ShareChat
click to see wallet page
search
#⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 #✝பைபிள் வசனங்கள் #⛪ வேளாங்கண்ணி சர்ச் #✝பிரார்த்தனை #✝️கிறிஸ்துவ ஸ்டேட்டஸ் காலை ஜெபம்* "இறைவனின் மைந்தரே! மாட்சியையும் வலிமையையும் ஆண்டவருக்கு உரித்தாக்குங்கள். ஆண்டவரின் பெயருக்கேற்ற மாட்சியை அவருக்கு உரித்தாக்குங்கள்; தூய மாட்சி இலங்கும் ஆண்டவரை வழிபடுங்கள். ஆண்டவரின் குரல் கடல்மேல் ஒலிக்கின்றது; ஆண்டவர் நீர்த்திரள்களின்மேல் வீற்றிருக்கின்றார். ஆண்டவர் குரல் வலிமைமிக்கது; ஆண்டவரின் குரல் மாட்சிமிக்கது. மாட்சிமிகு இறைவன் முழங்குகின்றார்; அவரது கோவிலில் உள்ள அனைவரும் ‘இறைவனுக்கு மாட்சி’ என்று ஆர்ப்பரிக்கின்றனர். ஆண்டவர் வெள்ளப் பெருக்கின்மீது வீற்றிருக்கின்றார்; ஆண்டவர் என்றென்றும் அரசராக வீற்றிருக்கின்றார். (திருப்பாடல்கள் 29: 1a,2. 3ac-4. 3b,9b,10) என்றென்றும் வாழும் எல்லாம்வல்ல எம் இறைவா! என்றென்றும் அரசராக வீற்றிருக்கும் எம் தந்தையே! படைப்பு அனைத்தும் ஒன்று சேர பணிந்து நடக்கும் எம் ஆண்டவரே! உம்மைப் போற்றுகின்றோம். உம்மைப் புகழ்கின்றோம். உம்மை வாழ்த்துகின்றோம். இறைவா! மண்ணுலகில் மனிதர்களிடையே பெருகி வரும் தீமைகளுக்காகவும், அவர்களின் இதய சிந்தனை, நாள் முழுதும் தீமைகளை உருவாக்குவதற்காகவும், உம்மிடம் நாங்கள் மனம்வருந்தி மன்னிப்புக் கேட்கிறோம். மன்னிக்கும் தேவனே! மனமிரங்கி மன்னித்தருளும். *"தீமை உங்களை வெல்ல விடாதீர்கள். நன்மையால் தீமையை வெல்லுங்கள்"* என்ற உமது இறைவார்த்தையை, நாங்கள் என்றும் நினைவில் கொள்ளவும், உலகப் போக்கிலான வாழ்வினை விட்டுவிட்டு, நோவாவைப் போல நேர்மையின் வழிநடந்திடவும், மாசில்லா மைந்தனே உம்மை நோக்கி மன்றாடுகின்றோம். இறைவா! என்னைக் குறித்த உமது திருவுளத்தை நான் அறிந்துகொள்ள, தேவையான சிறந்த ஞானத்தினை தூய ஆவியானவர் வழியாக எனக்குத் தந்தருளும். இந்த நாளில், நான் பயனுள்ள வகையில் உமது இறைவார்த்தைகளைப் பற்றி சிந்திக்கவும், உமது பேரன்பை பிறருக்கு பகிர்ந்தளிக்கும் அன்பின் கருவியாக என்னை மாற்றிடவும், இறைவா உம்மை நோக்கி மன்றாடுகின்றேன். *ஆமென்.* விண்ணுலகில் இருக்கிற ... (1) அருள் நிறைந்த... (3) பிதாவுக்கும், சுதனுக்கும்..(1) *ஆமென்.*
⛪கிறிஸ்துவ பிரசங்கம்📕 - ShareChat