D Muthu Prakash, Kanchipuram 💐
ShareChat
click to see wallet page
@d_muthuprakash
d_muthuprakash
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 15.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== திடீரெனவே நாதன் சொன்னமுனி யோடுரைப்பார் கொண்டுவந்தோ மென்றீரே கூர்மையுள்ள நற்சடலம் பண்டுமுறை யெல்லாம் பகருவீர் மாமுனியே . விளக்கம் ========= திருமால் முனிவர்களை நோக்கி, முனிவர்களே, சடலத்தைக் கொண்டு வந்தோம் என்று சொன்னீர்களே, அந்த உயர்வு பொருந்திய நல்ல சடலத்தின் முன் வரலாறுகளை எல்லாம் விளக்கமாகக் கூறுவீர்களாக என்றுரைத்தார். . . அகிலம் ======== அப்போது மாமுனிவர் ஆதி யருளாலே செப்புகிறோ மென்று செப்பலுற்றா ரன்போரே நல்ல சடலமிது நாடுமுற் காலமதில் வெல்லமர்கோன் வாழும் வெற்றிதெய்வ கோலகவுயிர் பெருசம் பூரணன்தான் பெரிய திறவான்காண் ஆரொவ்வா ரேயிவர்க்கு ஆதி கிருபையுள்ளோன் அப்படியே தெய்ட லோகமதி லேயிருக்க இப்படியே யிவர்க்கு எமலோக மானதிலே இருக்கின்ற பெண்ணதிலே இசைந்தபர தேவதையென்(று) ஒருகுழலி தன்மேல் உள்ளாசை யாயிவரும் அவளு மிவர்பேரில் ஆசையாய்த் தானிருந்து இவளு மிவரும் இருந்துமிக வாழ்கையிலே தேவருக்குந் தெய்வ லோகமே ழுள்ளவர்க்கும் யாவருக்கு மோர்பிறவி யாகுகின்ற நாளதுவாம் இவரையும் வருத்தி என்னவுன் செய்தியென்றார் . விளக்கம் ========= அப்பொழுது முனிவர்கள், ஆதியின் அருளால் நாங்கள் கூறுகிறோம் என்று கூறி விளக்கலுற்றனர். அன்பர்களே கேளுங்கள். . உயர்வான இந்த பொன் கூட்டுச் சடலத்தில் இருப்பது ஒரு காலத்தில் தெய்வேந்திரன் வாழுகின்ற வெற்றியையுடைய தெய்வலோகத்தில் வாழ்ந்த சம்பூரணதேவன் என்னும் பெயருடைய ஓர் உயிர் ஆகும். இவன் பெரிய சக்தி உடையவன் ஆவான். இவனுக்கு நிகராக யாரும் இலர். ஆதி இறைவனின் அருள்படைத்தவன் இவன். இப்படித் தெய்வலோகத்தில் வாழ்ந்து கொண்டிருந்த சமயத்தில் இவனுக்கு எமலோகத்தில் வாழ்ந்து வந்த பெண்களிலே பரதேவதை என்னும் பெயருடைய பெண்ணின் மேல் காதல் உண்டானது. அவளும் இவன் மேல் ஆசை கொண்டாள். இவ்வாறு இவனும் அவளும் வாழ்ந்து வருகின்ற சமயத்தில் தேவர்கள் வாழும் தெய்வலோகம் முதலிய ஏழு லோகத்தில் உள்ளவர்கள் எல்லாரும் பூவுலகில் பிறவி எடுக்கச் சம்மதித்தனர். அச்சமயம் சம்பூரணதேவனிடம் திருமாலாகிய நீவிர் “ நீ பிறப்பதற்கு ஏதாவது தடை உண்டோ?” என வினவினீர். . . அகிலம் ======== அவளுடைய ஆசையினால் அல்லவென்று தான்மறுத்து இவளையு மென்னோடு இயல்பாய்ப் பிறவிசெய்தால் குவளையணி மாயவரே குணமெனக் காகுமென்றார் . விளக்கம் ========= சம்பூரணதேவன் பரதேவதையின் காதலினால் எனக்குப் பூலோகத்தில் பிறக்க விருப்பமில்லை என்று கூறி மறுத்து, பரதேவதையையும் என்னோடு எனக்குரிய இயல்புடையவளாகப் பிறவி செய்தால் குவளை மலரை அணிகின்ற மாயவரே, எனக்கு பூவுலகில் பிறக்க மறுப்பில்லை என்றான். . . அகிலம் ======== அப்போது நாதன் அந்தத்தே வன்றனக்குச் செப்பமுள்ள புத்தி செப்பிமிகப் பார்த்தனரே அப்போதிவர் கேளாமல் அதுதானது தானென்றார் மாயனுக்குக் கோபம் மனதில் மிகவாகி ஆயனப்போ திவர்க்கு அதிகப் பலனுரைத்தார் நல்லதுநீ கேட்ட ஞாயமீட் டேற்றமதாய் வல்லவனை நினைந்து மாதுவும் நீதானும் எங்க ளிருபேர்க்கும் இன்னம் பிறவியிலே மங்கையும் புருசனென மறவாம லாவதற்கு வரந்தாரு மென்று மனதில் நினைவேற்றிப் பரந்தாண்டி கண்டு பலன்பெறுங்கோ வென்றுசொல்லி தவசிருக்க விட்டீர்காண் சங்கரரே நீர்தாமும் . விளக்கம் ========= இதைக் கேட்ட நீர் சம்பூரணதேவனுக்கு நேர் வழியுள்ள நல்ல புத்திமதிகளைக் கூறி பார்த்தீர். ஆனால், சம்பூரணதேவனோ நீர் கூறியதைக் கேளாது, எனக்கு அவள்தான் வேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறினான். உடனே, உமக்கு அதிக கோபம் மனதில் உண்டாகி அவனை நோக்கி, தேவனே, நீ கேட்ட நியாயம் நல்லது தானா? நீ கேட்டபடி ஈடேற வேண்டும் என்றால், பரதேவதையும் நீயும் வல்லவனாகிய இறைவனை நினைத்து, எங்கள் இருவருக்கும் இனி வரப் போகின்ற பிறவியில் கணவனும் மனைவியுமாக உருவாவதற்கு வரம் தர வேண்டும் என்று மனதில் ஒரே நினைவை ஏற்றிப் பரநிலை தாண்டி, உயர் நிலை கண்டு, நீங்கள் நினைத்த பலனைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்லி, அவர்களைத் தவசு நிற்பதற்காக அனுப்பினீர். . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர் ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான் மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான் அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான் குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன் அய்யா ! 05.05.2021 D Muthu Prakash வீரத்தனமாய் இருங்கோ  விளக்கின் GLIIroঠ ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர் ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான் மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான் அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான் குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன் அய்யா ! 05.05.2021 D Muthu Prakash வீரத்தனமாய் இருங்கோ  விளக்கின் GLIIroঠ ஒளி - ShareChat
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.04.2026. . தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் 💐. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும் பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று . விளக்கம் ========= இவ்வாறு அவ்வனத்தில் நடைவாறிசக் கொண்டிருக்கின்ற வேளையில், திருச்செந்தூரில் மகாவிஷ்ணு, நமது குழந்தையாகப் பிறவி எடுக்கத் தகுதியான பிள்ளை ஒன்று இதோ வந்து கொணடிருக்கின்றது என்று திறவி முதலோனாகிய திருமால் மனம் தெளிந்து மகிழ்ச்சியுற்று, அந்தப் பிள்ளையின் எதிரே ஆள் அனுப்பி எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்று நினைத்தார். . . அகிலம் ======== அருகே தானின்ற ஆதி முனியான நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம் நானே மித்த நல்லவுயி ரானதிங்கே தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார் . விளக்கம் ========= உடனே தமது அருகே நின்ற இரண்டு முனிவர்களை அழைத்து, நீங்கள் வல்லவர்களே, என்று கூறித் தமது அருகில் அழைத்து பிள்ளைகளே, உயர்வு வாய்ந்த முனிமாரே, உங்களுக்கு நேராக ஓர் அன்பு மொழி கூறுகின்றேன் கேட்பீர்களாக. நான் ஏற்கெனவே என் குழந்தையாக நியமித்த சிறப்பான உயிரானது இங்கே தானாக வந்து கொணடிருக்கின்றது. இந்நிகழ்ச்சி என்னுடைய தவத்தின் பயனால் நிகழ்கின்றது. முனிவர்களே, நீங்கள் போய் அவனை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள் என்று கூறி முனிமாரை அனுப்பினார். . . அகிலம் ======== அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப் பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும் எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார் . விளக்கம் ========= இவ்வாறு அனுப்பப்பட்ட முனிவர்கள் காற்றைப் போன்று விரைவாகப் பயபக்தியுடன் கிளம்பிச் சென்று அவர்கள் எந்தெந்த வழிகளில் வர முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஆலோட்டம் இட்டு ஆராய்ந்தனர். . . அகிலம் ======== வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர் சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு கண்டு குவித்துக் கனக முனிமார்கள் வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும் முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப் பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக் குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர் கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர . விளக்கம் ========= கடைசியாக ஒரு வழியாக அவர்கள் வருவதைக் கண்டு முனிவர்கள் மிகவும் பணிவாக வணங்கிக் கைகுவித்து அவர்கள் அருகில் சென்றனர். அம்முனிவர் இருவரும் வண்டு சுற்றி வருகின்ற மணம் பொருந்திய மார்பையுடைய கரங்கள் இரண்டையும் ஆளுக்கொரு பக்கமாகத் தோளில் வைத்து உயர்வாக ஏந்திப் பிடித்து மிகுந்த துணிவுடன் அவரைத் தோளின் மேல் இருத்திக் குதிரை நடைபோல் துள்ளிக் குதித்து ஓடியும் நடந்தும் வந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வர முடியாமல் அவரோடு வந்த மனிதர்கள் வாட்டமுற்று ஓடி வந்தனர். . . அகிலம் ======== நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச் சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம் அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே . விளக்கம் ========= நல்ல பிறவியை முனிவர்கள் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு மேன்மையான திருச்செந்தூர்ப் பகுதிக்கு வந்தடைந்தடைந்தனர். இவ்வாறு வந்த முனிவர்கள் நல்ல உயிரை சந்தன மணம் வீசுகின்ற அந்த வீதியிலே நிலை நிறுத்தினர். பிறகு அந்த மாமுனிவர்கள் திருமாலைச் சென்று கண்டு, சுவாமி நீர் அழைத்துக் கொண்டு வரச் சொன்ன உயர்வான உடலை உமது அடியாராகிய நாங்கள் அவர் எதிரே சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தோம் அய்யா என்று பணிந்தனர். . . தொடரும்… அய்யா உண்டு.
