
சேகர்
@2593507698
தேவைகளின் தேடல் களில்
ஓடிக் கொண்டிருப்பவன்..,
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
என் தோட்டத்தில் பறக்கும் பட்டாம் பூச்சிகளை
பார்க்கிறேன் அது தோட்டது மலர்களின்
அழகோடு போட்டி போடுவதை
நான் ரசிக்கிறேன்
என் தோட்டத்தில் மலர்கள் இருப்பதை
யார் சொன்னதென வியக்கிறேன்
வண்ண வண்ண ஆடையில் பட்டாம் பூச்சிகள் பறந்தாலும்
மலர்கள் பட்டாம்பூச்சியை தேடி
போவதில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உன்னால் எனக்கு புதிதாக என்ன
தந்துவிட முடியும்
அன்பு பாசம் என்னும் சுயநலம்
கலந்த
பசப்பு வார்த்தைகளைத் தவிர
அதெல்லாம் இங்கே
பழைய மாவு தான் இப்பொழுது
உன்னிடம் நான் வேண்டுவது புரிதல் மட்டுமே அதுதான்
நம்மை வாழ்க்கைப் பாதையில் நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
உன் கேள்விக்கு நான் சொல்லும்
பதில்
உன்னை சமாதானம் செய்யுமா தெரியவில்லை ஆனாலும்
உன்னிடம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை
உனக்காக என்று இதுநாள் வரை
போதும் இனி
எனக்காக நான் வாழ
ஆசைப்படுகிறேன் நீ இல்லாமல்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை
அதோ போகும் மேகத்திடம் தான்
அவளைப் பற்றி சொல்லி அனுப்பினேன்
என்ன வேலையோ தெரியவில்லை
நின்று கூட கேட்காமல் ஓடுகிறது
மிக உயரத்தில் செல்வதால் எப்படியும்
அதன் கண்களில் பட வாய்ப்பிருப்பதால்
எளிதாக தகவல் பரிமாற்றம் நடக்கும்
என் நினைத்து
தினமும் எனக்கு இதே வேலையாகி
விட்டது
சொல்லியிருந்தால் எப்படியும் என்னைத் தேடி வந்திருப்பாள்
தகவல் போனதா இல்லையா என்ற
தவிப்பில் நான்
கவிதையவளைக் காணாமல்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
விரும்பி ஏற்க காரணம் கேட்டால்
எதை சொல்வது
பிரித்துப் பார்த்து சொல்லத்
தெரியாமல்
முழிக்க வைக்கும்
வேண்டாம் என்று முடிவு எடுத்தால்
அதன் பின்
ஆயிரம் காரணங்கள் யோசிக்காமல்
சொல்ல முடியும்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
சேர்ந்து இருந்து இருந்தால் உன்
மீதான என்
அன்பு அப்படியே நீடித்திருக்குமா
தெரியவில்லை
இம்மியளவும் குறையாமல் இன்னும்
என் நேசம்
கூடிக்கொண்டே போகிறதே நீ என்
நினைவில் இருந்து அகலாததால்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
பூக்கள் கடிந்து கொள்வதில்லை
அனுமதி இன்றி முத்தமிட்டுச்
செல்லும் வண்டுகளை
அதற்காகத் தானே என்னைப்
படைத்தான்
நான் காத்திருப்பதும் அதற்காகத்
தானே
புதுக்கவிதை நான் என்று எனக்குத்
தெரியும்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
தலைகோதும் இளங்காற்று தன்
காதலை சொல்லிப் போகும்
தாலாட்டும் தென்றல் எனைத் தழுவிப் போகும்
உன் அருகாமையில் நான் உணர்ந்தது
சீறும் புயல் காற்றை சில நொடி தன்னில்
உன் பார்வையில் கண்டேன் காரணம் தான் தெரியவில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
அதோ சூரியன் மேற்கே மறைகிறான்
இதோ இன்னும் கொஞ்ச நேரத்தில்
நிலவும் வந்துவிடும்
இறைந்து கிடைக்கும் நட்சத்திரங்கள் மின்னத் தொடங்கிவிடும்
இது வரையிலும் நான் காத்திருப்பது
வீண் என்று
தோன்றவில்லை எனக்கு நீ வருவாய்
என்ற நம்பிக்கையில்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
மொட்டுகள் பூக்கும் நேரத்தில்
காற்றில் பரவிய நறுமணம்
வண்டுகளுக்கு செய்தியாக
அழையா விருந்தாளியாய்
பூத்து காத்து கிடக்கும் கவிதையை
முத்தமிட்டு போக வந்ததே வண்டு












