#நல்லதே பேசு நல்லதே நினை .பி.யை முஸ்லிம் மக்கள் கழக நிறுவனர் மரியாதை நிமித்தமாக சந்திப்பு
விழுப்புரம், பிப். 18:
விழுப்புரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வி.வி. சாய் பிரனீத் அவர்களை, முஸ்லிம் மக்கள் கழகத்தின் நிறுவனத் தலைவர் முனைவர் ச.சு. ஜைனுதீன் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்த சந்திப்பு 18.2.2026 அன்று நடைபெற்றது. அப்போது மாவட்டத்தில் நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலை, சமூக ஒற்றுமை மற்றும் பொதுநல தொடர்பான பல்வேறு அம்சங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக கூறப்படுகிறது. சமூக நல்லிணக்கம் பேணுதல் மற்றும் பொதுமக்கள் நலன் சார்ந்த முயற்சிகளில் காவல்துறையுடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக கழகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் முஸ்லிம் மக்கள் கழகத்தின் மாநில இளைஞரணி தலைவர் வி. விக்ரம், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக நிர்வாகிகள், திண்டிவனம் நகர தலைவர் டி.சி.எம். உசேன், வானூர் தொகுதி செயலாளர் க. செல்வம், விக்கிரவாண்டி குமளம் சு. பழனி, திண்டிவனம் இருதயபுரம் அ. தாவூத் அலி, விழுப்புரம் மாவட்ட விவசாய சங்க செயலாளர் அன்னியூர் சு. ஏழுமலை உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


