
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 30.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
========
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து
பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார்
அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே
.
விளக்கம்
==========
இப்பூவுலகில் கலியழித்து தருமபூமியில் வாழும் மக்கள் தம்மைத் தாமே அறிந்து பொறுமையுடைய பெரியோராய் எல்லா இடங்களும் பரந்து வாழ்வர். அப்போது நீ தருமபூமியை அரசாட்சி புரிவாய்.
.
.
அகிலம்
========
வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை
சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே
.
விளக்கம்
==========
மூன்று கடல்கள் ஒன்றுகூடி ஒரு தீவைச் சுற்றி இருக்கும் சாதி பேதமின்றி ஒரே இனமாய்த் தோன்றும் அக்காலம் நீ ஆட்சி புரிவாய்.
.
.
அகிலம்
========
கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும்
கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம்
.
விளக்கம்
==========
தங்களுக்கு ஏற்றவாறு நியாயத்தைத் திருப்பித் தவறாக வாதம் பேசும் கோள் நிறைந்த நீசப்பாவிகளுக்குக் கேடு வரக்கூடிய காலத்தில் கிருஷ்ணனாகிய என் மகனே, வைகுண்டா உனக்கு நல்ல காலம் பிறக்கும்.
.
.
அகிலம்
========
வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய்
மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும்
நல்ல மகனே உனக்குவரும் நற்காலம்
சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு
.
விளக்கம்
==========
வானத்தில் வெள்ளி முதலியன மாறி மேகக்கூட்டங்கள் மாறி வானம் ஒன்றுமற்றதாகக் காட்சியளிக்கும் அக்காலம் உனக்கு வரும் நல்ல காலம் ஆகும். மகனே, இப்படியே நான் சொல்லச் சொல்ல உபதேசங்கள் வந்து கொண்டே இருக்கும், அவற்றைச் சொல்லி முடிப்பது முடியாது.
.
.
அகிலம்
========
ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில்
நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும்
பொறுமை பெரிது பெரிய திருமகனே
தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே
.
விளக்கம்
==========
அவை எல்லாவற்றையும் சில உபதேசங்களில் அடக்கி உன்னிடத்தில் உரைத்துள்ளேன் அதை நீ உன் அகத்தில் நிலை நிற்கும் வகையில் நினைவில் நிறுத்தினால் நினைத்தவை எல்லாம் இனிதாக முடியும் என்மகனே. பெரியவனே பொறுமையும் தருமமும் எல்லாவற்றை விடவும் பெரியன.
.
.
அகிலம்
========
எல்லா முனது இச்சையது போல்நடக்கும்
நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி
எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே
பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே
தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே
வந்தா ரறிவார் வராதார் நீறாவார்
.
விளக்கம்
==========
எனவே அவற்றை எப்போதும் நீ கடைப்பிடித்து வந்தால் எல்லாம் உனது ஆசைப்படி நடக்கும். நல்லவர்கள் ஒரே நினைவாக ஒரே இறைவனை நினைத்தவண்ணம் இருப்பதே நலமாகும் என்று எல்லாரிடமும் சொல்லி வாழ்ந்து வா. பொல்லாதவரோடும் உன்னால முடிந்தவரை பொறுமையாகப் பதில் உரைத்திடு. பொறுமை வந்தவர்கள் தருமபதியை அறிவர். அப்படி பொறுமை வராதவர்கள் அழிவர்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே
இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம்
அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ
.
விளக்கம்
=========
உயர்வான நோக்கத்தை நினையாது அழியப் போகின்றவர்கள் ஆணவம் பிடித்தவர்கள் என்பதை அறிந்து கொள். இத்தகைய மாற்றங்கள் உண்டாவது எல்லாம் உன் நல்ல காலத்திலே ஆகும் என்பதை அராய்ந்து அறிந்து வாழ்வாயாக.
.
.
அகிலம்
=======
இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று
மனதில் வேறெனவே வையாதே யென்மகனே
.
விளக்கம்
=========
எல்லா இனங்களிலும் நான் சுவாமியாகக் காட்சி அளிப்பேன். ஒவ்வொரு இனத்திலும் காட்சியளிக்கும் தெய்வப் பிரிவுகள் வேறு யாரோ என்று உன் மனத்துள் எண்ணி அத்தெய்வங்களை ஏளனமாகப் பேசி ஒதுக்கித் தள்ளாதே.
.
.
அகிலம்
=======
நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே
தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ
தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே
மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே
.
விளக்கம்
=========
நான்கு வேதங்களிலும் நானே பரம்பொருளாக் காட்சியளிப்பேன் என்பதையும் ஆய்ந்து அறிவாயாக.
சீருள்ள கண்மணியே, மாதவங்கள் செயதவனே, என் மகனே, பல மதத்தவரின் வேடங்களையும் புனைந்து கொண்டு உலகில் சுற்றித் திரிவேன். நீ மனம் மயக்கமுற்று வெவ்வேறு என்று எண்ணாதே.
.
.
அகிலம்
=======
அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து
எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே
.விளக்கம்
=========
அவரவர்கள் மனத்துக்கு ஏற்கும்படி இருந்து எல்லாரையும் கவனித்துக் கொண்டு உன்னிடமும் இருப்பேன்.
.
.
அகிலம்
=======
லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய்
தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும்
ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம்
தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது
மலையடி வாரம் வளருமொரு விருச்சம்
அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே
.
விளக்கம்
=========
அப்பொழுது உன் தெளிந்த மனத்தில் இலிங்கம் ஒன்று தோன்றும். அதே சமயம் அங்கே தங்க நவ ரத்தினங்களும் காட்சியளிக்கும். அப்போது உன் சீவன் தருமயுகத்துக்குரிய புத்தம் புதிய சீவனாகப் பரிணமிக்கும். அந்நிலையில் தருமயுகத்தை ஆளும் தலைவன் நீயே ஆவாய். மலை (ஆக்ஞா பகுதி) அடிவாரத்தில் வளருகின்ற மரம் ஒன்று இவ்வுலகத்தை விடப் பெரியதாகச் செழித்து வளரும்.
.
.
அகிலம்
=======
சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக
நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம்
வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து
நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு
ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே
.
