
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
தேவ னதைக்கேட்டுச் சிந்தை மிகக்கலங்கி
ஆவி மறுகி அவனேது சொல்லலுற்றான்
காரணரே நாங்கள் கருத்தில் நினைத்ததெல்லாம்
பூரணமா யங்கே புகுந்துதோ யென்சிவனே
ஐயோநான் சொன்னேனென் ஆயிழையோ டல்லாது
கையோ கண்ணாலே காணேனே மற்றொருவர்
ஊமை மொழிபோல் ஒதுக்கி லுரைத்தாற்போல்
நாமறியப் பெண்ணறிவாள் நாடறியா தென்றிருந்தோம்
இவர்க ளறிவதற்கு யார்சொல்லிப் போட்டாரோ
எவர்களும் நாம்பேசுகையில் இங்குவரக் காணோமே
ஆர்சொல்லிப் போட்டாரோ அறியோமே யென்சிவனே
தார்சிறந்த என்சிவனே சர்வ தயாபரனே
பூரணனே வாசவனே பொறுத்தினிக் கொள்ளுமையா
நாரணரே என்சிவனே நாடிப் பொறுவுமையா
என்றுசொல்லித் தேவன் ஏற்ற விருத்தமதாய்
நன்றினிய முப்பொருள்மேல் நற்போற்ற லேபடிக்கப்
பரதே வதையான பைங்கிளியு மப்போது
திரமான தாயார் சிவசக்தி பேரதிலும்
சிவநாமப் பேரதிலும் ஸ்ரீகிருஷ்ணர் பேரதிலும்
விவமான ஆசிரிய விருத்தம்போல் போற்றலுற்றாள்
.
விளக்கம்
=========
சிவபெருமானின் அந்த வார்த்தைகளால் சம்பூரணத் தேவனின் சிந்தை கலங்கி, மனம் குழம்பிய நிலையில் சொல்லுகிறான். உலக இயக்கத்திற்கு உற்ற காரண கர்த்தாவே, நாங்கள் மனதில் நினைத்தவைகளும், எங்களுக்குள் பேசிக்கொண்டதும் பூரணமாக உங்கள் உள்ளத்தில் புகுந்து கொண்டதோ?
.
அய்யகோ, நான் என்னுடைய ஆசையை என் பெண்ணாளிடம் மட்டுமேதான் சொன்னேன். நான் அவளிடம் அப்படிப் பேசும்போது இங்கே யாருமே இல்லையே... ஒரு ஓரமாக இருந்த நாங்கள் மௌனமாகப் பேசியது எனக்கும் அந்தப் பெண்ணுக்கும்தான் தெரியம். உலகத்திற்குத் தெரியாது என்று நினைத்தேனே.
.
ஈசனும், விஷ்ணுவும் அறிந்துள்ளனரே, இவர்களுக்கு இதை யார் சொல்லியருப்பார்கள்? நாங்கள் பேசும் போது யாருமே இங்கு வந்ததாகத் தெரியவில்லையே... அப்படியிருக்க இவர்களுக்கு யார்தான் இச்செய்தியைச் சொல்லியிருக்கக் கூடும்? என்றெல்லாம் தன்மனதிற்குள்ளே வினா எழுப்பியும் விடைகாண முடியாத சம்பூரணத் தேவன் மீண்டும் அவர்களின் பாதம் பணிந்து தார்மீகச் சிறப்புடைய சிவபெருமானே, எல்லாருக்கும் இரங்குகின்ற இறையோனே, எல்லாம் முழுமையாக நிறைந்தோனே, இந்திரனுமானோனே, எம்பிழை பொறுத்து அருளுமையா. நாராயணப்பொருளே, எமையாளும் சிவமே, மன்னித்து அருளுமையா என்று சம்பூரணத்தேவன் உணர்வு்ப் பூர்வமாக மன்றாடினான். அப்போது பரதேவதையாகிய பெண்மணியும் சம்பூரணத்தேவனுடன் இணைந்து அம்மை உமையவள், சிவபெருமான், மகாவிஷ்ணு ஆகியோரைப் போற்றிப் புகழ்ந்து விருத்தம் பாடலாயினர்.
.
.
அகிலம்
========
காரணா அரிநாரணா கவிபூரணா
வெகுதோரணா கவிஞோர் தொழும் வாரணா
கருணகரத் தருணாவெகு தருணா
கவிவருணா கவிமால் சிவாபோற்றி
காயாம்பூவின் மேனிநிறமாயா சிவசிவாயா
கருவா யுருவுருவா யுனைத்
தினமே யருள் நியாயா
குறிமத்தகா கருணாகரா போற்றி
.
விளக்கம்
=========
பிரபஞ்ச இயக்கங்களுக்கெல்லாம் மூல கர்த்தனாகிய அரிநாராயணரே, கதை, கவி, கவிதை ஆகியவற்றிற்கெல்லாம் முதன்மையும், முழுமையும் ஆனவரே, எல்லாவற்றிற்கும் தோற்றுவாயாக இருப்பவரே, கவிஞர்களெல்லாம் வணங்குகின்ற கடலே,
.
கருணை அருளும் கரத்தோனே, இளமைக்கெல்லாம் இளமை ஆனவனே, கவிக்கடலே, கவிகளுக்குக் கருவான சிவபெருமானே, உம்மை வணங்குகின்றோம்.
மழை மேகத்தைப் போன்ற நிறமுடைய சிவடிபருமானே, உம்மையே மூலப்பொருளாகக் கொண்டு உருவேற்றித் தவம் செய்யும் எமக்கு எப்பொழுதும் உம் நினைவு மாறாத நிறைவினைத் தந்தருளுங்கள் மேன்மைமிகு கருணைக் கரத்தோனே, வணங்குகிறேன்.
.
.
அகிலம்
========
குணசீரா வெகுதீரா நலிவீரா
புவிநாதா திருவோடுறு மார்பா
சிறியார்மிக அறியாச்செய்த வெறியானதைச்
சிறிதாக்கியே சேர்ப்பாய் முகம்பார்ப்பாய்
முடிவானதை யறியாமலே மோகமாய்
வெகுதாகமாய் உளறித் தவங்குளறியே
உன்சொற்பதம் அஞ்சல்லென ஒஞ்சிப்பத
மஞ்சினோம் உன் செயல்தந் தருள்வாயே
.
விளக்கம்
=========
பண்பில் சிறந்தவரே, வலுவில் உயர்ந்த நல்வீரனே, லோக நாயகா, செல்வநாயகியான லட்சுமிதேவியை நெஞ்சில் நிறைத்து வைத்திருக்கும் மாயவா, சிறியவர்களாகிய நாங்கள் அறிவில்லாமல் செய்த வெறித்தனமானதைச் சிறிதாக நினைத்து எங்களுக்காக எங்கள் மீது கருணைகொண்டு எங்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றித் தாருங்கள்.
.
இப்படி ஒரு முடிவு வரும் என்பதை உணருகின்ற அறிவு இல்லாமல் தேவேந்திரனின் திருமுடி மீது மோகித்து மயங்கிப் பிதற்றிவிட்டோம். ஆகவேதான் எங்களுடைய தவத்தில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது.
.
தங்களுடைய உத்தரவில்தான் எங்களுடைய எதிர்கால இன்பம் அடங்கியுள்ளது. எங்களுடைய தோல்வியை நினைத்து வெட்கப்படுவதோடு, அஞ்சிச் சரணடைகின்றோம். எங்களுக்கு நல்லருள்புரிவதெல்லாம் உம் செயலே என்றாள்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் அய்யா வைகுண்டரின் 194ஆம் ஆண்டு அவதார தின நல்வாழ்த்துகள் 💐*
.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
அந்தப் பொழுதில் ஆதி சிவமுதலும்
வந்தங்கு நின்றார் மாகிருஷ்ண மாலவரும்
கண்டந்தத் தேவன் கைமறந்த நிஷ்டையோடு
தண்டமிழ்சேர் பதத்தைத் தையலும்வந் தேவணங்கி
இத்தனைநாள் யாங்கள் நின்றதவம் கண்டிரங்கிச்
சித்த மிரங்கிச் சிவனேநீர் வந்தீரோ
எந்தன் பெருமானே இறையவரே வந்தீரோ
நந்தகோ பால நாரணரே வந்தீரோ
குருவே அரிநாதா கோபாலா வந்தீரோ
முருகக் குருபரனே முத்தாநீர் வந்தீரோ
செல்வக் கடலே சீமானே வந்தீரோ
கல்விக் கடலான கறைக்கண்டா வந்தீரோ
அரவணிந் தத்திவுரித்(து) அணிந்தோரே வந்தீரோ
பரமசிவ மான பச்சைமால் வந்தீரோ
இப்படியே மானாளும் ஏற்றசம் பூரணனும்
அப்படியே வந்தோர் அடிபணிந்து போற்றிடவே
.
விளக்கம்
=========
அப்போது சிவபெருமானும், மகாவிஷ்ணுவும் அவர்கள் முன்னால் வந்து சேர்ந்தார்கள். அவர்களைக் கண்ட சம்பூரணத் தேவனும், பரதேவதையும் தாம் தவம் இருக்கிறோம் என்பதையே மறந்து, அவர்களின் பொற்பாத கமலங்களை வணங்கியவாறு, இத்தனை நாட்களாக நாங்கள் செய்த தவத்திற்கு இரங்கி இங்கே வருகை தந்தீர்களோ?
சிவபெருமானே, எம்பெருமானே, இறைவா, நந்தகோபாலா, நாராயணரே, குருவே, அரிநாதா, கோபாலா, முருகக் குருபரனே, மோட்சத்தின் நாயகனே, செல்வக் கடலே, சீமானே, கல்விக் கடலே, கரைக்கண்டா, அரவத்தை ஆபரணமாக அணிந்தோனே, யானைத் தோலை உரித்து உடையாகப் போர்த்தியோனே, ஈசனும் விஷ்ணுவுமான ஏகனே எங்களுக்காக மனமிரங்கி வந்தீர்களோ என்று அடிபணிந்து போற்றினர்.
.
.
அகிலம்
=======
மாய பரனும் மனமகிழ்ந்து கொண்டாடி
ஆயனைப் பார்த்து அருளுவா ராதியுமே
மாயவரே கேட்டீரோ வாய்த்தஇத் தேவனுந்தான்
தூயவரே நின்றதவம் துலைத்தறுத்தா னில்லையிவன்
முற்றுந் தவமும் முழுதும்நிறை வேறுகையில்
சிற்றின்ப மாகித் திருமுடிமே லிச்சைகொண்டு
வாடி யயர்ந்தான் மங்கையருந் தேவனுமே
நாடி யிவன்தனக்கு நல்வளமை யேதுசொல்வீர்
அப்போது நாரணரும் அகமகிழ்ந்து கொண்டாடிச்
செப்புகிறா ரந்தச் சிவனோடு எம்பெருமாள்
ஏது விதமாய் இருந்ததவ மேகுறைய
தீதுவந்த ஞாயம் செப்பிடீ ரென்றுரைத்தார்
அப்போ சிவனார் அகமகிழ்ந்து தேவனோடு
இப்போ துன்சிந்தை எண்ணமெல்லாஞ் சொல்லுவென்றார்
.
விளக்கம்
=========
சம்பூரணத் தேவனும், பரதேவதையும் அடிபணிந்து வணங்குவதைப் பார்த்து, மகாவிஷ்ணுவும், சிவபெருமானும் மனமகிழ்ச்சி அடைந்தவாறு ஒருவரை ஒருவர் உற்று நோக்கினர். அப்போது சிவபெருமான் மகாவிஷ்ணுவைப் பார்த்து, மாயவரே, இந்தச் சம்பூரணத்தேவன் மேற்கொண்ட தவத்தை முழுமையாக முடிக்கவில்லை. தவம் முழுமையாக நிறைவேறப்போகும் நேரத்தில் லௌகீக வேட்கையினால் தேவேந்திரனின் திருமுடிமேல் ஆசைப்பட்டுத் தவநிலை இழந்து, இருவரும் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் இவர்களுக்கு நீங்கள் என்ன உபாயத்தைச் சொல்லப் போகிறீர்கள் என்று மகாவிஷ்ணுவிடம் கேட்டார்.
