D Muthu Prakash, Kanchipuram 💐
ShareChat
click to see wallet page
@d_muthuprakash
d_muthuprakash
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= பத்திரகாளிக்குச் சிறை ====================== மாகாளி யென்ற வடபத்தி ரகாளி ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம் நன்றான கன்னி நாரா யணரிடத்தில் வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான் கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல் சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன் அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன் பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன் இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப் புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள் . விளக்கம் ======== அப்போது அங்கே, மாகாளியாகிய வடபத்திரகாளி, அதிசயிக்கத் தக்கச் செயல்களையுடைய மிகுந்த பலக்காரி வருகிறாள். வந்ததும் அங்கே அமர்ந்திருக்கும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் விழுந்து, மண்ணில் புரண்டு அழுகிறாள். . அனைத்துச் செயல்களுக்கும் ஆதாரமான மாயதி சூட்சனே, உமக்கு நான் பிழை செய்து விட்டேன். உம்முடைய மக்கள் சான்றோர்கள் ஏழு பேரில் இரண்டுபேரைக் கொடுமையாகச் சோழ மன்னன் கொன்று பழியேற்றுவிட்டான். . அந்தப் பாதகனின் அச்செயலைத் தாங்க முடியாத நான், கரிகால் சோழனுடைய நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாமல் போகவும், அதனால் அவனுடைய நாட்டில் எல்லாமே பட்டுப் போகவும், தட்டழிந்து, தடுமாறிப் போகவும், அந்தப் பாவியின் நாட்டில் பகலில் நரி நடமாடுமளவில் அந்நாடு காடாகிப் போகவும் சாபமிட்டேன். . அது மட்டும் அல்லாமல் அந்தச் சோழ மன்னனும் அவனுடைய குடும்பத்தாரும் ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் படி சாபமிட்டேன். இத்தனை சாபங்களையும் ஜபித்து, அவற்றை எல்லாம் நிறைவேற்றிவிட்டு, இப்போது உங்களுடைய மக்களின் செய்தியைச் சொல்வதற்காக உங்களை நாடி வந்தேன் என்றாள். . . அகிலம் ======= அப்போத னாதி அய்யாநா ராயணரும் செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார் கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான் பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும் வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும் திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார் வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய் நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன் மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால் மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள் புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள் தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப் பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச் சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில் இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே . விளக்கம் ========= அதைக் கேட்டதும், ஆதியும் அந்தமும் இல்லாத மகாவிஷ்ணு, சிமிழ் போன்ற சிவபெருமானைப் பார்த்து, எனக்கு அனைத்துக் கிருபைகளையும் அருள் பாலிக்கும் சிவபெருமானே ! இந்தப் பத்திரகாளி சொல்லுவதைக் கேட்டீர்களா? இந்தப் பெண்ணின் பேச்சு நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளதா? . என்னுடைய பிள்ளைகளுக்கு எவ்விதமான இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து வளர்ப்பேன் என்று என்னிடம் வாக்குறுதியளித்து, என் பிள்ளைகளை என்னிடமிருந்து வாங்கினாள். . அப்போது மருட்டி விழித்தவள் இப்போது திருட்டு மொழி பேசும் செய்தியை நீர் கேட்டீரோ? நான் என்னுடைய பிள்ளைகளை இவளிடம் கொடுக்கும்போது நான் தனி ஒருவனாகக் கொடுக்கவில்லை. அதற்குச் சாட்சிகளாகப் பலர் உள்ளனர். . நான் தனி ஒருவனாக என் பிள்ளைகளை அவளிடம் கொடுத்திருந்தால், நான் இப்போது சொல்லுவதைத் தப்பிதம் என்று கூடச் சொல்லத் துணியலாம். ஆனால், நான் இந்தப் பத்திரகாளியிடம் வாக்குறுதி வாங்கிவிட்டு, என் பிள்ளைகளைக் கொடுக்கும்பொது வானவரும், தானவரும், மறையவரும் சாட்சியாக இருந்தார்கள். . பிள்ளைகளைக் கொடுக்கும்போது, என்னுடைய பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு இன்னல் ஏற்பட்டால் கூட மிகப் பெரிய சிறைவாசம் உனக்கு சித்திக்கும் என்று சொல்லித்தான் இவள் கையில் என் பிள்ளைகளைக் கொடுத்தேன். . சிவபெருமானே, என் பிள்ளைகள் இறந்த உடனேயாவது வந்து சொன்னாளா? இத்தனை நடந்துங்கூட கொஞ்சமும் அச்சமில்லாமல் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு, இப்போது அவளுடைய புத்தி மனத்தை அச்சுறுத்தியதால் சரி எதற்கும் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணத்தோடுதான் இங்கே வந்திருக்கிறாள். . அவள் பெற்ற பிள்ளைகளாக இருந்திருந்தால் இவ்வளவு பொறுமையாக இருந்திருப்பாளா? என் பிள்ளைகள் என்பதால் தானே தட்டிக் கேட்காமல் இருந்திருக்கிறாள். மாற்றான் பிள்ளைகளுக்காக மற்றொருவர் தம் உடமைகளை இழக்க முன்வரமாட்டார்கள். பெற்றவர்களுக்குப் பிள்ளைகளிடம் இருக்கும் கருதல் மனப்பான்மை மற்றவர்களுக்கு இருக்காது தானே. பெற்ற வயிறுதானே பிள்ளைக்கு ஒரு தீங்கு என்றதும் பெரும் நெருப்பாய்ப் பற்றி எரியும். மற்றவர்கள் வயிறு வருந்திக் குமுறாது. . பாவி அந்தச் சோழன் என் பாலகர்களைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் என் ஆன்மாவிற்குத் தெரியாமல் போய்விட்டதே. யாரேனும் வந்து என்னிடம் சொல்லவும் இல்லையே, தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் போல் என் பிள்ளைகள் திகைத்திருப்பார்களே. இவை யாவும் பரமனுக்கும் தெரியாமல் நடந்த பழவினையோ என்று சொல்லியவாறு பத்திரகாளையைப் பார்த்து, மாகாளியே இறந்துபோன இரண்டு பிள்ளைகளும் உடலோடு உயிர் திரும்பி எழுந்து வரும் காலம் வரை நீ சிறையிலே இரு என்று மகாவிஷ்ணு பத்திரகாளிக்கு உத்தரவிட்டார். . மகாவிஷ்ணுவின் இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்த பத்திரகாளி, கைலாசத்தில் வடவாமுகத்தில் அமைந்துள்ள அக்னி மண்டபத்தில் ஈசனின் செயலால் இந்தச் சிறைவாசம் நமக்கு ஏற்பட்டது என்று நினைத்துக்கொண்டே சிறையில் இருந்தாள். . . தொடரும்…. அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று மைக்குழல் சிலர்கள் தம்மை செய்து மணங்களு மிகவே மெய்ப்புடன் கிளைக ளோடு G8ugl மேவியே குழாங்கள் செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash 27.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் ஒளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! ஐவர்க்குத் தூத னாகி அங்குமிங் கோடிச் சென்று மைக்குழல் சிலர்கள் தம்மை செய்து மணங்களு மிகவே மெய்ப்புடன் கிளைக ளோடு G8ugl மேவியே குழாங்கள் செய்துரி யோதனனைக் கொன்றச் செய்தியுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash 27.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் ஒளி போல் - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார் அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார் செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில் வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும் கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும் சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று) எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம் கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம் சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம் என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய் . விளக்கம் ======== மகாவிஷ்ணுவின் உறுதி மொழியை உள்வாங்கிக்கொண்ட சப்தமாதர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவை நோக்கி, எங்களுடைய நாயகமே ! நாங்கள் பூலோகத்தில் போய்ப் பிறந்தால், எங்களை உங்கள் மனைவியர்களாக ஏற்பதற்குத் தாங்கள் எப்போது வருவீர்கள்? அந்தத் தருணத்தை எங்களுக்கு தெரியப் படுத்துங்கள் என்று வேண்டினார்கள். . உடனே மகாவிஷ்ணு அதற்குரிய அருமையான தருணத்தை அன்போடு சொல்லுகிறார். சப்தமாதர்களே ! நீங்கள் பூலோகத்தில் வாழும்போது ஆக்ஞா, விசுத்தி, அநாதகம், மணிபூரகம், சுவாதிஷ்டானம், மூலாதாரம் ஆகிய ஆறு ஆதாரங்களையும் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை எனப்படும் பிராணயாகப் பயிற்சி மூலம் தன்வயமாக்கி, கொண்டை அமுது ஊறுகின்ற சகஸ்ராரப் பகுதியில் ஞானப் பார்வை பெற்று, கண், காது தோல், நாக்கு, மூக்கு ஆகிய பஞ்சேந்திரியங்களின் சுய இயக்கத்தைக் கொன்றொழித்து, அந்த ஐம்பொறிகளையும் உங்களுடைய கட்டுப்பாட்டிலாக்கி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி நீங்கள் இருக்கும் காலத்தில் உங்களுடைய சந்திரகலையில் எமது வருகையை உணரும் நிலை