
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
திருமந்திரம் #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #📅பஞ்சாங்கம்✨ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶
#✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🥥 மஹாசிவராத்திரி பிரசாதம் 🪔
#🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 அபிஜித்* *நட்சத்திரம்*
கால புருஷனுக்கு இருபத்தி ஒன்றாவது (21)
நட்சத்திரத்திற்கும்
இருபத்தி இரண்டாவது (22) நட்சத்திரத்திற்கும் இடையில்தான் வெற்றியின் நட்சத்திரமான அபிஜித் நட்சத்திரம் உள்ளதாக ஜோதிட ஆய்வாளர்கள் சாஸ்திரத்தில் உள்ளதாக சொல்கிறார்கள்.
இந்த நட்சத்திரத்தை இருபத்தி எட்டாவது (28) நட்சத்திரமாக எடுத்துக் கொள்ளலாம்.
ஜித் என்ற வார்த்தையானது வெற்றியைக் குறிக்கிறது.
அபிஜித் என்பது விரைவான வெற்றியைக் குறிக்கிறது.
இந்த நட்சத்திரம் ஏன்? அதிகளவில் பயன்படுத்தப்படவில்லை என்ற கேள்வி எல்லோர் மனதிலும் உண்டு.
இந்த நட்சத்திரத்தின் அதிதேவதையாக பிரம்மா இருக்கிறார்.
பிரம்மாவிற்கு பூமியில் பூஜைகள் இல்லை என்பதால் அபிஜித் நட்சத்திரம் அதிக புழக்கத்தில் இல்லை.
பிரம்ம முகூர்த்தத்திற்கு நிகரான நேரமாக அபிஜித் நட்சத்திர பிரசன்னமாகிறது.
வான் மண்டல விண்வெளியில் லைரா (Lyra) என்ற நட்சத்திரக் கூட்டத்திற்குள் வேகா என்ற நட்சத்திரமாக இந்த அபிஜித் நட்சத்திரம் மறைந்துள்ளது.
வேகா (Vega) என்பது அபிஜித் நட்சத்திரத்தின் சமஸ்கிருதப் பெயராகும்.
முன்னூற்று அறுபத்து ஆறு நாட்களாக இருக்கும் (366) ஜீலியன் காலண்டர்களில் இந்த நட்சத்திரம் பற்றி குறியீடுகள் உள்ளன என்பது சூட்சுமம் ஆகும்.
அபிஜித் நட்சத்திர புராணம்…
இதிகாசங்களும் புராணங்களும் வாழ்வை பற்றிய கற்பித்தலை நமக்கு சொல்லித் தருகிறது.
அவ்வாறே, மகாபாரதத்தில் குருேகஷத்திரப் போர் தொடங்குகிறது.
அச்சமயத்தில் ஜோதிட வித்தகன் சகாதேவனிடம் துச்சாதனன் ‘‘எந்த நேரத்தில், எப்படி போர் தொடங்கினால் வெற்றி பெற முடியும்.’’ என்ற கேள்வியை கேட்கிறார்.
ஜோதிடத்தை பற்றிய உண்மையை எப்பொழுதும் மறைக்காமல் சொல்லும் பண்புடையவன். சகாதேவன் அபிஜித் நட்சத்திரம் தோன்றும் நேரத்தில் போர் தொடங்கினால் வெற்றி என்று சொல்லிச் செல்கிறார்.
இதையறிந்த கிருஷ்ண பகவான் நல்லவர்களுக்கும் தீயவர்களும் ஒரு நியதி வேண்டும் என்பதால் நல்லவர்களை காப்பற்றவும் தீயவர்கள் வெற்றி பெறாமல் இருக்கவும் அதாவது தர்மம் என்ற நியதி வலுவாமல் இருக்க அபிஜித் நட்சத்திரத்தை தன் மயிலிறகில் கிருஷ்ண பகவான் எடுத்து மறைத்து வைத்துள்ளார் என்பதேசூட்சுமம்.
