#🚨கற்றது அரசியல் ✌️ #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴 #📺வைரல் தகவல்🤩 #🚹உளவியல் சிந்தனை
நான் ஒரு சவால் விடுகிறேன். இந்த செய்தியில் கடைசியாக உள்ள 'மார்ச் 1-ம் தேதி திருப்பரங்குன்றம் கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார்' என்கிற நிகழ்வு மட்டும் நிச்சயமாக நடக்காது.
ஏனெனில்...
மோடி சிறுவயதில் டீ விற்றபோது..
ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் பிரச்சார பீரங்கியாக செயல்பட்டபோது...
இந்திரா காந்தியின் அவசர நிலை பிரகடனத்தின்போது கைதுக்கு பயந்து ஊர் ஊராக மாறுவேடங்களில் சுற்றி திரிந்தபோது...
குஜராத் முதல்வராக மூன்று முறை பதவி வகித்தபோது...
பிரதமராக தற்போது மூன்றாவது முறையாக பதவியில் உள்ளபோது என அனைத்து காலக்கட்டங்களிலும் மோடி ஒரு முருகன் கோயிலுக்கு நேரடியாக சென்று தரிசனம் செய்த நிகழ்வு இதுவரை நடக்கவே இல்லை.
இதை நிரூபிக்கும் எந்த ஆதாரப்பூர்வமான தகவலும், புகைப்படமும் எங்கேயும் இல்லை.
ஆனால், ஒரே ஒரு நிகழ்வு மட்டும் நடந்தது.
கடந்த 2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்தோனேசிய தலைநகரான ஜகார்த்தாவில் நடைப்பெற்ற முருகன் கோயில் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்தார்.
அதாவது, இந்தியாவில் இருந்துக் கொண்டே வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மட்டுமே பங்கேற்றாரே தவிர நேரடியாக முருகன் கோயிலுக்கு செல்லவில்லை.
ஆக, மார்ச் 1-ம் தேதியும் ஏதாவது காரணத்தை சொல்லி திருப்பரங்குன்றம் கோயிலுக்கு செல்வதை நிச்சயம் தவிர்த்து விடுவார்.
உதாரணமாக...
கடந்த மாதம் NDA கூட்டணியில் பேச மோடி மதுராந்தகம் வந்தது உங்களுக்கு தெரியும். ஆனால், முதலில் மதுரையில் கூட்டம் நடத்தி விட்டு திருப்பரங்குன்றம் செல்வதாக தான் திட்டம் தீட்டப்பட்டது. ஆனால், முருகன் கோயிலுக்கு செல்லக் கூடாது என்பதற்காகவே அவர் அந்த கூட்டத்தை மதுராந்தத்திற்கு மாற்றி அமைத்து விட்டார்.
இதே தான் அடுத்த மார்ச் மாதமும் நிகழப்போகிறது.
மோடியை பொருத்தவரை அவருக்கு இரண்டு பேர் தான் கடவுள்கள். ஒன்று சிவன், மற்றொன்று இராமர்.
ஏனெனில், இவர்கள் இருவரும் உயர்ந்த கடவுள்கள் மற்றும் இந்தியா முழுவதும் பிரபலமான கடவுள்கள். இவர்களை முன்னிறுத்தி அரசியல் செய்தால் வாக்குகளை அள்ளலாம்.
ஆனால், முருகன் தென்னிந்தியாவில் மட்டுமே, குறிப்பாக தமிழகத்தில் மட்டுமே மிகவும் பிரபலமானவர். வட மாநிலங்களில் ஸ்கந்தா என்ற பெயரில் வழிப்பட்டாலும் முருகன் அங்கே சிவன், இராமர் போல பிரபலமானவர் இல்லை. அரசியலில் முருகனை முன்னிறுத்தி வாக்குகளை சேகரிக்க முடியாது.
பொறுத்து பாருங்கள்....மார்ச் 1-ம் தேதி திருப்பரங்குன்றம் செல்லும் திட்டம் கடைசி நேரத்தில் மாற்றி அமைக்கப்படும்!!


