D Muthu Prakash, Kanchipuram 💐
ShareChat
click to see wallet page
@d_muthuprakash
d_muthuprakash
D Muthu Prakash, Kanchipuram 💐
@d_muthuprakash
httpsm.facebook.comd.muthuprakashref=bookmark
#🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 06.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== இன்னமொரு விஞ்சை இயம்புவேன் கேள்மகனே முன்னம்வகைக் காரனொடு மோதிப் பகையாதே பகைத்தா லிருக்க வொட்டான்கா ணவ்விடத்தில் உகத்தடக்கு முன்னே ஒருவரையுஞ் சீறரிது . விளக்கம் ========== என் மகனே, இன்னும் ஓர் உபதேசம் கூறுகின்றேன். கேட்பாயாக. ஏற்கெனவே, உரிமையுள்ள ஒருவனிடம் அவன் உரிமையைப் பறிக்க அவனோடு மோதிப் பகைத்துக் கொள்ளாதே. அப்படி நீ பகைத்துக் கொண்டால் உன்னை அந்த இடத்தில்கூட இருக்கவிட மாட்டான். கலியுகத்தை அடக்கும் முன்னர் யாரிடமும் கோபப்படாமல் இரு. . . அகிலம் ======== தாழ்ந்திருக்க வென்றால் சர்வதுக்குந் தாழணுமே ஓர்ந்திருக்க வென்றால் ஒருவர்பகை யாகாதே ஆனதால் நீயும் அவனைப் பகையாதே நானவனைக் கேட்பேன் ஞாயக்கே டாகிடினும் . விளக்கம் ========== கீழ்படிந்து நடக்க வேண்டும் என்பது எல்லாருக்கும் கீழ்படிந்து நடப்பதே ஆகும். எல்லாருடனும் சேர்ந்து வாழ வேண்டும் என்றால் ஒருவரின் பகையும் ஆகாதே. எனவே, நீயும் யாரையும் பகைக்காதே. அவர்கள் நியாயக் கேடு செய்தால் நான் நியாயம் கேட்பேன். . . அகிலம் ======== வலியோர்க் கொருவழக்கு வைத்துநீ பேசாதே மெலியோர்க் கொருவழக்கு வீணாய்ப் பறையாதே சொத்தாஸ்தி வஸ்து சுகமென்று எண்ணாதே வத்தாஸ்தி பெண்ணு வகையென்று எண்ணாதே . விளக்கம் ========== வலியோருக்காக ஒருவகை நீதி செய்தும் வலியற்றோர்க்காக இன்னும் ஒரு வகை நீதி செய்தும் பேசாதே. சொத்து சுகம் பெண் சுகம் போன்ற சுகங்களைச் சுகம் என்று எண்ணாதே. . . அகிலம் ======== நீயெண்ணா தேயிருந்தால் நீணிலங்க ளுமயங்கும் தானிதின்மே லெண்ணம் தங்குதங் காதேயிரு சத்துரு வோடும் சாந்தமுட னேயிருநீ புத்திர ரோடும் பேசியிரு என்மகனே . விளக்கம் ========== இவ்வாறு நீ எண்ணாது இருந்தால் உனக்கு இந்த உலகமே பணிந்து நிற்கும். எனவே, இப்படிப்பட்ட எண்ணத்தையுடைய இவ்வுலகத்தில் வாழ்ந்து வந்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போல் ஒட்டியும் ஒட்டாமலும் வாழ்வாயாக. உன் சத்துருவோடும் சாந்தமாகப் பழகு. உன் புத்திரருக்கும் நல்லவற்றை உபதேசித்துக் கொண்டிரு. . . அகிலம் ======== அன்போர்க்கு மீந்திருநீ ஆகாப்பேர்க்கு மீந்திருநீ வன்போர்க்கு மீந்திருநீ வழிபோவார்க்கு மீந்திருநீ சகலோர்க்கு மீந்து தானிருநீ யென்மகனே வலியோர்க்கு மீயு வழிபோவார்க்கு மீயு மெலியோர்க்கு மீயு மேன்மையா யென்மகனே . விளக்கம் ========== உன்னிடம் அன்புள்ளோருக்கும் உனக்கு ஆகாத பேர்களுக்கும், வன்மைக்குணம் உள்ளோர்க்கும், வழிப்போக்கர்களுக்கும், வலிமை இல்லாதவருக்கும் இப்படியாகச் சகல மக்களுக்கும் உன்னால் கொடுக்க முடிந்ததைக் கொடுத்து உதவு. . . தொடரும்... அய்யா உண்டு.
