
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🔍ஜோதிட உலகம் 🌍 அந்தணரும்... பிளவுபட்ட இலையும்! 🍚
ஒரு ஊரில் ஒரு ஏழை அந்தணர் இருந்தார். அவர் மிகவும் நேர்மையானவர், எந்நேரமும் இறைவனின் திருநாமத்தைச் சொல்லிக் கொண்டிருப்பார். அவர் யாரிடமும் சென்று உதவி கேட்டதே இல்லை. "எல்லாவற்றையும் அந்தப் பரம்பொருள் கவனித்துக் கொள்வார்" என்பதே அவர் திண்ணமான நம்பிக்கை.
ஒருநாள் அவர் வீட்டில் சமைக்க ஒரு பருக்கை அரிசி கூட இல்லை. பசி வாட்டியது. அவர் அமைதியாகத் தன் பூஜையறையில் அமர்ந்து ஒரு சுலோகத்தை எழுதினார். அதில், "இறைவா! நீயே எல்லாவற்றையும் தருபவன், ஆனால் என்னிடம் இப்போது எதுவும் இல்லை. என் நம்பிக்கையில் ஏதோ பிழை இருக்கிறதோ?" என்று எழுதி, அந்த ஓலையில் ஒரு சிறிய கோடு கிழித்தார் (அதாவது அவர் நம்பிக்கை லேசாகத் தளர்ந்தது போல).
சிறிது நேரத்தில், ஒரு சிறுவன் அவர் வீட்டு வாசலில் ஒரு பெரிய மூட்டையுடன் வந்தான். அதில் தானியங்கள், பழங்கள், இனிப்புகள் என அனைத்தும் இருந்தன. அந்தணரின் மனைவி வியந்து போய், "யாரப்பா நீ? இதை யார் கொடுத்தது?" என்று கேட்டார்.
சிறுவன் சொன்னான், "இதோ உன் கணவர்தான் இதைத் தந்து விடச் சொன்னார். ஆனால் கொடுக்கும்போது அவர் என் முதுகில் லேசாகக் கிள்ளிவிட்டார்" என்று கூறிவிட்டு மறைந்தான்.
அந்தணர் வந்ததும் ஆச்சரியப்பட்டார். சிறுவனின் முதுகில் தழும்பைக் கண்டதும் அவர் கதறி அழுதார். தான் ஓலையில் கிழித்த அந்தக் கோடுதான், அந்தப் பரம்பொருளின் முதுகில் வலியாகப் பட்டிருக்கிறது என்பதை உணர்ந்தார். "நான் கேட்காமலேயே தரக் காத்திருக்கும் உன்னை சந்தேகித்து விட்டேனே!" என்று வருந்தினார்.
"நீ எப்போது யாரிடமும் எதையும் கேட்பதில்லை என்று உறுதியெடுக்கிறாயோ, அப்போது அந்தப் பரம்பொருளே உனக்கு வேண்டியதைச் சுமந்து வருவார்!" 🙏✨
#நம்பிக்கை
#பரம்பொருள்
#கேட்காமல்வருவார்
#சித்தர்நெறி
#இந்து_சமயவகுப்பு
*அழகருக்கு தண்ணீர் பீச்சும் தோப்பறையின் ரகசியம்* 🍁
தெற்கு பகுதியில் நடக்கும் சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகர் பக்தர்கள் அனைவருமே விரதம் இருந்து நேர்த்திக்கடனாக கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீர் பீச்சு அடிப்பதை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றார்கள்.
மதுரையின் சித்திரை திருவிழா...
வெறும் வார்த்தைகளால் மட்டும் சொல்லி விட முடியாது. வரலாற்று சிறப்புமிக்க திருவிழா என்றுதான் சொல்ல வேண்டும். ஏனென்றால் நாயக்கர் மற்றும் பாண்டிய மன்னர்களை அடித்தளமாக வைத்து உருவாக்கப்பட்ட இத்திருவிழா மதுரை மண்ணில் இன்றும் வேரூன்றி நிற்கின்றது.