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர் வைகுண்டரின் Ku PRA நாமம் பெறவோங்க வந்தவரோ 1 தமிழ் புத்தாண்டுதின 14.04.2026 அகிலம். நல்வாழ்த்துகள் D Muthu Prakash ருங்கோ விளக்கின் வீரத்தனமாய் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர் வைகுண்டரின் Ku PRA நாமம் பெறவோங்க வந்தவரோ 1 தமிழ் புத்தாண்டுதின 14.04.2026 அகிலம். நல்வாழ்த்துகள் D Muthu Prakash ருங்கோ விளக்கின் வீரத்தனமாய் போல் ஒளி - ShareChat
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 14.04.2026. . தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினர் அனைவரும் இனிய தமிழ் புத்தாண்டு தின நல்வாழ்த்துகள் 💐. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== வகையான நல்ல வாய்த்தமகா விட்டிணுவும் பிறவிக்கு ஏற்ற பிள்ளை வருகுதென்று திறவி முதலோன் தெளிந்துமிகக் கொண்டாடி எதிரே ஆள்விட்டு இங்கழைக்க வேணுமென்று . விளக்கம் ========= இவ்வாறு அவ்வனத்தில் நடைவாறிசக் கொண்டிருக்கின்ற வேளையில், திருச்செந்தூரில் மகாவிஷ்ணு, நமது குழந்தையாகப் பிறவி எடுக்கத் தகுதியான பிள்ளை ஒன்று இதோ வந்து கொணடிருக்கின்றது என்று திறவி முதலோனாகிய திருமால் மனம் தெளிந்து மகிழ்ச்சியுற்று, அந்தப் பிள்ளையின் எதிரே ஆள் அனுப்பி எதிர்கொண்டு அழைக்க வேண்டும் என்று நினைத்தார். . . அகிலம் ======== அருகே தானின்ற ஆதி முனியான நல்ல முனிவரையும் நாரா யணரழைத்து வல்லவர்தாம் நீங்கள் வாரு மென அழைத்து வாருங்கோ பிள்ளாய் வாய்த்த முனிமாரே நேருங்க ளோடு நிகழ்த்துகிறே னோர்வசனம் நானே மித்த நல்லவுயி ரானதிங்கே தானே வருகுதுகாண் எந்தன் தவத்தாலே எதிரேபோய் நீங்கள் இங்கழைத்து வாருமென்று பதியேறும் பெருமாள் பகர்ந்து முனியயச்சார் . விளக்கம் ========= உடனே தமது அருகே நின்ற இரண்டு முனிவர்களை அழைத்து, நீங்கள் வல்லவர்களே, என்று கூறித் தமது அருகில் அழைத்து பிள்ளைகளே, உயர்வு வாய்ந்த முனிமாரே, உங்களுக்கு நேராக ஓர் அன்பு மொழி கூறுகின்றேன் கேட்பீர்களாக. நான் ஏற்கெனவே என் குழந்தையாக நியமித்த சிறப்பான உயிரானது இங்கே தானாக வந்து கொணடிருக்கின்றது. இந்நிகழ்ச்சி என்னுடைய தவத்தின் பயனால் நிகழ்கின்றது. முனிவர்களே, நீங்கள் போய் அவனை எதிர்கொண்டு அழைத்து வாருங்கள் என்று கூறி முனிமாரை அனுப்பினார். . . அகிலம் ======== அயச்ச முனிமார் அவ்வாயு போல்விரைவாய்ப் பயபட்ச முடனே பகர்ந்த இருமுனியும் எந்த வழியாய் இவர்கள்வரு வாரெனவே அந்தந்த வழிக்கு ஆலோட்டம் பார்த்துவந்தார் . விளக்கம் ========= இவ்வாறு அனுப்பப்பட்ட முனிவர்கள் காற்றைப் போன்று விரைவாகப் பயபக்தியுடன் கிளம்பிச் சென்று அவர்கள் எந்தெந்த வழிகளில் வர முடியுமோ அந்தந்த வழிகளில் எல்லாம் ஆலோட்டம் இட்டு ஆராய்ந்தனர். . . அகிலம் ======== வந்து ஒருவழியில் வரவேகண் டம்முனிவர் சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு கண்டு குவித்துக் கனக முனிமார்கள் வண்டுசுற்று மார்பனுட வாய்த்தகரம் ரண்டதையும் முனியிருபேர் தோளில் உயர்த்தி மிகவேந்தி துணிவுடனே மாமுனிவர் தோளின்மே லேயிருத்திப் பதியி லிருந்தாற்போல் பார்மன்னனை யிருத்திக் குதிரைநடை கொண்டாற்போல் கொண்டோடி மாமுனிவர் கூட நடப்போர் குதித்துக்குதித் தோடிவர வாடி யிடைந்து மனுநருட்க ளோடிவர . விளக்கம் ========= கடைசியாக ஒரு வழியாக அவர்கள் வருவதைக் கண்டு முனிவர்கள் மிகவும் பணிவாக வணங்கிக் கைகுவித்து அவர்கள் அருகில் சென்றனர். அம்முனிவர் இருவரும் வண்டு சுற்றி வருகின்ற மணம் பொருந்திய மார்பையுடைய கரங்கள் இரண்டையும் ஆளுக்கொரு பக்கமாகத் தோளில் வைத்து உயர்வாக ஏந்திப் பிடித்து மிகுந்த துணிவுடன் அவரைத் தோளின் மேல் இருத்திக் குதிரை நடைபோல் துள்ளிக் குதித்து ஓடியும் நடந்தும் வந்தனர். அவர்களைப் பின்தொடர்ந்து வர முடியாமல் அவரோடு வந்த மனிதர்கள் வாட்டமுற்று ஓடி வந்தனர். . . அகிலம் ======== நல்ல பிறவியைத்தான் நன்முனிவர் கொண்டோடி வல்லசெந் தூர்ப்பதியில் வந்தனர்கா ணன்போரே வந்த முனிமார்கள் வாழ்த்தியந்த நல்லுயிரைச் சந்தனா வீதியிலே சடலந்தனை நிறுத்தி மாமுனிவர் தாமும் மாயோனை வந்துகண்டு சாமிநீர் கொண்டுவரத் தானுரைத்த நற்சடலம் அடியா ரெதிரேபோய் அழைத்துவந்தோ மையாவே . விளக்கம் ========= நல்ல பிறவியை முனிவர்கள் தூக்கிக் கொண்டு மகிழ்ச்சியோடு மேன்மையான திருச்செந்தூர்ப் பகுதிக்கு வந்தடைந்தடைந்தனர். இவ்வாறு வந்த முனிவர்கள் நல்ல உயிரை சந்தன மணம் வீசுகின்ற அந்த வீதியிலே நிலை நிறுத்தினர். பிறகு அந்த மாமுனிவர்கள் திருமாலைச் சென்று கண்டு, சுவாமி நீர் அழைத்துக் கொண்டு வரச் சொன்ன உயர்வான உடலை உமது அடியாராகிய நாங்கள் அவர் எதிரே சென்று எதிர்கொண்டு அழைத்து வந்தோம் அய்யா என்று பணிந்தனர். . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர் வைகுண்டரின் Ku PRA நாமம் பெறவோங்க வந்தவரோ 1 தமிழ் புத்தாண்டுதின 14.04.2026 அகிலம். நல்வாழ்த்துகள் D Muthu Prakash ருங்கோ விளக்கின் வீரத்தனமாய் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீசக் குலங்களைக் கருவறுக்க நெடிய நாரணர் பெற்றகன்றோ தோசப் புழுச்சாதி குலமறுக்கத் திருமால் நாரணர் பெற்றகன்றோ சீமை மைம்பத்தாறு தேசமெல்லாம் சொல்லொன் றுள்ளாள வந்தவரோ நாமம் பெரியதோர் வைகுண்டரின் Ku PRA நாமம் பெறவோங்க வந்தவரோ 1 தமிழ் புத்தாண்டுதின 14.04.2026 அகிலம். நல்வாழ்த்துகள் D Muthu Prakash ருங்கோ விளக்கின் வீரத்தனமாய் போல் ஒளி - ShareChat
