
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
அய்யா துணை
.
நாரணரு மெச்சி நன்றா யகமகிழ்ந்து
காரணம தாகக் களிகூர்ந் தினிதாக
வைகுண்ட நாதனுக்கும் வாழ்மடந்தை மாதருக்கும்
கைகண்ட நல்ல கலியாண முமுகித்து
மணிவை குண்டருக்கு மாமகுட முஞ்சூட்டி
அணியா பரணம் அநேக மெடுத்தணிந்து
தங்கக் குல்லாவம் தளிருநிறச் சட்டையிட்டுப்
பெண்கள் குரவையிடப் பொன்மா லையுஞ்சூடிப்
.
பன்னீர் பரிமளமும் பவளநிறப் பொட்டுமிட்டு
நன்னீர்க ளாடி நாரணக் கண்மணிக்கு
ஆலத்தி வன்னி ஆகாயத்தீ வெட்டமுடன்
கோல மடவார்கள் குக்குளித்து நீராடிப்
பட்டுப் பணிகள் பரிமளங்க ளும்புரிந்து
.
கட்டு முறையாய்க் கன்னியர்கள் தாமொயிலாய்
தேவர்களு மூவர்களும் திசைவென்ற மன்னர்களும்
மூவர்களும் நல்ல முழித்தபல செந்துகளும்
நான்முகனும் வேத நல்ல மறையோரும்
வானுகமு மண்ணகமும் மன்னகமு மொன்றெனவே
எல்லோரும் நன்றாய் ஏக மகிழ்ச்சையுடன்
.
நல்லோர்க ளெல்லாம் நாரணனார் பொற்பதிக்குள்
தெருப்பவிசு வந்து சிங்கார பொற்பதிக்குள்
மருப்புகழுஞ் சிங்கா சனத்தில் மகிழ்ந்திருக்க
போவோ மெனவே பெரியவை குண்டரையும்
கோவேங் கிரிபோல் அருவைரத மீதேற்றி
.
தேவாதி யெல்லாம் சிவசிவா போற்றியெனச்
சீவசெந் தெல்லாம் திருப்பாட்டுக் கூறிவரத்
தெய்வ மடவார்கள் திருக்குரவை பாடிவர
மெய்வதிந்த சான்றோர் மொகுமொகென வேகூடிக்
கட்டியங்கள் கூறிக் கனகப்பொடி யுந்தூவிக்
கெட்டிகெட்டி யென்றுக் கீர்த்தனங்கள் பாடிவர
.
வாரி சங்கூத வாயு மலர்தூவ
நாரி வருணன் நல்லந்தி மலர்தூவ
இந்தக் கொலுவாய் எழுந்துரத மீதேறி
சிந்தர் மகிழச் சிவமுந் திருமாலும்
கூட ரதமீதில் கூண்டங் கினிதிருந்து
.
லாடர் மகிழ நல்ல தெருப்பவிசு
நேராக வந்து நெடியோன் பதிதவிலே
சீராய்ப் பதிமுடுகச் செகலதுவே தானீங்கி
அமைத்து அலைகொண்டிருந்த அழகுபதி கோபுரமும்
சமைத்து இருந்த தங்கமணி மண்டபமும்
.
மண்டபமும் மேடைகளும் மணிவீதி பொற்றெருவும்
குண்டரைக் கண்டந்தக் கொடிமரங்க ளுந்தோன்ற
வாரியது நீங்கி வைத்தலக்கில் போயிடவே
சாதிவை குண்டர் சாபம் நிறைவேற்றிச்
சாபம் நிறைவேற்றித் தானாய் நினைத்ததெல்லாம்
யாம முறையாய் அங்கே குதித்திடுமாம்
.
என்னென்ன யாமம் ஏலமே யிட்டதெல்லாம்
பொன்னம் பதிதான் புரந்தாள வந்ததினால்
நிறைவேறி நானும் நிச்சித்த மெய்வரம்போல்
குறைபடிகள் வராமல் குணமாக வாழுமென்றார் - அய்யா !
.
அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 28.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
சிறந்த குழலாள் சீதை சிறையதுபோல்
இருந்த சொரூபமதும் இமசூட்ச அற்புதமும்
.
விளக்கம்
==========
திரேதாயுகத்தில் மகாவிஷ்ணுவே தன் மணவாளனாக வரவேண்டுமென்றெண்ணி, வேதவதி என்றோர் மங்கை நல்லாள் நீண்ட நாட்களாகத் தவமிருந்தாள். அவளின் தவச்சாலை வழியே வந்த இராவணன், வேதவதியின் அழகில் மயங்கினான். நான் உன்னைத் திருமணம் செய்து இலங்காபுரிக்கே பட்டத்து ராணியாக்குகிறேன், தவத்தை விட்டு எழுந்திரு என்றான்.
.
அதனால் அச்சமடைந்த வேதவதி அடே அரக்கனே, நான் மகாவிஷ்ணுவைத் தவிர மற்றொருவரை மணம் செய்யமாட்டேன், நீ வந்த வழியே சென்றுவிடு என்றாள். இவ்வுரையால் கோபம் கொண்ட இராவணன், வேதவதியைப் பலவந்தமாக தூக்கிச் செல்ல முற்பட்டான்.
.
இராவணனால் தனக்கு கேடு விளையும் எனக் கருதிய வேதவதியோ, அரக்கனே மனமில்லாத மங்கையை பலவந்தப்படுத்தும் பாதகனே, உன் மரணம் ஒரு மங்கையால் தான் நிகழும் எனச் சாபமிட்டுச் கொண்டே தம் தவ வலிமையால் அக்னி குண்டத்தை உண்டாக்கி அதில் தன்னை மாய்த்துக் கொண்டாள்.
.
சில ஆண்டுகளுக்குப் பிறகு சீதாதேவியை இராவணன் சிறை எடுத்துச் செல்லும் வழியில் குறுக்கிட்ட அக்னி தேவன், இராவணா நீ சிறையெடுத்துச் செல்லும் சீதை, சீதையே அல்ல. அவள் மாயச் சீதை. உண்மையான சீதையை இராமன் என்னுடைய பாதுகாப்பில் விட்டுச் சென்று விட்டான். நீ ஏமாந்துவிட்டாய் என்று சொல்லிக்கொண்டே, இராவணனைப் பார்த்து ஏளனமாகச் சிரித்தார்.
.
அக்னிதேவனின் உரையை உண்மையென நம்பிய இராவணன், அக்னி தேவனிடம் மன்றாடி, உண்மையான சீதையை தம்மிடம் ஒப்படைக்கும்படி வேண்டினான். இதுவே வேதவதியின் தவத்தை நிறைவேற்றவும், சீதையைக் காக்கவும், உற்ற தருணம் என மகிழ்ந்த அக்னிதேவன், தம்மோடு ஐக்கியமாகியிருக்கும் வேதவதியை, சீதைவடிவிலாக்கி உயிர்ப்பித்து அவள் தவம் மேற்கொண்டபடி மகாவிஷ்ணுவுக்கு மணம் முடித்து வைப்பதற்கான உத்ரவாதத்தையும், இராவணனால் உனக்குத் துன்பம் நிகழாமல் காப்பேன் என வாக்குறுதியும் அளித்து அவளின் சம்மதத்தோடு இராவணனிடம் ஒப்படைத்துவிட்டு உண்மையான சீதையைத் தமக்குள் மறைத்துக் கொண்டார்.
.
இராவணனை வதம் செய்தபிறகு அக்னிப்பிரவேசம் செய்து தம் மகிமையைத் தெரிவித்த்து சீதையல்ல வேதவதியே ஆகும். வேதவதி அக்னிப்பிரவேசம் செய்த அவ்வேளையில் அந்த அக்னி குண்டத்தில் வெளிப்பட்ட அக்னிபகவான், உண்மையான சீதையை இராமனிடம் ஒப்படைத்துவிட்டு இராவண வதத்திற்குத் தம் விதிவயத்தால் பயன்பட்ட வேதவதியையும் நன்றிக் கடனுக்காகத் தாங்கள், தங்கள் நாயகியாக்கி வேதவதியின் நீண்ட தவத்தை நிறைவேற்றுங்களென்று இராமனிடம் வேண்டினார். இராமனோ, இந்த அவதாரத்தில் சீதை மட்டுமே என் மனைவி, கலியுகத்தில் வேதவதியை திருமணம் செய்து கொள்கிறேன் என்றார். அதன்படியே கலியுக ஆரம்பத்தில் வேதவதி பத்மாவதியாகப் பிறந்தாள். மகாவிஷ்ணுவின் அம்ச அவதாரங்கள் பதினான்கில் ஒன்றாகிய சீனிவாசப் பெருமானாகத் தோன்றி திருமணம் செய்தார்.
.