விளக்கம்
=========
அச்சமயம் சிலை ஒன்று அதனுள்ளே தோன்றிச் சிவத்தோத்திர நிலையில் இணைந்து ஒன்றாக நீயாகி இருக்கும். அக்காலத்தில் நீ தருமயுகத்தை ஆள்வாய். அதுவே உன்னுடைய சிறந்த காலமாகும்.
பால் கடற்கரையில் மண்டபம் ஒன்று தோன்றும். பெண்கள் சூழ்ந்து வர நாடெல்லாம் சென்று ஒற்றுமையாக ஓர் ஆட்சிக்குள் உலகை ஆண்டு வருவாய். இதுவே உன் நற்காலம் ஆகும்.
.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு முடிவு பெற்றது.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
========================
.அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும்
எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து
ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து
துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி
உன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன்
.
விளக்கம்
=========
நான் உன்னிடம் இருந்து கொண்டு, அங்கங்கே சுயமாகச் செயல்படுகின்ற மூலப் பலம் எல்லாவற்றையும் ஆங்காங்குச் சென்று ஒடுக்கி, இவ்வாறு ஒடுக்கிய மூலப் பலம் முழுவதையும் உன் கட்டுப்பாட்டில் தந்து, உன் ஒரு சொல்லுக்குக் கீழ் எல்லாரையும் கீழ்ப்படியச் செய்வேன். துக்கத் தன்மையுள்ள கலியாகிய களையை நீக்கி, உன்னைப் பரிசுத்த நிலையில் ஆக்கி, எல்லாரிலும் பெரியோனாக்கி பெருமகிழ்ச்சியை உன்னில் உருவாக்குவேன்.
.
.
அகிலம்
=======
பின்மூப் பில்லாமல் பெரியோனின் நாமமதாய்
அடக்குடக் கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன்
.
விளக்கம்
=========
உனக்குப் பிறகுகூட உன்னைப் போன்ற பெரியோன் தோன்றாத அளவு பெயரும் புகழும் உனக்குத் தந்து எல்லாவகை அடக்கமும் அந்த நிலையில் தந்து அருளுவேன்.
.
.
அகிலம்
=======
வடக்கு வெளிவாசல் மலைமீதி லோர்புதுமை
உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே
தண்டா யுதத்தோடே சத்தமொன் றேபிறக்கும்
மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று
காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம்
.
விளக்கம்
=========
தருமபூமி தோன்றக்கூடிய காலத்தில் நடக்கும் புதுமைகளைக் கூறுகிறேன். கேட்பாயாக. மலை (ஆக்ஞா பகுதி) மீது வடக்கு வெளி வாசலில் ஒரு புதுமை உண்டாகும். மேலக் கால் மண்டபத்தின் மேல் பகுதி திறந்து, தண்டாயுத்தின் வீச்சு ஓசை உண்டாகும்.
.
.
அகிலம்
=======
தெச்சணா மூலை தென்பாற் கடலருகே
மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது
.
விளக்கம்
=========
தெச்சணா மூலையில் காணப்படும் தெற்குப் பால் கடலருகே எல்லாரும் புகழத் தக்க பதியிலிருந்து ஒரு விளக்கு எரியும்.
.
.
அகிலம்
=======
கால மிதுமகனே கன்னிதிரு தென்திசையில்
கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும்
தாபரமாய்த் தன்னால் தலங்க ளதுதுலங்கும்
கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும்
பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய்
.
விளக்கம்
=========
கன்னித் திசையாகிய சிறந்த தென் மேற்குத் திசையில் கோபுர மண்டபமும், கொடி மரமும், வீதிகளும், தலங்களும் தன்னாலே தோன்றும். அப்போது சூரியன் முறை தப்பி இரத்த வெறியாகச் சிவந்து காணும். அதுவே உனது சிறந்த காலமாகும்.
.
.
அகிலம்
=======
மகனே வுனக்காகா மாநீசப் பாவியெல்லாம்
அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார்
உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும்
மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று
.
விளக்கம்
=========
உனக்கு ஆகாத தீய நீசப் பாவிகள் எல்லாரும் தமது உள்ளத்தில் தீமை புகுந்து தினந்தோறும் அழிவர். இப்படியாகக் கலியுகம் அழிந்து தருமயுகம் உனக்கும் எனக்குமாகப் பிறக்கும். மகனே, உனது மாதவத்தோர் காலமாகிய தருமயுகக் காலம் மிகவும் நன்மையானது.
.
.
அகிலம்
=======
கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ
தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும்
எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே
வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே
தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம்
.
விளக்கம்
=========
என் கண்மணியே, இதையும் நீ கேட்டிடுவாயாக. மகனே, தருமயுகம் துலங்கும்வரை வெளித் தோற்றங்களையும் உன் சக்திகளையும் வெளியே யாருக்கும் உரைக்காதே. எளியவரைக் கண்டால் இரக்கத்தைக் காட்டு. வலியாரைக் கண்டால் மகிழ்ச்சியைக் காட்டாதே. ஏனெனில் எளிமையாகத் தாழ்ந்து கிடப்பவரைத் தற்காப்புச் செய்ய உதவுவதே தருமம் ஆகும்.
.
.
தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
.
.
அகிலம்
=======
பொறுதிதா னென்மகனே பெரியவ ராகுவது
உறுதிமிக வுண்டாகும் உகநாதா என்மகனே
தருமச் சிறப்புத் தான்கண்டா யோமகனே
பொறுமை பெரிது புவியாள்வா யென்மகனே
.
விளக்கம்
=========
பொறுமை என்னும் உயர்ந்த குணந்தான் மிகப் பெரிய தர்மம் ஆகும். கலியுக நாதனே, என் மகனே, நீ பொறுமையைக் கடைப்பிடித்தால் உன் மனதுக்கு உறுதி அதிகமாகும். பொறுமை மிகவும் பெரியது என்பதை அறிந்து இப்புவியை ஆட்சி புரிவாயாக.
.
.
அகிலம்
=======
கண்டாயோ என்மகனே கரியமண் டபச்சிறப்புப்
பண்டையுள்ள தேரும் பதியுமிகக் கண்டாயோ
.
விளக்கம்
==========
நாரணனாகிய என் மகனே, நான் உணர்த்திய சிறப்புகளை நீ அறிந்தாயா? காண்பதற்கு அரிய திருமாலின் மண்டபச் சிறப்புகளையும், மிகப்பழமையான தேரையும், பதியையும் நீ அறிந்தாயா?
