ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
முத்தா! உந்தன் முகம் ஒளிநோக்கி! முறுவல் நகைக்கான! அத்தா! சால ஆசைப்பட்டேன் கண்டாய் அம்மானே!🤭😞😪💓💔🔥🙏 மகாதேவ் வெகு பணிவுடன் சிவ வணக்கம் 💓💔🔥🙏மகாதேவா #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #s #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:15
நாளை 12.11.2025 தேய்பிறை அஷ்டமி ********************************************* கால பைரவர் விரதம் ************************* பைரவரை தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றிவைத்து வழி பாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். ◆சிவபெருமானின் ஐந்து முகங்களில் ஒன்றா ன தத்புருஷ முகத்தில் இருந்து தோன்றியவர் பைரவர். ◆இவர் சிவபெருமான் ஆட்சி செய்யும் இடமாக கருதப்படும் காசியில சிவகணங்களுக்கு தலைவராக விளங்குபவர். ◆ஆணவம் கொ ண்ட பிரம்ம தேவனின் தலையை கொய்தவர். ◆முனிவர்களின் சாபத்தில் இருந்து, தேவேந்தி ரன் மகன் ஜெயந்தனைக் காத்து அருளியவர். ◆மன்மதனின் கர்வம் அடங்க செய்தவர். ◆எல்லா வற்றுக்கும் மேலாக சூரியனின் மகனான சனியை, சனீஸ்வரனாக்கி நவக்கோள்களில் வலிமை வாய்ந்த கோளாக உயர்த்தி பெருமை சேர்த்தவர். இப்படி பல சிறப்புகளை கொண்ட பைரவ மூர்த் தியை ‘கால பைரவர், மார்த்தாண்ட பைரவர், சேத்திர பாலகர், சத்ரு சம்கார பைரவர், வடுக பைரவர், சொர்ணாகாசன பைரவர் உள்ளிட்ட பல பெயர்களில் அழைத்து வழிபடுகிறார்கள். பைரவ மூர்த்தியை பவுர்ணமிக்கு பின் வரும் அஷ்டமியில், அதாவது தேய்பிறை அஷ்டமி தினத்தில் விரதம் இருந்து பஞ்ச தீபம் ஏற்றி வைத்து வழிபாடு செய்தால், காலத்தால் தீர்க்க முடியாத தொல்லைகள் கூட நீங்கும் என்பது ஐதீகம். பஞ்ச தீபம் என்பது, இலுப்பை எண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக அகல் விளக்கில் ஏற்ற வேண்டும். ஒரு தீபத்தில் இருந்து மற்றொரு தீபத்தை ஏற்றக்கூடாது. ஒவ்வொரு தீபத்தையும் தனித் தனியாக ஏற்ற வேண்டும். இப்படி வழிபட்டால் எண்ணிய காரியங்கள் அனைத்தும் விரைவி ல் நிறைவேறும் என்பது நம்பிக்கையாகும். பைரவர் என்றால் ‘பயத்தை அளிப்பவர்’ என்று பொருள்.அதாவது தன்னை அண்டியவர்களி ன் குறைகளைக் களைய அவர்களின் எதிரிக ளுக்கு பயத்தை அளிப்பவர். ‘பாவத்தை நீக்கு பவர்’ மற்றும் ‘அடியார்களின் பயத்தை போக் குபவர்’ என்றும் பொருள் உண்டு. பைரவர், சிவபெருமானின் 64 வடிவங்க ளில் ஒருவர் ஆவார். அந்தகாசூரனை அழிப்பதற்கா க சிவபெருமான் எடுத்த வடிவமே பைரவர் ஆவார். இவர் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்த ல், அருளல் ஆகிய ஐந்து தொழில்களையும் செய்கிறார். சிவபெருமானைப் போலவே, பை ரவருக்கும் 64 வடிவங்கள் உண்டு. அவற்றில் ஒன்றுதான் ‘கால பைரவர்’. காலத்தை வென்றவர், கால சக்கரத்தை இயக்குபவர் இந்த கால பைரவர். இவரது உடலில் 27 நட்சத்திரங்களும், 12 