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர் ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான் மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான் அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான் குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன் ! அய்யா ! 06.05.2026 DMuthu Prakash ருங்கோ விளக்கின் ஒளி போல்  வீரத்தனமாய்  அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா நீபெரிது நான்பெரிது நிச்சயங்கள் பார்ப்போமென்று வான்பெரி தறியாமல் மாள்வார்வீண் வேதமுள்ளோர் ஒருவேதந் தொப்பி உலகமெல்லாம் போடுஎன்பான் மறுத்தொருவே தஞ்சிலுவை வையமெல்லாம் போடுஎன்பான் அத்தறுதி வேதம் அவன்சவுக்கம் போடுஎன்பான் குற்ற முரைப்பான் கொடுவேதக் காரனவன் ! அய்யா ! 06.05.2026 DMuthu Prakash ருங்கோ விளக்கின் ஒளி போல்  வீரத்தனமாய் - ShareChat
#அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 05.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== என்மகனே நானுனக்கு இன்னமொரு விஞ்சைசொல்வேன் பொன்மகனே யுன்னுடைய புத்தியிலே வைத்திருநீ இச்சட்டந் தன்னில் எள்ளளவு தப்பினதால் தீச்சட்டம் காய்க்கத் தேதிவரு மென்மகனே . விளக்கம் ========== பொன்மகனே, உனக்கு இன்னும் ஓர் உபதேசம் சொல்லுகிறேன். உன்னுடைய புத்தியில் இதை எப்பொழுதும் நினைவோடு பாதுகாத்து வைத்துக் கொள். நான் சொல்லிய இந்தச் சட்டங்களில் சிறிதளவு நீ தப்பினாலும் உனக்கு தண்டனை தரத் தீச்சட்டம் காய்த்து அதில் உன்னை இட்டுத் தண்டிக்கும் நாள் வரும் என்மகனே. . . அகிலம் ======== அனுப்போல் மறவாதே யான்வைத்த சட்டமதில் மனுப்போ லென்றிராதே மனதெண்ண மாயிருநீ பஞ்சமிர்தே யென்னுடைய பாதைதப்பி நீநடந்தால் கொஞ்சுங் கிளியே கொன்னெழுப்பு வேனுனையும் . விளக்கம் ========== ஒரு அணு அளவு கூட மறந்துவிடாதே. மனு சாத்திரம் போன்று இதை எண்ணி இருந்துவிடாது எப்பொழுதும் இந்த உபதேசங்களை எண்ணியவாறு இரு. பஞ்சாமிர்தம் போன்றவனே, என் இனிய பாதை தப்பி நீ செயல்பட்டால் உன்னையும் பிறரைப் போன்று கொன்று எழுப்பிடுவேன். . . அகிலம் ======== பதறியிரு என்மகனே பம்மியிரு கண்மணியே பொறுதி மகனே பெரியோரா யாகுவது உறுதி மகனே உலகமதை யாளுவது மகனேநா னெத்தனையோ மகாபெலங்கள் கற்றவன்காண் உகமீதே சொல்லித் தொலையுமோ வுத்தமனே . விளக்கம் ========== எனவே. தவறு நேராவண்ணம் பதறியிரு. அதே சமயம், அடக்கம் உடையவனாக வாழ்ந்து வா. பொறுமையாய் இரு. அந்த பொறுமை உன்னைப் பெரியோனாக்கி விடும் மகனே. நீ உலகத்தை ஆளுவது மிகவும் உறுதி ஆகும். மகனே, நான் எத்தனையோ பெரிய பலங்கள் எல்லாம் கற்றுள்ளேன். அதை யுகம் யுகமாகச் சொன்னால்கூட அது சொல்லித் தீருமா? உத்தம மகனே, . . அகிலம் ======== எவ்வுகங் களுக்கும் இப்படியே தர்மமில்லை செவ்வுமகா விஷ்ணுதான் என்றுசொல்லார் தேசமதில் இப்போது என்மகனே இக்கலியன் மாய்மாலம் செப்ப எளிதல்லவே செயிக்க ஏலாதாராலும் . விளக்கம் ========== எல்லா யுகங்களுக்கும் இப்படிப்பட்ட தருமம் இல்லை. ஒவ்வொரு யுகத்துக்கும் தருமநிலை வித்தியாசப்படும். இதுவரை செம்மையான மகாவிஷ்ணுதான் யுகம் அழித்தது என்று தேச மக்கள் சொல்லுவார்கள். ஆனால் இப்பொழுது இக்கலி யுகத்தில் இக்கலியின் மாய மாலத்தின் தன்மை பற்றிச் சொல்ல எளிதான காரியம் இல்லை. கலியினை வெற்றி கொள்ள யாராலும் முடியாது. . . அகிலம் ======== இப்போதுன்னோ டுரைத்த இயல்விஞ்சைக் ககப்படுங்காண் அப்பனே பம்மலிலே அகப்படுங்கா ணிக்கலியும் கலியென்றால் எலியல்லவே கணையாளி வேண்டாமே வலிமாய நினைவு மாய்மால மென்மகனே . விளக்கம் ========== ஆனால், உன்னோடு உரைத்த உபதேசம் வெற்றி கொள்ள உதவிடும். என்மகனே, நீ அடங்கிப் போனால் உன் கட்டுப்பாட்டில் கலி அகப்படும். கலி என்று சொன்னால் அது சாதாரண எலி அன்று. அதை வெல்ல கணை, அம்பு போன்றவை தேவையில்லை. கலியானது வலிமையான மாய நினைவாகிய மாய்மாலம் ஆகும். . . அகிலம் ======== ஆனதா லாயுதங்கள் அம்புதடி வேண்டாமே மானமாக இருந்தால் மாளுங்கலி தன்னாலே . விளக்கம் ========== எனவே, கலியினை அழிக்க ஆயுதங்களோ, அம்போ, தடியோ தேவை இல்லை. ஒரே மன நினைவோடு இருந்தால் கலி தன்னாலே தானே அழிந்து விடும். . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான் உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல் குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து மறுகித் தவித்து மாள்வார் வீண் வேதமுள்ளோர் ஓடுவார் சிலபேர் ஒழிவார் சிலபேர்கள் கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம்! அய்யா ! DMuthu Prakash 05.05.2026 வீரத்தா விளக்கின் ருங்கோ ! Gur6 மIU ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஒருவர்க் கொருவர் உனக்கெனக் கென்றேதான் உறுதி யழிந்து ஒன்றிலுங்கை காணாமல் குறுகி வழிமுட்டி குறைநோவு கொண்டுடைந்து மறுகித் தவித்து மாள்வார் வீண் வேதமுள்ளோர் ஓடுவார் சிலபேர் ஒழிவார் சிலபேர்கள் கேடு வருமே கேள்விகேளாப் பேருக்கெல்லாம்! அய்யா ! DMuthu Prakash 05.05.2026 வீரத்தா விளக்கின் ருங்கோ ! Gur6 மIU ஒளி - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே துள்ளாத யானை துடியானை யென்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே . விளக்கம் ========== சொல்லாமலே சொல்லும் மௌன மார்க்கம் மிகவும் உயர்ந்த மார்க்கம் ஆகும். துள்ளாத யானை மிகுந்த துடிப்புள்ள யானையாக இருக்கும். அதுபோல அறிவுள்ள என்மகனே, அடக்கம் மிகவும் பெரியது ஆகும். உலக நியாயத்தைப் புறக்கணித்துக் கடந்து செல்ல நினையாதே. கற்றவர்களைப் புறக்கணிக்காதே. . . அகிலம் ======== நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே அண்டின பேரை அகற்ற நினையாதே ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும் . விளக்கம் ========== செய்த நன்றியை மறக்காதே. நான் தான் பெரியவன் என்று எண்ணாதே. உன்னைச் சார்ந்து வாழத் துடிப்பவரை அகற்றிவிட எண்ணதே. ஆபத்தைக் காத்து, அவர்களைப் புறக்கணிக்காது வாழ்வு கொடு. தான் அழியக்கூடிய