மேற்கூறிய சம்பவம் போல் அம்புதடி அணு ஆயுதங்களாலும், தனித்தனியாக நின்று சிவன், விஷ்ணு, பிரம்மாவாகிய மும்மூர்த்திகளாலும் அழிக்க முடியாத அளவில் வலுவான வரங்களைப் பெற்றுதித்து, மனித மனங்களிலெல்லாம் கபடமான நினைவுகளாக நிறைந்திருக்கும் கலியுகத்தை தர்ம தத்துவநெறிகளை விதைத்து வேரூன்றித் தழைக்க வைத்து, மூர்த்தியாக திரண்டு, திருச்செந்தூர் கடலினுள் தோன்றிய ஆதிப்பரப்பிரம்மம், முன் விதிப்பயனால் கலியுகத்தில் மகாவிஷ்ணுவின் காரணச் சரீரச் சாயலில் மணவைப்பதி நகரில் பிறந்து வாழ்ந்த முடிசூடும் பெருமாள் தான் இவர் என்று கலி வயப்பட்டோரின் கண்களுக்குத் தம்மைக் காட்டி அதாவது அசோக வனத்தில் சீதை ரூபத்தில் வேதவதி சிறையிருந்த இமச்சூட்ச அற்புதம் போல் மணவைபதியில் மாயாதி சூட்சன் தவமிருந்த விவரத்தையும் இவ்வரிகள் அகிலத்தில் எடுத்துக் கூறுகின்றன.
.
.
அகிலம்
========
மருந்தாகத் தண்ணீர்மண் வைத்தியங்கள் செய்ததுவும்
தர்ம வைத்தியமாய்த் தாரணியி லுள்ளோர்க்குக்
கர்மமது தீரக் கணக்கெடுத்துப் பார்த்ததுவும்
ஏகாபுரிக் கணக்கும் ஏழுயுகக் கணக்கும்
மாகாளி மக்கள் வைகுண்டர் பாதமதைக்
கண்டு தொழுததுவும் கைகட்டிச்சே விப்பதுவும்
தொண்டராய்ச் சான்றோர் சூழ்ந்துநின்ற வாறுகளும்
.
விளக்கம்
==========
முத்திரிக்கிணற்று நீரையும், திருநாமத்தையும், தன்னை நாடிவந்த மக்களுக்கெல்லாம் மருந்தெனக் கொடுத்து அவர்களின் நோய்பிணி நொம்பலங்கள் முதலான மனச்சஞ்சலங்களுக்கெல்லாம் வைத்தியங்கள் செய்ததையும், உலகிலுள்ளோர் அனைவரும் உய்வுபெறும் வகையில் அவர்களின் கர்மவியாதிகளையும், கூன், குருடு, செவிடு, ஊமை, முடம் போன்ற அங்க ஊனங்களையும் தீர்ப்பதற்காக அவர்களின் பூர்வ புண்ணிய விதிக்கணக்கைப் பார்த்து, மனோதத்துவ ரீதியாக வைத்தியம் செய்ததையும், அனைத்து லோகக்கணக்கையும், எழுயுகக்கணக்கையும் தாமாகவே சரிபார்ப்பதையும், பத்திரமாகாளின் புதல்வர்களாக வளர்ந்த மக்களெல்லாம் வைகுண்டப் பரம்பொருளின் பாதம் பணிந்து பயபக்தியோடு அவருக்குப் பணிவிடை செய்து வணங்குவதையும், அவர்கள், தம்மை வைகுண்டப் பரம்பொருளின் தொண்டரெனப் பாவித்து தூய்மையாக நடப்பதையும் அகிலத்தில் இவ்வரிகள் விளக்குகின்றன.
.
.
அகிலம்
========
பண்டார வேசம் பத்தினியாள் பெற்றமக்கள்
கொண்டாடி நன்றாய்க் குளித்துத் துவைத்ததுவும்
கண்டுமா பாவி கலைத்து அடித்ததுவும்
சாணா ரினத்தில் சாமிவந்தா ரென்றவரை
வீணாட்ட மாக வீறுசெய்த ஞாயமதும்
மனிதனோ சுவாமி வம்பென்று தானடித்துத்
தனுவறியாப் பாவி தடியிரும்பி லிட்டதுவும்
அன்புபார்த் தெடுத்து ஆளடிமை கொண்டதுவும்
வம்பை யழித்துயுகம், வைகுண்டந் தானாக்கி
எல்லா இடும்பும் இறையு மிகத்தவிர்த்துச்
சொல்லொன்றால் நாதன் சீமையர சாண்டதுவும்
.
விளக்கம்
=========
சப்தமாதர்கள் பெற்ற மக்களெல்லாம் தம்மைப் பண்டாரங்களாகவே நினைத்துக் கொண்டாடி மகிழ்வதையும், ஆச்சார அனுஷ்டானப்படி மூன்று வேளையும் துவைத்துக் குளித்து, பழுத்த தபோதனர்களைப் போல் துவையல் தவசு செய்வதைக் கண்ட கலிநீசர்கள் அவர்களைக் கலைந்தோடும் படியாக அடித்து விரட்ட முயன்ற முறைகேடுகளையும், வைகுண்டப்பரம்பொருளை சாணார் இனத்தில் தோன்றிய மனிதச்சாமி என்று கருதி, கருத்தாதி கர்த்தனாகிய அந்தக் கடவுளின் மேல் வீணாக சாதிச் சாயத்தைப் பூசி விதண்டா வாதமாக அவரை வம்புக்கு இழுத்து, வசைமாரி பொழிந்து கலி நீசர்கள் தமக்குள்ளே தற்பெருமை அடைந்த செய்திகளையும், அந்தத் தயாபரனின்ன தத்துவத்தை உணராத பாதகர்கள் வைகுண்டப் பரம்பொருளை அடித்ததையும், உதைத்ததையும், பெரிய இரும்புச் சங்கிலியால் பிணைத்து இழுத்ததையும் அன்பான மக்களையெல்லாம் அய்யா தம்பால் அரவணைத்துக் கொண்டதையும், அநியாயங்களையெல்லாம் அழித்து எல்லாவிதமான இன்னல்களையும், தண்டமாகச் செலுத்தும் வரிவகைகளையும், அய்யாவின் தனிப் பெருங்கருணையினால் இல்லா தொழித்ததையும், நம் தர்மநெறிச் சொல்லொன்றால் அய்யா இந்தத் தாரணியை ஆள்வதையும் அகிலம் குறிப்பிடுகிறது.
.
.
அகிலம்
=======
நாலுமூணு கணக்கும் நடுத்தீர்த்த ஞாயமதும்
மேலெதிரி யில்லாமல் வினையற்று ஆண்டதுவும்
இன்னாள் விவரமெல்லாம் எடுத்து வியாகரரும்
முன்னாள் மொழிந்த முறைநூற் படியாலே
நாரணரும் வந்து நடத்தும் வளமைதன்னைக்
காரணமா யெழுதிக் கதையாய்ப் படித்தோர்க்கு
ஒய்யார மாக உள்வினைநோய் தீருமென்று
அய்யாவு மிக்கதையை அருளுகிறா ரன்போரே
.
விளக்கம்
---------------
ஏழு யுகங்களாக இந்த உலகுக்கு இடையூறு செய்த பாதகர்களின் பாவக்கணக்கையெல்லாம் தெளித்துப் பார்த்து, அவர்களுக்கெல்லாம் அய்யா நடுத்தீர்ப்பு செய்த நியாயத்தையும், இனியுள்ள தர்மயுகத்தில் எதிரிகளே இல்லாவண்ணம் நல்லாட்சி புரியும் விவரங்களையும், முற்காலத்தில் வேத வியாசர் எழுதிவைத்த ஆகம விதிப்படியே அய்யா வைகுண்டப் பரம்பொருள் இந்த அவனியில் வந்து நடத்துகிற அற்புதமான வரலாறுகளையும், காரணக் காரியங்களோடு எழுதி அதை கதைபோல் படிப்போருக்கு, முப்பிறவி வினைகளால் உண்டான நோய்களெல்லாம் உடனே தீர்ந்து, மகத்துவமாய் வாழு்வார்களென்று அய்யா இந்த அதிசய வரலாற்றை அருளுகிறார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
போர்மேனி மாயன் பிறந்து தவம்புரிந்து
ஓர்மேனிச் சாதி ஒக்க வரவழைத்து
நன்னியாய் நானூறு நாலுபத் தெட்டதினோய்
தண்ணீரால் தீர்த்த தர்மமது ஆனதையும்
செய்திருந்த நன்மை தீங்குகலி கண்டிருந்து
வயது முகிந்தகலி மாளவந்த வாறுகளும்
.