ராசிக ளும், 9 கோள்களும் அமைந்திருப்பதாக புராணங்கள் சொல்கின்றன. இவரது மூச்சுக்காற்றில் இருந்து தான் திருவா க்கியம் மற்றும் திருக்கணிதம் ஆகிய பஞ்சாங் கங்கள் உண்டானதாக கூறப்படுகிறது. இவற் றில் இருந்து மற்ற காலக் கணித முறைகள் தோன்றியதாம். கால பைரவர் மற்ற பைரவர்களைக் காட்டிலும் உக்கிரமானவர். ஆனால் தன்னை நம்பியவர்க ளை கண்ணின் இமைபோல் காப்பவர். இவரே சிவ ஆலயங்களின் காவல் தெய்வம். இவரின் அருள் இன்றி சிவ வழிபாடு முழுமை பெறாது. சிவவழிபாட்டில் முன்னேற்றம் காண காலபைரவரின் அருள் மிக அவசியம் ஆகும். உலகில் பிறந்தவர்கள் வேண்டுவது முக்தியை தான். அதாவது மறுபிறவி இல்லாத நிலை. ஆனால் ஒருவருக்கு பாவமோ அல்லது புண்ணியமோ இருந்தால் மறுபிறவி உண்டு. எப்போது பாவம், புண்ணியம் இரண்டும் அழிந்து வெறுமை நிலை உண்டாகின்ற தோ அப்போது தான் பிறவி இல்லாத பெருநிலை ஏற்படும். அத்தகைய பிறவி இல்லாத பெரு வாழ்வை தருபவர் கால பைரவர். இவர் காலத்தை மாற்றும் சக்தி கொண்டவர் என்பதால், ஒருவரது பாவ- புண்ணியங்களை அழிக்கும் ஆற்றல் இவருக்கு உண்டு. வீட்டில் தினமும் விளக்கேற்றி வைத்து, ‘ஓம் ஹ்ரீம் கால பைரவாய நமஹ’ என்ற மந்திரத் தை 27 முறை உச்சரித்து வந்தால், வாழ்வில் அனைத்து வளங்களையும் பெறலாம். ஓம் நமசிவாய.. ஓம் ஸ்ரீ காலபைரவா போற்றி...🙏🙏🙏 #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🪔 கால பைரவர் போற்றி 🪔🙏 #கால பைரவர் #கால பைரவர்
🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 - ShareChat
00:15
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *11.11.2025* 🌹 🌻 *வாழ்க்கை வாழ்வதற்கே தவிர இல்லாததைக் கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு இல்லை* 🌻 🌻 *வாழ்ந்து உயர்ந்து விட்டால் பொறாமையில் பேசுவார்கள். தாழ்ந்து வீழ்ந்து விட்டால் கேவலமாகப் பேசுவார்கள்* 🌻 🌻 *இவ்வளவு தான் மனிதர்களின் உலகம்* 🌻 🌻 *ஆகையால் நல்ல விஷயத்திற்காகத் தனியாக நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் தைரியமாக நில்* 🌻 🌻 *எப்படி என்றால் குனிந்து வாழாதே கும்பிடு போடாதே பணிந்து வந்து கூடப் பழிகள் சொல்லாதே* 🌻 🌻 *நடக்கின்ற தூரம் வெகுதூரம் உன் கால்களைக் கட்டாதே* 🌻 🌻 *கடினங்கள் கஷ்டங்கள் எதுவானாலும் நீ கண்ணீர் சிந்தாதே* 🌻 🌻 *வழியெங்கும் முள்ளு கல்லு மேடு இருந்தாலும் நீ வலிகளைத் தாங்கி ஓடு ஓடு* 🌻 🌻 *காலங்கள் இங்கே காணாமல் போகும்* 🌻 🌻 *அடுத்து என்ன நடக்கும் என்று பயந்து வாழாதே* 🌻 🌻 *எது நடந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று துணிந்து வாழ்ந்தால் வெற்றி நிச்சயம் 🙏 👍👍👍* 🌻 🤲 முருகா இன்றைய 11-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 12-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #Muruga #thiruchentur murug an #முருகன் #ஓம் முரு
murugan - ShareChat