.
அதனால் அகமகிழ்ந்த மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பார்த்து ஈசுரரே, இவர்கள் இருவரின் தவமும் நிறைவேறாமல் போவதற்கு என்ன காரணம்? ஏதுவிதமான இடையூறு ஏற்பட்டது. தீது வந்த காரணத்தை என்னிடத்தில் சொல்லுங்கள் என்று கேட்டார். ஆகவே சிவபெருமான், சம்பூரணத் தேவனைப் பார்த்து, தேவா, இப்போது உன்னுடைய மனதில் நீ என்னவெல்லாம் நினைத்தாயோ அவற்றை அப்படியே சொல்லு என்றார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை எட்டாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 03.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
========
கலிக்கு எடுக்க வேண்டிய அவதாரம் பற்றிய ஆலோசனை
=========================
மாதுதிரு லட்சுமியாள் மகரச் சிலைபோலே
ஒது மணியலைக்குள் ஒவியம்போ லேவளர
மாதை மகரச் சிலையாய் வளரவிட்டுத்
தாதணியும் நாதன் சங்கரரோ டேதுரைப்பார்
கூட்டுக்கிளி போலிருந்த கொடியிடையைப் போகவிட்டு
நாட்டி லிருப்பேனோ நம்முடைய மைத்துனரே
சீதை மகரச் சிலைபோ லங்கேவளரப்
பாதையது தேடாமல் பதிந்திருக்க ஞாயமுண்டோ
அப்போ துசிவனார் அவரேது சொல்லலுற்றார்
செப்போடு வொத்த திருமாலே நீர்கேளும்
நடத்தும்படி யுள்ள ஞாயமெல்லா மிப்போது
சடைத்து இருக்காமல் தானடத்து மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
ஓம்கார நாதத்தை ஓயாமல் ஒலித்துக்கொண்டே இருக்கும் அலை கடலினுள், வரைந்து வைத்த சித்திரத்தின் வனப்போடு மகாலட்சுமி தேவி மகரச் சிலைபோல் வளர்ந்து கொண்டிருக்கும் போது, மகரந்தம் உள்ள மலர்மாலைகளைச் சூடுகின்ற மகாவிஷ்ணு, சிவபெருமானிடம் சென்று, ஈஸ்வரா, கூட்டுக் கிளிபோல் என்னுடன் இருந்த கொடியிடையாள் மகாலட்சுமியை மகரச் சிலையாக வளரும்படி அனுப்பி வைத்துவிட்டு நான் மட்டும் எப்படி மைத்துனரே நலமோடு இருக்க முடியும்?
.
மகாலட்சுமியைக் கடலுக்குள் மகரச் சிலையாக வளர விட்டு விட்டு, அப்படி வளர விட்டதற்கான வழிமுறைகளைச் செய்யாமல் இங்கே சும்மா இருப்பது சரியாகுமா? என்று கேட்டார்.
இதை கேட்ட சிவபெருமான், மகாவிஷ்ணுவைப் பார்த்து, சிமிழ் கூடு போன்ற மகாவிஷ்ணுவே, மேல் நடப்புக் காரியங்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவை யாவையும் உடனடியாகச் சோர்வற்றுச் செயல்படுத்தும் என்றார்.
.
.
அகிலம்
=======
சம்பூரணத்தேவன் பரதேவதை ஆகியோரின் தவத்தைப் பரிசோதித்தல்
=====================================================================
சம்பூர்ணத் தேவன் பரதேவதை மனுப்பிறப்பு
அந்தப் பொழுதில் ஆதிநா ராயணரும்
சிந்தை மகிழ்ந்து செப்புவா ராதியோடு
நல்லதுகா ணீசுரரே நாடுந்தே வாதிகளில்
வல்லசம் பூரணனும் வாய்த்த எமலோகமதில்
பரதே வதையான பைங்கிளியுந் தேவனுமாய்
மருவனைய மாதும் மன்னவனு மாய்ப்பிறக்க
உருவேற்றி நம்மை உயர்ந்ததவஞ் செய்திடவே
ஆனதா லவரை அவனிதனி லேபிறவி
ஈனமுட னமைக்க இதுநா ளாகுவதால்
நின்றந்தத் தேவனுட நிஷ்டைநிறை வேறினதோ
என்றெனவே பார்க்க எழுந்தருளு மீசுரரே
அப்படித்தா னீசுரரும் ஆதிநா ராயணரும்
இப்படியே தேவனிடம் ஏகின்ற வேளையிலே
தேவ ரெதிரே தெய்வேந் திரன்தானும்
மூவர் நடுவன் முத்தனரி நாரணரின்
சங்கு சரம்போல் தங்கநவ ரத்தினத்தால்
எங்கு மொளிவீசும் இரத்தினத் திருமுடியைச்
சூடித்தெய் வேந்திரனும் சிவனெதிரே போகவென்று
நாடி யகமகிழ்ந்து நாரா யணருடனே
சந்தோச மாகத் தான்வருகும் வேளையிலே
கண்டுசம் பூரணனும் கைமறந்து நிஷ்டையது
பண்டு மையலாய்ப் பாவையோ டேதுரைப்பான்
மானே கேளிந்த வானவர்கோன் தன்சிரசில்
தானாகிய மான சங்குசரத் தங்கமுடி
என்தலையி லேவைத்து ஏந்திழையே உன்னோடு
தென்தலைவ ரத்தினச் சிங்கா சனமீதில்
இருபேரும் வாழ்ந்து இராச துரைத்தனமாய்ப்
பெருக்கான தெய்வகன்னி பெற்ற மனுவழியை
எல்லா மருகிருத்தி ஏற்றவொரு சொல்லதுக்குள்
வல்லான நீத வையகத்தை யாண்டிருந்தால்
எத்தனையோ நாமள் இலங்கு மகிழ்ச்சையுடன்
வர்த்தனையாய் வாழ்வதற்கு வாய்த்தமுடி ஈதல்லவோ
என்றுசொல்லத் தேவன் இச்சைகொண்டு பெண்ணாளும்
நன்றுநீர் சொன்னமொழி நல்லா யிருக்குதுகாண்
அப்படித்தா னம்மை ஆதிசிவன் படைத்தால்
இப்படியும் படைத்தோர் இறவா திருப்பாரோ
என்றுபெண் ணாளுரைக்க ஏற்றசம் பூரணனும்
அன்று பெருமூச்சு அலைபோ லெறியலுற்றான்
.
விளக்கம்
=========
அதனால் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, சிவடிபருமானைப் பார்த்து, நலமே அருளினீர் ஈசுரரே என்று சொல்லிக்கொண்டே, ஈசுரரே ! நம்மையே நாடுகின்ற தேவாதிகளில் வல்லவனான சம்பூரணத் தேவனும், எமலோகத்திலுள்ள பரதேவதை என்னும் பெண்மணியும் இணைபிரியாத கணவனும் மனைவியுமாக வாழ்வதற்காக பூலோகத்தில் பிறவி அமைக்க வேண்டும் என்று நம்மை வேண்டி உருவேற்றி உயர்வான தவத்தினை மேற்கொண்டு உள்ளனர்.
.
ஆகவே, அவர்களைச் சில குறைபாடுகளுடன் பூலோகத்தில் பிறக்கச் செய்வதற்கு இந்தநாள் ஏற்புடையதாக அமையும். எனவே, அவர்களின் தவம் இப்போது எந்த அளவில் உள்ளது என்பதை அறிவதற்காகத் தாங்கள் என்னுடன் இப்போதே எழுந்தருளி வாருங்கள் என்று சிவபெருமானை மகாவிஷ்ணு அழைத்தார்.
.
அழைப்பை ஏற்றுக்கொண்ட சிவபெருமான், சம்பூரணத் தேவனும், பரதேவதையும் தவமிருந்துகொண்டிருக்கும் இடத்திற்கு மகாவிஷ்ணுவோடு புறப்பட்டுச் சென்று கொண்டிருக்கிறார். இவர்கள் இருவரின் வருகையை உணர்ந்த தேவேந்திரன் அவர்களை வரவேற்பதற்காக விரைந்து எதிரே செல்கிறான்.
.
தேவேந்திரன் திருமுடியோ, மும்மூர்த்திகளின் நடுவரும், விமோசன கர்த்தாவுமாகிய மகாவிஷ்ணுவின் திருமுடியைப் போன்று சங்கு சரம்போல் தங்க நவரத்தினத்தால் எங்கும் ஒளிவீசும் இயல்புடையதாகும்.
.
சம்பூரணத்தேவனை நோக்கிவருகின்ற சிவபெருமானையும், மகாவிஷ்ணுவையும் வரவேற்ற தேவேந்திரன் அவர்கள் இருவருடனும் வந்து கொண்டிரப்பதை சம்பூரணத்தேவன் காணுகின்றான். அவனுடைய கவனமெல்லாம் தேவேந்திரன் திருமுடிமேல் செல்கிறது.
.
அதனால் தாம் தவமிருக்கிறோம் என்ற நினைவை மறந்த சம்பூரணத்தேவன், தம்மோடு தவமிருந்து கொண்டிருக்கும் தம் காதலியாகிய பரதேவதையைப் பார்த்து, பெண்ணே ! அதோ சிவபெருமான், மகாவிஷ்ணு இருவரோடும் வந்து கொண்டிருக்கிற தேவேந்திரனின் தலையில் இருக்கின்ற சங்குசரத் தங்கத் திருமுடியைப் பார்... ஆகா அந்த அழகிய திருமுடியை என்னுடைய தலையிலே சூட்டி, பூலோகத்தையே ஆளுவதற்கான இரத்தின சிங்காசனத்தில் உன்னோடு நான் மன்னாதி மன்னனாக அமர்ந்திருந்து, சப்தமாதர்கள் பெற்ற மக்களை எல்லாம் நம் அருகில் வைத்து, ஏற்புடைய என் ஆணைப்படி பூலோகத்தில் வலிமைமிகு நீதியை நிலவச்செய்து, மகிழ்ச்சியோடு நாம் அரசாட்சிபுரிவதற்கும், சிறப்போடு வாழ்வதற்கும் உற்றதோர் திருமுடி இதுவல்லவா? என்று தம் பேராவலைப் பரதேவதையிடம் ஏக்கத்தோடு கூறினான்.
.
அதைக் கேட்ட பரதேவதையின் எண்ணத்திலும் அந்த ஆசை எழுந்தது. என்றாலும் அவள் சம்பூரணத்தேவனைப் பார்த்து நீங்கள் சொன்ன வார்த்தைகள் கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அப்படி நம்மை இறைவன் படைத்திருந்தால் இப்போது இருக்கின்ற இந்தத் தேவேந்திரன் இறந்தல்லவா போக வேண்டியிருக்கும்? என்று தேவேந்திர பதவிக்கான தகுதியை மறைமுகமாக சம்பூரணத் தேவனுக்கு உணர்த்தினாள். அதனால் அதிர்ச்சி அடைந்த சம்பூரணத் தேவன் ஆற்றொணா அலைபோல் ஏக்கம் மிகுந்த பெருமூச்சு விடலானான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.03.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மகாலெட்சுமி மகரமாதல்
==========================
லட்சுமியைத் தானழைத்து ஏதுரைப்பா ராதிமுதல்
சச்சுடராய் நின்ற தருணத் திரவியமே
இதுமுன் பிறப்பு இருந்தா யுருப்பிணியாய்
மதுவினியப் பெண்ணே மாயக் கலியறுக்க
நான்நிச்சித் திருப்பதினால் நாயகியே நீயுமொரு
பூனிரைச்சப் பொன்மகரப் பெண்மயில்போல் நீவளர
அலையி லறுமுகவன் அவன்பதியி னாழிதனில்
நிலையிலே நின்று நீவளரு கண்மணியே
நீவளரச் சூழ நிறைந்ததங்க மாமணியால்
பவளக்கால் மண்டபமும் பவளமணி மேடைகளும்
தேனினிய மண்டபமும் தேரும்பூங் காவனமும்
சூழ அரங்குவைத்துத் தெய்வரம்பை சூழவைத்து
காளமொடு பேரிகையுங் கண்ணாளர் சூழ்ந்துநிற்க
அகரத் தெருவும் அரம்பையர்கள் தந்தெருவும்
சிகரத் தெருவும் சேர்த்துவைப்பே னுன்சூழ
நித்தம் வலம்புரிகள் நின்றுவுனைச் சூழ்ந்து
தித்தியென வேமுழங்கி சேவிக்க வைத்திடுவேன்
கோட்டைகள் சூழக் கோடிமண்டப முகித்து
வீட்டலங் காரம்போல் வேலையிலுந் தருவேன்
உந்தனுட மேனி உரைக்கெளிதாத் தங்கமெனச்
செந்தழல்போல் மகரச் சிலைபோல் வளர்ந்திருநீ
.
