
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்:
========
தெச்சணா புரியி னீதம் செப்பிடத் தொலையா தையா
மிச்சமாம் புவியி தாகும் மேவலர்க் குகந்த நாடு
பச்சமால் மகனே நீரும் பண்ணுறத் தவசு ஏறும்
அச்சமும் வாரா தையா என்றடிமிசைப் பணிந்து நின்றான்
.
விளக்கம்:
=========
அய்யாவே, இப்படியே தெச்சணாபூமியின் உயர்வு நிலைமையைப் பற்றிச் சொல்லச் சொல்லச் சொல்லி முழப்பது முடியாது. அப்படிப்பட்ட உயர்வு பொருந்தியது இந்த தெச்சணாபூமியாகும். இப்பூமி வானோர்களுக்கு மகிழ்ச்சி தரும் நாடு ஆகும். பச்சை நிறம் பொருந்திய திருமாலின் மகனே, வைகுண்டரே, நீவிரும் இங்கு அழகுறத் தவம் செய்தால் அத்தவம் உயர்வடைந்து கொண்டே வரும். அத்தவம் முடிவுறுமோ என்னும் அச்சம் இங்கு உருவாகாது என்று கூறி வைகுண்டரின் பாதங்களைப் பணிந்து வணங்கி நின்றான்.
.
.
அகிலம்:
========
நல்லது தானே யென்று நாரணர் தயவு கூர்ந்து
வெல்லமர் மணவை வாரி மேன்முக மதிலே நின்று
அல்லல்நோய் பிணிகட் கெல்லாம் அறமதால் தண்ணீர் தன்னால்
தொல்லைநோய்த் தீர்ப்போ மென்று தெச்சணா புவியில் வந்தார்
.
விளக்கம்:
=========
தெச்சணாபூமியின் உயர்வான மகிமையை வேதமுனி தெளிவாகச் சொல்லவும் அதை அமைதியாகக் கேட்டு வந்த வைகுண்டர் வேதமுனியைப் பார்த்து, மிகவும் நல்லது மாமுனியே என்று கூறிவிட்டுத் தமது மனிதில் கருணை கொண்டு வெற்றி கொள்வதற்கு அரிய தாமரைக் குளத்தின் தென் பகுதி கடற்கரையாகிய தோப்புப் பகுதியின் மேல் அமர்ந்து, மக்களுடைய துன்பங்கள், நோய்கள், இதர பிணிகள் போன்ற எல்லாவற்றையும் தம்முடைய அறத்தாலும் தண்ணீராலும் தீர்க்க வேண்டும் என்று எண்ணித் தெச்சணாபூமியில் இருக்கின்ற மணவைப் பதியின் எல்லைக்கு வந்தடைந்தார்.
.
.
அகிலம்:
========
வந்தவர் தலமும் பார்த்து வழியி னற்குலமும் பார்த்துச்
சந்தமாய் மகிழ்ச்சை கூர்ந்து சாமியும் முனியைப் பார்த்து
இந்தமா நகரில் வாழும் இராசனு மறிய வென்றே
விந்தையா யறிவு வொன்று விதித்தெழுதி யனுப்பு மென்றார்
.
விளக்கம்:
=========
எல்லை வந்தடைந்த வைகுண்டர் தாம் வரும் வழியில் நல்ல உயிரினங்களையும் பார்த்து, தவம் செய்வதற்குரிய நல்ல இடத்தையும் பார்த்து, நிலையான பெருமகிழ்ச்சி அடைந்து தம்முடன் வந்த வேதமுனியைப் பார்த்து, முனிவரே, இந்தப் பெரிய நகரை ஆட்சி புரிகின்ற கலியரசன் அறிந்து கொள்ள மிகவும் அற்புதமான அறிவிப்பு ஒன்றை ஒழுங்குபட எழுதி அனுப்பு என்றார்.
அகிலம்:
========
திருவாசகம்-3
=============
கவியரசனுக்கு வைகுண்டர் வருகையை உணர்த்தும் நிருபம்
================================================================
(வால ராமச்சந்திர சூரிய நாராயணர் தாமே வைகுண்டமாய்த் தோன்றி, தர்மம் நித்திச்சு, காணிக்கை கைக்கூலி காவடி என்றே திருச்சம்பதி முதல் வேண்ட ஆவசியமில்லையென்று நிறுத் தலாக்கியே,
விளக்கம்:
=========
சூரிய பிரகாசமான நாராயணர் வைகுண்டராகத் தோன்றித் தருமத்தை நிலை நாட்ட வேண்டி, காணிக்கை, கைக்கூலி காவடி போன்றவற்றைத் திருச்செந்தூர் முருகன் கோயில் முதல் யாரும் பெற்றுக் கொள்வதற்கோ, கொடுப்பதற்கோ தேவையில்லை என்று நிறுத்தப்பட்டுள்ளது.
அகிலம்:
========
உகஞ்சோதித்து ஒரு குடைக்குள்ளான ஆயிரத்தெட் டாமாண்டு மாசியில் கடற்கரையாண்டி நாராயணம் பண்டாரமென நாமமுங் கூறி, எளிய கோலமெனப் பாவிச்சு தெச்சணம் பள்ளிகொண்டிருந்து, தர்மமாகத் தாரணி யாபேர்க்கும் தண்ணீ ரினாலே சஞ்சலநோய் கர்மம் வற்மம் வாதை கோதை பயங்களையும் பிறவி நாசமும் பொய்வினை சஞ்சாரமும், பீடை கோடை வாடை தீர்க்கவும், பிள்ளையில்லாத பேர்க்குப் பிள்ளை கொடுக்கவும், கண்ணில்லாதபேர்க்குக் கண் கொடுக்கவும், தனமில்லாத பேர்க்குத் தனங்கொடுக்கவும், சாம்பசதாசிவ சாமி மூவரும் சற்குணமாகியே தன்னாலொரு வேசமாகிச் சமைந்து, சாதி உயர்கொண்ட சத்திமாதர் வழியிலே சகலகுண நாராயண தீரசம்பன்னர் சாதி வைகுண்டமாய்ப் பிறந்திருக்கிறார், இனி நன்றாய்த் தெரியுமே.
விளக்கம்:
=========
எனவே, இக்கலியுகத்தைச் சோதித்து ஒரே ஆட்சியின் கீழ் ஆளுவதற்காக ஆயிரத்து எட்டாம் ஆண்டு, மாசி மாதம் இருபதாம் தேதி கடற்கரை ஆண்டியாகிய நாராயணர் பண்டாரம் என்றும் பேரைக் கூறி எளிய கோலங்கொண்டு தெச்சணாபூமியிலே பள்ளி கொண்டு இலவசமாக எல்லாருக்கும் மனச் சஞ்சல நோய், நீடித்த பிணி, வாதை பேய் அச்சம், பிளவி நோய், பீடை மோசமான துர்நாற்றம் வீசுகின்ற பெரிய நோய்கள் எல்லாம் தீர்க்கவும், பிள்ளை இல்லாதவருக்குப் பிள்ளை கொடுக்கவும், கண் இல்லாதவருக்குக் கண் கொடுக்கவும், பொருள் இல்லாதவருக்குப் பொருள் கொடுக்கவும், சிவன் விஷ்ணு பிரம்மா ஆகிய மூவரும் ஒரே உருவாமாகி, சாதியில் உயர்ந்த சாதியாகிய சான்றோர் சாதியில் வைகுண்டராய் வருகின்றார், உயர்ந்த சாதியான சான்றோர் சாதியில் வைகுண்டர் உதித்திருப்பதை இனி அறிந்து கொள்வீர்களாக.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்:
========
சாலோக சாமி சார்ந்திருக்கு மிந்நகரு
அரம்பை ஸ்திரீமார் ஆராடுஞ் சுனைநகரு
பரம்பெரிய சேடன் பவிசுக் குருநகரு
வாவி யுறைநகரு வைகைக் குருநகரு
தாவிக் குலாவும் சந்தப்பட்சி தன்னகரு
சொல்லஎளி தல்லகாண் தெச்சணா பூமிவளம்
.
விளக்கம்:
=========
சாலோகம் சாமீபம் ஆகிய இரண்டு நிலைகளையும் எல்லாரும் அடைந்து வாழ்ந்து கொண்டிருப்பதும், அழகான அரம்பைப் பெண்கள் நீராடும் அருவி நிறைந்ததும், மிகவும் பெரிய சேடன் பாம்புகள் நிறைந்ததும், செழிப்பு நிறைந்ததும், சிறந்த பல குளங்கள் நிறைந்ததும், வைகை நதி தனது கிளை ஆறுகள் மூலம் தாவிக் குலாவுவதும் ஆகிய இப்பூமியைச் சொல்லி விளக்க முடியாது.
.
.
அகிலம்:
========
நல்லதிந்த நாடு நமக்குகந்த நன்னாடு
பசுவும் புலியம் பாவித்திருந் தநகரு
கசுவு மெந்நேரம் கரைபுரளும் நன்னாடு
அந்நாடு நாடு அரனாட்டுக் கொப்பிடலாம்
பொன்னாடு நாடு புரந்தரநாட் டுக்கீடாம்
தவம்பெற்றோர் வாழ்ந்த தண்மைக் குருநாடு
பவமற்றோ ராகி பாவித்த தின்னாடு
நல்ல மலைவளரும் நாஞ்சி வளநாடு
சொல்லுருசி யானச் சிறந்த குருநாடு
ஒருநாடு மிந்நாட்டுக் கொவ்வாது வுத்தமரே
.
விளக்கம்:
==========
சுவாமி, இது தங்களுக்குத் தவம் புரியச் சிறந்த நாடு ஆகும். இது பசுவும், புலியும் சாந்தமாய் ஒத்திருக்கும் நல்ல நாடாகும். எப்பொழுதும் அன்பு கரைபுரண்டு ஓடும் மக்கள் வாழும் நாடு இது ஆகும். இந்த நாடு சிவனின் கயிலாய நாட்டுடனும், இந்தப் பொன் நாடு இந்திரனுடைய உலகத்துடனனும் ஒப்பிடும் வண்ணம் அமைந்து இருக்கிறது. தவம் செய்து வெற்றி அடைந்தவர் வாழும் குளுமை பொருந்தியதும், பாவம் அறவே நீக்கப் பெற்றதும், மேன்மையான மலைகள் வளரும் வளமை பொருந்தியதும், உண்மை பேசுகின்ற மக்கள் வாழுவதும் இத்தெச்சணாபூமி ஆகும். இந்நாட்டுடன் உலகின் எந்த நாட்டையும் ஒப்புமைக் கூற முடியாது.
