D Muthu Prakash, Kanchipuram 💐
ShareChat
click to see wallet page
@d_muthuprakash
d_muthuprakash
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 13.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== நன்றுகாண் மாயவர்க்கு நாலுரண்டோ ராம்பிறவி பிறக்கத் தவசு புரியப்போய்க் கீழுலகில் உறக்க மெய்ஞ்ஞான ஒளியிருக்கி றாரெனவே தேவமுனி சொல்ல சிவனா ரகமகிழ்ந்து கோவுகத்தி லுள்ள குருவசிஷ்டர் தங்களையும் தெய்வலோ கத்திலுள்ள தேவரை யும்வருத்தி வைந்தலோ கத்திலுள்ள வாய்த்ததர்மி தங்களையும் கிணநாதர் கிம்புருடர் கிங்கிலியரை யும்வருத்தி இணையாக மேலோகத்(து) எல்லோரை யும்வருத்தி சத்தி மறையும் சாஸ்திரத்தை யும்வருத்தி அத்தி முகவனையும் ஆனவ கும்பனையும் சங்கமறையை வருத்தித் தான்கேட்பா ரீசுரரும் இங்குண்டோ மாலும் எங்கிருப்ப துண்டனவே எல்லோ ருங்கூடி இதமித்துச் சொல்லுமென்றார் அல்லோ ருங்கேட்க அரன்சொன்னா ரம்மானை . விளக்கம் =========== குருமுனிவர் சிவபெருமானைப் பார்த்துச் சொல்கிறார். நல்லதுதான் மகாதேவா ! ஆனால், மாயனாகிய மகாவிஷ்ணு, பூலோகத்தில் தவம்புரியப்போய், ஒடுக்க நித்திரையில் உறைந்து, மெய்ஞ்ஞான ஒளியாக, அதாவது, மகாவிஷ்ணுவுக்கே இயல்பான சத்திய அறிவொளியாக இருக்கிறாரே என்று குருமுனி கூறியதும், சிவபெருமான் அகமகிழ்ந்தார். . அந்த மகிழ்ச்சியோடு, கோவுகத்திலுள்ள வசிஷ்டரையும், தெய்வலோகத்திலுள்ள தேவர்களையும், வைகுண்டலோகத்திலுள்ள தர்மிகளையும், கிணநாதர், கிம்புருடர், கிங்கலியர்களையும் சக்தி, வேதங்கள், சாஸ்திரங்கள் ஆகியவையோடு அத்திமுகவனையும் ஆனவகும்பனையும் கைலையங்கிரிக்கு சிவபெருமான் வரவழைத்தார். . எல்லாரையம் கூட்டிவைத்து ஏகசங்கமாக அமைத்த சிவபெருமான், அந்த சங்கத்தாரைப் பார்த்து, மகாவிஷ்ணு எங்கே இருக்கிறார் என்பதை இங்கே கூடியிருப்போர் எல்லாரும் சேர்ந்து அலசி ஆராய்ந்து, ஒரு நல்ல செய்தியாக எனக்குத் தெரிவியுங்கள் என்றார். . . அகிலம் ========= வேழமொத்த தேவரெல்லாம் மேகவண்ண ரிங்கேயில்லை கீழுலகில் மாண்டு கிடக்கிறா ரென்றுசொல்லி ஒன்பதாம் பிறவி ஒடுங்கி யவர்பிறக்க இன்பமறக் கீழுலகில் இறந்துகிடக்கி றாரெனவே எல்லோருஞ் சொல்ல ஈசுரரும் நல்லதென்று அல்லோருங் கேட்க அவரேது பின்சொல்லுவார் முன்னே பிறந்த முண்டசுரன் தன்னுயிரைத் தன்னோ டாறுபிறவி தான்செய்தோ மசுரரென ஆறு பிறவியிலும் அசுரரென வேபிறந்து வீறுடனே நம்மை விரும்பவும்நாம் கண்டிலமே இப்போ தவன்தனக்கு ஏழாம் பிறவியிது அப்போதும் நம்மை அவன்நினை யாதிருந்தால் இல்லை மேற்பிறவி இறப்புமுடி வாகுமல்லோ நல்ல பிறவியதாய் நமைத்துதிக்கப் புத்தியதும் அழகு சவுந்தரியம் அலங்கார மெய்யறிவும் குழவு மிகப்புத்தி கூர்மையலங் காரமுடன் மேலு மாலாறு முடத்த யுகங்களுக்கு நாலுமுழ மொன்றுதலை நல்லோ ரசுரர்களை கொன்றுதா னவ்வசுரர் கூறுதற்குச் சொல்லுமுண்டே இன்னமிந்த மாயன் எடுத்த வுருப்போலே படைத்துநாம் வைத்தால் பகருமொழி வேறில்லையே நடத்துவ தேதெனவே நவிலுமென்றார் தேவர்களை. . விளக்கம் ========== சிவபெருமானின் அந்தக் கேள்விக்கு செவிமடுத்த எல்லாத் தேவர்களும் சேர்ந்து சிவபெருமானிடம் சொல்கிறார்கள். ஈசனே ! மேகவண்ணராகிய மகாவிஷ்ணு இங்கே இல்லை. அவர் பூலோகத்தில் இறந்து கிடக்கிறார். . அதாவது, அவர் எடுத்த ஒன்பதாம் அவதாரமாகிய கிருஷ்ண அவதாரத்தை முடிப்பதற்காக அவருடைய அந்தப் பொய்யுடலை சந்தோசமாகப் பூலோகத்திலே உகுத்து வைத்து விட்டார். என்று சங்கத்தார் அனைவரும் ஒருமித்த கருத்தாக சிவபெருமானிடம் ஒப்புவித்தனர். . சங்கத்தார் அனைவரும் அவ்வண்ணமாகச் சொல்லவே, அதை ஏற்றுக் கொண்ட சிவபெருமான் அந்த தேவசங்கத்தாரிடம் மீண்டும் சொல்லுகிறார். தேவர்களே, முதலில் பிறந்த குறோணியாகிய அரக்கனின் உயிரை இதுவரை ஆறு பிறவியிலும் அசுரனாகவே படைத்து விட்டோம். . அந்த ஆறு பிறவியிலும் அசுரனாகவே பிறந்த அந்த அரக்கன் எந்த பிறவியிலும் நம்மை நேசிப்பவனாகவே இல்லை. அத்துணை வீறாப்புடைய அந்தப் பாவிக்கு இப்போது நாம் கொடுக்கப்போவது ஏழாவது பிறப்பு. இந்தப்பிறவியிலும் நம்மை இவ்வரக்கன் மதிக்க மறுத்தாலோ, மறந்தாலோ இன்னுமோர் பிறவி இவனுக்கு இல்லை. ஏனென்றால் இவனுடைய முடிவு காலம் இப்பிறப்போடு நிறைவடைந்து விட்டது. . ஆகவே, இப்பிறவியை இந்த அரக்கனுக்கு நல்லதாகவே அமைக்க வேண்டும். நம்மை மதிக்க மனமும், துதிக்கப் புத்தியும் மகிழ அழகும், அதற்கேற்ற அலங்காரமும், உள்ளறிவும், மிகுந்த ஞானமும், புத்திக் கூர்மையும், உள்ளவனாகப் பிறவி செய்ய வேண்டும். . நிகழ்ந்து நிறைவேறிய ஆறு யுகங்களிலும், மகாவிஷ்ணு ஒரு தலையும், நான்கு முழம் உயரமுங்கொண்ட அவதார உருவில் தோன்றி, ஞாயநெறியுடைய நீதிமானாக நின்று தான் அந்த ஆறுயுகத்து அரக்கர்களையும் அழித்துள்ளார். ஆகவே, அந்த அரக்கர்கள் மகாவிஷ்ணுவைப் பழித்துப் பேசவே வழியில்லை. . எனவே, இனிப் பிறவி செய்யப்போகும் குறோணியின் ஆறாவது துண்டத்தை, முடிந்த யுகங்களிலெல்லாம் மகாவிஷ்ணு அவதரித்த உருவ அமைப்பிலேயே பிறவிசெய்தால், நம்மை அந்த அரக்கன் எந்த வகையிலும் பழி சொல்வதற்கு வழியில்லாமலாகிவிடும் என்று நான் கருதுகிறேன். இதுபற்றி நீங்களெல்லாம் உங்களுடைய அபிப்பிராயங்களையும் சொல்லுங்கள் என்று தேவசங்கத்தாரிடம் சிவபெருமான் தெரிவித்தார். . . தொடரும்….. அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா வாழ்பொன்னம் மக்களே நீங்க ளெல்லாம் சென்று பதியிற் முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் ! அய்யா 13.12.2025 விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ ! 19.12.2020 DMuthu Prakash அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா வாழ்பொன்னம் மக்களே நீங்க ளெல்லாம் சென்று பதியிற் முக்கிய மான தர்ம யுகநில மதிலே தன்னால் கக்கிய பொன்கள் சொர்ணம் கைமனங் குளிர அன்னம் பொக்கிஷம் நிறைய வைத்துப் புகழவுண் டினிதாய் வாழ்வீர் ! அய்யா 13.12.2025 விளக்கின் ஒளி போல் வீரத்தனமாய் இருங்கோ ! 19.12.2020 DMuthu Prakash - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு தொடர்ச்சி- நாள் 12.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== சோழனுட னெதிர்த்துச் சோரவந்த மாற்றானை வேழமுடி மன்னர் வெற்றிகொண் டாண்டிருந்தார் வெட்டாத படையை வெட்டி விருதுபெற்று அட்டாளத் தேசம் அடக்கியர சாண்டிருந்தார் . விளக்கம் ========== சோழமன்னனுக்கு எதிராக அடுத்த நாட்டு மன்னர்கள் சூது செய்தாலோ, படையெடுத்து வந்தாலோ, அவர்களை எதிர்த்து போரிட்டு வெற்றிபெறும் இவர்கள், யானைச் சின்னத்தை மகுடத்தில் பதித்து அழிக்க முடியாத படைகளைப் கூட அழத்து வெற்றி விருதுகளைப் பெற்று, வீரத்தனமாக ஆட்சிபுரிந்தனர். . . அகிலம் ========= துவாபரயுகத்தின் இறுதிகால சம்பவம் ========================================= கலியன் பிறப்பு =============== இப்படியே சான்றோர் இராச்சியத்தை யாண்டிருக்க அப்படியே சீமை அவர்க்குள்ளே யாக்கிவைத்துத் தர்மமுடன் பூமி தானாண் டிருக்கையிலே வர்மம் வந்தஞாயம் வகுக்கக்கே ளொண்ணுதலே சீரங்க மானதிலே சீரங்க நாதருந்தான் பாரெங்கு மெய்க்கப் பள்ளிகொண் டிருக்கையிலே நாட்டுக்குக் கேடு நாட்பிடித்த செய்திதன்னை கூட்டுக் கிளியே கூர்மையுடனே கேளு முன்னே குறோணி முடிந்ததுண்ட மாறதிலே அன்னேகே ளஞ்சுதுண்டம் அவனி தனிலேபிறந்து ஆதி தனைநினைத்து ஆளாம லவ்வுயிர்கள் நீதிகெட்ட மோச நீசனைப்போல் தானாகி முப்பிறவி யோடாறும் முதலோனைப் போற்றாமல் அப்பிறவி யாறும் அழித்ததின்மே லாயிழையே . விளக்கம் ========== சான்றோர்கள், செப்பவொண்ணாச் சிறப்புகளோடு, சோழன் கொடுத்த பகுதியைத் தமக்குள்ளாக்கிவைத்து தர்ம நியதிகளுக்கு தப்பரவில்லாமல் அப்பகுதியை ஆண்டுகொண்டிருந்தார்கள். அப்போது மகாவிஷ்ணு, உலகமே வியக்கத்தக்க நிலையில் ஸ்ரீரங்க மாபதியில் அமர்ந்து அருளாட்சி புரிந்துகொண்டிருந்தார். இந்தக் காலகட்டத்தில்தான் கலியுகம் பிறந்தது. அதன் காரணமாக உலகுக்குக் கேடு ஏற்பட்டது என்ற செய்தியை மகாவிஷ்ணு தன் இணையாளாகிய அன்னை மகாலட்சுமிக்குச் சொல்லும் பாங்கினை அவர்தம் மக்களாகிய நமக்கு அரிகோபால சீசரின் மூலமாக அகிலத்திரட்டு அம்மானையில் அருளுகிறார் அதையும் அறிவோமாக. . பிரபஞச்சத்தின் தொடக்க காலத்தில் தீவினைகளின் முதல்வனாகத் தோன்றிய குறோணி என்னும் கொடியவனிடம் குடிகொண்டிருந்த காமம், குரோதம், லோபம், மோகதம், மதம், மாச்சரியம் எனப்படும் உட்பகைகள் ஆறையும் தனித்தனி கூறுகளாக்கும் விதத்தில் பகிர்ந்து அவனை ஆறு கூறுகளாக வகுத்துக் கொல்லப்பட்டது. . அவற்றில் ஒரு பகுதியை குண்டோமசாலியாகவும், இரண்டாவது பகுதியை தில்லைமல்லாலன், மல்லோசி வாகனனாகவும், மூன்றாவது