ஏதோ ஒன்றை பாரயாணம் செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள், Say பாசுரம் அல்லது விஷ்னு சகஸ்ரநாமம், அபிராமி அந்தாதி Anything. நம் த்வைத மனம் ஆரம்பத்தில் என்ன செய்யும் ஒரு வரி வாய் சொல்லும் பொழுது மனம் அடுத்த வரியை தயார் செய்து வைக்கும் அது மாடிப்படிகளில் முன்னும் பின்னும் ஏறி இறங்குவது போல் ஒரே இடத்தில் முன்னும் பின்னும் நகர்ந்து கொண்டிருக்கும். இந்த நகர்தலில் எங்காவது சின்க் விட்டுப் போய்விட்டது என்றால் நாம் திக்கி விடுகிறோம். பின் தொடர்வோம். அதே சமயம் அத்வைத மனமானது நாம் சொல்லும் வரிகளில் மட்டும் ஏறி அமர்ந்து கொண்டால் அது மாடிப்படிகளின் கைப்பிடியில் ஏறி அமர்ந்திருப்பதைப் போல நம்மை வழுக்கி எடுத்துக்கொண்டு அந்தவரிகளூடே பிரயாணம் செய்யும். இங்கு தப்பவோ திக்கவோ செய்யாது. அந்தந்த ஸ்லோகக்ங்களுக்கு உண்டான கட்டமைப்பு படி இந்த பிரயாணம் நம் சூட்சும ஆதார புள்ளிகளை தொட்டு தடவி உயிர்ப்பிக்கும். இதுவே நாம் இது போன்ற பாரயணங்களுக்குப் பிறகு கிடைக்கும் புத்துணர்ச்சியின் காரணம் என்பது என் எண்ணம். இப்போது இத்தகைய நீளமான பாரயண ஸ்லோகங்களை விட்டு விட்டு நாம ஜபத்திற்கு வருவோம். மனம் ஒரு சில வாக்கியங்களே உள்ள அந்த தொடர்களில் மிகவும் எளிதாக ஏறி அமர்ந்து கொள்ளும். அப்போதும் நாம் ஒரே இடத்தில் இருப்பத்கில்லை..அந்த ஜபத்தின் வழி இந்த பிரக்ரிதிக்குள் பயணித்து கொண்டிருக்கிறோம். அதே மாற்றங்கள் நடக்கிறது இந்த மாற்றங்களை நம்முள் கொண்டு வருவதற்கான வழியில் தள்ளி விடுவதே ஒரு குருவின் வேலை. அதை ஒரு ஸ்துலம் அல்லது சூட்சும தொடுகை மூலம் அவர் நடத்திக்காட்டுகிறார். அந்த இடத்திற்கு நகர்ந்த பின் அதை தக்க வைத்துக்கொள்வதில் நம் ஊழ் வினைக்கு மிக முக்கிய பங்கு இருக்கிறது. நம் ஊழ் மிகச்சரியாக. இருந்தால் இங்கு தடுமாறும் போதும் குரு வந்து உதவுவார். மனித உருவில் வாழ்ந்த இது போன்ற புண்ணிய ஆத்மாக்களின் சூட்சும உருவம் ஆரஞ்சு வர்ண்த்தில் அவர்களின் ஸ்துலத்தை ஒத்தே இருப்பதுண்டாம். ஆரஞ்சு வர்ணங்களை நாம் தியானத்தில் கண்டால் அதை குருவின் ஆசீர்வாதம் அருகாமை என்றும் எடுத்துக்கொள்ளலாம்.
மொத்தத்தில் இதற்கு முன் ஒரு Preparatory Course தேவைப்படுவது மறுக்க முடியாத உண்மை. அது தான் கோவில்கள் ஆஸ்ரமம் மற்றும் ஞானியர் சத் சங்கங்கள்.
#🤔தெரிந்து கொள்வோம்