விளக்கம்
==========
தர்மத்திற்கு எதிரான அதர்மச் செயல்புரியும் தீயவர்களை எல்லாம் எதிர்த்துப் போர்புரிந்து, உலகெல்லாம் அவ்வப்போது நீதியை நிலைபெறச்செய்யக் கூடிய காரணச் சரீரதாரியாகிய மகாவிஷ்ணுவின் உபாயமாய திருமேனித் தோற்றமுடையவராய் திருச்சம்பதிக் கடலினுள்ளிருந்து எழுந்தருளிய ஆதிப் பரப்பிரம்ம்மாகிய அய்யா வைகுண்டப் பரம்பொருள் மண்ணுலகில் மணவைபதித் திருவிடத்தைத் தம் தவத்திருத்தலமாகத் தேர்ந்தெடுத்துத் தவம்புரிந்து நிறைவான மனோபாவமுடைய மேன்மக்களையெல்லாம் தாமிருக்கும் திருத்தலத்திற்கு வருவித்து, அந்த அன்பு மக்களுக்கு எல்லாம் உபாகாரியாகி நானூற்று நாற்பத்தி எட்டு விதமான நோய்களுக்கும் தண்ணீரையே தர்ம மருந்தாகக் கொடுத்து, சுகப்படுத்திய நற்செய்திகளையும் அந்த அளப்பரிய தர்ம கைங்கரியங்களையெல்லாம் கண்டு, சகிக்க முடியாமல் கெம்பிய கெடுமதி கொண்ட கலியின் வயது முடிவடையும் காலம் அதுவாகையால் அக்கலி மரணமடையப் போகும் வாய்ப்பினையும், இவ்வரிகளில் அகிலம் குறிக்கிறது.
.
.
அகிலம்
========
முன்னாள் குறோணி முச்சூர னுடல்துணித்துப்
பின்னா ளிரணியனைப் பிளந்துஇரு கூறாக்கி
ஈரஞ்சு சென்னி இராட்சதரை யுஞ்செயித்து
வீரஞ்செய் மூர்க்கர் விடைதவிர்த் தேதுவரா
தேசாதி தேசர் சென்னிகவிழ்ந் தேபணியும்
தீசாதி யான துரியோதனன் முதலாய்
அவ்வுகத் திலுள்ள அவ்வோரை யும்வதைத்து
எவ்வுகமும் காணா(து) ஏகக்குண் டமேகி
.
விளக்கம்
==========
பிரபஞ்ச உற்பத்தியின் போது கெடுமதியாளனாகத் தோன்றிய குறோணி என்னும் கொடியவனின் உயிரை ஆறு துண்டுகளாக வெட்டி, அவனை பத்மாசூரன், சிங்கமுகா சூரனாகப் பிறவி செய்து, இந்தச் சூரர்களுடன் பிறந்த தாரகாசூரனையும் சேர்த்து மூன்று அசுரர்களையும் அழித்து. அதன்பிறகு, அக்குறோணியை இரணியனாகப் படைத்து அவனையும் இருகூறாகப் பிளந்து கொன்று, இவ்வரக்கர்களுக்குத் துணையாக இருந்து பத்துசைனியம் படைகளையும் வெற்றிகண்டு, அதே யுகத்தில் இருந்த மூர்க்கர்களையெல்லாம் மறுத்துரையாட முடியாத நிலைக்குள்ளாக்கி, துவாபரயுகத்தில் ஐம்பத்தி ஆறு தேசத்து அரசர்களும் சிரம் தாழ்த்தி வணங்கும் அளவில் கொடுமுடி புரிந்த துரியோதனன் முதலான அந்த யுகத்தில் அநியாயம் செய்த அனைவரையும் அழித்து எந்த யுகத்தில் வாழ்ந்தோரும் காணமுடியாத வைகுண்டலோகத்திற்கு தம் உபாயமாய உடலோடு சென்றதையும் கூறுகிறது.
.
.
அகிலம்
========
பொல்லாத நீசன் பொருளறியா மாபாவி
கல்லாத கட்டன் கபடக்கலி யுகத்தில்
வம்பா லநியாயம் மாதேவர் கொண்டேகி
அம்பாரி மக்களுக்(கு) ஆக இரக்கமதாய்
அறுகரத் தோன்வாழும் ஆழிக் கரையாண்டி
நறுகரத் தோனான நாராயண மூர்த்தி
உருவெடுத்து நாமம் உலகமேழுந் தழைக்கத்
திருவெடுத்த கோலம் சிவனா ரருள்புரிய
ஈச னருள்புரிய இறையோ னருள்புரிய
மாய னருள்புரிய மாதும் அருள்புரிய
பூமாது நாமாது புவிமாது போர்மாது
நாமாது லட்சுமியும் நன்றா யருள்புரிய
சரசுபதி மாதே தண்டரள மாமணியே
அரசுக் கினிதிருத்தும் ஆத்தாளே அம்பிகையே
ஈரே ழுலகும் இரட்சித்த உத்தமியே
பாரேழு மளந்த பரமே சொரித்தாயே
பத்துச் சிரசுடைய பாவிதனைச் செயிக்க
மற்று நிகரொவ்வா வாய்த்த தசரதற்குச்
சேயா யுதிக்கச் செடமெடுத் ததுபோலே
மாயாதி சூட்சன் மனுவாய்க் கலியுகத்தில்
பிறந்து அறமேல் பெரிய தவம்புரிந்து
.
விளக்கம்
==========
பொல்லாங்கு செய்வதில் பிரியன், உண்மையான நியமங்களை உணருகின்ற உபாயமில்லாத மகாபாதகன், கற்றுணரும் குணமில்லாக் குறைமனத்தோனாகிய நீசனானவன், இந்தக் கபடமான கலியுகத்தில் வம்பான பல அட்டுழியங்களைக் கட்டவிழ்த்து விட்டதினால், கலிக் கொடுமையால் அல்லலுறும் அபலை மக்களுக்காக இறைவன் இரக்கமுற்று, முருகப்பெருமான் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர்க் கடலைத் தன் திருக்கரங்களுக்குக் சொந்தக்கார்ராகிய மகாவிஷ்ணுவின் காரணத் திருமேனி உருவெடுத்து, மேலேழு லோகங்களும் எந்நாளும் இன்புறும் வகையில் சிவபெருமான், மகாவிஷ்ணு, பிரம்மதேவன், பார்வதி லட்சுமி, சரஸ்வதி மற்றும் பூமாதேவி ஆகிய அனைத்துத் தெய்வாம்சங்களையும் தன்னகமாக்கிக் கொண்டு திரேதா யுகத்தில் இராவணனை வதை செய்வதற்காக, மற்றொருவரையும் உவமை சொல்லுதற்கில்லாத புகழுக்குரியமன்ன்ன் தசரதரக்கு மகானாகப் பிறக்க மகாவிஷ்ணு மனித உடல் கொண்டது போல், இந்தக் கலியுகத்தில் மாயாதி சூட்சனாகிய ஆதிப் பரப்பிரம்மன் தமக்கே உரித்தான மேன்மை பொருந்திய தவப்பெருமைகளோடு பிறந்து வருகிறேனென்று இப்பெரும்புவிக்கு மனிதனைப் போல் வந்தார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}
கர்த்தாதி கர்த்தர் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூலமும் உரையும் ஆரம்பம்.
.
அய்யா துணை.
.
காப்பு
=======
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
.
பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்
.
சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
.
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
.
திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை-1ஆம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 25.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
காப்பு
=======
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
.
பாண்டவர் தமக்காய்த் தோன்றி
பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த
விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத்
தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய
அம்மானை எழுத லுற்றேன்
.
சிவமே சிவமே சிவமணியே
தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே
தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ்
செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
.
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
.
திருமொழி சீதை யாட்குச்
சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி
உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச்
சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட
உவமையை உரைக்க லுற்றார்.
காப்பு உரை விளக்கம்.
==================
அங்கிங்கெனாதபடி எங்கும் ஏகமாய் அனாதித் திருவுளமாக நிறைந்து, ஆழமாக அகழ்ந்து, அண்ட சராசரங்களையெல்லாம் படைத்து, அதனை அடுக்கடுக்காக ஒழுங்குறக் கோத்துப் பண்பட்ட அழகுடன் ஆபரணமாகப் பூண்டு கொண்டிருக்கும் இறைவன், இந்த மண்ணகத்தில் தவமிருந்து, தம்முடைய புராதனப் பிரதான அடிப்படை நோக்கக் கைங்கரியங்களை யெல்லாம் அறுதியிட்ட முழு வரலாற்றுச் செய்யுளாக வடித்து ஓதுகிறார்.
.
அந்த ஆத்தும பூப்பாதங்கள், அடியேனின் நாவில் நின்று நர்த்தனம் புரிவதால், அடியேனின் சிந்தையில் பூத்த சொற்கள் தமிழன்னையின் தளிர்ப்பூங் கழுத்தில் அணிகலனாக மின்னுகிறது.
.
துவாபரயுகத்தில், பஞ்சபாண்டவர்களிடம் நாட்டை அபகரித்து, ஆண்டுகொண்டிருந்த கௌரவர்களைப் அழித்து, நீதி வழுவாத நெறியுடன் வாழ்ந்த பாண்டவர்களை நாடாள வைத்த பிரபஞ்சகர்த்தன், விரும்பத்தகாத நீசனோடு உதித்த கலியுகத்தால் கவலைகொண்டு கைலைக்குச் சென்று, மீண்டும் கலியுகத்தில் தம்மைச் சார்ந்தவர்களுக்கெல்லாம் கதிமோட்சம் கொடுப்பதற்காக இந்தப் பூவுலகத்திற்கு எழுந்தருளிய நியதிகளை அவரே அடியேனுக்கு அனுக்கிரகம் செய்ததின் விளைவாக இந்த அகிலத்திரட்டு அம்மானையாகிய ஆகமத்தை எழுதத் தொடங்குகிறேன்.