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 13.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== உற்பனம்போல் கொண்டு உற்றஅவர் மாதாவும் மகனே யின்றிரவில் மனஞ்சலித்து நான்வாடி அகம்வைத்த எண்ணம் அறிந்துசிவ நாரணரும் வந்துசொன்ன வுத்தரவை மகனேநீ கேளுவென்று விந்து வழிக்கிளையோர் மிகுவாகக் கேட்டிருக்கச் சொல்லுகிறா ளந்தச் சொற்பனத்தை யன்போரே . விளக்கம் ========= இதை உண்மையாக நம்பி அவரின் தாய் தன் மகனை நோக்கி, மகனே இன்றிரவு நான் உன் நோயின் துன்பத்தைப் பற்றிய எண்ணத்தோடு மனம் வாடி இருந்ததை அறிந்து சிவனின் மைத்துனராகிய திருமால் சொல்லிச்சென்ற கட்டளையை நீ கேட்பாயாக என்றாள். . . அகிலம் ======== நல்லுறவாய்க் கேளுமென்று நவிலுவா ளன்போரே ஆயிரத் தெட்டு ஆண்டிதுவா மிவ்வருசம் மாசியென்ற மாதமிது வாய்த்ததேதி பத்தொன்பது இம்மாத மித்தேதி ஏற்றதிருச் செந்தூரில் நம்மாணை கொடியேறி நல்லதிரு நாள்நடக்கு அங்குன் மகனை அழைத்துவ ருவாயானால் எங்குள்ளோ ருமறிய இப்பிணி யுந்தீர்த்து நல்லபே றுங்கொடுப்போம் நம்மாணை தப்பாதெனச் சொல்லவே கண்டேன் சுவாமிகரு மேனிநிறம் . விளக்கம் ========= அப்போது தங்கள் உறவினர்களும் கேட்டுக் கொணடிருக்க, சொல்லுகின்றாள் அன்புடையோரே கேட்பீர்களாக. ஆயிரத்து எட்டாம் ஆண்டு ஆகிய இந்த ஆண்டில், மாசி மாதம் பத்தொன்பதாம் தேதி உயர்வு பொருந்திய திருச்செந்தூரில் கொடி ஏற்றப்பட்டு நல்ல முறையில் திருவிழா நடக்கிறது. அங்கே உன் மகனை அழைத்து வந்தால் இவ்வுலக மக்கள் அறியும்படியாக உன் மகனுடைய நொயைத் தீர்த்து, மிகவும் ந்னமையான நல்ல உயர்வும் கொடுப்போம். இது சத்தியம். நம் பேரில் ஆணை. இது தவறாமல் நடக்கும் என்று திருமால் என்னிடம் அருளினார். அவர் கருமேனி நிறமுடையவர். . . அகிலம் ======== நான்கண்ட சொற்பனந்தான் நழுவிமிகப் போகாது தேன்கண்டாற் போலே சிரித்து மனமகிழ்ந்து இந்தக் கனாவதற்கு இங்கிருந் தங்கேபோய் வந்தல்லா தேபிணியும் மாறவகை யில்லையல்லோ . விளக்கம் ========= நான் கண்ட இந்தச் சொற்பணம் எந்த வகையிலும் தவறாத ஒன்று என்று கூறித் தேன்மழை பொழிந்ததைக் கண்டவர்போன்று சிரித்து மனம் மகிழ்ந்து, என்னுடைய இந்தக் கனவின்படி நாம் இங்கிருந்து திருச்செந்தூர் போய் வராமல் இந்தநோய் எந்த வகையிலும் மாறக்கூடிய வழி இல்லை அல்லவா? என்று தாய் உரைத்தாள். . . அகிலம் ======== என்றுரைக்க எல்லோரும் இன்பமுட னேமகிழ்ந்து நன்றுநன்று போவதற்கு நடைக்கோப்பு கூட்டுமென்றார் வேண்டும் பலகாரம் விதவிதமாய்ச் சேகரித்து ஆண்ட கருப்புக்கட்டி ஆனதெல்லாஞ் சேகரித்துத் தானதர்மஞ் செய்ய தனங்கள் மிகவெடுத்துத் தீன மானவரைத் திடமாகக் கூட்டிவந்து ஆளுமிகச் சேகரித்து அகலநல்ல தொட்டில்வைத்து நாளு கடத்தாமல் நடக்கவழி கொண்டனராம் . விளக்கம் ========= எல்லாரும் இன்பமுடன் மகிழ்ந்து, நன்று நன்று நாம் திருச்செந்தூருக்கு நடந்து போவதற்குரிய எல்லாப் பொருள்களும் சேகரித்திடுவோம் என்றனர். உடனே, அங்குப் புறப்படுவதற்குத் தேவையான பலகாரங்களை விதம் விதமாகச் செய்து, ஒருவருடமாக பக்குவப்படுத்தப்பட்டு கற்கண்டாக்கப்பட்ட கருப்புக் கட்டியும், இன்னும் வேண்டுவனவும் சேகரித்தனர். வழியில் செல்லும்போது தான தருமங்கள் செய்ய வேண்டிய பொருள்களும் எடுத்துக் கொண்டனர். நோயுற்றவரை கவனமாக அழைத்துச் செல்லத் தேவையான ஆட்களையும் கூட்டி நோயுற்ற அவரை வீதியான தொட்டில் ஒன்றில் கிடத்தி, நேரம் கடத்தாமல் திருச்செந்தூர் நோக்கி நடக்கலாயினர். . . அகிலம் ======== மாதாவும் மகனும் வாய்த்த நருளுடனே நிதாவின் பாதாரம் நெஞ்சில் மிகநிறுத்தி இருந்த பதியும்விட்டு ஏற்றவொரு காதம்விட்டு வருந்த நருளோடே வழிகொண்டா ரன்போரே கூடங் குளமும்விட்டுக் குளிர்ந்தசுக்குப் பாரும்விட்டுத் தோடவழி யாறுங்கண்டு சூறாவழிக் காடும்விட்டு நடந்து வொருவனத்தில் நல்லதண்ணீ ராவிகண்டு கொடர்ந்த பலகாரம் கொண்டுதண்ணீர் தான்குடித்து தகையாறிக் கொண்டு தானிருக்கும் வேளையிலே . விளக்கம் ========= இவ்வாறு தாயும் மகனும் தம்மோடு வந்துத மக்களுடன் திருமாலின் பாதங்களை மனதில் நிலைநிறுத்தித் தமது ஊரைவிட்டு அகன்று, ஒரு காதம் தூரம் வந்து கொண்டிருந்தனர். கூடங்குளத்தைத் தாண்டி, குளிர்ச்சி பொருந்திய சுக்குப்பாரு இடத்தையும் தாண்டி தோட்ட வழி ஆறும், சூறாவழி காடும் கடந்து ஒரு வனத்தில் வந்தடைந்தனர். அங்கிருந்த நல்ல தண்ணீர் நிரம்பிய குளத்தைக் கண்டு, அதன் பக்கத்தில் அமர்ந்து தாம் கொண்டு வந்த பலகாரம் முதலியவற்றை உண்டு தண்ணீர் குடித்துச் சடைவாறினர். . . தொடரும்… அய்யா உண்டு.
