
சேகர்
@2593507698
தேவைகளின் தேடல் களில்
ஓடிக் கொண்டிருப்பவன்..,
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
மண்ணில்லை விதையில்லை
வேரில்லை நீரில்லை இவை
ஏதுமின்றி காதல் முளைக்கிறதே
ஆச்சரியம்
எப்படி இது சாத்தியம் அதிசய
வனமோ காதல் வனம்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
இதயத்தில் ஒரு கல்லறை
தாஜ்மஹால் காட்சிப்
பொருள் ஆனது போல்
காட்சிப்படுத்தவில்லை நான்
அதில்
பசுமையான நினைவுகளைப்
பூட்டி
சுமந்து திரிகிறேன் சில நேரம்
நான் திறக்காமலே வெளியில்
வந்து
என்னை பார்த்துச் செல்லும்
நானும்
எதுவும் சொல்வதில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
சில நேரங்களில் படைப்பாளி
மகிழ்ச்சியான மனநிலையில்
இருப்பான் போல அப்படியான
சந்தர்ப்பத்தில் தான் இப்படியான
ஓவியங்கள் உயிர் பெறுகிறது
கவிதையாய்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
உன் பார்வை எனும்
போர்வையால் என்னை
போர்த்திவிட பார்க்காதே
அப்படியே
ஐக்கியமாகி விடுவேன்
பிறகு
என்னை வெளியேற்றும்
முயற்சியில்
நீ தோற்றுப்போவாய்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#இதோ_ஒரு_கவிதை
மயில் இறகின் வருடலாய் உன்
பார்வை
சொக்கிப் போகிறேன் உலகை
மறந்து
தலைகோதி கனவுலகில் கை
பிடித்து
அழைத்து செல்கிறாய் நிஜ உலகின்
நிதர்சன உண்மைகள் பெரிதாக என்
கருத்தை கவரவில்லை கற்பனையில்
காலம் போகிறது கவிதையாய்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
என் தோட்டத்தில் பறக்கும் பட்டாம் பூச்சிகளை
பார்க்கிறேன் அது தோட்டது மலர்களின்
அழகோடு போட்டி போடுவதை
நான் ரசிக்கிறேன்
என் தோட்டத்தில் மலர்கள் இருப்பதை
யார் சொன்னதென வியக்கிறேன்
வண்ண வண்ண ஆடையில் பட்டாம் பூச்சிகள் பறந்தாலும்
மலர்கள் பட்டாம்பூச்சியை தேடி
போவதில்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
உன்னால் எனக்கு புதிதாக என்ன
தந்துவிட முடியும்
அன்பு பாசம் என்னும் சுயநலம்
கலந்த
பசப்பு வார்த்தைகளைத் தவிர
அதெல்லாம் இங்கே
பழைய மாவு தான் இப்பொழுது
உன்னிடம் நான் வேண்டுவது புரிதல் மட்டுமே அதுதான்
நம்மை வாழ்க்கைப் பாதையில் நீண்ட தூரம் அழைத்துச் செல்லும்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
உன் கேள்விக்கு நான் சொல்லும்
பதில்
உன்னை சமாதானம் செய்யுமா தெரியவில்லை ஆனாலும்
உன்னிடம் நான் பொய் சொல்ல விரும்பவில்லை
உனக்காக என்று இதுநாள் வரை
போதும் இனி
எனக்காக நான் வாழ
ஆசைப்படுகிறேன் நீ இல்லாமல்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை
அதோ போகும் மேகத்திடம் தான்
அவளைப் பற்றி சொல்லி அனுப்பினேன்
என்ன வேலையோ தெரியவில்லை
நின்று கூட கேட்காமல் ஓடுகிறது
மிக உயரத்தில் செல்வதால் எப்படியும்
அதன் கண்களில் பட வாய்ப்பிருப்பதால்
எளிதாக தகவல் பரிமாற்றம் நடக்கும்
என் நினைத்து
தினமும் எனக்கு இதே வேலையாகி
விட்டது
சொல்லியிருந்தால் எப்படியும் என்னைத் தேடி வந்திருப்பாள்
தகவல் போனதா இல்லையா என்ற
தவிப்பில் நான்
கவிதையவளைக் காணாமல்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
விரும்பி ஏற்க காரணம் கேட்டால்
எதை சொல்வது
பிரித்துப் பார்த்து சொல்லத்
தெரியாமல்
முழிக்க வைக்கும்
வேண்டாம் என்று முடிவு எடுத்தால்
அதன் பின்
ஆயிரம் காரணங்கள் யோசிக்காமல்
சொல்ல முடியும்