அளவு துன்பம் வந்தாலும் எந்தவிதமான சாபத்தையும் யாருக்கும் கொடுக்காதே. . . அகிலம் ======== கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே விசுவா சமதிலே விரோதம் நினையாதே . விளக்கம் ========== உன் கோபத்தை யாரிடமும் காட்டாதே. பிறருடைய கோள் வார்த்தையால் தவறு செய்துவிடாதே. பாவச் செயல்களையும் பாவிகளையும் பார்க்காதே. வெளி வேசமான மொழிகளைப் பேசாதே. பசுவை அடைத்து வைத்துப் பட்டினி போடாதே. உன்னையே நம்பி உன்னிடத்தில் விசுவாசமாக இருப்பவரிடம் எந்தவித விரோத மனப்பான்மையையும் காட்டாதே. . . அகிலம் ======== எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே . விளக்கம் ========== எளிய மனிதர்களைக் கண்டால் அவர்களுக்காக இரங்கி ஏதாவது பொருளைக் கொடுத்து உதவி செய். எந்த வகையிலும் எவருக்கும் எந்தப் பொருளுக்கும் அழிவைக் கொடுக்கும் வகையில் எண்ணத்தைச் செலுத்தாதே. தீயவர்களிடம் தொட்டுப் பிடித்துப் பேசவோ அதிக நேரம் பார்த்துக் கொண்டே பேசவோ செய்யாதே. யாரையாவது விட்டு யாரையாவது அழைத்து வந்து வீண் பேச்சுப் பேசாதே. . . அகிலம் ======== வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே பரம்பூமி கண்டு பாவித் திருமகனே இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே . விளக்கம் ======== பிறர் வெட்கப்படும் காரியங்களை நீ கண்ணால் காணாதே. மனித வரம்பு முறைகளையும் சிறந்த வழி முறைகளையும் தவற விட்டு வாழாதே. நீ பரம்பொருள் வாழும் தருமபூமியைக் கண்டு அதே நினைவில் நல்ல நிலை நிற்பாயாக. இத்தனை புத்திமதிகளையும் உனக்கு எடுத்துரைத்தேன். . . அகிலம் ======== புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும் நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே . விளக்கம் ========== நான் சொன்ன புத்திமதிகளை விபரீதமாக ஆராய்ந்து பார்க்காதே. உன் உயிர் அழியும் அளவு துன்பம் வந்தாலும்கூட நான் கூறிய சட்ட முறைகளை மறந்துவிடாதே. எந்தக் காரியத்தையும் தோல்விவரும் என்று எண்ணாதே. நீ தருமபூமியை ஆட்சி புரிவாய் என் மகனே. . . தொடரும்... அய்யா உண்டு. #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர்
🚩அய்யா வைகுண்டர் 🚩 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 ணை மகனே அசையாதே கண்மணியே சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத் தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும் அய்யா 04.05.2026 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 ணை மகனே அசையாதே கண்மணியே சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத் தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும் அய்யா 04.05.2026 - ShareChat
#அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 04.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== விள்ளாத ஞாயம் மேல்ஞாய மென்மகனே துள்ளாத யானை துடியானை யென்மகனே அடக்கம் பெரிது அறிவுள்ள என்மகனே கடக்கக் கருதாதே கற்றோரைக் கைவிடாதே . விளக்கம் ========== சொல்லாமலே சொல்லும் மௌன மார்க்கம் மிகவும் உயர்ந்த மார்க்கம் ஆகும். துள்ளாத யானை மிகுந்த துடிப்புள்ள யானையாக இருக்கும். அதுபோல அறிவுள்ள என்மகனே, அடக்கம் மிகவும் பெரியது ஆகும். உலக நியாயத்தைப் புறக்கணித்துக் கடந்து செல்ல நினையாதே. கற்றவர்களைப் புறக்கணிக்காதே. . . அகிலம் ======== நன்றி மறவாதே நான்பெரிதென் றெண்ணாதே அண்டின பேரை அகற்ற நினையாதே ஆபத்தைக் காத்து அகலநீ தள்ளாதே சாபத்தைக் கூறாதே தன்னளவு வந்தாலும் . விளக்கம் ========== செய்த நன்றியை மறக்காதே. நான் தான் பெரியவன் என்று எண்ணாதே. உன்னைச் சார்ந்து வாழத் துடிப்பவரை அகற்றிவிட எண்ணதே. ஆபத்தைக் காத்து, அவர்களைப் புறக்கணிக்காது வாழ்வு கொடு. தான் அழியக்கூடிய அளவு துன்பம் வந்தாலும் எந்தவிதமான சாபத்தையும் யாருக்கும் கொடுக்காதே. . . அகிலம் ======== கோபத்தைக் காட்டாதே கோளோ டிணங்காதே பாவத்தைக் காணாதே பகட்டுமொழி பேசாதே பசுவை யடைத்துப் பட்டினிகள் போடாதே விசுவா சமதிலே விரோதம் நினையாதே . விளக்கம் ========== உன் கோபத்தை யாரிடமும் காட்டாதே. பிறருடைய கோள் வார்த்தையால் தவறு செய்துவிடாதே. பாவச் செயல்களையும் பாவிகளையும் பார்க்காதே. வெளி வேசமான மொழிகளைப் பேசாதே. பசுவை அடைத்து வைத்துப் பட்டினி போடாதே. உன்னையே நம்பி உன்னிடத்தில் விசுவாசமாக இருப்பவரிடம் எந்தவித விரோத மனப்பான்மையையும் காட்டாதே. . . அகிலம் ======== எளியோரைக் கண்டு ஈந்து இரங்கிடுநீ அழிவென்ற பேச்சு அனுப்போல் நினையாதே தொட்டுப் பிடியாதே தோர்வைவைத்துக் காணாதே விட்டுப் பிடியாதே வெட்கமதைக் காணாதே . விளக்கம் ========== எளிய மனிதர்களைக் கண்டால் அவர்களுக்காக இரங்கி ஏதாவது பொருளைக் கொடுத்து உதவி செய். எந்த வகையிலும் எவருக்கும் எந்தப் பொருளுக்கும் அழிவைக் கொடுக்கும் வகையில் எண்ணத்தைச் செலுத்தாதே. தீயவர்களிடம் தொட்டுப் பிடித்துப் பேசவோ அதிக நேரம் பார்த்துக் கொண்டே பேசவோ செய்யாதே. யாரையாவது விட்டு யாரையாவது அழைத்து வந்து வீண் பேச்சுப் பேசாதே. . . அகிலம் ======== வரம்பு தப்பாதே வழிதவறி நில்லாதே பரம்பூமி கண்டு பாவித் திருமகனே இத்தனை புத்தி எடுத்துரைத்தே னென்மகனே . விளக்கம் ======== பிறர் வெட்கப்படும் காரியங்களை நீ கண்ணால் காணாதே. மனித வரம்பு முறைகளையும் சிறந்த வழி முறைகளையும் தவற விட்டு வாழாதே. நீ பரம்பொருள் வாழும் தருமபூமியைக் கண்டு அதே நினைவில் நல்ல நிலை நிற்பாயாக. இத்தனை புத்திமதிகளையும் உனக்கு எடுத்துரைத்தேன். . . அகிலம் ======== புத்தி விபரீதமாய்ப் பின்னுமா ராயாதே சட்ட மறவாதே தன்னளவு வந்தாலும் நட்டங் காணாதே நாடாள்வா யென்மகனே . விளக்கம் ========== நான் சொன்ன புத்திமதிகளை விபரீதமாக ஆராய்ந்து பார்க்காதே. உன் உயிர் அழியும் அளவு துன்பம் வந்தாலும்கூட நான் கூறிய சட்ட முறைகளை மறந்துவிடாதே. எந்தக் காரியத்தையும் தோல்விவரும் என்று எண்ணாதே. நீ தருமபூமியை ஆட்சி புரிவாய் என் மகனே. . . தொடரும்... அய்யா உண்டு.