15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழா சைவர்கள் மற்றும் வைணவர்களை நட்புறச் செய்யும் திருவிழா. மதுரையின் வடக்கே சுமார் பத்து நாட்கள் மீனாட்சியின் திருவிழா கொடிகட்டி பறக்க, தெற்கு பகுதியில் அடுத்த ஐந்து நாட்களுக்கு கள்ளழகர் குலுங்க குலுங்க என்று மதுரையே குலுங்கும்.. இதில் குறிப்பாக தெற்கு பகுதியில் நடக்கும் சித்திரை திருவிழாவிற்காக கள்ளழகர் பக்தர்கள் அனைவருமே விரதம் இருந்து நேர்த்திக்கடனாக கள்ளழகர் வேடம் அணிந்து தண்ணீர் பீச்சு அடிப்பதை பரம்பரை பரம்பரையாக செய்து வருகின்றார்கள்.
இத்தண்ணீர் பீச்சி அடிப்பதற்காக அக்காலகட்டத்தில் இருந்தே அதாவது மன்னர்கள் காலத்தில் இருந்து ஆட்டுத் தோப்பறைகள் மூலமாக கள்ளழகருக்கு தண்ணீர் பீச்சி அடிப்பது என்பது வழக்கமாக இருந்து வருகின்றது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இக்காலகட்டத்திலும் கூட ஆட்டுத் தோப்பறைகளை சுமார் மூன்று மாதங்களுக்கு முன்பே விருதுநகர் மாவட்டத்தில் உள்ள காரியாபட்டியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் சித்திரைத் திருவிழா நாளில் மட்டும் தயார் செய்கின்றார்கள்.
அதனை திருவிழாவிற்கு 10 நாட்களுக்கு முன்பு அதாவது தெற்கு பகுதியில் நடைபெறும் திருவிழாவிற்காக வடபகுதியில் உள்ள தேர்முட்டி சாலையில் இரவு பகலாக மதுரையிலேயே தங்கி இருந்து ஆட்டுத் தோப்பறைகள் விற்பனை செய்ய தொடங்குவார்கள்.மூன்றாவது தலைமுறையாக இத்தொழிலை செய்து வரும் நாங்கள் மூன்று மாதங்களுக்கு முன்பே கள்ளழகருக்கு வேடமணியும் பக்தர்கள் போல் நாங்களும் விரதம் இருந்து மாலை அணிந்து இத்தொழிலை செய்ய தொடங்குவோம். பாட்டன் முப்பாட்டன் காலத்தில் இருந்து சக்தி வாக்காக இப்படி ஒரு வாக்கு கொடுக்கப்பட்டதாகவும், பாரம்பரியத்தை காக்கவும் இத்தொழிலை செய்து வருவதாகவும் வரும் காலங்களில் எவ்வளவு தான் எங்கள் கிராமத்துடைய அடுத்த தலைமுறைகள் படித்திருந்தாலும் அவர்களும் இத்தொழிலை சித்திரை மாதத்தில் மட்டும் கண்டிப்பாக செய்வார்கள் என்கின்றார் தங்கராசு...
சரி!.. ஒரு கிராமமே இந்த ஆட்டு தோப்பறைகளை தயார் செய்து விற்பனை செய்கின்றார்கள். ஆனால் இந்த ஆட்டு தோப்பறைகள் மூலமாக கள்ளழகருக்கு ஏன் தண்ணீர் தெளிக்கப்படுகின்றது. அக்காலகட்டத்தில் இருந்தே சித்திரை மாதத்தில் நடைபெறும் இத்திருவிழாவில் கடும் வெயிலின் தாக்கம் இருப்பதினாலும், அழகர் கோவிலில் இருந்து மதுரைக்கு புறப்பாடாகி வரும் வைகை ஆற்றில் இறங்கிய பின்பு கடும் கோபத்துடன் மீண்டும் அழகர் கோவிலுக்கு புறப்படுவதினால் அவரது கோபத்தை தணிக்கவும் மஞ்சள் தண்ணீர் பீச்சு அடிக்கப்படுவதாகவும் புராண கதைகளில் சொல்லப்படுகின்றது.