விளக்கம்
=========
சிவபெருமானிடம் உங்கள் எண்ணப்படி நல்லதாகவே நடக்கும் என்று சொன்ன மகாவிஷ்ணு, அடுத்த ஏற்பாடாக மகாலட்சுமியை அழைத்துச் சொல்லுகிறார். தெளிவான ஒளியாய்ச் சுடர்விடும் தருணத் திரவியமே, என்னுடைய தேவியே, இந்தக் கலியுகத்திற்கு முன்பு நிகழ்ந்த துவாபரயுகத்தில் நீ உருப்பிணியாய் (ருக்குமணியாக) அவதரித்திருந்தாய்.
.
அமிழ்திலும் இனிய மாதே, இப்போது நான் கலியாகிய மாய்மாலத்தை அழித்து ஒழிப்பதற்கு முடிவெடுத்துவிட்டேன். எனவே, என்னுடைய நாயகியாகிய நீயும், இப்போது பேரழகுப் பொன்மகரப் பெண்மயில்போல் முருகபெருமான் அருளாட்சி புரிந்து கொண்டிருக்கும் திருச்செந்தூர் கடலினுள் வளர வேண்டும்.
.
என் கண்ணின் மணியாகிய நீ, கடலினுள் பொன்மகரச் சிலையாக வளர வளர உன்னைச் சூழ்ந்து தங்க நவரத்தினங்களான மண்டபங்களும், தேனிலும் இனியதாய் விரும்பத்தக்க மண்டபங்களும் தெருக்களும், சிங்காசன மேடையும், அவற்றைச் சுற்றிலும் பலவிதமான அரங்குகளும் வளரும். அது வளருமளவில் தெய்வ ரம்பையர்களையும் சூழ வைத்து, அத்துடன் எக்காளமொடு பேரிகையும் முழங்க சித்திர வல்லுநர்களெல்லாம் உன்னைச் சுற்றிச் சேவித்து நிற்க, அகரத்தெரு, அரம்பையர்கள் தெரு, சிகரத்தெரு போன்ற தெருக்களெல்லாம் உன்னைச் சுற்றிலும் உருவாகச் செய்வேன்.
.
தினந்தோறும் வலம்புரிகள் முழங்கி உன்னை வணங்கும், உன்னைச் சுற்றிலும் கோட்டைகள் அமைத்து, கொடி மரமும், கொடிமர மண்டபமும் முகித்து வீட்டு அலங்காரம் போல் பல வேலைகளைச் செய்து தருவேன். அங்கே உன்னுடைய திருமேனியோ உரசிப் பார்க்க வேண்டியதில்லாத் தங்கமாகச் செந்தழல்போல் மின்ன மகரச்சிலையாக நீ வளர்ந்துயிரு.
.
.
அகிலம்
========
கலியுகத்தை முடிக்கக் கண்ணான ஒருயிரை
வலியுடனே யுன்னுடைய வயிற்றில் பிறவிசெய்து
நாட்டு நருளின் நகர்சோ தனைபார்த்துத்
தீட்டுக் கலியறுத்துச் செவ்வுமனு தானெடுத்துத்
நாடுன் மகன்றனக்கு நல்லமுடியுங் கொடுத்துத்
தேடுந் தர்மச்சீமை செலுத்தசெங் கோல்கொடுத்து
அரசாள வைக்கவொரு ஆண்பிள்ளை நீபெறவே
துரைசானி போவெனவே சொன்னார்கா ணம்மையுடன்
.
விளக்கம்
=========
நீ மகரச் சிலையாக வளர்ந்திருக்கும்போது, கலியுகத்தை முடிப்பதற்காகக் கண்ணான ஓர் உயிரை, வலிமையுடையதாக உன் வயிற்றில் பிறவி செய்து, அந்த குழந்தையின் மூலமாக உலக மக்களின் மனங்களில் படிந்திருக்கின்ற அழுக்கான கலியைத் துடைத்து, அவர்களைத் தூய்மையான மக்களாக்கிய பின்பு உன்னுடைய மகனுக்கு இந்த உலகத்தையும், உலகத்தை அரசாளுவதற்கான மேன்மையான திருமுடியும், நாம் விரும்புகின்ற தர்மயுகத்தை உருவாக்குவதற்கான செங்கோலும் கொடுத்து அரசாள வைக்கவேண்டும். அந்த ஆண்பிள்ளை உன் மூலமாகப் பிறக்க வேண்டும். எனவே மேன்மகளே ! நீ திருப்பாற்கடலுக்குள் மகரச் சிலைபோல் வளரச் செல்க என்று மகாலட்சுமி தேவியிடம் கூறினார்.
.
.
அகிலம்
மகாலட்சுமியின் கேள்விக்கு மகாவிஷ்ணுவின் பதில்
====================================================
கேட்டுமிக லட்சுமியும் கிளிமொழிவாய் தான்திறந்து
நாட்டுக் குடையவரே நாரா யணப்பொருளே
மகரச் சிலையாய் வாரிதனில் நான்வளர்ந்தால்
சிகரநற் கோபுரமே திருவுளமே நீர்தானும்
வருகுவ தென்னவித மாக வுருவெடுத்து
அருகில் நீர்வருக அடையாள மென்னவென்றாள்
.
விளக்கம்
========
மகாவிஷ்ணு கூறியதைக் கேட்ட மகாலட்சுமி, கிளிபோன்று மொழி பேசும் தம் திருவாயால், உலகையே தம் உடமையாகக் கொண்டுள்ள நாராயணப் பரம்பொருளே ! நான் திருப்பாற் கடலுக்குள் மகரச் சிலையாக வளர்ந்தால் உயர்ச்சி மிகுந்த கோபுரமே திவ்விய சித்தமே தாங்கள் என்னிடம் என்ன விதமாக வடிவெடுத்து வருவீர்கள். நீங்கள் என் அருகில் வரும்போதுள்ள அடையாளத்தை என்னிடம் இப்போது சொல்லங்கள் என்று மகாலட்சுமி கேட்டாள்.
.
.
அகிலம்
=======
அப்போது அய்யா ஆனந்த மேபெருகி
செப்புகிறோ மென்று திருவோ டிதுவு ரைக்க
மூன்று சடையில் முறுக்குச்சடை யொன்றெனவும்
பண்டுள்ள சூரியர்கள் பதிந்திருக்கு மென்விழியில்
நெற்றி தனில்பிறையும் நெடியவட அக்கினியும்
சுற்றிக் கனல்மேனி துய்யமாற்றெண் ணாயிரமாம்
பளிரெனவே லோகம் பதினாலுக் கோருருவாய்த்
துளிரெனவே வாரிச் சூழல வெகுகனலாய்க்
காதம் பன்னிரண்டில் கண்டகலி யன்றெரிய
தீதக் கனலாய்ச் செயகுண்டமும் பதித்துக்
காலில் தர்மமணியைக் கலிரெனவே தண்டையிட்டு
மேலில்பல வேதமதை மின்னுடம்பாக விரித்துப்
பெண்ணரசே நான்வருகும் பெருமைக் கடையாளம்
கண்ணரசே நீயுமென்மேல் கருத்திருந்தால் பிழைப்பாய்
அப்படித்தா னென்பிறவி அருகே வருகையிலே
இப்படியே வந்து இருபேரு மோர்பிள்ளைபெற்று
நாட்டுச் சோதனைக்கு நாமனுப்பித் தாம்பார்த்துக்
கோட்டிசெய்த பாவி குறுங்கலியைத் தானெரித்து
அதின்மே லுனக்கும் எனக்குமிகு ஆனந்தம்
மதுவாக ஈன்ற மதலைநா டாளுமடி
என்று பிறவிக்கு ஏற்றஅடையா ளமுரைத்து
நன்றினிய மாதே நடப்பதற்குச் சங்கடமேன்
.
விளக்கம்
=========
மகாலட்சுமியின் கேள்வியால் மகிழ்ச்சி அடைந்த மகாவிஷ்ணு, சொல்லுகிறேன் கேள் என்று நிகழவிருக்கும் நிசழ்ச்சியினைத் திருமகளாகிய மகாலட்சுமியிடம் சொல்லுகிறார். தேவி, நீ திருப்பாற்கடலுக்குள் மகரச் சிலையாக வளர்ந்திருக்கும்போது, என்னிடம் சிவபெருமானும், பிரம்மதேவனும் ஒருசேரத் திரண்ட பரப்பிரம்மமாக வருவோம்.
.
அப்போது என் கண்களில் ஞான சூரியர்கள் பதிந்திருப்பர். என்னுடைய நெற்றியிலோ, பிறை வடிவச் சந்திரனும், வடவாமுக அக்கினி என்னும் ஊழித்தீயும் ஒளிப்பிழம்பாகி என் மேனியைச் சூழ்ந்து எண்ணாயிரம் தூய்மைத் தரம்வாய்ந்த அக்கினிச் சுவாலையெனப் பிரகாசிப்பேன். அந்நிலையில் என்மேனி பதினான்கு லோகமும் நிறைந்த விஷ்வரூபமாகத் தெரியும். அதன் வெப்பத்தால் கடல் நீரெல்லாம் நெருப்பாகக் கொதிக்கும்.
.
நீ மகரச் சிலைபோல் வளரப்போகும் திருச்செந்தூர் கடலிலிருந்து நேர்மேற்காக ஏழு காதம் அதாவது, எண்பத்து நான்கு மைல்தொலைவில் திருவாங்கூரை ஆண்டு கொண்டிருக்கும் கலியரசன் அன்றே எரித்தொழிவதற்கான சீதாங்க பாஷாண வெற்றிக் குண்டலத்தை என் காதுகளில் அணிந்தும், கணீர் கணீரென ஒலிக்கின்ற தர்ம மாமணிகளைக் காலில் தண்டையாக அணிந்தும், எல்லா வேதங்களும் என் மேனி முழுவதும் மேவி மிளிரும் நிலையோடு நான் உன் அருகே வருவேன்.
.
பெண்ணரசே ! நான் உன்னருகே வருகிறேன் என்பதற்கான பெருமைக்குரிய அடையாளங்கள் இதுவேயாகும். இத்தகைய என் வரவை நீ எதிர்கொள்ள வேண்டுமானால், என் கண்ணரசே, நீ இன்று முதல் எந்நேரமும் என்னுடைய நினைவாகவே இருக்க வேண்டும். அப்படிக் கருத்தாக இருந்தால் மட்டுமே நீயும் பிழைப்பாய்.
.