.
உலகம் யாவுக்கும் உயிராகி, அவ்வுலகம் இயங்கும் பொருட்டு தில்லையம்பதியில் நின்று திருத்தாண்டவம் புரியும் சிவபெருமானே! தெய்வங்களுக்கெல்லாம் முழுமுதற் பொருளான தத்துத் திளந்தளிரே! உலக வாழ்வுக்கும், அழிவுக்கும் காரணமாகி அனைத்துப் பாவங்களையும் சமகரிக்கும் சர்வேஸ்வரா! நாங்கள் பல நாள்களாக இப்புவியில் செய்து கொண்டிருக்கும் பாவங்களையெல்லாம் கழுவி, உன் அகமே வைத்து எங்களை ஆட்கொள்ளுவாய்.
.
சிவன், அரன் எனப் பெயர்கொண்ட பராபரமே! அலைகடலை படுக்கையாகக் கொண்ட ராகவா, முன்பொருகால் வையகத்தை மீட்ட வராகமாகத் தோன்றிய வள்ளலே, கொல்லம் ஆண்டு 1008ல் தேவருலகமாகிய பொன் மகர அரங்கினுள் ஒரு பிள்ளை வடிவாகி, திருச்சம்பதியில் ஞானச் சுரபியாகிய நின் நிதான விருப்பங்களையெல்லாம் விஞ்சையெனக் கொப்பளித்து, பின்பு சிறப்பு பொருந்திய தெட்சணாபுரிக்கு எழுந்தருளி உலகப் பரிபாலனம் செய்த நின் ஒப்பரிய சூட்சுமச் செய்திகளையெல்லாம் இந்த உலகுக்கு நின் அருளால் எடுத்தியம்புவதை இந்த யுகத்திற்கு உகந்த தர்மமாகப் பெற்றோம்.
பாக்கியம் பதினாறுமாக இருந்தியங்கும் சீதாலட்சுமி தேவிக்கு, கைலேங்கிரி முதலான அனைத்து லோகங்களிலும் கீர்த்தி பெறத்தக்க ஒரு பிள்ளை உருவாக வைகுண்டமெனத் தோன்றிய இறைவன். இந்தக் கலியுகத்தின் பரிசோதனைகளையெல்லாம் நிறைவேற்றிய பின்பு, இவ்வுலகை தர்மச்சீமையாக்கி, தர்மச் செங்கோலுடன் மகுடம் தரித்த மன்னனாக, தம் ஒரு சொல்லுக்குள் இந்த உலகை ஆளவிருக்கும் அற்புதங்களை எல்லாம் அலங்கார வார்த்தைகளோடு அறிவிக்க அருள்பாலிக்கிறார்.
.
நூல் சுருக்கம்:
=============
அகிலம்:
========
சிவமே சிவமே சிவமே சிவமணியே
.
விளக்கம்
==========
சிவன் என்னும் சொல்லுக்கு மங்களரூபி என்று பொருள். உலகில், ஜீவாத்மாக்கள். மாயையின் வசம் சிக்குண்டு, எதார்த்தமான தர்ம நியதிகளை சீர்குலையச் செய்யும் காலகட்டங்களிலெல்லாம் அந்த ஜீவாத்மாக்களின் மனங்களில் மண்டிக்கிடக்கும் மாயையாகிய பேரிருளை அகற்றி, மறுபடியும் தூய்மைப்படுத்தும் சர்வ உத்தம மங்கள காரியத்தைச் செய்வதற்குகந்த சொரூபன் என்பதாகும்.
.
சொரூபன் என்றால் கடவுள் என்றும், அழகு, உடம்பு சாயல், பரம், விக்கிரகம், வடிவம் என்றெல்லாம் பொருள்படுகிறது, ஆனால் சிவவடிவமோ அரூபமாகவும், ரூபாரூபமாகவும்,ரூபமாகவும் இயங்கும் இயல்புடையதாகும். அரூபத் திருமேனி கொண்டிருக்கும்போது மகேஷ்வரன் எனவும் போற்றப்படுகிறது.
.
பரப்பரம்மத்தின் படைக்கும் ஆற்றலைப் பிரம்மா என்றும் காக்கும் செயலை விஷ்ணு என்றும் அழிக்கும் நிலையை சிவனென்றும் முப்பெரும் மூர்த்திகளாக, வேதங்களும், உபனிசத்துக்களும், ஏனைய ஞானப்போதன ஆகமங்களும் அறிவுறுத்துகின்றன.
.
ஆகவேதான் சிவனை, சம்காரகர்த்தன் என்று சொல்லப்படுகிறது. சம்காரம் என்னும் சொல்லுக்கு அழித்தல் என்று பொருள். அழிப்பதற்கு ஒரு மூர்த்தி தேவையா என்று எண்ணத் தோன்றும்.
.
அழித்தலாகிய கைங்கரியத்திற்குள்ளேதான் ஆக்கலும், காத்தலும் நடைபெறுகிறது. உதாரணமாக, ஒரு ஆணின் சுக்கிலமும், பெண்ணின் சுரோணிதமும் ஆங்காரமாகிய சிற்றின்ப சுகமெனும் வேட்கையால் தன் நிலையிலிருந்து அகன்று சங்லிதமாகும் போதுதான் ஜிவன் சிருஷ்டி ஏற்படுகிறது. அதாவது அதன் மூலம் இன்னொரு உயிர் படைக்கப்படுகிறது. படைக்கப்பட்ட சிசு இனவிருத்தியின் பொருட்டு காக்கவும்படுகிறது. இவ்வகையான நிலைப்பாடுகளால்தான் அழிக்கும் மூர்த்தி முதலிடமாகிறார்.
.
இப்படி இந்த பிரபஞ்சத்தின் சுழல் வட்டத்தைச் சூசகமாக உற்று நோக்கினால், இறைவனின், எண்ணிலடங்காத இத்தகைய விந்தைகள் வெளிப்படும். இத்தகு ஆதாரங்களை அடிப்படையாக்க் கொண்டு தான், ஆங்காரங்களை அழித்து ஈஸ்வரிய குணங்களான பரிசுத்தம், சுகம், சாந்தி முதலிய அம்சங்களைப் பிரம்மன், விஷ்ணு ஆகிய மூர்த்திகளின் வாயிலாக அருள வல்லவராகிய சிவம், சங்கரன் என்று துதிக்கப்படுகிறார்.
.
இதைப்போல் அவர் நின்று நிகழ்த்திய கைங்கரியங்களுக்கு ஏற்ப செப்பித்தொலையாத திருநாமங்களால் புகழப்படுகிறார். அதாவது, உலகத்திற்கு வினயமான விளைவுகளை ஏற்படுத்திய திரிபுர அசுரர்களை வதம் செய்ததால், திரிபுராந்தகன் என்றும் பிரம்மன், விஷ்ணு ஆகிய இரு மூர்த்திகளின் கபாலத்தை, மகாகர்ப்பாந்திரங்களிலே தரித்து, தனித்து நின்று ஆனந்தத் தாண்டவம் ஆடியதால், கண்ணுதல் என்றும், நெற்றிக்க்கண்ணினால் காமதகனம் செய்தவர் எனவே, காமநாசன் என்றும் காமாரி என்றும் பகீதரனின் மூதாதையரை சொர்க்கத்தில் சேர்க்கும்பொருட்டு கங்கையின் பிரவாகவேகத்தை தம் சடைமுடியினால் அடக்கியதினால், கங்காதரன் என்றும், கெங்கை வேணியன் என்றும் திருப்பாற்கடலை கடைந்தபோது அதில் தோன்றிய விஷத்தைக் கண்டத்தில் அடக்கி தேவர்களைக் காத்தருளியதால் கறைக்கண்டர் என்றும், நீலகண்டன் என்றும் காலகண்டன் என்றும் விஷ்ணுவும், பிரம்மாவும் அடி, முடி தேடிக் காண முடியாததால் கரைகண்டர் என்றும் சந்திரனைச் சடையில் தரித்ததால் சந்திரசேகரன் என்றும் சந்திரமௌலி என்றும், மார்க்கண்டனை காக்கும்பொருட்டு எமனை உதைத்துத் தள்ளியமையாலும், கால வரையறைகளைக் கடந்து அனாதி நித்தியமாய் இருப்பதாலும், காலகாலன் என்றும் காலாந்தகன் என்றும் இப்படி இன்னும் எத்தனையோ ஒப்பரிய விந்தைகளால் பெயரோதப்படுகிறார்.
.
அத்தகைய சிவபெருமானின் கண்ணின் ஒளியாக இருந்து கொண்டிருக்கும் காரணக் கருப்பொருளே சரணம்.
.
.
தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
நாராயணர் வாழ்த்து
-----------------------------
இகழ்ந்திட்டே னென்றமட மயிலே மானே
என்றாதி யிருகையால் மாதை யாவிப்
புகழந்திட்ட மானமணிமேடை புக்கிப்
பூவையரை யிடமிருத்திப் புகழ்ந்து வாழ
மகிழ்ந்திட்ட மானமுறை நீதி வாழ
மறைவாழ இறையவரு மகிழ்ந்து வாழ
உகந்திட்ட மானமுறை நூல்போல் வாழ
உம்பர்சிவ மாதுலக மனுவோர் வாழ
.
விளக்கம்
--------------
என் துன்பம் எல்லாம் நீங்கி விட்டதென்று கூறிய பெண்மயிலே மானே, என்று கூறி ஆதியாகிய திருமால் இலட்சுமிதேவியைத் தமது இருகைகளாலும் அனைத்து புகழ்ந்து தங்களுக்கு விருப்பமான மணி மேடையினுள் சென்று இடது பக்கத்தில் இருத்தி மீண்டும் புகழ்ந்து அவளை வாழ வாழ்த்தினார். தமக்கு விருப்பமான முறையிலுள்ள சிறந்த நீதியினை வாழ வாழ்த்தினார். வேதங்கள் வாழ வாழ்த்தினார். இறையவரும் மகிழ்ந்து வாழ வாழ்த்தினார். மகிழ்ச்சி பொருந்திய விருப்பமான முறையில் உள்ள இந்நூலின் உபதேச முறைகள் போல வாழும் எல்லா மக்களையும் வாழ வாழ்த்தினார். வானலோகத் தேவர்களும் சிவமும் இப்பெரிய உலக மனிதர்களும் வாழ வாழ்த்தினர்.
.
.
அகிலம்
--------------
நூல் நிறைவு கூறல்
----------------------------
மாதவட்குத் தானுரைத்தக் காண்டந் தன்னை
வையகத்து மனுவோர்க ளறிய மாயன்
தாதணியுந் தாமரையூர்ப் பதியில் மேவித்
தழைத்திருக்கும் சான்றோரில் தர்ம வாளன்
நாதனருள் மறவாத இராம கிருஷ்ண
நாடனக மகிழ்ந்துபெற நலமாய் வந்த
சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச்
செப்பெனவே நாதனுரை தொகுத்த வாறே
.
விளக்கம்
-------------
இலட்சுமிதேவிக்கு நாராயணர் உரைத்தவையே இந்த நூல் ஆகும். இந்த நூலை இவ்வுலக மக்கள் அறியும்படி செய்ய மாயன் வைகுண்ட நாதனாக தேன் நிறைந்த பூக்களையுடைய தாமரையூர் பதிக்குச் சென்றார். அங்குச் சகலச் செழிப்புகளும் தழைத்து இருக்கும் சான்றோர் இனத்தில் தருமத்தையும் இறைவன் அருளையும் சிறிதளவும் மறக்காத இராமகிருஷ்ண பெருமாள் நாடன் வாழ்ந்து வந்தார். அவருள்ளம் மகிழ்வுறும்படி நல்ல உயர்வோடு வந்து பிறந்தவன் ஒழுக்கமுள்ள அரிகோபாலன் ஆவார். அந்த அரிகோபாலன் சீடரின் மனத்தில் புரியும்படி வைகுண்டநாதன் இந்த உரையைதை தொகுத்துக் கூறினார்.
.
.
அகிலம்
------------
வாறான கதைவகுத்த நாதன் வாழ
வகுத்தெழுதிப் படித்தகுல மனுவோர் வாழ
வீறான தெய்வசத்தி மடவார் வாழ
வீரமுக லட்சமியும் விரைந்து வாழ
நாராய ணரருளால் படித்தோர் கேட்டோர்
நல்லவுரை மிகத்தெளிந்து நவின்றோர் கற்றோர்
ஆறாறும் பெற்றவர்க ளகமே கூர்ந்து
அன்றூழி காலமிருந் தாள்வார் திண்ணம்
.
விளக்கம்
---------------
இப்படி தெளிவான வழியில் கதை வகுத்த வைகுண்டநாதன் வாழட்டும். இதை ஏட்டிலிருந்து எடுத்து எழுதிப் படித்தவரும் அந்தக் குல மக்களும் வாழட்டும். சக்தி பொருந்திய தெய்வக்கன்னியர் வாழட்டும். வீரத் தன்மையான முகம் பொருந்திய இலட்சுமிதேவி மகிழ்ந்து வாழட்டும். நாராயணருடைய அருளால் இந்நூலைப் படித்தவர்களும், கேட்டவரகளும், இந்நூலுக்குரிய உரையை மிகவும் தெளிவாக எடுத்து எழுதியவர்களும், சொன்னவர்களும், அதைக் கற்றவர்களும் பதினாறு பேறுகளையும் பெற்று உள்ளத்தில் மகிழ்வும் பெற்று எக்காலமும் என்றென்றும் வாழ்ந்து இவ்வுலகத்தை ஆட்சி புரிவார்கள் என்பது நிச்சயம், இது சத்தியம்.
.
.
அகிலம்
-------------
திண்ணமிந்த அகிலத்திரட் டம்மானை தன்னைத்
திடமுடனே மனவிருப்ப மாகக் கேட்டோர்
எண்ணமுந்த வினைதீர்ந்து ஞான மான
இறையவரின் பாதாரத் தியல்பும் பெற்று
வண்ணமிந்தத் தர்மபதி வாழ்வும் பெற்று
மக்களுடன் கிளைபெருகி மகிழ்ச்சை யாக
நிண்ணமிந்தப் பார்மீதில் சாகா வண்ணம்
நீடூழி காலமிருந் தாள்வார் திண்ணம்
.
விளக்கம்
-------------
இந்த அகிலத்திரட்டு அம்மானை நூலை மிகுந்த மன உறுதியுடனும், விருப்பத்துடனும், கேட்டவர்கள் தீய எண்ணமாகிய வினைகள் எல்லாம் தீர்ந்து ஞானமயமான இறையவரின் பாத்த்தின் நிறைவு மயமாகி நிலை பெற்று செழிப்புப் பொருந்திய இந்தப் பழைமையான உலகில் நிலைத்த வாழ்வும் பெற்று சிறந்த மக்களுடனும், சுற்றத்தாருடனும் பெருகி, மகிழ்ச்சியுடன் என்றென்றும் இவ்வுலகில் சாகாநிலை பெற்று எக்காலத்திலும் வாழ்வர். இது சத்தியம்.
.
பதினேழாம் நாள் வாசிப்பும், அகிலமும் நிறைவடைந்தது. தொடரும்…
அய்யா உண்டு.
.
காப்பு
----------
ஏரணியும் மாயோன் இவ்வுலகில் தவசுபண்ணி
காரணம்போல் செய்தகதை கட்டுரைக்க - பூரணமாய்
ஆராய்ந்து பாட அடியேன்சொல் தமிழ்க்குதவி
நாராயணர் பாதம் நாவினில்
பாண்டவர் தமக்காய்த் தோன்றி பகைதனை முடித்து மாயோன்
வீன்றிய கலியன் வந்த விசளத்தால் கயிலை யேகி
சான்றவர் தமக்கா யிந்தத் தரணியில் வந்த ஞாயம்
ஆண்டவர் அருளிச் செய்ய அம்மானை எழுத லுற்றேன்
சிவமே சிவமே சிவமணியே தெய்வ முதலே சிதம்பரமே
தவமே தவமே தவக்கொழுந்தே தாண்டவசங் காராதமியே எங்களுட
பவமே பவமே பலநாளுஞ் செய்த பவம றுத்தன்
அகமேவைத் தெங்களை யாட்கொள்வாய்
சிவசிவசிவசிவா அரகரா அரகரா
அலையிலே துயில் ஆதிவராகவா
ஆயிரத்தெட் டாண்டினில் ஓர்பிள்ளை
சிலையிலே பொன்மகர வயிற்றினுள்
செல்லப்பெற்றுத் திருச்சம் பதியதில்
முலையிலே மகரப்பாலை யுமிழ்ந்துபின்
உற்றதெச்சண மீதில் இருந்துதான்
உலகில் சோதனை பார்த்தவர்
வைந்தரின் உவமைசொல்ல உகதர்மமாகுமே
திருமொழி சீதை யாட்குச் சிவதலம் புகழ எங்கும்
ஒருபிள்ளை உருவாய்த் தோன்றி உகபர சோதனைகள் பார்த்துத்
திருமுடி சூடித் தர்மச் சீமையில் செங்கோ லேந்தி
ஒருமொழி யதற்குள் ளாண்ட உவமையை உரைக்க லுற்றார்.
.
.
அகிலம் மீண்டும் தொடரும்.... அய்யா உண்டு🙏. #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
போற்றுமட மயிலான சீதைப் பெண்ணின்
பொன்முகம்பார்த் தருள்புரிந்து புகல்வா ராயன்
சாற்றுமெனக் கெதிரிவந்த வாறே தென்று
தானுரைத்தாய் நீயறியத் தண்மை யாகக்
கீர்த்தியுட னானுரைத்தேன் காண்ட மாகக்
கிளிமொழியே யினியெனக்குக் கீழு மேலும்
வேற்றுமொரு எதிரியுண்டோ வென்று கேட்ட
மெல்லியிள மயிலனைய மாதே கேண்மோ
.