உண்டாகும். . எம்முடைய பூலோக வருகை எத்தகையதாய் இருக்குமென்றால் சகல வடிவ பரமாத்ம ஜோதியில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும் மூர்த்திகளும் ஐக்கியமாகி அண்ட சராசர ஐஸ்வர்யமாக வருவோம். எமது பூலோக வருகை உங்கள் ஏழு பேரையும் ஆட்கொள்வதற்காக மட்டுமல்ல. இன்னும் ஏராளமான காரண காரியங்கள் உண்டு. அவற்றை நான் பூலோகத்திற்கு வந்த பின்பு நீங்களே கண்டு உணர்வீர்கள். . அந்தக் காரணங்களைச் சொற்களால் விளக்க முடியாது. உணர்வால் மட்டுமே உட்கொள்ளமுடியும். நான் இப்போது உங்களிடம் உரைத்தவை யாவையும் செவிமடுத்து அனுசரித்து, ஒரே நினைவாக என்னையே நினைத்துக் கொண்டு இருங்கள். . . அகிலம் ======= இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய் வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும் வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார் உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும் திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில் பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள் திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க நாரா யணரும் நல்லசிவ னுமையும் சீராரும் நல்ல தெய்வத் திருமாதும் கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில் ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது . விளக்கம் ======== என்னுடைய போதனைகளைக் கேட்ட இந்த தருணத்திலிருந்து, நீங்கள் பூலோகத்தில் பெண் மனுவாகப் பிறப்பெடுக்கும் சமயம் வரை, சந்திர கலை, சூரிய கலை, சுழு முனை ஆகிய ஆகிய சுவாச அசைவுகளில் நாட்டமற்று இருங்கள் என்று சப்தமாதர்களுக்கு மகாவிஷ்ணு எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட சப்த மாதர்கள், அளவற்ற ஆனந்தத்தோடு மகாவிஷ்ணுவைப் பார்த்து, எங்களுடைய நாயகரே நீங்கள் சொன்னபடியே எங்களைப் பூலோகத்தில் பிறவி செய்யுங்கள் என்றார்கள். . உடனே, மகாவிஷ்ணுவும், சிவபெருமானும், பிரம்மதேவனும் பூலோகத்தில் சப்தமாதர்கள் பெற்ற பிள்ளைகளின் வழிக்குலத்தில் சப்தமாதர்களைப் பிறவி செய்வதற்கான ஏற்பாட்டினைச் செய்யலானார்கள், அதன்படியே சப்த மாதர்கள் பூலோகத்தில் பிறவியாயினர். . இவ்வண்ணமாக சப்த மாதர்களைப் பூலோகத்தில், பிறவி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும், உமையவளும், மகாலட்சுமியும் கயிலையங்கிரிக்குச் சென்று அவர்களுக்கான அலங்கார மண்டபத்தில் ஒய்யாரமாக எல்லாரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர். . . தொடரும்…. அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி தேவன் பெற்ற 60668 மனுவென வளங்கள் நாட்டி நெய்யிடை வழியிற் சேர்ந்து செய்து நெருட்டிமா ஞாலஞ் செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash] 26.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி தேவன் பெற்ற 60668 மனுவென வளங்கள் நாட்டி நெய்யிடை வழியிற் சேர்ந்து செய்து நெருட்டிமா ஞாலஞ் செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash] 26.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat
#அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும் அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும் ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார் அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும் மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய் இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால் கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர் தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால் வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால் அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும் என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும் நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம் இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக . விளக்கம் ========= பிரம்மதேவன், மகாவிஷ்ணுவைப் பார்த்து, திருமாலே, இறந்த பிள்ளைகள் இரண்டுபேரும் தங்களின் மக்கள் என்பதால் மனம் தளர்ந்த நான் பதற்றம் அடைந்துவிட்டேன். அவை இரண்டும் பரலோகத்து மனிவரின் உயிரும், தேவலோக வானவர் உயிரும் ஆகையால் மீண்டும் பிறவி அமைக்கலாகாதே என்று எண்ணி, மேலான அவ்விரண்டு உயிர்களையும் தர்மம் நிறைத்து இயங்குகின்ற உயர்வான கயிலாசத்தில் ஒரு திருவிடத் திருவறைக்குள் அடைத்து வைத்துள்ளேன் என்றார். . பிரம்மதேவன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட மகாவிஷ்ணு, பிரம்மதேவனைப் பார்த்து, அடடே அவ்விரண்டு உயிர்களையும் அன்றே மறுபடியும் பிறவி செய்யாமல் விட்டு விட்டீரே. உடனே பிறவி செய்திருந்தால் அநேக மக்களாகப் பெற்றுப் பெருகி இருப்பார்களே. எஞ்சிய ஐந்து மக்களின் பிள்ளைகளும், தேசம் ஐம்பத்து ஆறிலும் பெற்றுப் பெருகிப் பரந்து இருப்பதைப் போன்று இவ்விரண்டு பிள்ளைகளின் பிற்கிளைகளும் கிளை கிளையாகப் பெருகிக் கோடிக்கணக்காக இருந்திருப்பார்களே. . அன்று சோழனென்ற பாவி அவர்களைக் கொன்று கெடுத்தான். நீரோ அவர்களை மீண்டும் படைக்காமல் கெடுத்துவிட்டீர். வஞ்சகக் கலி நீசப் பாவியோ என் மக்களை வலித்துப் பிடித்து வதைத்துக் கெடுக்கிறான். இதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அந்த இரண்டு உயிர்களையும் வைகையில் மடிந்த அந்த உடலோடு மனுவோராய் எழுப்ப வேண்டும் என்று நான் நிச்சயித்து இருக்கிறேன். ஆகவே, அவ்வுயிர்களை பத்திரமாக வைத்துப் பாதுகாக்க வேண்டியது உம்முடைய பொறுப்பாகும். . அத்துடன் அவ்விருவரின் வாரீசாகப் பிறந்து கள்ளங் கபடமில்லாமல் பூலோகக்தில் வாழ்ந்து கொண்டிருப்போரின் பிற்கிளைகளாக, கயிலாசத்திலும், தேவலோகத்திலும் இன்னும் பூவுலகில் பிறப்பிக்காமல் எஞ்சி இருப்போரை எல்லாம் திடீர் திடீர் எனப் பிறவி செய்து இவ்வழிக்குலத்தோர் பெருகிடச் செம்மையாகச் செயல்படுவீர் என்று பிரம்ம தேவனிடம் மகாவிஷ்ணு சொல்லுகிறார். . மூலம் உரைப்பதை முற்றுணர்ந்த வேதா நல்லதென இசைந்து, கைலாச வாசிகளையும், தேவலோக வாசிகளையும் இறந்த இருவரின் பிள்ளைகளின் சந்ததிகளாகத் துரிதமாகப் பிறவி செய்யலானார். . . அகிலம் ======= சப்த மாதர்கள் பூலோகப் பிறவி =============================== உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார் நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர் உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில் நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால் ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும் மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே செங்கருட வாகனவா தேவி மணவாளா நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும் சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில் மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர் பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால் இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால் வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும் மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல் சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல் மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல் பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல் நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல் தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல் கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல் மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல் கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல் செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல் பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல் மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல் சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல் ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல் அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல் தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல் இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச் சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும் என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார் . விளக்கம் ======== பிரம்மதேவன், சிவலோகத்தாரையும், தேவலோகத்தாரையும் பூலோகத்தில் விரைவாகப் படைக்க முற்பட்டதால் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, மனஉறுதி உடைய மடந்தையர்களான சப்தமாதர்களைப் பார்த்து, பெண்ணரசிகளே ! நீங்கள் என்னிடம் கேட்டதற்கு நான் எடுத்த நடவடிக்கைகளையும், தீர்மானத்தையும் கண்கூடாகக் கண்டீர்கள். இனி நான் உங்களிடம் கேட்டேனே