பகுதியை சூரபத்மன், சிங்கமுக சூரனாகவும் மீண்டும் இரணியனாகவும், நான்காவது பகுதியை இராவணனாகவும், ஐந்தாவது பகுதியைத் துரியோதனாதிகளாகவும் பிறப்பிக்கப்பட்டனர். . இப்படி முதற் பிறவியாகிய குறோணியோடு ஆறு முறை அவன் பிறந்தும், அவனுடைய எந்தப் பிறவியிலும், இறைவனை முதன்மையாக நினைத்து வாழாமல் உலகை ஆளாமல் நீதிநெறி தவறிய நீசனாகவே வாழ்ந்து விட்டான். அத்தகு குணமுடைய குறோணியின் உடலிலுள்ள ஆறு கூறுகளில் இன்னும் ஒன்று இதுவரை பிறவி செய்யப்படாமல் இருந்து கொண்டிருக்கிறது. . அகிலம் ======== ஈசனிடம் கலியனைப் பிறவி செய்ய குருமுனி முறையிடுதல். =================================================================== குருமுனிவ னான கூர்மையுள்ள மாமுனிவன் அருமுனிவ னான ஆதிமுனி யைநோக்கி சிவனெனவே போற்றிச் சொல்லுவான் மாமுனிவன் தவமே தவப்பொருளே தாண்டவசங் காரவனே . விளக்கம் ========== அந்த ஆறாவது கூறைப் பிறவி செய்வதற்கான காலம் கனியவே, புத்திக் கூர்மையில் மெத்தப் பெருமையுள்ள குருமுனிவர், மேலோனை நாடி மேருமலை சென்று அந்த ஆதியைப் போற்றி அரனே என வணங்கி, தன் சிந்தையில் உதித்த கருத்தை சிவபெருமானிடம் சொல்கிறார். . விருத்தம். =========== முன்னே பிறந்த குறோணிதனை மூவிரண் டாக வுடல்பிளந்து தன்னே வுயிரோ டஞ்சுசெய்து சுவாமி யுனைநினை யாத்ததினால் வன்னத் திருமால் கொலையடக்கி வந்தார் சடல மிழந்துகுண்டம் இன்னம் பிறப்பொன் றுண்டல்லவோ இறந்த குறோணி யவன்தனக்கே . விளக்கம் =========== மகாதேவா ! தீவினையாக முதலில் பிறந்த குறோணியை அழித்ததினால் உண்டான ஆறு கூறுகளில், இதுநாள் வரை ஐந்து கூறுகளைப் பூலோகத்தில் பிறப்பித்தும், அவன் இறைவனாகிய உங்களைப் பற்றி உணராத காரணத்தால் அவனை அழிப்பதற்காக அவ்வப்போது பூவுலகில் அவதரித்த மகாவிஷ்ணு அம்பின் குறையகற்றி, அதாவது வேடனிட்ட அம்பின் மூலம் தன் கிருஷ்ண அவதார சரீரமாகிய உபாயமாய உடலை பருவதாமலையில் உகுத்து வைத்துவிட்டு பூலோக வைகுண்டமெனப் போற்றப்படும் ஸ்ரீரங்கமாபதியில் அமர்ந்துள்ளார். ஆனால், அன்று இறந்த குறோணிக்கு இன்னும் ஒரு பிறவி உண்டல்லவா ? . . அகிலம் ========= வாசமுள்ள நேசா மற்றொப்பில் லாதவனே ஈசனே நானுமொன்று இயம்புகிறேன் கேளுமையா குறோணி யவனுடலைக் கூர்மையுட னேபிளந்து சுறோணித மாயன் தொல்புவியில் விட்டெறிய அஞ்சுதர முயிரு அவனிதனி லேபிறந்து பிஞ்சுமதி சூடும் பிஞ்ஞகனைப் போற்றாமல் மாயனையு மெண்ணாமல் மதமா யிருந்ததினால் ஆயனந்தச் சூரரையும் அழித்தார்கா ணீசுரரே முச்சூர னோடாறு யுகமு முயிரழித்து அச்சூரக் குடும்பம் அறுத்தந்த மாயவரும் கொண்டிருந்த பொய்ச்சடலக் கூட்டை மிகக்களைந்து ஆண்டிருந்த குண்டம் அவரடைந்தா ரம்மானை . விளக்கம் ========== தவமே ! தவத்திற்கெல்லாம் கருவாகிய காரணப்பொருளே ! உலக நாடகமேடையில் ஒப்பரிய உன் நடிப்பெனும் நடனத்தால், நாசகாரர்களை நசுக்குகின்ற நாயகா ! அன்பை இருப்பிடமாகக் கொண்ட அரனே ! எவரொருவரோடும் ஒப்பிட்டுரைக்க முடியாத ஈசனே ! அடியேன் தங்களிடம் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பணம் செய்யப்போகிறேன். அதற்குத் தாங்கள் செவிமடுக்க வேண்டுமய்யா. . குறோணியாகிய கொடிய அரக்கனின் உடலை, உலகத்திற்கே உதிரமாக விளங்கும் மகாவிஷ்ணு, தன் புத்தி கூர்மையால் ஆறு கூறுகளாகப் பிளந்து அன்றைய பூமியில் விட்டெறிந்தார். அதன்பிறகு அந்தக் குறோணியின் உயிரை ஐந்துமுறை இந்தப் பூமியில் பிறவிசெய்யப்பட்டது. . ஆயிலும் அந்த அரக்கன், இளம் பிறையைத் திருமுடியில் சூடுகின்ற ஈசனாகிய தங்களையோ, மாயைகளுக்கெல்லாம் மாயையாகிய மகாவிஷ்ணுவையோ, சிறிதும் மதிக்காமல் அகங்காரமாக இருந்ததினால், மகாவிஷ்ணு அவதாரமெடுத்து வந்து அந்த அசுரர்களை அழித்தார். . முதன் முதலாகத் தோன்றிய குறோணியைக் கொன்றதோடு இதுகாலம் வரை ஆறு யுகத்தில் அந்த அரக்கனையும் அவனுடைய குடும்பத்தையும் அழித்த மாயனாகிய மகாவிஷ்ணு, தம்முடைய அவதார கைங்கரியங்களுக்காக அவர் பயன்படுத்திய அந்தப் பொய்யுடலைப் பூமியிலே கழற்றி வைத்துவிட்டு அவர் அருளாட்சி புரிந்து கொண்டிருந்த ஸ்ரீரங்கமாபதியில் உறைந்துவிட்டார். அகிலம் ========= முச்சூரன் துண்டம் ஒன்றுண்டு ஈசுரரே அச்சூரன் பிறவி ஆறொன் றீரரையாய் ஆறாம் யுகத்தில் அமையுமென்று மாமுனியும் வீறாக ஈசுரரை விண்ணப்பஞ் செய்துநின்றான் நல்லதுதா னென்று நாட்டமுற்று ஈசுரரும் வல்லவனே மாமுனியே மாயன்வர வேண்டாமோ என்றுநல்ல ஈசர் இயம்பமுனி யேதுசொல்வான் . விளக்கம் ========== ஆனால், அந்தக் குறோணியின் உடலிலுள்ள ஆறில் ஒரு கூறு இன்னும் எஞ்சியிருக்கிறது. அந்தக் குறோணிக்கு மொத்தம் ஏழு பிறப்பு உள்ளன. இதுவரை ஆறு பிறப்பு பிறந்துவிட்டதால் இன்னும் ஒரு பிறப்பு அவன் பிறக்கவேண்டியுள்ளது. ஆகவே, அந்த அரக்கனை அவன் தோன்றிய முதல்யுகம் நீங்கலாகவுள்ள ஆறாவது யுகத்தில் பிறவிசெய்யுங்கள் சிவபெருமானே என்று குருமுனிவர் பிடிவாதமாக முறையிட்டார். . குருமுனிவரின் இந்த வேண்டுகோளை விருப்பமுடன் ஏற்றுக்கொண்ட சிவபெருமான், குருமுனிவரைப் பார்த்து, மாமுனிவரே, உம்முடைய விண்ணப்பம் நியாயமானதுதான். ஆனால் அதைச் செயல்படுத்த வேண்டுமானால் மகாவிஷ்ணுவும் வேண்டும். ஆகவே, அவர் இங்கே வரும் நாள் வரை காத்திருப்போமா? என்று குருமுனிவரிடம் சிவபெருமான் கேட்டார். . . தொடரும்….. அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவசிவசிவா அரகர அரகரா மாதவட்குத்தானுரைத்தக் காண்டந்தன்னை வையகத்துமனுவோர்களறியமாயன் தாதணியுந்தாமரையூர்ப்பதியில் மேவித் தழைத்திருக்கும் சான்றோரில் தர்மவாளன் நாதனருள்மறவாத இராமகிருஷ்ண நாடனக மகிழ்ந்துபெறநலமாய்வந்த சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச் வாறே செப்பெனவேநாதனுரைதொகுத்த அய்யா 11.12.2020 ுங்கோ ! விளக்கின் போல் வீரத்தனமாய் ஒளி அய்யா சிவசிவசிவசிவா அரகர அரகரா மாதவட்குத்தானுரைத்தக் காண்டந்தன்னை வையகத்துமனுவோர்களறியமாயன் தாதணியுந்தாமரையூர்ப்பதியில் மேவித் தழைத்திருக்கும் சான்றோரில் தர்மவாளன் நாதனருள்மறவாத இராமகிருஷ்ண நாடனக மகிழ்ந்துபெறநலமாய்வந்த சீதனரி கோபாலன் மனதுள் ளோதிச் வாறே செப்பெனவேநாதனுரைதொகுத்த அய்யா 11.12.2020 ுங்கோ ! விளக்கின் போல் வீரத்தனமாய் ஒளி - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை நான்காம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 11.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் =========== தண்டமிழுங் கன்னி சான்றோர்க ளானோர்க்குக் கோட்டையு மிட்டுக் குமாரரையும் பெண்ணதையும் தாட்டிமையாய்ச் சான்றோர்க்குத் தரந்தரமே மாளிகையும் வைத்துக் கொடுத்தாள் வாழ்ந்திருந்தார் சான்றோர்கள் . விளக்கம் ========== அன்னை பாத்திரகாளியோ, அவர்கள் ஏழு தம்பதிகளுக்கும் இனிமையுடன் வாழும்படி தனித்தனியாகக் கோட்டைச்சுவர் கொண்ட மாளிகைகளை அமைத்துக்கொடுத்தாள். அதன்படியே சான்றோர்கள் சந்தோசமாக வாழ்ந்திருந்தார்கள். . . அகிலம் ========= பாலருக்குப் பாலர் பிறப்பு ============================ மெய்த்துப்புவி கொண்டாட மெல்லியர்கள் தங்களுக்கு வயிற்றில் கெற்பமாகி மதலைபெற்றா ரம்மானை நெய்த்தெளிய கன்னி நேரிழைமா ரெல்லோரும் இப்படியே கன்னி எல்லோரும் நன்றாக அப்படியே மதலைபெற்று அகமகிழ்ந்தா ரம்மானை பாலருக்குப் பாலர் பரிவாய் மிகவளர சீலமுள்ள வித்தை சிறக்க அவர்வருத்தி எமத்திறைவ ராக எங்கும் புகழ்ந்திடவே சமர்த்த ரெனஅவர்கள் தலையெடுத்தா ரம்மானை . விளக்கம் ========== மேதினியோர் மெச்சுமளவில் மென்மையாகவும், தன்மையாகவும் தம் கணவர்களோடு வாழ்ந்த அந்த மெல்லியர்களெல்லாம் கர்ப்பமுற்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார்கள். பிறந்த தம் பாலர்களைச் சிறப்பாக வளர்த்ததோடு, அவர்களுக்கு உயர்வான வித்தைகளையும் கற்றுக் கொடுத்தார். பாருலகோர் இந்தப் பாலகர்களைப் பெறுவதற்கரிய பேறு பெற்ற பிள்ளைகளென்று பாராட்டுமளவில் சமர்த்தர்களாக வளர்ந்தார்கள். . . அகிலம் ========= சான்றோர் வாழ்க்கையும் வளமும் =================================== முத்து வியாபாரம் முதல்வியா பாரமுதல் பத்தரை மாற்றுப் பசும்பொன்வியா பாரமுடன் மாணிக்க வியாபாரம் வியிரப்பொன் வியாபாரம் ஆணிப்பொன் வியாபாரம் அழகுகச்சை வியாபாரம் கப்பல் வியாபாரம் கறிமிளகு வியாபாரம் ஒப்பமுள்ள வியாபாரம் ஒக்கமிகச் செய்தனராம் தாலம தேறித் தைரியப் பால்வாங்கி மேலுள்ள சான்றோர் மிகுதியா யாண்டிருந்தார் நெய்த்தொழிலும் வில்தொழிலும் நெறடுவிதத் தொழிலும் மெய்த்தொழில்கள் கற்று மேலோ ரெனவளர்ந்தார் . விளக்கம் ========== சான்றோர்களின் குடும்பம் நாளுக்கு நாள் விரிவடைந்து கொண்டே இருந்தது. எனவே, தம் வாழ்க்கை முறையை