#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
பூஞ்சோலை அழகாய் பூத்தது
அது
காவல் இன்றி கிடந்தது
அதில்
காற்று மோதிச் சென்றது
அதை
வாசம் கவ்விக்கொண்டது
நேராக
வண்டின் மூக்கில் நுழைந்தது
பசித்த
வண்டு வாசம் தேடி வந்தது
அந்த
அழகிய சோலையை கண்டது
உள்ளே
உற்சாகத்தோடு புகுந்தது
பூத்த மலரில் அமர்ந்தது
தேனை உண்டு மகிழ்ந்தது
வண்டமர்ந்து உண்டு சென்ற
மகிழ்சியில்
பூத்தது இன்னும் அழகாய்
சிரித்தது