.
.
அகிலம்:
========
திருநாடு ஈசர் தினமுறையும் நன்னாடு
சம்பத்துக் கேற்ற சகல குருநாடு
இன்பம் வளரும் இசைந்த குருநாடு
.
விளக்கம்:
=========
உத்தமரே, இத்திருநாட்டில் ஈசர் எந்நாளும் உறைந்திருப்பார். தீராத வினைகள் முழுவதையும் அறுத்தெறியும் தன்மையுள்ளதும், ஆழமான நீர் நிலைகளைப் பெற்றதும், நிழல் பொருந்தியதும், சகலவித சம்பத்துக்களைப் பெற்றிருப்பதும், எல்லாவகை இன்பங்கள் அமைந்துள்ளதும் இத்தெச்சணாபூமி ஆகும் என்று வேதமுனி வைகுண்டரிடம் கூறி மீண்டும் தொடரலானான்.
.
.
அகிலம்
========
ஆதி யொருமுனிவன் அடவில் தவசிருக்க
நீதி யறியவென்று நிலமலனுந் தேவியுமாய்
கற்றாவுங் கன்றதுபோல் கறைக்கண்டர் வேசமிட்டுப்
பற்றாண்மை பார்க்கப் பாரில் மிகமேய்ந்து
அந்த முனியடுக்கல் அன்றிராப் போயடைந்தார்
.
விளக்கம்:
=========
சுவாமி, இப்பூமியின் மகிமை பற்றிக் கூற இன்னும் ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன். கேட்பீராக. முன்பு ஒரு காலத்தில் ஒரு முனிவன் அடர்ந்த ஒரு காட்டில் தவம் செய்து வந்தான். அப்போது அவனது தவ முறையைச் சோதித்து அறிய ஈசனும், சக்திதேவியும் பசுவும் கன்று போன்று வேடமிட்டு வந்தனர். அந்த முனிவனின் பற்ற்ற தன்மையைச் சோதித்துப் பார்க்க அந்தக் கானகத்தல் அவர்கள் மேய்ந்து திரிந்து அன்று இரவு முனிவன் தவம் செய்து வந்த மலைக்குச் சென்றடைந்தனர்.
.
.
அகிலம்:
========
சிந்த னருளால் சீறி யொருகடுவாய்
பசுவையுங் கன்றதையும் பார்த்து மனமகிழ்ந்து
இசுவாக வந்தீர் இரையாய் நமக்கெனவே
என்று கடுவாய் இயல்பசுவின் கன்றதையும்
தின்றுவிட வென்று சென்றுப் பிடித்திடவே
அப்போ பசுவும் அந்த முனியடுக்கல்
இப்போ தென்கன்றை இந்தக்கடு வாய்பிடிக்கு
மாமுனியே நீயும் வந்தொரு சத்தமிட்டால்
தாம்பயந்து கடுவாய் தன்னா லொதுங்கிவிடும்
.
விளக்கம்:
=========
சிவனுடைய அருளினால் ஒரு கடுவாய் அங்குத் தோன்றியது. அது பசுவையும் கன்றையும் பார்த்து தனக்கு ஏற்ற சுவையான இரை கிடைத்தது என்று மகிழ்ந்தது. இவ்வாறு மகிழ்ந்து பசுவின் கன்றைப் பிடித்துக் கொன்று தின்பதற்காக கடுவாய் கன்றைத் துரத்திப் பிடித்தது. பசு அந்த முனிவனின் பக்கத்தில் ஓடோடிச் சென்று அம்முனிவனை நோக்கி, முனிவனே, இப்பொழுது என் கன்றை ஒரு கடுவாய் பிடித்துக் கொண்டது. நீ அங்கே வந்து ஒரு ஓசை எழுப்பினால் அக்கடுவாய் பயந்து ஒதுங்கி ஓடி விடும்.
.
.
அகிலம்:
========
வந்துசொல் லாதாலும் மாமுனியே யிங்கிருந்து
உந்தித் தொனியால் ஒருசத்தங் கூறினையால்
என்பிள்ளை யென்றனக்கு இப்போ துதவுமென்றார்
உன்னுள்ள முமேற்று உடையோன் பதம்பெறுவாய்
.
விளக்கம்:
=========
அப்படி நீ வர முடியாவிட்டால் முனிவனே, நீ இங்கிருந்து கொண்டே உனது உந்தியிலிருந்து வருவாகும் அளவு ஒரு சத்தம் இட்டால் என் அருமைக் கன்று எனக்குப் பயனுள்ளதாக உயிர் பிழைத்து விடும். இதற்கு நீ உடனே உதவுவாயாக, அப்படி நீ செய்தால் உனது உள்ளம் உயர்வு நிலை அடைந்து இறைபதம் அடைவாய் என்று கூறியது.
.
.
அகிலம்:
========
என்று பசுவும் ஈதுரைக்க மாமுனியும்
ஒன்றுமுரை யாடாது உள்ளங் கவிழ்ந்திருந்தான்
கடுவாயுங் கன்றைக் கயிலையங் கிரிதனிலே
வெடுவாகக் கொண்டு விட்டதுகா ணம்மானை
பசுவும் வனமறைந்து பார்முனிவன் காணாமல்
விசுவாச மாக மேலோகஞ் சேர்ந்ததுவே
.
விளக்கம்:
=========
இதைக் கேட்ட மாமுனிவன் அதற்கு எதுவும் செய்யாமல் உள்ளத்தைத் தவத்தின்பால் செலுத்தலாளான். கடுவாய் அந்தக் கன்றைக் கயிலை மலையில் மிகவிரைவாகக் கொண்டு சேர்த்தது. பசுவும் அங்கிருந்து அந்த முனிவன் காண முடியாதவாறு மறைந்து கன்றின் மேல் விசுவாசம் கொண்டு கயிலையை அடைந்தது.
.
.
அகிலம்:
========
பின்னுஞ்சில நாள்கழித்துப் பேர்முனிவன் சிந்தையிலே
முன்னும் பசுமுறையால் முகுந்தன்பதங் காணாமல்
இத்தோசங் கழிக்க இன்னுஞ்சில நாள்வரையும்
சித்தத்தோ டொத்தத் தெச்சணா பூமியிலே
இரந்து குடித்து இத்தவ மேபுரிந்தால்
பரந்தணியும் வேதன் பதமடைய லாமெனவே
உத்தரித்து மாமுனிவன் ஒருநொடியி லேயிறங்கித்
திர்ப்தியுட னேகித் தெச்சணா பூமிவந்தான்
.
விளக்கம்:
=========
கடுமையான தவத்தைச் செய்து வந்த முனிவன் முன்பு பசுவுக்கும் கன்றுக்கும் செய்த அநீதியினால் சிவபொருளைக் காண முடியவில்லை என்றும் அந்தத் தீய வினைத்தோசம் கழிவதற்குச் சிலகாலம் தெச்சணாபூமியில் இரந்து குடித்து உயர்வான தவம் புரிந்தால் பரிசுத்தமாகி நீயும் சவபதத்தின் காட்சியைக் காணலாம் என்றும் உள்ளத்தில் உணர்ந்தான். உடனே, சிவப்பொருளின் மந்திரச் சொல்லை உச்சரித்து அக்காட்டிலிருந்து மிகவிரைவாக இறங்கி மிகுந்த மகிழ்ச்சியுடன் இந்தத் தெச்சணாபூமிக்கு வந்தான்.
.
.
அகிலம்:
========
வந்து இரந்து வருசமொன் றானதின்பின்
முந்துநின்ற காவில் உவந்து தவசுநின்று
பரமன் பாதாரப் பவிசு மிகவடைந்து
வரமருளப் பேறுபெற்று வாழ்ந்திருந் தானம்மானை
அப்படியே தோசம் அகன்று அறம்வளரும்
உற்பனம்போ லொத்த உகந்ததெச்ச ணாபதியே
.
விளக்கம்:
=========
இங்கு வந்து ஒரு வருடமாக இரந்து திரிந்து பிறகு ஏற்கெனவே தவம் புரிந்த காட்டிற்குச் சென்று தவம் செய்து அப்பரமனுடைய பாதங்களின் சிறப்பை அடைந்து வரங்கள் பல பெற்று உயர்ந்த பேறுகளும் பெற்று வாழ்ந்தான். இப்படியாக ஞானம் பெற்றவர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சிறந்த பூமி இதுவாகும். இறைவனை ஒத்தவர்கள் விரும்புகின்றது இந்தத் தெச்சணாபூமி ஆகும்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} கர்த்தன் உலகளந்த ஆண்டவர், வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை பதினொன்றாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
அகிலம்
------------
குழந்தை வைகுண்டர் குமாரப் பிராயமட்டும்
கோலா கலனாய்க் குருவாய்ச் சமையுமட்டும்
நாலாஞ் சொரூபம் நடத்தும்வரை தெச்சணமே
பொல்லாதெல் லாமழிந்து பூவர்கொலு வாகுமட்டும்
எல்லா வழக்கும் இருப்புந்தெச்ச ணாபதயே
.
விளக்கம்
-----------------
ஆத்மீகக் குழந்தையாகப் பிறந்த வைகுண்டர் தம் ஆத்மா வளர்ந்து குமாரப் பிராயம் அடைந்து கோலாகலனாய்க் குருவாக உருவாகும்வரையும் தம்முள்ளே நாலுவகைப் பிறப்புச் சொரூபமாகிய சுபேச்சை விசாரணை, பொல்லாதவற்றை எல்லாம் அழித்து மக்களைப் பூரணமான நிலை அடையச் செய்வதுவரையும் உள்ள எல்லா வாழ்க்கையும் தெச்சணாபூமியிலே நடக்கும் என்றும் வியாகர முனிவன் ஈசுரரிடம் எடுத்துரைத்தார்.
.
.