அய்யா வைகுண்டர் - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 ணை மகனே அசையாதே கண்மணியே சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத் தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும் அய்யா 04.05.2026 அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா 4 ணை மகனே அசையாதே கண்மணியே சாணா ரினக்குலங்கள் தப்பாம லுன்னுடையத் தர்மபதி ராச்சியத்தில் தாம்வாழ்வார் சத்தியமாய் வர்ம முனைப்பேசி வம்புசெய்த நீசர்குலம் அமுந்த நரகமதுள் ஆகுவார் சத்தியமாய்க் குளிர்ந்த மனதுடைய கோவேயென் கண்மணியே மலங்காமல் வாழ்ந்திருநீ வையகத்தி லெப்போதும் அய்யா 04.05.2026 - ShareChat
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும் சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள் அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே . விளக்கம் ========== இவற்றை எல்லாம் வளக்க உவமைக் கதை ஒன்றைச் சொல்லி விளக்குவேன். உண்மையுடன் மகனே, நீ கேட்பாயாக. சீடனுக்குக்கூட குரு கூறுவன எல்லாவற்றையும் கூறிவிட்டாலும் எல்லாக் கலைகளைவிடவும் மேலான சூட்சுமக்கலை ஒன்று அக்குருவிடம் இருக்கும். அதுபோல்கூட நான் என்னிடம் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளவில்லை. . . அகிலம் ======== முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார் அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை . விளக்கம் ========== ஆனால் எனக்கு ஈசர் முத்தி கொடுத்தபொழுது ஒரு விஞ்சை மட்டும் உபதேசிக்காது விட்டுவிட்டார். பின்னால் உபதேசிக்கப்பட்ட அந்த மௌன விஞ்சை மட்டுமே உனக்கு நான் இங்கு உபதேசிக்கவில்லை. . . அகிலம் ======== இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே . விளக்கம் ========== அவ்வுபதேசத்தை அருளுவது எப்போது என்று கூறுகிறேன். கேட்பாயாக. நீ தருமபூமியில் அரசு செலுத்தவரும் போது மேன்மையான தங்க நவரத்தின முடி சூட்டும் சமயத்தில் உபதேசிக்கும் விஞ்சை அது அப்பொழுது அதை நீ கேட்டுக் கொள்வாயாக. தருமயுகத்தில் கூறும் அந்த விஞ்சை பல உயிர்களுக்கும் சக்தி கொடுக்கும் விஞ்சை ஆகும். என்னுடைய நாரணனே, வேறு எல்லா முக்கிய விஞ்சைகளையும் உனக்குக் நான் கூறி விட்டேன். . . அகிலம் ======== அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள் பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும் மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில் கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான் . விளக்கம் ========== இன்னும் சில விஞ்சைகள் உள்ளன. கேட்பாயாக. பெரியோர்களுக்கு வாழ்வு பெருகி உயர்ந்து கொண்டே இருந்தாலும் அவர் உள்ளத்தில் மரியாதைதான் நிறைந்து இருக்கும். ஆனால் கீழ்த் தரமானவனுக்குச் சிறிதளவு வாழ்வு வந்தால்கூட கற்றவரை மதிக்காமல் எல்லாம் நான் கண்டறிந்து கொள்வேன் நீ போய் விடு என்று அவமதிப்பான். . . அகிலம் ======== முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல் வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய் . விளக்கம் ========== முள் மருக்கைப் பூவின் அழகு மூன்று நாட்களே பரிணமிக்கும். அதுபோலக் கள்ளர்களுக்குச் சிவகாலமே வாழ்வு நீடிக்கும். ஆனால் நல்லவர்கள் என்றும் குன்றாப் புகழோடு வல்லவர்க்கும் நல்லவராய் வாழ்ந்து கொண்டிருப்பார். இதை நீ கண்டு கொள்வாயாக. . . தொடரும்... அய்யா உண்டு.
Ayya Vaikundar - 0= QRAKAS Muthu KNcHiPusy  49 0= QRAKAS Muthu KNcHiPusy  49 - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 02.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== கோல விளையாட்டுக் கொஞ்ச மெடுப்பேனான் தூல மறியாமல் தொல்புவியெல் லாமயங்கும் அன்போர்க ளெல்லாம் ஆவியே தான்மறுகி இன்ப முடனே ஏங்கியேங்கி யழுவார் . விளக்கம் ========== பலவகையான உருவங்களை நான் எடுத்து இந்த உலகில் தோன்றி விளையாடுவேன். எனது தூலதேகத்தின் மகிமையை அறியாமல் உலக மக்கள் மயங்குவர். அன்பர்கள் எல்லாரும் என்னைக் கண்டதும் இன்பத்தில் என்னைக் கட்டிப்பிடித்து ஏங்கி ஏங்கி அழுவர். . . அகிலம் ======== இத்தனை நாளும் இவரைநம்பி நாமிருந்து புத்தியது கெட்டோம் என்றுமிகப் பேதலிப்பார் அப்போது ஆகா அன்னீத மாபாவி இப்போது கண்டுதென்பார் ஏலமே சொன்னதெல்லாம் . விளக்கம் ========== சிலர் இவ்வளவு காலமும் இவரை நம்பி இருந்தோம், புத்தி கெட்டோமே? என்று பேதலிப்பார். அச்சமயம் தீயோர்கள் எல்லாரும் மன்னர் பலர் சொன்னவற்றை ஏமாற்றி இவன் கண்டதாகச் சொல்லுகிறான்? என்று கூறுவர். . . அகிலம் ======== எய்த்தானென்பா னன்போரை இடுக்கஞ்செய் தேயடிப்பான் சூட்ச முடனே சொரூபமொன்று நானெடுப்பேன் அதுதா னொருகாலம் அதிகமக னேகேளு இதுபெரிய சூட்சம் என்மகனே கேட்டிடுநீ அதின்மேலே அன்போர் அதிகப் பெரியோராய் இதின்மேலே தாண்டும் எல்லோரும் வல்லோரே . விளக்கம் ========== அத்தகையோர் என் அன்போரைத் துன்பம் உண்டாக்கி அடிப்பர். மகனே சூட்சமமான சொரூபம் ஒன்று நான் எடுக்கும் காலம்தான் முக்கியமானது. உண்மையில் இது சூட்சுமம் நிறைந்தது. இதற்குப் பிறகு அன்பர்கள் மிகவும் பெரியோராய் ஆவர். இதை தாண்டிச் செல்லுகின்றவர் எல்லாரும் வல்லவரே. . . அகிலம் ======== பின்னுமொரு சூட்சம் பிரமாண மாயெடுப்பேன் பன்னு மணியே பராபரமே கேட்டிடுநீ . விளக்கம் ========== இன்னும் ஒரு சூட்சுமம் சொருபத்தைச் சரியான அளவுள்ள வடிவத்துடன் எடுப்பதைச் சொல்லுகிறேன். மணியே, பராபரமே, நீ கேட்பாயாக. . . அகிலம் ======== குளத்தைத் தடதடெனக் கொந்துகொந் தாயுடைத்து சுழற்றக்கன லக்கினியும் துர்க்கைமா துர்க்கையையும் விட்டயச்சு மாநிலத்தில் விளையாடி யேதிரியும் கட்டணங்க ளாக கனமாய்க் குழுகுழென ஓடுவார் பதறி விழுவா ரறமெலிந்து நாடும் பெரியோர் நலமாக வாழ்ந்திருப்பார் . விளக்கம் ========== குளத்தை விரைவாக ஆங்காங்கே வெட்டி உடைக்கவும், அக்கினியை எங்கும் சுழற்றி வீசி எறியவும், துர்க்கையை அனுப்புவோம் பூமியில் அவள் விளையாடிக் கொண்டிருப்பாள். கட்டிடங்கள் எல்லாம் அசைந்து ஆடி அழியும். தீயோர்கள் எல்லாரும் பதறி அறம் மெலிந்து ஓடிடுவர். பொறுமையை விரும்பும் பெரியோர்கள் நலமாக வாழ்ந்திருப்பர். . . அகிலம் ======== என்மகனே வுன்காலம் இன்னும் வகுப்பேன்கேள் பொன்மகனே பூமியிலே பின்னுமொரு காரணங்கேள் கெட்ட நசுறாணி கெம்பிக் கடைக்காலம் மொட்டைத்தலை யன்வருவான் முளையனவ னோடிடுவான் ஆடிக் கொண்டாடி அங்குமிங்குந் தானலைந்து ஓடிக் கொண்டோடி ஒன்றுபோ லேமாள்வான் மகனே யுன்காலம் மகிழ்ந்திரு என்மகனே . விளக்கம் ========== பொன்மகனே உன் காலத்தை இன்னும் கூறுகிறேன் கேட்பாயாக. கெட்ட புத்தியுள்ள நசுறாணி அச்சமயத்தில் எழும்பித் தெச்சாணாபூமியில் ஆட்சியைப் பிடித்திட விரைந்து வந்து தோற்று ஓடுவான். பிறகு மொட்டைத் தலையையுடைய ஒருவன் வந்து ஆளத் துடிப்பான். முனையன் ஆகிய அவனும் தோற்று ஓடி ஆங்காங்கே அலைந்து திரிவான். பிறகு நசுறாணியும் இவனும் ஒரே மாதிரியாக அழிவர். இச்சமயம் உனது நல்ல காலம். மகிழ்ந்து இரு என் மகனே. . . தொடரும்... அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 #Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩
அய்யா வைகுண்டர் - = 8 00 = 8 00 - ShareChat
கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 01.