#🍀🍀 தெய்வ தரிசனம் 🍀🍀பக்தி பாடல்& படங்கள்🔷🔶கடவுள்🔶🔷ஆன்மீக தகவல்கள் 🍃🍃 #திருத்தல பரிகாரம், ஆலய வழிபாடு மற்றும்ஆன்மீக சிந்தனைகள்...🕉️🙏🔥 #🔱🕉️சமயபுரம் மாரியம்மன் #🔱🕉️அம்மன் ஓம் சக்தி 🔱#📷 பக்தி படம் 🔱🕉️#🔱🕉️அம்மன் பக்தி ஸ்டேட்டஸ் #🖌பக்தி ஓவியம்🎨🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 மாத இரண்டாம்_செவ்வாய்கிழமையான இன்று தமிழகத்தின் தலைநகரான சென்னை மாநகரில் உள்ள புகழ்பெற்ற சக்தி தலங்களில் ஒன்றானதும், அஷ்டதிக்குகளில் உள்ள காளிகளில் மூத்தவளான,
சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட
திருமயிலை (#மயிலாப்புரி)
என்னும்
மயிலாப்பூரின் வடகிழக்கு
காவல் தெய்வமும் கிராம தேவதையான
கோலவிழிஅம்மன் ( பத்ரகாளிஅம்மன்) திருக்கோயில் வரலாற்றையும் புகைப்படங்களையும் காணலாம் வாருங்கள்
சென்னை மாநகரின் மயிலாப்பூர் பகுதியில் வீற்றிருப்பவள்தான் கோலவிழி அம்மன். அருள்நிறைந்த அழகிய விழியால் ஆட்சி செய்யும் இந்த அன்னை மயிலாப்பூரின் கிராமதேவதை என போற்றப்படுகிறாள்.
மயிலாப்பூர் கோலவிழி அம்மன் கோவில், கபாலீஸ்வரர் ஆலயத்திற்கு இணையான தொன்மைச் சிறப்பு வாய்ந்தது. பார்வதிதேவி மயில் உருவம் எடுத்து மயிலாப்பூர் தலத்தில் தவம் இருந்தபோது அவளை அசுரர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக சிவபெருமானால் அனுப்பி வைக்கப்பட்ட பத்ரகாளி இவள் என்பது குறிப்பிடத்தக்கது.
அஷ்ட திக்கிலும் அமர்ந்து இருக்கும் எட்டு காளிகளில் இவளே மூத்தவள் எனப்படுகிறாள். இந்தக் கோயிலில் கோலவிழி அம்மன் இரண்டு திருவுருவங்களில் காட்சி தருகிறாள். கருவறையில் முன்பாக உள்ள சிறிய விக்கிரகம் ஆதிசங்கரரால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து வழிபட்டதாகவும், அதற்குப் பின்புறம் உள்ள பெரிய விக்கிரகம் சித்தர்களால் பத்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பிரதிஷ்டை செய்து வழிபடப்பட்டது என்றும் தலவரலாறு கூறுகின்றது
சுமார் 900 ஆண்டுகளுக்கு முந்தைய கோயில் என்பதற்கு சான்றுகள் உள்ளன. அதேபோல், விக்கிரமாதித்தன் காலத்துக் கோயில் என்றும் சொல்லுவார்கள்.
தட்சனின் யாகத்தை அழிப்பதற்காக சிவபெருமானால் உண்டாக்கப்பட்டவர் வீரபத்திரர் என்கிறது புராணம். மேலும் ஆயிரம் வருடங்களையெல்லாம் தொன்மை மிக்க விக்கிரகம் இந்த அம்மன் என்றும் ஸ்ரீஆதிசங்கரர் பிரதிஷ்டை செய்த விக்கிரகம் இந்த அம்மன் என்றும் கோலவிழியம்மனை சிலாகிக்கிறார்கள் அம்மன் பக்தர்கள்.
பொதுவாக சப்த கன்னியர் வழிபாடு என்பது சோழர்கள் காலத்தில் உருவானது என்றும் சோழர்கள் அமைத்த பல ஆலயங்களில், சப்தமாதர்களுக்கும் சந்நிதி அமைக்கப்பட்டது என்றும் சொல்கிறது வரலாறு. கோலவிழியம்மன் ஆலயத்தில் சப்தமாதர்களுக்கும் சந்நிதி அமைந்திருப்பதை தரிசிக்கலாம். எனவே இது சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட ஆலயம் என்று போற்றுகின்றனர்.