பரமாத்வாகிய பரமேஸ்வரனே முப்புரங்களையும் வென்று இந்த நட்சத்திரத்தில்தான் போரிட்டு வென்றுள்ளதாக புராணங்கள் சொல்கின்றன.
அபிஜித் நட்சத்திர அடையாளம்
அபிஜித் நட்சத்திரமானது நான்கு தெருக்கள் சந்திக்கும் நாற் சந்தியை போன்ற வடிவமாகி அது ஒரு பெரும் புள்ளியை சந்திக்கும் அமைப்பாக உள்ளது.
அபிஜித் முகூர்த்தம் என்பது என்ன?
காலையில் சூரிய உதய காலத்திலிருந்து 6 மணி நேரம் கழித்து வருகின்ற உச்சி வேளைதான் அபிஜித் காலம்
அதாவது, ஒவ்வொரு நாளும் பகல் 12மணி முதல் 1மணி வரை உள்ள நேரமே அபிஜித் முகூர்த்தம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
தினமும் இந்த அபிஜித் முகூர்த்த நேரத்தில் வழிபாடு செய்வது உங்கள் விருப்பமானது நிறைவேற்றும் வெற்றியை தரும் அமைப்பாக உள்ளது.
அபிஜித் நட்சத்திர நேரம் என்பது என்ன?
அபிஜித் நட்சத்திரம் நேரமானது உத்திராடம் - திருவோணம் நட்சத்திரம் இடையில் 24 நிமிடம் வரும்.
அபிஜித் நட்சத்திர வழிபாடு
அபிஜித் நட்சத்திர நேரத்தில் பிறந்த அதிர்ஷ்ட குழந்தையாக உள்ளது.
*நாளை*(15-2-2026)
*மாசி 3வது நாள்*
*ஞாயிற்றுக்கிழமை*
*இரவு 8-37முதல்*
*9-00மணி வரை*
உத்திராடம் - திருவோணம் நட்சத்திரம் இடையில் 24 நிமிடம் வருகிறது.
உத்திராடம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்திற்கு இடைப்பட்ட 24 நிமிட காலத்தைத் தான்
அபிஜித் நட்சத்திர நேரம் என்று சொல்கின்றோம்.
அதாவது உத்திராட நட்சத்திரம் (இதன் கடைசி இரண்டு பாதமிருக்கும் நேரம்),திருவோணம்
(இதன் முதல் இரண்டு பாதமிருக்கும் நேரம்)
இணையும் காலம் அபிஜித் நட்சத்திரக் காலமாகும்.
அபிஜித் நட்சத்திரம்
மகர ராசியில் அதாவது உச்சிராசியில் உத்திராடம் நட்சத்திரத்தின் கடைசி நான்கில் ஒருபங்கும் திருஒணம் நட்சத்திரத்தின் முதல் பதினைந்தில் ஒரு பங்கும் உள்ள நேரம் அபிஜித் நட்சத்திரம் ஆகும்.
இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கும் 24 நிமிட நேரத்தில், நாம் இறைவனிடம் என்ன பிரார்த்தனை வைத்தாலும் அது அப்படியே கூடிய விரைவில் நடக்கும் என்பது உறுதி.
*நாளை*(15-2-2026)
*மாசி 3வது நாள்*
*ஞாயிற்றுக்கிழமை*
*இரவு 8-37முதல்*
*9-00மணி வரை*
24 நிமிடங்கள் உள்ள அபிஜித் நட்சத்திர
நேரத்தில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி, கீழ்க்கண்ட மந்திரத்தை மூன்று முறை ஜெபிக்கவும்.
*அபிஜித் சித்சக்தித் துதி*
*அபிஜித ஆகமாந்து தீர* *அபஜிதாம்பர* *நட்சத்ராணாம் நாததீய* *ஜோதீனாம் நளகங்காதர*
*பவதாரண சிவச்ய* *விஷ்ணு மேதினாம்* *பவதவளாம்சுத* *பரிபாலய சரணாகத* *பாஹிமாம்*!”
