உலகின் அதிகார மையமாக அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாகத் திகழ்வதற்கு அதன் ராணுவ பலத்தை விடவும் அதன் "டொலர்" என்ற ஆயுதமே முக்கியக் காரணியாக இருந்து வருகிறது.
இன்று ஈரானிற்கு மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட யுத்தத்திற்கான பிரதான காரணம் உலகப் பொருளாதாரத்தின் அச்சாணியாக இருக்கும் 'பெற்றோ-டாலர்' (Petrodollar) அமைப்பைக் காப்பதற்கான ஒரு சட்டத்துக்கு விரோதமான ஒரு சதுரங்க வேட்டை என்பதே உண்மை.
1970-களின் தொடக்கத்தில், ஹென்றி கிஸிஞ்சர் தலைமையிலான அமெரிக்கத் தூதுக்குழு சவூதி அரேபியாவுடன் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தைச் செய்தது.
அதில் சவூதி தனது எண்ணெயை அமெரிக்க டாலரில் மட்டுமே விற்க வேண்டும்; பதிலுக்கு சவூதி ஆட்சியாளர்களுக்கு அமெரிக்க ராணுவ பாதுகாப்பு கிடைக்கும் என்பதே.
இதன் விளைவாக, உலக நாடுகள் எண்ணெய் வாங்க வேண்டுமானால் டொலரைச் சேமித்து வைக்க வேண்டிய கட்டாயம் உருவானது. இது அமெரிக்காவுக்குத் தன்னிச்சையாகப் பணத்தை அச்சடிக்கும் அதிகாரத்தையும், உலகப் பொருளாதாரத்தைத் தன் பிடிக்குள் வைத்திருக்கும் வலிமையையும் வழங்கியது.
யாரெல்லாம் டாலரின் இந்த ஏகாதிபத்தியத்தை எதிர்க்கிறார்களோ, அவர்கள் அனைவரும் அமெரிக்காவால் ஈவிரக்கமின்றி நசுக்கப்பட்டனர்:
சதாம் உசேன் டாலருக்குப் பதிலாக யூரோவில் (Euro) எண்ணெய் விற்க முயன்றார். விளைவு: 'அணு ஆயுதப் பொய்' கூறி ஈராக் அழிக்கப்பட்டது. சதாம் தூக்கிலடப்பட்டார்.
முஅம்மர் கடாபி ‘தங்கத் தினார்' (Gold-backed Dinar) என்ற ஆப்பிரிக்க நாணயத்தை உருவாக்க முயன்றார். விளைவு: நேட்டோ படைகளால் கொல்லப்பட்டார்.
நிக்கோலஸ் மதுரோ: சமீபத்தில் (ஜனவரி 2026), அமெரிக்கா "Operation Absolute Resolve" என்ற பெயரில் வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி, மதுரோவைக் கைது செய்துள்ளது. இது 'போதைப்பொருள் ஒழிப்பு' என்று சொல்லப்பட்டாலும், இதன் உண்மையான நோக்கம் வெனிசுலாவின் 300 பில்லியன் பரல் எண்ணெய் வளத்தைக் கைப்பற்றுவதும் டொலரின் சரிவைத் தடுப்பதும் மட்டுமே.
இந்த வரிசையில் அமெரிக்காவின் மிக முக்கிய இலக்காக இப்போது இருப்பது ஈரான் மற்றும் அதன் உச்சத் தலைவர் அலி கமேனி. அமெரிக்காவின் 'Pattern' படி, ஒரு நாட்டை அழிக்கும் முன்பு அதன் தலைவரை 'சர்வாதிகாரி' எனச் சித்தரித்து கொல்வது.
அப்படியே அணு ஆயுத பொய் ஒன்றுடன் அலி கொமேனியும் நேற்று கொல்லப்பட்டார்.
ஈரான் ஏன் அமெரிக்காவால் குறிவைக்கப்படுகிறது? என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம்.
ஈரான் தனது வங்கித் துறையைத் தேசியமயமாக்கி, மேற்கத்திய நாடுகளின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவித்து விலகியுள்ளது.
அலி கமேனியின் தலைமையில் ஈரான் தனது எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்க டாலரில் செய்யப் பிடிவாதமாக மறுத்து வருகிறது.
அமெரிக்காவின் 'அடிமை' நாடுகளாக இருக்கும் சவூதி மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்குப் பணியாமல், ‘ சவாலாக’ பிராந்திய வல்லரசாக ஈரான் நிமிர்ந்து நிற்கிறது.
உலகின் மொத்த எண்ணெய் இருப்பில் 10% ஈரானிடம் உள்ளது. இதைக் கைப்பற்றாமல் டொலரின் ஆயுளை நீட்டிக்க முடியாது என்பது அமெரிக்காவின் கணிப்பு.
உலக நாடுகள் பல டொலரில் இருந்து விலகிச்செல்லும் நிலையில் ஈரான் போன்ற நாடுகள் டாலரைத் துறப்பதை அமெரிக்காவால் சகித்துக்கொள்ள முடியவில்லை.
ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதாக உலகைப் பயமுறுத்துவதும், அதன் மீது பொருளாதாரத் தடைகளை விதிப்பதும் அமெரிக்காவின் பழைய 'Playbook' படி நடக்கும் வேலைகள்.
அலி கமேனியை ஒரு சர்வாதிகாரியாகச் சித்தரித்து, அந்நாட்டின் மீது ராணுவ பலத்தைப் பிரயோகித்து, ஒரு கைப்பாவை ஆட்சியை நிறுவி, ஈரானின் எண்ணெயை மீண்டும் டொலருக்குக் கொண்டு வருவதே அமெரிக்காவின் இறுதித் திட்டம்.
அமெரிக்கா இன்று ஒரு "உலகச் சண்டியராக" வலம் வரக் காரணம் டாலர் மட்டுமே.
ஆனால், தற்போது சீனா, ரஷ்யா, ஈரான் மற்றும் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் டாலருக்கு மாற்று வழிகளைத் தேட ஆரம்பித்துவிட்டன.
எப்பொழுது பெற்றோ-டாலர் அமைப்பு முழுமையாகச் சிதைகிறதோ, அப்போது அமெரிக்காவின் பொருளாதாரம் அதலபாதாளத்திற்குச் செல்லும்.
சர்வாதிகாரமும் அதர்மமும் நீண்ட காலம் நிலைக்காது என்பதற்கு வரலாறே சாட்சி.
#🤔தெரிந்து கொள்வோம்