*ஆலய அமைப்பு:
வடக்கு திசை நோக்கி எளிய நுழைவு வாசலுடன் ஆலயம் அமைந்துள்ளது. அமர்ந்த கோலத்தில் வீற்றிருக்கும் அன்னையே, கோல விழி அம்மனாக விளங்கு கிறாள். இடது காலடியில் அசுர னின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகிறாள். வலது கரங்களில், சூலம், வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜூவாலை களில் பதி னைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திரு முடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலது புறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும். எனவே இந்த ஆல யத்தை பத்ரகாளி அம்மன் ஆலயம் என்றும் சொல்வார்கள்.
*கோலவிழி அம்மன்:
அமர்ந்த கோல அன்னையே கோல விழி அம்மனாக விளங்குகின்றாள். இடது காலடியில் அசுரனின் தலையை அழுத்தி, வலது காலை மடக்கிய கோலத்தில் காட்சி தருகின்றாள். தமது வலது கரங்களில் வாள், உடுக்கை, வேதாளம் ஏந்தியும், இடது கரங்களில் கேடயம், அங்குசம், மணி, கபாலம் ஏந்தியும் எண்கரங்களில், அன்னை காட்சி தருகின்றாள். சிரசில் உள்ள தீ ஜுவாலைகளில் பதினைந்து இதழ்கள், அதன் நடுவே சீறும் நாகம், திருமுடியின் இடதுபுறம் சந்திரன், கங்கை, வலதுபுறம் நாகம், காதணி அணிந்து, சிவசக்தி சொரூபமாக அன்னை காட்சி தருகின்றாள். இவளது இயற்பெயர் பத்ரகாளி என்பதாகும்.
‘பத்ர’ என்பதற்கு மங்களம் என்றொரு பொருள் உண்டு. தன்னை நாடி வருவோருக்கு மங்களங்களை அள்ளித் தருபவளாகத் திகழ்வதால், இத்தல அம்மன் பத்ரகாளியாகவும் விளங்குகின்றாள். அன்னையின் சிறப்பே அவளின் கோல விழிகள்தான். வைத்த கண் வாங்காமல் பார்க்கத் தூண்டும் கருணை அருளும் நாயகி, கோலவிழி அம்மன் என் றால் அது மிகையல்ல.
மயிலை குருஜி இந்த ஆலயத்தை புனரமைப்பதில் பெரும்பங்கு வகித்தவர். அவர் விநாயகரை வேறு இடத்தில் மாற்றி யமைக்க செய்த முயற்சிகள் மட்டும் பயனளிக்க வில்லையாம். இறைவிக்கு முன் கல்லால் ஆன சிறிய தேவி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். அபிஷேகங்கள் எல்லாம் இந்த தேவிக்கே நடைபெறுகின்றன.
ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலான ஆலயம் என்பதை கோலவிழி அம்மனின் உற்சவ திருவுருவை ஆய்வு செய்தபோது கண்டறிந்தி ருக்கிறார்கள். கபாலீஸ்வரர் ஆலயத்தில் எந்த ஒரு விழா வானாலும் இங்கு வந்து அன்னையிடம் உத்தரவு பெற்றே நடத்துகின்றனர். ஐப்பசி மாதம் 14&ம் நாள் முதல் தை மாதம் முடிய மூன்று மாத காலங்கள் கதிர வன் தன் கிரணங்களால் அம்பிகையை வழிபடும் விதமாக கருவறை அமைப்பு உள்ளது. நாக தோசத்தால் பாதிக்கப் பட்டவர்கள், ராகு தசை நடப்பவர்களுக்கு இது பரிகாரத்தலமாக உள்ளது.
கோல விழியம்மன் மயிலையில் எல்லை காளியாக இருப்பவள். எனவே மயிலாப்பூரில் உள்ள எந்த ஆலயத்தில் விழா நடந்தாலும் கோல விழியம் மனுக்குத்தான் முதல் மரியாதை கொடுக்கப்படும். மயிலை கபாலீஸ்வரர் ஆலயத்தில் 63 நாயன்மார் விழா நடக்கும்போது அனைவருக்கும் முன்னதாக முதலில் செல்வது கிராம தேவதையான கோல விழியம்மன்தான்.