மேலும் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தில்
வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய கிருஷ்ணரின் படத்திற்கு முன்பாக இரண்டு அகல் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றுக் கொள்ளுங்கள்.
கிருஷ்ணரின் படம் இல்லை என்பவர்கள் பெருமாளின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம்.
இப்படி தீபம் ஏற்றி வைத்த பிறகு அவருக்கு துளசி மாலையை சாற்றி மஞ்சள் நிற மலர்களை வைத்து உங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை என்னவோ, எந்த பிரச்சனை உங்களுக்கு சரியானால் நீங்கள் நிம்மதியாக வாழ முடியும் என்று நினைக்கிறீர்களோ அது சரியாக வேண்டும் என்று பெருமாளிடம் வேண்டிக் கொள்ள வேண்டும்.
இயன்றவர்கள் மஞ்சள் நிறத்திலான லட்டுவை பெருமாளுக்கு முன்பாக வைத்து இந்த வழிபாட்டை மேற்கொள்ளலாம். தீபமேற்றி முடித்த பிறகு மேற்கண்ட அபிஜித் சித்சக்தித் துதியை
மூன்று முறை மனதார கூறி கிருஷ்ண பரமாத்மாவை மனதார நினைத்து உங்களுடைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத்திடம் சொல்ல வேண்டும்.
அபிஜித் நட்சத்திர வேளையில் தொடங்கும் காரியங்கள் நிச்சயம் நன்மையில் முடியும்.
இந்த நேரத்தில் எந்த தோஷமும் இல்லை. ராகுகாலம், எமகண்டம், அஷ்டமி, நவமி, கரிநாள், பிரதமை, செவ்வாய், சனிக்கிழமை என்று எந்த தடங்கலும் இல்லை.
உத்திராடத்துக்கு கணபதி, திருவோணத்துக்கு திருமால், இவர்களை வணங்கி முதல் முறையாக அபிஜித் நட்சத்திர நேரத்தில்
என்ன பிரார்த்தனையை செய்கிறீர்களோ, அந்தப் பிரார்த்தனை நிறைவடையும் வரை, அடுத்தடுத்த மாதம் வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்திலும், ஒரே பிரார்த்தனையாக தான் வைக்க வேண்டும்.
மாற்றி மாற்றி பிரார்த்தனை செய்யும் போது வேண்டுதலுக்கான பலன் கூடிய விரைவில் உங்களுக்கு கிடைக்காது.
பூஜை அறையில் ஏற்றி வைத்திருக்கும் விளக்கிற்கு முன்பு உங்களுடைய வேண்டுதலை வைக்கலாம்.
நல்ல வேலை கிடைக்க, நோய் நொடி தீர, பிள்ளைகள் நன்றாக படிக்க, கடன் தீர இப்படி என்ன வேண்டுதலை வைத்தாலும் சரிதான்.
நீங்கள் என்ன வேண்டுதல் வைத்திருக்கிறீர்களோ, அது சம்பந்தப்பட்ட மந்திரங்களை சொல்லி வழிபாடு செய்யலாம்.
நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்றால், ஹனுமன் மந்திரம், கடன் சுமை குறைய வேண்டும் என்றால் மகாலட்சுமி மந்திரம், பணவரவு அதிகரிக்க வேண்டும் என்றால் குபேரர் மந்திரம், இப்படி உங்களுக்கு தெரிந்த மந்திர உச்சாடனங்களை செய்து இந்த பிரார்த்தனையை இறைவனிடம் வைக்கலாம்.
அல்லது உங்கள் குலதெய்வ வழிபாடு இஷ்ட தெய்வ வழிபாட்டு மந்திரத்தை கூட சொல்லலாம் தவறு கிடையாது.
ஆக மொத்தத்தில்
அபிஜித் நட்சத்திரம் இருக்கும் இந்த 24 நிமிடங்களும் உங்களுடைய மனது ஒருநிலைப்பட வேண்டும்.
