
சேகர்
@2593507698
தேவைகளின் தேடல் களில்
ஓடிக் கொண்டிருப்பவன்..,
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
எத்தனை நாட்கள் இது தொடரும்
இந்த கேள்விக்கு
உன்னிடம் மட்டுமே பதில் உள்ளது
பதில் கிடைக்கும் வரை தொடரும்
இந்த
முயற்சி அது என்னிடத்தில் உள்ளது
பதிலே இல்லாது போனால் என்ற
கேள்வி ஒலிக்கிறது
என் முயற்சி மட்டுமில்லை நானும்
மாறுவதாக இல்லை
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
கண்ணுக்கு புலப்படாத
காற்றில் மிதக்கிறேன்
கட்டுக்கு அடங்காத
கடல் நீரில் நடக்கிறேன்
வானில் தவழும்
மேகத்தில் நீந்துகிறேன்
கண் மூடி கற்பனையில்
உழல்கிறேன் காதலில்
உன்னைக் காணும் போதும்
உன் காதலை நீயெனக்கு
சொல்லாத போதும்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
விதைக்குள் மரம் இருப்பது
யார் அறிவார்
விதை மட்டுமே அறியும்
எனக்குள் நீ இருப்பதை யார்
யார் அறிவார்
என்னைத் தவிர
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
பசுமரத்தாணியாய் பதிந்து
விட்ட இன்னும்
மறக்க முடியாத நிமிடங்களை
எடுத்துக் கொண்ட நிகழ்வுகளை
அசை போட்டபடி அமர்ந்து
இருக்கிறேன்
தனிமையில் அந்த இனிமையில்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
தட்டினால் திறக்குமாம் தேவன்
கோயில் மணிக் கதவு
பாவையவள் பார்த்ததும்
தட்டாமலே திறந்து கொண்டதே
என் மனக் கதவு
விதைக்காமலே முளைத்ததே
காதல்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
சீரும் கடலலைகளின் பேரிரைச்சல்
கரை மோதும் கோபம்
காதிலேயே விழாதது போன்ற
அமைதியில் கடற்கரை
மனைவியின் பெருங்கோபக் கூச்சல் காதில் வந்து மோதும்
அருகேயே அமைதிகாக்கும் கணவன்
இந்த மௌனம் தான் உறவு நீடிக்க
காரணமாகிறதோ
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை🌹
அழகில்லை நீ என் கண்களில்
விழுந்த பின் என் மனம்
சொன்னது பேரழகி நீ என்று
உண்மை தான் உன்னை
பார்த்த பின் என் கருத்தை
எதுவும் கவரவில்லையே பிறகு
எப்படி உன்னை அழகியென
மட்டும் சொல்ல
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
பிறந்தது எதற்காக என்று
எப்பொழுதும் யோசித்தது
இல்லை
உன்னைக் காணும் வரை
உன்னைக் கண்ட பிறகு
உனக்கானது இந்த பிறப்பு
என தெரிந்துக் கொண்டேன்
இனி என் பிறப்பில் எல்லாம்
உன்னைக் காண வேண்டும்
என ஆசைக் கொண்டேன்
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
கவிதையில் கருவாய் நீ
உறக்கத்தில் கனவாய் நீ
பூக்களின் வாசத்தில் நீ
புது
உடையின் வண்ணத்தில் நீ
பூங்காவின் மரநிழலாய் நீ
கால் நனைத்து போகும்
கடல் அலையாய் நீ
காணும் இடமெல்லாம் நீ
உன்னைக் காணாது இனி
தொடருமோ என் பணி
#💝💌 கவிதைகள் 🎈🌷🥀 #காதல் கவிதைகள் 🎈🌷🥀
#தினமொரு_கவிதை 🌹
யார் விதைத்த வித்து
கண்ணை கவர்ந்ததே
அந்த முத்து
முதல் பார்வையிலே
பிடித்ததே பித்து
இதுதானோ எனக்கு
இறைவன் தந்த சொத்து