அகிலம்
--------------
ஆதியி லுதித்த வாறும் அரன்சிவன் பிறவி வாறும்
ஓதிய யுகங்கள் வாறும் ஒவ்வொரு அசுரன் வாறும்
நீதிய மனுக்கள் வாறும் நீதமாங் குண்டர் வாறும்
தீதிலாத் தர்ம ஞாயச் சிறப்புட வாறுஞ் சொன்னான்
.
விளக்கம்
---------------
ஆதியின் முதன்முதலில் தோன்றியவை பற்றிய வரலாறும், அரனும் சிவனும் பிறவி எடுத்த வழியும், ஆறு யுக விளக்கமும், அந்த யுகத்தில் தோன்றிய ஆறு அசுரர்களின் அழிவு பற்றியும் நீதி நெறியுடைய சான்றோர்களின் வழி முறைகள் பற்றியும் நீதிக்கு அரசனாகிய வைகுண்டர் தோன்றிய வரலாறு பற்றியும் எத்தகைய தீமையும் இல்லாத நீதி நியாயமான சிறந்த தரும யுகம் தோன்றும் முறை பற்றியும் ஆறு வழிமுறைகளை வியாகர முனிவன் எடுத்துரைத்தான்.
.
அகிலம்
-------------
தெச்சணாபூமி வளம்
--------------------------------------
இவ்வாறு எல்லாம் எடுத்துமிக மாமுனிவன்
அவ்வாறெல் லாமுரைத்து அகன்றனன்காண் மாமுனிவன்
துதிகொடு தன்னால் சிவகோ வேங்கிரியில்
பதியச் சிவமும் பதியென்றா ரன்போரே
நந்தீ சுரரும் நாட்டினா ரவ்வுரையை
.
விளக்கம்
-----------------
வைகுண்டரே, இவ்வாறு வியாகரமுனி ஈசரிடம் உரைத்து விட்டு, விடை பெற்றுச் சென்றான். ஈசர் தம்மைத் துதித்துக் கொண்டிருக்கின்ற நந்தீசுரரிடம் கயிலை மலையில் வியாகரமுனிவரின் மொழிகளைப் பொறிக்கச் சொன்னார். அப்படியே அவரும் அம்மொழிகளை அங்கே பொறித்தார்.
.
அகிலம்
---------------
இந்தப் பழமொழிபோல் இசைந்தப் புவிமகிமை
தெச்சணா பூமி சிவபூமி நல்லதுதான்
மிச்சம் வியாகர் முன்மொழிந்த துவுமிது
ஆனதா லிப்பூமி ஆகுந் தவசிருக்க
கோனாங் குமரி குடியிருக்கு மிந்நகரு
சங்குத் துறைமுகத்து சதாகோடி யற்புதங்கள்
.
விளக்கம்
----------------
சுவாமி வியாகரர் கூறிய முந்தைய மொழியைப் போன்ற மகிமை பொருந்தியது இந்த சிவபூமி. மேலும், வியாகரமுனி ஏற்கெனவே, நீவிர் தவம் புரிவதற்குரிய பூமி பற்றிக் கூறிச் சென்ற இடமும் இதுவே. எனவே, தாங்கள் தவம் புரிவதற்குச் சிறந்த பூமி இதுவே ஆகும். இப்பூமியில் மக்களை அரசாட்சி புரியும் குமரிப் பகவதி வாழ்ந்து வருகின்றாள். இங்குள்ள சங்குத் துறை முகத்தில் பல போடி அற்புதக் காட்சிகள் நிகழ்ந்தவண்ணம் இருக்கின்றன.
.
அகிலம்
-------------
எங்கு மகிழ இயல்புபெற்ற திந்நகரு
மங்கைப் பதிநகரு மணவைப் பதிநகரு
கங்கைக் குலநகரு கண்ணாளர் தன்னகரு
பஞ்சவர்க ளஞ்சு பார்மன்னர் தன்னகரு
சஞ்சீவி தன்னகரு தவத்தோர்க் குருநகரு
தெய்வகுல மன்னர் சிறந்தக் குருநகரு
சைவ முனிமார் தவத்துக் கிதுநகரு
மேலோகக் காட்சி விளங்கிருக்கு மிந்நகரு
.
விளக்கம்
----------------
எல்லா மக்களும் மகிழ்ந்து வாழுகின்றதும், கற்பு நிறைந்த பெண்கள் வாழ்ந்து வருகின்றதும், மணவைப்பதி அமைந்து இருப்பதுவும், கங்காதேவியின் குல மக்கள் வாழ்ந்து வருவதும், கண்ணனார் வாழ்ந்து வந்ததும், பஞ்ச பாண்டவர்க்ள ஐந்துபேரும் வாழ்ந்து வந்ததும், சஞ்சீவி மூலிகை வளருகின்றதும், தவம் புரிவோருக்கு மேன்மை பொருந்தியதும், தெய்வக் குல மன்னர்களாகிய சான்றோர்கள் சிறந்து வளருகின்றதும், சைவ முனிவர்களுக்குத் தவத்துக்குச் சிறந்ததும், வான லோகங்களில் உள்ள சிறப்பான காட்சிகளைக் கண்டு களிக்க விளங்கிக் கொண்டிருப்பதும் இந்தத் தெச்சணாபூமியே ஆகும்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
--------------
வல்ல யுகத்தில் வளரும் மனுவளமும்
எல்லாமே சொல்லி எற்றவை குண்டமுதல்
அந்நாட்டைச் சொல் ஒன்றுள் ளரசாளப்
பொன்னான நாரா யணர்ம கேந்திரனும்
நல்ல வைகுண்டம் நற்பிறவி யாய்வளர்ந்து
வல்ல கலியுகத்தில் வாய்த்ததெச்ச ணாபுவியில்
புதுமை மிகச்செய்து பொல்லாத வம்பர்கையால்
.
விளக்கம்
----------------
அந்த அழகு யுகத்தில் வாழுகின்ற மனிதனின் நிலைமை பற்றியும் அத்தருமயுகத்தை ஒருசொல்லின் கீழ் அரசாள்வதற்குச் ஒரு ந்றபிறப்பு தேர்ந்தெடுத்தது பற்றியும் அவன் தவத்தைச் சோதிப்பதற்கு சென்ற நாராயணர் தெய்வேந்திரன் ஆகியோர் பற்றியும் வைகுண்டம் பிறந்து வளர்ந்து சக்தி வாயந்த கலி யுகத்தில் எல்லாம் வாயக்கப் பெற்ற தெச்சணாபூமியில் அற்புதங்கள் செய்வார் என்றும்,
.
அகிலம்
-------------
அடிகல் லெறிகள் அவர்பட் டம்புவியில்
குடிதாழ்ந்த பேர்க்காய்க் கோப மதையடக்கி
நல்லோர்க்காய்ப் பாடுபட்டு நல்லஉப தேசமதாய்ப்
பஞ்சகரு ணாதிகளைப் பம்மலாய்த் தானடத்திக்
கொஞ்சநா ளுங்கழித்து குதித்துதித் தேவளர்ந்து
ஆடவராய்ச் சமைந்து ஆண்பெண்போ லேயிருந்து
தேவ அறிவார்க்குத் திரவியம்போ லேயிருந்து
பச்சைக் குழந்தை பருவமுன் னாகியவர்
மெச்சக் கொடியாட்கு மேவும்பரு வம்போலும்
சுத்தக் கிழவரைப்போல் சூரப்பி ராயமுமாய்
.
விளக்கம்
-----------------
அவ்வைகுண்டர் வம்பர்களின் கைகளினால் அடிகளும் கல் எறிகளும் பட்டுத் துன்பமுற்றுப் பூமியில் வாழுவார் என்றும் தாழ்ந்த குடி மக்களுக்காகத் தமது கோபத்தை அடக்கித் துன்பப்படுவார் என்றும் சொன்னார். அவர் ஐந்து பூதங்களின் வீரியத்தைத் தமது கட்டப்பாட்டுக்குள் அடக்கி, நல்வழியில் நடத்திச் சிறிதுநாள் கழித்து மகிழ்ச்சியால் துள்ளிக் குதித்து வளர்வார். ஆடவராகிய அவர் ஆணைப் போலவும், பெண்ணைப் போலவும் இருப்பார். அறிவைத் தேடி அறிய விரும்புகிறவருக்குப் பெரிய ஞானத் திரவியம் போல் இருப்பார். பச்சைக் குழந்தை முதல் வயது முதிர்ந்தவர்வரை மெச்சும்படியாகவும் பார்ப்பதற்கு அழகு பொருந்திய பருவமுடைய ஆணைப் போலும் அறிவில் வயதான கிழவரைப் போலும் சூட்சமமாக இருப்பார் என்றும்
.
அகிலம்
--------------
மெத்தப் புலம்பி விழலும்பிரா யம்போலும்
நாலு பிராயம் நாளதுக்குள் ளேயெடுத்துக்
கோலு கையேந்திக் குன்னும்பிரா யம்போலும்
பார்க்கப் பிராயமுமாய்ப் படுக்கக் கிழவனுமாய்த்
தார்க்கத் திறவனுமாய்ச் சந்திக்கிசைந் தவனுமாய்க்
காக்கக் கருத்தனுமாய்க் கர்த்தனின் கர்த்தனுமாய்
ஏக்கத் திருத்தனுமாய் இவர்சமைந் திவ்வுகத்தில்
.
விளக்கம்
-----------------
புலம்பித் திரிகின்ற பிராயம் போன்றும் காலத்தை விரையம் செய்கின்ற பிராயம் போன்றும் ஞானப்பூமி ஆகிய சுபேட்சை, விசாரணை, தனுமாநசி சத்துவாபத்தி ஆகிய பூதங்களில் உள்ள நான்கு பிறப்புகளையும் ஒரே நாளைக்குள் எடுத்து அறிவில் சிறந்த ஞானக் கிழவன் போன்றும், தர்க்கம் புரிந்து எதிர்க்க முடியாத பலம் பெற்றவனாகவும், எல்லாத் திசையிலுமுள்ள மக்கள் ஏற்றுக் கொள்பவராகவும், எல்லா மக்களையும் காக்கும் கருத்து உள்ளவராகவும், எல்லாவற்றுக்கும் மூலப் பொருளுக்கும் மூலப்பொருளாகவும், ஒப்பில்லாதவராகவும், வைகுண்டர் இக்கலியுகத்தில் உருவாவார் என்றும்
.
