று 1928 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. சிவன் சன்னதிக்கு எதிர்ப்புறம் சிறிய பள்ளம் போன்ற இடத்தில் குகை போன்ற அமைப்பும் அதில் பாலாம்பிகை அம்மன் சன்னதியும் உள்ளது. வலம் வரும்போது விநாயகருக்கும், வள்ளி தெய்வானையுடன் முருகனுக்கும் தனி சன்னதி உள்ளது. இங்கு Abstract, சிவராத்திரி போன்ற தினங்கள் மிகவும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. இங்கு பச்சைமலை குறத்தி அம்மன் என்ற பெயரில் சிறிய ஆலயம் ஒன்றுள்ளது. மேலே 108 படிக்கட்டுகள் அமைந்த மலைப்பகுதியில் ஏறிச் சென்றால் அழகிய சிவன் கோவில் ஒன்றுள்ளது. சித்தர்கள் இந்த இடத்தில் நவபாஷாணத்தால் சிவலிங்கத்தை செய்து வைத்து பூஜை செய்ததாகவும் பிற்காலத்தில் சிலர் அதை திருடிச் சென்று விட்டதாகவும் கூறப்படுகிறது. மலை உச்சியில் கோவிலை சுற்றியுள்ள பகுதியில் வள்ளலார், சிவ வாக்கியர், ஆஞ்சநேயர், அத்திரி மகரிஷி, அகஸ்தியர், நாகர்கள் சந்நிதி, விநாயகர் மற்றும் சிவலிங்கம் ஆகியவை வானத்தை நோக்கி திறந்த வெளியில் காணப்படுகின்றன. இங்கு பதஞ்சலி முனிவர் பெயரில் தியான மண்டபம் ஒன்றுள்ளது. நாகங்கள் பூஜை செய்யும் பாதாள அம்மன் சிலை ஒன்றுள்ளது. சுயம்புவாக தோன்றி துர்கையின் உருவம் உருவான அதிசயம் நிறைந்தது இந்த பச்சை மலை சிவன் கோவில். கோவில் காலை நேரங்களில் 7 மணி முதல் 12 மணி வரை மாலை 4.30 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும். எப்படி அடைவது? கோவில் தாம்பரம் சானடோரியம் காசநோய் மருத்துவமனையின் பின்புறத்தில் பச்சை மலை என்ற சிறிய மலையில் உள்ளது. குரோம்பேட்டையில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்திலிருந்து 2.5 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.🌹
பக்தி - ShareChat
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #பக்தி #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🏾சனி பகவான் பகவான் தாக்கத்தைக் குறைக்கும் அற்புத சிவாலயம்!* நாகை மாவட்டம், மணல்மேடு அருகே இலுப்பைப்பட்டு எனும் தலத்தில் அமைந்துள்ளது மங்களநாயகி சமேத ஸ்ரீ நீலகண்டேசுவரர் திருக்கோயில். ஒரே தலத்தில் ஐந்து வெவ்வேறு பெயர்களுடன் கூடிய சிவமூர்த்தங்களைக் கொண்ட சிறப்பைப் பெற்றது இக்கோயில். இது தேவார திருத்தலங்களில் ஒன்றாகும். சிவனார் ஆலகால விஷத்தை பருகியபோது உமையம்மை சிவனாரின் கழுத்தை தனது கரங்களால் அழுத்தி விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்ததும், வனவாசத்தின்போது பஞ்சபாண்டவர்கள் இத்தல ஈசனை தரிசனம் செய்ததுமான சிறப்புகளைப் பெற்றது இந்த ஆலயம். அமுதத்தைப் பெற விரும்பிய தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர். அப்போது வெளிப்பட்ட ஆலகால விஷத்தைக் கண்ட இரு தரப்பினரும் அஞ்சி பின்வாங்கியதுடன் தங்கள் முயற்சியையும் கைவிட முனைந்தனர். அவர்களுக்கு ஏற்பட்ட பயத்தைப் போக்க விரும்பிய சிவபெருமான், அந்த விஷத்தை தானே பருகினார். இதனால் பதறிப்போன உமையம்மை சிவனாரின் கழுத்தை தனது கரங்களால் அழுத்தி அவ்விஷத்தை தொண்டையிலேயே நிற்கச் செய்தார். விஷத்தைத் தாங்கிய அவரது கழுத்துப் பகுதி நீல நிறமாக இருந்தமையால், ஈசனுக்கு, ‘நீலகண்டன்’ என்ற பெயர் ஏற்பட்டது. இரண்டு விநாயகர் சன்னிதிகள், ஐந்து சுவாமி சன்னிதிகள், இரண்டு அம்பாள் சன்னிதிகள், மூன்று தீர்த்தங்களைக் கொண்டது இக்கோவில். ஈசனுக்கு நீலகண்டேசுவரர், படிக்கரைநாதர், மகதீசுவரர், பரமேசுவரர், முத்தீசுவரர் ஆகிய சன்னிதிகள் உள்ளன. அம்பாளுக்கு அமுதகரவள்ளி மற்றும் மங்களநாயகி எனும் பெயரில் சன்னிதிகள் காணப்படுகின்றன. தல விருட்சம் தெய்வவிருப்பை எனப்படும் இலுப்பை மரம். தீர்த்தம் பிரம்ம தீர்த்தம், அமிர்த தீர்த்தம் மற்றும் வடகாவிரி எனப்படும் கொள்ளிடம் ஆகியவையாகும். இத்தல இறைவனை இந்திரன், சனி பகவான், பாண்டவர்கள், உரோமச முனிவர், அருணகிரிநாதர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகியோர் வழிபட்டு பேறு பெற்றுள்ளனர். வனவாசத்தில் இருந்த பாண்டவர்கள் சிவ பூஜை செய்ய விரும்பி சிவலிங்கத்தைத் தேடினர். எங்கு தேடியும் கிடைக்காமல் போக உரோமச முனிவரின் வழிகாட்டலில் ஒரு இலுப்பை மரத்தின் கீழ் அமர்ந்து, இலுப்பைக் காயில் விளக்கேற்றி தங்கள் சிரமத்தை குறைத்தருளும்படி வழிபட்டு வந்தனர். அவர்களின் வேண்டுதலுக்கிணங்க, பாண்டவர்கள் ஐந்து பேருக்கு இறைவன் தனித்தனியாக காட்சி தந்தார். பிராகாரத்தில் இருந்து ஐந்து அடி உயரத்தில் ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன. அதற்கான படிகள் வழியே செல்ல நேரெதிரில் தருமனால் பூஜிக்கப்பட்டவரும், ஆலகால விஷத்தை உண்டவருமான நீலகண்டேசுவரர் காட்சி தருகிறார். மூலவர் சன்னிதிக்கு இடதுபுறத்தில் ஆலயக் கிணறு அமைந்துள்ளது. அதனையொட்டி சகாதேவன் பூஜித்த முக்தீசுவரர் சன்னிதி தென்முகமாக உள்ளது. சாஸ்திரம், ஜோதிடம் கற்பவர்கள் இவரை வழிபட்டால் நலம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இத்தல ஈசனை வேண்டிக்கொண்டால் சனியின் ஆதிக்கம் குறையும், பணியில் சிறப்பிடம் பெறலாம் என்ற நம்பிக்கை நிலவுகிறது.🌹 #சனி பகவான்🙏
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat