ShareChat
click to see wallet page
search
#Ayya Vaikundar #🚩அய்யா வைகுண்டர் 🚩 #💚Ayya 💗 Vaikundar💚 #அய்யா வைகுண்டர் {1008} #அய்யா வைகுண்டர் கர்த்தன் உலகளந்த ஆண்டவர் ஸ்ரீமன் நாராயணர் தாமே வைகுண்டராய் தோன்றி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பத்தாம் நாள் வாசிப்பு தொடர்ச்சி - நாள் 03.05.2026. . அய்யா துணை . தினமொரு நேரம் எந்தன் திருமொழி யதனைக் கேட்டால் பனிவெள்ளம் போலே பாவம் பறந்திடும் நிசமே சொன்னோம் – அய்யா வைகுண்டர். . . அகிலம் ======== விஞ்சையருளல் தொடர்ச்சி ======================== உவமையொன்று சொல்லுகிறேன் உற்பனமாய்க் கேள்மகனே புத்திரனுக் கேகுருவும் புகன்றதெல்லாம் புகன்றாலும் சுற்றுமொரு சூட்சத் தொழிலுண்டு மாயானுள் அத்தனையு மென்னுள் அடக்கமில்லை யென்மகனே . விளக்கம் ========== இவற்றை எல்லாம் வளக்க உவமைக் கதை ஒன்றைச் சொல்லி விளக்குவேன். உண்மையுடன் மகனே, நீ கேட்பாயாக. சீடனுக்குக்கூட குரு கூறுவன எல்லாவற்றையும் கூறிவிட்டாலும் எல்லாக் கலைகளைவிடவும் மேலான சூட்சுமக்கலை ஒன்று அக்குருவிடம் இருக்கும். அதுபோல்கூட நான் என்னிடம் எதையும் மறைத்து வைத்துக் கொள்ளவில்லை. . . அகிலம் ======== முத்தியெனை யீன்றோர் முதனாளோர் விஞ்சைவைத்தார் அவ்விஞ்சை மாத்திரமே யானுனக் கீயவில்லை . விளக்கம் ========== ஆனால் எனக்கு ஈசர் முத்தி கொடுத்தபொழுது ஒரு விஞ்சை மட்டும் உபதேசிக்காது விட்டுவிட்டார். பின்னால் உபதேசிக்கப்பட்ட அந்த மௌன விஞ்சை மட்டுமே உனக்கு நான் இங்கு உபதேசிக்கவில்லை. . . அகிலம் ======== இவ்விஞ்சை யீவதுதான் எப்போதெனக் கேளு சீமை யரசு செலுத்தவரும் நாளையிலே மேன்மை முடிதரிக்கும் வேளையி லென்மகனே சொல்லுகிற விஞ்சை சுத்தமனே கேட்டிடுநீ பல்லுயிர் களுக்கும் படியளக்கும் விஞ்சையது எல்லா முனக்களித்தேன் என்னுடைய நாரணனே . விளக்கம் ========== அவ்வுபதேசத்தை அருளுவது எப்போது என்று கூறுகிறேன். கேட்பாயாக. நீ தருமபூமியில் அரசு செலுத்தவரும் போது மேன்மையான தங்க நவரத்தின முடி சூட்டும் சமயத்தில் உபதேசிக்கும் விஞ்சை அது அப்பொழுது அதை நீ கேட்டுக் கொள்வாயாக. தருமயுகத்தில் கூறும் அந்த விஞ்சை பல உயிர்களுக்கும் சக்தி கொடுக்கும் விஞ்சை ஆகும். என்னுடைய நாரணனே, வேறு எல்லா முக்கிய விஞ்சைகளையும் உனக்குக் நான் கூறி விட்டேன். . . அகிலம் ======== அல்லாமல் நானுனக்கு அருளுகிற விஞ்சையைக்கேள் பெரியோர்க்கு வாழ்வு பெருகிச் சிறந்தாலும் மரியாதை யேயிருக்கும் மகனேநீ கேட்டிடுநீ சற்றோலே வாழ்வு சகடருக் கேவருகில் கற்றோரே யாகிடினும் கண்டறிவேன் போநீயென்பான் . விளக்கம் ========== இன்னும் சில விஞ்சைகள் உள்ளன. கேட்பாயாக. பெரியோர்களுக்கு வாழ்வு பெருகி உயர்ந்து கொண்டே இருந்தாலும் அவர் உள்ளத்தில் மரியாதைதான் நிறைந்து இருக்கும். ஆனால் கீழ்த் தரமானவனுக்குச் சிறிதளவு வாழ்வு வந்தால்கூட கற்றவரை மதிக்காமல் எல்லாம் நான் கண்டறிந்து கொள்வேன் நீ போய் விடு என்று அவமதிப்பான். . . அகிலம் ======== முள்முருக்கம் பூவு மினுக்குமூன் றுநாளை கள்ளருக்கு வாழ்வு காணுமது போல்மினுக்கு நல்லோர்க்கு வாழ்வு நாளுங் குறையாமல் வல்லோர்க்கும் நல்லோராய் வாழ்ந்திருப்பார் கண்டிருப்பாய் . விளக்கம் ========== முள் மருக்கைப் பூவின் அழகு மூன்று நாட்களே பரிணமிக்கும். அதுபோலக் கள்ளர்களுக்குச் சிவகாலமே வாழ்வு நீடிக்கும். ஆனால் நல்லவர்கள் என்றும் குன்றாப் புகழோடு வல்லவர்க்கும் நல்லவராய் வாழ்ந்து கொண்டிருப்பார். இதை நீ கண்டு கொள்வாயாக. . . தொடரும்... அய்யா உண்டு.
Ayya Vaikundar - 0= QRAKAS Muthu KNcHiPusy  49 0= QRAKAS Muthu KNcHiPusy  49 - ShareChat