அகிலம்
-------------
தர்மத்தால் கலியைத் தன்னந்தன்னால் கரைத்துக்
கர்மத்தை யீடழித்துக் காந்தக்கோ லுமெடுத்து
நேரோரைக் காத்து நிசமாக வேயெழுப்பி
ஏராரைக் கொன்று ஏழ்நரகத்தும் பூத்தி
உகத்துக் குகம்வழக்கு எல்லா மொருதலத்தில்
தொகுத்து நடுத்தீர்ப்புச் செய்து மிகத்தெளித்து
.
விளக்கம்
----------------
தருமத்தின் உதவியால் கலியனை அவனாலேயே அழியச் செய்து, தீய வினைகளை எல்லாம் அழித்து ஏழைபோல் உருவம் எடுத்து, நேர்மை ஆனவர்களைக் காத்து, மெய்ப்பொருள் உள்ளவர்களாக விழிப்புறச் செய்து, தம் கருத்துக்களை ஏற்காதவரை அழித்து ஏழு நரகங்களிலும் தள்ளி, ஒவ்வொரு யுகத்தில் உள்ள வழக்குகளை ஒரே யுகத்தில் சேர்த்து எடுத்துத் தெளிவாக ஆராய்ந்து விரைவாக நடுத்தீர்ப்பு செய்வார் என்றும்
.
அகிலம்
--------------
ஆகாத்த பேரை எல்லாம் நரகமதில்
வாகாகத் தள்ளி வாசல்தனைப் பூட்டிச்
சித்தத்துக் கேற்ற செடத்தோரைத் தானெழுப்பிப்
பத்தரைமாத் துற்றப் பைம்பொன்னிறப் பொற்பதியில்
சாகா வரங்கள் சனங்களுக் கேகொடுத்து
வாகாக நல்ல வரிசை மிகக்கொடுத்து
ஆண்பெண் ணுடனே அதிகவாழ் வுங்கொடுத்துக்
காணக் காணக்காட்சிக் கனமாய் மிகக்கொடுத்துச்
.
விளக்கம்
-----------------
தமக்கு ஆகாதவரை நரகத்தில் மிகவும் எளிதாகத் தள்ளி நரகத்தின் வாசலைப் பூட்டிடுவார் என்றும், ஐந்து புலனடக்கித் தம்மை ஒரே நினைவோடு நினைத்து சடத்தன்மை பெற்றவரும், தம் மனதிற்கு விருப்பம் உள்ளவரும் ஆகியவர்களை ஆத்மீக விழிப்புறச் செய்து, பத்தரை மாற்றுத் தங்கம் போன்ற தருமபதியில் எப்பொழுதும் வாழ்வதற்குரிய சாகாவரங்களை அவர்களுக்குக் கொடுப்பார் என்றும், அத்தகையோருக்குத் தமது சீர்வரிசை பரிசுகளைக் கொடுத்து. ஆண்களுடனும், பெண்களுடனும் கூடி வாழ்வதற்கு இன்பமான வாழ்வும் கொடுத்து காணக் காணச் சலிக்காத அழகான காட்சிகளையும் கொடுத்து.
.
அகிலம்
========
செல்ல வைகுண்டர் சீமையைம்பத் தாறதையும்
அல்ல லகற்றி அரசாள்வா ரீசுரரே
மும்மூர்த்தி யெல்லாம் ஒருமூர்த்தி யாயிருக்கும்
எம்மூர்த்தி யெல்லாம் இயல்மூர்த்தி போலிருக்கும்
வைகுண்டப் பெம்மான் வாய்த்தசெந் தூர்க்கடலில்
மைகொண்ட நாதன் வந்து பிறப்பதுதான்
வளர்ந்துதவம் செய்வதுவும் வாய்த்தபுவி தெச்சணமே
.
விளக்கம்
-----------------
எல்லாருக்கும் விருப்பமான வைகுண்டர் ஐம்பத்தாறு தேசங்களையும் துன்பங்கள் அகற்றி அரசாள்வார் ஈசுரரே, இதைக் கேட்பீரராக என்றும், மேலும் மும்மூர்த்திகளும் ஒரு மூர்த்தியாகவும், எல்லா மூர்த்திகளுக்கும் உயர்வான மூர்த்தி போலவும் இருக்கின்ற வைகுண்ட பெருமாள் திருச்செந்தூர்க் கடலில் பிறந்து மெய்குண்ட நாதனாகிய வைகுண்டர் ஆத்மீக வளர்ச்சியுற்றுத் தவம் செய்வதும் எல்லாப் பேறும் வாய்க்கப் பெறுவதும் தெச்சணாபூமியாகும்.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
கர்த்தா அறியக் கண்டே னிவன்தனையும்
ஆசு மதுரம் சித்திரம் விஸ்தாரமுதல்
வாசு நெறிதேசு வழியறிந்த மன்னவன்காண்
ஏகச் சுழிமுனையும் இகமுகி வாம்வரையும்
ஆக முடம்பறிவும் அண்டபிண் டத்தறிவும்
முன்பின் னாராய்ந்து மூதுண ராகமங்கள்
தன்னன் பிறப்பும் சாற்றத் திறவான்காண்
கல்லாத கல்வி கலைக்கியா னக்காண்டம்
எல்லா மறிந்த இயல்முனிவ னென்றுரைக்க
.
விளக்கம்
=========
எல்லாவற்றுக்கும் மூலப்பொருளைப் பற்றி வியாகரர் அறிவான் என்பதை நான் அறிந்து கொண்டேன். இவன் ஆககவி, மதுரகவி, சித்திரகவி, விஸ்தாரகவி போன்ற எல்லாவற்றையும் சுவாசத்தின் பிரிவுகளையும் ஒப்பற்ற சுழிமுனையைப் பற்றியும், இந்த யுகத்தின் முடிவுவரையும், உடம்பு கூறுகளையும், அண்டம் பிண்டம் பற்றி அறிவையும், முன்பிறப்பு, பின்பிறப்பு போன்றவற்றை ஆராயும் பண்டைய உயர்வான நூல்களையும், தன்னுடைய முன் பிறப்பையும், பின் பிறப்பையும் சொல்லுகின்ற திறனும் படைத்தவன். யாரும் கற்க முடியாத கல்வி, எல்லா வகைக் கலைகள், ஞான காண்டங்கள் போன்ற எல்லாவற்றையும் இடவன் தெளிவாக அறிந்தவன் என்பதை அறிவீராக என்று பராசரர் சொல்லி முடித்தார்.
.
.
அகிலம்
========
நல்லதுதா னென்று நன்முனிவனை ஈசர்
வல்லமையா மென்று மாமுனியைக் கொண்டாடி
என்பிறப்பு என்மாது இதுமுன் பிறப்புமுதல்
பின்பிறப்பு முதலாய்ப் பேசென்றா ரீசரரும்
.
விளக்கம்
==========
இதைக் கேட்ட ஈசர், பராசர முனிவனை நோக்கி, மிகவும் நல்லது. இது மிகுந்த திறமைதான் என்று அந்த முனிவனைப் பாராட்டினார். பிறகு பராசர முனிவனின் மகன் வியாகரரை நோக்கி, என்னுடைய தோற்றமும் என் மனைவி சக்தியின் பிறப்பும், சிறப்புப் பொருந்திய நுண்ணிய முந்தைய பிறப்பும் இனி வருகின்ற பிறப்பும் தெளிவாய் நீ சொல்லுவாயாக என்று ஈசர் கூறினார்.
.
.
அகிலம்
========
வேதவியாசர் முக்காலம் உரைத்தல்
======================================
அப்போது வேத வியாச ரகமகிழ்ந்து
செப்புகிறோ மென்று சிவனை மிகத்தொழுது
மூல முதலை முத்தி முகந்துகொண்டு
காலமே நின்ற கடவுளே தஞ்சமென்று
ஆதிமுத லந்தம் அடங்கல் மிகவுணர்ந்து
சோதி பதம்போற்றிச் சொல்லுவான் மாமுனியும்
.
விளக்கம்
=========
இதைக் கேட்ட வேத வியாகரர் மனம் மகிழ்ந்து வணங்கி ஈசரை நோக்கி, சுவாமி நான் கூறுகிறேன் நீர் கேட்டு அருள்வீராக என்று கூறி அவருடைய பாதங்களைத் தொழுது, அந்த மூலப் பரம்பொருளின் பாதங்களைக் கட்டிப் பிடித்து முத்தி முகர்ந்து, சுவாமி ஏற்கெனவே நிலையாக நின்று கொண்டிருக்கும் இறைவனே, உம்மிடம் தஞ்சம் அடைகிறேன் என்று கூறிவிட்டு, ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் மீண்டும் நினைவு கூர்ந்து சோதிப் பொருளான ஈசருடைய பாதங்களைப் போற்றிப் பேசலுற்றான்.
.
.
அகிலம்
=======
மும்மூர்த்தி யான முதல்மூர்த்தி தோன்றியதும்
அம்மூர்த்தி தன்னில் ஆயிளையாள் தோன்றியதும்
சத்தியிலே நாதம் தான்தோன்றி வந்ததுவும்
வித்தியாய் நாதமதில் விந்துமிகத் தோன்றியதும்
விந்திலே விட்டிணுவும் விரைவாகத் தோன்றியதும்
அந்த முறைமுதலாய் அண்டபிண் டம்வரையும்
சொல்லி யுகமதுதான் தோன்றும்வகை கூறலுற்றான்
.
விளக்கம்
=========
மும்மூர்த்திக்கும் முதல் மூர்த்தியின் தோற்றமும், அம்மூர்த்தியிலிருந்து அவருடைய மனைவி சக்தியான தோற்றமும், அந்த சக்தியிலிருந்து நாதம் தோன்றிய விதம் பற்றியும், அந்த நாத்திலிருந்து விந்து விரைவாகத் தோன்றியதும், விந்துவிலிருந்து விஷ்ணு விரைவாகத் தோன்றியதும், முறையாகச் சொல்லி அண்டம் பிண்டம் தோன்றிய விதத்தை வகை வகையாகச் சொல்லி இனி வருகின்ற தருமயுகம் தோன்றும் வகையும் சொன்னான்.