வளமாக்குவதற்காக வியாபாரங்களை நாடிய இவர்கள், தம் அடிப்படை வியாபாரமாக முத்து வியாபாரத்தைத் தேர்ந்தெடுத்தனர். . பிரதான தொழிலாக முத்து வியாபாரத்தையே செய்து கொண்டிருந்த சான்றோர்கள், காலப்போக்கில் முத்து வியாபாரத்தோடு சொக்க தங்கம், மாணிக்கம், மரகதம், வைரம், மற்றும் விலை உயர்ந்த ஆடைகள், மளிகைப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள் ஆகியவற்றையும் வியாபாரம் செய்தனர். நாளடைவில் கப்பல் மூலமாக இப்பொருட்களை ஏற்றுமதி, இறக்குமதி செய்யுமளவில் உயர்ந்தனர். . கடல் கடந்து வியாபாரம் செய்தபோதிலும், பனைமரத்தில் ஏறி அதிலுள்ள பதனீரைப் பக்குவமாக எடுத்து பருகி இன்புற்றிருந்த சான்றோர்கள், நெசவுத் தொழிலிலும், தங்க நகைகள் செய்யும் தொழிலிலும் வித்தகர்களாக விளங்கியதோடு, மல்யுத்தம், வில்யுத்தம் போன்றவற்றிலும் வல்லுநர்களாக இருந்தனர். . . அகிலம் ======== சான்றோரைச் சோழமன்னன் சிறப்பித்தல். =========================================== சோழ னதையறிந்து தெய்வச்சான் றோர்களுக்கு வேழம்பல கொடுத்து மிகுகற்பமுங் கொடுத்து நல்லமன்ன ரென்று நாடி மகிழ்ந்திருந்தார் செல்லமன்ன ரான தெய்வச்சான் றோர்களுக்கு அடிக்கல் லெழுதி ஆயிரம் பொன்கொடுத்து முடிக்கு முடிச்சோழன் முத்துமுடியுங் கொடுத்து வீர விருதுகளும் வேழம் பரிகொடுத்து பாரமுள்ள சீமைதனில் பங்கு மிகக்கொடுத்து சோழன் முடியும் துலங்க மிகக்கொடுத்து ஆழமுள்ள சான்றோர் அரசாண்டா ரம்மானை . விளக்கம் ========== சான்றோர்களின் வீரதீரச் செயல்களையும், வித்தியா தத்துவங்களையும், வியாபாரத் திறமைகளையும், நேர்மை குன்றாத நிலைப்பாடுகளையும் அறிந்த சோழநாட்டு மன்னன், சான்றோர்களுக்குத் தன்னுடைய சோழநாட்டில் ஒரு பகுதியை பிரித்துக் கொடுத்து, அவர்களுக்கு மகுடம் சூட்டி, யானைப்படை, குதிரைப்படை, காலாள்படை ஆகியவற்றோடு தேவையான செல்வத்தையம் கொடுத்து, கொடுத்ததற்கான காரண காரியங்களையெல்லாம் கல்லிலே எழுதி தன்னுடைய மாளிகையில் பதித்து வைத்தார். இவற்றையெல்லாம் சோழ மன்னனிடம் பரிசாகப் பெற்ற சான்றோர்கள் சோழமன்னனின் விசுவாசிகளாக தம்முடைய நாட்டை ஆட்சி புரிந்து கொண்டிருந்தார்கள். . . தொடரும்….. அய்யா உண்டு. #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008}
Ayya Vaikundar - 11/12/2022 07.53 pm 11/12/2022 07.53 pm - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== நாளை முகூர்த்தமென்று நாற்றிசையுந் தானறிய கோழையில்லா மன்னர் குலதெய்வச் சான்றோர்க்கு முகூர்த்தமென்று சாற்றி மூவுலகுந் தானறிய பகுத்துவமாய் நல்ல பந்தலிட்டா ரம்மானை வயிரக்கால் நாட்டி வயிர வளைகளிட்டுத் துயிரமுள்ள தங்கத் தூண்கள் மிகநாட்டி முத்து நிரைத்து முதுபவள வன்னியிட்டுக் கொத்துச் சரப்பளியைக் கோர்மாலையாய்த் தூக்கி மேற்கட்டி கட்டி மேடைபொன் னாலேயிட்டு காற்கட்டி பட்டுக் கனமா யலங்கரித்து வாழை கரும்பு வகைவகையாய் நாட்டிமிக நாளை மணமென்று நாட்டுக்குப் பாக்குவைத்து . விளக்கம் ========== நிச்சயிக்கப்பட்ட திருமணத் தேதியை நாலாப் புறமும் தெரிவிக்கப்பட்டது. பெருமைக்குரிய மன்னர்களான தெய்வகுல சான்றோர்க்கு நடைபெறயிருக்கும் திருமணமாதலால் அதை மூவுலகத்தாருக்கும் முறைப்படி அறிவித்தனர். மணமகன்கள், மணமகள்கள் இல்லங்களில் தேவைக்கேற்ப அழகுமிகு பந்தல்கள் அமைக்கப்பட்டன. . அந்தப் பந்தலுக்காகப் பயன்படுத்தப்பட்ட தூண்களும், மேற்பரப்புகளும் வைரம் பாய்ந்து வளர்ந்து முற்றிய உயர்தரமான மரங்களே தேர்ந்தெடுக்கப்பட்டன. அழகுமிகு அந்தப் பந்தலில் முத்துப் பதிப்பதுபோல் ஆங்காங்கே தீப விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன. கொத்துச் சரப்பணி எனப்படும் அடுக்காபரணங்களை ஆங்காங்கே தொங்கவிட்டு அலங்கரித்தனர். அவை அங்கே கட்டப்பட்டிருந்த மேறகட்டிக்கு இன்னும் அழகு சேர்த்தது. . மணமேடையில் நிறுவப்பட்டிருந்த கால்களும், மேடையும் பொன்னிறத்தால் பொதியப்பட்டிருந்தது. வகை வகையான வாழை மற்றும் கரும்புத் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட அந்தப் பந்தலில் பத்திரகாளி வளர்த்த பாலர்களுக்கும் நிருபதி ராஜனின் பெண் மக்களுக்கும் நாளை திருமணம் நடைபெறப் போகிளதென்று முந்தையநாள் வரை நாட்டு மக்களுக்கெல்லாம் வெற்றிலை பாக்கு வைத்து அழைத்தார்கள். . . அகிலம் ======== சான்றோர் திருமணம். ======================== வெடிபூ வாணம் மிகுத்தகம்பச் சக்கரமும் திடிம னுடன்மேளம் சேவித்தார் பந்தலுக்குள் வாச்சியங்க ளின்னதென்று வகைசொல்லக் கூடாது நாச்சியார் மாகாளி நாயகியுங் கொண்டாடி பாலருக் கேற்ற பணியெல்லாந் தான்பூட்டிச் சாலமுள்ள சிங்கத் தண்டிகையில் தானிருத்தி பட்டணப் பிரவேசம் பகல்மூன்று ராமூன்று இட்டமுடன் பூதம் எடுத்துமிகச் சுற்றிவந்து மண்டபத்துள் வைத்து மாபூதஞ் சூழ்ந்துநிற்க தெண்டனிட்டு மன்னர் தேசாதி சூழ்ந்துநிற்க பதினெட்டு வாத்தியமும் பட்டணமெங் குமுழங்க ததிதொம் மெனவேசில தம்புருசா ரங்கிகெம்ப பந்தமது பிடித்துப் பலபூதஞ் சூழ்ந்துநிற்க நந்தகோ பால நாரா யணர்மகிழ்ந்து மைந்தருக் கின்று மணமுண்டு என்றுசொல்லி வைந்தர்பல தேவர்களை வாருமென வேயழைத்துப் பாலருட முகூர்த்தம் பார்க்கப்போ மென்றுசொல்லி சீலமுட னனுப்பி ஸ்ரீரங்க மேயிருந்தார் . விளக்கம் ========== திருமணத் திருநாளை முன்னிட்டு, வெடிகள் முழங்கின. பூவாணம் பொலிவு காட்டியது. அஸ்திர வாணங்களோ அனைவரையும் மகிழ்வித்தது. அங்கே ஈரடுக்கு வாத்தியங்கள் இசைக்கப்பட்டன. இவற்றை இன்னின்ன வாத்தியங்கள்தான் இங்கே இசைக்கப்படுகிறதென்று இனம் பிரித்துச் சொல்ல முடியாத அளவில் பல்வேறு இசைகள் பந்தலுக்குள் இருப்போரை பரவசப்படுத்தியது. இன்ப மயமான இந்நாளை நினைத்து அன்னைப் பத்திரமாகாளி அகமகிழ்ந்தாள். . பத்திரமாகாளி வளர்த்த பாலர்கள் ஏழுபேருக்கும், அழகூட்டும் ஆடைகளையும், எழில் கூட்டிடும் ஆபரணங்களையும் அணிவித்து சிறப்பு மிகுந்த சிம்மாசனம் அமைந்த பல்லக்கில் அமரவைத்து, பூதகணங்கள் அந்தப் பல்லக்கை சுமந்துவர, அதைச் சுற்றிலும் பலநாட்டு மன்னர்களும் பண்பாக சான்றோர்களும் புடைசூழ ஊர்வலம் புறப்பட்டது. . மூன்று பகல்களும், மூன்று இரவுகளுமாக நடைபெற்ற இந்த பட்டணப் பிரவேசத்தில் பதினெட்டு வகையான வாத்தியங்கள் இடம்பெற்றிருந்தன. இந்த மூன்று இரவுகளையும் பகல் போலாக்குவதற்காகப் பல பூதங்கள் கையில் பந்தத்தை ஏந்தி காட்சியோ பார்ப்போரைப் பரவசத்தில் ஆழ்த்தியது. இந்த காட்சிகளையெல்லாம் திருவரங்கத்தில் இருந்துகொண்டே கண்டுகளிப்புற்ற மகாவிஷ்ணு, விண்ணவர்களையெல்லாம் அழைத்து, தம்முடைய பாலகர்களின் திருமணத்திற்கு அனுப்பி வைத்து விட்டு அகமகிழ்ச்சியோடு திருவரங்கத்தில் இருந்தார். . அகிலம் ======== தேவதே வர்புகழத் திசைவென்ற சான்றோர்க்கு மூவர்களும் வந்து உதவிசெய்தா ரம்மானை நல்ல முகூர்த்தம் நாள்பார்த்துச் சான்றோர்கள் எல்லாச் சடங்கும் இயற்றிவைத்தா ரம்மானை சடங்கு முகித்துச் சான்றோரை யொப்பமிட்டுத் தடங்கொண்ட மன்னவரைத் தண்டிகையின் மீதிருத்தி அரசர் மிகச்சூழ அணியீட்டி யாட்கள்வர விரைவாகக் காளி வித்தகலை யேறிவர அரம்பையர்க ளாடிவர அயிராவதத் தோன்வரவே வரம்பெரிய தேவர் மலர்மாரி தூவிவர ஆலத்தி யேந்தி அணியணியாய்த் தான்வரவே மூலத்தி கன்னி மோகினியாள் தன்னுடனே பூதம தாடி பிடாரியது சூழ்ந்துவர நாதம் ரெட்டையூதி நடந்தார்மாப் பிள்ளைகொண்டு விருதிற் பெரிய வீரதெய்வச் சான்றோர்கள் நிருபன் மகளை நியமித்து மாலையிட வீரியமாய் நல்ல விவாகமிட வாறாரெனப் பூரியலிற் சொல்லி பேர்கள் சிலரூத இப்படியே வாத்தியங்கள் இசைந்திசைந் தேவூதி அப்படியே நிருபன் அரசன் மகள்தனையும் மாலை மணமிட்டு வாழவந்தா ரம்மானை வாலையது வான மாகாளி வாழுகின்ற மண்டபத்துள் வந்து மகிழ்ந்திருந்தா ரம்மானை . விளக்கம் ========== தேவர்கள் முதலாய் தேவேந்திரன் வரைக்கும் புகழும்படியாக இந்தத் திருமண ஊர்வலத்தில் சேர, சோழ, பாண்டிய மன்னர்களும் வந்து கலந்து கொண்டதோடு, இந்த பட்டணப்பிரவேசம் தடையின்றி நடைபெறுவதற்கான அனைத்து உதவிகளையும் செய்தனர். . நிருபதிராஜனின் அரண்மனையை அடுத்து வந்ததுமே, மணப் பெண்களின் வீட்டிற்குள் செல்ல சுபமுகூர்த்தம் பார்த்து எல்லாச் சடங்குகளும் இதமாக நடந்தேறின. . இவ்வாறு எல்லா சடங்குகளையும் முடித்து, மீண்டும் அந்தச் சான்றோர்களைப் பல்லக்கிலே ஏற்றுவித்து, அரசர்களும், ஈட்டி ஏந்திய படைகளும் சூழ்ந்துவர அன்னைப் பத்திரகாளியோ, அவருக்கே உரித்தான வித்தாய தத்துவ வாகனத்திலேறி வந்தாள். . தெய்வகுல மாதர்ளெல்லாம் திருநடனம் ஆடிவர, அங்கே தேவேந்திரனும் வருகை தந்தார். மாவரம் பெற்ற தேவர்களெல்லாம் மலர்மாரி தூவினர். அழகுமிகு நங்கையர்களெல்லாம் ஆலத்தி ஏந்திய வண்ணம் அணிவகுத்து வந்தார்கள். அவர்களோடும் ஆதிவாசிப் பெண்களும் கனவுலகக் கன்னியர்களும், பதங்களும், காளிதேவியின் கருணைபெற்ற பிடாரிதேவியும் புடை சூழ்ந்து வந்தனர். . வெற்றி வீரர்களாக அந்தச் சான்றோர்களை மணமகளின் இல்லம் நோக்கி அழைத்துவரும் அந்த ஊர்வலத்தில் ஊதிய இரட்டைச் சங்கு நாதம் ஏகமாய் எதிரொலித்தது. நிருபதிராஜனின் பெண்மக்களை மாலையிட்டு மணமுடிக்க, மாப்பிள்ளைகள் வந்துவிட்டார்கள் என்பதை நிருபதிராஜனின் அரண்மனையிலுள்ள, பேரிகையின் மூலம் அறிவிக்கப்பட்டது. . இத்தகைய மகத்தான ஏற்பாடுகளோடு, மன்னன் நிருபதியின் பெண்மக்கள் ஏழுபேருக்கும், பத்திரகாளியின் பாதுகாப்பில் வளர்ந்த மகாவிஷ்ணுவின் பிள்ளைகளான சான்றோர்கள் ஏழுபேருக்கும் திருமணம் நடந்தேறியது. திருமணம் முடிந்ததும் தம்பதியர் பத்திரகாளியின் இருப்பிடமான புட்டாபுரத்திற்குச் சென்றார்கள். . என்றென்றும் இளமையாகவே இருந்து கொண்டிருக்கும் அன்னை பத்திரகாளியின் மண்டபத்திற்கு வந்து சேர்ந்த மணமக்கள் அங்கே இல்லற இயல்புகளோடு இன்புற்றிருந்தார்கள். . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு நிறைவு பெற்றது. தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர்
