🔱🙏🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🙏🔱
🌼செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர்
சேரும்அடி யார்மேல்
பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத்து
என்றும்பணி வாரை
மெய்யநின்றபெரு மான்உறையும்இடம்
என்பர்அருள் பேணிப்
பொய்யிலாதமனத் தார்பிரியாதுபொ
ருந்தும்புக லூரே.🌼
🪷🪷🪷பொருள் : -🪷🪷🪷
🌸தனது சிவந்த திருமேனியில் வெண்மை தோன்றுமாறு திருநீற்றைப் பூசுவர்; தன்னை வணங்கும் அடியாரிடம் மெள்ள மெள்ளச் சேர்ந்து நின்ற தீவினையைச் சிதறி வெளியேறுமாறு செய்வர்; தன்னைப் பணிந்து போற்றிப், பாடல்களால் துதி செய்யும் அடியார்பால் மெய்யாய் நின்றருளும் அப்பெருமான் உறையும் இடம், வாக்காலும் மனத்தாலும் பொய்மை கொள்ளாத மனத்தினர் பொருந்தி வாழும் புகலூர் ஆகும்.🌸
🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼பக்தி மோஷன் வீடியோ