.
.
அகிலம்
=======
சல்லிக் கொடிய சண்டக் குறோணிமுதல்
நீசன் பிறப்புவரை நிகழ்த்தினான் மாமுனியும்
பாசனீ சன்வரைக்கும் பாருலக வாறதையும்
சொல்லி விரித்து சுத்தஏ ழாம்யுகந்தான்
நல்ல யுகமதுதான் நாடுவதுஞ் சொல்லிமிக
.
.
விளக்கம்
=========
மிகவும் கொடிய தீமை பொருந்திய குறோணிமுதல் கலிநீசன் பிறப்புவரையும் ஆறு யுகங்கள் பற்றியும் தெளிவாக விதிர்து எடுத்துரைத்தான். சுத்தம் பொருந்திய தருமயுகமாகிய ஏழாம் யுகம் தான் சிறந்த யுகம் அதுவே எல்லாரும் விரும்புவது என்றும் சொன்னான்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
அன்றுவே தமுனியை அழைத்துமொழி கேட்கவென்று
வாநீ முனியே வல்லகலைக் கியானமொழி
தானீ கரமாய்ச் சத்தியாய்க் கற்றவனே
மான முனியே மறைநாலுங் கற்றவனே
ஓநமோ வேதம் ஓயாம லோதுவோனே
பின்முன் நின்று இயம்புரைகேட் டேயுரைநீ
நான்தவ சிருக்க நாடுரைநீ மாமுனியே
மான்தவ சுக்குகந்த மாமுனியே என்றுரைத்தார்
.
.
விளக்கம்
=========
தவசு செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் இவ்விடம் மிகவும் நல்ல இடம் என்றும். எல்லாச் சக்தியும் வளருகின்ற சிறந்த பூமி இது என்றும் வைகுண்டர் மனதில் எண்ணினார்.
வைகுண்டர் அது பற்றிக் கேட்க வேத முனியை அழைத்து அவனிடம் முனியே, நீ வருவாயாக எல்லா ஞானக் கலைகளையும் ஆராய்ந்த ஞானவானே, மெய்யறிவைக் கற்றவனே, ஒழுக்கம் நிறைந்த முனிவனே, நான்கு வேத நூல்களையும் கற்றவனே, ஓம் நமோ நாராயணா என்னும் வேதச் சொல்லை இடைவிடாது ஓதுகின்றவனே, வருங்காலத்தையும் கடந்த காலத்தையும் ஆராய்ந்து தவறாவண்ணம் அறிந்து உரைக்கின்றவனே, என் முன்னால் நின்று நான் கூறுகின்றவற்றைக் கேட்டு அதற்குரிய பதிலைச் சொல்லுவாயாக. ஆத்மாவை அறிய வைக்கும் தவசுக்கு ஏற்ற மாமுனியே, நான் தவசு இருக்க ஏற்ற இடத்தைக் கூறுவாயாக.
.
.
அகிலம்
========
கலைமுனி தவசுக்குகந்த இடத்தின் சிறப்புக் கூறல்
=====================================================
வெள்ளா சனத்தில் விரைவா சியைநிறுத்திக்
கள்ளமா னதையகலக் காடகற்றி-விள்ளரிய
வெள்ளமாங் கருணைபெறு வேதமுக மாமுனியே
உள்ளதெனக் கின்னதென் றுரை
.
விளக்கம்
========
இறையாசனம் ஆகிய மூக்கு நுனியில் விரைவாக ஓடும் சுவாசத்தை நிறுத்தி உள்ளத்தில் வாழும் தீயவற்றை வெளியேற்றி விளக்க முடியாத இறைக் கருணையைப் பெற்ற வேதம் அறிந்த முனிவனே, நான் தவசு இருப்பதற்குத் தகுதியான இடத்தைத் தெளிவாக எடுத்துரைப்பாயாக என்று கூறினார்.
.
.
அகிலம்
========
பூரணத்தி னாடி புகழ்ந்துமுனி கொண்டாடி
வாரணத்தின் கோடுவரை தேர்ந்து-காரணத்தின்
கட்டுரைத்து நாடுவளம் விட்டுரைப்பே னென்றுமுனி
தொட்டுப் பதங்குவித்துச் சொல்லுவான்
.
விளக்கம்
=========
வேதமுனி பூரணப்பொருளாகிய வைகுண்டரின் பக்கம் சென்று அவரைப் புகழ்ந்து கூறி, சுவாமி வடக்கே காணும் மலையிலிருந்து தெற்கே காணும் கடற்கரைவரை அமைந்திருக்கும் தெச்சணாபூமியில் நடந்த சிறப்பு நிகழ்ச்சிகளையும் அவை எல்லாவற்றுக்கும் காரணமானவற்றையும் தெளிவாக எடுத்துரைத்து நாட்டின் நிலைகள் பற்றியும் எடுத்துக் கூறுவேன் என்று சொல்லிய முனிவன் வைகுண்டரின் பாதங்களைத் தொட்டு வணங்கி சொல்கிறான்.
.
.
அகிலம்
=======
கலைமுனி வேதவியாசர் பிறப்புரைத்தல்
அய்யாவே வேத ஆதிநா ராயணரே
மெய்யா யுருவாய் விளங்குவோ னேகேளும்
பரராச மாமுனிவன் பாலனென முனிவன்
விரைவாக வேபிறந்து வெள்ளிமலை நாதனிடம்
தாதா வுடனே தான்வரக்கண் டீசுரரும்
.
விளக்கம்
=========
அய்யாவே, வேதத்திற்கு முதலான ஆதி நாராயணரே, உண்மை உருவாக விளங்குபவனே, நான் சொல்லுகின்றவற்றைக் கருணை கொண்டு கேட்பீராக. முன்னொரு காலத்தில் பராசரர் என்னும் முனிவனுக்கு ஒரு குழந்தை கருவுற்ற உடனே பிறந்தது. அக்குழந்தையுடன் பராசர முனிவர் ஈசரைப் பார்க்க சென்றார்.
.
.
அகிலம்
=======
வாராய் முனியே மதலையுனக் கிங்கேது
அப்போ முனியும் அரனடியைத் தான்பூண்டு
இப்போ திவ்வாண்டு இம்மாத மிந்நாளில்
பஞ்சகரு ணாதி பன்னிரண் டொன்பதுவும்
வஞ்சக மில்லாமல் வந்தா ரொருவீட்டில்
பூரண நாளும் பிரிந்துறையும் நேரமதும்
நாரணம் பிறந்த நல்ல நட்சேத்திரமும்
யோக பலன்கள் ஒத்திருக்கும் நேரமதும்
ஆகமக் கூட்டம் அடங்கிருக்கும் நேரமதும்
மதிசுழி போலாகி வந்துரத மேறுகையில்
துதிமுக வன்சர சோதி பிறந்ததன்றும்
.
விளக்கம்
=========
ஈசர் அவர்களை நோக்கி, முனிவனே, வருவாயாக, உன்னோடு வரும் குழந்தை உனக்கு எப்படிக் கிடைத்தது? என வினவினார். உடனே, பராசர முனிவர் ஈசரின் பாதங்களைக் கட்டிப் பிடித்து ஈசரே, இந்த ஆண்டு இந்த மாதம் நல்ல நாளில் ஐந்து பூதங்களுக்கும் காரணமான பஞ்சகரணம் முதலியவைகளும் பன்னிரண்டு ராசி வீடுகளும் நன்றாக இருக்கின்ற நல்ல சமயத்தில், ஒன்பது கிரகங்களும் ஒரு ராசி வீட்டில் எந்த விதத் தடையுமின்றி அமர்ந்து நல்ல பலன் சொரியும் பூரண வேளையில் நாரணர் பிறந்த நல்ல நட்சத்திரம் உதிக்கும் வேளையில் யோகப் பலன்கள் சேர்ந்திருக்கும் நேரத்தில், ஆகமங்கள் எல்லாம் ஓதப்படாமல் அடங்கி இருக்கும் வேளையில் சந்திரன் நீர்ச்சுழி போலச் சுழன்று ரோகணி நட்சத்திரத்தில் இருக்க விநாயகரும், சரசுவதியும் பிறந்த வேளையில்,
.
.
அகிலம்
=======
இவ்வாறு கூட்டம் எல்லா மெழுந்தொருநாள்
அவ்வாறு தான்கண்ட அந்நா ழிகைதனிலே
துற்கந்த முலாவும் தோகையொரு பெண்ணிடமே
நற்கந் தமுலாவி நான்சேர்ந்தே னப்பொழுது
சேர்ந்த பொழுது திரண்டுநா தம்வளர்ந்து
காந்தற் றழுப்பாய்க் கன்னி யுடலாகிப்
பெற்றா ளிவனைப் பேரு வியாகரெனக்
.
விளக்கம்
=========
எல்லா வகை நேரத்தின் நல்ல பலன்களும்கூடிய தினத்தில் சுபவேளையில், துர்வாடை வீசும் மயில் போன்ற சிறந்த ஒரு பெண்ணுடன் அவள் துர்வாடையை நீக்கி நல்ல சுத்தமான உடம்பாக்கி நான் கூடினேன். அப்போது சுரோணிதமும் நாதமும் புணர்ந்து கருவுற்று, அழகு பரவி பரிமளகந்தி என்னும் அக்கன்னி உடல் பக்குவ நிலை அடைந்து, இவனைப் பெற்றெடுத்தாள். இவன் பெயர் வியாகரர் எனப்படும்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
வைகுண்டர் பகவதிக்கு அருளல்
=================================
கண்ணான நாதன் கமலக் குருநாதன்
வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானை
நடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக்
கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து
நன்மை யுடைய நாயகியே சுந்தரியே
பொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
,
விளக்கம்
=========
கண்ணைப் போன்றும், தாமரை மலரைப் போன்றும், அழகு பொருந்திய நாதனாகிய வைகுண்டர் தெச்சணாபூமியில் நடந்து சென்று கொண்டிருந்தார். பிறகு, பகவதி தங்கியிருந்த இடத்தில் அருகில் உள்ள கடலைக் கடந்து அவள் இருப்பிடம் அடைந்தார். அங்கு அவளைக் கண்டு கண்ணைச் சிமிட்டிப் பக்கத்தில் அழைத்தார். அவளை நோக்கி, பகவதியே நன்மையுடைய நாயகியே, சுந்தரியே, பொன்னைப் போன்ற மோகினியே, குழந்தாய், நான் சொல்வதை நீ கவனமாகக் கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
========
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளான
உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென
எந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய்
எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல்
ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடு
தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால்
உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன்
பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க
என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார்
அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள்
.