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப் பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே! அய்யா 13.04.2026 DMtwn Prakash விளக்கின் போல் வீரத்தனமாய் ருங்கோ ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 மகனே வுனைவிட்டு மறுவூரு வாழ்வேனோ நகமுஞ் சதையும்போல் நான்வருவே னுன்கூட எத்தனை கோடி இயல்தர்மஞ் செய்துவுன்னைப் பெற்றெடுத்தே னுன்கூட பிறகே வருவேனப்பா நீயொருவ னெனக்கு நிலையென்று காணுமுன்னே தாயில்லாப் பிள்ளையைப்போல் தட்டழிந்தே னென்மகனே! அய்யா 13.04.2026 DMtwn Prakash விளக்கின் போல் வீரத்தனமாய் ருங்கோ ஒளி - ShareChat
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 12.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== பதினே ழுவயதில் பண்டமைத்த பெண்ணோடு விதியா னபடியால் மெல்லியர்மே லிச்சைகொண்டு கூடிக் குணமாய்க் கொண்டவனை யுமகற்றித் தேடி யிவரோடு செய்யரச மாயிருந்தாள் வானுபர மேசுரனார் மாயவனா ராணையிட்டு நானும்நீ யுமாக நலமாக வாழ்வோமென்று ஆணையிட் டிருபேரும் அகமகிழ்ந் தன்றுமுதல் நாண மில்லாமல் நாயகன்போ லெவாழ்ந்தார் மங்கை காணாமல் மறுவூரு தங்கறியாள் அங்கவளைக் காணாமல் அயலூரு தங்கறியார் . விளக்கம் ========= அவர் தமது பதினேழாவது வயதில், முந்தைய பிறவியில் தமக்காக அமைக்கப்பட்ட பெண்ணோடு வாழ வதியானபடியால் அவளைக் கூடி மனத்துக்கு உகந்தவாறு வாழ இச்சை கொண்டார். அந்த பெண்ணும் தன் கணவனை அகற்றிவிட்டு இவரை தேடி அடைந்து அவரோடு மகிழ்ச்சியோடு சேர்ந்து வாழ ஆசை கொண்டாள். எனவே, அவர்கள் இருவரும் மேலோகத்தில் அமைந்திருக்கும் பரமேஸ்வரனால் மேலும், திருமாலின் பேலும், நாம் இருவரும் எந்தவித நாணமுமின்றிக் கணவனும் மனைவியும் போல் இன்பமாக வாழ்ந்து வருவோம் என்று ஆணையிட்டு அதன்படி வாழ்ந்தனர். பெண்ணைக் காணாவிட்டால் இவரும், இவரைக் காணாவிட்டால் அப்பெண்ணும் தவிப்பர். அவர் இல்லாத அந்த ஊரை அயலூராக நினைத்து அங்குத் தங்க முடியாது அவள் துன்பமுறுவாள். . . அகிலம் ======== இந்தப் படியாய் இவர்வாழும் நாளையிலே எந்தநருளுங்கண்டு இவர்க்கிவளை யமைத்ததென்பார் முன்னாள் அமைத்த ஊழி விதியெனவே சொன்னா ரெவரும் சுவாமி யருளாலே அன்றைக் கமைத்ததுவே அவளையிவர்க் கல்லாது என்று நருளெல்லாம் இயம்பி மிகவுரைத்தார் மன்றீ ரேழுமறிய மங்கையொடு வாழ்கையிலே . விளக்கம் ========= இப்படியாக அவர்கள் வளர்ந்து வருகின்ற சமயத்தில் எந்த மனிதர் இவளை மனைவியாக இவருக்கு அமைத்தார்? அந்த சக்தி எது என்று மக்கள் வியந்தனர். கடவுள் அருளினால் முன்பு அமைக்கப்பட்ட ஊழ் விதிதான் இவ்வாறு அமைத்தது என்றும் முன் பிறவியில் அமைந்த விதி போன்று இவளை அடைந்தது மட்டுமின்றி முற்பிறவி தோசம் எல்லாம் நீங்குவதற்கு அவர்களுடைய நல்ல பேறு இதுவாகும் என்றும் மக்கள் எல்லாரும் தமக்குள் கூறிக் கொண்டனர். இவ்வாறு ஈரேழு பதினான்கு உலகங்களும் அறியும்படியாக அவர் அந்தப் பெண்ணோடு வாழ்ந்து வந்தார். . . அகிலம் ======== உற்ற வயசு ஓரிருபான் ரண்டதிலே சத்துராதி யோர்நீசன் தானே பிழையேற்க ஏற்கவே நீசன் இடறுசெய்த ஏதுவினால் ஆர்க்கம் அடக்கி அமர்ந்து பிணியெனவே எல்லோரு மறிய இவரிருந்தா ரம்மானை வெல்லாரு மில்லா விசையடக்கித் தானிருந்தார் நொம்பலங்க ளென்று நொந்து மிகவுழைந்து தம்பிலங்க ளடக்கித் தருணம் புலம்பலுற்றார் . விளக்கம் ========= அச்சமயம் அவருக்கு வயது இருபத்திரண்டு முடிந்தது. அவ்வயதில் பகைமை பொருந்திய நீசன் ஒருவனின் பாவத்தை ஏற்ற காரணத்தால் பலமிழந்து அமர்ந்திருந்தார். அவர் உடம்பில் நோய் பற்றிக் கொண்டது என எல்லாரும் நினைத்தனர். யாரும் வெல்ல முடியாத அந்த நோயின் வீரிய சக்தியை அவர் அடக்கி வாழ்ந்தார். இருப்பினும் அவர் தம் உடம்பெல்லாம் மிகுந்த நோவு உருவாகி இரக்கிறது என்று மிகவும் வேதனையுற்றுத் தமது சக்திகளை உள்ளே அடக்கிக் கொண்டு புலம்பினார். . . அகிலம் ======== கருவுற்ற தோசம் கழிந்து சிவஞானத் திருவுள மாகி சிவமய மாய்ப் பெறவே மனதில் மிகவுற்று மாயவரை நெஞ்சில்வைத்துத் தினமும் வருந்தித் தீனமென வேயிருந்தார் அப்படி யோர்வருசம் அங்கமதி லூறலெல்லாம் முப்படி ஞாயமதால் உலகில் கழியவிட்டு எகாபரா தஞ்சமென்று இருக்குமந்த நாளையிலே மகாபர னார்செயலால் மாதாவின் கண்ணதிலே சொற்பனம்போல் சுவாமிவந்து சொன்னாரே வுத்தரவு . விளக்கம் ========= இவ்வாறு தமது முன் பிறவியினால் கருவில் அமைந்த தோசங்கள் எல்லாம் அனுபவித்துக் கழித்துவிட்டு, சிறந்த சிவஞானத்தின் உயர்ந்த நிலையடைந்து, சிவமயமாய் நிலை பெற மனதில் நினைத்து, மாயவரை நெஞ்சில் நிறுத்தி தினமும் வருந்தினார். ஆனால், உலக மக்கள் பார்வைக்கு நோய் பிடிநத்தவராகக் காட்சி அளித்தார். இப்படியாக ஒரு வருடம் தமது முன்பிறவி பாவத்தினால் உடலில் வந்த நீயவினைகள் எல்லாம் உலகில் கழித்துவிட்டு, பரம்பொருளே, தஞ்சம் என்று இருந்தார். அச்சமயம் ஒரு நாள் இரவு இறைவன் அருளால் சுவாமியின் தாய் கனவில் தோன்றிய திருமால் அவளுக்கு ஒரு அன்புக் கட்டளை இட்டுச் சென்றார். . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - 5 5 - ShareChat
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 11.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== ஒருவர்க்கோர் பொல்லாங்கு உலகில்மிகச் செய்யாமல் குருவைக் குருகண்டு கொக்கரித் தேவளர்ந்தார் எதிர்த் தோரையடக்கி எல்லோர்க்கும் நல்லவராய் உருத்துக் கரியவராய் உலகில் மிகவளர்ந்தார் எச்சா தியார்க்கும் இவர்நல்ல வரெனவே அச்சாதி யெல்லாம் அகமகிழத் தான்வளர்ந்தார் முன்னுதித் துடன்பிறந்தோர் ஒருவர்மூப் பாடாமல் . விளக்கம் ========= யாருக்கும் துன்பம் செய்யாமல் குருவுக்கும் குருவாக அறிவு பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்ந்தார். தம்மை எதிர்த்தவரைத் தமது திறமையால் அடக்கி எல்லாருக்கும் நல்லவராய்த் தமது நியாயப் போக்கைத் தடை செய்வதற்குப் பிறரால் முடியாதவராய், எல்லாச் சாதியினருக்கும் நல்லவராகவே அவர் வாழ்ந்ததால் எல்லாச் சாதியினரும் அவரிடம் மகிழ்ச்சியாகவே வாழ்ந்தனர். முன்பு பிறந்த பெரியவர்களின் உயர்வு இவரது உயர்வுக்கு ஒப்பாகாது. . . அகிலம் ======== பின்னுதித்தும் பெரியோராய்ப் பெருமையுட னேவளர்ந்தார் தாய்தகப் பன்மாமன் சந்தமிந்தத் தம்பியென்றும் ஞாயவா னென்றும் நாடி மிகவளர்த்தார் ஊருக்குந் தலைவன் உடையவழிக்குந் தலைவன் ஆருக்குந் தலைவனென்று அன்னை