🌹மகா சிவராத்திரி 2026 பஞ்சபூத தலங்கள் தவிர தமிழகத்தில் செல்ல வேண்டிய டாப் 10 சக்தி வாய்ந்த சிவாலயங்கள்_*
* 🛕🛕🛕மகா சிவராத்திரி அன்று இரவு முழுவதும் கண் விழித்து, சிவ பூஜை, சிவ அபிஷேகங்களை தரிசிப்பதால் பாவங்கள் நீங்கி, புண்ணியம் கிடைக்கும். இரவு முழுவதும் நடைபெறும் நான்கு கால பூஜைகளை தரிசிக்க அனைத்து சிவன் கோவில்களிலும் பக்தர்கள் கூடுவது வழக்கம். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரவு முழுவது ஒவ்வொரு சிவன் கோவிலான சென்று வழிபாடு செய்யும் வழக்கம் உள்ளது.
> இந்த ஆண்டு மகா சிவராத்திரி பிப்ரவரி 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அன்றைய தினம் தமிழகத்தில் சென்று வழிபட வேண்டிய மிகவும் சக்தி வாய்ந்த சிவன் கோவில்களில் மிக முக்கியமான, பிரபலமான ஆலயங்கள் சிலவற்றை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
*மகா சிவராத்திரி வழிபாடு :*
> மகா சிவராத்திரி என்பது சிவ பெருமானை வழிபடுவதற்குரிய நாள் மட்டுமல்ல. இது பிரபஞ்ச ஆற்றல் அதிகரித்து காணப்படும் ஒரு சக்தி வாய்ந்த நாளாகும். இந்த நாளில் உலகம் முழுவதிலும் உள்ள சிவ பக்தர்கள் விரதம் இருந்து, இரவு முழுவதும் கண் விழித்து, சிவ வழிபாடு செய்வது வழக்கம். மகா சிவராத்திரி என்பது சிவபெருமானுக்கும், பார்வதி தேவிக்கும் திருமணம் நடைபெற்ற நாளாக கருதப்படுகிறது. அதே போல் சிவபெருமான் தன்னுடைய ஆனந்த தாண்டவத்தை நிகழ்த்தி காட்டிய இரவாகவும் கருதப்படுகிறது. சிவனின் ஆற்றல் அதிகரித்து காணப்படும் இந்த நாளில் சிவபெருமானின் அருளை பெற மகாசிவராத்திரி அன்று தமிழகத்தில் உள்ள சில முக்கியமான, பழமையான கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்வது சிறப்பானதாகும்.
*சிறப்புமிக்க சிவ தலங்கள் :*
வழக்கமாக தமிழகத்தில் சிவ தலங்களில் என்றால் பஞ்சபூத தலங்களான காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் கோவில், திருவானைகாவல் ஜம்புலிங்கேஸ்வரர் கோவில், திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில், காளஹஸ்தி காளாத்தீஸ்வரர் கோவில் ஆகியனை தான் நம்முடைய நினைவிற்கு வரும். ஆனால் இந்த பஞ்ச பூத தலங்களை தவிர சிறப்பு மிக்க, புகழ்பெற்ற, பல மடங்கு புண்ணியம் தரும் சிவ தலங்கள் உள்ளன. அவர்களில் முக்கியமான 10 கோவில்களை இங்கு தெரிந்து கொள்ளலாம்.
*மகா சிவராத்திரியன்று செல்ல வேண்டிய 10 சிவன் கோவில்கள் :*
1. தஞ்சை பிரகதீஸ்வரர் கோவில், தஞ்சாவூர் - பெரிய கோவில், பெரிய லிங்கம், பெரிய நந்தி என அனைத்து பெரிய என சிறப்பித்து கூறப்படும் தலம். மிக பழமையான, பல அற்புதங்கள், ஆச்சரியங்கள் நிறைந்த சிவ தலம் இது. மிகப் பெரிய சிவ தலமாகவும், பாரம்பரிய சின்னமாகவும், பழமையான சிவாலயமாகவும் விளங்கும் தலம். ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த பெருவுடையாரை தரிசனம் செய்வதே மிகப் பெரிய பாக்கியம் ஆகும்.
2. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், மதுரை - பாடல் பெற்ற சிவ தலங்களில் ஒன்றாவும், சக்தி பீடங்களில் ஒன்றாகவும், மிகப் பெரிய அம்மன் கோவிலாகவும் விளங்கும் ஒரே தலம் மதுரை. சிவ பெருமான் தன்னுடைய 64 திருவிளையாடல்களையும் நிகழ்த்திக் காட்டிய தலம். சிவ பெருமான் ஆண்டவனாக மட்டுமின்றி அரசனாகவும் ஆட்சி புரியக் கூடிய தலம். சொக்கநாதர், சுந்தரேஸ்வரர் என பல பெயர்கள் கொண்ட இத்தல சிவனை பற்றியும், இக்கோவில் பற்றியும் சொல்லிக் கொண்டே போகலாம்.