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== இன்ன முன்காலம் இயம்புவேன் கேள்மகனே தன்னந் தன்னாலே சாதிக்குச் சாதிமாளும் . விளக்கம் ========== இன்னும் உன்னுடைய நல்ல காலம் பற்றிக் கூறுகிறேன். கேட்பாயாக. தம்மைத் தாமே அழித்துக் கொண்டே ஒவ்வொரு சாதியும் அழியும். . . அகிலம் ======== நல்ல நினைவோர்க்கு நாளெத்தனை யானாலும் பொல்லாது வாராமல் புவிமீதில் வாழ்ந்திருப்பார் . விளக்கம் ========== எப்பொழுதும் நல்ல எண்ணம் உள்ளவர்கள் எவ்வளவு காலமானாலும் துன்பம் வராமல் இன்பமாகவே பூமியில் வாழ்ந்து கொண்டிருப்பர். . . அகிலம் ======== நாட்டி லொருஅனுமன் நல்லவனை நானயச்சு கோட்டிசெய் யென்றுரைப்பேன் கோமகனே வுன்காலம் . விளக்கம் ========== நாட்டில் ஓர் அனுமனாகிய நல்லவனை நான் அனுப்பி பல குறும்புகள் செய்யக் கூறுவேன். என் மகனே, அதுவே உன் நற்காலம். . . அகிலம் ======== முறைதப்பி யாண்ட முகடன் வெறும்நீசன் குறைநோவு கொண்டு கூடிழப்பா னுன்காலம் . விளக்கம் ========== அச்சமயத்தில் சட்ட முறைகள் தப்பி ஆளும் முகடன் ஆகிய முழு நீசன் தீய நோயினால் நோவு கொண்டு இறந்து விடுவான். அதுவே உன் நற்காலம் . . அகிலம் ======== அதிலே சிலபேர் அரசுனக் கெனக்கெனவே விதியை யறியாமல் வெட்டிக்கொண் டேமாள்வார் அத்தருண முன்காலம் அதிகமக னேகேளு . விளக்கம் ========== அவனுடைய சந்ததியர் சிலபேர் அரசு உரிமைக்குப் போட்டியிட்டுத் தமது விதியை அறியாமல் தமக்குள்ளே வெட்டி அழிவர். அச்சமயம் உன் நற்காலம் இதை நீ அறிந்து கொள்ளுவாயாக. . . அகிலம் ======== இத்தருண மல்லால் இன்ன மெடுத்துரைப்பேன் எல்லோருங் கைவிட்டு இருப்பாருனைத் தேடாமல் நல்லோர் மனதில் நாரணா என்றுரைப்பார் . விளக்கம் ========== இவை மட்டுமல்லாமல் இன்னும் எடுத்து உரைக்கிறேன் கேட்பாயாக. எல்லாரும் உன்னைத் தேடாமல் கைவிட்டபடி இருப்பர். நல்லவர்கள் மனத்தினுள்ளே நாரணா என்று உரைத்தபடி இருப்பர். . . தொடரும்... அய்யா உண்டு. #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar
💚Ayya 💗 Vaikundar💚 - ShareChat
00:14
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் அய்யா வைகுண்டர் அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு ஆரம்பம் - நாள் 30.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== தருமமதாய்த் தாரணியில் தன்னந்தன் னால்வாழ்ந்து பொறுமைப் பெரியோராய்ப் பூதலமெல் லாம்வாழ்வார் அப்போது நீயரசு ஆளுவாய் யென்மகனே . விளக்கம் ========== இப்பூவுலகில் கலியழித்து தருமபூமியில் வாழும் மக்கள் தம்மைத் தாமே அறிந்து பொறுமையுடைய பெரியோராய் எல்லா இடங்களும் பரந்து வாழ்வர். அப்போது நீ தருமபூமியை அரசாட்சி புரிவாய். . . அகிலம் ======== வாரிமூன்று கோதி வளைந்திருக்கு மோர்தீவை சாதியொரு நிரப்பாய்த் தானாள்வா யென்மகனே . விளக்கம் ========== மூன்று கடல்கள் ஒன்றுகூடி ஒரு தீவைச் சுற்றி இருக்கும் சாதி பேதமின்றி ஒரே இனமாய்த் தோன்றும் அக்காலம் நீ ஆட்சி புரிவாய். . . அகிலம் ======== கோடுபல வாதும் கோள்நீசப் பாவிகளும் கேடு வருங்காலம் கிருஷ்ணா வுன்நற்காலம் . விளக்கம் ========== தங்களுக்கு ஏற்றவாறு நியாயத்தைத் திருப்பித் தவறாக வாதம் பேசும் கோள் நிறைந்த நீசப்பாவிகளுக்குக் கேடு வரக்கூடிய காலத்தில் கிருஷ்ணனாகிய என் மகனே, வைகுண்டா உனக்கு நல்ல காலம் பிறக்கும். . . அகிலம் ======== வானமது வெள்ளி மாறிவெறும் வானமதாய் மேன் முகிலற்று வெறுவான மாய்த்தோன்றும் நல்ல மகனே உனக்குவரும் நற்காலம் சொல்லத் தொலையாது சூல்மகனே என்கணக்கு . விளக்கம் ========== வானத்தில் வெள்ளி முதலியன மாறி மேகக்கூட்டங்கள் மாறி வானம் ஒன்றுமற்றதாகக் காட்சியளிக்கும் அக்காலம் உனக்கு வரும் நல்ல காலம் ஆகும். மகனே, இப்படியே நான் சொல்லச் சொல்ல உபதேசங்கள் வந்து கொண்டே இருக்கும், அவற்றைச் சொல்லி முடிப்பது முடியாது. . . அகிலம் ======== ஒக்க அடக்கி உரைத்திருக்கு வுன்னிடத்தில் நிற்க நிலைக்க நினைத்ததெல்லா மங்காகும் பொறுமை பெரிது பெரிய திருமகனே தருமம் பெரிது தாங்கியிரு என்மகனே . விளக்கம் ========== அவை எல்லாவற்றையும் சில உபதேசங்களில் அடக்கி உன்னிடத்தில் உரைத்துள்ளேன் அதை நீ உன் அகத்தில் நிலை நிற்கும் வகையில் நினைவில் நிறுத்தினால் நினைத்தவை எல்லாம் இனிதாக முடியும் என்மகனே. பெரியவனே பொறுமையும் தருமமும் எல்லாவற்றை விடவும் பெரியன. . . அகிலம் ======== எல்லா முனது இச்சையது போல்நடக்கும் நல்லார்க்கு மோர்நினைவே நலமாகு மென்றுசொல்லி எல்லார்க்கும் விளம்பி இருநீ யிருமகனே பொல்லாதா ரோடும் பொறுமை யுரைமகனே தன்னாலே யாகுமட்டும் சாற்றியிரு என்மகனே வந்தா ரறிவார் வராதார் நீறாவார் . விளக்கம் ========== எனவே அவற்றை எப்போதும் நீ கடைப்பிடித்து வந்தால் எல்லாம் உனது ஆசைப்படி நடக்கும். நல்லவர்கள் ஒரே நினைவாக ஒரே இறைவனை நினைத்தவண்ணம் இருப்பதே நலமாகும் என்று எல்லாரிடமும் சொல்லி வாழ்ந்து வா. பொல்லாதவரோடும் உன்னால முடிந்தவரை பொறுமையாகப் பதில் உரைத்திடு. பொறுமை வந்தவர்கள் தருமபதியை அறிவர். அப்படி பொறுமை வராதவர்கள் அழிவர். . . தொடரும்... அய்யா உண்டு.
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம் கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும் தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும் பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே! அய்யா ! OMtuPrukaah 30.04.2026 வீரத்தனமாய் ுங்கோ Gurro விளக்கின் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா கண்டாய் கண்டா யுடன்புதுமை கண்ணே வுனக்கு நற்காலம் கொண்டாய் கொண்டாய் பத்தறையில் கோவில் காலும் சிவலாயமும் தண்டா யுதத்தால் வாகனமும் சத்தி மாத ரிருபுறமும் பண்டோர் காட்சி யுனக்குள்ளே பண்பாய்க் காணு தென்மகனே! அய்யா ! OMtuPrukaah 30.04.2026 வீரத்தனமாய் ுங்கோ Gurro விளக்கின் ஒளி - ShareChat
#💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் #🚩அய்யா வைகுண்டர் 🚩 #Ayya Vaikundar கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 29.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== மாளக் கிடப்பார் மதத்தோர்க ளென்மகனே இவ்வகைக ளெல்லாம் என்மகனே யுன்காலம் அவ்வகைக ளெல்லாம் ஆராய்ந்து பார்த்திருநீ . விளக்கம் ========= உயர்வான நோக்கத்தை நினையாது அழியப் போகின்றவர்கள் ஆணவம் பிடித்தவர்கள் என்பதை அறிந்து கொள். இத்தகைய மாற்றங்கள் உண்டாவது எல்லாம் உன் நல்ல காலத்திலே ஆகும் என்பதை அராய்ந்து அறிந்து வாழ்வாயாக. . . அகிலம் ======= இனத்துக் கினங்கள் இருப்பேனான் சுவாமியென்று மனதில் வேறெனவே வையாதே யென்மகனே . விளக்கம் ========= எல்லா இனங்களிலும் நான் சுவாமியாகக் காட்சி அளிப்பேன். ஒவ்வொரு இனத்திலும் காட்சியளிக்கும் தெய்வப் பிரிவுகள் வேறு யாரோ என்று உன் மனத்துள் எண்ணி அத்தெய்வங்களை ஏளனமாகப் பேசி ஒதுக்கித் தள்ளாதே. . . அகிலம் ======= நாலுவே தமதிலும் நான்வருவேன் கண்டாயே தூல வேசமிட்டு சுற்றுவேன் கேட்டிடுநீ தியங்காதே யென்மகனே சீருள்ள கண்மணியே மயங்கா தேமகனே மாதவங்கள் பெற்றவனே . விளக்கம் ========= நான்கு வேதங்களிலும் நானே பரம்பொருளாக் காட்சியளிப்பேன் என்பதையும் ஆய்ந்து அறிவாயாக. சீருள்ள கண்மணியே, மாதவங்கள் செயதவனே, என் மகனே, பல மதத்தவரின் வேடங்களையும் புனைந்து கொண்டு உலகில் சுற்றித் திரிவேன். நீ மனம் மயக்கமுற்று வெவ்வேறு என்று எண்ணாதே. . . அகிலம் ======= அவரவர்கள் மனதில் ஆன படியிருந்து எவரெவரை யும்பார்த்து இருப்பேனா னுன்னிடமே .விளக்கம் ========= அவரவர்கள் மனத்துக்கு ஏற்கும்படி இருந்து எல்லாரையும் கவனித்துக் கொண்டு உன்னிடமும் இருப்பேன். . . அகிலம் ======= லிங்கமொன் றேதிக்கும் இணையாக ஓர்சோடாய் தங்கநவ ரெத்தினங்கள் சமுத்திரத்தி லேகாணும் ஆனையொரு கன்றீனும் அதினா லுலகமெல்லாம் தானாக ஆளும் தலைவனும்நீ யல்லாது மலையடி வாரம் வளருமொரு விருச்சம் அலையதி லும்பெரிதாய் அதுதழையுங் கண்டாயே . விளக்கம் ========= அப்பொழுது உன் தெளிந்த மனத்தில் இலிங்கம் ஒன்று தோன்றும். அதே சமயம் அங்கே தங்க நவ ரத்தினங்களும் காட்சியளிக்கும். அப்போது உன் சீவன் தருமயுகத்துக்குரிய புத்தம் புதிய சீவனாகப் பரிணமிக்கும். அந்நிலையில் தருமயுகத்தை ஆளும் தலைவன் நீயே ஆவாய். மலை (ஆக்ஞா பகுதி) அடிவாரத்தில் வளருகின்ற மரம் ஒன்று இவ்வுலகத்தை விடப் பெரியதாகச் செழித்து வளரும். . . அகிலம் ======= சிலையுள்ளே தோன்றி சிவதோத்தி ரமாக நிலையொன்றா யாகி நீயாள்வா யுன்காலம் வாரிக் கரையில் மண்டபமொன் றேவளர்ந்து நாரியர்கள் கூட நாடெங்கும் வாசமிட்டு ஒருகுடைக்குள் ளாள்வாய் உன்கால மென்மகனே . விளக்கம் ========= அச்சமயம் சிலை ஒன்று அதனுள்ளே தோன்றிச் சிவத்தோத்திர நிலையில் இணைந்து ஒன்றாக நீயாகி இருக்கும். அக்காலத்தில் நீ தருமயுகத்தை ஆள்வாய். அதுவே உன்னுடைய சிறந்த காலமாகும். பால் கடற்கரையில் மண்டபம் ஒன்று தோன்றும். பெண்கள் சூழ்ந்து வர நாடெல்லாம் சென்று ஒற்றுமையாக ஓர் ஆட்சிக்குள் உலகை ஆண்டு வருவாய். இதுவே உன் நற்காலம் ஆகும். . . கர்த்தாதி கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு முடிவு பெற்றது. . . தொடரும்… அய்யா உண்டு.