பிதாவளர்த்தார் . விளக்கம் ========= அவர் எல்லாரிலும் இளையவராய்ப் பிறந்தும், புத்தியும் உயர்வும் உள்ளவராய் வளர்ந்து வந்தார். தாய், தகப்பன், மாமன் எல்லாரும் இவன் அமைதியும், உயர்வும் பொருந்தியவன் என்றும், இவன் சிறந்த நியாயவான் என்றும் கூறும்படியும் வளர்ந்து வந்தார். அவர் ஊருக்குத் தலைவனாகவும், தாம் பிறந்த குடும்பத்துக்குத் தலைவனாகவும், எல்லாருக்கும் தலைவனாகவும் உயர்வடைந்த அவரை அவரின் தாயும், தந்தையும் வளர்த்து வந்தனர். . . அகிலம் ======== ஞாய மிருப்பதனால் நாடாள்வா னென்றுசொல்லித் தாய்தமர்க ளெல்லாம் தாங்கி மிகவளர்த்தார் சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன் மல்லுக்கும் வல்லவனாய் உபாயத் திலும்பெரியோன் மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன் எங்கும்பேர் கேட்கவைப்பான் இவன்கீர்த்தி நல்வளமை பல்லார்க்கும் ஏறிடுவான் பார்முழுதும் ஆண்டிடுவான் எல்லார்க்கும் நல்லவனாய் இவன்சமைவா னென்றுசொல்லி எவ்வோருங் கொண்டாட இன்பமுட னேவளர்ந்தார் . விளக்கம் ========= இவனிடம் நீதியும் நியாயமும் இருப்பதால் இவன் நாடாள்வான் என்று கூறி, இவன் தாயும் சுற்றத்தாரும் வளர்த்தனர். பேசும் திறனும், சிறந்த வீரனாகவும், மல்யுத்தத்தில் வல்லவனாகவும், சிறந்த தந்திரம் உ்ளவனாகவும் பெண்டிர்களுக்கு ஏற்றபடி நடப்பவனாகவும், மிகுந்த காம இச்சை உடையவனாகவும் இருந்து எல்லாரும் தமது பெயரைக் கேட்க வைத்திடுவான். இவன் புகழோடும், உயர்ந்த மன நிலையோடும், பல்லக்கு ஏறி இந்த உலகம் முழுவதிலும் ஆட்சி புரிந்திடுவான். எல்லாருக்கும் நல்லவனாக இவன் அமைவான் என்று சொல்லி எல்லாரும் கூடி இன்பத்துடன் வளர்த்து வந்தனர். . . அகிலம் ======== அவ்வோருங் கொண்டாட அவர்வளரும் நாளையிலே பத்து வயது பண்போ டிருபதிலே மற்று நிகரொவ்வா மன்னவர்போ லேவளர்ந்தார் எல்லாத் தொழிலும் இதமிதமாய்க் கற்றுமிகப் பொல்லா தாரோடு பெரும்பகைபோ லெசீறி நல்லாரை யுள்ளில் நாளு மறவாமல் கல்லாரை யெல்லாம் கண்டுகழித் தேயிருந்தார் ஈவதற்குத் தர்மனென எளியோரைக் கண்பார்த்து ஆய்வதற்கு நல்லான் என்றே மிகவளர்ந்தார் . விளக்கம் ========= இவ்வாறு எல்லாரும் மகிழ்வோடு அவரை வளர்த்து வருகின்ற தருணத்தில் பத்து வயதில் இருபது வயது மதிக்கத்தக்க பண்போடு தமக்கு நிகர் தாமே என்று சொல்லும் வகையில் தலைவனைப் போன்று வளர்ந்து வந்தார். எல்லாத் தொழிலையும் எளிதாகக் கற்று முடிநத்தார். கல்வி திமிர் பிடித்த பொல்லாதவரோடு பெரும் பகை கொண்டவரைப் போன்று கோபம் கொள்வார். கல்லாதவர்களையும் தமது மனத்தின்கண் நிறுத்தி அவர்களை என்றும் மறவாவண்ணம் நினைத்து, அவர்களை மகிழ்ச்சி கொண்டு நேசித்தார். செல்வமின்றி வாடும் எளியோரைக் கண்டு தருமம் கொடுப்பதில் தருமர் எனப் பெயர் பெற்றார். தத்துவ ஆராய்ச்சி செய்வதற்கும் சிறந்தவர் என்னும் பெயரோடும் வளர்ந்து வந்தார். . . தொடரும்… அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல் காட்டுவிப்பேன் மகனே கண்ணநீ முன்னடநீ தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம் நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே ! அய்யா  10.04.2021 Mthn .rakash ுருங்கோ ! போல் வீரத்தனமாய் விளக்கின ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 1 நடத்திவைப் பேன்மகனே நல்லமணி மரகதமே அடத்திவிட்ட யாமமது அனுப்போல் பிசகாமல் காட்டுவிப்பேன் மகனே கண்ணநீ முன்னடநீ தாட்டிமையா யுன்வாக்கால் தானுரைத்த யாமமெல்லாம் நடத்திவைக்க வாறேன் நன்மகனே வுன்பிறகே ! அய்யா  10.04.2021 Mthn .rakash ுருங்கோ ! போல் வீரத்தனமாய் விளக்கின ஒளி - ShareChat
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 10.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== குருவான ஈசரொடு கூறுவார் பின்னாலே நம்முடைய ஈசுரரே நாம்வந்த காரியங்கள் எம்முதலே யின்னதென்று இயம்புவீ ரீசுரரே கட்டான ஈசுரரும் காரியத்தைப் பாருமென்று மட்டான வாரிக் கரையிலே வந்திருந்து எல்லோருஞ் செந்தூர் இடமெல்லாங் கண்பார்த்து வல்லோர்க ளெல்லாம் வந்திருந்தார் செந்தூரில் . விளக்கம் ========= பிறகு திருமால் குருவாகிய ஈசரிடம் பதில் கூறலானார். என்னுடைய ஈசரே, என் முதற்பொருளே, நாம் இங்கே வந்த முக்கியமான காரியங்கள் என்ன என்று எடுத்துரைக்க வேண்டும் என்று வினவினார். இதைக் கேட்ட ஈசரும், நாரணனே, உனது கலியழிக்கும் காரியத்தைச் செயல்படுத்து என்று அனுமதி அளித்தார். . உடனே கட்டுக்கடங்கி இருந்த அக்கடற்கரையில் வந்திருந்த எல்லாரும் திருச்செந்தூரின் இடங்களைக் கண்டு மகிழ்ந்தனர். ஆங்காங்கே உள்ள திறமை மிக்கோர் எல்லாரும் அங்கு வந்து குழுமினர். . . அகிலம் ======== சம்பூர்ணத் தேவனுக்கு நற்பேறு அருளல் அங்கு சிலநாள் அமர்ந்திருக்கும் வேளைதனில் சங்குவண்ணர் நேமித்த சடல மதின்பெருமை உரைக்கிறார் அன்பர் உள்ள மகிழ்வதற்கு தரையீரேழு மளந்த சுவாமி யுரைக்கலுற்றார் . விளக்கம் ========= இவ்வாறாக அங்கே சிலகாலம் அமர்ந்து இருக்கின்ற சமயத்தில், திருமால் தமக்கு மகனாக நியமிக்கப்பட்ட பொன்கூட்டுச் சடலத்தின் பெருமையைப் பற்றி அன்பர்களாகிய நீங்கள் மகிழ்வுறும்படி இனிக் கூறப் போகின்றோம் கேட்பீர்களாக. . . அகிலம் ======== சீரான நல்ல தெட்சணா புமியிலே பாரான நல்ல பதிதா மரையூரில் தவசிக் குகந்த தாமரையூர் நற்பதியில் சிவசிவா வளரும் தெட்சணா புரிநாடு பாண்டவரில் விசையன் பாசுபதம் வேண்டுதற்கு ஆண்டபர மேசுரரை அகம்வைத்துப் போர்விசையன் நின்று தவமுடித்து நெடியரனை மாதுவையும் கண்டு பதம்வாங்கிக் கைகண்ட திவ்வூரு அதியரசன் முன்னாள் அதிகத் தவமிருந்து பதியரசி யானப் பார்வதியை ஈன்றதுதான் இவ்வூரு தெச்சணந்தான் ஏற்றதா மரையூரு செவ்வூரு நல்ல சிறந்தமண வைப்பதிதான் வானலோ கம்வாழும் வாய்த்ததெய் வேந்திரனும் தானவரைக் காணத் தவசிருந்த திவ்வூரு . விளக்கம் ========= அழகு பொருநத்திய நல்ல தெச்சணாபூமியில் உயர்வு பொருந்திய நன்மையான தாமரை ஊர் என்னுமிடம் உள்ளது. அப்பூமி தவசு புரிய ஏற்ற இடமாகும். இங்குச் சிவசிவா என்னும் மந்திரச்சொல் எப்பொழுதும் ஒலித்துக் கொண்டிருக்கும். ஐவர் பஞ்சபாண்டவரில் வில்வீரத்தில் சிறந்தவனான அருச்சுனன், சிவனிடம் சிறந்த பாசுபத ஆயுதம் பெறுவதற்குச் சிவனை மனதில் நினைத்துத் தவம் புரிந்து, தவத்தில் வெற்றி கண்டு சிவனையும் சத்தியையும் கண்டு, அவர்களிடமிருந்து பாசுபதத்தைப் பெற்றுக் கொண்டது பெருமை வாய்ந்த