இந்த 24 நிமிடத்தில்
இந்த பிரபஞ்சத்திடம் நம்பிக்கையோடு உங்கள் பிரார்த்தனையை சொல்ல வேண்டும்.
அதுதான் ரொம்ப ரொம்ப முக்கியம்.
நம்பிக்கை நம்பிக்கை நம்பிக்கை. நம்பிக்கை இல்லாமல் நாம் என்ன செய்தாலும் அது நிச்சயம் பலன் தராது.
நம்பிக்கையோடு நாளை (15-2-26)வர இருக்கும் இந்த அபிஜித் நட்சத்திர நேரத்தை(இரவு 8-37 முதல் 9-00வரை) பயன்படுத்துங்கள்.
நிச்சயம் உங்களுக்கு நல்லதே நடக்கும்.
அதன் மூலமும் உங்களுக்கு நிறைய நல்ல பலன்கள் கிடைக்கும்.
அர்த்தநாதீஸ்வரர் வழிபாடு #🥥 மஹாசிவராத்திரி பிரசாதம் 🪔 #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸
#🖌பக்தி ஓவியம்🎨🙏 #🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 #🔥 ருத்ராபிஷேகம்🕉️ #✨ மகா சிவராத்திரி ஸ்டேட்டஸ் 🙏🏻 #🥥 மஹாசிவராத்திரி பிரசாதம் 🪔
நகரத்தார் உருவாக்கிய நெய்-நந்தீஸ்வரர் (கோவில்)(நெய்மணக்கும் கோவில் - நெய் மணக்கும் கிராமம் - நெய்கிணறு)
கட்டுரை : செந்தில்-நாகப்பன் வேந்தன்பட்டி
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி எனும் ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சிற்றூர் வேந்தன்பட்டி. இவ்வூர் நகரத்தார் என்று சொல்லக்கூடிய நாட்டுக்கோட்டை செட்டியார்கள் மிக அதிகமாக வாழ்கின்ற ஊர் செட்டிநாட்டு ஊர் என்றே சொல்லலாம். 1000 புள்ளிகள் கொண்ட இவ்வூரில் ஆறு கோவில் நகரத்தார் வாழ்கின்றனர்.
இவ்வூரின் சிறப்பம்சம் : ஸ்ரீ நெய் நந்தீஸ்வரர்
இவ்வூரில் உள்ள சிவன் கோவிலில் நந்தி எம்பெருமான் நெய்-நந்தீஸ்வரராக அருள்பாலிக்கின்றார்.
நந்தி எம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக அருள்பாலிப்பது இவ்வூரில் மட்டுமே. அதனால் இவ்வூர் தமிழகத்து ஊர்களில் தனி சிறப்பிடம் பெறுகின்றது.
ஊரின் சிறப்பே நெய்-நந்தீஸ்வரர்தான் இவரின் அருள்திறம் ஊர் முழுக்க நிறைந்திருப்பதால் இவ்வூரிலிருக்கும் நகரத்தார் பெரும் தனவான்களாகவும் சிறந்த கல்விமான்களாகவும் வாழுகின்றனர். நெய் நந்தீஸ்வரரால் இவ்வூருக்கு - இவ்வூர் நகரத்தார்க்கு பெருமையும் புகழும் எந்நாளும் உண்டு.
இவ்வூருக்குள் நுழைந்தவுடன் பஸ்ஸைவிட்டு இறங்கியதும் நம் கண்ணுக்கு தெரிவது நெய் நந்தீஸ்வரர் கோவில்தான். இவ்வூரைச் சார்ந்த நகரத்தார் பெருமக்கள் பெருமுயற்சி செய்து பெரும்பணம் சேகரித்து இக்கோவிலை கட்டியுள்ளனர். நிர்வாகப் பொறுப்பையும் இவர்களே ஏற்றுள்ளனர்.