அதுபற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்? . உங்களைப் பூலோகத்தில், நீங்கள் பெற்ற பிள்ளைகளின் வழிக்குலத்தில் பிறவி செய்யலாம் என்று நிச்சயித்து இருக்கிறேன். இதைப்பற்றி உங்களுடைய விருப்பம் என்ன? என்பதை உடனே சொல்லுங்கள் என்று மகாவிஷ்ணு சப்தமாதர்களிடம் கேட்டார். . அதனால் மனம் மகிழ்ந்த சப்தமாதர்கள், அந்த சந்தோசப் பெருக்கோடு மகாவிஷ்ணுவிடம், எங்களுடைய நாதா ! எங்களை ஆளுகின்ற மாமணியே ! தாங்கள் நிச்சயித்த எண்ணத்தில் எள்முனை அளவுகூட சிவபெருமான் முதற்கொண்டு உலகில் எவரும் அறிய முடியாத அளவில் வலிமைமிகு சூட்சுமம் உடையவரே ! எங்களைப் பூலோகத்தில் எங்களுடைய வழிக்குலத்தில் மங்களமாகப் பிறவி செய்கிறோம் என்று சொன்னீர்களே, நாங்கள் பூலோகத்தில் உள்ள மனுக்குலத்தில் பெண்பிள்ளைகளாகப் பிறந்தால் அங்கே எங்களுக்கு மரணம் ஏற்படாமல் இருக்க அருள்புரிவீரோ... . அப்படி அருள் புரியாத பட்சத்தில் நாங்கள் பூலோகத்தில் மனுக்குலத்தில் பிறந்தால், வலிமை பொருந்திய நாயகமாகிய தாங்கள் பூலோகத்தில் வந்து எங்களை ஏற்றுக் கொள்கின்ற காலம்வரை, எங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமலும், திருமணம் நடந்துவிடாமலும், பருவகால மயக்கம் இல்லாமலும், சிற்றின்ப சேர்க்கை இல்லாமலும், தோல்சீலை அணிய வேண்டிய அவசியம் இல்லாமலும், சிகை அழகு ஏற்படாமலும், பொழுது சாயும் வேளையில் முணுமுணுத்துப் பாடாமலும், அந்நேரம் படுத்துத் தூங்காமலும், நல்லது கேட்டது பற்றி அறியாத நிலையிலும் யாரும் எங்களைக் கேலி செய்யாத முறையிலும், சுவையான உணவுகளில் நாட்டம் வராமலும், முறைப்படி கொசுவம் மடித்துப் புடவைக்கட்டத் தெரியாத நிலையிலும், கூந்தல் வளர்க்கும் எண்ணம் இம்மியும் இல்லாமலும், மார்பகங்கள் வளர்ச்சி அடையாத வண்ணமும், அழகை மிளிரச் செய்யும் சதை மினுக்கம் இல்லாமலும், பருவகாலத் தேமல் உடலில் ஏற்படாத வண்ணமும், பருவப்பெண் என்ற நிலை எங்களைச் வந்து அணுகாமலும், மிகுதியான திரண்ட வாழ்வு எங்களைச் சேராத நிலையிலும், சுற்றமோ, உறவோ எங்களிடம் அலாதி அன்பு கொள்ளாத அளவிலும், யாரைப் பற்றியும் கோள் சொல்லாத நிலையிலும் யாருடைய முகத்தையும் மோகித்துப் பார்க்க வேண்டியதில்லாவண்ணமும் துன்பமோ, நோய், நொம்பலங்களோ சிறிதளவு கூட இல்லாதவாறும், தொந்தரவுகளானாலும், நல்லவையானாலும் பெரிய அளவில் இல்லாத வகையிலும் தாங்கள் எங்களைப் பூலோகத்தில் பிறவி செய்யுங்கள். . இவ்வண்ணமாக எங்களைப் பூலோகத்தில் படைத்து, தாங்களும் பூலோகத்தில் வந்து அவதரித்து, எங்களை உங்கள் மனைவியர்களாக்கி, எங்களுக்கு வாழ்வு தந்து காத்தருள்வேன் ஏன்று எங்களுக்கு வாக்குறுதி அளித்து, இவற்றை எல்லாம் மனதிற்கொண்டு எங்களுடைய வழிக்குலத்தில் எங்களைப் பிறவி செய்யுங்கள் என்று ஏழு மாதர்களும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர். . ஏழு மாதர்களின் வேண்டுகோளையும் கேட்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவர்களைப் பார்த்து. நிங்கள் எம்மிடம் நல்ல வேண்டுகோளை வைத்துள்ளீர்கள். உங்களுடைய இந்த வேண்டுகோளின்படியே உங்களைப் பூலோகத்தல் பிறவி செய்ய உடன்படுகிறேன். இவை எவ்வகைக் காரணத்தாலும் மாற்றம் ஏற்படாது என்று சப்தமாதர்களிடம் மகாவிஷ்ணு வாக்களித்தார். . . தொடரும்…. அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 16 தசரதன் மகவாய் மாயோன் வந்து சீமையில் தோன்றி புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ னென்று வசையுடன் மனுத்தா வாதிட்ட அரக்கன் தன்னை விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ ! அகிலம் 25.02.2026 0 Muthu Prakash ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் லளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 16 தசரதன் மகவாய் மாயோன் வந்து சீமையில் தோன்றி புசமுடப் பிறப்போர் கூடப் பிறந்ததுங் கேட்டி லீரோ னென்று வசையுடன் மனுத்தா வாதிட்ட அரக்கன் தன்னை விசையுட னறுத்த செய்தி விளம்பியுங் கேட்டி லீரோ ! அகிலம் 25.02.2026 0 Muthu Prakash ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் லளி போல் - ShareChat
#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= மகாவிஷ்ணுவுக்கு சப்தமாதர்கள் இடட சாபம். =================== எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத் தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத் தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல் உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய் வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக் குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும் நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால் இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும் அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக் கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும் எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம் மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும் . விளக்கம் ======== எங்களை நீர் கற்பழித்ததினால் எங்கள் சுபசோபனங்கள் யாவையும் மறந்து, இந்த வனத்தில் தலைவிரி கோலமாகவும், தூங்காமலும், சோர்வடைந்தும், ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய மன உளைச்சலோடும், எங்களுக்கே உரித்தான கர்வத்தை மறந்து, பூலோகத்தைப் பற்றிய எண்ணங்களைத் துறந்து, கூந்தலைச் சிதறவிட்டு, சுவாசத்தைக் கூட நிலையானதாகக் கருதாமல், உலையில் அகப்பட்ட மெழுகு உருகுவதைப் போல் திரட்சியான இந்தக் கானகத்தில் நிலையாக நின்றோம். வெயில், பனி, மழை அத்தனைக்குள்ளும் அகப்பட்டு குயில் கூவும் இந்த வனத்தில் நாங்கள் ஏழு பெண்களும் உம்முடைய சூழ்ச்சிக்குள் சிக்கியதால் இந்தக் காட்டிற்குள் நிலையாக நின்று விட்டோம். . இனி இதைப்பற்றி நாங்கள் நினைக்காமல் இருக்கத் தக்க நிலையிலான ஏற்பாடுகளைச் செய்துவிடும். அதாவது, முதலில் அநியாயச் செயல்களுக்கு முடிவு ஏற்படுத்தி, குறுகிய புத்தியை உடைய கலி என்னும் கொடிய மாய்மாலத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் மாய்ந்துபோகச் செய்துவிட்டு, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும், அவர்களின் சந்ததியரையும் சேர்த்தெடுத்து அவர்களுக்கு அரசாட்சியும் தர்மபூமியும் அருள வேண்டும். எங்கள் வேண்டுகோளின்படி எம் மக்களுக்கு அரசாட்சியும் தர்மபூமியும் தரும் வரைக்கும் எங்களைப் போல் நீரும் எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாதவராகவே இருப்பீர். உமக்கு எவ்வித சுபசோபனமும் இந்தக் கேடான கலி முடியும்வரை கிடைக்காமலே போகும் என்று சப்தமாதர்கள் மகாவிஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்தார்கள். . . அகிலம் ======== அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார் பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும் துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர் அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில் ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான் எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண் கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார் . விளக்கம் ======== சப்தமாதர்களின் சாபத்தைப் பெற்ற மகாவிஷ்ணு, மிகுந்த கவலையுற்றார். இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தவாறு மனவேதனையோடு அந்த மாதர்களைப் பார்த்து. சொல்லுகிறார். மாதர்களே ! நீங்கள் ஏழு பேரும் எனக்குச் சாபம் தருவதென்பது நீங்கள் செய்த குற்றமோ, நான் செய்த தவறோ அல்ல. இவை யாவும் பிரம்மதேவன் அமைத்தபடியே நடந்தேறியுள்ளன. விதியின் விளைவால்தான் எனக்குச் சாபமிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துள்ளது. அதற்கு நான் என்ன செய்வது? . ஆனால் நான் இந்தக் கேடு மிகுந்த கலியை அழித்து, நம்முடைய மக்களையும் அவர்களின் சந்ததியரையும் அரவணைத்துக் காப்பாற்றி அவர்களுக்கெல்லாம் நற்பேறு கொடுக்கும் வரை நீங்கள் இதுகாலம் வரை அனுபவித்ததைப் போன்ற துன்பங்களை நானும் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டுள்ளீர்கள். . இதுவும், அன்றொரு கால் சிவபெருமான் என்னப் பார்த்து அசுரர் குலத்தை அடியோடு அழித்து ஒழிக்கும் வரை உமக்கு ஓய்வில்லை என உரைத்தார். அன்று சிவபெருமான் சொன்னதற்கும் நீங்கள் இன்றெனக்கு இட்ட சாபத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கிறது. . ஆனால், கலியை அழிப்பதென்பது நினைத்த மாத்திரத்தில் நிறைவேறிவிடும் காரியம் அல்ல. அதற்குத் வேதகாலக் கணக்குப்படி பார்த்தாலும் பல மாதங்கள் ஆகலாம். அதுவரைக்கும் நீங்கள் ஏழு பேரும் எங்கேபோய் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணத்தை என்னிடத்தில் சொல்லுங்கள் என்று தம் இனிய தேவியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்ட பாரளந்த பரம்பொருள் வாஞ்சையோடு கேட்டார். . . அகிலம் ======= வைகையில் இறந்த