தவமாய் தவமிருந்து பிள்ளைகளை பெற்று எடுப்பது போல், மூன்று மாதங்கள் வெயில், மழையுடன் போராடி, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இருந்து ஆட்டுத்தோல்களை அவரவர் வசதிகளுக்கு ஏற்ப வாங்கி அதனை கடுக்காய், சுண்ணாம்பு போன்ற பதப்படுத்தும் பொருட்களை பயன்படுத்தி ஆட்டுத் தோள்களை பதப்படுத்தி ஆட்டு தோப்புரையாக தயார் செய்யும் இவர்கள் லாபம் இல்லாமல் வெறும் அழகரின் தொண்டுக்காக செய்கின்றார்கள்.
ஒவ்வொரு குடும்பத்திற்கு ஏற்றார் போல் 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரை வட்டிக்கு கடன் வாங்கி அதனை முதலீடு செய்து அதன் மூலமாக ஆட்டு தோப்புகளை தயார் செய்யும் எங்களுக்கு என்னவோ லாபம் என்பது இத்தொழியில் கிடைப்பதில்லை. அளவுக்காக மாலை பூக்களை பேரம் பேசாமல் வாங்கிச் செல்லும் இவர்கள் மூன்று மாதம் கஷ்டப்பட்டு செய்யும் ஆட்டுத் தோப்பறைகளை அடிமட்ட விலைக்கு கேட்கின்றார்கள். அதாவது ஒரு ஆட்டு தோப்பறையை 500 ரூபாய் தயார் செய்கின்றோம் என்று எடுத்துக் கொண்டால் அதற்கு எந்த ஒரு லாபமும் இல்லாமல் அதே 500 ரூபாய் தான் கூலியாக கிடைக்கின்றது. லாபமே இல்லாத ஒரு தொழிலை ஒவ்வொரு ஆண்டும் ஏன் செய்து வருகின்றோம் என்றால் அது நாங்கள் கள்ளழகாக செய்யக்கூடிய தொண்டு என்கின்றார் காமாட்சி...
இப்படி 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வாழக்கூடிய காரியாபட்டியில் சித்திரை மாதத்தில் நடைபெறும் கள்ளழகர் திருவிழாவிற்காக மட்டுமே இத்தொழிலை எந்த ஒரு லாபமும் இல்லாமல் செய்து வருகின்றார்கள் என்பதும் மற்ற நாட்களில் கூலி வேலைக்குச் சென்று தங்களது வாழ்க்கையை வழிநடத்தி செல்கின்றார்கள்.லாபமே இல்லாத ஒரு தொழிலை நான்கு மாதங்களாக செய்கிறார்கள் என்றால் அது சற்று நமக்கு வியப்பாகவும், ஆச்சரியமாகவும் இருக்கும். ஆனால் இவை அனைத்தும்
அந்த ஒரே ஒரு நபர் மதுரை கள்ளழகருக்குத்தான்என்று சொல்லும் பொழுது கள்ளழகரின் புகழ் ஓங்கி நிற்கச் செய்கின்றது. #madurai #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🤩ஜெய் ஸ்ரீ ராம்🙏
#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 வாழ்வருளும் ஆனந்த தாண்டவ தரிசனம்*
♦️ திருக்குற்றாலம் சித்திரசபையிலும், திருநெல்வேலி தாமிரசபையிலும், மதுரை வெள்ளிசபையிலும், சிதம்பரம் கனகசபையிலும், திருவாலங்காட்டில் ரத்னசபையில் நடராஜப் பெருமான் திருநடனம் புரிகிறார்.
♦️ நடராஜரின் பிரம்ம தாண்டவத்தை திருமுருகன்பூண்டியிலும், ஊர்த்வ தாண்டவத்தை அவிநாசியிலும், சுந்தர தாண்டவத்தை மதுரையிலும், அஜபா தாண்டவத்தை திருவாரூரிலும், ஆனந்த தாண்டவத்தை தில்லையிலும் தரிசிக்கலாம்.