அய்யா வைகுண்டர் {1008} - D Muthu Prakash 9 November 2025 7.10 pm D Muthu Prakash 9 November 2025 7.10 pm - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== நாளிட்டு நாரதரும் நல்லமா காளியுட தாளிணையைப் போற்றித் தானுரைத்தா ரம்மானை மாகாளி யுன்றனுட மக்களேழு பேர்களுக்கும் வாகான மன்னன் வாய்த்த நிருபனுட மக்களேழு பெண்களையும் மாலைமணஞ் சூட்டுதற்கு மிக்கநா ளிட்டு மேவிவந்தேன் மெல்லியரே என்றுமுனி சொல்ல ஏற்றமா காளிசொல்வாள் நன்றுநல்ல மாமுனியே நான்வளர்த்த கண்மணிகள் தெய்வப் பிறவியல்லோ திசைவென்ற சான்றோர்கள் மெய்வரம் புள்ள மெல்லியரைச் சொல்லுமென்றாள் பியற்றிவந்த பெண்ணதுக்குப் பிறவியென்ன மாமுனியே உய்த்துவந்த பெண்ணேழின் உற்பவஞ்சொல் மாமுனியே அப்போது பெண்ணார்கள் ஆதிப் பிறவியெல்லாம் செப்புகிறோ மென்று சிவகாளிதனைத் தெண்டனிட்டு கேளாய் நீயென்று கிருபையுட னேதுரைப்பான் . விளக்கம் ========== நிருபதிராஜனிடம் ஒப்புதல் பெற்ற நாரத மாமுனிவர், அங்கிருந்து புறப்பட்டு புட்டாபுரத்திற்கு வந்து, பத்திர மாகாளியின் பாதம் பணிந்து போற்றி, அம்மா ! உன்னுடைய மக்கள் ஏழுபேருக்கும், மாண்புமிகு மன்னன் நிருபதியின் பெண்மக்கள் ஏழுபேரையும் பேசி முடித்துள்ளேன் தாயே என்றார். . அதைக் கேட்ட பத்திர மாகாளியோ, நாரதமாமுனிவரைப் பார்த்து, நல்லதை நல்லபடியே செய்கின்ற நாரதமாமுனியே ! நீ இப்போது நன்றே செய்துள்ளாய் என்றாலும், நான் வளர்த்துக் கொண்டிருக்கும் என் பிள்ளைகள் ஏழுபேரும் தெய்வப் பிறவியாயிற்றே ! சென்ற திசையெல்லாம் வெல்லுகின்ற சக்தி பெற்ற அந்த சான்றோர்களுக்காக நீ பேசி வந்துள்ள அந்தப் பெண்களின் பிறப்பின் ரகசியம் என்ன? என் மக்களோடு சேர்த்துவைக்க பெண்களின் பூர்வீகம் எத்தகையது என்று நாரதமாமுனிவரிடம் ஊடுருவி வினவினாள்... . பத்திர மாகாளியின் அந்தப் பரிவான வினாவிற்குப் பதிலுரைக்க எண்ணமுற்ற நாரதமாமுனிவர், சிவபெருமானின் உருத்திர அம்சமாகிய பத்திரமாகாளியின் பாதங்களைப் பணிந்து, தாயே ! அந்தப் பெண்மணிகள் ஏழுபேரின் முற்பிறப்பையெல்லாம் இப்போதே செப்புகிறேன் அம்மா என்று நிருபதிராஜனின் பெண்மக்களின் பிறப்பின் பெருமையைப் பத்திர மாகாளியிடம் பக்திப் பூர்வமாக எடுத்துரைக்கிறார். . அகிலம் ======== நிருபதிராஜனின் மகள்களின் பூர்வீகப் பெருமை ================================================ நாளான நாளதிலே நல்லதெய்வ லோகமதில் தெய்வேந் திரனார்க்குச் சொல்லேவல் செய்திருந்த நெய்நெடியக் கன்னி நேரிழைமா ரேழ்பேரும் வேலையின்ன தென்று விரித்துக்கேள் மாகாளி மாலையிலுங் காலையிலும் வானவர் கோன்றனக்குப் பூவெடுத் திட்டுப் பூசைபுனக் காரமிட்டுக் கோவெடுத்த ராசனுக்குக் குஞ்சமிட ஆடிநிதம் ஏவல் புரியுகின்ற இராசதெய்வக் கன்னியர்கள் நாவுலகு மெய்க்க நடந்துவரும் நாளையிலே பூவுலகு மன்னர்களைப் பூத்தான மாகவெண்ணி பாவினியக் கன்னி பஞ்சமது வேறாகிப் பூவெடுக்கக் கன்னி போகாமல் வாட்டமதாய் ஆவடுக்கங் கொண்டு அவர்க ளொருப்போலே காச்சல் குளிரெனவே கவ்வையுற்றுத் தானிருக்க மாச்சல் தனையறிந்தான் மகவானு மப்போது ஆனதால் வேதாவின் அண்டை யவனணுகி தீனம்வந்த தேதெனவே தேவியர்க்கு வேதாவே . விளக்கம் ========== அம்மா ! இப்போது நிருபதிராஜனின் மகள்களாக பிறந்திருக்கும் அந்த மங்கையர்கள் ஏழுபேரும், முன்பொரு காலத்தில் தெய்வலோகத்தைச் சேர்ந்தவர்கள். அங்கே தெய்வேந்திரனுடைய உத்திரவிற்கிணங்க, பணிவிடை புரிந்த பாவையர்கள். இந்த மாமடவார் ஏழுபேரும் ஒவ்வொரு நாள் காலையிலும் மாலையிலும் மலர் பறித்து, தெய்வேந்திரனுக்கு மலர் தூவி மனமார பூசை புனக்காரம் செய்து வந்தனர். இரவிலோ தெய்வலோகத்து அரசனாகிய அந்த தெய்வேந்திரன் நித்திரை புரிவதற்காக நாட்டியமாடும் இந்த நங்கையர்கள், சிவலோகம், வைகுண்டலோகம், சத்தியலோகம், தெய்வலோகம் ஆகிய நான்கு லோகத்தவர்களும் பாராட்டும்படியாக பணிபுரிந்து வந்தார்கள். . அப்போது இவர்கள் ஏழுபேரும் பூலோகத்தில் மனித குலத்தோரின் வாழ்க்கை முறைகளை நினைத்துப் பார்க்க நேர்ந்தது. நாமும் பூலோகத்தில் பிறந்தால் அங்குள்ள ஆண்களைத் திருமணம் செய்து, பூலோகவாசிகளாகப் பெருமையோடு வாழலாமே என்ற எண்ணம் அவர்களின் அடி மனத்தை வருடியது. . எனவே அவர்கள் ஏழுபேரும் தம்முடைய அன்றாடக் கடமைகளைச் செய்யாமல் தனக்கு காய்ச்சலும் குளிருமாக இருக்கிறது என்று பொய்க் காரணம் புகன்று பணி முடக்கம் செய்து விட்டார்கள். அன்றாடம் ஆர்வத்தோடு தம் பணிவிடைகளைப் பங்கமின்றி செய்துவந்த நங்கையர்களைக் காணாமையின் காரணத்தை அறிவதற்காகத் தெய்வேந்திரன், பிரம்மதேவனிடம் சென்று இந்த ஏழு பணிப்பெண்களுக்கும் இந்நிலை ஏற்பட என்ன காரணம் என்று வினவினார். . . அகிலம் ======== வேதா தெளிந்து விரித்துரைப்பா ரப்போது சூதான மான தோகை யேழுபேரும் பூலோக மன்னருக்குப் பிரியமுற்று மையல்கொண்டு காலோயு தென்று கவ்வையுற்ற தல்லாது வேறில்லை யென்று வேதா இதுவுரைக்க தேறியே வாசவர்கோன் தேவியெழு பேர்களையும் அப்படியே பூவுலகில் அமையுமென்றார் வேதாவை இப்படியே வந்து இவர்பிறந்தா ரென்றுமுனி சொல்லச் சிவகாளி சிரித்து மனமகிழ்ந்து நல்லதிது மாமுனியே நன்முகூர்த்தம் பார்த்துரைநீ உடனே முனியும் உகந்த முகூர்த்தமென்று திடமே நிருபனுக்குச் செய்திசொல்ல ஆளும்விட்டு . விளக்கம் ========== தெய்வேந்திரனின் இந்த கேள்விக்கு பதிலளித்த பிரம்ம தேவனோ, தெய்வேந்திரனைப் பார்த்து, தெய்வேந்திரா ! இந்த ஏழு பெண்மளிகளும் பூலோகத்தில் வாழும் ஆடவர்களோடு கூடி வாழ இச்சை கொண்டுள்ளனர். ஆகவேதான், உடல் நலம் குன்னியவர்கள் போல் பாவனை செய்கிறார்கள் என்ற விவரத்தை விளக்கினார். . பிரம்மதேவன் மூலம் உண்மையை அறிந்த தெய்வேந்திரன், அந்தப் பெண்மணிகள் பூலோகவாசிகளாகவே பிறப்பித்து விடுங்கள் என்றார். அதனம்படி அவர்கள் ஏழுபேரையும் பிரம்மதேவன் நிருபதிராஜனுக்குப் பிள்ளைகளாகப் பிறப்பித்தார் என்று பத்திர மாகாளியிடம், நாரதமாமுனிவர் எடுத்துரைத்தார். . நிருபதிராஜனின் பெண் மக்களின் பூர்வீக வாழ்க்கையைப் பற்றி நாரதமாமுனிவர் சொன்னதுமே பத்திரமாகாளியின் உள்ளம் மகிழ்ச்சியால் நிரம்பியது. உடனே நாரத மாமுனிவரிடம், மாமுனியே இது மிக நல்ல செய்தியாகவே உள்ளது. எனவே நல்ல முகூர்த்தம் பார்த்து அதற்கான ஏற்பாடுகளை உடனே செய் என்றாள். அன்னை பத்திரமாகாளியின் ஆணைப்படியே திருமணத் தேதியை நிச்சயித்து நிருபதி ராஜனுக்குச் சொல்ல நாரதர் ஆள் அனுப்பினார். . . தொடரும்… அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008}