இரு உயிர்கள் பற்றிய விவரம் ================================================== அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும் தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண் . விளக்கம் ========= மகாவிஷ்ணுவின் வாஞ்சை மிகுந்த வார்த்தைகளைக் கேட்ட சப்தமாதர்கள் ஒருவரோடு ஒருவர் ஆலோசித்துவிட்டு, சிவநேசனாகிய மகாவிஷ்ணுவைப் பார்த்து, சோழப் பேரரசனால் மாண்டு போன எங்கள் இரண்டு பிள்ளைகளின் உயிர்களை என்ன செய்தீர்கள்? . இறந்த இரண்டு பிள்ளைகளின் வாரிசு வழியில் பிறவி செய்தீர்களா? அல்லது அயலார் வாரிசு வழியில் பிறவி செய்தீர்களா? அதைப்பற்றி எங்களுக்குத் தாங்கள் சொல்லப்போகும் விவரம் என்ன? என்று கேட்டனர். அதனால் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவனை வருவித்து, பிரம்ம தேவரே, வைகை ஆற்றில் சோழ மன்னன் குரு நன்றியை மறந்து என் மக்கள் இருவரைக் கொன்றானே, அந்த இரு உயிர்களும் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்டார். . . தொடரும்…. அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 னைச்சார்ந்த அன்போர்க்கு சந்தோச மாகுதுகாண் 9 எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே யிரு அதுவரையும் நீதான் அன்பா மகனே துவந் தாகிடி எண்ணம்வையா தேமகனே னம் 61 சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன் இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ அய்யா 24.02.2026 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 னைச்சார்ந்த அன்போர்க்கு சந்தோச மாகுதுகாண் 9 எந்துயர மெல்லாம் ஏகுதுகா ணென்மகனே யிரு அதுவரையும் நீதான் அன்பா மகனே துவந் தாகிடி எண்ணம்வையா தேமகனே னம் 61 சுறுக்கிட்டு யானும் ஒவ்வொன்றாய்த் தோன்றவைப்பேன் இறுக்கும் இறைகளெல்லாம் இல்லையென்று சொல்லிடுநீ அய்யா 24.02.2026 - ShareChat
#அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால் வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால் புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே . விளக்கம் ========= இறந்துபோன இரண்டு பிள்ளைகளும் திருமணமானவர்களாக இருக்குமோ? வாலிப வயதிலே அந்தப் பாதகன் வஞ்சகமாகக் கொன்றிருப்பானோ? அவர்களுக்குக் கலியாணம் ஆகியிருந்தால் வாலிபமான அந்த மங்கையர்கள் மனம் வருந்தி வாடுவார்களே. அவர்களின் ஆடை ஆபரணங்களை எல்லாம் கழற்றி இரப்பார்களே. அவர்களுக்கு எம்பிள்ளைகள் கட்டின மாங்கல்யத்தையும் கழற்றியிருக்கக் கூடுமே. இவற்றையெல்லாம் கழற்றாமல் இருக்க சிவபெருமான் அவர்களுக்கு அறிவைக் கொடுத்திருக்க வேண்டுமே, எங்களுடைய அன்னையாகிய உமாதேவியே, என்னதான் நடந்தது என்று எதையும் நிதர்சனமாக அறிய முடியவில்லையே. . . அகிலம் ======= கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே கன்னிப் பருவமதில் கைமோச மானதினால் உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப் பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச் சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித் தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே . விளக்கம் ========= கோதண்டமுடைய தாயே, எங்களையெல்லாம் வைத்து ஆட்சிபுரிகின்ற மாதாவே! நாங்கள் தவம் புரியும் இந்த வனத்திற்கு எங்களைத் தேடி நீங்கள் வந்ததால் எங்கள் துயரங்கள் யாவும் தீர்த்துவிட்டீர்கள் என்று கிடைத்தற்கரிய கனி கிடைத்தாற் போன்று மட்டில்லா மகிழ்ச்சி கொண்டோம் மாதாவே ! ஆனால், எங்களை கைப்பிடித்த பொக்கிஷம் சொன்ன செய்திகளைக் கேட்டதும் எங்கள் உடலின் ஒவ்வொரு அங்கமும் தடுமாறுகிறது தாயே. . கன்னிப் பருவத்திலே நாங்கள் மகாவிஷ்ணுவின் மாய்கையினால் கற்பை இழந்துவிட்டதை நினைத்து நினைத்து மனம் இடிந்து ஒடிந்து போய்விட்டதால் எங்கள் பிள்ளைகள் என்று கூட நினைத்துப் பார்க்க முடியாதவர்களாக அந்த வனத்தரையில் படுக்க வைத்துவிட்டு வெட்கம் தாளாமல் தவம் செய்யக் கானகம் தேடிச் சென்று விட்டோம். சோழனென்ற கெடுவான் இப்படி எம்பிள்ளைகளில் இரண்டைப் பலிகொள்வான் என்று எங்கள் மனம் சற்றும் அறியாமல் போய்விட்டதே. . . அகிலம் ======= எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும் சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர் நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில் சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம் எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன் கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக் கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம் இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும் மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும் குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத் திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும் கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால் ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம் நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும் . விளக்கம் ========= எங்களைச் சீர்கெடச் செய்து, நாங்கள் பெற்ற பிள்ளைகளையும் பெருமை குலையச் செய்வதற்காகவே கபடநாடக சூத்திரதாரியாகிய மகாவிஷ்ணு ஆட்பட்டிருக்கிறார். நாங்கள் அன்றாடம் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்ட இடத்தில் விஷ விருட்சம்போல் சன்னியாசி கோலத்தில் வந்து உலகத்தையே உடைமையாகக்கொண்ட மகாவிஷ்ணு எங்களுக்குத் துரோகம் செய்து விட்டார். . எங்களையெல்லாம் இந்நிலைக்கு ஆட்படுத்துவதற்காகத் தான் பிரம்மதேவன் இவரைப் படைத்தாரா? இவற்றையெல்லாம் கங்கையைத் தம் தலையில் அணிந்து கொண்டிருக்கும் சிவ பெருமான் கேள்விப்பட்டும் மகிழ்ச்சியோடு இருக்கிறாரா? . இத்தனை நாடகத்தையும் இந்த விளையாட்டையும் நடத்துவதற்காக நடிகனாக வேடங்கொண்ட மகாவிஷ்ணு இனி எங்களை மாலையிட்டு மனைவியர்களாக ஏற்று, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும், அவர்களின் சந்ததியரையும் எந்த குறையும் இல்லாமல் தந்து, இந்த உலகத்தையும், உலகத்தை ஆளுவதற்கான மகிமை மிகுந்த மகுடமும், அதற்கான செங்கோலும் அருளி, எங்களுடைய மக்கள் இந்த உலகத்தை ஆட்சிபுரிவதற்கு உடனே ஏற்பாடு செய்து தரவேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்தால் எங்கள் ஏழுபேருக்கும் தீங்கு செய்த பாவம் உம்மைப் பற்றிக்கொள்ளும். எனவே, காலதாமதமின்றி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாரும். . தொடரும்... அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு பறித்து நீசனுட கண்ணைப் யறுத்துக் கலியழித்து கருவை வளர்ந்து வாழவைப்பேன்  எண்ணும் ணையிதுநிசமகனே 66060[ ( அய்யா ! 23.02.2026 D Mutwu Pokacw வீரத்தனமாய்  ருங்கோ விளக்கின் ஒளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! வண்ணம் பதியி னலங்காரம் வகைகளின்ன தென்று சொல்லி எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு பறித்து நீசனுட கண்ணைப் யறுத்துக் கலியழித்து கருவை வளர்ந்து வாழவைப்பேன்  எண்ணும் ணையிதுநிசமகனே 66060[ ( அய்யா ! 23.02.2026 D Mutwu Pokacw வீரத்தனமாய்  ருங்கோ விளக்கின் ஒளி போல் - ShareChat
#அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= நீரு மித்தனைநாள் நின்றுவிட்டீ ரித்தலத்தில் நானும் பரதேசம் நடந்துவந்தே னித்தனைநாள் சான்றோர் துயரம் தான்கேட்பா ராருமில்லை . விளக்கம் ========= நீங்கள் ஏழுபேரும் இவ்வளவு காலமும் இந்த வனத்தில் தவமாய் இருந்து விட்டீர்கள். நானும் பரதேசியைப் பொல் இவ்வளவு காலமும் அலைந்து திரிந்து விட்டேன், நல்ல மக்களின் துயரத்தைக் கேட்க நாதியில்லை. அகிலம் ======= மீண்டே நாம்கேட்கவென்று மேதினியில் போகவென்றால் இச்சொரூபங் கொண்டு ஏகினால் மாகலியன் பொய்ச்சொரூபத் துள்ளே புக்கிடுவோ மல்லாது என்றையா நாதன் எடுத்துரைக்கக் கன்னியர்கள் அன்றவர்கள் தலையில் அடித்துக்கீழ் வீழ்ந்தழுதார் அழுதாரே பெண்கள் அருவரைகள் தானிளக ஒழுகான பெண்கள் ஓலிமிட் டேயழுதார் அய்யோயெம் மக்கள் ஐந்திரண் டானதிலே பொய்யோமெய் யோசோழன் பொன்றிவிட்ட ஞாயமது கற்பழியாக் கன்னியெங்கள் கற்பையெல்லாம் நீரழித்து உற்பனமாய்ப் பெற்றபிள்ளை ஒன்றுபோல் நீர்பார்த்து வளர்க்காமல் மக்களையும் மாளக் கொடுத்தீரே பழவினையோ யெங்களுட பாவக் குறைச்சலிதோ கற்பிழந்தோ மென்றும் கௌவையில்லா தேயிருக்க இப்பிழையோ வந்து எமக்குத் தலைவிதிதான் மக்க ளிருபேரை வதைத்தகொடுஞ் சோழனுட அக்கபக்க மெல்லாம் அறாதோ எம்சிவனே மாபாவிச் சோழனுட வம்மிசங்க ளானதெல்லாம் தீயாவிக் கொண்டு செத்திடா தோசிவனே எம்மக்கள் தம்மை இடுக்கஞ்செய் தேயடித்த வன்மக்கலி நீசனெல்லாம் வாழ்விழந்து சாகானோ பழிசெய்த சோழனூர் பகலநரி ஓடாதோ வழிசோழ வம்மிசங்கள் வன்னரகில் மாளாதோ நீசக் குலங்கள் நெருநெரெனத் தானொடிந்து தோசப் புழுக்குழியில் தோயாதோ யெம்சிவனே பெற்றநா ளன்றுமுதல் பிள்ளைகளைக் காணாமல் நித்தம் பால்சுரந்து நெகிழுதே