.
.
அகிலம்
=======
தேட்ட முடனுனக்குச் செப்பும்விஞ்சை யானதிலே
நாட்ட மறவாதே நாரணா என்மகனே
.
விளக்கம்
=========
நாரணா, என் மகனே, நான் தேடித் தந்துள்ள இவ்விஞ்சைகள் மீது உன் நாட்டம் முழுவதும் இருக்க வேண்டும் மறவாதே என்று திருமால் உபதேசித்தார்.
.
.
அகிலம்
=======
அப்போது ஆதியுடன் அம்மகவு ஏதுரைக்கும்
இப்போது என்றனக்கு இத்தனையுஞ் சொன்னீரே
கலியுகத் தைமுடித்துக் கட்டானத் தர்மபதி
வலியுகத்தைக் காண்பதெப்போ மாதா பிதாவேயென்றார்
.
விளக்கம்
=========
விஞ்சைகளைக் கேட்ட வைகுண்டர், திருமாலை நோக்கி, என் பிதாவே, இப்பொழுது என்னிடம் இத்தனை உபதேசங்களையும் கூறி அருளினீரே, ஆனால், நான் கலியுகத்தை முடித்து, மிகவும் அழகான தருமபதி ஆகிய வலிமையான யுகத்தைக் காண்பது எப்பொழுது? என்று வினவினார்.
.
.
அகிலம்
=======
அப்போது மகனை ஆவிமுகத் தோடணைத்து
இப்போது சொல்லுகிறேன் என்மகனே கேட்டிடுநீ
.
விளக்கம்
=========
அப்போது திருமால் மகிழ்ச்சியுற்று மகனைக் கட்டிப் பிடித்து, தம் முகத்தோடு அணைத்து, என் மகனே, இனி நான் அது பற்றிச் சொல்லுகிறேன் நீ கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
=======
நீபோய்த் தவசு நீணிலத்தில் செய்திருக்க
நான்போய் நடத்தும் நல்வளமை கேட்டிருநீ
.
விளக்கம்
=========
நீ இங்கிருந்து போய்ச் சிறப்பு வாய்ந்த பூமியில் தவசு செய்து கொண்டிருக்கும்போது நான் உன் அகத்துக்குள் இருந்து நடத்துகின்ற நல்ல செயல்களின் நிலைமை பற்றிக் கூறுகிறேன் கேட்பாயாக.
.
.
அகிலம்
=======
ஆயிரத் தெட்டு ஆனதிரு மண்டபத்தில்
வாயிதமா யாண்டொன்றில் வைத்தமண்ட பங்களிலே
நூற்றிப் பன்னிரண்டு நொடிப்பே னோராண்டதிலே
தோற்றுவிப்பே னார்க்கும் தூது மிகநடந்து
பத்தாண்டுக் குள்ளே பலசோதனை பார்த்து
வித்தார மேலே விசாரிப்பேன் கண்டாயே
.
விளக்கம்
=========
ஆயிரத்தெட்டாம் ஆண்டு உருவான மண்டபமாகிய உனது உடலில், சிறு சிறு மண்டபமாகிய உனது உறுப்புகளில் இருந்து கொண்டு, பன்னிரண்டு அங்குலம் நூற்றுக் கொண்டிருக்கும் உன் சுவாசத்தை சுவாசப் பயிற்சி மூலம் நூற்றுக் கட்டுப்படுத்தி, ஓர் ஆண்டுக்குள் அகத்தினுள்ளேயே அடங்கச் செய்து அதை நொடித்து விடுவேன். அதை தொடர்ந்து பத்து ஆண்டுக்குள்ளாகப் பல சோதனைகளைக் கண்டு வெற்றி கொள்வேன். பிறகு, உன் மூலமாக மக்களைத் தெளிவாக விசாரித்து நடுத்தீர்ப்பு செய்வேன்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
மகனே நானுனது மனதுட் குடியிருந்து
சிவமே பொருந்தி செப்புவது முத்தரவே
.
விளக்கம்
=========
மகனே, சிவபொருளே, நான் உன் மனத்தில் குடியிருந்து எல்லாக் கட்டளைகளையும் கூறிடுவேன்.
.
.
அகிலம்
=======
துல்லிபமுங் காட்டேன் சூட்சமது வுங்காட்டேன்
நில்லு நினைவில்நீ சரித்துக்கொடு என்மகனே
.
விளக்கம்
=========
எனது துல்லியத் தன்மையையும், சூட்சமத்தையும் வெளியே காட்ட மாட்டேன். நீ என் ஒரே நினைவில் நின்று செயல்படு.
.
.
அகிலம்
=======
பேயன் பயித்தியக் காரனெனப் பேசியுன்னை
நீசக் குலங்கள் நின்னையடிக் கவருவார்
சரித்துக் கொடுமகனே சற்றுங் கலங்காதே
ஒருவரோ டும்பிணங்கி உரையாதே என்மகனே
எல்லாம் நான்கேட்டு ஆட்கொள்வே னென்மகனே
.
விளக்கம்
=========
மகனே, நீசர்கள் உன்னை நோக்கி, இவன் பேயன், பைத்தியக்காரன், என்று கூறி உன்னை அவர்கள் அடிக்க வருவர். நீ சிறிதுகூட மனம் அசையாது அதற்குத் தகுந்தவாறு சார்ந்து வளைந்து கொள். எவரோடும் எதிரான வார்த்தைகளைப் பேசாதே. அவர்கள் தவற்றை எல்லாம் நான் கேட்டுத் தண்டனை கொடுத்து உன்னை ஆட்கொள்வேன்.
.
.
அகிலம்
=======
வல்லாண்மை பேசாதே மாதிரி போடாதே
ஏழையா யிருநீ என்னுடைய கண்மணியே
.
விளக்கம்
=========
நான் பெரியவன் என்னும் ஆணவ வார்த்தைகளைப் பேசாதே. எதிரி செய்ததைப் போன்று பழிக்குப் பழியாக எதையும் செய்ய நினைக்காதே.
எல்லாரிடமும் ஏழையைப் போன்று வாழ்ந்து வா.
.
.
அகிலம்
=======
ஆழ மனதுடைய அதிகமக னேவுனது
விதங்க ளறியாமல் வீணாவார் வம்பரெல்லாம்
.