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கொந்தளத்துடன் வந்து எங்கள் அய்யா படையுடனே OLGL கூண்ட காளாஞ்சியோடே கோட்டைசுற்றி கூடவரும் விளையாடி வருவதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா அய்யா 09.12.2025 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கொந்தளத்துடன் வந்து எங்கள் அய்யா படையுடனே OLGL கூண்ட காளாஞ்சியோடே கோட்டைசுற்றி கூடவரும் விளையாடி வருவதும் எங்கள் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா அய்யா 09.12.2025 - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== நாரத மாமுனிவர் நிருபதிராஜரைனச் சந்தித்தல் ============================================== சாற்று மொழியிசையத் தானுரைக்கு மாமுனிவன் நீதமுள்ள நல்ல நிருபதி ராசனுந்தான் பெற்ற மதலைதனைப் பெண்கேட்கப் போயினனே மாமுனிவன் கேட்க மன்ன னதிசயித்துத் தாமுனிந் தேது தானுரைப்பா னம்மானை நல்ல முனியே நானுரைக்க நீர்கேளும் செல்ல மகவு தேவிக்கு மென்றனக்கும் இல்லாம லனேகநாள் இருந்தோந் தவசாக நல்லான ஈசர் நாட்டமுட னிரங்கி ஆண்பிள்ளை யுன்றனக்கு ஆகமத்தி லில்லையென்று பெண்பிள்ளை யேழு பிறக்குமென்று சொன்னார்காண் அப்போது ஈசுரரை அடியேன் மிகப்பார்த்து இப்போது என்றனக்கு இரணமுடி வாகுகையில் கொள்ளிவைக்கப் பிள்ளை ஒன்று கொடுவுமென்றேன் தெள்ளிமை யாயீசர் சொன்ன மொழிகேளும் . விளக்கம் ========== பத்திரகாளியிடம் விடைபெற்று புறப்பட்ட நாரத மாமுனிவர், காளிதேவியின் வேண்டுகோளைக் கருத்தில் கொண்டவண்ணம் நன்னெறிகளோடு நாடாண்டுகொண்டிருக்கும் நிருபதிராஜனைச் சந்தித்து, நிருபதி மகாராஜனே ! உம்முடைய பெண் மக்கள் ஏழு பேருக்கும் திருமணம் செய்ய வேண்டாமா என்று பேச்சை தொடங்கினார். . அதைக் கேட்டு அகமகிழ்ந்த நிருபதிராஜன், நாரதமாமுனிவரைப் பார்த்து, மாமுனிவரே ! நான் இப்போது சொல்லவரும் செய்தியைக் கவனமாகக் கேளுங்கள். நீண்ட நெடுங்காலமாக எனக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஆகவே நானும் என் மனைவியும் சிவபெருமானை நோக்கிப் பல ஆண்டுகளாகத் தவமிருந்தோம். . எங்கள் இருவரின் தவத்திற்கு இரக்கமுற்ற சிவபெருமான், என் முன்னே எழுந்தருளி, நிருபதனே ! உனக்கு நிச்சயமாக ஏழு பெண் குழந்தைகள் பிறக்கும் என்று சொன்னார். அப்போது நான் சிவபெருமானின் திருவடிகளை வணங்கி சுவாமி என்றுடைய இறுதிகாலச் சடங்குகளைச் செய்வதற்காவது ஒரே ஒரு ஆண்பிள்ளையாவது அருளுமென்று வேண்டினேன். அதற்கு சிவபெருமான் தெளிவாகச் சொன்ன பதிலைச் சொல்லுகிறேன் அதையும் கேளுங்கள். . . அகிலம் ======== தெய்வச் சான்றோராய்த் திருவான மாகாளி கையதுக்குள் வாழ்ந்துன் கன்னியேழு பேர்களையும் மாலையிட் டுன்றனக்கு வருமாபத் தையெல்லாம் மேலவராய்க் காத்து மேதினியோர் தாமறிய உன்றனக்கு நல்ல உதவிமிகச் செய்வதற்கும் வந்தங் கிருப்பாரென வகுத்தாரே ஈசுரரும் ஆனதால் பெண்ணேழும் அவர்க்கேதா னல்லாது மான முனியே மற்றெவர்க்கு மாகாதே என்று நிருபதனும் ஏற்றமுனி யோடுரைக்க நன்று நன்றென்று நாரதருஞ் சம்மதித்து மன்னவனே கேளு மாகாளி தன்னிடத்தில் சொன்னபிள்ளை யேழும் சிறந்திருக்கி றாரெனவே அந்தமன்ன ரான ஆண்பிள்ளைக ளானோர்க்கு இந்த முகூர்த்தம் யான்கேட்க வந்தேனென்று சொல்லமுனி மன்னவனும் சோபித மாய்மகிழ்ந்து நல்ல முகூர்த்தம் நாளிட்டா னம்மானை . விளக்கம் ========== சிறப்புகளுக்கே சிகரமாகத் திகழும் பத்திர மாகாளியின் பாதுகாப்பில் தெய்வகுலச் சான்றோர் ஏழுபேர் வளர்வார்கள், அவர்கள் ஏழுபேரும், உன்னுடைய பெண் மக்கள் ஏழுபேரையும் திருமணம் செய்வார்கள். அத்துடன் உனக்கு எவ்விதமான ஆபத்தும் நேர்ந்துவிடாதபடி அரணாக இருந்து உலகோர் மெச்சும்படி உன்னைப் பாதுகாத்து, உனக்கு என்னென்ன உதவிகள் தேவைப்படுகின்றனவோ அவற்றையெல்லாம் அவர்கள் நிறைவேற்றி வைப்பார்கள். அவரகளைக் காலம் கைகூடும்போது உனக்கு அடையாளங் காட்டுகிறேன் என்று, அன்று எனக்கு சிவபெருமான் வாக்குரைத்தார். . அந்த கருணாகரனிட்ட கனிவான கட்டளைப்படியே எனக்கு ஏழு பெண் மக்கள் பிறந்துள்ளார்கள். ஆகவே, என்னுடைய பெண் மக்கள் ஏழுபேரும், ஈசன் வகுத்துரைத்த தெய்வகுலச் சான்றோர்கள் ஏழுபேருக்குத்தான் திருமணம் செய்து வைக்க முடியுமே தவிர, வேறு எவருக்கும் சம்மந்தம் பேசுவது ஏற்புடையதல்ல என்று நாரத மாமுனிவரிடம் நிருபதிராஜன் தெரிவித்தார். . நிருபதிராஜன் சொன்ன இந்தச் செய்தி நாரத மாமுனிவருக்குச் சர்க்கரைப் பந்திலிலே தேன் விருந்து படைப்பது போல் இருந்தது. எனவே, நிருபதிராஜனைப் பார்த்து நாரத மாமுனிவர் சொல்லுகிறார், நல்லது மன்னா ! நான் சொல்ல வந்த செய்தியைக் கேளு. அன்று உன்னிடம் சிவபெருமாள் சொன்ன வார்த்தை இன்று செயல் வடிவம் பெறப்போகிறது. பத்திரமாகாளியின் பாதுகாப்பில் சீரோடும் சிறப்போடும் வளர்ந்து வருகின்ற அந்தத் தெய்வகுலச் சான்றோர்கள் ஏழுபேருக்குமே உன்னுடைய ஏழு பெண் மக்களையும் பெண் கேட்க நான் வந்துள்ளேன் என்றார். . நாரத மாமுனிவரின் நளின உரை கேட்ட நிருபதிராஜனின் நெஞ்சம் குளிர்ந்தது. அன்று, தஞ்சம் புகுந்த தமக்கு அஞ்கேல் என்று அருள்புரிந்த நஞ்சுண்ட நாயகனை நினைத்து வஞ்சகமின்றி நெஞ்சினுள் ஒரு கணம் கொஞ்சினார். மறுகணமே அவர்களின் திருமணத்திற்கு உவகையோடு ஒப்புதல் அளித்தார். முகூர்த்தத்திற்கான நாளையும் குறித்தார். . . தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚
அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும் எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி துக்கக் ன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன் உ அய்யா 08.12.2025 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும் எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி துக்கக் ன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன் உ அய்யா 08.12.2025 - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== தேவசபையினரை வழியனுப்பி விட்டு மகாவிஷ்ணு ஸ்ரீரங்கம் ஏகுதல். ===================== வல்ல பெலமுள்ள மாடுதனி லேறியையும் வேதாவும் நல்லநெற்றி விழியுடை யாள்தனையும் மாதாவு மான வாய்த்தசர சோதியையும் தேவர்முதல் வானவரை சிட்டர்முனி வோர்களையும் மூவர்களை யுங்கயிலை ஊரேபோ மென்றனுப்பி காளிதனைப் பிள்ளைகளைக் கருத்தாய்வள நீயென்று ஆழி யடைத்த அச்சுதருந் தான்நடந்து சீரங்க மாபதியில் சென்றிருந்தா ரம்மானை . விளக்கம் ========== உடனே அந்தத் தேவசபையில் இருந்த மிகுதியான சக்தியுடைய காளை வாகனாதிபதியாகிய சிவபெருமானையும், பிரம்மதேவனையும், முக்கண் முதல்வியாகிய உமையவளையும், வித்தியாபதியாகிய கலைவாணியையும், தேவர்கள் வானவர்கள், முனிவர்கள் மற்றும் மூவுலக ஞானிகளையும் அவரவர்தம் இருப்பிடங்களுக்குச் செல்லுங்கள் என்று மகாவிஷ்ணு வழியனுப்பி வைத்தார். . அத்துடன் பத்திரகாளியைப் பார்த்து என்னுடைய பிள்ளைகளைக் கண்ணும் கருத்துமாகக் காத்து வளர்த்துக்கொள் என்று சொல்லிவட்டு கடலுக்குக் கரையாகக் காத்தருளும் மகாவிஷ்ணு அங்கிருந்து எழுந்தருளி ஸ்ரீரங்கமாபதியில் சென்றமர்ந்தார். . . அகிலம் ======== சாரங்கர் சீரங்கம் தான்வந்தா ரென்றுசொல்லி சீரங்க மெல்லாம் செழித்து மிகவாழ்ந்து பாரெங்கு மெச்சிப் பரந்துகா ணம்மானை அப்படியே அச்சுதரும் அப்பதியி லங்கிருக்க எப்படியும் சீரங்கம் இனிதழைக்கு மென்றுமிக மூவர் முதலாய் முப்பத்து முக்கோடித் தேவருங் கொண்டாடி சிந்தைமகிழ்ந் தேயிருந்தார் . விளக்கம் ========== மகாவிஷ்ணு ஸ்ரீரங்கமாபதியில் வந்து பள்ளி கொண்டதுமே, ஸ்ரீரங்கமாபதியும், அப்பதியைச் சுற்றியுள்ள ஊரும் வளம் கொளித்தது. மக்களின் வாழ்வு செழித்தது. இந்த உண்மையைப் பக்திப் பூர்வமாக உணர்ந்த மக்கள் பரவலாகப் பேசினார்கள். . நாடும் ஏடும் போற்றும் படியாக மகாவிஷ்ணு ஸ்ரீரங்கமாபதியில் இருக்கும்போது, இனி எப்படியும் இந்த நாடு செழிப்பாகிவிடும். எனவே, இங்கிருக்கும் மக்கள் இனி வளமாக வாழ்வார்கள் என்று மும்மூர்த்திகளும், முப்பத்து மூன்று கோடி தேவர்களும் சந்தோசம் அடைந்தனர். . . அகிலம் ======== ஸ்ரீரங்கத்தின் வளமை ===================== சீரங்க மான திருப்பதியின் வளமை சாரங்க ராயர் தாமுரைத்தா ரம்மானை மாரியது மூன்று வருசிக்கத் தான்பொழிந்து ஏரி பெருகி ஏற்றசெந்நெல் தான்விளைந்து படியொன்று கோட்டையொன்றாய்ப் பழுத்துவருஞ் செந்நெலது கரும்பு முத்தீனும் கசுவுங் கரைபுரளும் அரும்பு வனமும் அகில்தேக்கு மாமரமும் கோவுஞ் ஸ்ரீரங்கரெனக் கூப்பிடுங்கா ணச்சுதரை மாவுஞ் ஸ்ரீரங்கரென வந்தழைக்கு மச்சுதரை மயில்குயில் மான்கலையும் வாய்த்தஅணில் பட்சிகளும் ஒயிலாக அச்சுதரை உள்ளாக்கி யாடிவரும் அவ்வூரி லுள்ள அந்தணர்க ளெல்லோரும் கவ்வைவே றில்லாமல் கரியமால் தன்றனக்கு பூசை முறைவைத்துப் பிராமணர்கள் செய்துவர ஆசையுட னச்சுதரும் அங்கே யினிதிருந்தார் . விளக்கம் ========== ஸ்ரீரங்கம் என்று சொல்லப்படுகின்ற திருவரங்க மாபதியும் அது சார்ந்த கிராமங்களும், எவ்வண்ணமாக செழுமை பெற்றிருந்தது என்பதையும் இறைவன் இங்கே விவரித்துள்ளார். . மாதந்தோறும் மூன்று மழை முறையாகப் பொழிந்தது. இதனால் ஏரிகளும், குளங்களும் இதமாகப் பெருகியது. விவசாயம் பெருத்தது. மக்களின் தேவைக்கேற்ப மகசூல் கிடைத்தது. ஒருபடி நெல்லை விதைத்தால் ஒரு ஒரு கோட்டை நெல்லாக விளைந்தது. . கரும்பை விவசாயம் செய்தவர்கள், நவமணிகளில் ஒன்றான முத்தை விதைத்ததுப் பலனைப் பெற்றதுபோல் பரவசமடைந்தார்கள். அந்த நிலப்பரப்பில் எந்த இடத்தில் கிணறு தோண்டினாலும் நீரூற்று நிரம்பியிருந்தது. ஆகவே, அங்கே முளைத்த