இவ்வண்ணமாக நான் உன்னிடம் வந்து, நாம் இருவரும் ஒருமித்து, ஒரு பிள்ளையைப் பெற்று இந்த யுகத்தைப் பரிசோதிப்பதற்காக உடனே அனுப்பி வைத்து, குறுகிய எண்ணங்களோடு உலகுக்குக் கேடு செய்து கொண்டிருக்கின்ற பாவக் கலியை அடியோடு அழித்து, நாம் அமுதமென ஈன்ற மதலைக்கு முடிசூட்டி உலகாள வைத்து, நாம் உவகை கொள்ளவேண்டும் என்று வைகுண்ட அவதாரத்திற்கான ஏற்புடைய அடையாளங்களை மகாலட்சுமியிடம் உரைத்த மகாவிஷ்ணு மீண்டும் லட்சுமியைப் பார்த்து நன்றினிய மாதே, நாம் இச்செயலில் ஈடுபடப்போவது குறித்து உனக்கு ஏதேனும் வருத்தம் உள்ளதோ என்று இதமாகக் கேட்டார்..
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
காளிதேவியின் சிறைவாசத்தால் வாதை, பேய்கள் புலம்பல்.
========================
வருந்தாத கூளிகணம் வாதைவிடு பேய்களெல்லாம்
நாச்சியார்க் கிச்சிறையால் நமக்கென்ன கேடோகாண்
கேச்சியாய்த் தேசமதுக் கென்னகேடோ அறியோம்
என்று சிலபேய்கள் எண்ணியெண்ணி யேதிரியும்
மூன்று முறுக்குள்ள மூளிப்பே யேதுசொல்லும்
கைவாய்த்து மாகாளி கவிழ்ந்திருந்த ஏதுவினால்
மெய்வாய்த்து தென்று விளியிட்டுக் கொண்டோடும்
இப்படியே பேய்கள் எண்ணஞ்சில திண்ணமுமாய்
அப்படியே காளி அவள்சிறையி லேயிருக்க
.
விளக்கம்
=========
காளிதேவிக்கு சிறைவாசம் ஏற்பட்ட செய்தி, கூளிகணங்கள், வாதை, மற்றும் பெய்களுக்கெல்லாம் தெரிந்தது. ஆகவே, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று எதைப்பற்றியும் கவலைப்படாமல் இருந்த கூளி கணங்களும். வாதைகளும், பேய்களும் காளியின் சிறை வாசத்தை நினைத்து அஞ்சின.
.
சகல வல்லமைகளும் உள்ள காளி நாச்சியாருக்கே சிறை வாசம் சிக்கியுள்ளது என்றால், இனிமேல் நமக்கெல்லாம் என்னென்ன இன்னல்கள் ஏற்படப் பொகிறதோ என்று வருந்திப் புலம்பின. இன்னும் சில பேய்கள், கேச்சி, கேசி சூதகன், கேசிகை என்று போற்றப்படுகின்ற மகாவிஷ்ணுவின் மாய்கையினால் பேய் உலகிற்கு பேரழிவு ஏற்படப் போவதை நினைத்து நினைத்து நிலைகுலைந்தன.
.
இயல்பாகவே வலிமையும் மூர்கத்தனமும் உள்ள சில, மூளிப் பேய்களோ, காளி சிறையில் அகப்பட்டு விட்டதால் இனி நாம் நமது மனம் போல் செயல்படலாம் என்று கூவி ஊளையிட்டுக் கொண்டாடித் திரிந்தன. இவ்வண்ணமாக பேய்கிள்ன நிலைப்பாடும் காளிதேவியின் சிறைவாசமும் அமைந்திருந்தது.
.
.
அகிலம்
========
கலியை அழிப்பது பற்றி சிவபெருமானும் மகாவிஷ்ணுவும் ஆலோசித்தல்
==========================================================================
நல்லநா ராயணரும் நாடுஞ் சிவனாரை
வல்லப் பொருளே மறைகாணா தோவியமே
காளி சிறைதான் கவிழ்ந்திருக்கும் ஞாயம்வந்தால்
ஆழிவளை வையகத்தில் ஆர்க்குச் சுகம்வாய்க்கும்
முதற்றான் கலியை முடிக்கப் பரகாளி
விதத்தமுள்ள அக்கினியில் மிகவே சிறையிருக்கப்
பார்த்துநா மிங்கிருக்கப் படுமோகா ணீசுரரே
சாற்றும்நீ ரின்னதென்று சத்திகொண்ட ஈசுரரே
உடனேதான் ஈசர் உரைக்கிறா ரன்போரே
கடனோகா ணென்னோடு கலங்குமொழி பேசுவது
நானோ தடுத்தேன் நாட்டுக்கலி தீட்டறுக்க
ஏனோகாண் மைத்துனரே என்னோடு பேசுவது
எப்போ கலியழித்து எங்களுக்கு நற்பேறு
எப்போ தருவீரென்று எண்ணிமிக வாடுறோமே
தீட்டை மிகக்கழித்துச் சிவஞான முத்திதந்து
வீட்டையெப்போ கயிலை விளக்குவீ ரென்றுமிக
தவித்து முகம்வாடித் தானிருக்கும் ஞாயமதும்
குவித்து முகம்மலர்ந்து கொள்ளுவதுங் காணலையோ
என்றே காபரமும் எடுத்துரைக்க எம்பெருமாள்
நன்றென்றா கட்டெனவே நாரணருங் கொண்டாடி
.
விளக்கம்
=========
அப்படியிருக்க, மகாவிஷ்ணு, சிவபெருமானைப் பார்த்து, அனைத்து வல்லமையும் உடைய அரும்பொருளே ! வேதங்களாலும் விரித்து உரைக்க முடியாத சித்திரமே ! காளிதேவிக்கே இவ்வாறு கடுமையான சிறையில் கவிழ்ந்து இருக்கக்கூடிய நிலைமை ஏற்பட்டுவிட்டதாலும், இனி இந்தக் கடல் சூழ்ந்த வையகத்தில் யாருக்கு நிம்மதியான வாழ்க்கை அமைய முடியும்.
இந்த உலகத்தை வியாபித்திருக்கும் கலியாகிய மாய்கையைக் கரைத்து ஒழிப்பதற்கு முதன்மை வகிக்க வேண்டிய பத்திரகாளியே கடுமையான அக்கினிச் சிறையில் அடைந்திருக்கும் நிலையில் நாம் கலியை அழிப்பதற்கு எந்த உபாயமும் செய்யாமல், இங்கே அமைதியாகக் கலியின் செயல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது நல்லதல்ல.
.
ஆகவே, கலியை அழிப்பதற்கு நாம் என்ன செய்யவேண்டும் என்பதை சகல வலிமையும் உடைய சிவபெருமானே நீர்தான் சொல்லவேண்டும் என்று மகாவிஷ்ணு சிவபெருமானிடம் வேண்டினார்.
.
மகாவிஷ்ணுவின் உரையில் உறைந்திருந்த உட்கருத்தினை உணர்ந்த சிவபெருமானோ, மகாவிஷ்ணுவைப் பார்த்து, மைத்துனரே, என்னோடு கலியை அழிப்பதைப் பற்றி பேசவேண்டுமே என்று கடனைக் கழிப்பதற்காக இத்தகைய கலவரமான உரையாடலை நடத்துகிறீரா?
.
இந்த உலகத்தையே உருக்குலைத்துக் கொண்டிருக்கும் சூதகமான கலியை அழிக்கக்கூடாது என்று நானா தடுத்துக் கொண்டிருக்கிறேன். கலியை அழிப்பது பற்றி என்னோடு ஏன் கலந்துரையாட வேண்டும்?
.
கலியை அழித்து எங்களுக்குகெல்லாம் எப்போது நற்கதி அருள்வீர் என்று நாங்களெல்லாம் நினைத்து நினைத்துச் சோர்ந்து போய் இருக்கிறோம். உலகத்தை கவ்விப் பிடித்திருக்கும் கலியாகிய அழுக்கைத் துடைத்து தெய்வத்தெளிவும், சிறப்பும் அருளி எமது இருப்பிடமாகிய கயிலையை எப்பொழுது தூய்மைப் படுத்துவீர் என்று ஏங்கிக் கொண்டே இருக்கிறேன்.
.
நான் இத்தகைய ஏக்கங்களோடு தவித்துக் கொண்டு இருப்பதையும், அத்தனை தவிப்பையும் அடக்கிக் கொண்டு சந்தோசமாக இருப்பதுபோல் காட்சியளிப்பதையும் நீர் அறியவில்லையா? என்று சிவபெருமான் எடுத்துக் கூறினார். அதைக் கேட்ட மகாவிஷ்ணு எல்லாம் உங்கள் எண்ணப்படி நல்லதாகவே நடக்கும் என்று மனமகிழ்ச்சியோடு கூறினார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 27.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
பத்திரகாளிக்குச் சிறை
======================
மாகாளி யென்ற வடபத்தி ரகாளி
ஓகாளி யென்ற உயர்ந்த பலக்காரி
சென்றாள் கயிலை சிவஅய்யா நாதனிடம்
நன்றான கன்னி நாரா யணரிடத்தில்
வந்து விழுந்து மண்ணி லவள்புரண்டு
சந்துபயில் மாயவரே தான்பிழைத்தேன் நானுமக்கு
உன்மக்கள் சான்றோர் உற்றமக்க ளேழதிலே
நன்மையற்ற சோழன் நாடும்பழி ரண்டேற்றான்
கண்டு அடியாள் கரிகாலச் சோழனுட
மன்னுதனில் பன்னிரண்டு ஆண்டுமழை பெய்யாமல்
சாபித்தேன் சோழனூர் தட்டழியப் பட்டுழற
பாவியவ னூரைப் பகலநரி ஓடவைத்தேன்
அல்லாமல் சோழனுட அக்கமறச் சாபமிட்டேன்
பொல்லாத சோழன்வழி பொடிப்படவே சாபமிட்டேன்
இத்தனையுஞ் சொல்லி ஈடழியச் செய்துவிட்டுப்
புத்திரரின் செய்திசொல்லப் புண்ணியரே வந்தேனென்றாள்
.
விளக்கம்
========
அப்போது அங்கே, மாகாளியாகிய வடபத்திரகாளி, அதிசயிக்கத் தக்கச் செயல்களையுடைய மிகுந்த பலக்காரி வருகிறாள். வந்ததும் அங்கே அமர்ந்திருக்கும் மகாவிஷ்ணுவின் பாதத்தில் விழுந்து, மண்ணில் புரண்டு அழுகிறாள்.
.
அனைத்துச் செயல்களுக்கும் ஆதாரமான மாயதி சூட்சனே, உமக்கு நான் பிழை செய்து விட்டேன். உம்முடைய மக்கள் சான்றோர்கள் ஏழு பேரில் இரண்டுபேரைக் கொடுமையாகச் சோழ மன்னன் கொன்று பழியேற்றுவிட்டான்.
.
அந்தப் பாதகனின் அச்செயலைத் தாங்க முடியாத நான், கரிகால் சோழனுடைய நாட்டில் பன்னிரண்டு வருடம் மழை பெய்யாமல் போகவும், அதனால் அவனுடைய நாட்டில் எல்லாமே பட்டுப் போகவும், தட்டழிந்து, தடுமாறிப் போகவும், அந்தப் பாவியின் நாட்டில் பகலில் நரி நடமாடுமளவில் அந்நாடு காடாகிப் போகவும் சாபமிட்டேன்.
.
அது மட்டும் அல்லாமல் அந்தச் சோழ மன்னனும் அவனுடைய குடும்பத்தாரும் ஒட்டு மொத்தமாக அழிந்து போகும் படி சாபமிட்டேன். இத்தனை சாபங்களையும் ஜபித்து, அவற்றை எல்லாம் நிறைவேற்றிவிட்டு, இப்போது உங்களுடைய மக்களின் செய்தியைச் சொல்வதற்காக உங்களை நாடி வந்தேன் என்றாள்.
.
.