*உலகின் முதல் சிவன் கோவில் :*
3. திருஉத்திரகோசமங்கை திருக்கோவில், ராமநாதபுரம் - உலகின் முதல் சிவன் கோவில் என போற்றப்படும் பெருமைக்குரிய தலமாகும். மிகப் பெரிய மரகத நடராஜர் அமைந்துள்ள ஒரே தலம். சகஸ்ரலிங்கம் உருவாக காரணமான தலமாகவும், சிவ பெருமான் நிரந்தரமாக வீற்றிருந்து அருள்புரியும் தலமாக கருதப்படும் கோவில் இது. வாழ்நாளில் ஒரு முறையாவது சென்று தரிசிக்க வேண்டிய சிவ தலங்களில் இதுவும் ஒன்றாகும்.
4. கபாலீஸ்வர் கோவில், சென்னை - சென்னையில் உள்ள சப்தசிவ தலங்களில் இதுவும் ஒன்று. அம்பிகை, மயில் உருவில் வந்து ஈசனை வழிபட்டு, வரம் பெற்ற தலம். முருகப் பெருமானை சிவனை வழிபட்டு சக்திவேல் பெற்ற தலம். பிரம்ம தேவரே தன்னுடைய பாவங்கள் நீங்க வழிபட்ட தலம் என ஏராளமான சிறப்புகளைக் கொண்ட சென்னை மியலாப்பூரில் அமைந்துள்ள கபாலீஸ்வரர் கோவில்.
*அனைத்து தோஷ பரிகார தலம் :*
5. சங்கமேஸ்வரர் கோவில், பவானி, ஈரோடு - அனைத்து விதமான தோஷங்கள், பாவங்கள் ஆகியவை நீங்குவதற்கான பரிகார தலமாக விளங்கும் கோவில் இது. விஸ்வாமித்ரரால் காயத்ரி மந்திரம் சொல்லி பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கத்தை இங்கு தரிசனம் செய்யலாம். தென்னிந்தியாவின் திரிவேணி சங்கமம் என்று அழைக்கப்படும் புண்ணிய தலம் இது.
6. அர்த்தநாரீஸ்வர் கோவில், திருச்செங்கோடு - ஈசன், தன்னுடைய உடலில் பாதியை அம்பிகைக்கு அளித்து சிவன் பாதி, சக்தி பாதியாக காட்சி தரும் தலம். மலைமீது சுயம்பு உருவமாக ஈசனும், அம்பிகையும் உறைந்திருக்கும் தலம். உலகிலேயே உமையொரு பாகனாக ஈசன் காட்சி தரும் சிறப்பு மிக்க தலம். மலையே லிங்கமாக காட்சி தரும் தலம். இங்கு பெருமாளும் அருள்புரிவதால் இந்த மலையை கிரிவலம் வந்தால் கைலாயத்தையும், வைகுண்டத்தையும் வலம் வந்து வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.
*யம பயம் போக்கும் சிவ தலம்*
7. திருவாரூர் தியாகராஜர் கோவில் - கடவுள்கள் அனைவருக்கும் மகாராஜா என ஈசன் போற்றப்படும் தலம். ஆசியாவின் மிகப் பெரிய தேர் அமைந்துள்ள கோவில். சைவ மரபில் பெரிய கோவில் என போற்றப்படும் ஒரே கோவில். திருவாரூரில் பிறந்தே முக்தி என்பார்கள். இங்குள்ள நடராஜரின் திருமுகத்தையும், கரங்களையும் மட்டுமே தரிசிக்க முடியும். வருடத்திற்கு ஒருமுறை மட்டுமே பாதத்தை தரிசிக்க முடியும்.
8. அமிர்தகடேஸ்வரர் கோவில், திருக்கடையூர் - மார்கண்டேயருக்காக எமனையே ஈசன் வதம் செய்த தலம். தன்னுடைய பக்தனுக்காக அமாவாசை திதியில் அம்பிகை முழு நிலவு காட்டிய தலம். எம பயம் போக்கி, தீர்க்க ஆயுள் அருளக் கூடிய தலம். சொல்லிக் கொண்டே செல்லும் அளவிற்கு அளவில்லாத சிறப்புக்களை கொண்ட அற்புத தலம்.
*பாவம் போக்கும் புண்ணிய தலம் :*
9. ராமநாத சுவாமி கோவில், ராமேஸ்வரம் - இந்தியாவில் உள்ள முக்தி தலங்களில் ஒன்றாகவும், ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாகவும் விளங்கும் தலம். ஸ்ரீராமபிரானே தன்னுடைய பாவம் நீங்க வழிபட்ட தலம். அக்னி தேவர் உள்ளிட்ட பலரும் வழிபட்டு, பாவம் மற்றும் சாப நிவர்த்தி பெற்ற தலம். இங்குள்ள 22 தீர்த்தங்களில் நீராடி சிவனை வழிபட்டால் பித்ருதோஷம் உள்ளிட்ட அனைத்து தோஷங்களும் நீங்கும்.
10. நெல்லையப்பர் கோவில், திருநெல்வேலி - தமிழகத்தில் உள்ள மிக பழமையான சிவ தலங்களில் இதுவும் ஒன்று. மரண பயத்தை போக்கி, தன்னுடைய பக்தர்களுக்கு காவலமாக இருந்து அருளக் கூடியவர் இத்தல ஈசன். ஈசன் நெல்லையப்பராகவும், அம்பிகை காந்திமதி அம்மனாகவும் அருள்புரியும் அற்புத தலம்.
எம்பெருமான் 💕 திருக்கருணை இருந்தவாறே 🙏
நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏
எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹
சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
01:00