தாவரங்கள் யாவும் அடர்த்தியாக தழைத்து வளர்ந்தன. அங்குள்ள பசுக்களோ ம்மா... என்று அழைக்கும் தொனிகூட ஸ்ரீரங்கா ! என்று அழைப்பது போல் கேட்டது. . மயில்களும், குயில்களும். ஆண்மான்களும், பெண்மான்களும், அணில்கள் முதலான அனைத்து ஜீவசந்துக்களும் மகாவிஷ்ணுவின் மகிமையினை மனதில் நிறைத்து வைத்துக்கொண்டு மகிழ்ச்சிப் பெருக்கால் ஆடியது. அந்த ஊர் வாசிகளான அந்தணர்கள் எல்லாரும். எந்தவிதமான கவலையும் இல்லாமல் மகாவிஷ்ணுவாகிய திருவரங்க நாதனுக்கு, ஒருவர் மாறியொருவர் காலம் தவறாமல் பணிவிடை செய்து வந்தனர். எனவே, மகாவிஷ்ணு ஸ்ரீரங்கமாபதியில் மனமகிழ்ச்சியோடு பள்ளி கொண்டிருந்தார். . . அகிலம் ======== சான்றோர் பெருமை =================== பத்திரகாளி சான்றோர்களை வளர்த்த விதம் ===================== சீரங்க மாபதியில் சிறந்திருக்கு மப்போது சாரங்கர் பெற்ற சான்றோர் களின்பெருமை சொல்லுகிறா ரெங்கள் திருமால்கா ணம்மானை நல்லதுகா ணென்று நாடித் திருகேட்க அன்பான சான்றோர்க்கு ஆனமா காளியம்மை தன்பாலர் போலே தான்வளர்ந்து வித்தைகளும் வருத்திக் கொடுத்து மன்னர்மன்னர் தானாக்கி கருத்திலுறக் காளி கண்ணான மக்களுக்கு வேண்டும் பணிகளெல்லாம் விதவிதமாய்த் தானெடுத்துப் பூண்டந்த மக்களையும் பூத்தான மாய்வளர்த்தாள் . விளக்கம் ========= ஸ்ரீரங்கமாபதியில் நடைபெற்றுவந்த பக்திப் பூர்வமான பணிவிடைகளையும், அதனால் அகமகிழ்ச்சியோடு அங்கே தாம் பள்ளி கொண்டிருந்ததையும், மகாலட்சுமிதேவியிடம் சொல்லிய மகாவிஷ்ணு, அயோக வனத்தில் அமிழ்த கங்கையருகில் சப்தமாதர்களின் மணி வயிற்றின்மூலமாகப் பெற்ற தம் பாலகர்களின் பெருமையையும், தாம் சொல்லுகின்ற யுகக் காண்டச் செய்திகளையெல்லாம் கவனமாகக் கேட்டுக் கொண்டிருக்கும் மகாலட்சுமிதேவியிடம் சொல்லுகிறார். . பத்திரகாளியிடம் மகாவிஷ்ணு ஒப்படைத்த பாலர்கள் ஏழுபேரையும், தன்னுடைய பிள்ளைகளாகவே நினைத்து வளர்த்துக்கொண்டிருக்கும் பத்திரகாளி, தம் பிள்ளைகளுக்கு சகல கலைகளையும் கற்பித்து, மன்னருக்கே மன்னராகும் விதத்தில் கண்போன்று காத்து, அவர்களுக்கு வேண்டுவன யாவையும் கருத்தாகச் செய்து, வேளைக்கு வேளை விதவிதமான ஆடை அணிகலன்களை அணிவித்து அழகுபார்த்து இவர்கள் பெறுதற்கரிய செல்வங்களெனப் பேணி வளர்த்தாள். . . அகிலம் ======== தக்கன் வதை ============= மிக்கநல்ல பிள்ளை வீரரென ஆகுகையில் தக்கனென்ற சூரன் தன்பேரில் மாகாளி படைக்கு யெழுந்தருளிப் பாலரையுந் தான்கூட்டி நடைக்கு அதிகமுள்ள நாயகியும் பாலருக்குப் போர்க் கோலமிட்டுப் புட்டாபுரங் கடந்து ஆர்க்க முள்ளகாளி அலகைப் படையுடனே சான்றோரை விட்டுத் தக்கனையுந் தான்வதைத்து மூன்றோரை நெஞ்சில்வைத்து ஓங்கார மாகாளி தக்கனையுங் கொன்று சான்றோ ரவர்தமக்கு மிக்க வரிசை மிகக்கொடுத்து மாகாளி புட்டா புரத்தில் பேய்க்கணங்கள் சூழ்ந்துநிற்க கட்டாத காளி கமலத்தில் வீற்றிருந்தாள் . விளக்கம் ========== சப்த மாதர்கள் பெற்ற சான்றோர்கள் சமர்த்தர்களாய் வளர்ந்தனர். அவர்கள்,வாலிபர்களாகி, வலிமை பொருந்திய வீரர்களானதும், தக்கன் என்ற அரக்கனை அழிப்பதற்கு ஆயத்தமான பத்திரகாளி, தன் பாலகர்களுக்குப் போரக் கோலமிட்டு, பல்வேறு ஆயுதப் படைகளோடு தக்கனை அழிக்கப் புறப்பட்டாள். பத்திரகாளியின் பரிவான கட்டளைப்படி படைநடத்திச் சென்ற சான்றோர்கள், தக்கனின் படைகளையெல்லாம் அழித்தனர். பத்திரகாளியோ, மும்மூர்த்திகளையும் மனதில் நிறுத்திய மகாபலத்தோடு, தக்கனைக் கொன்றாள். தக்கன் அழிக்கப்பட்டதும், தமக்குத் துணைபுரிந்த பாலர்களுக்கு மிகச் சிறந்த வெகுமானங்களைப் பரிசளித்த பத்திரகாளி, தமக்குச் சொந்தமான புட்டாபுரத்தில் வந்து, பூத கணங்களெல்லாம் புடைசூழ்ந்து பணிவிடைபுரிய, மலர் முகாசனத்தில் மகிழ்ச்சிபொங்க அமர்ந்திருந்தாள். . . அகிலம் ======== சான்றோர் திருமணம் ===================== சான்றோருக்குப் பெண்பார்க்க நாரதரை அழைத்தல் ===================== அப்போது நல்ல ஆர்க்கமுள்ள பாலருக்கு இப்போது மாலையிட ஏழுபேர்க்கும் வேணுமென்று பார்த்து விசாரித்துப் பத்திர மாகாளி நாற்றிசையும் பார்த்து நாரத மாமுனியை அழைத்துநல்ல மாகாளி அந்தமுனி யோடுரைப்பாள் விழைத்துநல்ல புத்தி விபரமிட்டுச் சொல்லுகின்ற மாமுனியே யென்றன் மக்களேழு பேர்களுக்கும் நீமுயன்று பெண்ணேழு நிச்சயிக்க வேணுமென்றாள் நல்லதுதா னென்று நாரத மாமுனிவன் வல்லவகை யாலுன் மக்களுக்குப் பெண்ணேழு பார்த்துவரு வேனென்று பகர்ந்துமுனி போயினனே . விளக்கம் ========== பராக்கிரமசாலிகளாகப் பவனிவரும் தம் பிள்ளைகள் ஏழுபேருக்கும் உடனே திருமணம் செய்து வைக்கவேண்டுமெனச் சிந்தைகூர்ந்த பத்திரகாளி, பல்வேறு சம்மந்தங்களைப் பரிசீலனை செய்தாள். அவற்றில் எதுவுமே ஏற்புடையதாக இல்லை. எனவே, நாரதமாமுனிவரை வரவழைத்தாள். . பத்திரகாளியின் அழைப்பை ஏற்று நாரதமாமுனிவரும் வந்தார். அவரை அன்போடு வரவேற்ற பத்திரகாளி, நாரத மாமுனிவரைப் பார்த்து, முதிர்ந்த பல அறிவுரைகளை விளங்கும்படி விவரித்துச் சொல்லுகின்ற ஆற்றல்களைப் பெற்ற மாமுனியே ! உம்முடைய முயற்சியால், என்னுடைய மக்கள் ஏழு பேருக்கும் திருமணம் செய்ய வேண்டும். அதற்குரிய ஏழு பெண்களைப் பாரும் என்றார். . மாகாளியின் வேண்டுகோளை மனமகிழ்ச்சியோடு ஏற்றுக்கொண்ட நாரத மாமுனிவர், நல்லது தாயே ! எப்படியாவது உன்னுடைய மக்கள் ஏழுபேருக்கும் ஏற்புடைய ஏழு மணமகளை என் மூலமாக ஏற்பாடு செய்து வருகிறேன் என்று சொல்லிவிட்டு பத்திரகாளியிடம் விடைபெற்றுச் சென்றார். . தொடரும்… அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம் யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார் மட்டை மசையாதே தன்னளவு வந்தாலும் சட்ட பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே 07.12.2021 அய்யா அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாண மறியாமல் நன்றிகெட்ட நீசர்குலம் யெடுத்தடிப்பார் மண்கட்டி கல்லெறிவார் மட்டை மசையாதே தன்னளவு வந்தாலும் சட்ட பொய்யரோ டன்பு பொருந்தி யிருக்காதே மெய்யரோ டன்பு மேவியிரு என்மகனே 07.12.2021 அய்யா - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== பனைமரத்தின் பயன் பற்றிக் கூறுதல் ======================================= உடனே மறையோனும் ஓவியமு ள்ளதென்று தடமேலே நின்று தால மெனவளர்ந்தார் வளர்ந்த அமிர்தமதை மக்களேழு பேர்களுக்கும் பழமமிர்தக் காயோடு பலவகையுந் தானாண்டு அமிர்தமதை நீங்கள் ஆக்கிரகந் தானடக்கிக் குமிர்தமுட னீங்கள் குடித்திருங்கோ வென்றுசொல்லி உங்களுக்குப் பாலமிர்தம் ஊறுமல்லா லித்தாலம் எங்களுக்கு மித்தாலம் இசையாது கண்டீரோ பாலருக்கு இந்தவரம் பரமயுகத் தோர்கொடுத்து ஞாலமுள்ள காளி நாயகியைத் தானழைத்து . விளக்கம் ========== சிவபெருமான் கூறியவற்றைக் கூர்மையாகக் கவனித்த அந்த அந்தணனும், அவனுடைய மனைவியும் அப்போதே பனைமரமாக முளைத்து வளர்ந்தார்கள். அதாவது அந்தணன் அலகுப் பனையாகவும், அந்தணனின் மனைவி பருவப் பனையாகவும் பிறவி செய்யப்பட்டனர். ஆகவேதான், பனை மரத்தில் மட்டும் ஆண்பனை, பெண்பனை என்ற பேதம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும். . பின்னர், அங்கிருந்த வானவர்களெல்லாம் அந்த ஏழு குழந்தைகளுக்கும் ஞானபோதனையாக, பாலர்களே ! இந்த பனைமரம் தரும் அமிழ்தத்தையும், பழத்தையும், உண்பதோடு அதிலுள்ள காய், ஓலை, மட்டை, நார் முதலியவற்றையும் பல வகைக்குப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். ஆனால், பனைமரத்தின் மூலம் கிடைக்கும் சொரபானத்தின் ஆங்காரமான வேகத்தைச் சுண்ணாம்பினால் சற்று குறையச் செய்து பருவத்தில் பருகி மகிழுங்கள். . பனைமரம் உங்களுடைய கைப்பலனால் மட்டுந்தான் பால் அமிழ்தம்தருமே அல்லாமல் உங்களுக்குங்கூட இசைந்து பால் சுரக்காது. என்று அந்த பச்சிளங் குளந்தைகளுக்கு வரமாக ஞான உபதேசம் செய்தனர். அதன்பிறகு அங்கிருந்த புட்டாபுரகாளியை அழைத்தார்கள். . அகிலம் ======== பத்திரத்தாள் பெற்றமக்கள் ============================ மகாவிஷ்ணு, காளியிடம் பாலர்களை ஒப்படைக்கும்போது பெற்ற வாக்குறுதி ============================================================================== பாலரையுங் காளி பண்பாக வாங்குகையில் ஆலமுத முண்ட அச்சுதரு மேதுரைப்பார் அடவு பதினெட்டும் அலங்கார வர்மமதும் கடகரியின் தொழிலும் கந்துகத் தின்தொழிலும் மாவேறுந் தொழிலும் வாள்வீசுந் தொழிலும் பாவேறு பாட்டும் பழமறைநூ லானதுவும் அடவு மேலான அதிகப்பல வித்தைகளும் திடமு மிகவருத்தி சேனா பதியாக்கி எல்லா விதத்தொழிலும் இசைவான ராகமதும் நல்லா வருத்தி நாட்டமுட னேகொடுத்து உயிர்ச்சேதம் வராமல் ஒன்றுபோ லென்மகவை நெய்ச்சீதம் போலே