ShareChat
click to see wallet page
search
*மசாபியேல் குகையில் அர்ச்.பெர்னதெத் கண்ட அன்னை - லூர்து காட்சிகள்* ~ ஆசிரியர் அருட்தந்தை மெத்தோடியஸ் பாகம்-5 மூன்று தினங்கள் கடந்து விட்டன. அன்று ஞாயிற்றுக்கிழமை, கோவிலில் திருப்பலி பூசை முடிந்து பெர்னதெத் தன் அம்மாவுடன் வெளியே வந்தாள். அவள் வயதுடைய பிள்ளைகளெல்லாம் பெர்னதெத்தைச் ஆழ்ந்து கொண்டு கேள்விக்கு மேல் கேள்விகள் கேட்டுத் துளைத்தார்கள். "பெர்னதெத், மசாபியேல் குகையில் அழகான ஒரு அம்மாவைப் பார்த்தாயாமே?" - *சூரியனைப் போல் அந்த அம்மா பிரகாசமாக இருந்தார்களாமே? "கெபிக்கு மேலே ஒரு குகையிலா நின்றார்கள்?" எல்லாக் கேள்விகளுக்கும் “ஆம், ஆம்" என்று அமைதியாகப் பதில் சொன்னாள் பெர்னதெத், "வாருங்கள். கெபிக்குப் போவோம். அந்த அம்மாவைப் பார்ப்போம்" என்று புறப்பட்டனர்.. கூட்டத்தில் ஒரு பிள்ளை நான் வர மாட்டேன். என் அம்மா அங்கே போகக் கூடாது என்று எனக்குச் சொல்லியிருக்கிறார்கள் என்று கூறி வீட்டுக்கு ஓட்டம் பிடித்தாள். பெர்னதெத் தன் அம்மாவிடம் அனுமதி கேட்க வீட்டுக்குப் போனாள். மற்ற பிள்ளைகளும் பெர்னதெத் துடன் அவள் வீட்டுக்குச் சென்றார்கள். தன் குடும்ப வாழ்வில் பல விதமான துன்பங்களை ஏற்றுக்கொண்டு, சர்வேசுரன் சித்தத்துக்குப் பணிந்து எவ்வித முறைப்பாடும் செய்யாமல் உண்மையான குடும்பத் தலைவியாக வாழும் லூயிசா சூபீரு, மகள் பெர்னதெத்தின் வருகைக்காக கவலையோடு காத்திருந்தான், பிள்ளைகள் அனைவரும் லூயிசாவைச் சூழ்ந்து கொண்டு பெர்னதெத்தை தங்களுடன் அனுப்பும்படி கேட்டனர். உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் போங்கள். பெர்னதெத்தை அனுப்ப மாட்டேன்" என்று கண்டிப்பாகப் பேசினாள் லூயிசா. பின். “பிள்ளைகளே. இது பேயீனுடைய ஏமாற்று வேலையாக இருக்கலாம். நீங்கள் வீட்டுக்குப்போங்கள்" என்றாள். “நாங்கள் ஒரு குப்பியில் மந்திரிக்கப்பட்ட தீர்த்தம் கொண்டு போவோம். அந்த அம்மா தோன்றினவுடன் பெர்னதெத் அவர் மீது தீர்த்தம் தெளிப்பாள். பேயாக இருந்தால் உடனே ஓடி விடுவார் அந்த அம்மா" என்று சாதுரியமாகச் சொன்னாள் மேரி ஹில்லோ என்ற சிறுமி, எல்லோரும் 'கொல்'லென்று சிரித்தனர். “சரி. சரி. உங்கள் தொல்லையை என்னால் தாங்க முடியாது. சீக்கிரம் புறப்படுங்கள்" என்று கூறி பெர்னதெத்தை அவர்களுடன் அனுப்பி வைத்தாள் லூயிசா. மசாபியேல் குகைக்கு வந்ததும், “நாம் செபமாலை செபிப்போம்" என்றாள் பெர்னதெத் அனைவரும் செபமாலை செபிக்கத் தொடங்கினர். பெர்னதெத் குகையையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள். சில நொடிகளுக்குள் பெர்னதெத்தின் முகம் தெய்வீகக் களையோடு பிரகாசித்தது. அந்த அம்மா குகையினுள் நிற்பதாக எண்ணி, ஒரு பிள்ளை தீர்த்தம் உள்ள குப்பியை பெர்னதெத் கையில் கொடுத்து, "தெளி, தெளி” என்றாள். “சாத்தானிடமிருந்து வந்தால் ஓடி விடுங்கள். கடவுளிடமிருந்து வந்தால் அருகில் வாருங்கள்" என்று கூறி பெர்னதெத் தீர்த்தத்தை ஓங்கித் தெளித்தாள். "அம்மா கோபமாக இல்லை. நம்மைப் பார்த்துப் புன்னகை செய்கின்றார். நான் கேட்டுக் கொண்டபடி முன்னால் வந்து நிற்கின்றார்" என்றாள் பெர்னதெத் தோழிகள் பெர்னதெத்தின் முகம் களை கட்டி பிரகாசமாக இருந்ததைப் பார்த்து வியந்து கொண்டிருந்தனர். பொனதெத் பரவசத்தில் ஆழ்ந்து செபமாலை செபித்துக் கொண்டிருந்தாள். அசையாத கல் சிலை போல் தோன்றினாள். பெர்னதெத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தங்கை மேரி அந்துவானத், பெர்னதெத் செத்துப் போய் விடுவாளோ எனப் பயந்தாள். மற்றப் பிள்ளைகள் பயத்தினால் மலைப் பக்கம் அங்கும் இங்கும் ஓடி யாராவது உதவிக்கு வருவார்களா எனத் தேடினர். அவர்களுடைய சத்தத்தைக் கேட்டு இருபத்தைந்து வயதுடைய ஒரு இளைஞன் ஓடி வந்தான். அவன் அருகில் இருந்த மில் தொழிற்சாலையில் வேலை செய்பவன். அவன் பெர்னதெத்தை இரு கரங்களாலும் தூக்கி வேறு இடத்திற்குக் கொண்டு வந்தான். ஆனால் பெர்னதெத் அசையாமல் கண்களை மூடி காட்சி கண்ட நிலையிலேயே இருந்தாள். இப்படி யாரையும் இதுவரை நான் பார்த்ததில்லையே என்று வியப்படைந்தான் அந்த வாலிபன். நிக்கோலா என்ற அந்த வாலிபனின் வீட்டில், அவனும் அவன் அம்மாவும் பெர்னதெத்தை ஒரு நாற்காலியில் அமர்த்தினர். சிறிது நேரம் சென்ற பின் பெர்ளதெத் சுய நினைவுக்கு வந்தாள். “அந்த அம்மா யார்?” - நீக்கோலா கேட்டான். "யார் என்று அவர்கள் சொல்லவில்லை" பெர்னதெத்தின் பதில். ”அந்த அம்மா என்னதான் சொன்னார்கள்?" - நிக்கோலாவின் தாய் கேட்டாள். தொடர்ந்து இனைந்திருங்கள்..... ஆமென் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பைபிள் வசனங்கள் #✝️இயேசு #✝️இயேசுவே ஜீவன்
⛪ வேளாங்கண்ணி சர்ச் - M M - ShareChat