நந்திஎம்பெருமான் நெய் நந்தீஸ்வரராக வணங்கப்படுவது
இக்கோவிலின் தனிச்சிறப்பு
நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவில் ஒன்பதுமுறை கும்பாபிஷேகம் கண்டுள்ளதாம். சிவபெருமானும் உமாதேவியும் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரர் என்னும் பெயரில் இக்கோவிலின் மூலஸ்தானக் கடவுளர்களாக அருள் பாலிக்கின்றனர். இவர்களைத் தவிர விநாயகர், முருகப்பெருமான், தெட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகங்கள் போன்ற கடவுளர்களும் தனித்தனி சந்நிதிகளில் அருள் பாலிக்கின்றனர் என்றாலும் நெய் நந்தீஸ்வரரே இக்கோவிலின் சிறப்புக் கடவுளாக உள்ளார். அதனால் இக்கோவில் சிவன் கோவிலாக இருந்த போதிலும் நந்திகோவில் என்றே இவ்வூர் மக்களால் அழைக்கப்படுகின்றது.
ஊரின் நடுவே அழகுற அமைந்துள்ளது கோவில் உள்ளே நுழைந்ததும் நெய்மணம் கமகமக்கிறது. சிவனாரின் சந்நிதியை நோக்கி கம்பீரமாக வீற்றிருக்கின்றார் நெய் நந்தீஸ்வரர் இவரின் மேனி முழுவதிலும் பசு நெய் அப்படியே உறைந்து போயிருக்கிறது. எவ்வளவுதான் நெய் பூசினாலும் இவரது மேனியை ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் நெருங்குவதில்லையாம். ரொம்ப சக்தி வாய்ந்த கடவுள் இவர்.
இவரைப் பற்றி கேள்விப்பட்டு இவரைப் பார்க்க வந்தவர்கள் இன்றும் நல்ல நிலையில் வாழ்கின்றார்கள். கவியரசர் கண்ணதாசன் இவரை போற்றிப் பாடியுள்ளார்.
தொடர்வது இவரின் சிறப்புகள்
பிரம்மாண்ட நெய் உருவம் - ஆன்மீக ஆச்சர்யம் - பெருமையின் அணிகலன் - இந்தியாவின் தனிச்சிறப்பு (உலகின்) எட்டாவது அதிசயம் - நெய்மீது அலாதி ப்ரியம் - யுகங்கள் பல கடந்தாலும் எந்த நிலையிலும் அருள்திறம் குறையாத இறை தன்மை - தனக்கு ப்ரியமான நெய்யினையே காணிக்கைப் பொருளாக வைத்திருப்பது - தன்னைப் பார்க்க வருகின்றவர்கள் வியப்பில் ஆழ்த்துவது "ரொம்ப சக்தியுள்ள நந்தி" என்று ஊராரின் பேச்சில்....
வேந்தன்பட்டியிலும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் பசுமாடு வைத்திருப்பவர்கள் பால் கறந்து காய்ச்சி நெய் எடுத்து நெய் நந்தீஸ்வரருக்கு காணிக்கையாக செலுத்திய பிறகுதான் பாலை விற்கவோ சொந்த உபயோகத்திற்கு எடுத்துக் கொள்ளவோ செய்கின்றார்கள். இன்றும் இப்பழக்கம் இவ்வூர் மக்களிடம் இருந்து வருகின்றது.
நந்தி எம்பெருமானுக்கு "தன-ப்ரியன்" என்ற ஒரு பெயர் உண்டு. அதனால் தானோ என்னவோ இவ்வூர் மக்கள் நெய்-நந்தீஸ்வரரின் நெற்றியில் காசுகளை பொட்டுகளாக வைப்பதையும் பண நோட்டுகளை கயிற்றில் கட்டி நெய் நந்தீஸ்வரரின் கழுத்தில் மாலையாக போடுவதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.