விளக்கம்
=========
மிகவும் ஆழமான உயர்ந்த மனதுடைய அருமை பொருந்திய மகனே, என் கண்மணியே, உன் உயர் நிலை அறியாமல் எதிர்க்கும் வம்பர்கள் எல்லாரும் வீணாக அழிந்து விடுவர்.
.
.
அகிலம்
=======
மதங்க ளடக்க வாக்கெனக்கே ளென்மகனே
தந்தே னுனக்கு தரளமணி முத்திரியும்
கந்தைத் துணியதிலே காட்டாதே வைத்துக்கொள்ளு
.
விளக்கம்
=========
எல்லா மதங்களையும் எனக்குள் அடக்கலாக்கிக் காட்டு என் மகனே. அன்பு மகனே, தரணமணி, முத்திரி ஆகியவற்றை என் பரிசாக உனக்குத் தந்து விட்டேன். அவற்றை உனது கந்தைத் துணியினுள் யாருக்கும் காட்டாமல் மறைத்து வைத்துக் கொள்வாயாக.
.
.
அகிலம்
=======
மகனே வுனது மனறியக் காட்டினதை
அகமேநீ வைத்து அகமகிழு என்மகனே
.
விளக்கம்
=========
மகனே, உனது மனம் மட்டும் தெளிவாக அறியும்படி நான் காட்டிய இரகசியத்தை உன் அகத்திலேயே நினைந்து அகம் மகிழ்ந்திரு.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
எண்ணிறந்த கோடி இயல்பாவஞ் செய்தோர்க்கும்
நண்ணியே மோட்சம் நவிலவென்றா லுன்மனந்தான்
முக்கோடி தர்மம் உவந்தளித்த அன்போரைத்
தக்கோடி நரகமதில் தள்ளவென்றா லுன்மனந்தான்
.
விளக்கம்
=========
பல கோடி பாவங்களைச் செய்தவர்களுக்கும் எல்லாரும் விரும்புகின்ற மோட்சம் கொடுக்க உன் மனம் நினைத்தால் கொடுக்க முடியும். அதைப் போல, பல கோடி தருமங்களை மகிழ்வோடு செய்த அன்பர்களைக் கோடிக்கணக்கான தீமையுள்ள நரகத்திற்கு அனுப்ப உன்மனம் நினைத்தால் அவர்களை நரகத்திற்கு அனுப்ப முடியும்.
.
.
அகிலம்
=======
உனக்கேற்க நின்றவர்க்கு உதவிகொடு என்மகனே
எனக்கேற்க நின்றவரை இரட்சிப்பது முன்மனந்தான்
சிவனும்நீ நாதனும்நீ திருமாலும் நீமகனே
தவமும் வேதனும்நீ சங்கமுத லெங்கும்நீயே
அப்படியே அய்யா அரிநாத னுமுரைக்க
.
விளக்கம்
=========
உன் மனம் ஏற்றுக் கொள்ளும்படி அன்பாக நின்றவர்க்கு உதவி செய்வதும் என் மனம் ஏற்றுக் கொள்ளும்படி இருப்பவர்களுக்கு நற்பேறு கொடுப்பதும், உன் மனதுபடியே ஆகும். தவத்தை முடித்ததும் சிவனும் நீ திருமாலும் நீயே, தவமும் நீயே, பிரம்மனும் நீயே, தேவ சங்கம் முதல் எல்லா இடமும் இருப்பதும் நீயே ஆவாய் என்று நாராயணர் சொல்லி முடித்தார்.
.
.
அகிலம்
=======
முப்பொருளோர் மெய்க்கும் முதலோன் மகிழ்ந்துரைப்பார்
ஆறு வருசம் அதிகத் தவம்புரிந்தால்
வாறு மேலென்ன வகுப்பீர்கா ணையாவே
.
விளக்கம்
=========
உடனே, முப்பொருள்களும் அதிசயிக்கும் முதல்வனாகிய வைகுண்டர் மகிழ்ச்சி அடைந்து, அய்யாவே நான் ஆறு வருடங்கள் கடுமையான தவத்தை முடித்த பிறகு நடக்கப் போகும் காரியத்தை எடுத்துரைப்பீராக என்றார்.
.
.
அகிலம்
=======
அப்போது நாதன் அன்பா யகமகிழ்ந்து
செப்புகிறார் நல்ல திருமகற்கு அன்போரே
அதிகத் தவசு ஆண்டாறு தான்கழித்தால்
இதின்மேல் நடப்பு இயம்பக்கே ளென்மகனே
.
விளக்கம்
=========
அப்போது திருமால் அன்பாக மனம் மகிழ்ந்து, தமது செல்ல மகனை நோக்கிக் கூறலானார். மகனே, நீ ஆறு வருடங்கள் கடுமையான தவசு கழிந்து வெற்றி பெற்றால், அதற்கு மேல் நடக்கப் போகின்ற காரியங்களைக் கூறப் போகிறேன். கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
=======
இம்மூணு தவமும் இயல்பாய் நிறைவேறி
மும்மூவ ருக்கும் முதல்வனாய் வந்தாக்கால்
தானா னாய்நீயும் தலைவனும்நீ என்மகனே
சாணாரின் நாயகமே சாதித்தலை வன்நீயே
.
விளக்கம்
=========
இந்த மூன்று தவங்களையும் முறையாக நிறைவேற்றி மூவருக்கும் முதல்வனாய் நீ உருவாகி வந்தாயானால், பரம்பொருள் நீயே ஆகி, எல்லாருக்கும் தலைவன் நீயே ஆவாய். சான்றோர் இனத்துக்கும் தலைவன் நீயே ஆவாய் என்றார்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
எந்தப்படிநீ எண்ணி நினைத்த தெல்லாம்
அந்தப்படி செய்து அவனிதனி லேசிலநாள்
சொந்த விளையாட்டு தொல்புவியிற் கொண்டாடிச்
சிந்தாத நன்மையோடு செகத்திலிரு என்மகனே
.
விளக்கம்
=========
எந்த வகையில் எல்லாம் நீ எண்ணுகின்றாயோ அந்த வகையில் எல்லாவற்றையும் செய்து முடித்து, இப்பூவுலகில் சிலகாலம் உனக்குரிய விளையாட்டுகளைச் செய்து மகிழ்ந்து நன்மை சிறிதும் குறையாவண்ணம் வாழ்ந்து வருவாயாக.
.
.