💚Ayya 💗 Vaikundar💚 - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு துலுக்கன்வீடானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே ORAa அய்யா ! ]9 (2u೩ 0 Muthu Prakash 29.04.2026 வீரத்தனமாய் இருங்கோ விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா ஆதிச்சா திமுதலாய் ஆராதனை காட்டுவிப்பேன் காட்டுவிக்குஞ் சொரூபம் கண்டிரு என்மகனே ஆட்டுவிப்பேன் நால்வேதம் அதிலும்நான் மாயமிட்டு துலுக்கன்வீடானதிலும் சூதாட்டுப் பார்த்திடுவேன் கிலுக்கமொன்று செய்வேன் கீழுமேலும் நடுவும் பதறித் தெளியும் பார்த்திரு என்மகனே ORAa அய்யா ! ]9 (2u೩ 0 Muthu Prakash 29.04.2026 வீரத்தனமாய் இருங்கோ விளக்கின் போல் ஒளி - ShareChat
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை ஒன்பதாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 28.04.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======= விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== .அங்கங்கே நாட்டிவைத்த ஆணிவே ரத்தனையும் எங்கெங் குமொடுக்கி யானுன் னிடமிருந்து ஒக்க வொருகுடைக்குள் உன்கையிலே வேருதந்து துக்கக் களையறுத்துச் சுத்தமரை யாளாக்கி உன்மூப் புயர்மூப்பாய் உல்லாச மேதருவேன் . விளக்கம் ========= நான் உன்னிடம் இருந்து கொண்டு, அங்கங்கே சுயமாகச் செயல்படுகின்ற மூலப் பலம் எல்லாவற்றையும் ஆங்காங்குச் சென்று ஒடுக்கி, இவ்வாறு ஒடுக்கிய மூலப் பலம் முழுவதையும் உன் கட்டுப்பாட்டில் தந்து, உன் ஒரு சொல்லுக்குக் கீழ் எல்லாரையும் கீழ்ப்படியச் செய்வேன். துக்கத் தன்மையுள்ள கலியாகிய களையை நீக்கி, உன்னைப் பரிசுத்த நிலையில் ஆக்கி, எல்லாரிலும் பெரியோனாக்கி பெருமகிழ்ச்சியை உன்னில் உருவாக்குவேன். . . அகிலம் ======= பின்மூப் பில்லாமல் பெரியோனின் நாமமதாய் அடக்குடக் கெல்லாம் அன்றுனக்கு நான்தருவேன் . விளக்கம் ========= உனக்குப் பிறகுகூட உன்னைப் போன்ற பெரியோன் தோன்றாத அளவு பெயரும் புகழும் உனக்குத் தந்து எல்லாவகை அடக்கமும் அந்த நிலையில் தந்து அருளுவேன். . . அகிலம் ======= வடக்கு வெளிவாசல் மலைமீதி லோர்புதுமை உண்டாகு மகனே உனக்கு நற்காலமதே தண்டா யுதத்தோடே சத்தமொன் றேபிறக்கும் மேலக்கால் மண்டபமும் மேல்மூடி தான்கழன்று காலத்தால் காணும் கண்மணியே யுன்காலம் . விளக்கம் ========= தருமபூமி தோன்றக்கூடிய காலத்தில் நடக்கும் புதுமைகளைக் கூறுகிறேன். கேட்பாயாக. மலை (ஆக்ஞா பகுதி) மீது வடக்கு வெளி வாசலில் ஒரு புதுமை உண்டாகும். மேலக் கால் மண்டபத்தின் மேல் பகுதி திறந்து, தண்டாயுத்தின் வீச்சு ஓசை உண்டாகும். . . அகிலம் ======= தெச்சணா மூலை தென்பாற் கடலருகே மெச்சும் பதிமூலம் விளக்கெரியக் கண்டுனது . விளக்கம் ========= தெச்சணா மூலையில் காணப்படும் தெற்குப் பால் கடலருகே எல்லாரும் புகழத் தக்க பதியிலிருந்து ஒரு விளக்கு எரியும். . . அகிலம் ======= கால மிதுமகனே கன்னிதிரு தென்திசையில் கோபுர மண்டபமும் கொடிமரமும் வீதிகளும் தாபரமாய்த் தன்னால் தலங்க ளதுதுலங்கும் கண்டதுவே காலம் கனத்தவலு சூரியனும் பண்டு முறைதப்பிப் பருதிரத்தக் கண்வெறியாய் . விளக்கம் ========= கன்னித் திசையாகிய சிறந்த தென் மேற்குத் திசையில் கோபுர மண்டபமும், கொடி மரமும், வீதிகளும், தலங்களும் தன்னாலே தோன்றும். அப்போது சூரியன் முறை தப்பி இரத்த வெறியாகச் சிவந்து காணும். அதுவே உனது சிறந்த காலமாகும். . . அகிலம் ======= மகனே வுனக்காகா மாநீசப் பாவியெல்லாம் அகமே கனல்தாவி அன்றாடம் தானழிவார் உகமீதே தர்மம் உனக்கெனக்கென் றேகுதிக்கும் மகனே வுனது மாதவத்தோர் காலம்நன்று . விளக்கம் ========= உனக்கு ஆகாத தீய நீசப் பாவிகள் எல்லாரும் தமது உள்ளத்தில் தீமை புகுந்து தினந்தோறும் அழிவர். இப்படியாகக் கலியுகம் அழிந்து தருமயுகம் உனக்கும் எனக்குமாகப் பிறக்கும். மகனே, உனது மாதவத்தோர் காலமாகிய தருமயுகக் காலம் மிகவும் நன்மையானது. . . அகிலம் ======= கால மிதுமகனே கண்மணியே கேட்டிடுநீ தூல முரையாதே துலங்கும்நா ளாகுமட்டும் எளியோரைக் கண்டு இரங்கியிரு என்மகனே வலியாரைக் கண்டு மகிழாதே என்மகனே தாழக் கிடப்பாரைத் தற்காப்ப தேதருமம் . விளக்கம் ========= என் கண்மணியே, இதையும் நீ கேட்டிடுவாயாக. மகனே, தருமயுகம் துலங்கும்வரை வெளித் தோற்றங்களையும் உன் சக்திகளையும் வெளியே யாருக்கும் உரைக்காதே. எளியவரைக் கண்டால் இரக்கத்தைக் காட்டு. வலியாரைக் கண்டால் மகிழ்ச்சியைக் காட்டாதே. ஏனெனில் எளிமையாகத் தாழ்ந்து கிடப்பவரைத் தற்காப்புச் செய்ய உதவுவதே தருமம் ஆகும். . . தொடரும்… அய்யா உண்டு. #அய்யா வைகுண்டர் #அய்யா வைகுண்டர் {1008} #💚Ayya 💗 Vaikundar💚
Ayya Vaikundar - அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மளந்ததோர் நாரணர்க்கு வைய மதலை யெனவந்த வைகுண்டரோ பதியாளும் வைகுண்டரோ தர்மப் சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ 15 28.04.2026 அகிலம். D Muthu Prakash] ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி அய்யா சிவசிவ சிவசிவா அரகர அரகரா மளந்ததோர் நாரணர்க்கு வைய மதலை யெனவந்த வைகுண்டரோ பதியாளும் வைகுண்டரோ தர்மப் சாணர்க் கனுகூல மானவரோ அலைந்து மலைந்ததோர் சான்றோர்க்கு அதிக விதிகொண்டுப் பிறந்தவரோ சாணாக் குடிகுல நாயகமோ தர்மந் தழைக்கவே பிறந்தவரோ 15 28.04.2026 அகிலம். D Muthu Prakash] ுங்கோ வீரத்தனமாய் விளக்கின் போல் ஒளி - ShareChat