ShareChat
click to see wallet page
search
#அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= பத்திரகாளிக்குச் சிறை ====================== மாகாளி யென்ற வடபத்தி ரகாளி ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம் நன்றான கன்னி நாரா யணரிடத்தில் வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான் கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல் சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன் அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன் பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன் இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப் புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள் . விளக்கம் ======== அப்போது அங்கே, மாகாளியாகிய வடபத்திரகாளி, அதிசயிக்கத் தக்கச் செயல்களையுடைய மிகுந்த பலக்காரி வருகிறாள். வந்ததும் அங்கே அமர்ந்திருக்கும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் விழுந்து, மண்ணில் புரண்டு அழுகிறாள். . அனைத்துச் செயல்களுக்கும் ஆதாரமான மாயதி சூட்சனே, உமக்கு நான் பிழை செய்து விட்டேன். உம்முடைய மக்கள் சான்றோர்கள் ஏழு பேரில் இரண்டுபேரைக் கொடுமையாகச் சோழ மன்னன் கொன்று பழியேற்றுவிட்டான். . அந்தப் பாதகனின் அச்செயலைத் தாங்க முடியாத நான், கரிகால் சோழனுடைய நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாமல் போகவும், அதனால் அவனுடைய நாட்டில் எல்லாமே பட்டுப் போகவும், தட்டழிந்து, தடுமாறிப் போகவும், அந்தப் பாவியின் நாட்டில் பகலில் நரி நடமாடுமளவில் அந்நாடு காடாகிப் போகவும் சாபமிட்டேன். . அது மட்டும் அல்லாமல் அந்தச் சோழ மன்னனும் அவனுடைய குடும்பத்தாரும் ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் படி சாபமிட்டேன். இத்தனை சாபங்களையும் ஜபித்து, அவற்றை எல்லாம் நிறைவேற்றிவிட்டு, இப்போது உங்களுடைய மக்களின் செய்தியைச் சொல்வதற்காக உங்களை நாடி வந்தேன் என்றாள். . . அகிலம் ======= அப்போத னாதி அய்யாநா ராயணரும் செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார் கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான் பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும் வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும் திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார் வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய் நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன் மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால் மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள் புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள் தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப் பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச் சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில் இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே . விளக்கம் ========= அதைக் கேட்டதும், ஆதியும் அந்தமும் இல்லாத மகாவிஷ்ணு, சிமிழ் போன்ற சிவபெருமானைப் பார்த்து, எனக்கு அனைத்துக் கிருபைகளையும் அருள் பாலிக்கும் சிவபெருமானே ! இந்தப் பத்திரகாளி சொல்லுவதைக் கேட்டீர்களா? இந்தப் பெண்ணின் பேச்சு நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளதா? . என்னுடைய பிள்ளைகளுக்கு எவ்விதமான இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து வளர்ப்பேன் என்று என்னிடம் வாக்குறுதியளித்து, என் பிள்ளைகளை என்னிடமிருந்து வாங்கினாள். . அப்போது மருட்டி விழித்தவள் இப்போது திருட்டு மொழி பேசும் செய்தியை நீர் கேட்டீரோ? நான் என்னுடைய பிள்ளைகளை இவளிடம் கொடுக்கும்போது நான் தனி ஒருவனாகக் கொடுக்கவில்லை. அதற்குச் சாட்சிகளாகப் பலர் உள்ளனர். . நான் தனி ஒருவனாக என் பிள்ளைகளை அவளிடம் கொடுத்திருந்தால், நான் இப்போது சொல்லுவதைத் தப்பிதம் என்று கூடச் சொல்லத் துணியலாம். ஆனால், நான் இந்தப் பத்திரகாளியிடம் வாக்குறுதி வாங்கிவிட்டு, என் பிள்ளைகளைக் கொடுக்கும்பொது வானவரும், தானவரும், மறையவரும் சாட்சியாக இருந்தார்கள். . பிள்ளைகளைக் கொடுக்கும்போது, என்னுடைய பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு இன்னல் ஏற்பட்டால் கூட மிகப் பெரிய சிறைவாசம் உனக்கு சித்திக்கும் என்று சொல்லித்தான் இவள் கையில் என் பிள்ளைகளைக் கொடுத்தேன். . சிவபெருமானே, என் பிள்ளைகள் இறந்த உடனேயாவது வந்து சொன்னாளா? இத்தனை நடந்துங்கூட கொஞ்சமும் அச்சமில்லாமல் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு, இப்போது அவளுடைய புத்தி மனத்தை அச்சுறுத்தியதால் சரி எதற்கும் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணத்தோடுதான் இங்கே வந்திருக்கிறாள். . அவள் பெற்ற பிள்ளைகளாக இருந்திருந்தால் இவ்வளவு பொறுமையாக இருந்திருப்பாளா? என் பிள்ளைகள் என்பதால் தானே தட்டிக் கேட்காமல் இருந்திருக்கிறாள். மாற்றான் பிள்ளைகளுக்காக மற்றொருவர் தம் உடமைகளை இழக்க முன்வரமாட்டார்கள். பெற்றவர்களுக்குப் பிள்ளைகளிடம் இருக்கும் கருதல் மனப்பான்மை மற்றவர்களுக்கு இருக்காது தானே. பெற்ற வயிறுதானே பிள்ளைக்கு ஒரு தீங்கு என்றதும் பெரும் நெருப்பாய்ப் பற்றி எரியும். மற்றவர்கள் வயிறு வருந்திக் குமுறாது. . பாவி அந்தச் சோழன் என் பாலகர்களைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் என் ஆன்மாவிற்குத் தெரியாமல் போய்விட்டதே. யாரேனும் வந்து என்னிடம் சொல்லவும் இல்லையே, தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் போல் என் பிள்ளைகள் திகைத்திருப்பார்களே. இவை யாவும் பரமனுக்கும் தெரியாமல் நடந்த பழவினையோ என்று சொல்லியவாறு பத்திரகாளையைப் பார்த்து, மாகாளியே இறந்துபோன இரண்டு பிள்ளைகளும் உடலோடு உயிர் திரும்பி எழுந்து வரும் காலம் வரை நீ சிறையிலே இரு என்று மகாவிஷ்ணு பத்திரகாளிக்கு உத்தரவிட்டார். . மகாவிஷ்ணுவின் இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்த பத்திரகாளி, கைலாசத்தில் வடவாமுகத்தில் அமைந்துள்ள அக்னி மண்டபத்தில் ஈசனின் செயலால் இந்தச் சிறைவாசம் நமக்கு ஏற்பட்டது என்று நினைத்துக்கொண்டே சிறையில் இருந்தாள். . . தொடரும்…. அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று மைக்குழல் சிலர்கள் தம்மை செய்து மணங்களு மிகவே மெய்ப்புடன் கிளைக ளோடு G8ugl மேவியே குழாங்கள் செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash 27.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் ஒளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று மைக்குழல் சிலர்கள் தம்மை செய்து மணங்களு மிகவே மெய்ப்புடன் கிளைக ளோடு G8ugl மேவியே குழாங்கள் செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash 27.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் ஒளி போல் - ShareChat