யெம்சிவனே . விளக்கம் ========= நாதியற்றவர்கள் போல் துன்பப்படுகின்ற அந்த நல்ல மக்களின் துயரத்தைப்பற்றிக் கேட்பதற்காக நான் பூலோகத்திற்குப் போக வேண்டுமானாலும் எனக்கே இயல்பான இந்த ரூபத்தில் போகக் கூடாது. போனால் கலியர்களின் கபடமான செயல்கள் எம்மை அவர்களுக்குள் புகுந்து விடச் செய்து விடும். அத்துணைக் கொடிய கலிநீசர்களிடம் எப்படி போய் நம் மக்களைக் காப்பாற்றுவதென்றே புரியவில்லை என்று தன் நிலைப்பாட்டை சற்று சஞ்சலத்தோடு சப்தமாதர்களிடம் மகாவிஷ்ணு எடுத்துக் கூறினார். . அதைக் கேட்ட சப்த மாதர்கள் தலையில் அடித்துக்கொண்டு தரையில் விழுந்து அய்யகோ என்று அழுது புலம்பினர். எங்களுடைய ஏழு பிள்ளைகளில் இரண்டு பிள்ளைகளைச் சோழ மன்னன் கொன்றுவிட்டான் என்ற செய்து உண்மையோ பொய்யோ தெரியவில்லையே. கனனியர்களான எங்கள் கற்பெல்லாம் நீர் அழித்து, உத்தமமாய் நாங்கள் பெற்ற பிள்ளைகள் ஏழுபேரையும் ஒன்று போல் காத்து ரட்சிக்காமல் அவர்களில் இரண்டு பேரைச் சாகக் கொடுத்துவிட்டீரே. இது எங்கள் முன்வினைப் பயனோ? நாங்கள் செய்த பாவத்தின் சம்பளமோ? . நாங்கள் கற்பிழந்துவிட்டோமே என்ற கவலையை மறப்பதற்காக இப்பிழை நேர்ந்ததோ? இதுவும் எங்கள் தலைவிதி தானோ? . சிவபெருமானே எங்கள் பிள்ளைகளில் இரண்டு பேரைக் கொன்ற கொடுஞ் சோழனுடைய நாடு அழிந்து நாசமாகாதா? அந்த மாபாதகனாகிய சோழனுடைய சொந்த பந்தங்கள் யாவும் நெருப்பால் அழிந்து நீறாக மாட்டார்களா? எங்கள் பிள்ளைகளைத் துன்புறுத்தி அடித்த பகை வைராக்கியம் நிறைந்த கலிநீசர்கள் எல்லாரும் வாழ வழியற்றுச் சாகமாட்டார்களா? எங்கள் பிள்ளைகளைப் பலிகொண்ட சோழ நாடு அழிந்து காடாகி அந்த காட்டில் பகலில் நரி நடமாடாதா? சோழனின் வழிக் குலங்கள் யாவும் மாண்டு மீளா நரகத்தில் மூழ்கமாட்டார்களா? நீசக் குலங்களெல்லாம் கொடூரமான முறையில் அழிந்து மீளாப் புழுக்குழிக்குள் முங்கிப் போகமாட்டார்களா? பெற்ற அன்று முதல் எங்கள் பிள்ளைகளைக் காணாமல் எங்கள் மார்பகங்கள் எப்போதும் பால் சுரந்தவண்ணமாக இருக்கிறதே சிவபெருமானே…… . . அகிலம் ======= பெற்றபிள்ளை ஏழுடைய பேருடம்பு தன்னிறத்தைச் சற்று மறிந்திலமே தலையிலேழு துஞ்சிவனே கொதிக்குதே யெங்கள் கும்பிமிகக் குமுறிக் கதிக்குதே யெங்களுட கண்மணியைக் காணாமல் ஏழுகன்னி மாரில் யார்பெற்ற கண்மணியோ கோளுரைத்துப் பாவி கொன்றானோ யெம்சிவனே கொன்னவன்தா னின்னம் கொடுநரகில் வீழாமல் இன்ன மிருப்பானோ இறந்தானோ யெம்சிவனே பாவியவன் செத்துப் பஸ்பமாய்ப் போனாலும் ஆவியைக் கண்டாலும் ஆக்கினைகள் செய்திடுவோம் . விளக்கம் ======== உலகில் பிறக்கும் ஒவ்வொரு உயிர்களுக்கும் அவரவர் விதியை அவர்களின் தலையில் எழுதுகின்ற சிவபெருமானே, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளின் பெருமைகளையோ, அவர்களின் நிறத்தையோ நாங்கள் கொஞ்சங்கூட அறிந்தது இல்லையே. . அந்தப் பிள்ளைகளைப் பெற்ற எங்கள் வயிறு பற்றி எரிகிறதே. எங்கள் கண்மணிகளைக் காணாமல் எங்கள் மனம் குமுறிக் கொந்தளிக்கிறதே. பாதகர்களால் பலிகொள்ளப்பட்ட இரண்டு பிள்ளைகளும் எங்களில் யார் பெற்ற பிள்ளைகளோ தெரியவில்லையே. . கோளுரைத்து எங்கள் பிள்ளைகளின் சாவுக்குக் காரணமாக இருந்த அந்தக் கொடியவன் கொடிய நரகத்தில் விழாமல் இன்னும் இருக்கிறானோ... செத்தானோ தெரியவில்லையே. அந்தப் பாதகன் ஒருவேளை செத்துச் சாம்பலாகப் போயிருந்தாலும் அவனுடைய உயிர் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடித்துத் தண்டிப்போம். . . தொடரும்…. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! பதியி னலங்காரம் வண்ணம் தென்று சொல்லி வகைகளின்ன எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு பறித்து நீசனுட கண்ணைப் யறுத்துக் கலியழித்து கருவை வளர்ந்து வாழவைப்பேன் எண்ணும் ணையிதுநிசமகனே என்னா அய்யா 22.02.2026 MuLiu PగEh ஙகோ வீரத்தனமாய் விளக்கின் ஒளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! பதியி னலங்காரம் வண்ணம் தென்று சொல்லி வகைகளின்ன எண்ணத் தொலையா தென்மகனே இரத்தின சிங்கா சனப்பவிசு பறித்து நீசனுட கண்ணைப் யறுத்துக் கலியழித்து கருவை வளர்ந்து வாழவைப்பேன் எண்ணும் ணையிதுநிசமகனே என்னா அய்யா 22.02.2026 MuLiu PగEh ஙகோ வீரத்தனமாய் விளக்கின் ஒளி போல் - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= அய்யா முதற்பொருளே ஆனந்த மானவரே மெய்யான மூல மேல்வீட்டி ருப்போனே தூணாக அண்டபிண்டத் தூரைக் கடந்தோனே கோணவட்டத் துள்ளே குடியிருக்குங் கோவே ஈசரே யெங்களுட இளைப்பெல்லாம் நீர்மாற்றித் தேசமதில் வாழச் செல்ல வரந்தாரும் பெற்றமக்க ளேழும் பிள்ளை யதுவழியும் கொத்துக் கொடியும் குலவம்மி சமுழுதும் சான்றோர் வழிமுழுதும் தற்காத்து எங்களையும் பண்டூசல் செய்த பாரமுனி வன்பதத்தில் சேர்ந்திருக்க வுமவரின் திருப்பாத முந்தொழுது தாழ்ந்திருக்க வுஞ்சிவனே தாரும்வர மென்றுரைத்தார் அப்போது நல்ல ஆதிசிவ மேதுரைக்கும் இப்போது நாரணரே இக்கன்னி கேட்டதற்கு இன்னவித மென்று இசைந்து வரங்கொடுவும் . விளக்கம் ========= உலகத்தைப் பெற்ற முதற்பொருளே ! சகல சந்தோசங்களுமாய் இருப்பவரே ! ஒவ்வொரு உடலிலும் மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிப்பூரகம், அனாதகம், விசுத்தி, ஆக்ஞா ஆகிய ஆதாரங்களிலும் அமர்ந்து இயக்குவோனே ! அண்ட பிண்டம் அனைத்தையும் தாங்கியிருக்கின்ற தூணாகவும் அவற்றைக் கடந்தும் இருப்போனே ! பரவெளியாகிய சகஸ்ரார தலத்தில் தங்கியிருந்து ஆட்சிபுரியும் அரசே ! சிவபெருமானே ! எங்களுடைய இன்னல்கள் யாவையும் அகற்றி, நாங்கள் மண்ணுலகில் வாழ்வதற்கு வகையான வரத்தினைத் தந்தருளுங்கள். . அங்கே நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும் அவர்களின் பிற்கிளைப் பிதுர்வழியினரையும் ஒட்டுமொத்தமாகத் தற்காத்துத் தந்து, அன்று அயோக வனத்தில் வைத்து எங்களை, இந்த நிலைக்கு ஆளாக்கிய மாகாவிஷ்ணுவையும் எங்களோடு சேர்ந்து இருக்கவும், அவருக்கு நாங்கள் அன்றாடம் பணிவிடைகள் செய்து பரவசமடையவும் தாங்கள் எங்களுக்கு வரம் தந்தருள வேண்டும் என்று சிவடிபருமானிடம் ஏழு மாதர்களும் வேண்டினர். . அதனால் மனம் மகிழ்ந்த சிவபெருமான், தம் அருகிலிருக்கும் மகாவிஷ்ணுவைப் பார்த்து, நாராயணரே, இந்த ஏழு மாதர்களும் கேட்கும் வரங்களைக் கவனித்து, உணர்ந்து மனமுவந்து கொடுத்தருளும் என்றார். . . அகிலம் ======= சப்த மாதர்களிடம் மகாவிஷ்ணு உரையாடல் ============================================== சொன்னவிதங் கேட்டுச் சொல்லுவார் நாரணரும் கேட்ட வரமதுதான் கெட்டிதான் ஈசுரரே நாட்டமிந்தப் பெண்களுக்கு நான்சொல்ல நீர்துணையாய் மடமாதே பெண்ணரசே மடந்தைக் கிளிமொழியே தடமான பொய்கையிலே தண்ணீர் தனைச்சுருட்டி ஈசருட முடியில் இட்டுக் கரங்குவித்து வாசமுடன் நாடோறும் வருகின்ற வேளையிலே இன்றேநீர் கொண்டு ஏகின்ற நீரையெல்லாம் இன்றென் தலையில் இயல்பாய் விடுவுமென்றேன் இரந்து திரியும் ஈசருக் கல்லாது பரந்தபுவி மாயனுக்குப் படாதே எனவுரைத்தீர் அப்போது உங்களைநான் ஆகட் டெனவுறுக்கி இப்போது பாரென்று இத்தனையுஞ் செய்தனல்லோ வண்ணத் திருமாலிவ் வகையுரைக்க மாதரெல்லாம் கண்ணையவர் பொத்திக் கவிழ்ந்துமிக நாணிநின்றார் . விளக்கம் ======== சிவபெருமான் சொன்ன விதத்தை உணர்ந்த மகாவிஷ்ணு மகாதேவா ! இந்த மாதர்கள் மிகச் சாமர்த்தியமாக வரம் கேட்கிறார்கள். அவர்களின் விருப்பப்படியே உமது துணையோடு நான் வரம் கொடுக்கிறேன் என்று சொல்லிக்கொண்டே அந்த ஏழு மாதர்களையும் பார்த்து. கபடமற்ற மாதர்களே ! பெண் இனத்தின் ஆளுமையே ! கிளியைப் போன்று பேசுகின்ற கன்னிகளே ! நீங்கள் நாள்தோறும் அயோக வனத்து அமிழ்தகங்கையில் நீராடிவிட்டு, சிவபெருமான் மீது நீங்கள் வைத்திருந்த பக்தியின் வலிமையால் தண்ணீரைத் திரட்டி எடுத்துச்சென்று சிவபெருமானின் திருமுடியில் அபிஷேகம் செய்து கரங்குவித்து வணங்கி வந்த உங்களிடம் நான் வந்து இன்று நீங்கள் எடுத்துச் செல்லுகின்ற இந்தத் தண்ணீரை நாள்தோறும் சிவபெருமானின் திருமுடியில் இடுவதுபோல் என் தலையில் இடுங்கள் என்றேன். அதற்கு நீங்கள் இந்தத் தண்ணீரை வழக்கம்போல் சிவபெருமானின் திருமுடியில் தான் இடுவோமே அல்லாமல் பரந்த புவி ஆளும் மகாவிஷ்ணுவுக்கும் இந்த தண்ணீரை இடமாட்டோம் என்று தீர்க்கமாகச் சொன்னீர்கள். . உங்களுடைய ஒரே நிலைப்பாடான அந்த உறுதி எனக்கு மிகவும் பிடித்திருந்தபடியால் விண்ணுலகத்தோரை மணணுலகில் பிறப்பிக்க உங்களைப் பயன்படுத்தலாம் என்று உறுதி பூண்டு, அதையும் தான் பார்ப்போம் என்று அதட்டினேன். அதன்படியே இத்தனையும் நடந்தேறிவிட்டது என்று அன்று நடைபெற்ற அனைத்துச் சம்பவங்களையும் வரிசை தவறாமல் விதம் விதமாக மகாவிஷ்ணு விவரித்தார். அதனால் ஏழு மாதர்களும் வெட்கம் தாழாது கண்களைக் கரங்களால் மூடித் தலைகுனிந்து நின்றனர். . . அகிலம் ======= அப்போது எம்பெருமாள் அவர்களுட னேதுரைப்பார் ஒப்போடு வொத்த ஓவியங்க ளேகேளும் நீர்பெற்ற பிள்ளைகள்தாம் நீணிலத்தி லேபெருகி வானத் தமிர்த மதுபா லமுதருந்தி வாழ்ந்தார் சிலநாள் மன்னரெனக் கோட்டையிட்டார் ஆழ்ந்ததொரு சோழன் அவன்பழிகள் ரண்டேற்றான் பின்னுள்ள