♦️திருவிற்கோலம் எனும் தர்ப்பைக்காட்டிலும், திருப்போரூர் எனும் மூங்கிற்காட்டிலும், திருவெவ்வூர் எனும் ஈக்காட்டிலும், திருவெண்பாக்கம் எனும் இலந்தைக்காட்டிலும், திருவாலங்காடு எனும் ஆலங்காட்டிலும் ஆடும் பரம் பொருள், நடராஜர்.
♦️ திருநெல்வேலியில் காளிகா தாண்டவம் (படைத்தல்), திருப்பத்தூரில் கவுரிதாண்டவம் (காத்தல்), குற்றாலத்தில் திரிபுரதாண்டவம் (மறைத்தல்), திருவாலங்காட்டில் ஊர்த்வதாண்டவம் (அருளல்), தில்லையில் ஆனந்த தாண்டவம் எனும் ஐந்தொழில்களையும் புரியும் வடிவில் நடராஜர் விளங்குகிறார்.
♦️ சித்திரை திருவோணம் உச்சிக்காலம், ஆனி உத்திரம் பிரதோஷ காலம், ஆவணி வளர்பிறை சதுர்தசி மாலைசந்தி, புரட்டாசி வளர்பிறை அர்த்தஜாமம், மார்கழி திருவாதிரை உஷத்காலம், மாசி வளர்பிறை காலைசந்தி ஆகியவை நடராஜப் பெருமானின் அபிஷேக காலங்களாகும்.
♦️ சிதம்பரம் கருவறையின் வலதுபுறம் சிதம்பர ரகசியம், பொன் கூரையின் கீழ் நடராஜப் பெருமான், ஸ்படிகலிங்கம் என மூன்று வடிவங்களில் நடராஜர் அருள்கிறார்.
♦️ சிற்றம்பலத்திற்கு எதிரே உள்ள எதிரம்பலம் எனும் இடத்தில்தான் நடராஜப் பெருமானுக்கு திருமஞ்சனம் நடைபெறும். இதுதான் கனகசபை.
♦️ உற்சவ மூர்த்தங்கள் எழுந்தருளியுள்ள இடம் பேரம்பலம். என்ற தேவசபை.
♦️ ஊர்த்வதாண்டவ மூர்த்தங்கள் தேரம்பலத்தில் உள்ளன. இது கொடிமரத்தின் தென்புறம் உள்ளது, நிருந்தசபை எனப்படுகிறது.
♦️ ஆனித் திருமஞ்சனமும், மார்கழி ஆருத்ரா திருமஞ்சனமும் நடக்குமிடம் ஆயிரம்கால் மண்டபம். இது ராஜசபை.
♦️ புஜங்கலலிதம், காலசம்ஹார மூர்த்தி, கங்காள மூர்த்தி, பிட்சாடன மூர்த்தி, திரிபுரசம்ஹார மூர்த்தி, பைரவர், உத்திராபதியார் ஆகிய நவ தாண்டவ சிற்பங்களை தஞ்சையிலுள்ள திருச்செங்காட்டங்குடியில் தரிசிக்கலாம்.
♦️ ஒரே கல்லால் வடிக்கப்பட்ட நடராஜரின் அற்புத திருவுருவை வில்லிபுத்தூருக்கருகில் உள்ள மடவார்விளாகம் வைத்தியநாத சுவாமி ஆலயத்தில் உள்ளது.
♦️ சுந்தரமூர்த்தி நாயன்மாருக்காக நடராஜர் தன் தில்லைத் திருநடனத்தை பேரூர் பட்டீஸ்வரர் ஆலயத்தில் ஆடிக் காட்டியதால் பேரூர் நடராஜர், குடகத் தில்லை அம்பலவாணன் எனப்படுகிறார்.
♦️ அருணகிரிநாதருக்காக ஆறுமுகன் நடராஜ தாண்டவத்தை ஆடிக்காட்டியதை நினைவுகூற திருச்செந்தூர் ஏழாம் நாள் பெருவிழாவில் ஷண்முகர் சிவப்பு சாத்தி பின்புறம் நடராஜ திருக்கோல தரிசனம் தருகிறார்.
