
திருநீற்றுச் சுவடு
@193036147
நல்லதே நினை நல்லதே நடக்கும் திருச்சிற்றம்பலம்
#திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் கீழ்க்காணும் படத்தில் முதலில் காண்பது கோயிலில் வணங்கும் நாக நாதர் வழிபாடு,
மற்றொன்று "மருத்துவ குறியீடு".
அது இருக்கட்டும் நம்முடைய ஜாதகத்தில் ராகு,கேது என இரு கிரகங்களை வணங்குகிறோம்.இதை பாம்பாக உருவகப்படுத்துவார்கள்.
பாம்புக்கும்,ராகு கேதுவுக்கும் என்ன சம்பந்தம்?
ஒன்றுமில்லை.ஜாதகத்தில் ராகு,கேதுவின் காரகத்துவம் என்பது நம் உடலில் உள்ள குரோம்சோம்கள் இணைப்புதான்.
ஆணை குறிக்கக்கூடிய 'y"குரோம்சோம்கள்தான் இராகு.
பெண்ணை குறிக்கக்கூடிய "X"குரோம்சோம்கள் தான் கேது.
"Y"குரோம்சோம்களின் வடிவம் மனித தலையுள்ள பாம்பை போல இருக்கும்,"X"குரோம்சோம்களின் வடிவம் தலையில் பாம்பு போல இருக்கும்.
இந்த இரு குரோசோம்கள் இணைந்துதான் ஓர் உயிர் உண்டாகிறது.இரு குரோகசோம்கள் இணைந்து இருப்பது இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்தவை போலவே இருக்கும்.
இதை நாம் நாகநாதர் என்ற பெயரில் வணங்குகிறோம்.
உயிரை கொடுப்பது,காப்பது மருத்துவம் என்பதை காட்டத்தான் இந்த குறியீடை மருத்துவத்துறை வைத்துள்ளது.
நிற்க!
ஜோதிடத்தில் இராகு என்பது தந்தை வழி பாட்டனாரை குறிக்கும்.
கேது தாய் வழி பாட்டியாரை குறிக்கும்.
ஒரு ஆணிடம் உள்ள "Y"குரோசோம்கள் நேரிடையாக தன் மகனுக்கு 75 சதவீதம் போகும்.அதாவது இந்த குரோம்சோம்கள் ஏழு தலைமுறைக்கு மகன் வழி வாரிசுகளுக்கு சதவீதம் குறைந்து,குறைந்து போகும்.
மனிதப்பிறவியில் ஆணுக்கு XY என இரண்டு குரோம்சோம்கள் இருக்கும்.பெண்ணுக்கு XX என இரண்டு இருக்கும்.
ஒரு ஆணை உருவாக்க Y போய் பெண்ணோட் X-ல் சேரணும்.அப்பதான் ஆண் பிறக்கும்.
ஆணை உருவாக்கக்கூடிய Y குரோசோம்கள் ஆணிடம் மட்டும் இருப்பதாலும்,அந்த Y குரோசோம்கள் அவன் பின் ஏழுதலைமுறைக்கு பிறக்கும் ஆண்களுக்கு வருவதால்தான் பண்டைய காலத்தில் இறுதிக்காலம் பண்ணும் உரிமை ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டது.
அதேபோல் குலதெய்வம் வழிபாடு,பெண் திருமணம் செய்து சென்றால் கணவனின் குலதெய்வத்தையே தன் குலதெய்வமாக ஏற்றுக்கொண்டார்கள்.
ஜோதிடத்தில் இருக்கக்கூடிய ராகு,கேதுவால் ஏற்படக்கூடிய களத்திர தோசம்,புத்திர தோசம்,மாங்கல்ய தோசம் இந்த Xy குரோசோம்களின் வழியாக வருவதுதான்.
ஒருவருக்கு சர்க்கரை நோய் வந்தாலும்,இரட்டை குழந்தைகள் பிறந்தாலும் உங்க குடும்பத்துல இது போல யாருக்கும் சர்க்கரை இருக்கா,இரட்டை குழந்தைகள் பிறந்து இருக்கா என மருத்துவர்கள் கேட்பது வழிவழியாக வரும் குரோசோம்களின் கட்டமைப்புதான்.