விளக்கம்
=========
வைகுண்டராக நான் பிறந்து ஒரு சொல்லுக்குள் இவ்வுலகை அரசாள தகுதிபெற்றுச் சான்றோர் குலத்தில் அம்மக்களை உயர்வு பெறச் செய்ய வந்துள்ளேன். என்னுடைய திருச்செந்தூர்க் கோவிலிலும் இது முதலாக எல்லா நாள்களும் காணிக்கை கைக்கூலி போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, நீயும் ஏற்கெனவே என்னோடு தேனினும் இனிய தங்கையாய்ப் பிறந்த காரணத்தால் உன்னிடம் இதை உபதேசிக்கின்றேன். நீயும் இவற்றை நிறுத்துவாயாக. இனி, நான் பொன் நாடாகிய இந்தத் தெச்சணாபூமியில் தவம் இருப்பதற்காகச் செல்லுகிறேன் என்று வைகுண்டர் பகவதியிடம் கூறிவிட்டு மீண்டும் தெச்சணாபூமி நோக்கி நடந்தார். பகவதியும் தன்னுடைய கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள்.
.
.
அகிலம்
=======
வைகுண்டர் மணவைப்பதி ஏகல்
==================================
நாரா யணரும் நல்லசங்கத் தாருடனே
சீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார்
தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே
கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார்
.
விளக்கம்
=========
பிறகு வைகுண்டர் தமது கூட்டத்துடன் தெச்சணாபூமியின் தெற்கில் இருக்கும் மணவைப் பதி நோக்கி நடக்கலானார். தென்காசி என்று சிறப்பாகக் கூறப்படுகின்ற தெச்சணாபூமியில் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வைகுண்டரைப் பார்த்துக் கொண்டு சூழ்ந்து நிற்க, வைகுண்டர் மணவைப் பதி நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
.
.
அகிலம்
========
நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியே
திடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்க
கண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம்
பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்து
ஆன பதியின் அகலநீ ளம்பார்த்து
மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும்
.
விளக்கம்
=========
இப்படியே கடற்கரை வழியாகச் சக்தி வாய்ந்த தேவர்கள் வைகுண்டருக்கு வெற்றி என்று ஒலி எழுப்பிக் கொண்டு நடக்க தாம் முன்னர் ஆட்சி புரிந்த துவரயம் பதியையும் அக்காட்சியையும் செல்வச் செழிப்பையும் மனதுள் பார்த்து மகிழ்ந்தார். அந்தத் துவரயம்பதியின் விசாலமான அகலம், நீளம் முதலிய பரப்பளவைப் பார்த்தும் உயர்வான அப்பதியின் வாசல்களை எல்லாம் மனதுள் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தார்.
.
.
அகிலம்
=======
நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத்
தேடும் வடவாசல் சீவிவளர் மலையின்
நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவே
தவசுக் குகந்த தலங்களிது நன்றெனவே
உபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவே
என்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும்
.
விளக்கம்
=========
நாட்டு மக்களின் நடுத்தீர்ப்பு கேட்கச் செல்லுவதற்கு முன்னால் நான் நல்ல முறையில் தவம் செய்யத் தேடுகின்ற வடக்கு வாசல் செதுக்கப்பட்டு வளருகின்ற சிறந்த மலையை நோக்கி இருக்கும் என்றும், இந்த நேரான வடக்கு வாசலுக்கு நிகர் எதுவும் இல்லை என்றும், தவசு செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் இவ்விடம் மிகவும் நல்ல இடம் என்றும். எல்லாச் சக்தியும் வளருகின்ற சிறந்த பூமி இது என்றும் வைகுண்டர் மனதில் எண்ணினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
=======
வைகுண்டர் பகவதிக்கு அருளல்
=================================
கண்ணான நாதன் கமலக் குருநாதன்
வண்ணமுள்ள நாதன் வழிநடந்தா ரம்மானை
நடந்து பகவதியாள் நல்லகட லும்பார்த்துக்
கடந்து பகவதியைக் கண்காட்டித் தானழைத்து
நன்மை யுடைய நாயகியே சுந்தரியே
பொன்மோ கினியே பிள்ளாய்நான் சொல்வதுகேள்
,
விளக்கம்
=========
கண்ணைப் போன்றும், தாமரை மலரைப் போன்றும், அழகு பொருந்திய நாதனாகிய வைகுண்டர் தெச்சணாபூமியில் நடந்து சென்று கொண்டிருந்தார். பிறகு, பகவதி தங்கியிருந்த இடத்தில் அருகில் உள்ள கடலைக் கடந்து அவள் இருப்பிடம் அடைந்தார். அங்கு அவளைக் கண்டு கண்ணைச் சிமிட்டிப் பக்கத்தில் அழைத்தார். அவளை நோக்கி, பகவதியே நன்மையுடைய நாயகியே, சுந்தரியே, பொன்னைப் போன்ற மோகினியே, குழந்தாய், நான் சொல்வதை நீ கவனமாகக் கேட்பாயாக என்றார்.
.
.
அகிலம்
========
வைகுண்டம் பிறந்து வார்த்தையொன்றுக் குள்ளான
உய்கொண்டோர் குலத்தை உருவேற்ற வந்தேனென
எந்தன் திருச்சம் பதியு மிதுமுதலாய்
எந்தெந்த நாட்கும் இனிக்காணிக் கைநிறுத்தல்
ஆனதினால் நீயும் ஆதியி லென்னோடு
தேனினியத் தங்கையராய்த் திட்டித்த ஏதுவினால்
உன்னோடு இத்தனையும் உபதேச மாயுரைத்தேன்
பொன்னாடு தெச்சணத்தில் போறேன் தவசிருக்க
என்று பகவதிக்கு இயம்பி வழிநடந்தார்
அன்று பகவதியாள் அறைக்குள் ளடைத்திருந்தாள்
.
விளக்கம்
=========
வைகுண்டராக நான் பிறந்து ஒரு சொல்லுக்குள் இவ்வுலகை அரசாள தகுதிபெற்றுச் சான்றோர் குலத்தில் அம்மக்களை உயர்வு பெறச் செய்ய வந்துள்ளேன். என்னுடைய திருச்செந்தூர்க் கோவிலிலும் இது முதலாக எல்லா நாள்களும் காணிக்கை கைக்கூலி போன்றவை தடை செய்யப்பட்டுள்ளன. எனவே, நீயும் ஏற்கெனவே என்னோடு தேனினும் இனிய தங்கையாய்ப் பிறந்த காரணத்தால் உன்னிடம் இதை உபதேசிக்கின்றேன். நீயும் இவற்றை நிறுத்துவாயாக. இனி, நான் பொன் நாடாகிய இந்தத் தெச்சணாபூமியில் தவம் இருப்பதற்காகச் செல்லுகிறேன் என்று வைகுண்டர் பகவதியிடம் கூறிவிட்டு மீண்டும் தெச்சணாபூமி நோக்கி நடந்தார். பகவதியும் தன்னுடைய கோவிலுக்குள் சென்று அமர்ந்தாள்.
.
.
அகிலம்
=======
வைகுண்டர் மணவைப்பதி ஏகல்
==================================
நாரா யணரும் நல்லசங்கத் தாருடனே
சீராய் மணவைப் பதிநோக்கித் தான்நடந்தார்
தென்காசி யென்ற தெச்சணா பூமியிலே
கண்காட்சி சூழக் கண்ணர் மிகநடந்தார்
.
விளக்கம்
=========
பிறகு வைகுண்டர் தமது கூட்டத்துடன் தெச்சணாபூமியின் தெற்கில் இருக்கும் மணவைப் பதி நோக்கி நடக்கலானார். தென்காசி என்று சிறப்பாகக் கூறப்படுகின்ற தெச்சணாபூமியில் மக்கள் எல்லாரும் மகிழ்ச்சியுடன் வைகுண்டரைப் பார்த்துக் கொண்டு சூழ்ந்து நிற்க, வைகுண்டர் மணவைப் பதி நோக்கி நடந்து கொண்டிருந்தார்.
.
.
அகிலம்
========
நடந்தெம் பெருமாள் நல்ல கடல்வழியே
திடந்தெளிந்த தேவர்களும் செயசெ யெனநடக்க
கண்டார் துவரம் பதியின்கண் ணோட்டமெல்லாம்
பண்டைப் பதியின் பவிசொல்லா மேபார்த்து
ஆன பதியின் அகலநீ ளம்பார்த்து
மான பதியின் வாசலெல்லாம் பார்த்தவரும்
.
விளக்கம்
=========
இப்படியே கடற்கரை வழியாகச் சக்தி வாய்ந்த தேவர்கள் வைகுண்டருக்கு வெற்றி என்று ஒலி எழுப்பிக் கொண்டு நடக்க தாம் முன்னர் ஆட்சி புரிந்த துவரயம் பதியையும் அக்காட்சியையும் செல்வச் செழிப்பையும் மனதுள் பார்த்து மகிழ்ந்தார். அந்தத் துவரயம்பதியின் விசாலமான அகலம், நீளம் முதலிய பரப்பளவைப் பார்த்தும் உயர்வான அப்பதியின் வாசல்களை எல்லாம் மனதுள் பார்த்தும் மகிழ்ச்சி அடைந்தார்.
.
.
அகிலம்
=======
நாடுகுற்றங் கேட்க நல்லதவஞ் செய்வதற்குத்
தேடும் வடவாசல் சீவிவளர் மலையின்
நேரும்வா சல்தனக்கு நிகரில்லை யாமெனவே
தவசுக் குகந்த தலங்களிது நன்றெனவே
உபசீ வனம்வளரும் உகந்தபுவி யீதெனவே
என்று மனதிலெண்ணி என்றன்பெரு மானும்
.