நீவளர்த்துத் தாவெனவே அல்லாம லென்மகவை ஆரொருவ ரானாலும் கொல்லாமல் காக்கக் கூடுமோ வுன்னாலே அன்பான காளி அதற்கேது சொல்லலுற்றாள் என்பாலகர் தனையும் ஈடுசெய்ய யிங்கொருவர் உண்டோகா ணிந்த உலகி லெனக்கெதிரி . விளக்கம் ========== பாலர்களை வாங்குவதற்காகப் பத்திரகாளி மகாவிஷ்ணுவிடம் வந்தாள். அப்போது மகாவிஷ்ணு, பத்திரகாளியைப் பார்த்து, பத்திரகாளி ! நீ, என்னுடைய பாலகர்களை இப்போது பெற்றுக்கொள்வதால் மகிழ்ச்சி அடைகிறேன். ஆனால், தொடுவர்மம் தொண்ணூற்று ஆறும், படுவர்ம் பதினெட்டையும், யானையேற்றம், குதிரையேற்றம், விலங்கின வேட்டை, வான் பயிற்சி, இன்னும் என்னென்ன வித்தைகள் உள்ளனவோ அத்தனையும் கற்றுக் கொடுப்பதோடு, பாட்டு இயற்றும் பாவலராய், பன்னூல் கற்ற பண்டிதராய், வேதங்கள் கற்ற வித்தகராய், மிகுந்த மனபலமும் உடல்பலமும் உள்ளவராய் உருவாக்கி, படைத் தலைவர்களாக அவர்களைப் பவனி வரச் செய்ய வேண்டும். . அது மட்டுமல்ல. அவர்களுக்கு, சங்கீதம் முதலான கலைஞானங்களைக் களவறக் கற்பித்து, இந்த ஏழு பேரிடமும் சரி சமமாய் அன்பு வைத்து, உன்னதாமான குணநலன்களோடு வளர்த்து, என்னுடைய குழந்தைகளை என்னிடம் நீ ஒப்படைக்க வேண்டும். இதுவல்லாமல் இன்னுமொன்று சொல்லுகிறேன். அதையும் நீ கேட்டுக் கொள். . என்னுடைய இந்தப் பிள்ளைகளில் எவர் ஒருவருக்கும் உயிர்ச்சேதம் ஏற்பட்டுவிடக் கூடாது. அப்படி எவர் ஒருவராலும் அவர்களில் ஒருவர் கூட இறந்து போகாமல் பாதுகாக்க உன்னால் முடியுமா? என்று பத்திரகாளியிடம் மகாவிஷ்ணு கேட்டார். . உடனே பத்திரகாளி, என்னுடைய பிள்ளைகளின் உயிரைப் பறிக்கும் வல்லமையுடைய ஒருவன் இந்த வையகத்தில் எனக்கு எதிரியாக இருக்க முடியுமா? என்று மகாவிஷ்ணுவிடம் தன்னுடைய பலத்தில் மட்டுமே நம்பிக்கை வைத்து தைரியமாகத் தெரிவித்தாள். . . அகிலம் ======== என்றேதான் காளி இப்படியே சொல்லியபின் பாலரையுந் தானெடுத்துப் பரமசிவ னாரருளால் கோலமுள்ள மாயன் கொடுத்தாரொரு வார்த்தைசொல்லி சீலமுள்ள காளியென் சித்திரப் பாலருக்கு பாலருக்குப் பங்கமது பற்றாமல் காத்திடுநீ மதலைதனக் கோர்தீங்கு வந்ததே யுண்டானால் குதலையரே வுன்றனக்குக் கொடுஞ்சிறைதான் சிக்குமென்று சொல்லியே காளிகையில் சிறுவரையுந் தான்கொடுத்து . விளக்கம் ========== தமக்கு நிகரான எதிரி எவருமே இவ்வுலகில் இல்லை என்ற பத்திரகாளியின் கூற்றைக் கூர்மையாகக் கவனித்த மகாவிஷ்ணு தம்முடைய பாலகர்கள் ஏழுபேரையும் பரமசிவனாரின் பேரருளை நினைத்துக்கொண்டு பத்திரகாளியிடம் கொடுக்கும்போது, பத்திரகாளியைப் பார்த்துச் சொல்லுகிறார். நிற்குணங்களின் நாயகியாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் பத்திரகாளியே ! அதிசயிக்கத்தக்க நூதனமான சிறப்புகளை அகமே கொண்டுள்ள இந்த ஏழு குழந்தைகளுக்கும், எவ்விதமான இடர்ப்பாடுகளும் ஏற்படாமல் அவர்களைப் பாதுகாத்து வளர்க்க வேண்டியது உன்னுடைய பொறுப்பேயாகும். . என்னுடைய இந்த ஏழு குழந்தைகளின் உயிருக்கும் நீ உத்தரவாதம் தந்து விட்டாய் என்பதை எந்தத் தருணத்திலும் நீ மறந்து விடாதே. . உன்னுடைய தன்னம்பிக்கையையும், வாக்குறுதியையும் நான் திடமாக நம்புகிறேன். அதை நீ கவனமாக் காப்பாற்றிக் கொள். மாறாக, என்னுடைய இந்த ஏழு பிள்ளைகளில் எவருடைய உயிருக்குச் சேதம் நேர்ந்தாலும், சிறுபிள்ளைத்தனமாக வாக்குறுதியளித்த உனக்குக் கடுஞ்சிறைதான் கிடைக்கும் என்று எதிர்கால விதியினை அங்கேயே கட்டளையாகப் பிறப்பித்து, தம்முடைய ஏழு குழந்தைகளையும் பத்திரகாளியின் கையில் மகாவிஷ்ணு ஒப்படைத்தார். . தொடரும்… அய்யா உண்டு. #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர்
Ayya Vaikundar - Dec 1, 2024,22*35 Har Dec 1, 2024,22*35 Har - ShareChat
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== கற்பகத்தரு =========== குழந்தைகளுக்கு அமிழ்தம் கொண்டு வர வானோரை அனுப்புதல் ======================================================================= சந்தோ சமாகச் சரசுவதி தாலாட்டி வெந்தோச மெல்லாம் விலகவே நீராட்டி வைகுண்ட மூர்த்தி மாமுனிதன் கைக்கொடுக்க மைகொண்ட வேதன் மதலை தனைவாங்கி ஈசர் முதலாய் எல்லோருங் கூடிருந்து வாசமுள்ள பிள்ளைகள்தாம் வளரத் திருவமிர்தம் சேனைமிக வூட்டுதற்கும் செல்வ முண்டாவதற்கும் வானத் தமிர்தம் வருத்திமிக ஈயவென்று கயிலை தனிலிருக்கும் கண்ணான பேர்களுக்கு அகிலமதிற் பாயும் ஆகாய வூறலதை வருத்திக் கொடுக்கவென்று மாயவரு மீசுரரும் பொருத்தமுள்ள வானோரைப் போய்வேண்டி வாருமென்றார் . விளக்கம் ========== சரஸ்வதி தேவி, ஏழு குழந்தைகளையும் சந்தோசமாகத் தாலாட்டியதும், மண்ணுலகில் மனிதர்களாய் பிறந்ததினால் உண்டாகும் வெண்தோசங்கள் விலகிப் போவதற்காக அக்குழந்தைகளை நீராட்டி, வைகுண்டலோகத்தில் வாசம் செய்பவரான மகாவிஷ்ணுவிடம் கொடுத்தாள். மலையை ஒத்த நிறமுடைய மகாவிஷ்ணு குழந்தைகளை வாங்கியதும், சிவபெருமான் முதலான அனைவரும் சேர்ந்து, அக்குழந்தைகள் செல்வம் பொருந்தி சிறப்போடு வளரச் சேனை ஊட்டவேண்டுமென விரும்பினார்கள். . ஆகவே, ஆகாய கங்கையில் சுரக்கும் அமிழ்த்தை, அதாவது, கயிலை வாசிகளுக்காக வைகுண்டலோகத்திலிருந்து பாயும் அமிழ்தத்தை வருவித்து அந்த ஏழு குழந்தைகளுக்கும் ஊட்ட வேண்டும் என்று எண்ணிய சிவபெருமானும், மகாவிஷ்ணுவும், இந்தக் கைங்கரியத்தைச் சிறப்பாகச் செய்ய உகந்த வானவர்களைத் தேர்வு செய்து அனுப்பி வைத்தார்கள். . . அகிலம் ======== வானவர்கள் அந்தணனையும் அவன் மனைவியையும் சிவபெருமானிடம் கொண்டு வந்து சேர்த்தல் ============================================================================== அப்படியே வானோர் ஆகாய மீதேகி செப்பமுட னமிர்தம் சென்றவர்கள் பார்க்கையிலே ஆருரூப மில்லா ஆகாச மேல்வழியே சீருரூப மான சிவகயிலை யானதிலே பாயு மளவில் பலசாஸ்தி ரங்கள்கற்ற வீயுமறை வேதியனும் விழிநுதலாள் கன்னியரும் அமுதமதை யெல்லாம் அள்ளித் தலைமேலும் குமுதமுடன் குடித்துக் கொழுத்துமிகப் பாளைவைத்துத் தேகமது நிமிர்ந்து தேவியு மன்னவனும் ஆகமது கூர்ந்து அலங்கரித்து நிற்பளவில் வானோர்கள் பார்த்து வாய்த்தமிர்தங் காணாமல் ஏனோயிது மாயமென்று எண்ணிமிகப் பார்ப்பளவில் கொண்டாடி நின்ற கூர்மறையவன் தனையும் பெண்டாட்டி யான பெண்ணதையும் வானோர்கள் பிடித்து இழுத்துப் பின்னுமுன்னுந் தள்ளிமிக அடித்துச் சிவன்முன்னே அச்சுதரும் பார்த்திருக்க கொண்டுவந்து விட்டுக் கூறுவார் வானோர்கள் . விளக்கம் ========== இறைவனின் கட்டளைப்படி வானகமேகிய வானவர்கள் உரிய இடத்திற்குச் சென்று தேடினார்கள். அப்போது, உருவமற்ற ஆகாயத்திலிருந்து ஊறிவரும் அமிழ்த்தை, சாஸ்திர வேதங்களையெல்லாம் சரிவரக் கற்றுணர்ந்த ஒரு வேதியனும், அந்த வேதியனின் மனைவியும் ஆவலோடு குடித்தது மட்டுமல்லாமல், அதைத் தலையிலும் உடம்பிலும் தேய்த்து மகிழ்ந்தார்கள். அதனால் அவர்கள் இருவரின் உடல் கொழுப்பேறி நிமிர்ந்தது. எனவே, அந்த ஆகாய அமிழ்த கங்கை பாயும் இடத்தை தமதாக்கிக் கொண்டு ஆர்ப்பரித்து நின்றனர். . அமிழ்தத்தைத் தேடிவந்த வானவர்களோ, அங்கே ஊறிப் பாயும் அமிழ்த்தைக் காணாமல் அதிர்ச்சியடைந்தனர். இது என்ன மாயம் என்று வானவர்கள் யோசித்துக் கொண்டிருந்த போதுதான், அமிழ்த்தை உண்டு மகிழ்ந்து ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்த வேதியனையும், வேதியனின் மனைவியையும் கண்டார்கள். . உடனே, அவர்கள் இருவரையும் விரிந்து பிடித்து இழுத்தனர். வர மறுத்ததால் அடித்தனர். கட்டி இழுத்து வந்து மகாவிஷ்ணுவின் முன்னிலையில் சிவபெருமானிடம் கொண்டு நிறுத்தி, நடந்த சம்பவங்களைச் சமர்ப்பித்தனர். . . அகிலம் ======== அந்தணனையும் அவன் மனைவியையும் பனைமரமாகச் சபித்தல். ===================================================================== பண்டுமுத லின்றுவரை பாய்ந்த அமிர்தமெல்லாம் உண்டுகொண்டு தேகம் உரத்துமிகப் பாளைவைத்து வண்டுறுக்கி மிக்க வலுப்பேசி னானெனவே சொல்லிடவே வானோர் திருமா லதுகேட்டு நல்லதுதா னென்று நாடிச்சிவ னோடுரைக்க அப்போது நல்ல ஆதி சிவமுரைப்பார் எப்போதும் பாலர் இவருண் ணமிர்தமெல்லாம் கொடுக்கும் படியாய்க் குருக்கவையு மென்றுரைத்தார் அடுக்கநின்ற தேவர் அதுகேட்டுச் சீக்கிரமாய் மறையோனையும் மாதுவையும் வந்தெடுத்துச் சாபமிட இறையவரைப் பார்த்து ஏதுரைப் பான்மறையோன் இப்போது இட்ட இச்சாப மானதுதான் எப்போது நீங்கும் என்றேகேட் டான்மறையோன் . விளக்கம் ========== லோகநாயகா ! நீண்ட நெடுங்காலமாகப் பாய்ந்த ஆகாய அமிழ்த்தை இவர்கள் இருவரும் உண்டு கொழுப்பேறியதால், எங்களை மதிக்காமல் வசை வார்த்தைகளால் வடுப்படுத்தினார்கள். ஆகவேதான், அவர்களை உங்களிடம் இழுத்து