
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
#_குரு_ராகவேந்திராய #_நமஹ
ஸ்ரீ குரு ராகவேந்திரர் (431ஆவது) அவதார தினம் இன்று ...
"பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாய ச |
பஜதாம் கல்பவ்ருக்ஷாய நமதாம் காமதேனவே ||" #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில் #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹
அண்ணாமலையாரின் அருளுடன் அனைவருக்கும் இனிய காலை வணக்கம் மேலும் siva வாழ்த்துக்கள் 🙏🏿🌹
நினைத்தவுடன் முக்தியைத் தந்திடும் அண்ணாமலையே போற்றி
சிவ ஓம் நமசிவாய 🌹
நிம்மதி வாழ்வினில் நித்தமும் தந்திட சந்நிதி கொண்டாய் போற்றி
ஹர ஓம் நமசிவாய 🌹
அருளே நமசிவாயம் 🌹 அழகே நமசிவாயம் 🙏🏿
இருளே நமசிவாயம் 🌹இனிமை நமசிவாயம் 🌹
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய
நமசிவாய நமசிவாய ஓம் நமசிவாய 🌹
=========-======================================()
திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🌹 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏கோவில்
புண்ணியம் கோடி...
பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியாதவர்கள், இதை செய்யுங்கள். பிரம்ம முகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றிய பலனை நம்மால் பெற முடியும்.
அதிகாலை விடியும் பொழுதில் சுத்தமான காற்று வீசிக் கொண்டிருக்கும் சமயத்தில், இந்த பிரபஞ்சம் நேர்மறை ஆற்றலை பூமிக்கு கொடுத்துக் கொண்டிருக்கும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் நீங்கள் மனதார நினைக்கும் எந்த ஒரு காரியமும் நிச்சயமாக நடந்தே தீரும். இறை ஆற்றல் நிரம்பி வழியும் இந்த பிரம்ம முகூர்த்த நேரத்தில் வீட்டில் தீபம் ஏற்றி இறை வழிபாடு செய்வது நன்மை தரும் என்பது சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு விஷயம்.
ஆனால் நிறைய பேருக்கு இன்றைய சூழ்நிலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து பூஜையறையில் தீபம் ஏற்றுவது என்பது இயலாத காரியமாக இருக்கிறது. சில பேர் சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். பிரம்ம முகூர்த்த நேரத்தில் சுத்தமாக இருக்கும் சமயத்தில் முகம் கை கால்களை அலம்பி விட்டு பூஜையறையில் தீபம் ஏற்றலாம் என்று.
ஆனால் சில பேருக்கு குளிக்காமல் பூஜை அறைக்குள் செல்வது பிடிக்காது. குளிக்காமல் தீபம் ஏற்றும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள மாட்டார்கள். இப்படிப்பட்டவர்களுக்கு வேறு ஏதாவது ஒரு வழி உள்ளதா. பிரம்ம முகூர்த்தத்தில் வீட்டில் தீபம் ஏற்றி வழிபாடு செய்ய முடியவில்லை என்றாலும், பிரம்ம முகூர்த்தத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்த பலனைப் பெற வேறு ஒரு வழி உள்ளது.
பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து உங்கள் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு இனிப்புப் பொருளை எடுத்துக் கொள்ளுங்கள். சர்க்கரை, நாட்டு சர்க்கரை, வெல்லம், இதில் உங்கள் வீட்டில் எது இருந்தாலும் சரி. அதில் சிறிதளவை எடுத்துக் கொண்டு போய் வீட்டு வாசலுக்கு வெளியே, நீங்கள் கோலம் போடும் இடத்தில் ஒரு ஓரமாக போட்டு விடுங்கள்.