அகிலம்
=======
அப்போத னாதி அய்யாநா ராயணரும்
செப்போடு வொத்தச் சிவனோடு சொல்லலுற்றார்
கேட்கலையோ யென்றன் கிருபைச் சிவனாரே
ஏற்கலையே யிந்த ஏந்திழையாள் சொன்னதுதான்
பிள்ளைக்கோர் தீங்கு பிழையாம லெப்போதும்
வள்ளல்களை நன்றாய் வளர்ப்பேனா னென்றுசொல்லி
மருட்டி விழித்து வாங்கினாள் மக்களையும்
திருட்டுமொழி பேசும் செய்தியைநீர் கேட்டீரோ
நான்தனிமை யல்லவே நால்பேரு முண்டல்லவோ
தான்தனிமை யாகிடினும் தப்பிதமென் றேபுகல்வார்
வானவருந் தானவரும் மறையவரும் சாட்சியதாய்
நானவளோ டேவாக்கு நவின்றல்லோ தான்கொடுத்தேன்
மக்களுக்கோர் தீங்கு வந்ததே யுண்டானால்
மிக்கச் சிறையுனக்கு மேவு மெனவுரைத்து
ஈந்தோ மதலை இவள்கையில் ஈசுரரே
மாய்ந்தவுட னாகிடினும் வந்துரைத்தா ளோசிவனே
சற்றும் பதறாமல் தானிருந்து இத்தனைநாள்
புத்திமேல் நெஞ்சரிப்பாய் போவோமென் றேகிவந்தாள்
தன்மதலை யென்றால் தலைவைத் திருப்பாளோ
என்மதலைக் கிவள்தான் இடறி விழுவாளோ
ஒருவர்பிள்ளைக் கொருவர் உடைமை யிடுவாரோ
கருதல் விருப்பம் காணுமோ மற்றோர்க்குப்
பெற்றகும்பி யல்லோ பெருங்கனல்போல் மீறுவது
மற்றோர்கள் கும்பி வருந்திக் குமிறிடுமோ
பாவியவன் கொன்று பன்னிரண் டாண்டுவரை
ஆவி யறிந்திலையே ஆரும்வந்து சொல்லலையே
தாய்தகப்ப னில்லார்போல் தயங்கினது கண்டோமோ
சேய்பரனுக் கேராத செய்த பழவினையோ
என்றாதி நாதன் ஏந்திழையைத் தான்பார்த்துச்
சென்றாதி வேந்தர் செடத்தோ டுயிர்திரும்பி
எழுந்திருக்கு மட்டும் இருநீ சிறைதனிலே
குளிர்ந்த திருமேனி கூறினா ரந்தரிக்கு
கேட்டுமா காளி கிலேச மிகவடைந்து
தீட்டும்வட வாமுகத்தில் செய்யவன்னி மண்டபத்தில்
இருந்தாள் தவசு ஈசன் செயலெனவே
.
விளக்கம்
=========
அதைக் கேட்டதும், ஆதியும் அந்தமும் இல்லாத மகாவிஷ்ணு, சிமிழ் போன்ற சிவபெருமானைப் பார்த்து, எனக்கு அனைத்துக் கிருபைகளையும் அருள் பாலிக்கும் சிவபெருமானே ! இந்தப் பத்திரகாளி சொல்லுவதைக் கேட்டீர்களா? இந்தப் பெண்ணின் பேச்சு நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக உள்ளதா?
.
என்னுடைய பிள்ளைகளுக்கு எவ்விதமான இன்னல்களும், இடையூறுகளும் ஏற்படாத வண்ணம் பாதுகாத்து வளர்ப்பேன் என்று என்னிடம் வாக்குறுதியளித்து, என் பிள்ளைகளை என்னிடமிருந்து வாங்கினாள்.
.
அப்போது மருட்டி விழித்தவள் இப்போது திருட்டு மொழி பேசும் செய்தியை நீர் கேட்டீரோ? நான் என்னுடைய பிள்ளைகளை இவளிடம் கொடுக்கும்போது நான் தனி ஒருவனாகக் கொடுக்கவில்லை. அதற்குச் சாட்சிகளாகப் பலர் உள்ளனர்.
.
நான் தனி ஒருவனாக என் பிள்ளைகளை அவளிடம் கொடுத்திருந்தால், நான் இப்போது சொல்லுவதைத் தப்பிதம் என்று கூடச் சொல்லத் துணியலாம். ஆனால், நான் இந்தப் பத்திரகாளியிடம் வாக்குறுதி வாங்கிவிட்டு, என் பிள்ளைகளைக் கொடுக்கும்பொது வானவரும், தானவரும், மறையவரும் சாட்சியாக இருந்தார்கள்.
.
பிள்ளைகளைக் கொடுக்கும்போது, என்னுடைய பிள்ளைகளுக்கு ஏதேனும் ஒரு இன்னல் ஏற்பட்டால் கூட மிகப் பெரிய சிறைவாசம் உனக்கு சித்திக்கும் என்று சொல்லித்தான் இவள் கையில் என் பிள்ளைகளைக் கொடுத்தேன்.
.
சிவபெருமானே, என் பிள்ளைகள் இறந்த உடனேயாவது வந்து சொன்னாளா? இத்தனை நடந்துங்கூட கொஞ்சமும் அச்சமில்லாமல் இவ்வளவு காலமும் இருந்துவிட்டு, இப்போது அவளுடைய புத்தி மனத்தை அச்சுறுத்தியதால் சரி எதற்கும் போய்ப் பார்ப்போம் என்ற எண்ணத்தோடுதான் இங்கே வந்திருக்கிறாள்.
.
அவள் பெற்ற பிள்ளைகளாக இருந்திருந்தால் இவ்வளவு பொறுமையாக இருந்திருப்பாளா? என் பிள்ளைகள் என்பதால் தானே தட்டிக் கேட்காமல் இருந்திருக்கிறாள். மாற்றான் பிள்ளைகளுக்காக மற்றொருவர் தம் உடமைகளை இழக்க முன்வரமாட்டார்கள். பெற்றவர்களுக்குப் பிள்ளைகளிடம் இருக்கும் கருதல் மனப்பான்மை மற்றவர்களுக்கு இருக்காது தானே. பெற்ற வயிறுதானே பிள்ளைக்கு ஒரு தீங்கு என்றதும் பெரும் நெருப்பாய்ப் பற்றி எரியும். மற்றவர்கள் வயிறு வருந்திக் குமுறாது.
.
பாவி அந்தச் சோழன் என் பாலகர்களைக் கொன்று பன்னிரண்டு ஆண்டுகள் ஆகியும் என் ஆன்மாவிற்குத் தெரியாமல் போய்விட்டதே. யாரேனும் வந்து என்னிடம் சொல்லவும் இல்லையே, தாய், தகப்பன் இல்லாத பிள்ளைகளைப் போல் என் பிள்ளைகள் திகைத்திருப்பார்களே. இவை யாவும் பரமனுக்கும் தெரியாமல் நடந்த பழவினையோ என்று சொல்லியவாறு பத்திரகாளையைப் பார்த்து, மாகாளியே இறந்துபோன இரண்டு பிள்ளைகளும் உடலோடு உயிர் திரும்பி எழுந்து வரும் காலம் வரை நீ சிறையிலே இரு என்று மகாவிஷ்ணு பத்திரகாளிக்கு உத்தரவிட்டார்.
.
மகாவிஷ்ணுவின் இந்த உத்தரவால் அதிர்ச்சியடைந்த பத்திரகாளி, கைலாசத்தில் வடவாமுகத்தில் அமைந்துள்ள அக்னி மண்டபத்தில் ஈசனின் செயலால் இந்தச் சிறைவாசம் நமக்கு ஏற்பட்டது என்று நினைத்துக்கொண்டே சிறையில் இருந்தாள்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 26.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
வாக்குரைக்க கன்னியர்கள் மனமகிழ்ந்து கொண்டாடி
நாக்குரைப்பார் பின்னும் நாரா யணரோடு
நாங்கள்போய்ப் பிறந்தால் நம்முடைய நாயகமே
தாங்கள்வரு மென்றதற்குத் தருணமே தென்றுரைத்தார்
அப்பொழுது அய்யா நாராய ணருரைப்பார்
செப்புகிறார் கன்னியர்க்குச் சிறந்த தருணமது
ஆயிரத்தெட் டம்பலமும ஆன திருப்பதியில்
வாயிதமோ ரம்பலமும் வளர்பதியி லொன்றதுவும்
கெங்கையுட கண்ணும் கேள்விமன்னர் தஞ்சாவும்
சங்கை யழிந்து தலையழிந்த தவ்வாண்டு
வருவேன் தென்சுவர்க்க வடமேற்கு மூலையிலே
லிங்கமொன்றி லேமூன்று இணையாகத் தோன்றினவென்(று)
எங்கும் பிரகாசம் இட்டவ்வாண் டேவருவோம்
கண்டிடநீர் நான்வருகக் காரண மநேகமுண்டு
விண்டுரைக்கக் கூடாது மெல்லியரே யித்தருணம்
சொன்னத் தருணம் செவிகேட்டு நீங்களெல்லாம்
என்னை நினைந்து இருங்கோ வொருநினைவாய்
.
விளக்கம்
========
மகாவிஷ்ணுவின் உறுதி மொழியை உள்வாங்கிக்கொண்ட சப்தமாதர்கள் மீண்டும் மகாவிஷ்ணுவை நோக்கி, எங்களுடைய நாயகமே ! நாங்கள் பூலோகத்தில் போய்ப் பிறந்தால், எங்களை உங்கள் மனைவியர்களாக ஏற்பதற்குத் தாங்கள் எப்போது வருவீர்கள்? அந்தத் தருணத்தை எங்களுக்கு தெரியப் படுத்துங்கள் என்று வேண்டினார்கள்.
.
உடனே மகாவிஷ்ணு அதற்குரிய அருமையான தருணத்தை அன்போடு சொல்லுகிறார். சப்தமாதர்களே ! நீங்கள் பூலோகத்தில் வாழும்போது ஆக்ஞா, விசுத்தி, அநாதகம், மணிபூரகம், சுவாதிஷ்டானம், மூலாதாரம் ஆகிய ஆறு ஆதாரங்களையும் சூரியகலை, சந்திரகலை, சுழிமுனை எனப்படும் பிராணயாகப் பயிற்சி மூலம் தன்வயமாக்கி, கொண்டை அமுது ஊறுகின்ற சகஸ்ராரப் பகுதியில் ஞானப் பார்வை பெற்று, கண், காது தோல், நாக்கு, மூக்கு ஆகிய பஞ்சேந்திரியங்களின் சுய இயக்கத்தைக் கொன்றொழித்து, அந்த ஐம்பொறிகளையும் உங்களுடைய கட்டுப்பாட்டிலாக்கி வைத்துக்கொண்டிருக்க வேண்டும். அப்படி நீங்கள் இருக்கும் காலத்தில் உங்களுடைய சந்திரகலையில் எமது வருகையை உணரும் நிலை உண்டாகும்.
.
எம்முடைய பூலோக வருகை எத்தகையதாய் இருக்குமென்றால் சகல வடிவ பரமாத்ம ஜோதியில், சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும் மூர்த்திகளும் ஐக்கியமாகி அண்ட சராசர ஐஸ்வர்யமாக வருவோம்.
எமது பூலோக வருகை உங்கள் ஏழு பேரையும் ஆட்கொள்வதற்காக மட்டுமல்ல. இன்னும் ஏராளமான காரண காரியங்கள் உண்டு. அவற்றை நான் பூலோகத்திற்கு வந்த பின்பு நீங்களே கண்டு உணர்வீர்கள்.
.
அந்தக் காரணங்களைச் சொற்களால் விளக்க முடியாது. உணர்வால் மட்டுமே உட்கொள்ளமுடியும். நான் இப்போது உங்களிடம் உரைத்தவை யாவையும் செவிமடுத்து அனுசரித்து, ஒரே நினைவாக என்னையே நினைத்துக் கொண்டு இருங்கள்.
.
.