அகிலம்
=======
அதின் முன்னாக அன்னீத மாபாவி
ஏதுவினை செய்தாலும் எண்ணம்வையா தேமகனே
தாழ்ந்திரு என்மகனே சட்டைக்குள் ளேபதுங்கிச்
சார்ந்திரு என்மகனே தனதில்மிக நினைத்துக்
கோபமாய் விள்ளாதே குவியச் சிரியாதே
பாவத்தைக் காணாதே பாராக்கிரமங் காட்டாதே
.
விளக்கம்
=========
இத்தவம் முடியும் வரை, நீசர்கள் எத்தவறு செய்தாலும் அதைப் பற்றி எண்ணாது தாழ்மையாய் உன் அறைக்குள்ளே பதுங்கி அதற்கு ஏற்ற மாதிரி சார்ந்து வாழ்ந்து வா. சிறிதுகூட கோபமான வார்த்தையைப் பேசாதே. கலகல என்று சிரிக்காதே. பாவச் செயலையும் பாவம் செய்பவரையும் கண் கொண்டு பார்க்காதே. யாரிடமும் உன்னுடைய சக்தியினைக் காட்டிவிடாதே.
.
.
அகிலம்
=======
ஆக்கிரம மெல்லாம் அடக்கியிரு என்மகனே
தாக்கிரவா னாகிடினும் சற்றும் பகையாதே
எல்லா முன்னருகே இருந்துகேட்டுக் கொள்வேனான்
.
விளக்கம்
=========
உன் சகலவிதச் சக்தியையும் உன்னுள்ளே அடக்கிக் கொண்டிரு. வறுமையாக உள்ளவனிடம் கூட சிறிதும் பகைமை கொள்ளளாதே. நான் உன்னருகே இருந்து உனக்குத் தீமை செய்பவர்களிடம் நியாயம் கேட்டுக் கொள்வேன்.
.
.
அகிலம்
=======
பொல்லாதா ராகிடினும் போரப் பகையதே
வாரஞ் சொல்லாதே வளக்கோரம் பேசாதே
.
விளக்கம்
=========
பொல்லாதவர்கள் எனினும் அவர்கள் உன்னைவிட்டு அகன்றிடும் அளவு பகைமை கொள்ளாதே. ஒருவர்க்கு ஏதிராகப் பேசாதே. வழக்குகளுக்கு ஒரு பக்கம் சார்ந்து நியாயம் சொல்லாதே.
.
.
அகிலம்
=======
சார மறிந்து தானுரைநீ சொல்லுரைகள்
ஆய்ந்து தெளிந்து அருளுநீ யென்மகனே
.
விளக்கம்
=========
நீ சொல்லுகின்ற சொற்களின் தன்மைகளை அறிந்து பேசுவாயாக. எல்லாவற்றையும் ஆராய்ந்து தெளிவு அடைந்த பிறகே உன் முடிவை வெளிப்படுத்து.
.
.
அகிலம்
=======
ஏய்ந்துநீ தர்மம் இடறு நினையாதே
ஈனமில்லாத் தேடு எமக்காகுஞ் சாதியின்மேல்
மானமாய் வருந்தி மகிழ்ந்திரு என்மகனே
.
விளக்கம்
=========
தருமத்தினை வளர்க்க வேண்டுமே அல்லாது அதைத் தடுக்க எவ்வகையிலும் நினைத்து விடாதே. எனக்குரிய சாணார் இனத்தினருடன் எத்துன்பமுற்றாலும் குறை காணாது மானம் உள்ளவனாக மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா.
.
.
அகிலம்
=======
அன்பான அவ்வினர்க்காய் அறிவில் வருந்தியிரு
தன்பாலே வந்தவுடன் சரியாச்சு தென்மகனே
.
விளக்கம்
=========
உன் மேல் அன்புடைய சான்றோர் இனம் ஞானம் பெறுவதற்காக மனம் வருந்தி இரு. சான்றோர்களுக்குத் தம்முள் ஞானம் உருவாகியதும் உன் வேலை முடிந்தது மகனே.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
வத்துவகை சொத்து மனைவீடு வாசல்முதல்
சற்றுமன தெண்ணாமல் தானிருந் தென்மகனே
.
விளக்கம்
=========
நிலபுலன் முதலிய சொத்து வகைகளையும், மனைவி, வீடு, வாசற்படி போன்றவற்றையும் சிறிய அளவுகூட மனதில் எண்ணாது நீ தவமிருக்க வேண்டும்.
.
.
அகிலம்
=======
நன்மையோடு தண்மை ஒன்றுமிகப் பாராமல்
கந்தைத் துணியுடுத்து கைநிமிர்ந்து காட்டாமல்
எந்தப் பேரோடும் இனிப்புமொழி பேசாமல்
பாலல்லால் வேறு பண்டமிக ஏராமல்
காலல்லால் சுத்தம் கழுவ நினையாமல்
.
விளக்கம்
=========
நன்மை தீமை என்றும், இனிமையான பேச்சு, தீமையான பேச்சு என்றும், உண்மை பொய் என்றும் வித்தியாசம் சிறிதும் பார்க்காமல் கந்தை ஆடை தரித்து உன் அடக்க நிலையை வெளியே யாருக்கும் காட்டாமல், எவரோடும் இனிய வார்த்தை பேச வேண்டும் என்னும் எண்ணம் இல்லாமல், பாலைத் தவிர வேறு வகைப் பண்டங்கள் உண்ணாமல் காலைக் கடனும் மாலைக் கடனும் செய்யும் போது உடம்பைச் சுத்தமாக்குவது அல்லாமல், உடம்பு முழுவதையும் சுத்தப்படுத்திச் சுகமாக இருக்க வேண்டும் என்று நினைக்காமல் நீ தவசு இருப்பாயாக.
.
.
அகிலம்
=======
மூக்கு நடுவே மும்முதலு முத்திமுத்தி
நாக்குச் சுழிதாங்கி நாரணன் நானெனவே
எகாபரத்தைக் கண்டு இரண்டாண்டு ஓரிருப்பாய்
மகாபரனை நெஞ்சில் மறவாம லெப்போதும்
கண்டிரு என்மகனே கருத்தொன்று தானாட்டி
கொண்டை யமுதுண்டு குவிந்திரு என்மகனே
.