பிரம்ம முகூர்த்தத்தில் அன்னதானம் செய்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும். அதாவது அந்த நேரத்தில், ஓரறிவு கொண்ட புழு பூச்சிகள், எறும்புகள், வண்டுகள் தூங்காமல் தனக்கான இரை தேடிக் கொண்டுதான் இருக்கும். அந்த சிறுசிறு பூச்சிகளுக்கு நீங்கள் போடும் இந்த இனிப்பு பொருள் உணவாக அமையும். பிரம்ம முகூர்த்த நேரத்தில் பசியோடு இரை தேடிக் கொண்டிருக்கும் அந்த ஜீவன்கள், நீங்கள் போட்ட உணவை பிரம்ம முகூர்த்தத்தில் சாப்பிட்டு, உங்களை வாழ்த்த, அந்த வாழ்த்து முழுமையாக உங்களை வந்து சேரும். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் கோடான கோடி புண்ணியத்தை நீங்கள் அடையலாம்.
எறும்புகளுக்கு இறை போட்டு விட்டு, வீட்டிற்குள் வந்து பத்து நிமிடங்கள் கண்களை மூடி தியானம் செய்ய வேண்டும். மனதார உங்கள் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு என்ன தேவையோ அதை நேர்மறையாக நினைத்து தியானம் செய்ய வேண்டும். அதன் பின்பு நீங்கள் மீண்டும் உறங்கச் செல்லலாம். குறிப்பாக இந்த வேலைகளை அதிகாலை 3.00 மணியிலிருந்து 5.00 மணிக்குள் செய்து முடித்திருக்க வேண்டும். இந்த இரண்டு மணி நேரத்தில் நீங்கள் செலவழிக்கப் போகும் 15 நிமிடம் உங்கள் வாழ்க்கையில் எதிர்பாராத நல்ல மாற்றங்களை உண்டு பண்ணும்.
இதை செய்வதற்கு 15 நிமிடத்திற்கு மேல் எடுக்காது. வெறும் 48 நாட்களில் உங்கள் வாழ்க்கையில் நடக்கக்கூடிய மாற்றத்தை நீங்களே உணரலாம். நம்பிக்கை உள்ளவர்கள் முயற்சி செய்து பாருங்கள். #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🔱🔱🔱ஓம் நமசிவாய வாழ்க 🔱🔱🔱
🙏இனிய சிவ காலை வணக்கம் 🙏
🔱ஐயன்நொய்யன்அணி யன்பிணிஇல்லவர்
என்றும்தொழுது ஏத்தச்
செய்யன்வெய்யபடை ஏந்தவல்லான்திரு
மாதோடுஉறை கோயில்
வையம்வந்துபணி யப்பிணிதீர்த்து<உயர்
கின்றவலி தாயம்
உய்யும்வண்ணம்நினை மின்நினைந்தால்வினை
தீரும்நலம் ஆமே.🔱
🔱🔱🔱பொருள் : -🔱🔱🔱
🔱பெரியவன், நுண்ணியன், அண்மையில் இருப்பவன், பற்றற்றவர் தொழுது ஏத்திடச் செம்மையுறு சோதி வடிவினன்; யாராலும் வெல்ல முடியாத படையைத் தரித்திருப்பவன். அப்பெருமான் உமாதேவியுடன் விளங்குகின்ற இடம், உலகத்தோர் வணங்கப் பிணி தீர்த்து மேன்மைச் சிறப்பினைப் பெறும் திருவலிதாயம் ஆகும். இத்தலத்தை, ஆன்மா நற்கதி பெறும் விதத்தில் நினைக்க வேண்டும். அவ்வாறு ஒன்றிய சிந்தனையில் ஈடுபட்டால் வினை தீரும். எல்லா நன்மைகளும் உண்டாகும்.🔱
🙏திருச்சிற்றம்பலம் 🙏 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம்
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
༺சித்தம் சிவமயம்༻
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🌹பிறைசூடி துதிபாடி🌹
💫🌹நமச்சிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க இமைப் பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க🌹💫
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌻பாடல்🌻🌹
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
🍁உம்பரவர் செய்தபெருந் தேர தேறி
🍁ஒருகணையால் முப்புரத்தை எரிசெய் தானும்
🍁நம்பியெவர் தொழுதாலும் அருள்செய் வானும்
🍁நள்ளிருளில் இடுகாட்டில் ஆட லானும்
🍁வம்புலவு கொன்றையணி சடையி னானும்
🍁மலைமங்கை பிரியாத வாமத் தானும்
🍁கம்பமத கரிதன்னை உரிசெய் தானும்
🍁கழுக்குன்றின் மேல்விளங்கும் சோதி தானே.