அகிலம்
=======
இத்தருணங் கேட்ட இப்பொழு தேமுதலாய்
வடமேற்கு மேற்கும் வடக்குங்கால் நீட்டாதுங்கோ
என்று தருணம் இதுவுரைத்தார் கன்னிகட்கு
அன்று மடவார் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுகா ணெங்களையும் நாயகமே நீர்படையும்
வல்லப் பொருளே மறைமுதலே யென்றுரைத்தார்
உடனையா நாதன் ஓவியத்தா ரேழ்வரையும்
திடமான பூமியிலே செய்தர்ம அவ்வழியில்
பிறவிசெய்தார் மூவர் பிறந்தார்கள் கன்னியர்கள்
திறவி யொளிமாதர் தேசம தில்பிறக்க
நாரா யணரும் நல்லசிவ னுமையும்
சீராரும் நல்ல தெய்வத் திருமாதும்
கயிலை தனிலேகிக் கட்டான மண்டபத்தில்
ஒயிலாகக் கூடி உவந்திருக்கு மப்போது
.
விளக்கம்
========
என்னுடைய போதனைகளைக் கேட்ட இந்த தருணத்திலிருந்து, நீங்கள் பூலோகத்தில் பெண் மனுவாகப் பிறப்பெடுக்கும் சமயம் வரை, சந்திர கலை, சூரிய கலை, சுழு முனை ஆகிய ஆகிய சுவாச அசைவுகளில் நாட்டமற்று இருங்கள் என்று சப்தமாதர்களுக்கு மகாவிஷ்ணு எடுத்துக் கூறினார்.
அதைக் கேட்ட சப்த மாதர்கள், அளவற்ற ஆனந்தத்தோடு மகாவிஷ்ணுவைப் பார்த்து, எங்களுடைய நாயகரே நீங்கள் சொன்னபடியே எங்களைப் பூலோகத்தில் பிறவி செய்யுங்கள் என்றார்கள்.
.
உடனே, மகாவிஷ்ணுவும், சிவபெருமானும், பிரம்மதேவனும் பூலோகத்தில் சப்தமாதர்கள் பெற்ற பிள்ளைகளின் வழிக்குலத்தில் சப்தமாதர்களைப் பிறவி செய்வதற்கான ஏற்பாட்டினைச் செய்யலானார்கள், அதன்படியே சப்த மாதர்கள் பூலோகத்தில் பிறவியாயினர்.
.
இவ்வண்ணமாக சப்த மாதர்களைப் பூலோகத்தில், பிறவி செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்துவிட்டு, மகாவிஷ்ணுவும் சிவபெருமானும், உமையவளும், மகாலட்சுமியும் கயிலையங்கிரிக்குச் சென்று அவர்களுக்கான அலங்கார மண்டபத்தில் ஒய்யாரமாக எல்லாரும் மகிழ்ச்சியுடன் இருந்தனர்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar
#அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 25.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அப்போது வேதா அவர்தான் மிகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று செப்பினா ரன்போரே
இறந்தபிள்ளை ரண்டின் ஏற்றவுயி ரானதையும்
அறந்தழைக்கு மாகயிலை அறைக்குள் ளடைத்திருக்கு
மால்மக்க ளென்று மனமகிழ்ந்து நான்பதறி
வாலைமுனி யுயிரும் வானவர்கள் தன்னுயிரும்
ஆனதினால் பிறவி அமைக்கப் படாதெனவே
நானிதற் கஞ்சி நற்பதியில் வைத்திருக்கு
என்றுவே தாவுரைக்க எம்பெருமா ளேதுரைப்பார்
அன்று படைத்திலையே அநேகமனு வாகுமல்லோ
அஞ்சுமக்கள் பிள்ளை அவனியைம்பத் தாறதிலும்
மிஞ்சிப் பரந்து மேல்சான் றோர்பெருக்காய்
இப்பிள்ளை ரண்டும் ஏலமே நீர்படைத்தால்
கொப்புநூ றாயிரம்போல் கூடிப்பெ ருக்குமல்லோ
பாவி கெடுத்தான் படையாமல் நீர்கெடுத்தீர்
தாவிக் கெடுத்தான் சளக்கலியன் மாபாவி
இனியென் மக்களுயிர் இன்பமுடன் நீர்காத்து
மனுவராய்ப் பூமியிலே வைகைக்கூ டவ்வோடு
எழுப்ப வேணுமென்று யாம்நிச்சித்தி ருப்பதினால்
வெளுப்பாக அவ்வழியில் மேலுகத்தோர் தாம்பிறந்து
இன்பமுள்ள வானவரும் இவ்வழியில் வாழ்வதினால்
அவ்வழியி லவ்வழிகள் அநேகம் பெருகிடவே
செவ்வாக நிருமிப்போ திடீர்திடீ ரெனப்படையும்
என்றுசொல்ல மூலம் இசைந்துநல்ல வேதாவும்
நன்று நன்றென்று நருள்பிறவி செய்தனராம்
இப்படி யேபிறவி இவர்செய்வோ மென்றுசொல்லி
அப்பிறவி வேதா அமைத்தார் மனுப்பெருக
.
விளக்கம்
=========
பிரம்மதேவன், மகாவிஷ்ணுவைப் பார்த்து, திருமாலே, இறந்த பிள்ளைகள் இரண்டுபேரும் தங்களின் மக்கள் என்பதால் மனம் தளர்ந்த நான் பதற்றம் அடைந்துவிட்டேன். அவை இரண்டும் பரலோகத்து மனிவரின் உயிரும், தேவலோக வானவர் உயிரும் ஆகையால் மீண்டும் பிறவி அமைக்கலாகாதே என்று எண்ணி, மேலான அவ்விரண்டு உயிர்களையும் தர்மம் நிறைத்து இயங்குகின்ற உயர்வான கயிலாசத்தில் ஒரு திருவிடத் திருவறைக்குள் அடைத்து வைத்துள்ளேன் என்றார்.
.
பிரம்மதேவன் இவ்வாறு சொன்னதைக் கேட்ட மகாவிஷ்ணு, பிரம்மதேவனைப் பார்த்து, அடடே அவ்விரண்டு உயிர்களையும் அன்றே மறுபடியும் பிறவி செய்யாமல் விட்டு விட்டீரே. உடனே பிறவி செய்திருந்தால் அநேக மக்களாகப் பெற்றுப் பெருகி இருப்பார்களே. எஞ்சிய ஐந்து மக்களின் பிள்ளைகளும், தேசம் ஐம்பத்து ஆறிலும் பெற்றுப் பெருகிப் பரந்து இருப்பதைப் போன்று இவ்விரண்டு பிள்ளைகளின் பிற்கிளைகளும் கிளை கிளையாகப் பெருகிக் கோடிக்கணக்காக இருந்திருப்பார்களே.
.
அன்று சோழனென்ற பாவி அவர்களைக் கொன்று கெடுத்தான். நீரோ அவர்களை மீண்டும் படைக்காமல் கெடுத்துவிட்டீர். வஞ்சகக் கலி நீசப் பாவியோ என் மக்களை வலித்துப் பிடித்து வதைத்துக் கெடுக்கிறான்.
இதுவரை நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும். அந்த இரண்டு உயிர்களையும் வைகையில் மடிந்த அந்த உடலோடு மனுவோராய் எழுப்ப வேண்டும் என்று நான் நிச்சயித்து இருக்கிறேன். ஆகவே, அவ்வுயிர்களை பத்திரமாக வைத்துப் பாதுகாக்க வேண்டியது உம்முடைய பொறுப்பாகும்.
.
அத்துடன் அவ்விருவரின் வாரீசாகப் பிறந்து கள்ளங் கபடமில்லாமல் பூலோகக்தில் வாழ்ந்து கொண்டிருப்போரின் பிற்கிளைகளாக, கயிலாசத்திலும், தேவலோகத்திலும் இன்னும் பூவுலகில் பிறப்பிக்காமல் எஞ்சி இருப்போரை எல்லாம் திடீர் திடீர் எனப் பிறவி செய்து இவ்வழிக்குலத்தோர் பெருகிடச் செம்மையாகச் செயல்படுவீர் என்று பிரம்ம தேவனிடம் மகாவிஷ்ணு சொல்லுகிறார்.
.
மூலம் உரைப்பதை முற்றுணர்ந்த வேதா நல்லதென இசைந்து, கைலாச வாசிகளையும், தேவலோக வாசிகளையும் இறந்த இருவரின் பிள்ளைகளின் சந்ததிகளாகத் துரிதமாகப் பிறவி செய்யலானார்.
.
.
அகிலம்
=======
சப்த மாதர்கள் பூலோகப் பிறவி
===============================
உடனேநா ராயணரும் உள்ளங் களிகூர்ந்து
திடமான கன்னியர்கள் செய்முகம்பார்த் தேதுரைப்பார்
நீர்கேட் டதற்கு நிண்ணயங்கள் கண்டீரே
இனிநான் கேட்பதற்கு இன்னதென்று சொல்லிடுவீர்
உங்களைப்பூ லோகமதில் உடைய வழிக்குலத்தில்
நீங்களும் போய்ப்பிறக்க நிச்சித் திருப்பதினால்
ஏதுபெண்கா ளுங்கள்மனம் ஏதென்று டனேசொல்லும்
மாதுக ளெல்லாம் மனமகிழ்ந்து கொண்டாடி
எங்களுட நாயகமே எமையாளும் ரத்தினமே
செங்கருட வாகனவா தேவி மணவாளா
நீர் நிச்சித்த நினைவெள்ளுப் போலளவும்
சீர்பரன் முதலாய்த் தெரியாத சூட்சியதே
எங்களைப்பூ லோகமதில் எங்கள் வழிக்குலத்தில்
மங்களமாய்ப் பிறவி வகுப்போ மெனவுரைத்தீர்
பிறவிய துநாங்கள் பெண்மனுப் போல்பிறந்தால்
இறவி யாகாமல் இருக்க அருள்வீரோ
அல்லாமல் பின்னும் அடியார் மிகப்பிறந்தால்
வல்லாத நாயகமே வந்துநீ ரேற்குமட்டும்
மாதவிடை மாமணங்கள் மலர்ந்துறக்க மில்லாமல்
சீதமாய் மனுவோடு உறவாடிச் சேராமல்
மூடாம லாடை முகமினுக்கிச் சேராமல்
பாடாம லந்திசந்தி படுத்துத் துயிலாமல்
நன்மை யறியாமல் நளிப்பேச்சுக் கேளாமல்
தின்மை யறியாமல் தீன்ரசத்தைத் தேடாமல்
கொய்து புடவை குக்குளித்துச் சூடாமல்
மயிரு வளர்க்க மனதுவே றெண்ணாமல்
கொங்கை திரளாமல் கூறுடம்பு வீசாமல்
செங்கனிவாய்த் தேமல் தேகமதில் வீழாமல்
பக்குவ ஞாயப் பருவம்வந்து வாய்க்காமல்
மிக்குவ மான மிகுவாழ்வு சேராமல்
சுற்றுக் கிளைகள் தொடுத்தன்பு கொள்ளாமல்
ஒற்றுப் பிதற்றாமல் ஒருவர்முகம் பாராமல்
அல்லல்நோய் பிணிகள் அனுப்போலும் வாராமல்
தொல்லை வாராமல் சுகமுமிக வாராமல்
இந்த விதிப்படியே எங்களையும் நீர்படைத்துச்
சொந்தமுடன் வந்துநீர் தொட்டெடுத்து நன்மைதந்து
இரச்சிப்போ மென்று எமக்கு உறுதிபண்ணி
நிச்சித்துத் தர்மகுலம் நீர்பார்த்து தான்படையும்
என்றுகன்னி ஏழ்பேரும் இப்படியே சொல்லிடவே
அன்றுஆ திநாதன் அகமகிழ்ந்து கொண்டாடி
நல்லதுதான் பெண்ணேநீர் நம்மோடே கேட்டபடி
வல்லவித மானாலும் மாறாதென வுரைத்தார்
.
விளக்கம்
========
பிரம்மதேவன், சிவலோகத்தாரையும், தேவலோகத்தாரையும் பூலோகத்தில் விரைவாகப் படைக்க முற்பட்டதால் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, மனஉறுதி உடைய மடந்தையர்களான சப்தமாதர்களைப் பார்த்து, பெண்ணரசிகளே ! நீங்கள் என்னிடம் கேட்டதற்கு நான் எடுத்த நடவடிக்கைகளையும், தீர்மானத்தையும் கண்கூடாகக் கண்டீர்கள். இனி நான் உங்களிடம் கேட்டேனே அதுபற்றி என்ன சொல்லப் போகிறீர்கள்?