வருடந்தோறும் தை மாதத்தில் மாட்டுப்பொங்கலன்று அதிகாலை 4 மணிக்கு நெய் நந்தீஸ்வரருக்கு நந்தி விழா என்ற ஒரு விழாவினை இவ்வூர் மக்கள் நடத்தி வருகின்றார்கள். நந்தி விழா தினத்தன்று நெய் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேங்கள் செய்து 30 வகையான மாலைகளால் அலங்கரித்து தீப ஆராதனைகள் காட்டி வழிபடுகின்றனர். இந்த அதிசய விழா தமிழகத்து ஊர்களில் திருவண்ணாமலையிலும் வேந்தன்பட்டியிலும் தான் நடைபெறுகின்றது. மற்ற ஊர்களில் நடைபெறுவதில்லை.
நெய் நந்தீஸ்வரரின் இரு கொம்புகளுக்கு நடுவே "சக்கரம்" ஒன்று உள்ளது. இது இயற்கையாகவே அமைந்தது (பொதுவாக இந்த அமைப்பு நந்தி எம்பெருமானின் தோற்றத்தில் இருப்பதில்லை).
நெய் நந்தீஸ்வரருக்கு பசு நெய்தான் காணிக்கை பொருள். எனவே நெய் நந்தீஸ்வரரை பார்க்க வருகிறவர்கள் வரும்போது கலப்படமில்லாத சுத்தமான பசு நெய் கொண்டு வரவேண்டும்.
நெய் - நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துதல்
இப்படி ஒரு வேண்டுதலை நெய் நந்தீஸ்வரருக்கு இவ்வூர் மக்கள் நடத்தி வருகிறார்கள்.
இவ்வூர் மக்களில் பெரும்பாலோர் தங்களின் சொந்த வாழ்க்கையில் பிரச்சனைகள் ஏற்பட்டாலோ உடலில் நோய்கள் தோன்றினாலோ நெய் நந்தீஸ்வரருக்கு மணி சார்த்துவதாக வேண்டிக்கொள்கிறார்கள்.
நோய்களோ பிரச்சனைகளோ தீர்ந்த பிறகு வெங்கல மணி ஒன்றும் பட்டுத்துண்டு ஒன்றும் மாலை ஒன்றும் வாங்கி நெய்-நந்தீஸ்வரருக்கு சார்த்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றுகிறார்கள்.
பிரதோசவிழா
நெய் நந்தீஸ்வரருக்கு பிரதோஷ வழிபாடு வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றது. அன்றைய தினம் நந்தியை பசு நெய்யினால் அபிஷேகம் செய்வர். அபிஷேகம் செய்த நெய் நந்தீஸ்வரரின் தோற்றம் முழுவதிலும் நிறைந்து தரையில் வழிந்து அப்படியே தேங்கி நிற்கின்றது.
மறுநாள், அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து நந்தவனத்தில் உள்ள நெய்கிணற்றில் கொட்டுகிறார்கள். நெய் கிணற்றின் உள்ளே பல ஆண்டுகளாக நெய் உறைந்து போயிருக்கிறது. இதன் உள்ளே உறைந்திருக்கும் நெய்யில் கூட ஈ, எறும்பு, பூச்சிகள் எதுவும் மொய்ப்பதில்லையாம்.
இவரை பார்ப்பதற்கு படையெடுத்து வருவோர் ஏராளம்.
பக்தி மணம் கமழ வருவோரெல்லாம் மீனாட்சி சொக்கலிங்கேஸ்வரரைத் தரிசிப்பதோடு சிவகுடும்பத்துப் பிள்ளையான நந்திகேஸ்வரரையும் நெய்மணம் கமழ தரிசித்து மகிழ்கின்றார்கள். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறிய சந்தோஷத்தை நன்றியாகச் சொல்ல திரும்பத் திரும்பவும் வருகின்றார்கள்.
பஸ் வசதி
சென்னை, மதுரை, கோவை, ஈரோடு, திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் போன்ற ஊர்களில் இருந்து பொன்னமராவதிக்கு நேரடி பஸ்கள் உள்ளன. பொன்னமராவதியிலிருந்து வேந்தன்பட்டி வருவதற்கு சிட்டி பஸ்களும், தனியார் பஸ்களும் நிறைய உள்ளன.