ஒருவன் செயல்கள்,எண்ணங்கள் அவனுடைய குரோசோம்கள் கட்டமைப்பை பொருத்து மாறுபாடும் அதாவது இராகு,கேது அமைப்பை பொருத்து மாறுபடும்.ஒருவன் இந்த பிறவியில் செய்யும் தவறு குரோசம்கள் வழியாக தன் வாரிசுகளுக்கு ஏழு தலைமுறைக்கு செல்லும்.
"எங்க தாத்தா பண்ண பாவத்துக்கு ஏன் சார்!என்னை பாதிக்குது"என இனி கேட்க மாட்டீங்கனு நினைக்கிறேன்😊
இதைத்தான் சுருக்கமா விதி,கர்ம வினை என்கிறோம்.
*காரைக்குடியில் அண்ணன் சீமான் .......💥* #🐯செந்தமிழன்🇰🇬சீமான்💪🏾 #செந்தமிழன் சீமான் #நாம் தமிழர் கட்சி #சீமான் #நாம் தமிழர்
#நாம் தமிழர் #நாம் தமிழர் கட்சி #சீமான் #செந்தமிழன் சீமான் #🐯செந்தமிழன்🇰🇬சீமான்💪🏾
#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம்
இன்றைய இராசிபலன் #📅பஞ்சாங்கம்✨ #காலை வணக்கம் #🔯இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம்🌠 #💎ராசிக்கற்கள் #✨தினசரி ராசிபலன்✡️
இன்றைய நாள்காட்டி #காலை வணக்கம் #📅பஞ்சாங்கம்✨ #🔍ஜோதிட உலகம் 🌍 #🧿வாஸ்து குறிப்புகள்🔯 #✡️ஜோதிட பரிகாரங்கள்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 குறைபாடு போக்கும் பகலவன்* .....
சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து சுமார் 11 கி.மீ. தொலைவில் *ஞாயிறு என்னும் திருத்தலம்* அமைந்துள்ளது.
ஜோதிடத்தில் ஜாதகப் படி.... சூரியதோஷம் உள்ளவர்களும், சூரிய தசை, சூரிய புத்தி நடக்கிறவர்களும், பார்வைக் குறைபாடு, பிணிகள், களத்திர தோஷம், புத்திர தோஷம் உள்ளவர்களும் இங்கு வந்து புஷ்பரதேஸ்வரரையும் சூரிய பகவானையும் வழிபட்டால் நற்பேறு அடையலாம். ஞாயிற்றுக்கிழமைகளில் வந்து வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பு.
சித்திரை, தை மாதப்பிறப்பு, ரதசப்தமி முதலான நாளில் இங்கு சூரியபகவானுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
சித்திரை வருடப் பிறப்பின் போது முதல் ஏழு நாள்கள் சுவாமி, அம்பாள் மீது சூரிய கதிர்கள் விழுகிறது. இந்த ஏழு நாள்களுக்கும் சிவனுக்கான பூஜையை சூரியனை வந்து செய்வதாக ஐதீகம்.
😯😟😯😟😯😟
சூரியனை மையமாகக் கொண்ட பஞ்ச பாஸ்கரத் தலங்களுள், சென்னைக்கு அருகில், திருவள்ளூர் மாவட்டத்துக்கு உள்பட்ட ஞாயிறும் ஒன்று. சுமார் 1500 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான தலமாகக் கருதப்படுகிறது.
சோழர்காலத்தில் தொண்டை நாடு 24 கோட்டங்களாகப் பிரித்து ஆளப்பட்டது. அதில் புழல் கோட்டத்தில் ஞாயிறு தலைசிறந்த நாடாக இருந்தது என்று சோழர்கால கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.
இறைவன் புஷ்பரதேஸ்வரர் என்றும், இறைவி சொர்ணாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார். அம்பிகை சுவாமியின் வலதுபுறத்தில் சந்நிதி கொண்டிருப்பதால், இது திருமண பாக்யம் அருளும் தலம் என்றும் கூறுகிறார்கள்.