♦️ தேவர்களின் பகல்பொழுதின் கடைசி நேரம், ஆனி மாதம். அந்த மாத உத்திர நட்சத்திரத்தன்று தேவர்கள் நடராஜருக்கு பூஜை செய்வதே ஆனித்திருமஞ்சனம் எனப்படுகிறது.
♦️மதுரையில் நடராஜர் கால்மாறி திருநடனம் புரிவதை பரஞ்ஜோதி முனிவர், திருவிளையாடற் புராணத்தில் 25ம் படலமாக விவரிக்கிறார்.
♦️ நமசிவாய எனும் ஐந்தெழுத்தைக் குறிக்கும் வகையில் நடராஜரின் கருவறை வாயிலில் ஐந்து படிகள் அமைந்துள்ளன.
♦️ தேவர்களுக்காக 42, முருகனுக்காக 3, திருமாலுடன் 9, அம்பிகையுடன் 36, தானே ஆடியது 18 என மொத்தம் 108 சிவதாண்டவங்கள் புகழ் பெற்றவை.
♦️ நெல்லை ஆழ்வார்குறிச்சி கோயிலில் உள்ள ஒரே கல்லினாலான நடராஜரின் சிலையை தட்டினால் வெண்கல ஓசை எழுகிறது.
♦️ ஆனித்திருமஞ்சன விழாவை சிதம்பரத்தில் தொடங்கி வைத்தவர் ஆதிசேஷனின் அம்சமான பதஞ்சலி மகரிஷி.🌹
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🔍ஜோதிட உலகம் 🌍 பூர்ணிமா - அதன் முக்கியத்துவம் என்ன?*
புத்த பூர்ணிமா என்பது புத்தரின் வாழ்க்கையின் மூன்று முக்கிய நிகழ்வுகளை - லும்பினியில் அவரது பிறப்பு, புத்தகயாவில் உள்ள போதி மரத்தடியில் அவர் ஞானம் பெற்ற நிகழ்வு, மற்றும் குஷிநகரில் அவர் பரிநிர்வாணம் அடைந்த நிகழ்வு ஆகியவற்றை நினைவுகூறும் நாளாகும்.
இந்தியா, நேபாளம், இலங்கை, தாய்லாந்து, கம்போடியா, ஜப்பான், சீனா மற்றும் பிற நாடுகளில் உள்ள புத்த சமூகங்களில் புத்த பூர்ணிமா மிகுந்த பக்தியுடன் அனுசரிக்கப்படுகிறது.
புத்தர் என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட சித்தார்த்த கௌதமர், கிமு 6 ஆம் நூற்றாண்டில் லும்பினியில் (நவீன நேபாளம்) பிறந்தார். ஒரு அரச குடும்பத்தில் பிறந்த அவர், உண்மை மற்றும் ஞானத்தைத் தேடி 29 வயதில் பௌதிக வாழ்க்கையைத் துறந்தார். பல வருட தீவிர தியானத்திற்குப் பிறகு, அவர் போத்கயாவில் உள்ள போதி மரத்தடியில் ஞானத்தை அடைந்தார். 80 வயதில், அவர் குஷிநகரில் மகாபரிநிர்வாணத்தை அடைந்தார்.
புத்தரின் வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சமும் ஆழமான பாடங்களை வழங்குகிறது:
பிறப்பு: நீதி மற்றும் இரக்கத்தின் பாதையை ஒளிரச் செய்த ஆன்மீக வழிகாட்டியின் வருகையைக் குறிக்கிறது.
ஞானம்: துன்பம் மற்றும் ஆசை ஆகியவற்றின் மீதான பற்றுதல் இல்லாமையை எடுத்துக்காட்டுகிறது, இது இறுதி விடுதலைக்கு வழிவகுக்கிறது.
பரிநிர்வாணம்: வாழ்க்கை மற்றும் இறப்பு சுழற்சியில் (சம்சாரம்) இருந்து பற்றின்மையை வலியுறுத்துகிறது.