இவ்வூரில் தான். இவ்வூரில் தான் முன்பு அதியரசன் கடடினமான தவம் புரிந்து ஈசனுடைய மனைவியான பார்வதியை மகளாகப் பெற்றெடுத்தான். அந்தத் தெச்சணாபூமிதான் தாமரையூர் என்றும், செவ்வூர் என்றும் மணவைப்பதி என்றும் கூறப்படுகிறது. வானலோகத்தில் வாழுகின்ற சிறந்த தெய்வேந்திரனும் சிவனைக் கண்டு தன் துன்பம் தீரத் தவம் இருந்ததும் இப்பூமிதான். . . அகிலம் ======== பஞ்சவர்க்கு முன்னம் பசுவா னுதவிசெய்ய அஞ்சல்செய்து நாதன் அமர்ந்திருந்த திவ்வூரு சாம்பு சிவசான்றோர் தழைத்திருந்த திவ்வூரு தாம்பிரவர்ணி யாவி தழைத்திருந்த திவ்வூரு பரராச முனிவன் பாரத் தவசுபண்ணி விரமான வியாகரரை மிகஈன்ற திவ்வூரு தவம்புரிய வென்று தானினைத்த பேர்களெல்லாம் பவமற்ற தாமரையூர் பதியாகு மென்றுரைப்பார் தவசுக் குகந்த சந்தமுற்ற பேரூரு பவிசுக் குகந்த பாலதியத் தாமரையூர் அவ்வூரு தன்னில் ஆதி யருளாலே செவ்வுமகா விஷ்ணுவும் செய்தசட மேபிறந்து . விளக்கம் ========= முன்னர்ப் பஞ்சபாண்டவர்களுக்குக் கண்ணன் உதவி செய்வதற்குச் செய்தியனுப்பி விட்டு அமர்ந்திருந்ததும் இந்தப் பூமியே. சாம்பசிவனை வழிபடும் சான்றோர் குலம் தழைத்து வளர்ச்சியுற்றதும் இப்பூமியிலே ஆகும். தாம்பிரபரணி கிளை ஆறுகள் அதிகமாகத் தழைத்து இருந்தது இப்பூமியில்தான். பராசர முனி மிகப்பெரிய தவம் செய்து சக்தி பொருந்திய வியாகரரைப் பெற்றெடுத்ததும் இப்பூமியில்தான். தவம் புரிய வேண்டுமென்று நினைத்தவர்கள் தாமரை ஊருக்கு வந்து பாவம் நீங்கப் பெற்று வாழ்வதாக உயர்ந்தோர் உரைப்பர். இவ்வாறு தவசு புரிவதற்குச் சிறப்பான அழகு வாய்ங்நத ஊர் இதுவாகும். சகலவிதச் செழிப்புகள் உள்ளதும், ஞானப்பால் அருந்திய மக்கள் வாழுகின்றதும் இவ்வூராகும். இத்தகைய சிறப்பான இந்த ஊரில் ஆதி சிவனின் அருளால் செம்மை பொருந்திய மகாவிஷ்ணு அவதாரம் எடுக்க உருவாக்கிய பொன் கூட்டுச் சடலம் பிறந்தது. . . அகிலம் ======== பிறந்து வளர்ந்து பெருமைப் புகழ்காட்டி மறந்திடா முன்னமைந்த மாதை யுறவாடிப் பூலோக மனுக்கள் பிள்ளைபோ லேவளர்ந்து மாலேற்கப் பூசை மனையில் மறவாமல் விட்டிணுவைப் போற்றி விளங்கவொரு பீடமிட்டுக் கட்டுத்தீர்க் காகக் கண்வளர்ந் தார்கலியில் . விளக்கம் ========= அச்சடலம் வளர்ந்து பெருமைக்குரிய புகழுடன் வாழ்ந்து வந்தது. அப்பிள்ளை தமக்காக முன் அமைந்த பெண்ணை மறந்திடாதவாறு ஏற்று, அவளோடு உறவாடி பூலோகத்தில் வாழும் ஏனைய மக்களைப் போல் வளர்ந்தார். திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்க வகையில் அவரது இல்லத்தில் திருமாலை மறவா வண்ணம் பூஜை செய்து, துதித்துத் தமது ஆத்மா விளங்கும்படியாக ஒரு பீடமிட்டு மிகவும் கட்டுப்பாடாக ஒரே மனதுடன் கலியன் தேசத்தில் வளர்ந்து வந்தார். . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா [ தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும் பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும் உகவன் வருவன் ஒருவ னறிவான்காண் சுழற்றும் பாருலக மும்பழுக்கும் பகவான் அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும் மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும் பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே அய்யா 10.042026 0Muthu Plh வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா [ தண்ணீர் மண்ணீந்து தானிருபோ என்மகனே கண்ணி லுருக்காணும் கைக்குளொரு கிள்ளைவரும் பகைவன் மடிவன் பைங்கிள்ளை யங்காகும் உகவன் வருவன் ஒருவ னறிவான்காண் சுழற்றும் பாருலக மும்பழுக்கும் பகவான் அகங்காணும் பாந்தள் அஞ்சாட்சரங் காணும் மூசிர சீர்சிரசு முகாசிரசு முன்காணும் பார்சிரசு கண்டு வாறேனென் பாலகனே அய்யா 10.042026 0Muthu Plh வீரத்தனமாய் இருங்கோ ! விளக்கின் போல் ஒளி - ShareChat
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 09.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விருத்தம் ========== கடற்கரை தனிலே வந்து கரியமா லீச ரோடும் மடக்கொடி உமையா ளோடும் மறைமுனி தேவ ரோடும் குடக்கலை பொருந்தும் வேதக் கூர்முனி ரிஷிக ளோடும் கடற்கரை தனிலே வந்து கண்டனர் கடலைத் தானே . விளக்கம் ========= திருமால் ஈசரோடும் மடக்கொடி உமையாளோடும், வேதம் ஓதும் முனிவர்களோடும், தேவர்களோடும், மாயோனின் ஆடல் கலையைச் செய்து வேதங்களைத் தெளிவாக அறிந்த முனிவர்களோடும், இன்னும் பல ரிஷிகளோடும் திருச்செந்தூர்க் கடற்கரையை வந்தடையவும் எல்லாரும் அக்கடலைக் கண்டு மகிழ்ச்சி எய்தினர். . . அகிலம் ======== விருத்தம் ========= வந்தவ ரெல்லாப் பேரும் வட்டமிட் டதிலே நிற்கச் சந்தன வாரி யோரம் தன்னிலே நின்று ரண்டு சுந்தர முனிவர் வந்து சுவாமிதன் பதமே பூண்டு எந்தனின் பிரானே யென்று இருவரும் வணங்கிச் சொல்வார் . விளக்கம் ========= கடலோரம் வந்த எல்லாரும் அங்கே கூடி ஒன்றாக நின்றனர். அப்போது, சந்தன மணத்தையுடைய திருச்செந்தூக் கடலின் கரையில் நின்று கொண்டிருந்த இரண்டு அழகான முனிவர்கள் திருமாலின் முன்னால் வந்தனர். அவர்கள் திருமாலின் பாதங்களைக் கட்டிப் பிடித்து வணங்கி, எங்களுடைய இறைவனே, அருள் புரிவீராக என்று கூறித் துதித்துச் சொல்லலானார்கள். . . அகிலம் ======== கலைமுனி ஞானமுனி வரவு ஆதியே யெங்கள் அய்யாநா ராயணரே சோதியே யெங்கள்தவம் சுறுக்கிட் டுருவளர்ந்து கண்டுகொண் டோமையா கமலப் பொருளேநீர் பண்டு மொழிந்தபடிப் பார்த்துவரந் தாருமையா என்று முனியிருபேர் இறைஞ்சித் தொழுதிடவே மன்று தனையளந்தோர் மறுத்துரைப்பா ரன்போரே . விளக்கம் ========= ஆதியே, எங்கள் அய்யா நாராயணரே, சோதியே எங்களுடைய தவமானது சீக்கிரமாக உயர்வு அடைந்து உம் அருளைக் கண்டு கொண்டோம். இதயத் தாமரையில் அமர்ந்திருக்கும் மூலப்பொருளே, நீர் ஏற்கெனவே கூறியபடி எங்களைக் கருணையுடன் பார்த்து வரம் தர வேண்டும் அய்யா, எனக் கூறி இரு முனிவர்களும் தொழுது நின்றனர். அப்பொழுது இவ்வுலகை அளந்த திருமால் பதிலுரைப்பதை அன்பர்களே, நீங்கள் கேட்பீராக. . . அகிலம் ======== ஏதுகாண் மாமுனியே இங்குநின்ற வாறேது தாது கரமணிந்த சன்னாசி சொல்லுமென்றார் அப்போது மாமுனிவர் அவரேது சொல்லலுற்றார் முப்போது நாங்கள் மும்முதற்சொல் மாறாமல் மேலோகம் விட்டு மேகவண்ணா வுன்செயலால் பூலோக மீதிறங்கிப் பொங்குகடல் கண்டணுகிச் சோதி யுரைத்த சொல்லுரைத்து வாரியிடம் நீதியாய் நில்லுமென்று நினைவாகச் சட்டமிட்டுக் கயிலை யதேக கண்ணோக்கும் வேளையிலே அகில