ஒரு சமயம், பிரம்ம தேவனின் சாபத்தால் நோயுற்ற சூரிய பகவான், தன் நோய் நீங்க நீராடி சிவ பூஜை செய்ய வேண்டி இத்தலம் வந்தார்.
அங்குள்ள தாமரைக் குளம் அவரைப் பெரிதும் கவர்ந்தது. காரணம், குளத்தில் ஓராயிரம் இதழ் கொண்ட அழகிய தாமரைகள் பூத்திருந்தன. அதில் இறங்கி நீராடி மானசீகமாக வழிபட்ட போது தாமரை மலர் ஒன்றில் லிங்க ரூபமாக சிவபெருமான் எழுந்தருளினார். அவரை எடுத்து ஆசனத்தில் இருத்தி, வணங்கி சாபத்தால் உண்டான நோய் நீங்கப் பெற்றார் பகலவன்.
இறைவன் புஷ்பத்தின் இடையே தோன்றியதால் புஷ்பரதேஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இத்தல இறைவனை வணங்கி நோய் நீங்கப்பெற்ற சூரிய பகவான் இங்கு சிறப்பு தெய்வமாக வழிபடப்படுகிறார்.
பார்வைக் குறைபாடுடைய சோழ மன்னன் ஒருவனுக்கு இத்தலத்தில் தாமரையின் மேல் இறைவன் பேரொளியுடன் ஞாயிறாகத் தோன்றி, காட்சிதந்து, அவனுக்கு முழுப்பார்வையையும் தந்ததாகவும், அதனால் இத்தலம் "ஞாயிறு' என அழைக்கப்படுவதாகவும் ஒரு தகவல் கூறப்படுகிறது.
மன்னன் இப்பகுதிக்கு வந்தபோது அருகில் உள்ள ஓரிடத்தில் தங்கினானாம். அந்த இடமே "சோழவரம்' என அழைக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது.
சங்கிலி நாச்சியாரோடு தொடர்புடைய தலம், ஞாயிறு. திருவொற்றியூரில் சிவனுக்கு மாலை தொடுத்துத் தந்த சங்கிலி நாச்சியாரை அங்கு வந்த சுந்தரர் கண்டு காதல் கொண்டு சிவனையே உதவிக்கு அழைக்கிறார். சிவனும் உதவிட, அவர்கள் திருமணம் நடந்தது.
அந்தத் தெய்வப்பெண் அவதரித்தது இந்தத் தலத்தில் தான். பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமான் ஞாயிறு நாட்டின் பெருமைகளையும் சங்கிலியாரின் சிறப்புகளையும் கூறியுள்ளார். சங்கிலி நாச்சியாருக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது.
மாசிமக திருநாளில்தான் சங்கிலிநாச்சியாருக்கும் சுந்தரருக்கும் திருமணம் நடைபெற்றதாம். அதனால் இங்கு அன்று விளக்கு பூஜை விசேஷமாக நடைபெறுகிறது.
கண்வ மகரிஷி இவ்வூர் அருகே ஆசிரமம் அமைத்து சிவபெருமானையும் சூரிய பகவானையும் வழிபட்டு முக்தி அடைந்ததாக புராண வரலாறு கூறுகிறது. அவருக்கும் இங்கு தனி சந்நிதி உள்ளது.
தலவிருட்சம் நாகலிங்க மரம். சூரியன் வழிபட்ட தடாகம் சூரிய தீர்த்தம் எனப்படுகிறது.
அகத்தியரால் அருளப்பட்ட ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரத்தை இத்தலத்தில் பாராயணம் செய்தால், அது ஆயிரம் மடங்கு பலன் தரும் என்று கூறுகிறார்கள்.
மூலவர் புஷ்பரதேஸ்வரருக்கு எதிரே சூரிய பகவான் தரிசனமளிக்கிறார். சுவாமி, அம்பாள் சந்நிதிகளுக்கு முன்புள்ள முகமண்டபத்தை கலையம்சமுள்ள தூண்கள் தாங்குகின்றன. அதில் சூரியன், கோணர், கோணங்கி, மோகினி, ரிஷிகள், சிற்றரசர்கள், யாளி சிவ பூஜை செய்யும் ரிஷிகள், காமாட்சி சிவபெருமானை வழிபடும் காட்சி, கிருஷ்ண காளிங்க நர்த்தனம் போன்ற உருவங்கள் காணப்படுகின்றன.
கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், துர்கை ஆகியோரை தரிசிக்கலாம்.
பிரகாரத்தில் உற்சவர் கமல விநாயகர், சுப்பிரமணியர், காசி விஸ்வநாதர், சங்கிலி நாச்சியார் ஆகியோருக்கு தனி சந்நிதிகள் உள்ளன.
தெரிந்து கொள்வோம்....
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
கோலங்களில் காட்சி தரும் சனி பகவான் ஆலயங்கள்!* 🦋
சென்னை, ஆதம்பாக்கம் விஸ்வரூப ஸ்ரீ சர்வ மங்கள சனீஸ்வர பகவான் கோயிலில் சனீஸ்வரர் ஆறடி உயரத்தில் கம்பீரமாகக் காட்சி தருகிறார். இது, ‘வட திருநள்ளாறு’ என்று போற்றப்படுகிறது.
வேலூர் மாவட்டம், வாலாஜா அருகே உள்ள வன்னிவேடு எனும் ஊரில் உள்ள அகத்தீஸ்வரர் கோயிலில், சனீஸ்வரர் ஒற்றைக்காலில் நின்று காட்சி தருகிறார். இதுபோல, சனீஸ்வரரை தரிசிப்பது மிகவும் அபூர்வம்.
சனி பகவான் பொதுவாக காகத்தின் மீது அமர்ந்து காட்சி தருவது வழக்கம். ஆனால், ஆலங்குடி தலத்தில் அவர் கருட வாகனத்தில் காட்சி தருகிறார். சனி பகவான் கருட வாகனத்தில் அமர்ந்து காட்சி தருவது மிகவும் அரிதான காட்சியாகும். இது ஆலங்குடி தலத்தில் மட்டுமே காணப்படுகிறது.
மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள கூறைநாடு எனும் இடத்தில் அருள்மிகு புனுகீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் சனி பகவான் கிழக்கு நோக்கி தனிச் சன்னிதியில் அருள்பாலிக்கிறார். எல்லா ஆலயங்களிலும் கருப்பு நிறக் கல்லில் காட்சி தரும் சனி பகவான், இங்கு மட்டும் சிவப்பு நிறக் கல்லில் காட்சி தருவது விநோதம்.
திருக்கொள்ளிக்காடு என்ற திருத்தலத்தில் சனீஸ்வரர் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். அவரது வலது கரங்களில் கலப்பையும், அபய ஹஸ்தமும் தாங்கியுள்ளார். அதேபோல் இடது கரங்களில் காக்கையும், ஊரு ஹஸ்தமும் தாங்கி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். கலப்பையுடன் வீற்றிருக்கும் வித்தியாசமான சனி பகவானின் தோற்றத்தை இந்த ஆலயத்தில் மட்டுமே தரிசிக்க முடியும்.
கும்பகோணத்திற்கு அருகே உள்ள திருநாரையூர் தலத்தில், நவகிரக நாயகரான சனி பகவான், தனது குடும்ப சகிதமாக அருள்பாலிக்கும் அற்புதக் காட்சியைக் காணலாம். இங்குள்ள அருள்மிகு ராமநாத சுவாமி கோயிலில், கருவறைக்கு எதிரில், தனிச் சன்னிதியில் ஸ்ரீ சனீஸ்வரர் தனது இரு மனைவியரான, மந்தா தேவி, ஜேஷ்டா தேவி ஆகியோருடனும், குளிகன், மாந்தி என்ற இரு மகன்களுடனும் குடும்ப சமேதரராக அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார்.