🍁🪷🍁🪷🍁🪷🍁🪷
பொழிப்புரை :
தேவர் செய்த பெரிய தேரில் ஏறி, ஓர் அம்பால் முப்புரங்களை எரித்தவனும் !! விரும்பி யார் வழிபட்டாலும் அருள்பவனும் !! நள்ளிருளில் சுடுகாட்டில் கூத்து ஆடுபவனும் !! வாசனை கமழும் கொன்றைமலரைச் சடையில் அணிந்தவனும் !! உமையைத் திருமேனியில் இடப்பக்கத்தில் உடையவனும் !! அசையும் இயல்புடைய மதயானையின் தோலை உரித்தவனும் !! திருக்கழுக்குன்றத்து மலைமேல் திகழும் ஜோதி !!
🍃🌹🍃🌹🍃🌹🍃🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹
🌹
꧁༺சிவசிவ༻꧂
🌹
🌹🌹
🌹🌹🌹🌹
🌹🌹🌹🌹🌹🌹
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
💫🌹அம்மையே!! அப்பா!! ஒப்பிலா மணியே திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹பிறவா யாக்கைப் பெரியோன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹மாமுது முக்கண் முதல்வன் திருவடிகள் போற்றி!! போற்றி!!🌹💫
💫🌹ஒப்பாரும் மிக்காரும் இல்லா தத்துவனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹விண்ணில் இருப்பவனே மேவியங்கு நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹தன்னுளே இருப்பவனே தராதலம் படைத்தவன் திருவடிகள் வாழ்க🌹💫
💫🌹என்னுளே இருப்பவனே எங்குமாகி நிற்பனே திருவடிகள் வாழ்க🌹💫
🌈⛈️🌴🌈⛈️🌴🌈⛈️
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
திருச்சிற்றம்பலம்
🍀🍁🍀🍁🍀🍁🍀🍁
#🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🙏ஆன்மீகம்
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩
திரு மந்திரம் - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
நமக்கு ஒரு இன்பம் கிடைத்தால், அது நமக்கு மட்டும் வேண்டும் என்று நினைப்போம்.
ஆனால், பெரியவர்கள் அப்படி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பெற்ற இன்பத்தை இந்த உலகமும் பெற்று இன்புற வேண்டும் என்று நினைப்பார்கள்.
தாம் இன்புறுவது உலகு இன்புறுவது கண்டு
காமுறுவர் கற்று அறிந்தார்
தனக்கு கிடைத்த மந்திரத்தை உலகுக்கு எல்லாம் வழங்கி இன்புற்றார் இராமானுஜர்.
யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று இந்தப் பாடலில் கூறுகிறார் திருமூலர்.
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
வான்பற்றி நின்ற மறை பொருள் சொல்லிடின்
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
கொஞ்சம் வரிகளை இடம் மாற்றிப் போட்டால் அர்த்தம் புரியும்.
------------------------------------------------------------------------------
ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
சொல்லிடின்
வான் பற்றி நின்ற மறை பொருள்
தான் பற்றப் பற்றத் தலைப்படும் தானே
யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்
---------------------------------------------------------------------------
நம் உடலுக்குள்ளே ஒரு மந்திரமானது உணர்வு வடிவில் உள்ளது. அதை சொல்லிடின், இந்த அகிலமெல்லாம் நிறைந்த அந்த மறை பொருள் நாம் பற்றிக் கொள்ளும் வகையில் தலைப்படும். அப்படி தனக்கு தலைப்பட்டதால் வந்த இன்பம் இந்த உலகத்திற்கும் கிடைக்க வேண்டும் என்று விழைகிறார் திரு மூலர்.