வந்தோம் என்றார்கள். . அதைக் கேட்ட மகாவிஷ்ணு, அதுவும் ஒரு வகையில் நல்லதுதான் இல்லையா ஈசுவரரே? என்றார். அதனால் அகமகிழ்ந்த சிவபெருமான், மகாவிஷ்ணு மற்றும் அங்கிருந்த தேவர்களையெல்லாம் பார்த்து, இவர்கள் இருவரும் இதுநாள்வரை உண்டு மகிழ்ந்த அமிழ்த்தை இந்த பாலர்களுக்கும், அவர்களுடைய பிற்கிளைகளுக்கும் கொடுக்க வல்ல பனைமரமாக இவர்கள் இருவரையும் முளைக்கச் செய்யுங்கள் என்றார். . சிவபெருமானின் ஆணையைச் சீக்கிரமாகச் செய்து முடிக்கத் தேவர்களெல்லாம் ஆயத்தமானார்கள். அப்போது வானத்து அமிழ்தத்தை உண்டு கொழுத்த வேதியனும், அவனுடைய மனைவியும் சிவபெருமானைப் பார்த்து, இறைவா ! எங்களுடைய இந்தச் சாபம் எப்போது நீங்கும் . நாங்கள் மறுபடியும் இப்போதைய நிலைக்கு வருவோமா என்று கேட்டார்கள். . அகிலம் ======== நீசக் குலமறுத்து நெடிய திருமாலும் மாசில்லாத் தர்ம வையகத்தை யாளுதற்கு அன்பு சேகரிக்க அங்குவரு வார்கண்டீர் வம்பு மாறும்போது மாறுமுங்கள் சாபமென்றார் . விளக்கம் ========== பனைமரமாக முளைக்கப்போகும் வேதியனாகிய அந்த அந்தணனும், அவனுடைய மனைவியும் சிவபெருமானிடம் கேட்ட கேள்விக்கு, அவர்களைப் பார்த்து பரிதாபப்பட்ட சிவபெருமான், வேதியரே, நீங்கள் இருவரும் பேராசையல் அமிழ்த்தை அபகரித்து உண்டு விட்டீர்கள். அதற்குப் பரிகாரமாகத்தான் உங்களுக்கு இந்த நிலை ஏற்பட்டு உள்ளது. . கலியுகத்தில் நீசக்குலத்தோர் நிலையழிந்து நிற்பார்கள். அவர்களை அழித்து தர்மயுகத்தைத் தோற்றுவித்து ஆட்சி புரிவதற்காக, திருமாலின் தேகனாய் திவ்விய பரப்பிரம்மம் வைகுண்ட அவதாரனாகத் தோன்றி, வையகத்து மக்களிடம் அன்பைச் சேமிப்பதற்காக வரும் போது, வம்புகள் மாளும். அப்போது உங்கள் சாபமும் மாறும் என்றார். . . தொடரும்… அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - வாகைபதி வாகைபதி - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை மூன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.12.2025. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . அகிலம் ======== பிரம்மதேவன் முதலானோர் சிறப்பு பெயர் சூட்டுதல் ====================================================== முதற்பேர்தா னீசர் மொழிந்தபின்பு வேதாவும் மதமான விந்து மாயமுனி சேயதற்கு சான்றோ ரெனநாமம் சாற்றினார் வேதாவும் ஆண்டா ரிதுவுரைக்க அச்சுதரும் பின்சொல்லுவார் நாடாள்வா ரென்று நாமமிட்டார் பாலருக்கு தாடாண்மை யுள்ள சத்தியங் கேதுரைப்பாள் அண்ணர் விநோதமதில் அவதரித்த பிள்ளைகட்கு வண்ணமுள்ள பேரு வாழ்த்தி விடைகொடுப்பாள் எங்கும் புகழ்பெற்று இராஜபட்டந் தான்சூடும் சங்குமன்ன ரென்று தானுரைத்தாள் சத்தியுமே பேறுபெற்ற பாலரென்று பிரிய முடன்மகிழ்ந்து பாருபதி நாமம் பகருவா ளம்மானை சென்றஇடம் வென்று சீமைகட்டித் தானாண்டு மண்டலங்கள் தோறும் வரிசைபெற்று வாழ்ந்திருக்கும் பொற்பமுடி மன்னரென்று பேரிட்டாள் பார்பதியும் கற்பகத்துக் கொத்த கன்னி சரசுவதியும் வெள்ளானை வேந்தரென்று வெண்டாமரை யுரைத்தாள் பிள்ளையார் தானும் பிரியமுடன் மகிழ்ந்து நன்றான வீர நகுலவேந் தரெனவே அன்றானை முகத்தோன் அருளினர்கா ணம்மானை சண்முகனுந் தான்மகிழ்ந்து தவலோக மன்னரென்று விண்ணுகமு மெய்க்க விளம்பினர்கா ணம்மானை . விளக்கம் ========== சிவபெருமான் முதற்பெயரை சூட்டியதுமே, நான்முகனாகிய பிரம்மதேவன் எழுந்திருந்து, அறிவுப் புனலாகிய மகாவிஷ்ணுவின் குழந்தைகளான அவர்களுக்குத் தன்னைத் தன் அடியார்கள் போற்றும் சான்றோன் என்ற நாமத்தைச் சூட்டினார். . அதைத் தொடர்ந்து மகாவிஷ்ணு தம் குழந்தைகளுக்குத் தம்மைத் தம் அடியார்கள் போற்றும் நாடாள்வார் என்ற நாமத்தைச் சூட்டினார். . அதைத் தொடர்ந்து, முயற்சிக்கு முதன்மை வகிக்கும் பராசக்தியோ, தம் தமயனாகிய மகாவிஷ்ணுவின் வினோதச் செய்கையினால் பிறந்த அந்த குழந்தைகள் எங்கும் புகழ்பெற்று மன்னர்முடி சூடுகின்ற சங்குமன்னர் என்று பெயரிட்டாள். . இக்குழந்தைகள் பாக்கியம் பல பெற்றவர்கள் என்ற பூரிப்போடு எழுந்த பூமாதேவியோ, சென்ற இடமெல்லாம் சிறப்பான வெற்றிகள் பல பெற்று சீமையனைத்தையும் சீராக்கி ஆட்சிபுரிந்து, எல்லா தேசங்களிலும் பட்டமும், பட்டயமும் பெற்று வாழ்வாங்கு வாழவிருக்கும் இவர்கள் பொற்பமுடி மன்னர் என்று பெயர் சூட்டினாள். . வெண்டாமரை ஆசனத்தில் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவியோ, அப்பிள்ளைகளுக்கு வெள்ளானை வேந்தன் என்று பெயரிட்டாள். . வேழமுகத்தோனாகிய விநாயகப் பெருமானோ, நலமிகு தன்மையும், வியக்க வைக்கும் வீரமும் பொருந்திய நகுலவேந்தர் என்று பெயரிட்டார். . ஆறுமுகனாகிய முருகப் பெருமானோ அகமகிழ்ச்சியோடு விண்ணவர்கள் யாவரும் வியக்கத் தக்க தவலோகமன்னர் என்று பெயர் சூட்டினார். . . அகிலம் ======== வானோர்கள் வேத மாமுனிவர் தாமகிழ்ந்து தானான மாயவனார் தான்பெற்ற பாலருக்குத் தர்மகுல வேந்தரென்று சாற்றினா ரம்மானை . விளக்கம் ========== வானேலோகத்திலுள்ள வேதமுனிவர்களோ, மட்டற்ற மகிழ்ச்சியோடு, இன்னொருவரால் இயக்கப்படாமல் இயங்கிக் கொண்டிருக்கிற மாயோனாகிய மகாவிஷ்ணுவின் பிள்ளைகளைத் தர்மகுல வேந்தர் என்றழைத்துச் சிறப்பித்தார். . . அகிலம் ======== கர்மமில்லாத் தேவர் கரியமால் பாலருக்கு மெய்யுடைய பாலர் மென்மேலும் வாழ்ந்திருக்க தெய்வகுல மன்னரென்று திருநாம மிட்டனரே . விளக்கம் ========== பூவுலகில் பிறந்து வாழ்ந்து தம்முடைய கர்மக் கடன்கள் யாவையும் நிறைவேற்றி, எவ்விதமான எண்ணமும் இல்லாத நிலையினை அடைந்து, பெருவாழ்வை பெற்றுள்ள சில தேவர்களெல்லாம் சேர்ந்து, கார்முகில் மேனியானாகிய மகாவிஷ்ணு பெற்ற இந்தக் குழந்தைகள் தெய்வகுல மன்னர் என்று சொல்லிப் பாராட்டினார்கள். . . அகிலம் ======== வீரியமாய்ச் சூரியனும் வெற்றிமால் பாலருக்குச் சூரியகுல வேந்தரென்று சொன்னார்கா ணம்மானை வாசவனுந் தான்மகிழ்ந்து மாயனுட பாலருக்கு வீசவிசைய வேந்தரென்று நாம மிட்டார் . விளக்கம் ========== சூரியதேவனோ, வீரம் ததும்பும் தொனியில், வெற்றித் திருமால் பெற்ற அந்த பாலர்களை சூரியகுல வேந்தர் என்று போற்றினர். வாசவனாகிய தேவேந்திரனோ, மாயத்திருமாலின் மகிமை மிக்க பாலர்களை விசை விசய வேந்ததென்ற வெற்றித் திருநாமத்தால் சிறப்பித்தார். . . அகிலம் ======== இப்படியே நாமம் இவர்மொழிந்த தின்பிறகு கற்புடைய சன்னாசி கருத்தாக வேயுரைப்பார் நாட்டுக் குடைய நாதனுட கண்மணிக்குக் காட்டுரா சனெனவே கருத்தாக நாமமிட்டார் . விளக்கம் ========== இவ்வண்ணமாக, சிவபெருமான், பிரம்மதேவன், மகாவிஷ்ணு, உமையவள், பூமாதேவி, சரஸ்வதி, விநாயக பெருமான், முருகப் பெருமான், வேதமுனிவர்கள், பிறவியற்ற தேவர்கள், சூரியதேவன், தேவந்திரன், ஆகியோரெல்லாம் அந்த ஏழு குழந்தைகளையும் ஆவலோடு அன்பு பாராட்டி தம்முடைய ஆதங்கத்தை அவர்களுக்குப் பட்டமாகச் சூட்டி மகிழ்ந்த பின்பு யாராலும் எவ்வகையாலும் களங்கம் கற்பிக்க முடியாதவராய் கற்புக்கு இலக்கணம் வகுத்து, கற்பு நெறிக் காவலனாக மூவுலகும் சஞ்சரித்துக் கொண்டிருக்கும் நாரத மாமுனிவரோ, உலகுக்கே சொந்தமானவரும் உலகத்தைத் தமக்குள் வைத்தாள்பவருமான இறைவனும், அரசனும், குருவும் தலைவனமாகிய மகாவிஷ்ணுவின் அந்தக் கண்மணிகளை காட்டு ராஜா எனச் சொல்லிக் கருத்தாக நாமமிட்டார். . . அகிலம் ======== இப்படியே ஈசர்முதல் எல்லோரும் நாமமிட்டு அப்படியே பிள்ளைகட்கு அவரவரே காப்பணிந்து சத்தி யுமையும் சரசுவதி பார்பதியும் எத்திசையு மெய்க்க எடுத்துநீ ராட்டுவாராம் அமுதமது சேனையிட்டு எல்லோரும் தாமகிழ்ந்து குமுதமொழி மாதர் குரவையிட்டுத் தாமகிழ்ந்து அண்டர் முனிவோர் எல்லோரும் பார்த்திருக்க தண்டாமரை மாது தாலாட்ட வுத்தரித்தாள் . விளக்கம் ========== இப்படி அந்த ஏழு குழந்தைகளுக்கும், சிறப்புப் பெயர்கள் சூட்டப்பட்டன. பெயர் சூட்டியோரெல்லாம் முறையே அக்குழந்தைகளுக்கு இரட்சாபந்தனம் செய்து அருள் பாலித்தார்கள். . அதைத் தொடர்ந்து வீரத்தின் பிறப்பிடமாகிய அன்னை உமையவளும், விவேகத்தின் இருப்பிடமாகிய அன்னை சரஸ்வதியும், பொறுமையிற் பெரிய அன்னை பூமாதேவியும், எத்திசையிலுள்ளோரும் மெச்சும்படியாக அக்குழந்தைகளை எடுத்து நீராட்டினார்கள். . அதன்பிறகு அக்குழந்தைகளுக்கு அமுதத்தைச் சேனையாக ஊட்டி மகிழ்ந்தனர். அப்போது அங்கிருந்த அரம்பையர்களெல்லாம் கோலாகலமாக குரவையிட்டு மகிழ்ந்தனர். இத்தகு சிறப்புகளையெல்லாம் இயல்பாகப் பெற்றுள்ள அந்த இளஞ்சிறார்களை வெள்ளைத் தாமரைப் பூவினை தம் ஆசனமாய்க் கொண்டமர்ந்து உலகிற்கு விவேகத்தை அருளும் வேதநாயகியாம் அன்னை சரஸ்வதிதேவி தாலாட்டுப் பாடலானாள். . . தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚
அய்யா வைகுண்டர் - ShareChat