ஜெய்ப்பூர் செல்லும் வழியில் வேன்வீட்டா எனும் ஊரில் சனி பகவான் கோயில் உள்ளது. எட்டு கிரகங்கள் வரிசையாக இரண்டு பாகங்களாகக் காட்சி தருகின்றன. சனீஸ்வரர் மிகப்பெரிய உருவில் எருமை வாகனத்தில், கிரகங்களுக்கு முன்னால் அமர்ந்து காட்சி தருகிறார்.🍀 #🙏🏾சனி பகவான் #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #காலை வணக்கம்
#🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #காலை வணக்கம் *நவநாரிகுஞ்சரம்' சொல்லும் வாழ்க்கைத் தத்துவம்!*
இந்தியாவில் பலவிதமான கோயில்களையும், சிற்பக் கலைகளையும் நாம் பார்த்து, ரசித்து, வியந்திருப்போம். அதில் சில சிற்பங்களை நுணுக்கமாக கவனிக்கும்போதுதான் அதில் உள்ள உண்மையான அர்த்தத்தை நம்மால் உணர்ந்துகொள்ள முடியும். அப்படியிருக்கும் சிற்பங்கள் நமக்கு அதன் வரலாற்றையும், வாழ்க்கைப் பாடத்தையும் கற்பிக்கும். அத்தகைய வியப்பான ஒரு சிற்பக்கலை குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
‘நவநாரிகுஞ்சரம்’ என்றால் என்னவென்று தெரியுமா? நவநாரிகுஞ்சரம் என்பது சமஸ்கிருத வார்த்தையாகும். இதில் ‘நவ’ என்றால் ஒன்பது, நாரி என்றால் பெண், குஞ்சரம் என்றால் யானை.
இந்த சிற்பத்தில் ஒன்பது பெண்கள் வெவ்வேறு முகபாவனையை கொண்டு யானை போன்ற வடிவத்திற்குள் காட்சியளிப்பார்கள். இந்த அரிய வகை சிற்பத்தை தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டம், தேவிகாபுரத்தில் உள்ள
ஸ்ரீ கனககிரீஸ்வரர் ஆலயத்தில் காணலாம். ஆழ்வார்திருநகரி அருள்மிகு ஆதிநாத சுவாமி கோயில், திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள திருக்குறுங்குடி பெருமாள் கோயில் ஆகிய இடங்களிலும் இந்தச் சிற்பம் உள்ளது.
இந்த சிற்பத்தில் முதலில் நம் கண்களுக்குத் தெரிவது யானை உருவமே! கொஞ்சம் சற்று உற்றுப் பார்த்தால் ஒன்பது பெண்களின் உருவம் இதில் தெரியும். ஒவ்வொரு பெண்களின் முகத்திலும் ஒவ்வொரு முகபாவனையைக் காணலாம். நவரசத்தையும் தங்களது முகத்தில் வைத்து இவர்கள் காட்சி தருகிறார்கள்.
நவரசம் என்பது நகை, அழுகை, இளிவரை, மருட்கை, அச்சம், பெருமிதம், வெகுளி, உவவை, அமைதி ஆகியவையாகும். இவற்றை முகபாவனை மூலம் வெளிப்படுத்தலாம். அத்தகைய முகபாவனைகள் கொண்ட பெண்களே நவநாரிகுஞ்சர சிற்பத்தில் செதுக்கப்பட்டுள்ளனர் என்பதே இந்த சிற்பத்தின் சிறப்பாகும்.
ஆலயங்களில் அமைந்திருக்கும் இந்த நவநாரிகுஞ்சரம் சிற்பம், நம்முடைய வாழ்க்கையில் ஒருமுறையாவது இதுபோன்ற நவரசத்தையும் நாம் உணருவோம். அப்படி நடக்கும்போது வாழ்க்கையில் அது ஒரு பகுதி என்று எண்ணி அதை குஞ்சரமாகிய யானையை போல வலிமையாக எதிர்கொள்ள வேண்டும் என்பதே இந்த சிற்பம் கூறும் தத்துவப் பொருளாகும்.
கோயில் சிற்பங்களில் எண்ணற்ற வாழ்க்கைத் தத்துவங்கள் அடங்கியிருக்கின்றன. சற்று அமைதியாக இவற்றை கவனித்துப் பார்த்தால் புரியும். கோயிலில் இந்த சிற்பங்களை அமைத்ததற்குக் காரணம், இங்கே வரும் மக்கள் இவற்றைப் பார்த்து அதன் அர்த்தத்தைப் புரிந்து வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களை தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காகவேயாகும். எனவே, நீங்களும் அடுத்த முறை கோயிலில் நவநாரிகுஞ்சரம் சிற்பத்தைப் பார்த்தால், இந்த விளக்கத்தை நினைவில் வைத்து அந்த சிற்பத்தைக் கண்டு தரிசித்து அனுபவியுங்கள்.🌹
#காலை வணக்கம் #🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🖌பக்தி ஓவியம்🎨🙏 அடிநாதமாக விளங்கும் ஆன்மிகம்!*
வாழ்க்கையில் நமது அறிவு வளர்ந்துகொண்டே போய்க்கொண்டிருந்தாலும், நம்முள் பலர், ‘மிக விரைவாக ஓடுகிறேன், ஆனால் எங்கே சென்றுகொண்டிருக்கிறேன் என்பதே தெரியவில்லை’ என்ற எண்ணத்தில் இருக்கிறோம். பணம், பதவி, சொத்து, செல்வம் அனைத்தும் இருந்தும் மனம் ஓர் வகை வெறுமையால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் பயணமே ஆன்மிகப் பயணம். இது நம் உடல் அல்லது உலகை அல்ல, நம் உள்ளத்தையும் உயிரின் அடிப்படையையும் புரிந்துகொள்வதற்கான ஒரு பயணமாகும். ஆன்மிகம் என்பது மதக் கட்டுப்பாடுகளும், சடங்குகளும் அல்ல. மனிதன் தன்னைத் தேடிக்கொள்வது, உணர்வுகளை நிர்வகிப்பது, பிறருக்காக எதையோ செய்ய விழைவது ஆகியவற்றின் தொகுப்பாகும்.
ஆன்மிகம் என்பது ஆன்மா சார்ந்தது. ‘ஆன்மா’ என்பது நம்முள் வாழும் உண்மையான சுயம். நம்முடைய உணர்ச்சி, சிந்தனை, செயல் ஆகியவற்றை ஒருமித்தமாக தூய்மையாக வைத்துக்கொள்ளும் சிந்தனையால் ஆனது ஆன்மிகம். இது நம்மை, ‘நான் யார்?, என் வாழ்க்கையின் அர்த்தம் என்ன?, நான் பிறர் வாழ்க்கையில் எதைக் கொண்டு வர விரும்புகிறேன்?’ எனும் கேள்விகளுக்குப் பதில்கள் தேட வைக்கிறது.
ஆன்மிகத்தின் அவசியம்: இன்றைய உலகம் வேகமானது, போட்டியினால் நிரம்பியது. ஆனால், அந்த வேகத்தில் மன நிம்மதி, பரிவு, பொறுமை, மகிழ்ச்சி ஆகியவை குறைந்து வருகின்றன. அதனால்தான், மன அழுத்தம், விரக்தி, தனிமை, தற்கொலை எண்ணங்கள் கூட உருவாகின்றன. இவற்றுக்கு நிலையான தீர்வு தத்துவங்களோடு நேரடியாக சம்பந்தப்பட்ட ஆன்மிக நெறிகளில்தான் இருக்கிறது. ஆன்மிகம், மனதை அமைதியாக வைத்துக்கொள்ளும் ஒரு தளத்தை உருவாக்குகிறது.
ஆன்மிகம் வாழ்க்கையை மாற்றும் விதம்:
உள்ளார்ந்த அமைதி: பிரச்னைகள் எத்தனை இருந்தாலும், ஆன்மிகத்தைப் பின்பற்றுபவர் உள்ளத்தில் அமைதியை நிலைத்துவைக்கக் கற்றுக் கொள்கிறார்.
அழுத்த நிலையை சமாளிக்கிறது: விபத்துகள், தோல்விகள் போன்றவற்றை சமாளிக்க மனத் தூண்டுதலை அளிக்கிறது.