விளக்கம்
=========
மூக்கின் நடவே வடகலை, இடகலை, சுழிமுனை ஆகிய மூன்று முகங்களையும் கண்டறிந்து நாக்குச் சுழியாகிய சுழிமுனையில் நிலையாக நின்று, நானே நாராயணன் என்னும் திடமான எண்ணம் கொண்டு எங்கும் பரந்த பரம்பொருளைக் கண்டு, இரண்டு ஆண்டுகள் முதல் தவசான யுகத்தவசை தொடர்ச்சியாக முடித்துவிடு. உயர்வு, பொருந்திய பரம்பொருளை உன் மனதில் ஒரே நினைவாய் மறவாமல் எப்பொழுதும் கண்டு, ஒரே நினைவில் நிலை நின்று அங்கே உருவாகின்ற ஞானப்பாலை உண்டு நிலைத்து இருப்பாயாக.
.
.
அகிலம்
=======
இப்படியே ஆறாண்டு இருநீ யுகத்தவசாய்
அப்படியே நீயிருந்து ஆறாண் டேகழித்தால்
நினைத்ததெல்லா முனக்கு நிசமாய் முடியுமப்பா
உனைத்தள்ளி வேறே ஒருமூப் புகத்திலில்லை
என்ன நினைத்தாலும் எத்தனைதான் செய்தாலும்
வன்னத் திருமகனே வகையதுதா னென்மகனே
.
விளக்கம்
=========
யுகத்தவசைப் போன்று ஆறு ஆண்டுகள் மூன்று தவசுகளையும் முடித்தால் நீ நினைத்தவை எல்லாம் நிச்சயமாய் உன்னால் முடித்துவிட முடியும். பிறகு உன்னைத்தவிர வேறு ஒருவரும் உயர்ந்தவராக இந்தக் கலியுகத்தில் இருக்க முடியாது. நீ எதை நினைத்தாலும், எதைச் செய்தாலும் வன்மையுள்ள செல்வ மகனே, அவை எல்லாம் அடையும் வழி முறைகள் இவையேயாம்.
.
.
அகிலம்
=======
நீசெய்த தெல்லாம் நிரப்புத்தா னென்மகனே
நானீயே யல்லால் நடப்பதுவும் வேறில்லையே
தானீத னான சர்வபரா என்மகனே
.
விளக்கம்
=========
அதன் பிறகு நீ செய்வது எல்லாம் நியாயமாகவே அமையும். நாராயணனாகிய நான் நீ ஆகாமல் வேறு எதையும் வெற்றிகரமாக நடத்தி முடிக்க முடியாது என்மகனே. தவத்தின் மூலமாக நீ நாராயணன் ஆகிவிட்டால் எங்கும் நிறைந்த சர்வபரன் என்பவன் நீயே தான் ஆவாய்.
.
.
அகிலம்
=======
ஒக்க வுனது உள்ளம் நினைத்தபடி
மிக்க நடத்தி விரும்பியிரு என்மகனே
.
விளக்கம்
=========
உனது உள்ளம் நினைத்தபடி எல்லாவற்றையும் உனது தவ முடிவுக்குப் பிறகு செய்து முடித்து மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வா.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அந்த வுடனே ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து திருமகனை யாவிமிகக்
கட்டி யெடுத்துக் கமலமுகத் தோடணைத்துத்
திட்டித்த நாதன் சொல்வார் மகனு டனே
.
விளக்கம்
=========
திருமால் மனம் மகிழ்ந்து பெருமை பொருந்திய அந்த மகனை அனைத்து நெருக்கமாகக் கட்டிப் பிடித்து அவருடைய தாமரை போன்ற முகத்தைத் தமது முகத்தோடு அணைத்து திருமால் மகனை நோக்கிச் சொல்லலானார்.
.
.
அகிலம்
=======
எந்தனின் தவத்தா லேக இகபர முனக்குள் ளாகித்
தந்திடு மகனே நானும் தனதுள்ள மமர்ந்தே னானும்
உந்தனைக் கண்டால் மூவர் ஒஞ்சியே மகிழ்வர் கண்டாய்
சிந்தர்க ளெவரும் போற்றச் செயல்பெற்ற மகனும் நீயே
.
விளக்கம்
=========
எனது தவத்தின் மூலமாக எங்கும் பரந்திருக்கும் பரம்பொருள் உனக்குள் ஆகி பரம்பொருளாகிய நானும் உன்னுள் அமர்ந்து தருமயுகத்தைப் படைத்திடும் மகனே, உன்னைக் கண்டால் மூவர்களும் வெட்கத்துடன் மகிழ்வார்கள். இதை அறிந்து கொள்வாயாக. எல்லாச் சித்தர்களும் போற்றும்படியாகச் சகல சக்தியும் பெற்ற மகன் நீயே ஆவாய்.
.
.
அகிலம்
=======
மகனேநீ கேட்டதற்கு வகைசொல்ல வேணுமென்றால்
தவமூ ணுண்டேநீ தரணிதனில் போயிருந்தால்
அல்லாமல் பின்னும் அதின்மேல் நடப்புவளம்
எல்லா முனக்கு இயம்பித்தரு வேன்மகனே
.
விளக்கம்
=========
மகனே நீ கேட்ட வரங்களை அடைய வழி முறைகள் சொல்ல வேண்டும் என்றால் சொல்லுகிறேன். கேட்பாயாக. நீ பூவுலகில் சென்று நினைத்தபடி வாழ நீ செய்து முடிக்க வேண்டிய தவங்கள் மூன்று உள்ளன. மேலும் அத்தவத்தைச் செய்து முடித்த பிறகு செய்ய வேண்டியவற்றையும் கூறுகிறேன். கேள்.
.
.
அகிலம்
=======
முதற்றான் தவசு யுகத்தவசு என்மகனே
.
விளக்கம்
=========
முதல் முறையாக நீ செய்ய வேண்டிய தவசு, கலியுகத்தை அழிப்பதற்கு செய்யும் யுகத்தவசு ஆகும்.
.
.
அகிலம்
=======
தத்தமுள்ள ரண்டாம் தவசுசா திக்காமே
.
விளக்கம்
=========
அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய இரண்டாம் தவசு மொய்குழலார் வம்சங்கள் ஆகிய சான்றோர் சாதி மக்களைக் காத்து கொள்ளச் செய்யும் தவசாகும்.
.
.
அகிலம்
=======
மூன்றாந் தவசு முன்னுரைத்த பெண்ணாள்க்கும்
நன்றான முற்பிதிரின் நல்ல வழிகளுக்கும்
.