சான்றோர்க்குப் பிறகுவந்த மாநீசன் அந்நீசன் சாபமிட்டு அவர்கள் துயரமுற்றார் துயரமுற்றுச் சான்றோர் துற்கலிக் குள்ளாகி அயர்ந்து மிகவாடி ஆட்போலே நீசனுக்குத் தாழ்ந்து பணிவிடைகள் சான்றோர்கள் செய்தாலும் வாழ்ந்துமிகக் கெட்டகலி வைது மிகஅடித்து ஆருமற்றார் போலே அலையுகிறார் சான்றோர்கள் சேருமிட மில்லாமல் தியங்குகிறார் சான்றோர்கள் அப்ப னானிருக்க அவரம்மை நீயிருக்க அப்பனம்மை யில்லையென்று அடிக்கிறான் நீசனெல்லாம் . விளக்கம் ========= நாணத்தால் தலைகுனிந்து நின்ற அந்த ஏழு மாதர்களிடமும் மகாவிஷ்ணு மீண்டும் சொல்லுகிறார். வரைந்து வைத்த சித்திரத்திற்கு ஒப்பான அழகையுடைய மாதர்களே ! நான் சொல்லுவதை இன்னும் கேளுங்கள். நீங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளும் இந்தப் பூலோகத்தில் பெருக்கமாகியுள்ளனர். அவர்கள் விண்ணகத்தோர் அருந்துகின்ற அமிர்தத்தை பனைமரத்தின் பால் அமுதாக அருந்தி, கோட்டையும் கொத்தளமும் அமைத்து மன்னர்களாகச் சிலகாலம் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் ஏழு பேரில் இரண்டுபேரைச் சோழ நாட்டு அரசன் கொன்று பழியேற்றான். எஞ்சிய மக்களின் பிதுரிலுள்ள சிலர் பிற்காலத்தில் திருவாங்கூர் மன்னனுக்கு மெய்க்காப்பாளர்களாகப் பணிபுரிந்தனர். . அவர்களும் பொறாமையாளர்களின் சூழ்ச்சியால் அந்த மன்னனின் சாபத்திற்கு ஆளானார்கள். அந்த மன்னனின் சாபத்தைச் சட்டமாக்கி அடுத்தடுத்து வந்த மன்னர்கள் செயல்பட்டதால், சான்றோர்கள் தாங்கொணாத் துயரங்களை அனுபவித்தனர். அப்படித் துன்பங்களை அனுபவித்த சான்றோர்கள் கேடான கலிக்குள்ளாகி மனவலியால் முகவாட்டமாகி, கலிநீசர்களின் அடிமைகளாக அவன் இட்ட பணிகளை எல்லாம் செய்து கொண்டிருக்கின்றனர். என்றாலும் கேடு கெட்ட கலியர்கள் கேவலமான வார்த்தைகளால் வசைமாரி பொழிந்து அடித்து உதைப்பதால் யாருமற்ற அனாதைகளைப் போல் சான்றோர்கள் அலைகின்றனர். . யாரிடம் சென்று அடைக்கலம் கேட்பது? எங்கே போவது? என்று புரியாத நிலையில் சான்றோர்கள் திக்கற்றுத் திகைக்கிறார்கள். அவர்களுடைய தகப்பனாக நான் இருக்க, தாயாக நீங்கள் இருக்க அவர்களை அப்பன் அம்மை இல்லாதோர் என்று நீசர்கள் அடிக்கிறார்கள். . . தொடரும்…. அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா இத்தவ மதிலீ தெல்லாம் யல்புடன் வசமே யாகக் குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக் கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார் அகிலம்  21.02.2026 DMuthu Prakash வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் ளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா இத்தவ மதிலீ தெல்லாம் யல்புடன் வசமே யாகக் குற்றமே செய்வோ னீசக் கொடுகலி வழிகள் சாகக் கர்த்தனார் கர்த்த னாகக் கலியுகத் தீர்வை யாக உற்றவை குண்ட சுவாமி ஒருகுடைக் கரசும் பெற்றார் அகிலம்  21.02.2026 DMuthu Prakash வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் ளி போல் - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 20.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= சிவன், விஷ்ணு, உமை மூவரையும் சப்த மாதர்கள் துதித்தல் ==================== விருத்தம் ========= வந்தனே வந்தாய் போற்றி மாதுமைக் கணவா போற்றி சந்தன மயிலே போற்றி சண்முகன் தாயே போற்றி நந்தகோ வேந்தே போற்றி நாதனே நீதா போற்றி சிந்தரென் கணவா போற்றி சிவசிவா போற்றிப் போற்றி . விளக்கம் ========= சிவபெருமான், மகாவிஷ்ணு உமாதேவி ஆகிய மூவரையும் வரவேற்று மகிழ்ந்த மாதர்கள் ஏழுபெரும் தம்முடைய தலை, வாய், இருசெவிகள், இருபுஜங்கள், இரு கைகள் ஆகிய எட்டு உறுப்புக்களையும் நிலத்தில் தோய்த்து, அம்மூவரின் திருப்பாதங்களுக்கும் அஷ்டாங்க நமஸ்காரம் செய்து கொண்டே எங்களுக்கு அருள்புரிவதற்காக எங்களைத் தேடிவந்த உங்கள் மூவரையும் துதிக்கின்றோம். தாய்த் தெய்வமான உமாதேவியின் கணவரே உம்மைத் துதிக்கின்றோம். மக்களை வாசனையால் மகிழ்விக்கும் சந்தனத்தைப் போன்றும், உலகத்தைத் தழைக்கச் செய்யும் மழை மேகத்தைக் கண்டதும் மகிழ்ச்சியால் ஆடுகின்ற மயிலைப் போன்றும் எங்கள் நலன்கருதி மகிழ்ச்சியோடு வந்த மாதாவே ! ஆறு முகத்தோனாகிய முருகப்பெருமானின் தாயே ! உம்மை துதிக்கின்றோம். . யாதவர் குலத்து அரசனாகிய நந்தகோபனிடம் கண்ணனாக வளர்ந்த அரசே ! எங்கள் நாதனே ! நீதிமானே ! எங்கள் எண்ணத்தில் கண்ணானவா ! உம்மை நாங்கள் எங்கள் உயிர் மூச்சாக சுவாசிக்கும் சிவ சிவா என்னும் மகா மந்திரத்தால் துதிக்கிறோம். . . அகிலம் ======= மாதவா போற்றிப் போற்றி மறைமூடி காணா வல்ல நீதவா போற்றிப் போற்றி நிசரூபச் சித்தா போற்றி சீதவா ளுமையே போற்றித் தெய்வநன் மணியே போற்றி பாதவா வனத்தில் தொட்ட பாங்கனே போற்றிப் போற்றி . விளக்கம் ========= குறோணி என்னும் கொடிய அரக்கனின் கொடுஞ் செயலில் சிக்கிவிடாதபடி எலகத்தை மீட்டுவதற்காக முதன்முதலில் தவமிருந்து ஈஸ்வரனால் மாதவன் என்ற போற்றுதலைப் பெற்ற தவப்பொருளே ! உம்மைத் துதிக்கின்றோம், வேதங்களாலும் நின் ஆதி அந்தத்தை அறிந்து உரைக்க முடியாத வல்லமை மிகுந்த நீதிமானே ! அணுவுக்கும் அணுவாகி அழியா உடலுடைய சித்தா ! உம்மைத் துதிக்கின்றோம். . குளுமையின் வாழ்விடமாகிய உமாதேவியே ! நன்மைகளைத் தருகின்ற தெய்வீக அழகே ! உம்மைத் துதிக்கின்றோம். மாபெருந் தவத்தோனே ! அன்றொருநாள் அயோக வனத்தில் அக்கினி சொரூபமாய் நின்று எங்கள் ஏழுபேருக்கும் குளிர் அகற்றி குழந்தை பெறச்செய்த தோழனே ! உம்மைத் துதிக்கி்றோம். . . அகிலம் ======== மூவர் தேடியு முற்றாத முதலே யுனதுபதம் போற்றி தேவர்க் கரியத் திரவியமே தெய்வ மணியே சிதம்பரமே காவக் கானக வனமதிலே கற்பை யழித்துக் கைவிட்டகன்ற தாவத் துணையே யென்கணவா தவமே யுனதுபதம் போற்றி . விளக்கம் ========= சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளாகவும் இருந்து, அந்த மூவரும் தேடுகின்ற நிலையில், அடி முடி காண முடியாதபடி அனைத்தையும் கடந்துநின்ற பரப்பிரம்மமே ! உம்மைத் துதிக்கின்றோம். எப்போதும் விண்ணகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தேவர்களுக்குக் கூட எளிதில் கிட்டாத பாக்கியமே ! தெய்வீக அழகே ! அமிழ்த கங்கையையுடைய அயோக வனத்தில் எங்கள் ஏழு பேரின் கற்பை அழித்து அங்கேயே எங்களை கைவிட்டு மறைந்த அக்கினிச் சுவாலையே ! எங்களுக்கு குளிர்போக்கிய துணைவா ! எங்கள் கணவா ! தவப்பொருளே ! உம்மைத் துதிக்கின்றோம். . . அகிலம் ======= மாட்டி லேறும் மகாபரனே மாது உமையாள் பங்காளா காட்டி லடியா ரேழ்பேரும் கற்றா விழந்த பசுவதுபோல் ஊட்டி உறக்கா ரில்லாமல் ஊமை கண்டக் கனாவதுபோல் வாட்ட மறிந்து மனதிரங்கி வந்தாய்க் கவலை தீர்ந்தோமே . விளக்கம் ========= காளை வாகனாதிபதியாகிய மகாபரனே ! அர்த்தநாரீசுவரா உமக்குச் சேவை செய்து கொண்டிருந்த நாங்கள் ஏழு பெண்களும் கன்றை இழந்த பசுவைப்போல் கானகத்தில் ஊண் உறக்கமின்றி, கனவு கண்ட ஊமை தான் கண்டகனவுக் காட்சியை யாரிடமும் சொல்ல முடியாமல் திணறுவதைப் போன்று திணறிக் கொண்டிருந்தோம். எங்களுடைய மன உளைச்சலை உணர்ந்து நீங்கள் மனம் இரங்கி வந்ததினால் எங்கள் துயரமெல்லாம் தீர்ந்து விட்டது. . . அகிலம் ======== தீர்ந்தோமினி எங்களைத் தானும் திரும்பக் கயிலைக் கழையாமல் ஈந்தோர் பிள்ளை ஏழ்வரையும் இனமு மேழுங் குறையாமல் சாந்தோ ரெங்கள் கணவரையும் தந்தே தரணி யரசாண்டு வாழ்ந்தே யிருக்க வரமருளும் மாயா திருக்கு மறைமுதலே . விளக்கம் ========= நாங்கள் இதுநாள்வரை அனுபவித்த துன்பங்கள் யாவையும் உங்களைக் கண்ட உடனே மறந்து விட்டோம். ஆகவே இனி எங்களை மீண்டும் கயிலைக்கு அழைக்காமல், நாங்கள் பெற்ற பிள்ளைகள் ஏழு பேரையும், அவர்களின் சந்ததியரையும் எவ்விதக் குறையும் இல்லாமல் தந்தருளுங்கள். அதற்குச் சான்றாகிய எங்கள் கணவர் மகாவிஷ்ணுவையும் எங்களுக்குத் தந்து, நாங்கள் இந்தப் பூலோகத்தில் ஒருமித்து வாழ்வதற்கான வரத்தினை அருளுங்கள் அழவில்லா வேத முதலோனே ! என்று ஏழு மாதர்களும் தம் கோரிக்கையை வாஞ்சையோடு வலியுறுத்தினர். . . தொடரும்…. அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம் கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும் தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும் பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே! அய்யா ! DMtu Prukaal 20.02.2026 ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம் கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும் தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும் பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே! அய்யா ! DMtu Prukaal 20.02.2026 ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 19.