#😍தொடர் விடுமுறை அறிவிப்பு🎊 ##📰டிசம்பர் 16 முக்கிய தகவல்📺 #📑முக்கியமான வாட்ஸ்அப் தகவல் #🎥இன்றைய முக்கிய தகவல்🗞️ தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தை பின்பற்றும் பள்ளிகளில் படிக்கும் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரையிலான மாணவ - மாணவிகளுக்கு அரையாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது இவர்களுக்கான தேர்வு வருகிற 23-ந்தேதியுடன் நிறைவு பெற உள்ளது.தேர்வு முடிந்த பிறகு அரையாண்டு தேர்வுக்கான விடு முறை தொடங்கும் அந்த வகையில் வருகிற 24-ந்தேதி முதல் அடுத்த மாதம் (ஜனவரி) 4-ந் தேதி வரை 12 நாட்களுக்கு அரை யாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது இந்த விடுப்பு முடிந்து பள்ளிகள் மீண்டும் அடுத்த மாதம் 5-ந்தேதி திறக்கப்படவுள்ளது சமீபத்தில் மழை காரணமாக விடப்பட்ட விடுமுறையை ஈடு செய்யும் வித மாக பள்ளிகள் அடுத்த மாதம் 2-ந்தேதி திறக்கப்படும் என தகவல் வெளியாகிய நிலையில், தமிழக அரசின் பள்ளிக்கல்வி ஆண்டு நாள் காட்டியில் குறிப்பிட்டிருப்பது போல அரையாண்டு விடுமுறைக்குப் பிறகு அடுத்த மாதம் 5-ந்தேதி தான் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி அதிகாரிகள் திட்டவட்டமாக தெரிவித்தனர்.


