
சேகர்
@2593507698
தேவைகளின் தேடல் களில்
ஓடிக் கொண்டிருப்பவன்..,
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
உண்மை என்ற நம்பிக்கையோடு
போய்க்கொண்டிருக்கும் போது
இல்லை அது போலி என்று காலம் உணர்த்தும் வரை
கண்மூடித்தனமான நம்பிக்கை
நம்மை வழிநடத்துகிறது அதுவே
பிறகு
பெரிய வலியைத் தருகிறது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
காமத்திற்கு பின்னால் ஒளிந்து கொண்டு
காதல் இது என்று சொல்லி
சதைப் பசியெடுத்து திரியும்
உறவில்லை
மென்மையான உணர்வுகளுக்கு பின்னே
உறுதுணையாக நின்று ஒளிவு
மறைவை
நாடாத உன்னத உறவு இது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
வழியில் எதிர்பாரா
வகையில்
இரு ஜோடி
விழிகள் மோதிக்
கொண்டது
காயம் ஏதுமின்றி
காயத்தில் உள்
நுழைந்து
அழகெனும் மந்திரம்
செய்த மாயம்
தந்திரம் ஏதுமின்றி
காதலாய் வெளி
வந்தது
சில பரிமாற்றங்கள்
நிகழ்ந்தது
புரிந்தது எனக்கு
இது உயிருள்ள
வரைத் தொடரும்
பந்தம் என
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களுக்கு
இளைப்பாறுதல் கிடைக்குதாம்
வாகனத்தின் பின்னால் எழுதப்பட்ட
வாசகம்
வாசித்த பின்னே என் பாரத்தை இறக்க
நினைத்தேன்
எங்கே எப்படி என்று தான் தெரியவில்லை
காதல் பரிசாய் கிடைத்த தூங்க முடியா இரவுகளில்
முள்ளாய் அவளின் நினைவுகள்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
நல்லவர் ஒருத்தர் இருந்தா
போதுமாம்
அவருக்காகவே அந்த ஊரில்
மழை பெய்யுமாம்
நல்லாதான் சொல்லிட்டுப்
போனார் அந்த
மழைகூட என்னை நனைத்து
பார்க்கவே
நினைப்பதை எங்கேயாவது
சொன்னாரா
பாவம் எப்படி சொல்வார்
அவருக்கும் மனைவி என்று
ஒருவள்
இருக்கும் போது
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
மீட்டாத வீணையில் உறங்கும்
ராகங்களை
யாரும் தட்டி எழுப்பும் வரை
அதன்
உறக்கம் கலைவதில்லை தட்டி
எழுப்பி
ஸ்ருதி கூட்டி விட்டால் யாரும்
உறக்கம் கொள்வதில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
வான்வெளியின் முழுநிலவு
பூமியில் என்னை விடாது
தொடர்கிறது
என நினைத்தேன் இல்லை
நான் ஒரே இடத்தில் தான் இருக்கின்றேன்
நீ தான் என்னை சுற்றிச்
சுற்றி வருகிறாய் என்றது
உண்மை தான் ஊரே வியக்க
நான்
மட்டும் என்ன விதிவிலக்கா
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
சில உண்மைகள் கசக்கத்தான் செய்கிறது
மருந்து கசக்கத்தானே செய்யும்
உண்டால் தான் குணமாகும்
எனில்
கசப்பை மறுத்து விடுமா இல்லை
கசப்பை மறந்து தான் போகுமா
மனம்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
என் சுவாசத்தில் இறங்கி நீ
அங்கே
வாசம் செய்ய தொடங்கிவிட்டாய்
என் உள்ளத்தில் உள்ளதை
உனக்கு உணர்த்திவிட்டேன்
மௌனமாய் பர்த்துச் செல்கிறாய்
உன் மௌனத்தை எப்படி நான்
எடுக்க
சம்மதம் என்றா சந்தேகமாய்
இருக்கிறது
கொஞ்சம் தெளிவுபடுத்திவிடு
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உன்னை பார்த்ததில் இருந்து எதுவும்
ஓடவில்லை
பைத்தியம் பிடிக்கும் போல
பைத்தியம் பிடித்தால் வைத்தியம்
உண்டாம்
எதற்காக வைத்தியம் உனக்கு தான்
என்னை பிடிக்கவில்லையே
என்னை பிடித்ததால் தானே பைத்தியம் என்னை பிடித்தது