.
உங்களைப் பூலோகத்தில், நீங்கள் பெற்ற பிள்ளைகளின் வழிக்குலத்தில் பிறவி செய்யலாம் என்று நிச்சயித்து இருக்கிறேன். இதைப்பற்றி உங்களுடைய விருப்பம் என்ன? என்பதை உடனே சொல்லுங்கள் என்று மகாவிஷ்ணு சப்தமாதர்களிடம் கேட்டார்.
.
அதனால் மனம் மகிழ்ந்த சப்தமாதர்கள், அந்த சந்தோசப் பெருக்கோடு மகாவிஷ்ணுவிடம், எங்களுடைய நாதா ! எங்களை ஆளுகின்ற மாமணியே ! தாங்கள் நிச்சயித்த எண்ணத்தில் எள்முனை அளவுகூட சிவபெருமான் முதற்கொண்டு உலகில் எவரும் அறிய முடியாத அளவில் வலிமைமிகு சூட்சுமம் உடையவரே ! எங்களைப் பூலோகத்தில் எங்களுடைய வழிக்குலத்தில் மங்களமாகப் பிறவி செய்கிறோம் என்று சொன்னீர்களே, நாங்கள் பூலோகத்தில் உள்ள மனுக்குலத்தில் பெண்பிள்ளைகளாகப் பிறந்தால் அங்கே எங்களுக்கு மரணம் ஏற்படாமல் இருக்க அருள்புரிவீரோ...
.
அப்படி அருள் புரியாத பட்சத்தில் நாங்கள் பூலோகத்தில் மனுக்குலத்தில் பிறந்தால், வலிமை பொருந்திய நாயகமாகிய தாங்கள் பூலோகத்தில் வந்து எங்களை ஏற்றுக் கொள்கின்ற காலம்வரை, எங்களுக்கு மாதவிடாய் ஏற்படாமலும், திருமணம் நடந்துவிடாமலும், பருவகால மயக்கம் இல்லாமலும், சிற்றின்ப சேர்க்கை இல்லாமலும், தோல்சீலை அணிய வேண்டிய அவசியம் இல்லாமலும், சிகை அழகு ஏற்படாமலும், பொழுது சாயும் வேளையில் முணுமுணுத்துப் பாடாமலும், அந்நேரம் படுத்துத் தூங்காமலும், நல்லது கேட்டது பற்றி அறியாத நிலையிலும் யாரும் எங்களைக் கேலி செய்யாத முறையிலும், சுவையான உணவுகளில் நாட்டம் வராமலும், முறைப்படி கொசுவம் மடித்துப் புடவைக்கட்டத் தெரியாத நிலையிலும், கூந்தல் வளர்க்கும் எண்ணம் இம்மியும் இல்லாமலும், மார்பகங்கள் வளர்ச்சி அடையாத வண்ணமும், அழகை மிளிரச் செய்யும் சதை மினுக்கம் இல்லாமலும், பருவகாலத் தேமல் உடலில் ஏற்படாத வண்ணமும், பருவப்பெண் என்ற நிலை எங்களைச் வந்து அணுகாமலும், மிகுதியான திரண்ட வாழ்வு எங்களைச் சேராத நிலையிலும், சுற்றமோ, உறவோ எங்களிடம் அலாதி அன்பு கொள்ளாத அளவிலும், யாரைப் பற்றியும் கோள் சொல்லாத நிலையிலும் யாருடைய முகத்தையும் மோகித்துப் பார்க்க வேண்டியதில்லாவண்ணமும் துன்பமோ, நோய், நொம்பலங்களோ சிறிதளவு கூட இல்லாதவாறும், தொந்தரவுகளானாலும், நல்லவையானாலும் பெரிய அளவில் இல்லாத வகையிலும் தாங்கள் எங்களைப் பூலோகத்தில் பிறவி செய்யுங்கள்.
.
இவ்வண்ணமாக எங்களைப் பூலோகத்தில் படைத்து, தாங்களும் பூலோகத்தில் வந்து அவதரித்து, எங்களை உங்கள் மனைவியர்களாக்கி, எங்களுக்கு வாழ்வு தந்து காத்தருள்வேன் ஏன்று எங்களுக்கு வாக்குறுதி அளித்து, இவற்றை எல்லாம் மனதிற்கொண்டு எங்களுடைய வழிக்குலத்தில் எங்களைப் பிறவி செய்யுங்கள் என்று ஏழு மாதர்களும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
.
ஏழு மாதர்களின் வேண்டுகோளையும் கேட்டு மகிழ்ந்த மகாவிஷ்ணு, அவர்களைப் பார்த்து. நிங்கள் எம்மிடம் நல்ல வேண்டுகோளை வைத்துள்ளீர்கள். உங்களுடைய இந்த வேண்டுகோளின்படியே உங்களைப் பூலோகத்தல் பிறவி செய்ய உடன்படுகிறேன். இவை எவ்வகைக் காரணத்தாலும் மாற்றம் ஏற்படாது என்று சப்தமாதர்களிடம் மகாவிஷ்ணு வாக்களித்தார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 24.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மகாவிஷ்ணுவுக்கு சப்தமாதர்கள் இடட சாபம்.
===================
எங்களையுங் கற்பழித்து இந்த வனந்தனிலே
மங்கள சோபனமும் மறந்து மயிர்விரித்துத்
தூங்காமல் வாடி தினமும் மிகவுணர்ந்து
ஆங்கார மேமறந்து அவனியா சையறுத்துத்
தலைவிரித்துக் கலையைச் சதமென்று எண்ணாமல்
உலையில் மெழுகதுபோல் உறுவனத்தி லேநிலையாய்
வெயில்பனியிலு மேகத் துளிர்விழிக் குள்ளாகிக்
குயில்கூவும் வனத்தில் கோதையேழு பேரும்
நின்றோமே காட்டில் நீர்செய்த மாயமதால்
இனியெங்கள் மக்கள் ஏழ்வரையு மேழ்வழியும்
அநியாய முமடக்கி ஆனமக்கள் வம்மிசத்தைக்
கொத்தோடே சேர்த்தெடுத்துக் குறுங்கலியை யடக்கி
அரசாள மக்களுக்கு ஆனபதி ஈயும்வரைக்கும்
எங்களைப்போல் சுகமற்று இருப்பீர்காண் பண்டாரம்
மங்களமல் லால்கலி மாளும்வரை வாராது
என்று சபித்தார் ஏற்றகன்னி ஏழ்பேரும்
.
விளக்கம்
========
எங்களை நீர் கற்பழித்ததினால் எங்கள் சுபசோபனங்கள் யாவையும் மறந்து, இந்த வனத்தில் தலைவிரி கோலமாகவும், தூங்காமலும், சோர்வடைந்தும், ஒவ்வொரு நாளும் மிகப்பெரிய மன உளைச்சலோடும், எங்களுக்கே உரித்தான கர்வத்தை மறந்து, பூலோகத்தைப் பற்றிய எண்ணங்களைத் துறந்து, கூந்தலைச் சிதறவிட்டு, சுவாசத்தைக் கூட நிலையானதாகக் கருதாமல், உலையில் அகப்பட்ட மெழுகு உருகுவதைப் போல் திரட்சியான இந்தக் கானகத்தில் நிலையாக நின்றோம். வெயில், பனி, மழை அத்தனைக்குள்ளும் அகப்பட்டு குயில் கூவும் இந்த வனத்தில் நாங்கள் ஏழு பெண்களும் உம்முடைய சூழ்ச்சிக்குள் சிக்கியதால் இந்தக் காட்டிற்குள் நிலையாக நின்று விட்டோம்.
.
இனி இதைப்பற்றி நாங்கள் நினைக்காமல் இருக்கத் தக்க நிலையிலான ஏற்பாடுகளைச் செய்துவிடும். அதாவது, முதலில் அநியாயச் செயல்களுக்கு முடிவு ஏற்படுத்தி, குறுகிய புத்தியை உடைய கலி என்னும் கொடிய மாய்மாலத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் மாய்ந்துபோகச் செய்துவிட்டு, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும், அவர்களின் சந்ததியரையும் சேர்த்தெடுத்து அவர்களுக்கு அரசாட்சியும் தர்மபூமியும் அருள வேண்டும். எங்கள் வேண்டுகோளின்படி எம் மக்களுக்கு அரசாட்சியும் தர்மபூமியும் தரும் வரைக்கும் எங்களைப் போல் நீரும் எந்தவித சுகத்தையும் அனுபவிக்க முடியாதவராகவே இருப்பீர். உமக்கு எவ்வித சுபசோபனமும் இந்தக் கேடான கலி முடியும்வரை கிடைக்காமலே போகும் என்று சப்தமாதர்கள் மகாவிஷ்ணுவுக்குச் சாபம் கொடுத்தார்கள்.
.
.
அகிலம்
========
அன்றுநா ராயணரும் அவர்கேட்டுத் துக்கமுற்று
என்னசொல்லப் போறோம் யாம்தா மினியெனவே
வன்னத் திருமேனி மனதுநொந் தேதுசொல்வார்
பெண்ணேநீ ரேழ்பேர்க்கும் பிரமா அமைத்தபடி
எண்ணம் வந்ததல்லால் யானென்ன செய்தேனடி
ஆனால் கலியை அழிந்துமக்கள் தம்வழியை
நானாகச் சென்றெடுத்து நலங்கொடுக் கும்வரைக்கும்
துயர மெனக்குத் தொடுக்குமெனச் சாபமிட்டீர்
அசுரக் குடும்பம் அறுக்கும்வரை முன்னாளில்
ஈசரிட்ட சாபம் ஈதோடே வாய்த்துதடி
மாசங் கடந்து வரும்வரைக்கும் நீங்களுந்தான்
எங்கே போயிருக்க ஏழ்பேர்க்குஞ் சம்மதங்காண்
கொங்கை யினியழகக் கோதையரே சொல்லுமென்றார்
.
விளக்கம்
========
சப்தமாதர்களின் சாபத்தைப் பெற்ற மகாவிஷ்ணு, மிகுந்த கவலையுற்றார். இவர்களுக்கு என்ன பதில் சொல்வதென யோசித்தவாறு மனவேதனையோடு அந்த மாதர்களைப் பார்த்து. சொல்லுகிறார். மாதர்களே ! நீங்கள் ஏழு பேரும் எனக்குச் சாபம் தருவதென்பது நீங்கள் செய்த குற்றமோ, நான் செய்த தவறோ அல்ல. இவை யாவும் பிரம்மதேவன் அமைத்தபடியே நடந்தேறியுள்ளன. விதியின் விளைவால்தான் எனக்குச் சாபமிட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு வந்துள்ளது. அதற்கு நான் என்ன செய்வது?
.
ஆனால் நான் இந்தக் கேடு மிகுந்த கலியை அழித்து, நம்முடைய மக்களையும் அவர்களின் சந்ததியரையும் அரவணைத்துக் காப்பாற்றி அவர்களுக்கெல்லாம் நற்பேறு கொடுக்கும் வரை நீங்கள் இதுகாலம் வரை அனுபவித்ததைப் போன்ற துன்பங்களை நானும் அனுபவிக்க வேண்டும் என்று சாபமிட்டுள்ளீர்கள்.
.
இதுவும், அன்றொரு கால் சிவபெருமான் என்னப் பார்த்து அசுரர் குலத்தை அடியோடு அழித்து ஒழிக்கும் வரை உமக்கு ஓய்வில்லை என உரைத்தார். அன்று சிவபெருமான் சொன்னதற்கும் நீங்கள் இன்றெனக்கு இட்ட சாபத்திற்கும் ஏதோ ஒரு வகையில் சம்பந்தம் இருக்கிறது.
.
