👉 ஒரு வரி படித்து விட்டு அனைத்துமே படித்து கரைத்து குடித்தது போல காட்டிக்கொண்டு இருப்பது முட்டாளைவிட வடிக்கட்டிய முட்டாள்கள் செய்யும் காரியம் ஏனேனில் (படித்தது கற்பது) அனைத்துமே
கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு நினைவில்கொள்ள வேண்டும் 👈
👉 My Reality Poetry 👈
👉 சுதர்சன் ஆகிய நான் இப்பொழுது சொல்வது இதுவும் சரி✔இனி வரும் காலத்தில் சொல்ல போவது அதுவும் சரி✔யாக தான் இருக்கும் (தீர்க்கதரிசி) 👈
ஒருவர் இருக்கும் போது
கொண்டாடப்படாத கவனிக்கப்படாத வீடு மக்கள் உலகம்
அவர் இறந்தபின் அவரை கொண்டாடி பயன் என்ன
மாண்டவர் மீண்டுமா வரப்போகிறார் சுவர் இருக்கும் பொழுதே நல்ல பயனுள்ள சித்திரம் வரைய பழகு அந்த சித்திரம் மட்டும் தான் உன் ஆயுட்காலம் ஆனால் அந்த சித்திரத்தின் ஆயுட்காலம் வரை உன் மறைவுக்குப் பின்பும் உன் புகழ் பேசப்படும் இதை உணர்ந்தால் போதும்...!!
உன்னிடம் என்னிடம் கேட்கப்படும் கேள்விக்கு நாம் மட்டுமே விடை அறிவோம்
நாம் கடவுளிடம் கேட்கப்படும் கேள்விக்கு உலகறிய பதில் கிடைக்கும் கடவுளிடம் இருந்து ஆகையால் அடக்கத்துடன் நன்னடைத்தை உடன் வாழ்வோம்...!!
இன்பமோ துன்பமோ
உறவாக நட்பாக நம்முடயே உடலில் இணைந்து பிறந்த நம் கண்கள் தான் முதலில் கலங்கும் அப்படி கலங்கி அதிலிருந்து எட்டி பார்க்கும் கண்ணிரை நம்முடைய உடலில் இணைந்தே பிறந்த கைகள் மட்டும் தான் முதலில் அந்த கண்ணிரை துடைக்க துடிக்கும் பிறகு தான் மற்ற எல்லா நம்முடன் பிறந்து இணைந்த மற்ற அனைத்து உறவுகளுமே பின்னே தான் வரும்
(அப்படி ஒரு நல்ல உறவு நமக்கு கண்களாக கைகளாக இருந்தால் நம் வாழ்வில் நாம் வாழும் பொழுது இங்கேயே நாம் சொர்க்கத்தை காணலாம்)...!!
வார்த்தை தடுமாற கண்களும் எண்ணமும் தான் காரணம்
வாழ்க்கை தடுமாற நம்
தீயஎண்ணங்கள்
தீயபழக்க வழக்கம்
தீயசகவாசம் தான் காரணமாக இருக்க முடியும்...!!
மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு வாழ தேவையில்லை நம்மளை நமக்கே திருப்திப்படுத்தும் வாழ்க்கையை நாம் வாழ்ந்தாலே போதும் நிம்மதி சந்தோஷம் அந்த வாழ்க்கையில நமக்கு கிடைத்துவிடும்...!!
இதயம் என்பது
ஒரு கண்ணாடி போன்றது
எவ்வளவுதான் நாம் பாதுகாத்தாலும்
என்றோ ஒரு நாள் யாராவது ஒருவரால் நிச்சயம் உடைந்தே தீரும்...!!
பிடித்தவர்கள் பிடித்தவர்களாக
இருப்பதை விட
நம்மை புரிந்து புரிந்தவர்களாக இருப்பது அதைவிட சிறந்தது...!!
உன் முன்னேற்றத்தில் பல சறுக்குகள் இருக்கலாம்
ஆனால் நீ முன்னேறி செல்வதை மட்டும் என்றும் நிறுத்தி விடாதே...!!
அன்புக்கு அடிமையாகின்றவர்களை
உங்கள் திமிருக்கு அடிமையாக்க நினைகாதீர்கள்
இதன் விளைவு அவர்களின் அன்பை மட்டும் இல்லை
அவர்களையே நீங்கள் இழக்க கூடும்...!!
உலகில் நிதர்சன உண்மை என்னவென்றால்
யாரு
எப்போ
எப்படி
மாறுவார்கள் என்று தெரியாத உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் தொலைந்து போனதை மட்டும் தேடுங்கள் விட்டு சென்றவை எதையும் நினைத்து கூட பார்க்காதீர்கள்...!!
விழியோரம் வழியும் கண்ணீருக்கு
வலிகள் ஆயிரம் காரணம் ஆயிரம்
அந்த வலிகளை தாண்டி நமக்குள் ஏற்படும் தன்னம்பிக்கை வேர் ஊன்றிய பின் வலுவான ஆலமரமாக நிற்கும் இவை சுலபத்தில் சாயாது...!!
மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப்படுவதை
பணத்தால் காட்டாதீர்கள் உங்கள்
நல்ல குணத்தால்
நல்ல பண்பால்
நல்ல எண்ணத்தால்
நல்ல அறிவுரையில்
மட்டுமே காட்டுங்கள்...!!
💘🐦💜 Sudarsan
Sudarsan 💜🐦💘 #💞Feel My Love💖 #💝இதயத்தின் துடிப்பு நீ #🤔தெரிந்து கொள்வோம் #💖நீயே என் சந்தோசம்🥰 #📶ஷேர்சாட் டிரெண்டிங் போஸ்ட்🎥