00:56
🌹சிந்திப்போமே சிவனடியை . 🌹*திருவடிக்கு அடிமை* 🌹அகிலம் காக்கும் தந்தை அண்ணாமலை ஈசனே எனை ஆளும் நேசனே உன் பொற் பாதம் பணிந்து 🌹 *திருவடிக்கு அடிமை* *சுந்தரர் பெருமான்‌ விளக்குகிறார்* என் தலை, நாக்கு, மனம் எனும் *முக் கரணங்களையும் தமக்கே* *பணி செய்யும் பொருட்டு* *பெருமான் தந்துள்ளார்* *அவைகளை* நானும் வஞ்சகம் சிறிதும் இல்லாமல் *பெருமான்* *பணிக்கே செலுத்தினேன்* அவ்வாறு அவருக்கே நான் *திருவடிகளில் அடிமை* *செய்பவன்* என்று இப்போது சொல்லுமிடத்து அது வெறும் உபச்சார வார்த்தையாகவே முடியும் படம் எடுக்கும் பாம்பை அரை நாணாக கட்டி கொண்டு ஒரு கோவணத்துடனே பித்தர் கோலம் கொண்டு *திருப்பாச்சிலாச்சிரமத்தில்* *எழுந்தருளி உள்ள எம் முதல்வர்* உண்மை பித்தரை போலவே ஆகி *என் மீது ஒரு சிறிது பற்றும்* *இல்லாதவராய் நடிப்பின்* *இவரை அன்றி வேறு தலைவர்* *எவரும் இல்லையோ?* இப்படியாக *மீளா அடிமை* *என உணர வேண்டும்* என்று விளக்குகிறார் பாடலைக் காணலாமே வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் / நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி / உய்த்தனன் தனக்கே *திருவடிக்கு அடிமை* / உரைத்தக்கால் உவமனே ஒக்கும் / பைத்த பாம்பு ஆர்த்தோர் கோவணத்தோடு / பாச்சிலாச் சிரமத்து எம் பரமர் / பித்தரே ஒத்து ஓர் நச்சு இலர் ஆகில் / இவர் அலாது இல்லையோ பிரானார் 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️ திரு ஆனந்த நடராஜர் மலரடிகள் போற்றி போற்றி 🙏 🌷சிவாய நம🙏🙏 சிவமே ஜெயம் சிவமே தவம். சிவமே என் வரமே. .எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும் இப்பிறவி இனிதே சாமி 🌷 🌺உலகின் முதல்வன் எம் பெருமான் நம் தந்தை சிவனாரின் இனிய ஆசியுடன் அன்பான சிவ காலை வணக்கங்கள் 🌺 🙇அப்பனே அருணாச்சலா உன்பொற் கழல் பின்பற்றி #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ 🦜
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:15
🌹சித்தர்கள்* *சொல்லிய* *சமாதி* *நிலை* நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 ஒரு குழந்தை தன் தாய் வயிற்றில் இருக்கும்பொழுது சுவாசிப்பதில்லை. கண்களை திறந்து எதையும் பார்ப்பதில்லை. உடலில் விந்து உற்பத்தியில்லை. இதனால் தாயின் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு மனம் இயங்குவதில்லை குழந்தை பிறந்து சுவாசிக்கத்தொடங்கியவுடன் மனம் இயங்க ஆரம்பிக்கிறது. குழந்தை கண் திறந்து பார்க்கத்தொடங்கியவுடன் மனம் இன்னும் வேகமாக இயங்குகிறது. குழந்தையின் பதினான்கு வயதில் உடலில் விந்து உற்பத்தி தொடங்கியவுடன் மனம் இன்னும் அதிவேகமாக இயங்குகிறது. அதாவது மனம் சுவாசம் கண் பார்வை விந்து இவை நான்கும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இவைகளில் ஒன்றை கட்டுப்படுத்தினால் மற்றவை தானே அடங்கிவிடும். மனிதன் குழந்தையாக