அது என்ன மந்திரம் ? திருமூலர் சொல்லவில்லை. நம் உடலுக்குள் உணர்வாய் இருக்கும் மந்திரம் சொல்லச் சொல்ல இந்த உலகமெல்லாம் நிறைந்த அந்த மந்திரமும் கை வசப் படும் என்கிறார் திருமூலர்.
இதற்கு மேல் அவர் ஒன்றும் சொல்லவில்லை. உரை எழுதுபவர்கள் தங்களுக்கு தோன்றியதை எழுகிறார்கள்.
மந்திரத்தை என்னவென்று சொல்லி இருக்கலாம்....ஹ்ம்ம்ம்....
#🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
சிவ சிவ
நமசிவாய வாழ்க
இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்
உகந்து அருள் செய்திடும் உத்தம நாதனை
கொழுந்தன்பு செய்து அருள் கூர வல்லார்க்கு
மகிழ்ந்தன்பு செய்யும் அருள் அதுவாமே
(திருமந்திரம் - 280)
#திருமூலர்
கருத்து: சிலர், இறைவனிடம் அன்பு கொள்ளாமல் இறைவனை இகழ்ந்ததையும்; சிலர் இறைவனிடம் #அன்புகொண்டுஇறையருள் பெற்றதையும்; ஈசன் அறிவார்.
அதற்கேற்பவே தெய்வம் தன் அருளை விரும்பி வழங்கும்.
தன்னிடம் தலையாய அன்பு கொண்டவர்க்குத் தெய்வம் மிகுந்த மகிழ்ச்சியோடு அருள் செய்யும். இறையருள் தன்மை அது. இகழ்வது - #அன்பு செய்வது எனும் இரண்டையும், மிகவும் அழகாகச் சொல்லும் பாடல் இது.
முதலில் இகழ்வதைப் பார்க்கலாம்.
யாராவது நம்மை இகழ்ந்தால், பொறுக்க மாட்டேன் என்கிறது.
பதிலடி கொடுக்கிறோம்.
அப்படியென்றால், இறைவனும் நம்மைப்போல் தானா?
உண்மையான இகழ்ச்சியும் தூய்மையான #அன்பும் இறைவனுக்குத் தெரியும்.
#சாக்கிய நாயனார் என்பவர், கல்லை எடுத்து சிவபெருமான் மீது வீச, சிவபெருமான் அதை மலர்களாகவே ஏற்றுக் கொண்டார் என்பதைப் பெரிய புராணம் விரிவாகவே சொல்கிறதே.
காரணம்?
#சாக்கிய நாயனார் கல்லைத்தூக்கி வீசினா லும், அதைத் தூய்மையான பக்தியோடு மலராகப் பாவித்து வீசினார்.
இங்கே செயலைவிட, #அன்பே கணக்கிடப்பட்டது.
கண்ணப்ப நாயனார் வரலாறும் இதேதான்; செருப்புக் காலைத் தூக்கி, சிவபெருமான் மீது வைத்தார். அங்கும் செயலைவிட, தூய்மையான #அன்பே கணக்கிடப்பட்டது.
அவர்கள் எல்லாம் இகழ்ந்ததைப்போலத் தோன்றினாலும், இறைவனுடைய அருளைப் பெற்றார்கள்.
‘இகழ்ந்ததும் பெற்றதும் ஈசன் அறியும்’ என இப்பாடல் கூறுவதன் விளக்கம் இதுவே.
‘ஈசன் அறியும் இராப்பகலும் தன்னைப் பாசத்துடன் வைத்துப் பரிவு செய்வார்களை’ என மற்றொரு திருமந்திரப் பாடலும், இந்த உண்மையை விளக்கும்.
அதேசமயம், வழிபாடு செய்வதைப்போலச் செய்து ஏமாற்றுவதையும் ஈசன் அறிவார்.
அதற்கேற்றார்போல, ஈசனும் அருள் புரிவார்.