மதிற்கலியன் அனைமிகக் கண்டேதான் மேலோக மேற மேல்வழிகள் காணாமல் பூலோக மானதிலே போயிருந்தோங் கண்கவிழ்ந்து அப்போது ஆயனேநீர் அங்குவந்து எங்களிடம் இப்போது போய்நீங்கள் என்னுடைய செந்தூரில் வாரிக் கரையதிலே வாய்த்ததவ மாயிருந்து சூரியப் பிரகாச சுத்தவை குண்டராசர் இக்கட லில்பிறந்து எங்கள் தமைக்கூட்டிப் பக்கமதில் வைத்துப் பதவிதர வேணுமென்று நில்லுங்கோ தவசு நினைவாக வென்றுசொல்லி பல்லுயி ரும்வளர்த்த பாக்கியவா னேநீரும் உரைத்தமொழி அய்யாவுன் உள்ள மறியாதோ கறைக்கண்டர் மைத்துனரே கண்ணா எனத்தொழுதார் . விளக்கம் ========= மாமுனிவர்களே, நீங்கள் இங்கு நின்று தவம் செய்கின்ற காரணங்கள் என்ன? சொல்லுவீர்களாக என்று தேன் சிந்தும் பூவைக் கையில் வைத்திருக்கும் சந்நியாசி ஆகிய திருமால் கூறினார். . அப்பொழுது மாமுனிவர்கள், திருமாலை நோக்கி, சுவாமி முன்பு ஒரு சமயம் நாங்கள் மும்மூர்த்திக்கும் முதல் மூர்த்தியாகிய ஈசரின் சொல் மாறாவண்ணம் மேலோகத்தை விட்டு உமது கருணைச் செயலால் இப்பூவுலகில் இறங்கி பொங்கும் துவாரகாபதி கடற்கரையை அணுகி, ஈசர் சொன்ன கட்டளையைக் கடலிடம் கூறி நீதி நெறியாய் நிற்க வேண்டும் என்று அதற்குச் சட்ட விதிகளை இட்டுக் கொடுத்தோம். . ஈசர் கட்டளையை நிறைவேற்றி விட்டு, மீண்டும் கயிலையை நோக்கி நாங்கள் திரும்புவதற்குப் பார்க்கின்ற சமயத்தில் வைகுண்ட லோகத்திலிருந்து வந்து கொண்டிருந்த கலியனைக் கண்டு பயமுற்று, கயிலை உலகம் செல்லுவதற்கு எந்த வழியும் தெரியாமல் பூலோகத்திற்கே சென்று கண் கவிழ்ந்தவண்ணம் தவம் இருந்தோம். . அப்பொழுது, திருமாலே நீர் அங்கு வந்து எங்களை நோக்கி, நீங்கள் போய் எனது திருச்செந்தூர்க் கடற்கரையில் சென்று, சூரியனைப் போன்ற பிரகாசமுள்ள பரிசுத்தமான வைகுண்டராசர் இக்கடலில் பிறப்பெடுத்து எங்களை அழைத்து அவரது பக்கத்தில் வைத்து, உயர்ந்த வைகுண்டபதவி தர வேண்டுமென்று ஒரு நினைவாகக் கடுந்தவம் செய்யுங்கள் என்று சொன்னீர். . எல்லா உயிரினங்களையும் வளர்க்கும் சக்தி படைத்தவரே, அய்யாவே, ஈசரின் மைத்துனரே, கண்ணரே, நீர் ஏற்கெனவே உரைத்த மொழிகளைப் பற்றி உமது உள்ளம் அறியாதோ? என்று கூறித் தொழுதனர். . . அகிலம் ======== அப்போது அய்யா நாரா யணர்மகிழ்ந்து செப்போடு வொத்தாற்போல் சிரித்து மனமகிழ்ந்து நல்லதுகாண் பிள்ளாய் நாடுந் தவம்புரிந்தீர் வல்லவர்தாம் நீங்கள் வாருங்கோ வென்றழைத்து அருகிலே நில்லுமென்று அகமழிந் தாரன்போரே . விளக்கம் ========= அப்பொழுது திருமால் மனம் மகிழ்ந்து, செப்புச் சிலையைப் போன்று அழகு பொருந்த சிரித்து, அவர்களிடம் பிள்ளைகளே, மிகவும் நல்லது.. நான் விரும்பிய தவத்தினைச் சிறப்பாகச் செய்தீர்கள். நீங்கள் வல்லமை உள்ளவர்களே. நீங்கள் எமது அருகில் வந்து நில்லுங்கள் என்று கூறி மகிழ்ந்தார். . . தொடரும்… அய்யா உண்டு.
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே மகனே நீவாற வழியின் பவிசுகண்டு தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே ಖtiuತ. 09.04.2026 Mutw Prakash வீரத்தனமாய் ருங்கோ விளக்கின் ஓளி போல் அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா பகையாதே என்மகனே பஞ்சவரைக் காத்துக்கொள்ளு அஞ்சுபூக் கொண்டு ஆசாரஞ் செய்தோர்க்கு வஞ்சக மில்லாத வாழ்வுகொடு என்மகனே மகனே நீவாற வழியின் பவிசுகண்டு தவமுடித்து நீயும் தாண்டியிரு என்மகனே ಖtiuತ. 09.04.2026 Mutw Prakash வீரத்தனமாய் ருங்கோ விளக்கின் ஓளி போல் - ShareChat
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 08.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடிச் சீரான தேவரையும் சிறப்பித்துக் கொண்டாடி வாருங்கோ அய்யாஎன் மண்டபச்சிங் காசனத்தில் பாருங்கோ அய்யாஎன் பதியி னலங்காரம் நீங்க ளிருக்க நிறைந்ததங்க மேடையுண்டு தாங்கள் கிரிபோலே தங்கமலை யிங்குமுண்டு . விளக்கம் ========= கந்தன், ஒழுங்கு ஒழுங்காக வந்து கொண்டிருந்த தேவர்களையும் சிறப்பித்து வரவேற்று, அய்யா, பெரியோர்களே, வாருங்கள். என் மண்டபத்தில் உள்ள சிங்காசனங்களில் அமருங்கள். எனது கோவிலின் அலங்காரங்களை நீங்கள் பாருங்கள். நீங்கள் எல்லாரும் அமர்ந்து இளைப்பாற நிறைய தங்க மேடைகள் இங்கு உள்ளன. தங்களுடைய தங்கமலை போன்ற மலைகளும் இங்கு உள்ளன. . . அகிலம் ======== பாடப் படிக்கப் பாவாண ரிங்குமுண்டு ஆடக் கைகாட்ட அரம்பையர்க் ளிங்குமுண்டு பாலேக்க நல்ல பாலு பழங்களுண்டு மாலேக்க நல்ல மாதுகன்னி மார்களுண்டு கண்டு களித்திருக்கக் கனக நிதிகளுண்டு . விளக்கம் ========= பாட்டினைப் பாடுவதற்கும் படிப்பதற்கும் சிறந்த பாவாணர்களும், நன்றாக ஆடிடவும் சிறந்த முத்திரைகளைக் கை மூலம் காட்டிடவும், நல்ல பெண்டிர்கள் இங்கு உள்ளனர். நீங்கள் அருந்துவதற்கு ஏற்றவகைப் பாலும் பழங்களும் உள்ளன. திருமால் ஏற்றுக் கொள்ளத் தக்கதும் கண்டு களிக்கத் தக்கதுமாகிய நல்ல கன்னிப் பெண்டிர்களும் இங்கு உள்ளனர். தேவைக்குத் தகுந்த செலவு செய்ய நிறைந்த பொருள்களும் உள்ளன. . . அகிலம் ======== உண்டு சுகித்திருக்க உற்றவகை தானுமுண்டு பல்லாக்கு முண்டு பதிபோகி மாருமுண்டு குல்லாக்க ளுண்டு குளிக்கத்தாம்பி ராழியுண்டு சதுரங்க மேடையுண்டு சண்முக விலாசமுண்டு பதிரங்க மானப் பாலாழி யுண்டுமையா மாதமொன்று தன்னில் வருங்கோடி பொன்னதிகம் போத வருங்காண் பொற்சவடி யாபரணம் வருசமொன் றானதிலே மாலைவட மாயிரந்தான் கருவலங்க ளின்னதென்று காணாத் தொகையதுதான் காவடி கோடி காணிக்கை முக்கோடி பார்க்கோடி கூடி பலசாதி யெண்கோடி இப்படியே யென்றனக்கு இருக்குதுகாண் பாக்கியங்கள் எப்படியும் நீங்கள் இங்கிருக்க வேணுமென்றான் . விளக்கம் ========= சுவைக்கத் தக்க நல்ல உணவு வகைகளும் இங்கு உள்ளன. இங்குப் பல்லாக்குகளும், கோவிலில் போகிமாரும் உள்ளனர். . குல்லாக்களும் உள்ளன. குளிப்பதற்குத் தாம்பிரபரணி ஆறும் உண்டு. சதுரங்கம் விளையாட மேடைகளும் சண்முக விலாசமும் உள்ளன. திருமால் பள்ளி கொள்ள பால்கடலும், ஒரு மாதத்திற்கு ஒரு கோடி எடைக்கும் அதிகமாக வருவாயும் இங்கு உண்டு. அதிகமாகப் புடவைகளும், பொன்சவடி ஆபரணங்களும் இங்கே வரும். ஒவ்வொரு வருடமும் வடம் போன்ற மாலைகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டதாக வரும். இங்கே அமைக்கப்பட்டுள்ள கருவூலங்கள் எவ்வளவு என்று கணக்கிட்டுப் பார்ப்போமானால், காவடி ஒரு கோடியும், வாங்கப்படுகின்ற காணிக்கை மூன்று கோடியுமாக, இவ்வுலக மக்கள் பல சாதியினரும் கோடிகோடியாகக் கூடி இங்கே கொண்டு