விளக்கம்
----------------
இனியும் உமக்கு யாராவது எதிரிகள் உள்ளனரா? என்பது பற்றி என் பெரிய குருவே சொல்லுவீராக என்று கேட்டு தம்மை வணங்கிய மயிலைப் போன்ற இலட்சுமியின் அழகு முகத்தைச் சுவாமி பார்த்து நீ முதலில் எனக்கு எதிரிகள் வந்த வழிகள் எப்படி? என்று தான் கேட்டாய். அதற்கு ஏற்ப நீ அறியும்படியாக அன்புடன் உயர்வுடனும் உனக்கு ஒரு பெரிய நூலாக விளக்கிக் கூறினேன். கிளிமொழியே, இனி எனக்குக் கீழ் உலகங்களிலும் மேல் உலகங்களிலும் என் கருத்துக்கு வேற்றுமையுள்ள எதிரி யாராவது உள்ளனரா? என்று இப்பொழுது கேட்கிறாய். மென்மையான இளம் மயிலைப் போன்ற பெண்ணே, அதற்கும் விடை கூறுகின்றேன். கேட்பாயாக என்றார்
.
அகிலம்
-------------
மாதேநீ கேளுயீ ரேளு பூமி
மண்ணிலுவ ராழிவளர் வரைசூ ழீதுள்
சீதேநீ வரையெனதுள் ளறியா மாயச்
செகவீர சாலமத னேக முண்டு
பூதேயென வெகுண்டுவர முகங்கள் தோறும்
பிறக்கவே நான்கேட்கப் புரிந்தா ரீசர்
வாதேயென் பகைஞ்ஞர்வழிக் குலங்கள் மாய்த்து
மறுமஞ்ஞ ரெதிரியில்லா வண்ணம் வாழ்வோம்
.
விளக்கம்
-----------------
இலட்சுமியே, கேட்பாயாக, கடலும், வளர்ந்த மலையும் சூழ்ந்த பதினான்கு உலகங்களில் உள்ள மக்களும், நீயும் என் உள்மனதின் மாய சக்தியினை அறியமாட்டீர்கள். மிக உயர்வான வீர மாயசாலம் அநேகம் உள்ளன. பூதத்தைப் போன்று மிகக் கோபம் கொண்ட அரக்கர்கள் தோன்றத் தோன்ற நானும் நல்லவனாகப் பிறந்துபிறந்து அவர்களை அழிக்க ஈசரிடம் வரம் கேட்டுத் தந்தருளப் பெற்றேன். என்னை எதிர்க்கின்ற பகைவர் வழிக்குலங்களை எல்லாம் அழித்துவிட்டால் இனி மறுபடியும் தொடர்ந்து உருவாகும் மேகத்தைப் போன்ற வலிமை மிக்க எதிரிகள் யாரும் இல்லாதவண்ணம் வாழ்வோம்.
.
.
அகிலம்
இனிமேலு மெனக்கெதிரி யில்லை மானே
எமதுமக்க ளொடுங்கூடி யிருந்து வாழ்வோம்
மனுவோரு முனிவோரும் வான லோக
மாலோரு மென்வாக்கு வழியே வாழ்வார்
இனிமேலும் பயமேதோ எமக்கு மாதே
இலங்குபதி மீதினுனை யிடமே வைத்து
பனிமாறு காலம்வரை யரசே யாள்வோம்
பதறமனம் வேண்டாமெனப் பகர்ந்தார் மாயன்
.
விளக்கம்
----------------
பெண்ணே இனிமேல் எனக்கு எதிரிகள் இல்லாத்தால் நம்முடைய குழந்தைகளோடு கூடிஇருந்து வாழ்ந்து வருவோம். மனிதர்களும், முனிவர்களும், வானவர்களும், வைகுண்ட லோகத்தோரும் எனது சொல்லின்படியே இனி வாழ்ந்து வருவர். இனி நமக்கு வேறு எந்தப் பயமும் இல்லை பெண்ணே. பிரகாசித்துக் கொண்டிருக்கின்ற தர்மபதியில் என்னை என்னுடைய இடதுபுறம் இருத்தி மனதுக்குக் குளுமை கொடுக்கும் தர்மயுகம் மாறும்வரை அரசு செய்து வருவோம். எனவே நீ மனம் பதற வேண்டாம் என்று திருமால் உரைத்தார்.
.
.
அகிலம்
-------------
மாயனுரை மனமதிலே மாது கேட்டு
மகிழ்ந்துமுக மலர்ந்துவாய் புதைத்துச் சொல்வாள்
தீயனெனனு மாகொடிய அரக்கர் சேர்க்கைத்
திரையறுக்க நீர்துணிந்து சென்ற நாளே
நாயநெறி காணாத அடிமை போல
நடுங்கிமன திடைந்துவெகு நாளே தேடி
ஆயருமை நாயடியா ளின்று கண்டேன்
அகமகிழ்ந்தே னெனதுதுய ரிழந்திட் டேனே
.
விளக்கம்
----------------
இலட்சுமிதேவி சந்தேகம் தெளிதல்
---------------------------------------------------------------
இப்படியாக மாயன் உரைத்ததைக் கேட்டு இலட்சுமிதேவி மனதில் தெளிவடைந்து மகிழ்ந்து முகம் மலர்ந்து மறுமொழி பேசாவண்ணம் அமைதியாய் நின்று மீண்டும் திருமாலிடம் பேசலானாள். சுவாமி தீயவன் என்று கூறக் கூடிய கொடிய அரக்கர்களுடைய தோற்றங்களை முழுவதுமாக அறுத்து எறிவதற்காக நீர் மனம் துணிந்து சென்ற நாள் முதலாக நான் நியாய நெறிகளை அறியாத அடிமையைப் போன்று மனம் டுங்கி கலங்கி எல்லாரையும் வழி நடத்தும் ஆயனாகிய உம்மை வெகு நாள்களாகத் தேடினேன். இவ்வாறு தேடி அடியாளாகிய நான் காவலிருந்து இன்று உம்மைக் கண்டு கொண்டேன் என் மனம் மகிழ்ந்தேன். என்னுடைய துன்பம் எல்லாம் நீங்கி மகிழ்வடைந்து விட்டேன் என்றாள்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 22.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
வாழ்த்து
---------------
சீரணி யுமையாள் பங்கர் சிவமகிழ்ந் தினிது வாழ
நாரணர் திருவும் வாழ நான்முக வேதன் வாழ
வாரண வான லோக மாதவ ரெல்லாம் வாழ
காரணக் கன்னி யானக் கமலப்பூ மாதும் வாழ
.
விளக்கம்
----------------
எல்லாவற்றையும் ஒழுங்காகச் சீரமைக்கும் எமையாளும், உமையாளை நேர் பாதியாகப் பெற்ற சிவப்பொருளும் மகிழ்ந்து இனிமையாய் வாழட்டும். நாராயணரும் இலட்சுமிதேவியும் இனிமையாய் வாழட்டும். நான்கு முகத்தையுடைய வேதனாகிய பிரம்மன் மகிழ்ந்து வாழட்டும். வானலோகத்தில் வாழ்ந்துவரும் மாபெரும் தவத்தினர் எல்லாரும் இனிமையாய் வாழட்டும். எல்லாவற்றுக்கும் காரணமான கன்னியான வெள்ளைத் தாமரைப் பூவில் வாசம் செய்யும் சரசுவதிதேவியும் மகிழ்ந்து வாழட்டும்.
.
.
அகிலம்
--------------
பூமாது வானபக வதியும் வாழ
பொன்மாது சரசுபதி புரிந்து வாழ
நாமாது வானபூ மடந்தை வாழ
நாகரிகத் தேவியர்கள் நலமாய் வாழ
போர்மாது வானமா காளி வாழ
பொன்னுலகத் தர்மபதி பொருந்தி வாழ
சீர்மாது கொண்டபுகழ்ச் சான்றோர் வாழ
சிவவைந்த ராசருமே சிறந்து வாழ
.
விளக்கம்
----------------
பூவைப்போன்ற மென்மையான பெண்ணாகிய பகவதியாள் மகிழ்ந்து வாழட்டும். அழகு பொருந்திய சரசுவதி தமது கலைகளை எல்லாருக்கும் கொடுத்து மகிழ்ந்து வாழட்டும். நவீன அழகு பொருந்திய காளிதேவி நன்றாய் வாழ்ட்டும். பொன்னால் ஆகிய தர்மபதி உலகத்தை எல்லாரும் அடைந்து வாழட்டும். மேன்மையான கன்னியர் பெற்ற புகழ் பொருந்திய சான்றோர்கள் வாழட்டும். சிவத்தன்மையுள்ள வைகுண்ட இராசர் சிறப்புடன் வாழட்டும்.
.
.