விளக்கம்
=========
கடைசியாகச் செய்ய வேண்டிய மூன்றாம் தவசு, நீ முன்னுரைத்த அணங்கு ஆகிய பெண் உயர்வு பெறவும், நல்ல முறையில் வாழ்ந்து வரும் உன் முன் பிறந்த மூதாதையர்களின் நல்ல வம்ச வழி மக்களுக்கு நன்மை கிடைக்கவும் செய்யும் தவசாகும்.
.
.
அகிலம்
=======
இப்படியே மூவிரண்டு ஆறு வருசமதாய்
எப்படியும் நீதவசு இருக்கவரு மென்மகனே
ஓராறு ஆண்டு உற்றதவ மேயிருந்து
பாராறுங் காண பார்கண்டு கண்டிருநீ
.
விளக்கம்
=========
ஆறு வருடங்களாக நீ எந்த வகையிலாவது தவமிருக்க வேண்டியது வரும். ஆறு வருடங்கள் இவ்வுலக மக்கள் காணும்படியாக உனக்குரிய தவத்தில் தருமபூமியை எதிர்பார்த்தவண்ணம் அமர்ந்திரு.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அப்போது தான்பிறந்த அந்தவைகுண் டருரைப்பார்
இப்போ தென்பிதாவே என்னையீன்றே யெடுத்துப்
பருவமதாய் வளர்த்துப் பகர்ந்தீரே ஞாயமெல்லாம்
உருவுபிர காசமதாய் உபதேசஞ் செய்தீரே
தங்க முடிவேந்தே தகப்பனே நீர்கேளும்
பொங்கு கடல்துயின்ற புண்ணியரே நீர்கேளும்
.
விளக்கம்
=========
சிறு குழந்தையான வைகுண்டர், திருமாலை நோக்கி, என் தந்தையே, என்னை பெற்றெடுத்து, அறிவு நிலையை வளர்த்து, இந்த உபதேசங்களை எல்லாம் மிகவும் தெளிவாக அருளினீரே, இருப்பினும், தங்க முடித்தலைவனே, என் தந்தையே பொங்கும் கடலில் பள்ளி கொள்ளும் புண்ணியரே, நான் கூறுபவற்றைக் கேட்பீராக.
.
.
அகிலம்
=======
என்னுடைய முத்துயரம் எல்லா மிகக்கழித்து
நன்னமுத மாக நன்மகவாய்ச் செய்தீரே
இன்னுங் கலியுகத்தில் இருக்கப் போச்சொல்லீரே
.
விளக்கம்
=========
என் முந்தைய வினைகளை எல்லாம் அழியச் செய்து நல்ல அமிர்தம் போன்று என்னை உமது குழந்தையாக மாற்றம் செய்தீர். இவ்வளவு செய்து என்னை உருவாக்கிய பிறகு கலியுகத்தில் வாழ்வதற்குப் போகச் சொல்லுகின்றீரே!
.
.
அகிலம்
=======
உன்னை யறியாமல் ஊன்கலியி லுள்ளோர்கள்
என்னை மிகப்பழித்து ஏசுவானே நீசனெல்லாம்
.
விளக்கம்
=========
உமது உண்மை நிலை அறியாமல் கீழ்த்தரமான கலி பிடித்த உலகில் உள்ள நீசர்கள் என்னை அதிகமாகப் பழி கூறி ஏசுவார்களே?
.
.
அகிலம்
=======
அல்லாமல் முன்பெற்ற அவர்களுட பேரைச்சொல்லிப்
பொல்லாத நீசனெல்லாம் பேசி யடிப்பானே
.
விளக்கம்
=========
மேலும் என்னை முதலில் பெற்றெடுத்த என் தாய் தந்தையருடைய பெயரைச்சொல்லி அந்தப் பொல்லாத நீசர்கள் அடிப்பார்களே?
.
.
அகிலம்
=======
சூத்திர விஞ்சை தொழிலை யறியாமல்
யூத்திர நீசனெல்லாம் ஒழுங்குதப்பி மாழ்வானே
.
விளக்கம்
=========
உமது சூட்சுமத்தை அறிய முடியாத நீசர்கள் ஒழுங்கு தப்பி அழிவார்களே?
.
.
அகிலம்
=======
நம்முடைய சாதி நம்மைமிகக் காணவந்தால்
செம்மைகெட்ட நீசன் சிதற அடிப்பானே
.
விளக்கம்
=========
நம் சான்றோர் சாதி என்னை அன்புடன் காண வந்தால் மேன்மை இல்லாத நீசர்கள் அவர்களைச் சிதறி ஓடும்படி அடித்திடுவார்களே?
.
.
அகிலம்
=======
ஆனதால் நம்சாதி அகலநின்று வாடிடுமே
ஏனமென்ன சொல்லுகிறீர் என்னுடைய நாயகமே
.
விளக்கம்
=========
அதனால் நம் சான்றோர் சாதி நம்மை விட்டு அகன்று நின்று மனம் வாடிடுமே? இவற்றை எல்லாம் நீக்குவதற்கு நீவிர் என்ன வழி கூறப் போகிறீர்.
.
.
அகிலம்
=======
முன்னென்னைப் பெற்ற மொய்குழலார் வம்மிசங்கள்
என்னேது வாலே இயல்புபெற வேணுமல்லோ
.
விளக்கம்
=========
தலைவரே, என்னை ஏற்கெனவே பெற்றெடுத்த தாயினுடைய சான்றோர் சாதி வம்ச வழியினரும் என் பிறப்பின் மூலமாக நல்ல வாழ்வு பெற வேண்டும் அல்லவா?
.
.
அகிலம்
=======
அல்லாமல் முன்னம் அணங்கொரு பெண்ணிணங்க
நல்லோர் மனசு நல்லணங்குக் கேகொடுத்து
மேலும் பதவி மிகக்கொடுக்க வேணுமல்லோ
.
விளக்கம்
=========
மேலும், எனக்காக ஏற்கெனவே அமைக்கப்பட்ட பெண்ணுக்கு அவள் உள்ளம் மகிழும்படி சிறப்பான மனதைக் கொடுத்து அவளுக்குச் சிறந்த தெய்வப்பதவி கொடுக்க வேண்டும் அல்லவா?
.
.