கோவில் திறப்பு : காலை 6.00 மணி முதல் பகல் 12 மணிவரை
மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை
செந்தில் நாகப்பன், வேந்தன்பட்டி
செல் : 9994036198, 9488815032 #✨பிரதோஷம்🕉️ #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #🙏நந்தி பகவான் 🙏 #🙏🏼பக்தி மோஷன் வீடியோ #🙇♀️பக்தி வீடியோஸ்🛐
#🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #✨பிரதோஷம்🕉️ திருப்பதிகம்
சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சினும்
நற்றுணையாவது நமச்சிவாயவே.
பொருளின் சுருக்கம்:
சிவபெருமான் சொற்களுக்குப் பொருளாய் இருப்பவன்; ஒளியுருவானவன். அந்தப் பெருமானின் பொன் போன்ற திருவடிகளை நாம் மனதாரத் தொழுதால், ஒருவேளை நம்மை ஒரு கல்லோடு சேர்த்துக் கட்டி கடலில் தூக்கி எறிந்தாலும் (அப்பர் பெருமானுக்கு நடந்த அதிசயம் போல), நம்மைத் தற்காத்து நற்கதி கொடுக்கும் துணை "நமச்சிவாய" என்னும் ஐந்தெழுத்து மந்திரமே ஆகும்.
மகா சிவராத்திரி நெருங்கும் வேளையில் இந்தப் பாடலைப் படிப்பது மிகவும் விசேஷமானது.
ஓம் அம் உம் சிவாய
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏 #முருகன் ஸ்டேட்டஸ் #முருகன் வீடியோஸ்#முருக கடவுள் #பக்தி வீடியோஸ் # உபதேசம்* *செய்த* *தகப்பன்சாமி...* *தந்தைக்கே பூஜை* *செய்யும் அபூர்வக்* *கோலம்!* 🙏✨
🦚🦚
ஓம் சரவணபவ! 🚩
முருகப்பெருமான் தன் தந்தை சிவபெருமானுக்கு 'பிரணவ மந்திரத்தின்' பொருளை உபதேசம் செய்த கதையை நாம் அறிவோம். ஆனால், அதே முருகப்பெருமான் தன் தந்தைக்கே சிவபூஜை செய்யும் ஒரு உன்னதமான கோலத்தை நீங்கள் தரிசித்ததுண்டா? 🔱👦
அந்த அற்புதக் காட்சியைக் காண நாம் செல்ல வேண்டிய தலம்: மயிலாடுதுறை மாவட்டம், திருவிடைக்கழி அருள்மிகு முருகன் திருக்கோயில்.
இந்தக் கோயிலின் கருவறைக்குள் நுழைந்தாலே ஒரு விதமான பேரமைதியும், தெய்வீக அதிர்வும் நம்மைத் தழுவுவதை உணர முடியும். அதன் பின்னணியில் உள்ள அந்த 'சிவ-சுப்ரமணிய' தத்துவத்தின் சிறப்புகள் இதோ:
📍 கருவறையில் ஒரு ஆன்மீக அதிசயம்:
இங்கு மூலவர் முருகப்பெருமான் நின்ற கோலத்தில் மிக அழகாகக் காட்சியளிக்கிறார். ஆனால், ஆச்சரியம் என்னவென்றால்:
முருகப்பெருமானுக்கு பின்புறம் ஒரு சிவலிங்கம் உள்ளது.
முருகப்பெருமானுக்கு முன்புறம் ஒரு ஸ்படிக லிங்கம் உள்ளது.
அதாவது, சிவபெருமானுக்கும் சிவலிங்கத்திற்கும் நடுவே முருகன் அமர்ந்து சிவபூஜை செய்யும் நிலையில் காட்சியளிக்கிறார். அசுரர்களை வதம் செய்த பின் தனக்கு ஏற்பட்ட பழி நீங்க, முருகன் இங்கு சிவனை நோக்கித் தவமிருந்து பாவ விமோசனம் பெற்றார் என்பதே இதன் வரலாறு.