அகிலம்
--------------
மாதுதிரு லட்சுமியாள் மகிழ்ந்து போற்றி
மாயனுட முகம்நோக்கி மாது தானும்
தீதகலும் நாயகமே சிறந்த மாலே
தேசமதி லுமக்கெதிரித் தோன்றிற் றென்று
நீதமுடன் தோன்றியங்கே யுகங்கள் தோறும்
நிந்தனைகள் படுவதெனக் கறியச் சொல்வீர்
ஈதுரைக்க மாயவட்கு மாயன் தானும்
இத்தனையு மெடுத்துரைக்க இசைவாள் பின்னும்
.
விளக்கம்
----------------
இதுவரை திருமால் சொன்ன கதைகளைக் கேட்ட இலட்சுமிதேவி, மனம் மகிழ்ந்து அவரைப் போற்றித் துதித்து அவர் முகம் நோக்கி, தீமையை அகற்றும் என் கணவரே, சிறந்த திருமாலே இத்தேசத்தில் உமக்கு எதிரிகள் தோன்றினர் என்றும் நீர் நீதியுடன் உத்தமராகத் தோன்று யுகங்கள்தோறும் பெருந்துன்பங்கள் அனுபவித்தீர் என்றும், நான் அறியும்படியாகச் சொன்னீர் என்று உரைத்த இலட்சுமிதேவி திருமால் உரைத்தவை முழுவதையும் ஏற்றுக் கொண்டாலும் மீண்டும் அவரிடம் சில சந்தேகங்களைக் கேட்கலானாள்.
.
அகிலம்
-------------
பின்னுமந்த நாதனுட அடியைப் போற்றிப்
பொன்மானே யெனதுடைய தேனே கண்ணே
இன்னுவரைக் குறோணியுயிர் தன்னை நீரும்
எழுபிறவி செய்தவனை யிசைந்து பார்த்தும்
நன்னியெள்ளுப் போலினிவு காணா வண்ணம்
ஞாயநடுக் கேட்டவனைத் தன்னால் கொன்னீர்
பின்னுமுமக் கெதிரியின்ன முண்டோ சொல்லும்
பெரியகுரு வெனப்பணிந்து போற்றி னாளே
.
விளக்கம்
----------------
மீண்டும் தனது கணவரின் பாதங்களைப் போன்றிய, அழகு பொருந்திய சீவனே, என்னுடைய தேனே, கண்ணே, நீர் இது நாள்வரைக்கும் குறோணியின் உயிரை ஏழு பிறவிகள் செய்து அவனை உமக்கு இசைந்தவனாக உருவாக்கப் பார்த்தும் அவன் எள்ளளவுகூட உமது நினைவு இல்லாத காரணத்தால் நடுத்தீர்ப்பில் நியாயத்தைக் கேட்டு அவனை அவனாலேயே கொல்ல வைத்தீர். இனியும் உமக்கு யாராவது எதிரிகள் உள்ளனரா? என்பது பற்றி என் பெரிய குருவே சொல்லுவீராக என்று அவர் பாதங்களை வணங்கிப் போற்றினாள்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩
அய்யா துணை.
.
தர்ம புவிகண்டு தானிருக்கு மக்களுக்கு
வர்மமில்லை நோவுமில்லை மறலிவினை தானுமில்லை
தர்மபுவி வாழ்வார்க்குச் சத்தி விதிக்கணக்கும்
நம்மிடத்தி லல்லால் நாட்டில் கணக்குமில்லை - அய்யா !
.
அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 21.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
பாவித்து நித்தம் பரமவை குண்டரையும்
சேவித்துப் போற்றி தினமேவல் செய்திடவே
கன்னியர்க ளோடும் காதலாய்த் தானீன்ற
மன்னதிச் சான்றோர் மக்கள் மனைவியோடும்
ஆதி வைகுண்ட ஆனந்த நாரணரும்
நிதியாய்த் தர்மம் நேரோர் மணிதூக்கிச்
சிங்கா சனத்தில் சிவசூர்ய குடைக்குள்
கங்கா தரனார் கற்பினையை யுள்ளிருத்தி
ஆண்ட பரனும் ஆதி முறைப்படியே
சான்றோர்கள் போற்ற தர்மபதி யாண்டிருந்தார்
.
விளக்கம்
----------------
பரம்பொருளான வைகுண்டமாமணிக்கு நித்தம் சிறப்பான பணிவிடைகள் செய்து அவரைப் போற்றி வந்தனர். வைகுண்டர் தம்மோடு இருக்கின்ற கன்னிகளோடும் அன்புடன் தாம் பெற்றெடுத்த உயர்வான அரசர்களாகிய சான்றோர் மக்களுடனும், மனைவி இலட்சுமியுடனும் அங்கே காட்சி அளித்தார். ஆதி வைகுண்டராகிய ஆனந்த நாராயணர், நீதி தருமத்தைப் போற்றி, நேர் எதிராக ஒரு நீதி மணியை தொங்க விட்டு சிங்காசனத்தில் சிவசூரிய குடைக்குக் கீழ் சிவனாகிய நாராயணரின் எண்ணத்தை மனதில் கொண்டு முந்தைய ஆட்சி முறைப்படியே சான்றோர்கள் போற்றி நிற்க, தருமபதியை ஆண்டு வந்தார்.
.
.
அகிலம்
-------------
ஆண்டிருந் தரசு செய்ய அணிவரை போலே நீதம்
பூண்டிருந் தினிது வாழ பூதல மனுவோர் வாழ
கூண்டிருந் தருளாய்ச் செல்வம் குணமுடன் மகிழ்ச்சை கூர்ந்து
வேண்டிருஞ் செல்வ மோங்க வேற்றுமை யில்லா வாழ்ந்தார்
.
விளக்கம்
----------------
இவ்வாறு தருமபூமியை வைகுண்ட மாமணி அரசாளவும், ஒழுங்காக அணி வகுத்து நிற்கும் மலைகளைப் போன்று தருமநீதம், தெய்வநீதம், மனுநீதம் ஆகிய மூன்று நீதங்களும் இனிதாக சேர்ந்து வாழ்ந்து வரவும், இப்பூமியிலுள்ள மக்கள் எல்லாரும் இனிதாக வாழவும், மக்கள் கூடி இருந்து இறை அருளாகிய செல்வத்தை மன நிறைவோடு மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளவும், தேவையான செல்வங்கள் எல்லாம் சிறந்து ஓங்கும்படியாகவும் எல்லாம் பெற்று எல்லாரும் எந்தவித வேற்றுமையுமின்றி அங்கே வாழ்ந்தனர்.
.
.
அகிலம்
-------------
தருமமாய்ப் புவியி லுள்ள சனங்களும் பலது செந்தும்
பொறுமையாய் வாழும் போது புரந்தர வானோர் விண்ணோர்
நன்மையா யவருங் கூட நாடொன்றாய் மேவி வாழ
வன்மமே யில்லா வண்ணம் வைந்தரும் புவியை யாண்டார்
.
விளக்கம்
-----------------
இப்படியாகத் தரும சிந்தனையோடு பூமியில் உள்ள மக்களும் பல சீவ செந்துக்களும் பொறுமைக் குணத்தை உடையவராகி வாழ்ந்து வருகின்ற பொழுது இந்திரனும், வானோரும் மிகுந்த நன்மைகளை அவர்களுக்குச் செய்து எல்லாரும் ஒரு நாட்டு மக்களாகி அங்கே வாழ்ந்தனர். எந்தவிதத் துன்பமும் இல்லாதவாறு வைகுண்டமாமணி தருமபூமியை ஆண்டு வந்தார்.
.
.
அகிலம்
-------------
ஆண்டனர் புவிதிரி மூன்றினு மோரினம்
கூண்டநற் குலமெனக் குலாவி வைந்தரும்
தாண்டிய வோர்குடைத் தாங்கு குவலயம்
மூன்றினு மோர்மொழி முகுந்தன் வாழ்ந்தனர்
.
விளக்கம்
----------------
பூலோகம், பரலோகம், பாதாளலோகம் ஆகிய மூவுலகங்களிலும் திரிகின்ற உயிரினங்கள் எல்லாம் ஒரே இனம் போன்று வாழ்ந்து வர அவர்களுடன் சேர்ந்து வைகுண்டமாமணியும் கூடிக் குலாவி ஆட்சி புரிந்து வந்தார். எல்லாவற்றையும் கடந்த பொருளான முகுந்தனான வைகுண்ட மாமணி தாம் தாங்குகின்ற மூன்று உலக மக்களையும் தமது ஒரே ஆட்சியின் கீழ் ஒரே சொல்லின் கீழ் அடக்கி ஆட்சி புரிந்து வாழ்ந்து வந்தார்.
.
.
அகிலம்
-------------
பருதியு மதியெனப் பவந்து சேவனர்
கருதியு முகமனும் கமழ்ந்து கைமலர்
அருதியு மலர்மகள் அணிந்து பூவினர்
கருதியு முறைவழி தூக்கி வாழ்ந்தனர்
.