ஆனால், கலியை அழிப்பதென்பது நினைத்த மாத்திரத்தில் நிறைவேறிவிடும் காரியம் அல்ல. அதற்குத் வேதகாலக் கணக்குப்படி பார்த்தாலும் பல மாதங்கள் ஆகலாம். அதுவரைக்கும் நீங்கள் ஏழு பேரும் எங்கேபோய் இருக்கலாம் என்று நினைக்கிறீர்கள்? உங்கள் எண்ணத்தை என்னிடத்தில் சொல்லுங்கள் என்று தம் இனிய தேவியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்ட பாரளந்த பரம்பொருள் வாஞ்சையோடு கேட்டார்.
.
.
அகிலம்
=======
வைகையில் இறந்த இரு உயிர்கள் பற்றிய விவரம்
==================================================
அப்போது கன்னி அவரெல்லா மாராய்ந்து
செப்புகிறா ரந்தச் சிவபத்தர் தன்னுடனே
மக்கள்ரண்டு பேர்கள் மாண்டாரவ ருயிரை
அக்கமது செய்தீரோ அயலோவது ஞாயமென்ன
என்றுகன்னி ஏழ்பேரும் இரங்கித் தொழுதிடவே
அன்றுநா ராயணரும் ஆதிசிவ னுமையும்
தாதா மனமகிழ்ந்து சதுர்முகனைத் தானழைத்து
வேதாவே மக்கள்ரண்டை வெற்றியுள்ள வைகையிலே
கொன்றானே சோழன் குருநன்றி யைமறந்து
சென்றாரே மக்கள் சென்றவுயி ரெவ்விடங்காண்
.
விளக்கம்
=========
மகாவிஷ்ணுவின் வாஞ்சை மிகுந்த வார்த்தைகளைக் கேட்ட சப்தமாதர்கள் ஒருவரோடு ஒருவர் ஆலோசித்துவிட்டு, சிவநேசனாகிய மகாவிஷ்ணுவைப் பார்த்து, சோழப் பேரரசனால் மாண்டு போன எங்கள் இரண்டு பிள்ளைகளின் உயிர்களை என்ன செய்தீர்கள்?
.
இறந்த இரண்டு பிள்ளைகளின் வாரிசு வழியில் பிறவி செய்தீர்களா? அல்லது அயலார் வாரிசு வழியில் பிறவி செய்தீர்களா? அதைப்பற்றி எங்களுக்குத் தாங்கள் சொல்லப்போகும் விவரம் என்ன? என்று கேட்டனர்.
அதனால் மனம் மகிழ்ந்த மகாவிஷ்ணு, பிரம்மதேவனை வருவித்து, பிரம்ம தேவரே, வைகை ஆற்றில் சோழ மன்னன் குரு நன்றியை மறந்து என் மக்கள் இருவரைக் கொன்றானே, அந்த இரு உயிர்களும் இப்போது என்ன நிலையில் இருக்கிறது என்று கேட்டார்.
.
.
தொடரும்…. அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஏழாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 23.02.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
மக்கள்ரண்டு பேரும் மணஞ்செய்து வாழ்ந்தவரோ
பக்குவ வயசதிலோ பாழறுவான் செய்தவினை
கலியாணஞ் செய்த கண்மணிக ளானாக்கால்
வலியான மங்கையர்கள் மனஞ்சலித்து வாடுவரே
இட்ட வுடைமை இறக்கா திருப்பாரோ
கட்டின மங்கிலியம் கழற்றா திருப்பாரோ
இத்தனையுங் கழற்றாது இருக்கச் சிவன்செயலால்
புத்தி தனைக்கொடுத்துப் பெண்ணரசைக் காப்பாரோ
ஏதென் றறிந்திலமே எங்களுட தாயாரே
.
விளக்கம்
=========
இறந்துபோன இரண்டு பிள்ளைகளும் திருமணமானவர்களாக இருக்குமோ? வாலிப வயதிலே அந்தப் பாதகன் வஞ்சகமாகக் கொன்றிருப்பானோ? அவர்களுக்குக் கலியாணம் ஆகியிருந்தால் வாலிபமான அந்த மங்கையர்கள் மனம் வருந்தி வாடுவார்களே. அவர்களின் ஆடை ஆபரணங்களை எல்லாம் கழற்றி இரப்பார்களே. அவர்களுக்கு எம்பிள்ளைகள் கட்டின மாங்கல்யத்தையும் கழற்றியிருக்கக் கூடுமே. இவற்றையெல்லாம் கழற்றாமல் இருக்க சிவபெருமான் அவர்களுக்கு அறிவைக் கொடுத்திருக்க வேண்டுமே, எங்களுடைய அன்னையாகிய உமாதேவியே, என்னதான் நடந்தது என்று எதையும் நிதர்சனமாக அறிய முடியவில்லையே.
.
.
அகிலம்
=======
கோதண்ட மாதாவே கோவேயெந் தாயாரே
வனத்தில்வந் தெங்களுட வாட்டமெல்லாம் தீர்த்தீரென்று
புனத்தில்கனி கண்டதுபோல் பிரியமுற்றோ மாதாவே
கைப்பிடித்த பண்டாரம் கட்டுரைத்த சொற்கேட்டு
மெய்ப்பிடித்த மெல்லாம் மிகவுழறு மாதாவே
கன்னிப் பருவமதில் கைமோச மானதினால்
உன்னி மனதில் உளறி யுளங்கலங்கிப்
பாராமல் மக்களையும் பார்மீதி லேகிடத்திச்
சீரா கவனத்தில் சென்றோ மிகநாணி
பாவி கெடுவான் பழிசெய்வா னென்றுசொல்லித்
தாவியே யெங்கள்மனம் சற்று மறியாதே
.
விளக்கம்
=========
கோதண்டமுடைய தாயே, எங்களையெல்லாம் வைத்து ஆட்சிபுரிகின்ற மாதாவே! நாங்கள் தவம் புரியும் இந்த வனத்திற்கு எங்களைத் தேடி நீங்கள் வந்ததால் எங்கள் துயரங்கள் யாவும் தீர்த்துவிட்டீர்கள் என்று கிடைத்தற்கரிய கனி கிடைத்தாற் போன்று மட்டில்லா மகிழ்ச்சி கொண்டோம் மாதாவே ! ஆனால், எங்களை கைப்பிடித்த பொக்கிஷம் சொன்ன செய்திகளைக் கேட்டதும் எங்கள் உடலின் ஒவ்வொரு அங்கமும் தடுமாறுகிறது தாயே.
.
கன்னிப் பருவத்திலே நாங்கள் மகாவிஷ்ணுவின் மாய்கையினால் கற்பை இழந்துவிட்டதை நினைத்து நினைத்து மனம் இடிந்து ஒடிந்து போய்விட்டதால் எங்கள் பிள்ளைகள் என்று கூட நினைத்துப் பார்க்க முடியாதவர்களாக அந்த வனத்தரையில் படுக்க வைத்துவிட்டு வெட்கம் தாளாமல் தவம் செய்யக் கானகம் தேடிச் சென்று விட்டோம். சோழனென்ற கெடுவான் இப்படி எம்பிள்ளைகளில் இரண்டைப் பலிகொள்வான் என்று எங்கள் மனம் சற்றும் அறியாமல் போய்விட்டதே.
.
.
அகிலம்
=======
எங்களையு மீடழித்து எம்மக்க ளேழ்வரையும்
சங்கை யழிக்கத் தலையெடுத்தா ரிக்கூத்தர்
நச்சுக் களையாய் நாங்கள்வா ழுமிடத்தில்
சச்சுருவ மிட்டுவந்து சதித்தாரே பண்டாரம்
எங்களுக் கென்றிவரைப் படைத்தா ரோபிரமன்
கங்கை யணிசிவனார் கேட்டு மகிழ்ந்தாரோ
இத்தனைக் கூத்தும் இக்கூத்தெல் லாம்பார்க்கக்
கூத்துவன்போல் தோன்றி கோலங்கொண்ட பண்டாரம்
இனியெங்க ளையேற்று ஈன்றபிள்ளை ஏழ்வரையும்
மனுவேழ் குறையாமல் மக்களேழு வழியும்
குறையாமல் தந்து குவலயத்தை மக்களுக்குத்
திறவானத் தங்கத் திருமுடியுஞ் செங்கோலும்
கொடுத்தெங்கள் மக்கள் குவலயத்தை யாண்டிருக்க
அடுத்துச் சிலநாளில் ஆக்கிவைக்கா திருந்தால்
ஏழுபெண் பாவம் ஏற்பீர்காண் பண்டாரம்
நாளு கடத்தாமல் நடத்தி மிகத்தாரும்
.
விளக்கம்
=========
எங்களைச் சீர்கெடச் செய்து, நாங்கள் பெற்ற பிள்ளைகளையும் பெருமை குலையச் செய்வதற்காகவே கபடநாடக சூத்திரதாரியாகிய மகாவிஷ்ணு ஆட்பட்டிருக்கிறார். நாங்கள் அன்றாடம் வந்து செல்வதை வழக்கமாகக் கொண்ட இடத்தில் விஷ விருட்சம்போல் சன்னியாசி கோலத்தில் வந்து உலகத்தையே உடைமையாகக்கொண்ட மகாவிஷ்ணு எங்களுக்குத் துரோகம் செய்து விட்டார்.
.
எங்களையெல்லாம் இந்நிலைக்கு ஆட்படுத்துவதற்காகத் தான் பிரம்மதேவன் இவரைப் படைத்தாரா? இவற்றையெல்லாம் கங்கையைத் தம் தலையில் அணிந்து கொண்டிருக்கும் சிவ பெருமான் கேள்விப்பட்டும் மகிழ்ச்சியோடு இருக்கிறாரா?
.
இத்தனை நாடகத்தையும் இந்த விளையாட்டையும் நடத்துவதற்காக நடிகனாக வேடங்கொண்ட மகாவிஷ்ணு இனி எங்களை மாலையிட்டு மனைவியர்களாக ஏற்று, நாங்கள் பெற்ற ஏழு பிள்ளைகளையும், அவர்களின் சந்ததியரையும் எந்த குறையும் இல்லாமல் தந்து, இந்த உலகத்தையும், உலகத்தை ஆளுவதற்கான மகிமை மிகுந்த மகுடமும், அதற்கான செங்கோலும் அருளி, எங்களுடைய மக்கள் இந்த உலகத்தை ஆட்சிபுரிவதற்கு உடனே ஏற்பாடு செய்து தரவேண்டும். அப்படிச் செய்யாமல் இருந்தால் எங்கள் ஏழுபேருக்கும் தீங்கு செய்த பாவம் உம்மைப் பற்றிக்கொள்ளும். எனவே, காலதாமதமின்றி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தாரும்.
.
தொடரும்... அய்யா உண்டு.









![அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி தேவன் பெற்ற 60668 மனுவென வளங்கள் நாட்டி நெய்யிடை வழியிற் சேர்ந்து செய்து நெருட்டிமா ஞாலஞ் செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash] 26.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி தேவன் பெற்ற 60668 மனுவென வளங்கள் நாட்டி நெய்யிடை வழியிற் சேர்ந்து செய்து நெருட்டிமா ஞாலஞ் செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash] 26.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி தேவன் பெற்ற 60668 மனுவென வளங்கள் நாட்டி நெய்யிடை வழியிற் சேர்ந்து செய்து நெருட்டிமா ஞாலஞ் செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash] 26.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ! தெய்வகி வயிற்றி லுற்று ஸ்ரீகிருஷ்ணன் எனவே தோன்றி தேவன் பெற்ற 60668 மனுவென வளங்கள் நாட்டி நெய்யிடை வழியிற் சேர்ந்து செய்து நெருட்டிமா ஞாலஞ் செய்வதுங் கஞ்சன் தன்னைச் செயித்ததுங் கேட்டி லீரோ ! அகிலம் D Muthu Prakash] 26.02.2026 ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_823623_13621033_1772063822224_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=224_sc.jpg)


