“பெரியாரிய இயக்கங்களின் ஒற்றுமைக்கு பயப்படும் பிஜேபி — பாரதி, பெரியார் விவாதங்களின் பின்னணிக் காரணம்”
தமிழ்நாட்டில் நடைபெறும் ஒவ்வொரு முக்கிய அரசியல் நிகழ்வின் பின்னணியிலும், குறிப்பாக தேர்தல் முன்பாக, சில திட்டமிட்ட அரசியல் முயற்சிகளை நாம் தெளிவாகக் காணலாம். இன்று பாரதியின் மீதான தீடீர் பாசத்துக்கும், பெரியார் குறித்த அருவறுக்கதக்க அவதூறு முயற்சிகள் ஏன் திடீரென மீண்டும் அதிகரித்துள்ளன என்பதற்கு பதில் — வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களில் பிஜேபி எதிர்கொள்ளவிருக்கும் சவால்கள் தான்.
அதாவது 2019இல் நடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது, தமிழ்நாட்டில் பிஜேபியின் மோடி வழக்கத்தை விட மோசமாக மண்ணை கவ்வினார். அப்போது இது குறித்து பத்திரிக்கையாளர்களிடம் பேசிய பிஜேபியின் வானதி சீனிவாசன், இங்குள்ள இயக்கங்களால் தான் நாங்கள் தோற்றோமென்று வெளிப்படையாக சொன்னார். இப்படி அவர் சொன்னதற்கு பின்னால் இருந்தது என்னவென்றால்,
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தோழர் திருமுருகன் காந்தி இரண்டாவது முறையாக பெங்களூர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட பொழுது, தோழர் அரங்க குணசேகரன் அவர்களிடம் பெரியார் உணர்வாளர்கள் அனைவரையும் ஒன்றுதிரட்டி ஒரேமேடையில் நிறுத்தி பிஜேபி சங்கிகளுக்கு தமிழ்நாடு என்பது என்னவென்று காட்டவேண்டுமென்றும் பேசியதன் விளைவாக, தோழர் சிறையிலிருந்து வந்ததிலிருந்து பல்வேறு தலைவர்களை சந்தித்து இதற்கு செயல்வடிவம் கொடுத்தார். அதன் விளைவாக அதே ஆண்டு 2018ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெரியார் நினைவுநாளை முன்னிட்டு ’பெரியாரிய உணர்வாளார்கள் கூட்டமைப்பு’ என்ற பெயரில் அனைத்து பெரியாரிய இயக்கங்களும் ஒரே மேடையில் ஒன்று திரண்டார்கள்.
இந்த பேரணி மற்றும் பொதுக்கூட்டத்திற்கு பின்னர் மாபெரும் எழுச்சி தமிழகத்தில் ஏற்பட்டு. அது பிஜேபியை தமிழகத்தில் துடைத்தெறிந்தது. இதைதான் வானதி சீனிவாசன் பெயரைச்சொல்லாமல் இயக்கங்களால் தோற்றோமென்று சொன்னார். அதன்பிறகு நடந்த தேர்தல்களிலும் பிஜேபிக்கெதிராக இயக்கங்கள் ஒன்றுபட்டோ அல்லது அவரவர்களின் வலிமைக்கு உட்பட்டோ வேலைசெய்து சங்கிகளின் வெற்றியை தடுத்தார்கள்.
அதேபோல வரப்போகிற தேர்தல்களிலும் பிஜேபியின் பித்தலாட்டங்களை இங்குள்ள இயக்கங்கள் தோலுரித்துவிடக்கூடாதே என்பதற்காகத்தான். தற்போது இங்குள்ள முற்போக்கு இயக்கங்களை மடைமாற்ற பாரதியை தூக்கிபிடிக்கவும், இரவல் கடப்பாரையான பிராமணியத்தை தூக்கிபிடிக்கவும், முத்தாய்ப்பாக பெரியார் எதிர்ப்பை அதுவும் காலமெல்லாம் யாருக்காக உழைத்தாரோ அதே பெண்களை வைத்து அதுவும் இஸ்லாமிய பெண்களை வைத்து கேவலப்படுத்தும் வேலையை ஆர்.எஸ்.எஸ் இன் கைக்கூலி சீமானும், மணியரசன் அவர்களும் செய்கிறார்கள். சீமானின் ஒவ்வொரு பேச்சுக்கும் பின்னாலும் ஆர்.எஸ்.எஸ் பிஜேபிக்கான கைக்கூலி அரசியல் இருக்கும்.
நாம் ’எலும்புதுண்டு’ சீமானை விமர்சிப்பதிலேயே நேரத்தை செலவிட்டுவிடுவோம், சங்கிகளின் திருப்பரங்குன்றம் சதி, நூறுநாள் வேலை திட்டத்திற்கெதிரான சதி, தொழிலாளார்கள் சட்டங்களுக்கெதிரான சதி, S.I.R மூலம் 1கோடி வாக்களர்களை நீக்கியது என எதைப்பற்றியும் பேசாமல் போய்விடுமோனெ நினைத்துதான் கழுதைப்புலிகளை இறக்கிவிட்டிருக்கிறார்கள். வேறொன்றுமில்லை.
இந்த இராஜஜி-மபொசி காலத்து சதியெல்லாம் தமிழ்நாடு ஏற்கனவே பார்த்து இவர்களை பொடனியில் அடித்து விரட்டியிருக்கிறது. இப்போது அதே சதியை சீமான்- மணியரசன் போன்ற கழுதைப்புலிகளை வைத்து முயற்சி செய்கிறது ஆர்.எஸ்.எஸ். இதையும் நாம் முறியடிப்போம். #🚨கற்றது அரசியல் ✌️ #தமிழ்த்தேசியம் #திராவிடம் #📺அரசியல் 360🔴 #📰ட்ரெண்டிங் தகவல்கள்🔴