🌟 சிவ-சுப்ரமணிய தத்துவம்:
"சிவனும் அவனது மைந்தன் முருகனும் வேறு வேறல்ல; இருவரும் ஒருவரே" என்கிற அத்வைத தத்துவத்தை இந்த கருவறை அமைப்பு நமக்கு உணர்த்துகிறது. தந்தையை வணங்கும் மகனாகவும், குருவை வணங்கும் சீடனாகவும் முருகன் இங்கு யோக நிலையில் அருள் புரிகிறார்.
🌿 குரா மரத்தடி ரகசியம்:
இக்கோயிலின் தல விருட்சம் 'குரா மரம்'. முருகப்பெருமான் முதலில் இந்த மரத்தடியில் அமர்ந்துதான் சிவனை வழிபட்டார். அதன் அடையாளமாக இன்றும் அங்கு ஒரு 'பத்ரலிங்கம்' உள்ளது.
ஒவ்வொரு நாளும் இரவு நடைபெறும் அர்த்தஜாம பூஜையின் போது, முதலில் கருவறையில் உள்ள முருகனுக்குப் பூஜை நடப்பதில்லை. மாறாக, குரா மரத்தடியில் முருகன் பூஜித்த அந்த 'பத்ரலிங்கத்திற்கு' தான் முதல் பூஜை (முதல் மரியாதை) செய்யப்படுகிறது. அதன் பிறகே கருவறைத் தெய்வங்களுக்குப் பூஜைகள் நடக்கின்றன.
✨ பலன்கள்:
தீராத பழி மற்றும் பாவங்களில் இருந்து விடுதலை பெற விரும்புவோர் இத்தல முருகனைத் தரிசிக்கலாம்.
மனக்குழப்பம் நீங்கி, தெளிவான அறிவு (ஞானம்) பெற இத்தல குரா மரத்தடியில் தியானம் செய்வது சிறப்பு.
தந்தையை வணங்கும் தனயனைத் தரிசிக்க ஒருமுறை திருவிடைகழி சென்று வாருங்கள்! மன அமைதி நிச்சயம். 🌸
அமைவிடம்: திருவிடைகழி (மயிலாடுதுறையிலிருந்து சுமார் 21 கி.மீ தொலைவு).
🦚🦚



![🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் - ShareChat 🔔 மகாசிவராத்திரி முகூர்த்தம் 🌸 - தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் தினம் ஒரு திருமந்திரம் 29. சீவன் 2011 மேவிய சீவன் வடிவது சொல்லிடில் கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டு மேவிய கூறது ஆயிரம் ஆயினால் ஆவியின் கூறுநா றாயிரத்து ஒன்றே 1 பொருள் 8n0 _0 கோவின் மயிர் ஒன்று நூறுடன் ஒரு மாட்டின் மயிர் ஒன்றை நூறு பங்குகளாகப் பிரித்துர மேவிய கூறது ஆயிரம் ஆயினால் அந்த ஒரு பங்கை மீண்டும் ஆயிரம் பங்குகளாகப் பிரித்தால் ` ஆவியின் நூறாயிரத்து ஒன்றே வ்வாறு ಊm] 9| பிரிக்கப்பட்ட மிகச்சிறிய 9नाGal அந்த உயிரின் ஜீவாத்மா)் வடிவம் ஆகும் பிளந்து ஒன்றை பசுவின் மயிர் DTITBLI அதாவதுர கூறாக்கினால் ` அதிலுள்ள ஒன்றை உயிரின் ஆயிரம் பசுவினது உரோமத்தை இலட்சம் வடிவம் ஒர் கூறிட்டதற்கு ஒப்பு ஆகும் சிவ கோநடம் வண்முகம் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_119339_2b6fa27f_1771113117968_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=968_sc.jpg)