குவிக்கின்றனர். . இப்படியாக எனக்குப் பலவகைப் பாக்கியங்கள் அமைந்து இருக்கின்றன. எந்த வகையில் ஆயினும் சரி, நீங்கள் எல்லாரும் இங்கே தங்கி இருக்க வேண்டும் என்று முருகன் அழைத்தான். . . அகிலம் ======== கந்தன் அழைப்பை மறுத்துத் திருமால் திருச்செதூர் கடற்கரை ஏகல் ====================================================================== கேட்டுநா ராயணரும் கீழ்ச்சுண் டசையாமல் நாட்டமுட னுள்ளத்(து) அடக்கிமறுத் தேதுரைப்பார் நல்லதுவே மருகன் நலமா யிருப்பதுதான் பொல்லாது செய்யாமல் புரிந்தாள் வதேபோதும் . விளக்கம் ========= திருமால் தமது கீழ் உதடு சிறிதுகூட அசையாமல் சிரிப்பினை மிகவும் கடினத்துடன் உள்ளடக்கி, முருகனை நோக்கி மறுத்து உரைக்கலானார். முருகா, மருமகனே, நீ நலமாய் இருப்பது மிகவும் நன்று. பொல்லாத செயல்கள் செய்யாமல் நீ இங்கு ஆட்சி புரிவதே போதுமானது ஆகும் என்று அய்யா திருமால் கூறினார். . . அகிலம் ======== என்றுரைத்து அய்யா ஈசரோ டேதுரைப்பார் பண்டுவிட்ட வாசகச்சொல் பற்றிச்சோ பூமியிலே வல்லாண்மைக் காரருக்கு மதமிப்ப டியிருக்கும் இல்லாதெளி மைகட்கு இருக்குமது மேல்தயவு என்று இருபேரும் இயம்பி மனதடக்கி நன்றெனவே கந்தனொடு நல்வார்த்தை யும்பேசி அந்த முடனே எல்லோருந் தானடந்து செந்தூ ரலைக்கரையில் சேர்ந்தனர்கா ணம்மானை . விளக்கம் ========= பிறகு ஈசரை நோக்கி, ஈசரே, முன்னர் நாம் அனுப்பி திருவாசகச் சொல் பூமிக்கு முழுமையாக வந்தடைந்துவிட்டதா? மிகுந்த ஆணவம் உள்ளவர்களுக்குச் செல்வச் செழிப்பினால் உண்டாகும் மதமும் இப்படித்தான் இருக்கும். ஆனால், பொருளில்லா ஏழைகளுக்கு ஆறுமுகன் சொல்லும் ஆணவச் சொல்லின் மேல் பற்று இருக்கும் என்று கூறி இருவரும் தமக்குள் உரையாடிக் கொண்டனர். பிறகு, கந்தனை நோக்கி அவனுக்கு உகந்த வார்த்தைகளை எடுத்துக் கூறிவிட்டு எல்லாரும் நடந்து திருச்செந்தூர்க் கடற்கரைக்கு வந்தடைந்தனர். . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - D Muthu Prakash 7April 2024 6.52 pm D Muthu Prakash 7April 2024 6.52 pm - ShareChat
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 07.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== கடந்து திருச்செந்தூர் கடல்காண வேணுமென்று நடந்தாதி நாதன் நல்லீசர் சத்தியோடு கூடிக் குணமாய்க் கொலுவார பாரமுடன் தேடித் திருவைச் சிணமாய் வழிநடந்தார் நடக்க மறையோர் நாற்றிசையும் போற்றிநிற்க கடற்கரையை நோக்கிக் கண்ணோன் வழிநடந்தார் . விளக்கம் ========= திருமால் கயிலை மலையைக் கடந்து, திருச்செந்தூர்க் கடலில் இலட்சுமிதேவியைத் தேடிக் காண வேண்டி, நல்ல ஈசர், சக்திதேவி ஆகியவர்களோடு கூடி, அமைதியாகக் கொலு ஆரவாரத்தோடு விரைவாக நடந்தார். . இப்படித் திருமால் நடந்து வருகின்றபோது அந்தணர்கள் எல்லாரும் நான்கு திசைகளிலிருந்தும் அவரை வாழ்த்திப் போற்றி நின்றனர். திருமால் திருச்செந்தூர்க் கடற்கரை நோக்கி வேகமாக நடந்து வந்து கொண்டிருந்தார். . . அகிலம் ======== கந்தன் எதிர் கொண்டு அழைத்தல். =================================== வழிநடந்து மாயவரும் வல்லபர மேசுரரும் களிகூர்ந்து மாதுமையும் கந்தன்செந் தூர்கடலின் அருகேயொரு காதம் அவர்வரக்கண் டாறுமுகன் கருவி குழறி கடற்கரையோன் தான்கலங்கி . விளக்கம் ========= இவ்வாறு திருச்செந்தூர் நோக்கி வழி நடந்து வந்த மாயவரையும், ஈசுரரையும், மகிழ்வோடு வரும் சக்திதேவியையும், திருச்செந்தூர்க் கடல் ஓரத்திலிருந்து ஒரு காதம் வழிக்கு முன்னால் அவர்கள் வரும்போதே கந்தன் கண்டு கொண்டான். தன்னுடைய அங்கங்கள் பதறக் கலங்கினான். . . அகிலம் ======== ஆறு முகனும் அங்குள்ள தேவர்களும் வீறுமயில் வாகனனும் வெற்றிரத மேறாமல் என்னவித மாமோ என்று மனம்பதறி மன்ன னறுமுகனும் மனமயங்கித் தான்பதறி வந்துமா மன்தனையும் மாதா பிதாவையும் சந்துஷ்டி யாகித் தாழ்ந்துநமஸ் காரமிட்டு . விளக்கம் ========= ஆறுமுகன் தனது விரைவான மயில் வாகனத்தில் ஏறாமலும், தேவர்கள் தமது வெற்றியையுடைய இரதத்தில் ஏறாமலும் மனம் கலங்கினர். இவர்களைக் கண்ட செந்தூர் இறைவன் ஆறுமுகன் பதறி என்ன நடக்கப்போகிறேதோ என மனம் குலைந்து மயக்கமுற்று அவர்களை நோக்கி வந்தான். . தன் மாமனாகிய திருமாலையும், தனது மாதா பிதாவையும், எல்லாரும் மகிழும்படியாகத் தாழ்மையுடன் வணங்கினான். . . அகிலம் ======== இம்மூ வரையும் யானெப்போ காண்பேனென்று எம்முதலே நாயடியேன் எத்தனைநாள் காத்திருந்தேன் காத்திருந்த நாளும் கரையெண்ணக் கூடாது பார்த்திருந்த கண்ணின் பாவந் தொலைந்ததின்று என்று வேல்முருகன் ஈசுரரை யுந்தழுவி கன்றுதிரை மேய்த்த கண்ணரை யுந்தழுவி மாதாவை யுந்தழுவி மனமகிழ்ந்து கொண்டாடிச் . விளக்கம் ========= இங்கே காணுகின்ற மும்மூர்த்திகளையும் யான் எப்பொழுது காண்பேன் என்று எத்தனை காலம் அடியேனாகிய நான் காத்திருந்தேன். அவ்வாறு நான் காத்திருந்த நாள்களை எண்ணி முடிக்க முடியாது. உங்கள் வருகையைப் பார்த்திருந்த கண்களின் பாவம் இன்று தொலைந்தது என்று பலவாறாகக் கூறிக் கொண்டு முருகன் தமது பக்கத்தில் வந்தடைந்த ஈசரையும், கன்று கூட்டங்களை மேய்த்த திருமாலையும், தாய் சக்திதேவியையும் கட்டித் தழுவி மனம் மகிழ்ந்தான். . . தொடரும்… அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க் குறோணிதனை வதைத்தாய்வலு குணடோமசா லியைக்கொன்றாயம் கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய் ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய் இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய் ன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய் ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய் எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும் quwn _C37' 07.04.2026 Mth Prukush ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கோசலாபுவி யாண்டாய்வலுக் குகனை மிகக்கண்டாய்க் குறோணிதனை வதைத்தாய்வலு குணடோமசா லியைக்கொன்றாயம் கொல்லதில்லை மல்லன்கொடுஞ் சூரன் தனைவதைத்தாய் ஈடாய்வலு இரணியன்குடல் ஆறாயோடக் கொன்றாய் இரக்கமற்ற துரியோதனன் அரக்கர் குலமறுத்தாய் ன்னங்கலி நீசக்குலம் கொல்ல வரம்பெற்றாய் ஏழைக்குடி சாதிகட்கு மீள விடைகொடுத்தாய் எழுந்துதெட்ச ணாபுவியில் இரங்கி வரவேணும் quwn _C37' 07.04.2026 Mth Prukush ருங்கோ ! வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat