ShareChat
click to see wallet page
search
💥 சுசீந்திரம் அருகே பூதத்தார் இசக்கியம்மன் கோயிலில் திருட்டு: 12 மணி நேரத்தில் குற்றவாளி கைது சுசீந்திரம் அருகேயுள்ள ஆசிரமம் பகுதியில் உள்ள வடிவீஸ்வரம் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பூதத்தார் இசக்கியம்மன் கோயிலின் கதவை உடைத்து திருட்டு நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு கோயிலுக்கு வந்த பூசாரி, ரூ.1500 மதிப்புள்ள பித்தளை சூலாயுதம் காணாமல் போனதை கவனித்து நிர்வாகத்திடம் தகவல் அளித்தார். இதுகுறித்து அஞ்சன மெழுதிய கண்டன் சாஸ்தா கோயில் செயல் அலுவலர் கொம்பு குமார் அளித்த புகாரின் பேரில் சுசீந்திரம் போலீசார் விசாரணை நடத்தினர். மருங்கூர் அமராவதி விளையை சேர்ந்த மரிய சேவியர் (37) கைது செய்யப்பட்டு நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 12 மணி நேரத்தில் குற்றவாளியை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினர். #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல்
📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் - 3418 3418 - ShareChat