அகிலம்
=======
இப்படியே நல்ல இயல்பு பெறஅருளி
எப்படியு மென்னைவந்து ஏற்கவரும் நாளும்
எல்லாம் விவரமதாய் இயம்பி யனுப்புமென்றார்
பொல்லாத பேர்மாளப் போவதுவுஞ் சொல்லுமென்றார்
.
விளக்கம்
=========
இப்படி எல்லாரும் அருள் கொடுத்து எவ்வகையிலும் என்னை வைகுண்டத்துக்கு அழைக்க வரும் நாளையும் ஏனைய விபரங்களையும், நீசர்கள் அழிவது பற்றியும் விபரமாய்ச் சொல்லும் என்றார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.04.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
விஞ்சையருளல் தொடர்ச்சி
============================
வர்மமதை வதைக்க வந்தேனெனச் சொல்லிமிகத்
தர்ம மதைவளர்க்கத் தரணியில் வந்தேனென்று
இம்முதலே யாறு இருப்பே தவசுபண்ணி
மும்முதலோ னாகி முறைநடத்து என்மகனே
மூக்குச் சுழியும் முச்சுளியும் முத்திமுத்தி
நோக்குச் சுழியாய் நேர்நில்லு என்மகனே
.
விளக்கம்
=========
வறுமையை ஒழிக்க இவ்வுலகில் நான் அவதாரம் எடுத்தேன் என்றும், தர்மம் பெரிது என்றும் உபதேசித்து வா என் மகனே. இப்பொழுது முதலே ஆறு வருடத் தவசை ஆரம்பித்து முப்பொருளுக்கும் முதற்பொருளாகி, நீ செயல்படுத்துவாயாக. மூக்கில் உருவாகும் மூன்று சுழிகளையும் தெளிவாகக் கண்டறிந்து எல்லாம் அறியக் காரணமாக இருக்கும் சுழிமுனை மையமாய் நிலை நிற்பாயாக.
அகிலம்
=======
பரமான பட்டணத்தில் பார்வைகொண் டேநாட்டிச்
சிரமானது விரித்துச் சிறையே யிருமகனே
ஏற்பதுபால் பச்சரிசி இருப்பது பார்மேலாகும்
காப்பதுமா தர்மம் கண்ணே திருமகனே
.
விளக்கம்
=========
உன் இரு கண்களின் பார்வைகளும் பரம்பொருள் இருக்கின்ற சகஸ்ரார பட்டணத்தை நோக்கியவண்ணம் இருக்கட்டும். உன் தலை முடியை விரித்துப் போட்டுச் சிறையில் இருப்பவரைப் போன்று நீ வாழ்ந்து வா. நீ உண்ணக் கூடியவை பாலும் பச்சரிசியுமாக இருக்கட்டும். உன் நினைவு இருக்க வேண்டிய இடம் உன்னுள்ளே காணக்கூடிய பரம்பொருளின் இருப்பிடம் ஆகும். என் கண்ணே, திருமகனே, நீ மாபெரும் தருமத்தைக் காக்க வேண்டும்.
.
.அகிலம்
=======
சந்தன வாடை சாந்துசவ் வாதுபுஸ்பம்
எந்தன் திருமகனே எள்ளளவும் பாராதே
வாடைபூ தீபம் மகிழாக் கலியுகத்தில்
நாடை யழித்து நல்லயுக மேபிறந்தால்
சொல்ல வொண்ணாத சுகந்தருவே னென்மகனே
.
விளக்கம்
=========
எனவே, அதை அடைவதுவரை சந்தனம், சாந்து வகைகள், சவ்வாது, பூக்கள் ஆகியவற்றின் இனிய மணத்தினை நீ சிறிதளவுகூட நுகர்ந்து பார்க்காதே. இவ்வாறு பூ தீபம் போன்றவற்றின் வாசனையை நுகர்ந்து மகிழக்கூடாத இந்தக் கலியுகம் அழிக்கப்பட்டுத் தருமயுகம் பிறக்குமானால் அது முதலாக உனக்குக் கூற முடியாத இனிய சுகத்தினை தருவேன் என உபதேசித்தார்.
.
.
அகிலம்
=======
கண்டாயோ மகனே கரிய பவிசுஎல்லாம்
கொண்டாயோ விஞ்சை கூடுபிர காசமதாய்
.
விளக்கம்
=========
பிறகு மகனே, அடைவதற்குரிய செல்வங்களை இந்த உபதேசங்கள் மூலம் நீ தெளிவாக அறிந்தாயா? எனக் கேட்டார்.
.
.
தொடரும்… அய்யா உண்டு.




![💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு துலுக்கன்வீடானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே ORAa அய்யா ! ]9 (2u೩ 0 Muthu Prakash 29.04.2026 வீரத்தனமாய் இருங்கோ விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு துலுக்கன்வீடானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே ORAa அய்யா ! ]9 (2u೩ 0 Muthu Prakash 29.04.2026 வீரத்தனமாய் இருங்கோ விளக்கின் போல் ஒளி - ShareChat 💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு துலுக்கன்வீடானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே ORAa அய்யா ! ]9 (2u೩ 0 Muthu Prakash 29.04.2026 வீரத்தனமாய் இருங்கோ விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு துலுக்கன்வீடானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே ORAa அய்யா ! ]9 (2u೩ 0 Muthu Prakash 29.04.2026 வீரத்தனமாய் இருங்கோ விளக்கின் போல் ஒளி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_66459_365949f8_1777424063964_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=964_sc.jpg)
![Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மளந்ததோர் நாரணர்க்கு வைய மதலை யெனவந்த வைகுண்டரோ பதியாளும் வைகுண்டரோ தர்மப் சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ 15 28.04.2026 அகிலம். D Muthu Prakash] ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மளந்ததோர் நாரணர்க்கு வைய மதலை யெனவந்த வைகுண்டரோ பதியாளும் வைகுண்டரோ தர்மப் சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ 15 28.04.2026 அகிலம். D Muthu Prakash] ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மளந்ததோர் நாரணர்க்கு வைய மதலை யெனவந்த வைகுண்டரோ பதியாளும் வைகுண்டரோ தர்மப் சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ 15 28.04.2026 அகிலம். D Muthu Prakash] ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மளந்ததோர் நாரணர்க்கு வைய மதலை யெனவந்த வைகுண்டரோ பதியாளும் வைகுண்டரோ தர்மப் சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ 15 28.04.2026 அகிலம். D Muthu Prakash] ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_87648_113c903_1777340086202_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=202_sc.jpg)