விளக்கம்
=========
நாட்டு மக்களின் நடுத்தீர்ப்பு கேட்கச் செல்லுவதற்கு முன்னால் நான் நல்ல முறையில் தவம் செய்யத் தேடுகின்ற வடக்கு வாசல் செதுக்கப்பட்டு வளருகின்ற சிறந்த மலையை நோக்கி இருக்கும் என்றும், இந்த நேரான வடக்கு வாசலுக்கு நிகர் எதுவும் இல்லை என்றும், தவசு செய்வதற்கு ஏற்ற சிறந்த இடங்களில் இவ்விடம் மிகவும் நல்ல இடம் என்றும். எல்லாச் சக்தியும் வளருகின்ற சிறந்த பூமி இது என்றும் வைகுண்டர் மனதில் எண்ணினார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#அய்யா வைகுண்டர் #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் {1008} #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்
தேவன் சட்டமிட்டுத் தெச்சணம் போகவென்று
நடந்தார் துரிதமுடன் நாரணனார் தெச்சணத்தில்
நல்லநா ராயணரும் நாடி வழிநடக்க
வல்ல பெலமான மாமுனிவ ருங்கூடி
எல்லோருங் கூடி இயல்வா ரிக்கரையே
நல்லோர்க ளாக நடந்தார்கா ணம்மானை
வாதையே யானதெல்லாம் வைகுண்டர் பாதமதை
சீதமுடன் போற்றித் தீபரணைக் காட்டிவரக்
காட்டுகின்ற தீபமெல்லாம் காணாத வர்போலே
நாட்டுக் குடைய நாரா யணர்நடந்தார்
.
.
விளக்கம்
---------------
மிகவும் சக்தி வாய்ந்த மாமுனிவர்களும் இவரோடு கூடி நல்லவர்கள் எல்லாருமாக விரைவாகத் தெச்சணாபூமியை அடைந்து கடற்கரை ஓரத்தின் வழியாக நடந்து சென்று கொணடிருந்தனர். தெச்சணாபூமியை வந்தடைந்த வைகுண்டரைக் கண்ட வாதைகளும் பேய்களும் அவர் பாதங்களை வணங்கி அவருக்குத் தீபாராதனை காட்டி வந்தன. தீபாராதனை எல்லாவற்றையும் நாட்டு மக்களுக்குரிய வைகுண்டர் காணாதவரைப் போன்று நடக்கலானார்.
.
அகிலம்
--------------
நல்ல குலதெய்வங்கள் மறைதல்
-------------------------------
நல்ல குலதெய்வம் நாட்ட மதையறிந்து
எல்லைக் குடையை ஈசர்வந் தாரெனவே
இன்றுமுதல் வம்பருக்கு இயல்பகைதான் சூழ்ந்துதென்றும்
நன்று மனத்தோர்க்கு நல்லநாள் வந்துதென்றும்
முற்கலியன் சட்டம் முதன்மையின் றுமுதலாய்த்
துற்கலிபோ லாகிச் சுற்றுக் குலைந்துதென்றும்
கொண்டாடி நல்ல கூளி கணங்கள்சொல்லிக்
கண்டா ருடனேயும் கைதொழுத மனுவோடும்
இன்றுமுத லெங்களுக்கு எற்கும்வகை யில்லையேகாண்
கண்டுகொள்ளுங் கோவெனவே கண்காட்டிப் போய்மறைந்தார்
.
.
விளக்கம்
----------------
நல்ல சான்றோர் குலத் தெய்வமாகிய வைகுண்டரின் விருப்பத்தைப் பேய்கள் அறிந்து, கலியை அழிக்கும் எல்லைக்குரிய வைகுண்ட இராசர் வந்தார் என்றும், இன்று முதலாக வம்பர்களுக்குக் கடினமான பகைமை சூழ்ந்தது என்றும் நல்ல மனத்தை உயடைவருக்கு நல்ல காலம் வந்தது என்றும் கலியன் நமக்குச் சாதகமாக இட்ட சட்டங்கள் முறைதப்பி இன்றுமுதல் நமக்குக் துன்பமயமான கலிபோன்று ஆகி நமது சுற்றங்கள் முழுவதும் குலைந்து விட்டன என்றும் கூறி வருந்தின. அதிக குற்றம் நிறைந்த கூளிக்கணங்கள் அய்யோ எங்களைக் கண்டவரும் தொழுதவரும் தரும் பூசை முதலியவற்றை இன்று முதல் ஏற்கின்ற முறை இல்லையே என்ன செய்வோம்? இதைக் கண்டு கொள்வீராக என்று கூறிக் கண்ணைச் சிமிட்டி ஓடிப் போய் ஒளித்துக் கொண்டன.
.
.
அகிலம்
--------------
நானில மரசு ஆள நாரணர் பெற்று வாறார்
தானித மான அன்பாய்ச் சகலருங் கேட்டுக் கொள்ளும்
மாநிலத் தோரே யென்னை வருந்தியே தேவ வேண்டாம்
நானினிச் செய்ய ஆகா நவின்றவர் தெய்வம் போனார்
.
விளக்கம்
----------------
நீதியுடன் வாழ்ந்துவரும் அன்பர்களே, இப்பெரிய உலகில் வாழ்வோரே. எல்லாரும் கேட்டுக் கொள்ளுங்கள். மக்கள் வாழும் குறிஞ்சி, முல்லை, நெய்தல் மருதம் ஆகிய நான்கு பூமிகள் போன்றவற்றை ஆள வைகுண்டர் வரம் பெற்று வருகிறார். இனி எம்மைக் காண மனம் வருந்தித் தேட வேண்டாம், நாங்கள் எந்த உபதேசங்களும் இனிச் சொல்ல முடியாது எனச் சொல்லி தெய்வங்கள் இவ்வுலகைவிட்டு தமது இருப்பிடம் சென்றன.
.
.
அகிலம்
--------------
தேயவங்க ளுலகி லெல்லாம் தெரிசனங் காட்டிக் காட்டி
மெய்வரம் புள்ளோ ரெல்லாம் மேதினி விட்டுப் போந்தார்
பொய்வரம் பசாசு எல்லாம் பொன்றிய வகையா ராமல்
மெய்மறந் துரைகள் சொல்லி மேதினி யொழித்தா ரென்றே
.
விளக்கம்
-----------------
இவ்வாறாக இவ்வுலக மக்களுக்குத் தரிசனம் காட்டி வந்த உண்மை நியாய வரம்புள்ள தெய்வங்களும் இவ்வுலகை விட்டுச் சென்றன. பொய்யான வரங்களைப் பெற்றுக் கொண்ட பசாசு பேய்கள் எல்லாம் தாம் அழிகின்ற வழியினைப் பாராமல் மனம் பதறி உண்மை நிலை மறந்து வாய்க்கு வந்தவாறு உளறியவண்ணம் உலகிலிருந்து சென்று ஒளித்தன.
.
.
தொடரும்... அய்யா உண்டு.
#Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் {1008} #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை 11ஆம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.06.2026.
.
அய்யா துணை
.
தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால்
பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர்.
.
.
அகிலம்.
========
நதியிற் பிறந்த நாரா யணமூர்த்தி
பதியி னலங்காரம் பார்த்து வழிநடந்தார்
கெங்கை தனிற்பிறந்த கிருஷ்ண மகாநாதன்
கங்கை வழிநோக்கிக் கண்ணோன் வழிநடந்தார்
.
விளக்கம்
=========
கடலில் பிறந்து ஞானம் பெற்ற வைகுண்டர் ஆங்காங்கே கண்ட கோவிலின் அலங்காரங்களைப் பார்த்தபடி சிறந்த கடற்கரை வழியே தெச்சணாபூமி நோக்கி நடந்தார்.
.
அகிலம்.
========
வெண்மை உயிரினங்கள் வைகுண்டரைப் பணிதல்
=====================================================
நடந்து வருகும் நல்லவை குண்டர்முன்னே
கடந்து முன்போன காண்டா மிருகமொடு
சிங்கமி யாளி செங்கருட னங்கனுமன்
பங்கமிலா றாஞ்சி பால்நிறப் பட்சிகளும்
ஐந்தலை நாகம் அஞ்சுபஞ் சாச்சாரை
செந்தலைக் கருடன் செய்யகாண் டாமிருகம்
கலியன்கண் காணாதே காடோடி வாழ்ந்திருந்த
சலிவில்லா மாமிருகம் சந்தவர்ணப் பட்சிமுதல்
தரும வைகுண்டர் தான்வந்தா ரென்றுசொல்லிப்
பொறுமைக் குலங்களெல்லாம் புறப்பட் டகமகிழ்ந்து
.
விளக்கம்
=========
இப்படி நடந்து வந்த வைகுண்டர் முன்னால் ஏற்கெனவே கலியைக் கண்டு கண் காணாதவாறு பயந்து ஓடிய காண்டா மிருகம் சிங்கம், யாளி, செங்கருடன் குரங்கு, தீமையில்லாத இறஞ்சி, வெள்ளை நிறப்பட்சிகள், ஐந்து தலை நாகம், அஞ்சுகின்ற ஐந்து வகைச் சாரைகள், செந்தலைக் கருடன், அழிவில்லாப் பெரிய மிருகங்கள், அழகான பல வர்ணப் பட்சிகள்வரை, இன்னும் பல உயிரினங்கள் ஆகிய பொறுமைக் குல உயிர்கள் திருமபூமியை ஆளப் போகின்ற வைகுண்டர் வந்தார் என்று சொல்லி அவரைக் காணப் புறப்பட்டு வந்து அவர் மலர்ப் பாதங்களைக் கட்டி பிடித்து மகிழ்ந்தன.
.
அகிலம்
=======
வந்து வைகுண்டர் மலரடியைப் பூண்டுகொண்டு
சிந்தர் குலமன்னர் தெய்வப் பெருமாளே
வைகுண்ட ரெப்போ வருவீர் வருவீரென்று
கைகண்ட நிதியும் காணாதார் போலிருந்தோம்
கப்பல்கரை கண்டாற்போல் கண்டோமே யும்மையும்நாம்
செப்பத் தொலையாத திருவடியைப் போற்றிசெய்ய
.
.
