மண்டல பூஜையின் போது உடனடி முன்பதிவு எண்ணிக்கை இரண்டாயிரமாக குறைக்கப்பட்டுள்ளது.
சபரிமலை ஐயப்பன் கோயில் மண்டல பூஜை வருகிற 27ஆம் தேதி நடைபெறுகிறது.
இதையொட்டி டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் தலா 5,000 பக்தர்கள் உடனடி பதிவு மூலம் அனுமதிக்கப்படுவர் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அசம்பாவிதத்தை தவிர்க்கும் பொருட்டு உடனடி பதிவு எண்ணிக்கையை தேவசம் போர்டு குறைத்துள்ளது.
இதன்படி இரு நாட்களிலும் தலா 2,000 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.
அதேநேரத்தில் ஆன்லைன் மூலம் டிசம்பர் 26 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 27 ஆம் தேதி 35 ஆயிரம் பேரும் அனுமதிக்கப்படுகின்றனர். #ஆன்மிக தகவல்கள் & சிறப்பு பூஜைகள்🕉️ #🕉️லிங்கா ஸ்ரீ ஆன்மிக தகவல்கள்🕉️ #ருத்ர ஆன்மிக தகவல்கள் #கோவில் ஆன்மிக சிந்தனைகள் #🙏🪔பிரதோசம் 🙏🪔ஓம் நந்தீஸ்வரர் போற்றி🪔🐂🙏🙏🪔🔱ஓம் நமசிவாய🔱🪔🙏