உதாரணமாக, ராவணன் சூரபத்மன் முதலானோர் இந்த வகைதான்.
கடுந்தவம் செய்து கயிலாயநாதரான சிவபெருமானை, நேருக்குநேராகத் தரிசித்து வரம் பெற்றும் , அதன் பிறகு ராவணனின் செயல்பாடுகள், தெரிந்ததுதானே! “சுவாமியிடம் இருந்து வரம்பெற்று விட்டோம். இனிமேல் நம்மைக் கேட்க யார் இருக்கிறார்கள்?” என்ற எண்ணத்தில் ராவணன் ஆடிய ஆட்டங்களும், அதன் விளைவுகளும் தெரிந்தவை தானே?
சூரபத்மன் வரலாறும் இதேதான்; கடுந்தவம் செய்து ஏராளமான வரங்களைப் பெற்றான். விளைவு? நல்லவர்களையெல்லாம் ஆட்டிப் படைத்து, ஆறுமுகனால் சம்ஹாரம் செய்யப்பட்டான். இதே கதைதான் நம்முடையதும். பெற்றோர்களுடன் திருவிழாவிற்குப் போகிறோம். எதையாவது பார்த்து ஆசைப்படுகிறோம்.
பெற்றோர்கள் என்னதான் சொன்னாலும், நாம் கேட்பதாக இல்லை. நம் முனைப்பே முன்னால் நிற்கிறது. பெற்றோர்களும் நாம் விரும்பியதை வாங்கிக் கொடுத்து விடுகிறார்கள். அதைத் தின்றதும் நோய் வருகிறது.
நாம் விரும்பியதை வாங்கிக் கொடுத்த அதே பெற்றோரே, மருத்துவரிடம் சொல்லி ஊசிபோட்டுக் கசப்பு மருந்து தரச் சொல்கிறார்களல்லவா?
அதுபோல, நாம் பலவற்றை விரும்புகிறோம். நாம் கேட்பதைப் பரம்பொருள் கொடுத்து விடுகிறது. அதனால் பிரச்னை என்று வரும்போது, கசப்பு மருந்தைப்போலத் தண்டனை தருகிறது.
விவரம் புரியாத குழந்தை, ‘‘எங்க அம்மா எனக்குக் கசப்புமருந்து தராங்க’’ என்று புலம்புவதைப்போல, ‘‘தெய்வம் ஏதோ, எனக்குத்தான் கஷ்டத்தைக் கொடுக்கிறது’’ என்று புலம்புகிறோம்.
இவ்வாறு செய்யும் அதே ஈசன் தூய்மையான அன்பு கொண்ட அடியார்களுக்கு, மகிழ்வோடு அருள்செய்கிறாராம்.
மாணிக்கவாசகருக்காக மண்சுமந்து மன்னவன் கைப்பிரம்பால் அடி பட்டதும்;
சுந்தரருக்காகத் தூது போனதும்;
ஞானசம்பந்தருக்காகப் பாண்டிய மன்னரின் கூனைநீக்கி அவருக்கு அருள் புரிந்ததும்;
திருவுக்கரசருக்காகத் தண்ணீருடன் பொதிசோறு அளித்ததும் -
இறைவன் மகிழ்வோடு அருள் செய்த வரலாறுகளே!
ஆம்! தண்டனை கொடுத்த இறைவனே,
தூய #அன்பு கொண்டவர்களுக்காகத்தானே தேடிவந்து அருள் செய்த வரலாறுகளும் உண்டு.
ஆகையால், ‘‘இறைவனிடம் தூய்மையான- பேரம் பேசாத அன்பு வைத்தால், பக்தி செலுத்தினால், மகிழ்ந்து அருள்புரிவார் இறைவன்’’ எனக்கூறி பாடலை நிறைவு செய்கிறார் திருமூலர்.
திருச்சிற்றம்பலம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏🏼ஓம் நமசிவாய
#💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #👌இந்த நாள் நல்ல நாள்🤝
#👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #💐Have a nice day🤩