விளக்கம்
=========
பிறகு அவை வைகுண்டரை நோக்கி, சித்தர்களின் குலத்துக்கு மன்னவனே, தெய்வப் பெருமானே, வைகுண்டரே, நீர் எப்பொழுது இங்கு வருவீர் என்று கையில் கிடைத்த திரவியத்தைக் காண முடியாதவரைப் போன்று இது நாள்வரை தவித்தோம். இப்பொழுது உம்மைக் கண்டதும் காற்றில் அகப்பட்ட கப்பல் கரையை அடைந்ததைப் போன்று நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம் என்று கூறி விளக்க முடியாத அவர் திருப்பாதங்களை வணங்கின.
.
.
அகிலம்
========
வாறோங்கா ணும்முடனே வைகுண்டப் பெம்மானே
தாறோங்கா ணெம்முதுகு சாமியுன் பாதமதுள்
என்றிவைக ளெல்லாம் இரங்கித் தொழுதிடவே
.
விளக்கம்
=========
மீண்டும் வைகுண்டரை நோக்கி, வைகுண்ட பெருமானே, நாங்களும் உம்முடன் வருகிறோம். உமது பாதங்கள் எங்கள் முதுகின் மேல் தாங்கிட நாங்கள் பணிந்து தருகிறோம் என்று அவை எல்லாம் இரங்கித் தொழுதன.
.
.
அகிலம்
=======
நன்றென் றுஅந்த நாரா யணருரைப்பார்
ஒருவிளி பொறுங்கோ உண்மையிது தப்பாது
இருவிளிக் குள்ளே என்னிடத்தில் வந்திடுங்கோ
இருங்கோ முன்னயச்ச இடத்திலே போயிருங்கோ
கருதி யிருங்கோ கருத்தயர்ந்து போகாதுங்கோ
அலைய விடாதிருங்கோ அஞ்சுபஞ் சமதையும்
குலைய விடாதிருங்கோ குருநினைவை யுள்ளேற்றம்
என்று அவைகளுக்கு எம்பெருமான் சட்டமிட்டு
அன்று அவைகளையும் அனுப்பி மிக நடந்தார்
.
விளக்கம்
=========
வைகுண்டர் அவற்றை நோக்கி, நல்லது நான் ஒரு சொல்லுக்குக் கீழ் அரசாளும்வரை பொறுத்து இருங்கள். உண்மையாக இது தப்பாமல் நடக்கும். இரண்டாவது சொல்ல உருவாகும் முன்னால் நீங்கள் என்னை அடையுங்கள். அதுவரை நான் முன்னால் அனுப்பிய கானகத்திலே வாழ்ந்து வாருங்கள். அங்கு என்னைச் சிந்தித்த வண்ணமாக வாழுங்கள். சிந்தனை மாறுபடாமல் இருங்கள். உங்கள் ஐம்புலன்களையும் அதற்குரிய விருப்பம்போல் விட்டுவிடாதீர்கள். எல்லாவற்றிற்கும் காரணமாக இருக்கக்கூடிய என்னை உங்கள் உள்ளத்தில் நிலை பெறச் செய்யுங்கள் என்று அவர் முன் தோன்றிய எல்லாவகை உயிரினங்களுக்கும் சட்ட விதிமுறைகளைக் கூறி அவற்றை அனுப்பி விட்டு மீண்டும் தெச்சணாபூமி நோக்கி நடக்கலானார்.
.
.
அகிலம்
=======
நடந்துபல திக்கும்விட்டு நல்லவன வாசம்விட்டுக்
கடந்துசில ஊரும்விட்டுக் கடல்வழியே தானடந்தார்
இரசகனிக ளேற்று இரவும் பகல்கடந்தார்
விசைகொண்ட ராசர் விசயா பதிகடந்தார்
வாரிக் கரைவழியே வரவேணு மென்றுசொல்லி
சூரிய புஸ்பத் துல்வக் குறிபார்த்து
வீரிய நாதன் விரைவாய் வழிநடந்தார்
.
விளக்கம்
=========
பல திசைகளையும் கடந்து நல்ல வனவாசப் பகுதிகளையும் கடந்து, சில ஊர்களையும் கடந்து, கடற்கரை வழியே நடந்தார் அய்யா. பழரசங்களையும் கனிகளையும் உண்ட வண்ணமாக இரவும் பகலும் நடந்தார். விரைவாக வந்து கொண்டிருந்த வைகுண்டர் லீசா வீதியைக் கடந்தார். பிறகு கடற்கரை வழியாக வர வேண்டும் என்று எண்ணிச் சக்தி வாய்ந்த வைகுண்டர் விரைந்தார்.
.
.
அகிலம்
=======
கடல் விளைவெல்லாம் வைகுண்டர் பதம்பணிதல்
=====================================================
கடலுட் பதிகள் கண்டுகண் டேநடந்தார்
மடமடென அட்டவணை வாரிதீர்த் தாமாடி
கடற்பெம்மான் வாறார் காணுவோ மென்றுசொல்லித்
திடமுடனே வாரி சென்றுகண்டு தான்தொழவே
.
விளக்கம்
=========
கடற்கரையை அடைந்து நடந்து கொணடிருந்த வைகுண்டர், சூரியன் மென்மையானக் கதிர் வீசும் தன்மையைக் கண்டும், கடலினுள் பல பதிகளைப் கொண்டும் நடந்தார். அப்போது, கடல் விரைவாக வந்து கலி அழிக்கும் வைகுண்டரைத் தீர்த்தம் ஈடச் செய்து கடல் பெருமாள் வருகிறார். அவரைக் கண்டு களிப்போம் என்று கூறித் தைரியமாகக் அவரைக் கண்டு களித்துத் தொழுதது.
.
.
அகிலம்
========
முத்துக்கள் சங்கு முன்வந்து தெண்டனிட்டு
வத்துப் பெரிய வைகுண்ட மன்னவரே
இத்தனை நாளும் இயல்கலிய னேதுவினால்
சற்றும் வெளிகாணாதே சமுத்திரத்தி னுள்ளிருந்தோம்
தர்மப் பெருமானே சாமிநீர் வந்ததினால்
நன்மை யுடனாங்கள் நாட்டிலே வாறோங்காண்
ஒருசொல் வரைக்கும் உவரியிலே வாழ்ந்திருங்கோ
இருசொல் லாகுமட்டும் இங்கிருங்கோ என்றுரைத்து
நடந்து வைகுண்டர் நாடி மிகவரவே
.
விளக்கம்
=========
முத்துக்களும், சங்குகளும் வந்து வைகுண்டரை வணங்கி. முப்பூ நிலையை அடைந்த உயர்வான வைகுண்ட மன்னவரே, இவ்வளவு காலமும் தீய இயல்புடைய கலியன் துன்பத்தினால் நாங்கள் சிறுபொழுது கூட வெளியில் வராவண்ணம் கடலின் உள்ளேயே வாழ்ந்து வந்தோம். தருமபெருமானே, சுவாமி, நீர் இங்கு வந்ததால் மகிழ்ச்சியுடன் நாங்கள் உம்மோடு நாட்டிற்கு வந்து வாழ்கின்றோம் என்று அந்தக் கடல் உயிரினங்கள் கூறின. உடனே, வைகுண்டர் அவற்றை நோக்கி, ஒரு சொல்லுக்குக் கீழ் அரசாளும்வரை கடலினுள்ளே வாழ்ந்து வாருங்கள். இரண்டாவது சொல் உருவாகும்வரை நீங்கள் காத்திருங்கள் என்று கூறி வைகுண்டர் தெச்சணாபூமி நோக்கி விரைவாகச் சென்றார்.
.
.
அகிலம்
=======
கிடந்த நிதியும் கீழ்க்கிடந்த காசுகளும்
ஒக்க உயரவந்து உளமகிழ்ந்து தானிருக்கும்
திக்கென்று நாதன் சேடன் தனையழைத்து
கயிலாசந் தன்னைக் கட்டாய் வரவழைத்து
ஒயிலாக இத்தனையும் உள்ளேநீ கொண்டுசென்று
காவல்செய்து கொள்ளு கயிலாச மென்றுரைத்தார்
.
விளக்கம்
=========
அங்கே கிடந்த திரவியப் பொருள்களும் கீழே கிடந்த காசுகளும் சேர்ந்து உயரே எழும்பி வந்து மகிழ்ச்சியுடன் நோக்கின. திடீர் என்று வைகுண்டர் ஆதிகேடன் பாம்புடன் வாழ்ந்து வந்த கயிலாசம் என்னும் முனியை அழைத்து அவனை நோக்கி, நீ மிகவும் கவனமாக இந்தத் திரவியங்களையும் காசுகளையும் கொண்டு சென்று பாதுகாவல் செய்து வைத்துக் கொள் என்று உரைத்துச் சம்பூரணதேவனாகிய வைகுண்டர் அவனுக்குச் சட்ட விதி முறைகளைக் கூறிவிட்டு தெச்சணாபூமி செல்ல வேண்டும் என்று மிகுந்த விரைவுடன் நடக்கலானார்.
.
.
தொடரும்... அய்யா உண்டு.






![அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே ! அய்யா ! 08.06.2026 D Muthu Prakash] வீரத்தனமாய் இருங்கோ ! போல் விளக்கின் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே ! அய்யா ! 08.06.2026 D Muthu Prakash] வீரத்தனமாய் இருங்கோ ! போல் விளக்கின் ஒளி - ShareChat அய்யா வைகுண்டர் {1008} - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே ! அய்யா ! 08.06.2026 D Muthu Prakash] வீரத்தனமாய் இருங்கோ ! போல் விளக்கின் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே ! அய்யா ! 08.06.2026 D Muthu Prakash] வீரத்தனமாய் இருங்கோ ! போல் விளக்கின் ஒளி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_214233_240cfed_1780878212129_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=129_sc.jpg)


![அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி - ShareChat அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_705408_28d3acb5_1780620704207_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=207_sc.jpg)
![Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி - ShareChat Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே எல்லா முனது ச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே 05.06.2026 D Muthu Prakash] அய்யா |ருங்கோ வீரத்தனமாய் விளக்கின் 1 போல் ஒளி - ShareChat](https://cdn4.sharechat.com/bd5223f_s1w/compressed_gm_40_img_471589_239ee680_1780620470031_sc.jpg?tenant=sc&referrer=user-profile-service%2FrequestType50&f=031_sc.jpg)