தன் தாய் வியிற்றில் இருக்கும்பொழுது மனம் இயக்கமில்லாமல் மிக ஆழ்ந்த தூக்க நிலையில் இருக்கிறான். இந்த நிலை பேரானந்த நிலை என கூறப்படுகிறது. இதுதான் மனிதனின் ஆதி நிலையாகும். இதுதான் பிறவா நிலை எனப்படுகிறது. அந்த நிலைக்கு திரும்பி போவதைத்தான் சமாதி என குறிப்பிடுகிறார்கள். இந்த நிலையை துரியாதீதம் என்பர். துரியம் = தூக்கம் அதீதம் = ஆழ்ந்தது துரியாதீதம் = ஆழ்ந்த தூக்கம் சமம் + ஆதி = சமாதி ஆதி நிலைக்கு சமமாதல் சமாதியாகும். ஆதி நிலை என்பது மனமற்ற நிலையாகும். மனமற்ற நிலையே சமாதி நிலையாகும் மனமற்ற நிலைக்கு எப்படி செல்வது. விந்துவை கட்டுபடுத்தினால் மனம் அடங்கும். புருவ மத்தியில் கண் பார்வையை வைத்து பழகிவந்தால் மனம் அடங்கும். சுவாசத்தின் மீது கவனம் செலுத்தி வந்தால் மனம் அடங்கும். கண் கருவிழி மீது கவனம் செலுத்தி வந்தால் மனம் அடங்கும். விசய ஞானத்தை தெரிந்துகொள்வதால் மட்டும் சமாதி நிலயை எட்ட முடியாது. மேற்கூறிய முறைகளில் ஒன்றை கடைபிடித்து தியானம் பழகி வந்தால் மட்டுமே காலப்போக்கில் ஒரு நாள் சமாதி நிலைக்குள் போக முடியும். சித்தர்கள் சொன்ன சூட்சும ரகசியங்கள் இவை சித்தர்களை வணங்குவோம் சித்தர்களின் ஜீவசமாதிகளை தரிசனம் செய்வோம் நம் கர்மவினையின் வீரியத்தை குறைத்து கொள்வோம்..... எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி .🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #SiV@n🐍 B@kthån 📿📿🪔🙏 #சிவ
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:10
🌹சிவபெருமானை ஏன் ‘சுடுகாட்டு சாமி’ என்று கூறுகின்றனர் ஆதிப்பரம்பொருள் ஈசன் சிவபெருமான் எங்கும் எதிலும் நிறைந்திருக்கிறார், கயிலாயத்தில் இருப்பிடம் கொண்டிருக்கிறார்; வெள்ளியங்கிரியில் தங்கி இருக்கிறார்; அனைத்து சிவாலயங்களிலும் வாசம் செய்கிறார்; இவ்வளவு ஏன் நாம் ஒருபிடி மண்ணை பக்தியுடன் லிங்க வடிவில் பிடித்து வைத்தால் அங்கும் வந்து விடுகிறார். இவ்வளவு இருக்க அவருக்கு பிடித்த இடம் எது தெரியுமா? சுடுகாடு தானாம்! சிவபெருமானுக்கும் சுடுகாட்டிற்கும் என்ன சம்மந்தம். அதற்கு சில காரணங்களை அவரே கூறியுள்ளதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. அந்த காரணங்களை கேட்டால் மெய் சிலிர்க்கிறது. அது என்ன என்று பார்ப்போமா? 🌹சிவபெருமானிடம் கேள்வி கேட்ட பார்வதி தேவி. ஒருமுறை பார்வதி தேவி சிவபெருமானிடம் 'பூமியில் உங்களுக்காக பிரத்யேகமான எவ்வளவோ ஆலயங்களும், மடங்களும், மலைகளும் இருக்கின்றதே, ஆனால் நீங்கள் ஏன் எப்பொழுதும் சுடுகாட்டில் தங்கிக் கொண்டிருக்கிறீர்கள் சுவாமி? என்று கேட்கிறார். அதற்கு சிவபெருமான், எல்லா மனிதர்களும் இறந்த பிறகு வருகிற ஒரே இடம் சுடுகாடு மட்டும் தான். அவர்கள் உயிரோ டு இருக்கும் போது யாருமே தூய அன்புட னோ பக்தியுடனோ என்னிடம் வருவது இல்லை. எனக்கு பொன் பொருளை கொடு, வீடு வாசலை கொடு, என செல்வங்களுக்காக மட்டுமே வேண்டுகின்றனர். 