புத்தரின் ஊக்கமளிக்கும் போதனைகள் மற்றும் மந்திரங்கள்:
புத்தரின் போதனைகள் இன்றும் கூட மில்லியன் கணக்கானவர்களை ஊக்கப்படுத்துகின்றன. சில முக்கிய போதனைகளில் பின்வருவன அடங்கும்:
நான்கு உன்னத உண்மைகள்: வாழ்க்கை துன்பத்தை உள்ளடக்கியது, துன்பத்திற்கு காரணம் ஆசை, துன்பத்திற்கு ஒரு முடிவு உண்டு, முடிவுக்கு இட்டுச் செல்லும் பாதை உன்னத எண்மண்டல பாதை.
உன்னதமான எண்மண்டல பாதை: சரியான பார்வை, சரியான நோக்கம், சரியான பேச்சு, சரியான செயல், சரியான வாழ்வாதாரம், சரியான முயற்சி, சரியான நினைவாற்றல், சரியான செறிவு.
நடுத்தர வழி: சுய இன்பத்திற்கும் சுய வேதனைக்கும் இடையிலான ஒரு சமநிலையான அணுகுமுறை.
பிரபலமான புத்த மந்திரங்கள்:
"ஓம் மணி பத்மே ஹம்" (கருணை மற்றும் ஞானத்திற்கான பிரார்த்தனை)
“புத்தம் சரணம் கச்சாமி” (நான் புத்தரிடம் தஞ்சம் அடைகிறேன்)
புத்த பூர்ணிமா அன்று இந்த மந்திரங்களை உச்சரிப்பது ஆன்மீக அதிர்வுகளை மேம்படுத்தி உள்அமைதியைக் கொண்டுவருகிறது.
புத்த பூர்ணிமா வெறும் மத நிகழ்வு மட்டுமல்ல, உள் மாற்றம், இரக்கம் மற்றும் ஆன்மீக விழிப்புணர்வை நினைவூட்டுகிறது. இந்த மங்களகரமான நிகழ்வைக் கொண்டாடும் வேளையில், நம் செயல்களைப் பற்றி சிந்தித்து, கருணையை வளர்த்து, ஞானம் பெற்றவர் காட்டிய உன்னதப் பாதையில் நடப்போம்.🌹
#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 சுபோதயம் மங்களாம்பிகை அம்மனுடன் அம்பாள் சமேத ஸ்ரீ ஆதிகும்பேஸ்வரர் சுவாமி*
*12 சிவன் கோவில்களில் முதன்மையானது, மாசி மகத் திருவிழாவுடன் இணைக்கப்பட்டுள்ளது இந்த திருத்தலம்*
*தேவார பாடல் பெற்ற அற்புத க்ஷேத்திரம் இது*
*இடம் :-*
*கும்பகோணம் நகரம், காவேரி நதிக்கரையில், தஞ்சாவூர், தமிழ்நாடு.*
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 தாயார் சமேத ஸ்ரீ சாரங்கபாணி (மூலவர்) / ஆராவமுதன் (உத்சவர்) .*
*திருக்குடந்தை திவ்ய தேசம் (கும்பகோணம் நகரம்)*
*காவேரி நதிக்கரையில் உள்ள மாசி மகம் சுபோதயம், தமிழ்நாடு*
*ஓம் நமோ நாராயணா 🙏🏼*
#🔍ஜோதிட உலகம் 🌍 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் ##🖌பக்தி ஓவியம்🎨🙏 கள்ளழகர் திருக்கோவில் பௌர்ணமி தீபம்
🙏🪷🙏
#முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔍ஜோதிட உலகம் 🌍 மனதில் நினைத்துக் கொண்டு விஷயம் கண்டிப்பாக நடக்கும்
உன் முயற்சி வெற்றியை தரும்
உன் யோசனைகளை யாரிடம் சொல்லாதே
ஓம் நமசிவாய
#காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️ஓம் முருகா #🙏ஓம் முருக சரணம்🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் #
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்க #பக்தி ஓம்சர்வேஷ்சாய ஓம்கார்த்திகேய ஓம் நமோ நாராயணா சிரமாறு உடையான் 🌞 🙏 இன்று இனிய நாள் வாழ்க வளர்க நலத்துடன் துரைசாமி🪷🪷🪷 #காலை வணக்கம்