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= அம்மைமார் (சப்த மாதர்களின் ) தவநிறைவு ===================== சான்றவரைப் பெற்ற தையல்தெய்வக் கன்னியர்கள் தவத்தி லவர்நின்று தலைவரையுங் கால்வரையும் உபத்திர மால்விருச்சம் உடலெல் லாமேமூடி கன்னியர்கள் ரோமம் கனத்தபுவி யில்வேராய் உன்னியே லோகமதில் ஓங்கிப் பரந்ததுவே நின்ற தவந்தான் நிலைத்து நிறைவேறி நன்றினியக் கன்னியர்கள் நாடுந் தவத்தருமை பார்த்தன் தவமதிலும் பத்துரெட்டிக் கூடவுண்டே ஏற்றரிய சீதை இருந்த தவமதிலும் ஒட்டிரெட்டிக் கூடவுண்டே ஓவியத்தார் தந்தவங்கள் ஏட்டி லடங்காது இவர்தவசைச் சொல்லவென்றால் பொறுத்து முகியாதப் பெரிய தவத்தருமை மறுத்துரைக்கக் கூடாமல் வளர்ந்துதவ முற்றியதே சத்தி உமையாட்கும் சதாசிவ மானதுக்கும் முத்திக்கும் மாலுக்கும் முகுந்தன் பிரமனுக்கும் மனதில் மிகஅறிந்து மாதுசத்தி யேதுரைப்பாள் காட்டிலேழு பெண்கள் கனநாள் தவசுபண்ணி தாட்டிமையாய்ப் பெண்கள் சடைத்தார்காண் ஈசுரரே பெண்கள் தவசியல்லோ பொறுக்கமிகக் கூடலையே அங்கேபோய் நாமள் அவர்தவசு பார்ப்போமென்றாள் என்று உமையிரங்கி இப்படியே சொல்லிடவே அன்று அறம்வளர்த்தாள் அவள்பங்க ரேதுரைப்பார் நல்ல உமையே நாடும்பெண் ணார்தவத்தில் செல்லவென்றால் நாரணரும் தேனேவர வேணுமென்றார் . விளக்கம் ========= அயோக வனத்தில் அமிர்த கங்கை அருகில் மகாவிஷ்ணுவின் மாய்கையினால், மேலோகத்தார் ஏழுபேரை மனிதர்களாக மண்ணுலகுக்கு ஈந்த தெய்வ மாதர்கள் ஏழு பேரும், தாம் பிள்ளை பெற்ற நாள் முதலாக பெருந்தவத்தில் ஈடுபட்டிருந்தனர். அங்கிருந்த ஆலமரத்தின் விழுதுகள் அவர்களை மூடிமறைத்தன. ஆற்றொணா துன்பங்களை அனுபவித்த வண்ணம் தவமிருக்கும் அவர்களின் கூந்தல் வளர்ந்து தாவரங்களி்ன் வேரைப் போன்று பூமியில் புதைந்திருந்தன. அவர்களுடைய நிலையான தவம் நிறைவேறிவிட்டது. . நன்றினிய நங்கையர்கள் இருந்த தவத்தின் மகத்துவமோ, அர்ஜுனனின் தவத்தைவிட இருபது மடங்கு உயர்வானது. சீதாபிராட்டியின் தவத்திலும் இரண்டு மடங்கு மேன்மையானது. சப்தமாதர்களின் தவப் பெருமையைச் சொல்வதென்றால் அது ஏட்டில் அடங்காது. எல்லா வகையான இயற்கைச் சீற்றங்களையும் சகித்துச் சாதனைபுரியும் இத்தவத்தைப் பற்றி எவரொருவராலும் குறை கூற முடியாது. அவ்வளவில் அவர்களின் தவம் முற்றி நிலை பெற்றுள்ளது. இதை உமையவளும், சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், பிரம்மதேவனும் ஏற்கெனவே உணர்ந்திருந்தனர். . சப்த மாதர்களின் தவம் முக்தி பெறுகின்ற இந்தக் காலக்கட்டத்தில் தான், சிவபெருமானிடம் மகாவிஷ்ணு கலியுகத்தை அழிக்கப்போவது பற்றியும், தர்மயுகத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார். . அவ்வண்ணமாக இருவரும் உரையாடிக்கொண்டிருக்கும் போது, அங்கிருந்த உமையவள், இந்த நல்ல சந்தர்ப்பத்தை நழுவ விடக்கூடாதென்றெண்ணி, சிவபெருமானைப் பார்த்து, சுவாமி, கானகத்தில் ஏழு பெண்கள் நீண்ட நெடுநாள்களாக உயர்வான தவம்செய்து மனமுடைந்த நிலையில் இருந்து கொண்டிருக்கிறார்கள். அது மாதர்கள் செய்யும் மாதவம் ஆதலால் என்னால் பொறுத்துக்கொண்டிருக்க இயலவில்லை. எனவே, நாமெல்லாம் அவர்களுடைய தவநிலையைப் பார்த்து வருவோமா? என்று சிவபெருமானிடம் கேட்டாள். . உமையவளின் உருக்கமான அவ்வுரையை உற்று நோக்கிய சிவபெருமான், உமையவளைப் பார்த்து, உமாதேவி, ஏழு பெண்களும் நம்மை நாடிச் செய்யும் தவத்தை நாம் காணச் செல்லவேண்டுமானால் நம்மோடு மகாவிஷ்ணுவும் வரத்தானே வேண்டும் என்று இதமாகச் சொன்னார். . . அகிலம் ======= அப்போது நாரணரை அடிவணங்கி மாதுமையும் ஒப்போ டுறவணங்கி உரைக்கிறா ளன்போரே அண்ணரே கோவே ஆதிநா ராயணரே கண்ணரே கார்வண்ணரே காட்டிலேழு கன்னியர்கள் தவசுதனி லிருந்து சடைத்தார் கனநாளாய் சிவனே அவர்கள்தவம் செப்பப் பொறுக்காது நாமள்போய்ப் பார்த்து நல்லபெண்க ளேழ்வரையும் ஆமான பதவி அருளவே வேணுமையா என்றுநா ராயணரை எழுந்தருளச் செய்துஉமை அன்று சிவனாரும் ஆதிநா ராயணரும் அம்மை உமையாளும் அரம்பை ஸ்திரிமாரும் செம்மையுட னடந்து சென்றார் வனமதிலே . விளக்கம் ======== சிவபெருமான் உரைத்த வார்த்தையின் உள்நோக்கத்தை உணர்ந்த அம்மை உமையவள், மகாவிஷ்ணுவி்ன் பாதங்களை வணங்கி, என்னுடைய அண்ணா ! அரசே ! ஆதிநாராயணரே ! கண்ணரே ! கருமையான திருமேனியரே ! நீண்ட நெடுங்காலமாக கானகத்தில் ஏழு கன்னிப் பெண்கள் கடுமையாகத் தவமிருந்து சடைத்து கொண்டிருக்கிறார்கள். அவர்களின் உன்னதமான தவத்தின் பெருமையைச் சிவ சிவா... சொல்லி விளக்க இயலாது. ஆகவே நாமெல்லாம் அங்கே சென்று அந்த ஏழுபேர்க்கும் அவர்கள் வேண்டுகின்ற பதவியை அருளவேண்டும் அய்யா என்று இரங்கி வேண்டி மகாவிஷ்ணுவைத் தம்மோடு புறப்படச் செய்தாள். . உடனே சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், அம்மை உமையவளும், அரம்பை முதலான விண்ணகப் பெண்மணிகளும், சப்த மாதர்களும் தவம் செய்துகொண்டிருக்கும் கானகத்திற்குப் புறப்பட்டு சென்றார்கள். . . அகிலம் ======= வனத்தி லவர்கள்வர மாதரேழு கன்னியர்கள் இனத்திலுள்ள மாதுமையை எல்லோருங் கண்டாவி தாயே வுனது தாள்கண்டு எத்தனைநாள் வாயே புவிக்குடைய மாதாவென் தாயாரே எனதேர மெங்களைநீர் இகழ்ந்து கடத்தாமல் தனதாக எங்கள் தயவில் குடியிருந்து கற்பகலாக் காத்த கண்ணெங்கள் மாதாவே உற்பனமா யெங்களைநீர் உலகில் தவறவிட்டு இருந்தாயே தாயே எங்கள்விதி நாயகமே அருந்தாமல் வாடினோமே அறமில்லார் தங்களைப்போல் காத்திருந்தா யென்றிருந்தோம் எங்களுட கட்டழியப் பார்த்திருந்த ஞாயமென்ன எங்களுட பார்வதியே எந்நேர மீசுரர்க்கும் என்னம்மை யுங்களுக்கும் சொன்ன பணிமறந்து சொல்தப்பி நின்றோமோ ஈசருட சட்டம் யாங்கள் மிகமறந்து தேச மதில்வரவே சிந்தை யிச்சித்ததுண்டோ கற்பினை மறந்தோமோ காராவைக் கொன்றோமோ அற்புதவேள் தாயே அடியார் தமக்கருளும் என்றுகன்னி யெல்லாம் இப்படியே தானுரைக்க அன்று அறம்வளர்த்த அம்மை மனதிரங்கி நல்லதுகாண் பெண்ணேயுங்கள் ஞாயமெல் லாமுரைப்போம் வல்ல சிவனாரே வார்த்தையொன்று நீர்கேளும் தவத்தை நிறைவேற்றித் தார்குழலா ளேழ்வரையும் அகத்தே வரவழையும் ஆதியே யென்றுரைத்தாள் அப்போ சிவனார் ஆனகன்னி ஏழ்வரையும் கொப்போடு சூழ்ந்துநின்ற குழையெல்லாமே யுதிர்த்தி நிறைவேற்றித் தவத்தை நேரிழைமா ரேழ்வரையும் சிறைமாற்றிப் பெண்களையும் சிவனார் வரவழைத்து வந்து மடவார் மறையொத்த மூவரையும் சந்துஷ்டி யாகத் தாழ்ந்து நமஸ்காரமிட்டுக் கனகத் திரவியக் கப்பல்கரை சேர்ந்தாற்போல் மனமகிழ்ந்து மாதுமையை மாமடவார் முத்திமுத்திக் கொண்டாடிக் கொண்டாடிக் கூறுவார் கன்னியர்கள் சென்றாடிச் சென்றாடிச் சிவனை மிகப்போற்றி . விளக்கம் ========== சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், உமையவளும் தம்மை நாடி வருவதைக் கண்ட சப்த மாதர்கள், தமது பெண் இனமான உமையவளை தம் மனதால் அள்ளி அணைத்து இதயத்துள் தேங்கிக் கிடந்த ஏக்கத்தை வெளிப்படுத்தினர். . அம்மா உன் பாதங்களை நாங்கள் தொட்டு வணங்கி எத்தனையோ நாள்கள் ஆகிவிட்டனவே, வா தாயே! மண்ணுலகுக்கெல்லாம் மாதாவாகிய எங்கள் தாயே, உன் இனமான எங்களை மறக்காமல் ஈனமாக நினைத்து நிந்திக்காமல் எங்களை நாடிவந்த மாதாவே, எங்களுடைய தயவான எண்ணத்தில் குடியிருந்து எங்கள் கற்பு நெறியைக் கண்போன்று காத்த கருணைத் தெய்வமே! எங்களைத் தவற விட்டுவிட்டு எப்படி இருந்தீர்கள் நாயகமே, அது எங்களுக்கு நீங்கள் முன்னமே விதித்த விதிதானோ? . தர்மமே செய்யாத கர்மிகளைப்போல் இத்தனை காலமும் எதுவுமே அருந்தாமல் உருகிவிட்டோமே தாயே, எங்களை நீ எந்த நிலையிலும் காத்துக்கொள்வாய் என்றிருந்தோமே நாங்கள். இப்படிக் கட்டழிந்து போக நீ பார்த்திருந்த நியாயம் என்ன தாயே? . சிவபெருமானும் எங்கள் அன்னையாகிய நீங்களும் இட்ட பணி மறந்து என்றேனும் சொல் தப்பி விட்டோமோ? ஈசன் இட்ட கட்டளையை நாங்கள் எப்பொழுதாவது மறந்து மண்ணுலகில் வாழ எங்கள் சிந்தையிலே எண்ணிவிட்டோமோ? அல்லது கற்பனைகளுக்கே எட்டாத உங்களைத்தான் மறந்தோமோ? இல்லை காராம் பசுவைக் கொன்றோமா? அற்புதங்களுக்கெல்லாம் தாயாகிய தாங்கள் அடியார்களாகிய எங்கள் வினாவிற்கு விடையருளுங்கள் தாயே என்று ஏழு மாதர்களும் அம்மை உமையவளிடம் பாச மிகுதியோடும் பக்தியோடும் வினாவினர். . சப்த மாதர்ளின் மானசீகமான மன்றாடல்களை மனமுவந்து கேட்ட தர்மத்தின் தலைமகள் அன்னை உமையவளின் உள்ளம் கசிந்தது. அவர்களிடம், பெண்களே உங்களுடைய கேள்விகள் நியாயமானதுதான். இவற்றிற்கான உபாயத்தை ஈசனிடம் எடுத்து உரைக்கிறேன் என்று சொல்லிவிட்டு, சிவபெருமானைப் பார்த்து, சுவாமி! நான் சொல்லுவதைக் கருத்தில்கொண்டு இந்த ஏழு பெண்களின் தவத்தையும் நிறைவேற்றி, அவர்களை மீண்டும் கயிலைக்கு வரவழையுங்கள் என்றாள். . அதைக் கேட்ட சிவபெருமான் அந்த ஏழு பெண்களையும் சூழ்ந்திருந்த மரஞ்செடிகளையும், இலை தழைகளையும் அகலச் செய்து, அவர்களின் தவத்தை நிறைவு செய்து, இது காலம் வரை அவர்கள் அனுபவித்துவந்த சிறைவாசம் போன்ற துன்பத்தை எல்லாம் அகலச்செய்து தம் அருகில் வர அழைத்தார். . சப்தமாதர்களோ, வேதங்களுக்கு இணையான சிவபெருமான், மகாவிஷ்ணு, உமையவள் மூவரையும் திருவடி வீழ்ந்து வணங்கினர். பொன்னையும், பாக்கியங்களையும் சுமந்துவரும் கப்பல் கரைக்கு வந்து சேர்ந்ததைப் போன்று மனம் மகிழ்ந்து அன்னை உமையவளை ஆரத்தழுவி அள்ளி அணைத்து முத்தமிட்டு தம் சந்தோசத்தை வெளிப்படுத்தியதோடு சிவபெருமானையும் மகாவிஷ்ணுவையும், அன்னை உமையவளையும் போற்றிப் புகழ்ந்து துதிக்கலாயினர். . . தொடரும்…. அய்யா உண்டு.