பத்ரகாளியாக இந்த கோலவிழியம்மன் முதலில் மிக, மிக உக்கிரமாக இருந்தாள். குறிப்பாக அவளது கண்பார்வையில் அதிக உக்கிரம் இருந்தது. ஆதிசங்கரர்தான் இந்த அம்மனின் உக் கிரத்தை தணித்தார். சக்கரம் ஸ்தாம்பிதம் செய்து அவர் கோல விழியம்மனை சாந்த சொரூபினியாக மாற்றினார். அகோரிகள் இந்த தலத்தில் 600 ஆண்டுகளுக்கு முன்பு தவம் இருந்து பூஜைகள் செய்து கோல விழியம்மனை வழிபட்டுள்ளனர். இந்த அம்மனை வழிபட்டால் எவ்வளவு கொடூரமான ராகு தோஷமும் உடனே விலகி விடும்.
இந்தக் கோயிலில் இன்னொரு சிறப்பு... இங்கே இரண்டு மூலவர்கள். கோலவிழியம்மனும் மூலவராக இருக்கிறார்; பத்ரகாளியம்மனும் மூலவராகக் கோயில் கொண்டிருக்கிறார்.
ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. ஆடி மாத செவ்வாய்க்கிழமையில் அம்மனுக்கு செந்நிற மலர்கள் சார்த்தி வேண்டிக்கொண்டால், எலுமிச்சை மாலை சார்த்தி பிரார்த்திக்கொண்டால், குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் யாவும் நீங்கும்; கடன் முதலான பிரச்சினைகள் அகலும் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.
இங்கே ஆலயத்துக்கு வந்து அவளின் கண்பார்வையில், அவளின் கோலவிழிகளுக்கு எதிரே நின்று மனதார வேண்டிக்கொண்டால் போதும், தோஷங்கள் அனைத்தும் விலகும்; சந்தோஷங்கள் பெருகும் என்பது ஐதீகம்.
கடலுக்குக் காவலாக அமர்ந்து இருக்கும் இந்த கோலவிழி அன்னையே மயிலாப்பூரை பாதுகாத்து வருகிறாள். இந்த அன்னை சுனாமி போன்ற கடல் சீற்றங்களை அடக்க வல்லவள் என்பது நம்பிக்கை.
மயானத்தை எதிர்நோக்கியபடி வடக்கு நோக்கி அமர்ந்து இருக்கும் இந்த காளி கருணையே உருவானவள் என்றாலும், தனது பக்தர்களுக்கு வரும் எந்த இடையூறையும் எதிர்த்து நின்று காப்பவள்.
வேப்ப மரமும் அரச மரமும் பின்னிப்பிணைந்து இங்கு தலவிருட்சமாக காட்சி தருகிறது. இங்கு தொட்டில் கட்டி வணங்குவதும், மஞ்சள் கிழங்கு கட்டி கும்பிடுவதும் பெண்கள் வழக்கம்.
மிகத் தொன்மையான காலத்தில் இருந்தே சித்தர்கள், யோகிகள், தொண்டைமண்டல அரசர்களின் வழிபாட்டுக்கு உரியவளான இந்த தேவி அனைத்து தோஷங்களையும் நீக்க வல்லவள்.
காளஹஸ்தி போக முடியாதவர்கள் இந்த அன்னையின் ஆலயத்துக்கு வந்து வழிபட்டால் ராகு, கேது தோஷங்களை நீக்கி விடுவாள். திருமணத் தடை, புத்திர தோஷம் போன்றவற்றையும் போக்கி அருள்புரியக்கூடியவள் கோலவிழி அம்மன்.
விழாக்கள் :
சித்திராப் பவுர்ணமியில் பூச்சொரிதல் விழா, ஆடிப்பூர விழா, தீச்சட்டி ஏந்தும் விழா, புரட்டாசியில் நவராத்திரி விழா மற்றும் 10-ம் நாள் சூரனை வதம் செய்யும் விழா, மாசியில் மூன்றாம் ஞாயிறன்று பால் குடப்பெருவிழா ஆகியவை இந்த ஆலயத்தில் நடைபெறும் குறிப்பிடத்தக்க விழாக்கள் ஆகும்.
இந்து சமய அறநிலையத்துறையினரால் நிர்வகிக்கப்பட்டு வரும் இந்தக் கோவில் தினமும் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்:
சென்னை கடற்கரைச் சாலையில் கலங்கரை விளக்கம் மற்றும் ஆல் இண்டியா ரேடியோவில் இருந்து தென்மேற்கே அரை கிலோமீட்டர் தொலைவில் இவ்வாலயம் அமைந்துள்ளது. அதேபோல, கபாலீசுவரர் திருக்கோவிலுக்கு வட கிழக்கே சுமார் அரை கிலோமீட்டர் தூரம் சென்றால் கோலவிழி அம்மன் ஆலயத்தை அடையலாம்.
ஓம் சக்தி
சிவ சிவ
🙏🪷🙏