சுய ஒழுக்கம் மற்றும் நேர்மை: உண்மை பேசுதல், தவறுகளுக்கு மன்னிப்பு கோருதல், பொறுப்புடன் நடத்தல் போன்ற நற்பண்புகள் வளர்க்கப்படுகின்றன.
பிறரிடம் கருணை: ஆன்மிகம் ஒருவர் தனக்கு மட்டும் வாழாமல், பிறரையும் புரிந்து கொள்ளச் செய்கிறது.
சுய உணர்வு மற்றும் வாழ்வியல் தெளிவு: வெற்றி, தோல்வி இரண்டையும் சமமாக எதிர்கொள்வதற்கான மனநிலையை உருவாகிறது. பெரும்பாலோர், ‘ஆன்மிகம் என்பது மத சடங்குகளோடு தொடர்புடையது’ என்று எண்ணுகிறார்கள். ஆனால், உண்மையில் ஆன்மிகம் என்பது எல்லா மதங்களுக்கும் அடிப்படைக் கருத்தாக இருக்கிறது. ஆன்மிகம் என்றால் கோயிலுக்கு மட்டும் போவதல்ல, ஒருவரை வருத்தாமல் வாழ்வதே உண்மையான ஆன்மிகம்.
இளைஞர்கள் மற்றும் ஆன்மிகம்:
இன்றைய இளம் தலைமுறைக்கு அதிக அறிவு, திறன், தொழில்நுட்ப அறிவு ஆகியவை இருப்பினும், மனநிறைவு குறைவாகவே உள்ளது. இதன் காரணம் உள்ளார்ந்த தொடர்பு இல்லை. பள்ளியிலிருந்தே ஆன்மிகப் பயணத்தின் சிறு தூண்கள் விதைக்கப்பட வேண்டும். தியானம், யோகா, நேர்மையான உறவுகள், நற்கதைகள், பெரியோர்களின் அனுபவங்கள் போன்றவை அவர்களை நேர்மையான வழியில் வளர்க்கும். வெற்றிக்காக மட்டுமல்ல, அர்த்தமிக்க வாழ்வுக்காகவும் இளைஞர்கள் ஆன்மிகத்தைப் பின்பற்ற வேண்டும்.
ஆன்மிகம் என்பது மனித வாழ்வின் தேவை. அறிவு வளர்ச்சி நமக்கு வசதியை அளிக்கிறது. ஆனால், ஆன்மிகம் நமக்கு அமைதியையும் அர்த்தத்தையும் அளிக்கிறது. இது ஒரு இலட்சிய வாழ்க்கையின் தாய்மொழி எனலாம். தெய்வத்தையே காணவில்லை என்றாலும், தெய்வீக எண்ணங்களை வளர்த்துக்கொள்வதே ஆன்மிகம். ஆன்மிகம் வாழ்வின் வழிகாட்டுதலாக இருக்கட்டும்; அதனால் நம் வாழ்க்கை வெளிச்சமாகட்டும்.🍀




![நாம் தமிழர் - IUSII புதிய தலைமுறை சிலகப்கைமாவம காரைக்குடி சன்மத்லபட்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் billlfllltu] செந்தமிழன்சீமான் திருவிழா 26 தேர்தல் 2026 சட்டமன்றத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் IUSII புதிய தலைமுறை சிலகப்கைமாவம காரைக்குடி சன்மத்லபட்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் billlfllltu] செந்தமிழன்சீமான் திருவிழா 26 தேர்தல் 2026 சட்டமன்றத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - ShareChat நாம் தமிழர் - IUSII புதிய தலைமுறை சிலகப்கைமாவம காரைக்குடி சன்மத்லபட்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் billlfllltu] செந்தமிழன்சீமான் திருவிழா 26 தேர்தல் 2026 சட்டமன்றத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் IUSII புதிய தலைமுறை சிலகப்கைமாவம காரைக்குடி சன்மத்லபட்தி தலைமை ஒருங்கிணைப்பாளர் billlfllltu] செந்தமிழன்சீமான் திருவிழா 26 தேர்தல் 2026 சட்டமன்றத் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_486998_18be6b3e_1771739485225_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=225_sc.jpg)