விளக்கம்
----------------
சூரியனும், சந்திரனும் எல்லா இடங்களும் நிறைந்து ஒளிமயமாகச் செய்தன. பணிவிடைக்கார்கள் அருகிலிருந்து மதிப்பும், மரியாதையும் செய்து வாழ்த்துக்கள் கூறி நின்றனர். மணம் வீசும் மலர்களைக் கையில் எடுத்து மலர் மகளிரான இலட்சுமியும், சரசுவதியும் தூவினர். பூவுலகச் சான்றோர் மக்கள் வேத முறை தவறாவண்ணம் அவரைப் புகழ்ந்து பாடினர். இவ்வாறாக எல்லாரும் இன்பமுடன் வாழ்ந்து வந்தனர்.
.
.
அகிலம்
--------------
பொன்முக வருளது பொதுமி யாவியே
அன்முக மதிலு மமர்ந்து புகுந்திரு
இன்முக மதிலு மிருந்து லாவியே
பொன்முக வைந்தர் புயத்தில் வாழ்ந்தனர்
.
விளக்கம்
----------------
பொன் போன்ற அழகு முக வைகுண்டமாமணி மகிழ்ச்சியினால் அழுது சான்றோர்களை அணைத்து, துன்பத்தினால் முகம் சோர்ந்து இருப்பவரின் உள்ளத்திலும் இன்பத்தினால் முகம் மலர்ச்சியுடன் இருப்பவரின் உள்ளத்திலும் புகுந்து உலாவியபடி இருந்த அவரது பக்கத்தில் சான்றோர்கள் வாழ்ந்தனர்.
.
.
அகிலம்
--------------
முதமுக வானவர் மூன்றென வொன்றினர்
சதயித காலெனச் சமைந்து வாழ்ந்தனர்
உதவென மனமு முவந்து லாவியே
நிதம்நினை வளர்வறா நிரந்து வாழ்ந்தனர்
.
விளக்கம்
-----------------
மகிழ்வுடன் வானவர்கள் வைகுண்டமாமணியை முப்பொருளானவன் என்று மனம் ஒன்றித்துத் துதித்தனர். நூற்றுக்கணக்கான வழிகளும் ஒன்றாய் அமைத்தவர் இவ்வைகுண்டர் என அவர்கள் உணர்ந்து இன்பமுடன் வாழ்ந்தனர். அதற்காக ஒருவருக்கு ஒருவர் துணை என எல்லாரும் சேர்ந்து மகிழ்ந்து உலாவி தினந்தோறும் வளரும் இறைவன் நினைவு மாறாதவண்ணம் வாழ்ந்தனர்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை அம்மானை 17ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 20.09.2025.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
--------------
அய்யா அருள்வாக்கு தொடர்ச்சி
----------------------------------
உன்னிலும் பெரியோ னாக ஒருவனுள் ளுயர்த்தி கண்டால்
தன்னிலும் பெரியோ னாகத் தழைத்தினி திருந்து வாழ்வீர்
என்னிலும் பெரியோ னீங்கள் யானுங்கள் தனிலு மேலோன்
பொன்னில் வூற்று வீசும் பொன்பதி யுகத்து வாழ்வே
.
விளக்கம்
----------------
ஒருவன் உன்னைப் பெரியவனாக (உயர்வாக) தன்னுடைய மனத்தில் நினைத்தால், அப்படி நினைப்பவனை உன்னைவிடப் பெரியவனாக நீ நினைப்பாயாக. இவ்வாறு நினைத்து இன்னும் உயர்வு அடைந்து இவ்வுலகில் வாழ்ந்து வாருங்கள். அப்படிப் பார்க்கின்ற பொழுது என்னை நினைக்கின்ற நீங்கள் என்னைவிடப் பெரியவர் ஆவீர். உங்கள் எல்லாரையும் எப்பொழுதும் நினைக்கின்ற நான் உங்கள் எல்லாரையும் விடப் பெரியவன் ஆவேன். தருமபதியில் காணப்படும் பொன்னாலாகிய நிலத்தில் எப்பொழுதும் ஞான ஊற்றுக்கள் உருவாகிக் கொண்டிருக்கும். காற்று அமைதியாய் வீசிக் கொண்டிருக்கும். அத்தருமபதி யுகத்தின் வாழ்வே சிறந்த வாழ்வு.
.
.
அகிலம்
--------------
ஆணுடன் பெண்ணும் பெற்று அதிகமாய்ச் செல்வ மாகித்
தாணுட நினைவு முற்றுத் தர்மமும் நெறியுங் கற்று
வேணுநீள் கால மெல்லாம் ருடனே வாழ்ந்து
பூணுதல் கமல நாதன் பொற்பதம் பெற்று வாழ்வீர்
.
விளக்கம்
----------------
நீங்கள் உங்கள் விருப்பப்படி நீண்ட காலம்வரை அவரவர் மனைவியருடன் இல்லற வாழ்வு வாழ்ந்து ஆணும் பெண்ணும் பெற்று மகிழ்ந்து இருங்கள். அதிகமாக எல்லாச் செல்வங்களுக்கும் உடைமையாகி சிவப் பொருளின் நினைவை எப்பொழுதும் நினைவில் நிறுத்தி தருமத்தையும், நெறி முறைகளையும் கற்று முடித்து வாழ்ந்தால் நீங்கள் போற்றிப் பற்றுகின்ற கமல நாதனின் பொன் பாத்த்தினை அடைந்து நிலைத்து வாழ்வீர்.
.
.
அகிலம்
--------------
மிருகங்கள் முதலியவற்றுக்கு அய்யா அருள் வாக்கு
---------------------------------
மனுக்க ளவர்க்கு வாய்த்தசட்ட மீதருள
தனுக்கள் பெரிய சந்தமிரு கங்களுக்கு
ஒன்றாகக் கூடி ஒக்க வொருஇனம்போல்
நன்றாக வோர்தலத்தில் நன்னீர் குடித்துமிக
வாழ்ந்திருங்கோ வென்று வைந்தர்மிகச் சட்டமிட்டார்
மெச்சிக் குழைந்து மேவி யொருஇனம்போல்
பட்சி பறவைகட்கும் பாங்காகச் சட்டமிட்டு
ஊர் வனங்களுக்கும் ஒருப்போலே சட்டமிட்டு
.
விளக்கம்
--------------
இவ்வாறு மனிதர்களுக்குச் சிறந்த சட்டத்தை அருளிய பிறகு அமைதியான பெரிய மிருகங்களிடம் நீங்கள் ஒன்றாகக்கூடி ஒரே இனம் போல் ஒரே இடத்தில் நல்ல நீரினைக் குடித்து அன்புடன் வாழுங்கள் என்றும், சீவசெந்துகளுக்கும், பட்சி பறவைகளுக்கும், ஊர்வனங்களுக்கும், நீங்களும் ஓர் இனம் போன்று வாழ்ந்து வாருங்கள் என்றும் சட்டம் இட்டார்.
.
.
அகிலம்
-------------
பாருகத்தில் நீங்கள் பசுமையாய் வாழுமென்றார்
தேவ தெய்வார்க்கும் தேவ ஸ்திரிமார்க்கும்
மூவர் முனிவருக்கும் முக்கோடித் தேவருக்கும்
எல்லோர்க்கும் நன்றாய் இயல்பாகச் சட்டமிட்டு
.
விளக்கம்
----------------
பிறகு இந்தப் பெரிய யுகத்தில் நீங்கள் செழிப்புடன் வாழுங்கள் என்று எல்லாவற்றுக்கும் ஆசி அருளினார். தேவர்களுக்கும், தெய்வப் பெண்டிருக்கும், மூவர்களுக்கும், முனிவர்களுக்கும் முக்கோடி தேவர்களுக்கும் இப்படியாக முறையான சட்டம் இட்டார்.
.
.
அகிலம்
--------------
வல்லோர்க ளான வைகுண்ட மாமணியும்
செங்கோ லுமேந்தி சிங்காசன மிருந்து
மங்காத தேவரம்பை மாத ரிருபுறமும்
சிங்கார மாகத் தேன்போல் மரைவீச
சான்றோர்க ளேவல் தமதுள் பணிமாறக்
கட்டியங்கள் கூறி கவரி மிகவீசக்
கெட்டியாய்ச் சான்றோர் கிருபை யுடன்மகிழ்ந்து
.
விளக்கம்
-----------------
மிகுந்த வல்லமை உடையவரான வைகுண்டமாமணி செங்கோலை ஏந்தி கொண்டு சிங்காசனத்தில் அமர்ந்திருக்க, ஒளி மங்காத தெய்வப் பெண்டிர்கள் அவருடைய இருபுறமும் தேன்போன்று இனிமையாக நின்று வெஞ்சாமரை வீசினர். சான்றோர்கள் தமது மனம் மகிழ்ந்து நித்தம் ஒரு பணிவிடையை மாற்றிமாற்றிச் செய்தும், வணக்கங்கள் கூறிக் கவரி வீசியும், எல்லாருடனும் அன்புடன் கூட்டமாக வாழ்ந்து மகிழ்ந்து இருந்தனர்.
.
.
தொடரும்.... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