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம் சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே ! DMutwu Puakash 9uun ! 19.02.2026 ouGen ! வீரத்தனமாய் விளக்கின் போல் @6 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! காட்சிச் சிறப்புங் கலியாணம் கவரி வீசிக் கொலுவாரம் சாட்சிக் கணக்கு முன்வருத்திச் சந்திர வர்ணக் கொடிநிறுத்தி வாச்சி யுனக்குத் திருநாளும் வாய்த்த டம்மான முழங்க காட்சி யுனது கண்முன்னே காணு மகனே கலங்காதே ! DMutwu Puakash 9uun ! 19.02.2026 ouGen ! வீரத்தனமாய் விளக்கின் போல் @6 - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 18.02.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= விருச்சம் படைக்க வேணு மதுவிபரம் புரச்ச மதுபார்த்துப் புகலுது ஆகமந்தான் என்பிள்ளை ஏழும் இயாபிக்க நாமீந்த மின்விருச்ச மான மிகவிருச்சம் நிலையாய் வன்னமது பூகம் வாசமது விருச்சம் தென்னை விருச்சம் செறியும்புன் னைவிருச்சம் ஆதி விருச்சம் அடர்ந்த பெருவிருச்சம் சோதி விருச்சம் சுபசோபன விருச்சம் தேச விருச்சம் செம்பொன் னிறவிருச்சம் ஆகமத்தி லுள்ள அனேக விருச்சமதும் வந்து மிகத்தோன்றும் வைத்திருக்குந் தேதிதனில் . விளக்கம் ========= தர்மயுகத்திற்கு உரித்தான தாவர வகைகளையும் படைக்க வேண்டும். அதைப்பற்றிச் சோதிட நியமப்படி ஆராய்ந்ததில் முன் ஆகமங்கள் என்ன கூறுகிறது என்றால், சப்தமாதர்கள் பூலோகத்தில் மனிதர்களாகப் பெற்ற மேலோகத்தார் ஏழு பேரும் பெற்றுப் பெருகி வாழ்வாங்கு வாழ்வதற்காக ஒளி மிகுந்ததும், அதிவேகமாகத் தழைத்து வளர்வதும், நிலைத்து இருப்பதுமான தாவரங்களைப் படைத்து வைக்க வேண்டும். . அவை மேன்மையான வாசனை உள்ள மலர்களைத் தருவதாகவும், தேனைத் தருவதாகவும் இருக்க வேண்டும். அத்துடன் தென்னை, புன்னை மரங்களும் அடர்ந்து பரந்து நிழல் தரும் முதன்மையான மரங்களும், ஜோதிமரம் எனப்படும் இரவெரிமரமும் மங்களமான காரியங்களுக்குப் பயன்படும் மரங்களும், ஆல் அரசு, வில்வம், வேம்பு வேங்கை போன்ற தேவ விருச்சங்களும், செம்பொன் நிற இலைகளையுடைய அழகு விருச்சங்களும் இன்னும் ஆகமத்திலுள்ளபடியான அனேக விருச்சங்களும் நாம் தர்மயுகத்தைத் தோற்றுவிக்க நிச்சயித்திருக்கும் தேதியில் தோன்றும். . . அகிலம் ======= சிந்து பயில்வானம் சிறந்தவொரு வெண்வானம் வான மதிலுறையும் வளர்நிலவும் நேராக ஈனமில் லாததுதான் இலங்குமெந் நேரம்வெளியாய் சேத்திரங்க ளொன்று தினமு மதுவிளக்காய் சாத்திர வேதம் சமயமொன்றாய் நின்றிலங்கும் வாயுவே பூப்போல் மலரெடுத்து வீசிநிற்கும் ஆயுங் கலைதமிழும் அறிவொன்று போல்பரவும் நம்மனுவோர் தர்மபதி நாளுமிகத் தழைக்கும் தம்மனுவோர் போலே தழைத்திருந்து வாழ்வார்கள் ஒக்க ஒருஇனம்போல் உவந்திருந்து வாழ்வார்கள் மிக்கத் திருச்சாதி மேற்சாதி சான்றோராய் இருப்பார் வயது எண்ணிக்கையில் லாதபடி பருப்பார் பழமும் பாலு மிகஅருந்திப் புண்ணிய முள்ளோராய்ப் பூமிதனை யாண்டிருப்பார் . விளக்கம் ======== வைடூரியம் தமக்கு எதிரிலுள்ள வண்ணத்தை உள்வாங்கி ஒளிசெய்வதைப்போன்று ஒளி மிளிரும் சிறந்த வெள்ளை வானமும், அந்த வானத்தை உறைவிடமாகக் கொண்டியங்கும் நிலவு நேராக இருந்துகொண்டு எப்பொழுதும் எத்தீங்கும் செய்யாத ஒளியை வழங்குவதோடு அதுவே அனைத்து தலங்களுக்கும் நித்திய விளக்காகவும் அமையும். . தர்மயுகத்தில் சாஸ்திரம், வேதம், மதம் ஆகியவை எல்லாம் ஒன்று மட்டுமே இருக்கும். காற்றானது மலரைப் போன்ற மென்மையுடன் இதமாக வீசும். ஆய்வுக்குரிய தமிழ் கலைகள் யாவும் ஒத்த கருத்துடையதாக உலகமெல்லாம் பரவும். . நம்முடைய மக்கள் வாழுகின்ற தர்மபூமி நாளுக்கு நாள் மிகுதியாகத் தழைத்துக் கொண்டேயிருக்கும். தர்மயுகத்து மக்கள் யாவரும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள்போல் ஒன்றுமையாகவும், செழிப்பாகவும் வாழ்வார்கள். மேன்மை பொருந்திய மக்களெல்லாம் சான்றோர்களாக அளவிற்கடங்காத காலமெல்லாம் நிலையாக வாழ்வார்கள். புண்ணியவான்களான அவர்கள் பாலோடு பழமும் அருந்தி பண்பாக வாழ்ந்திருப்பார். . அகிலம் ======= மண்ணெல்லாந் தர்ம வயல்போல் விளைந்திருக்கும் தர்ம புவியிலுள்ள தண்ணீர் கலைக்கியானம் நன்மைவெள்ளங் காட்ட நாடுங் கருணைவெள்ளம் இப்படியே தர்மபதி இராச்சியமொன் றுண்டாக்கிச் செப்படிய பொன்பதிகள் திட்டித்து வைக்கவென்றும் முன்னமே யென்றனக்கு உகந்ததுவ ராபதியில் பொன்னம் பதியும் பெரியதங் கப்பதியும் உண்டுகா ணப்பதியும் உவரியதுக் குள்ளிருக்கு கண்டு கொள்ளார்கள் கலிமாசு கொண்டவர்கள் ஆனதா லப்பதிதான் ஆகுவது மக்களுக்குத் தான முடனமைக்கத் தர்மசாஸ்திரத்தி லுற்றிருக்கு தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும் நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை சாத்திர வேதம் சமயம்போ தித்தருளி சேத்திரவிப ரிப்புரைக்கச் செல்லநம் மனுவோரும் காலனெனுஞ் சித்திரக் கணக்கனெனும் பேர்களுக்கு ஏலமே தவசு இடறாக நிற்கிறார்காண் ஆனதா லவர்கள் அழிவாகிப் போகுமையா ஊனக் கிரகம் ஒன்பது பேர்களையும் அழித்துவே றொன்றுக்குள் அருள்கொண் டிருக்குதுகாண் முன்னூலின் சாத்திர முறையெல்லாந் தப்பவைத்துப் பின்னூல்பு ராணமொன்று போதிப் பொருவனுமாய் இந்தப் படியேயான் நிச்சித் திருப்பதினால் அந்தப்படி யுள்ளதெல்லாம் ஆகுமந்தத் தேதிதனில் அதுக்குமுன்னே நாம் அமைப்பதெல் லாமமைத்துக் கதுக்கெனவே பார்ப்போம் கலியை யழிப்பதற்கு என்று விசாரித்து இருக்கின்ற நாளையிலே . விளக்கம் ========= எல்லாரும் புண்ணியவான்களாக வாழுகின்ற போது, பூவுலகம் தருமத்தை விதைத்து விளைவித்த வயல்போல் எங்கும் எதிலும் தர்மமே தழைத்திருக்கும். அத்தகு தர்ம பூமியில் ஊறுகின்ற தண்ணீர் கூட ஆய கலைகள் அறுபத்து நான்கையும் போதிக்கும் இயல்புடையதாகிவிடும். அந்த அறிவு வெள்ளம் அனைவருக்கும் கருணை உள்ளத்தை அருளும். . இத்தகைய தர்மபதி இராச்சியம் ஒன்றை உண்டாக்கி, வார்த்தைகளால் வர்ணிக்கவே இயலாத பற்பல பொன்பதிகளை அங்கே உருவாக்கி வைக்க வேண்டும். முன்னமே எனக்கென ஏற்பட்ட துவரயம் பதியில் பொன்னம்பதியும், பெரிய தங்கப்பதியும் உண்டு. அந்தப்பதி இப்போது கடலுக்குள் இருக்கிறது. அதைக் கலிமாசு கொண்டவர்கள் கண்டு கொள்ள மாட்டார்கள். ஆகவே மக்களின் மனதில் படிந்திருக்கும் கலியாகிய அழுக்கை அகற்றி, அந்தத் தர்மபதியை நாடுவதற்கான அறிவை அவர்களுக்கெல்லாம் அருளி, அப்பதியை அவர்கள் அடைவதற்கு ஏதுவாக அமைத்தாக வேண்டும் என்றே அனைத்து சாஸ்திரங்களும் அறிவுறுத்துகின்றன. . தர்ம இராச்சியத்தில் வாழவேண்டும் என்று விரும்பி, நல்லொழுக்கங்களைக் கடைப்பிடித்து வாழுகின்ற மக்கள் நிச்சயமாக தர்மச் சீமையை அடைவார்கள். அங்கே அவர்களுக்கு வஞ்சகமான வைராக்கியம் இருக்காது. உடலுக்கு வியாதி இருக்காது. உள்ளத்திற்கு வலி இருக்காது. எமனால் ஏற்படும் இறப்பு இருக்காது. மொத்தத்தில் தர்மச்சீமையில் வாழ்பவர்களின் மேலான விதிக் கணக்குகள் யாவும் நம்மிடத்தில்தான் இருக்குமே தவிர உலகில் வேறு எவரிடத்திலும் இருக்காது. . சாஸ்திரம், வேதம், மதம், உடற்கூறு தத்துவம் போன்றவற்றை விளக்கி உபதேசம் செய்வதற்கு தர்மராச்சியத்தில் எவரும் தேவைப்பட மாட்டார்கள். ஏனெனில் தர்மச்சீமையில் வாழும் இயல்புடையோர் எல்லாரும் மெச்சுதலுக்குரிய மேன்மக்களாவர். . மேலும், வாழ்வு முடிந்தோரின் உயிரைக் கவரும் காலன், உயிரினங்களின் காலக்கணக்குகளைச் சரிபார்க்கும் சித்திர புத்திரன் போன்றோருக்கும் தர்மச் சீமையில் வேலை இல்லை. காரணம் அவர்களின் அச்செயல்கள் உலகில் இல்லாமல் ஒழிய வேண்டும் என்பதற்காகவே, செந்திரிசியின் மனைவியான எக்காள மடந்தையைப்போல் இன்னும் சிலர் தவம் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆகவே நமநாதிகளின் அழிவு நிச்சயம். . சிதைவடைந்து போன ஒன்பது கிரகங்களையும் அழித்து, அவற்றின் அபூர்வமான ஆற்றல்களையெல்லாம் இன்னொன்றுக்குள் உறைந்து அருள் மிளிரச் செய்ய வேண்டும். முன் ஆகமங்களில் உள்ள சாஸ்திரச் சம்பிரதாயங்கள் எல்லாம் தப்பிதமாகும் அளவில், பின்பு தோன்றுகின்ற புராணம் ஒன்றை ஒருவரால் உண்டாக்க வேண்டும் என்றெல்லாம் யாம் நிச்சயித்து இருப்பதினால், அந்தந்தக் காலகட்டங்களில் அவை யாவும் நடந்தேறும். . அதற்கு முன்பு நாம் செய்ய வேண்டிய கைங்கரியங்கள் யாவையும் செய்து, காலங்கடத்தாமல் கலியை அழிப்பதற்கான ஏற்பாடுகளை எல்லாம் செய்தாக வேண்டும் என்று சிவபெருமானிடம் மகாவிஷ்ணு சொல்லிக் கொண்டிருக்கிறார். . . தொடரும்…. அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
🚩அய்யா வைகுண்டர் 🚩 - ೨ೇ೦; ೨ೇ೦; - ShareChat