🌹முக்தியை நினைத்து கலங்கும் ஆத்மா: அவர்கள் இறந்த பிறகு உறவினர்கள் இறந்தவரை நினைத்து ஓரிரு வாரங்கள் அல்லது மாதங்கள் மட்டுமே கவலைப் படுகின்றனர். பின்னர் இறந்தவர் சேர்த்து வைத்து சொத்து, தங்கம், பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து விடுகின்றனர். யாருடைய நினைவிலும் வாழக்கையிலும் இல்லாத அந்த இறந்தவரின் ஆத்மா அந்த நேரத்தில் தான் கலங்கி நிற்கிறது. நாம் வாழ்நாள் முழுவதுமே பொன் பொரு ளுக்காக மட்டுமே ஓடியிருக்கிறோம், மோட்சம் முக்தியை நினைத்து வாழவில்லை. அதனால் தான் இன்று தனித்து இருக்கிறோம் என்று பயந்து நடுங்கிக் கொண்டிருக்குமாம். 🌹உனக்கு துணையாக உன் அப்பன் நான் இருக்கிறேன்: யாருமே துணை இன்றி பயந்து, கலங்கி, தன்னந்தனியாக தவிக்கும் ஆன்மாவிற்கு, நீ தனியாக இல்லை; உனக்கு துணையாக உன் அப்பன் நான் இருக்கிறேன். நீ எதற்கும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி, சமாதானம் செய்து, தன் நிலையை நினைத்து தவித்துக் கொண்டிருக்கும் ஆன்மாவிற்கு முக்தி அளிப்பதற்காகவே நான் சுடுகாட்டில் வாசம் செய்கிறேன் தேவி, என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கூறியுள்ளதாக இந்து புராணங்கள் தெரிவிக்கின்றன. 🌹அனைத்து ஜீவராசிகளுக்கும் படியளக்கும் எம்பெருமான்: இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு ஜீவ ராசிக்கும் நாம் தானே 'ஜகத பிதர வந்தே பார்வதி பரமேஸ்வரா', தாய் தந்தையாக இருந்து அவர்கள் வாழ்க்கையின் போதும், வாழக்கைக்கு பிறகும் நாம் தானே அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும், அது நம் கடமை தானே தேவி என சிவபெருமான் பார்வதி தேவியிடம் கேட்டுள்ளாராம். நீங்கள் சொல்வது சரி தான் சுவாமி, நான் இந்த ஒரு விஷயத்தை என்றுமே யோசித்தது இல்லை. ஒவ்வொரு மனிதனின் இறப்புக்கு பிறகும் ஒரு வாழ்க்கை இருக்கிறது, அதற்காக தான் நீங்கள் சுடுகாட்டில் வாசம் செய்கிறீர்கள் என எனக்கு தெரியாமல் போயிற்று, என்று வருந்தினாராம். நற்றுணையாவது அண்ணாமலையாரே 🙏 எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் அகிலம் காக்கும் அண்ணாமலையாரே போற்றி போற்றி . உன் ஆழ்ந்த கருணையை பெற என்ன தவம் செய்தேனோ🌹 சிவாய நம🙇 சிவமே ஜெயம் ‌ சிவமே தவம். சிவமே என் வரமே . எங்கும் சிவ நாமம் ஒலிக்கட்டும். #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #sivan #சிவன் #சிவ
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
00:37
#😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் #👉வாழ்க்கை பாடங்கள் #😍எமோஷனல் ஸ்டேட்டஸ் #👌அருமையான ஸ்டேட்டஸ் #😇வாழ்க்கையின் எதார்த்தங்கள்
😍மனதை தொடும் ஸ்டேட்டஸ் - ShareChat
00:28
🌙 #இரவு #சிந்தனை 🌙 🌹 *10.11.2025* 🌹 🌻 *மனிதனாகப் பிறந்துவிட்டால் கஷ்டத்தை அனுபவித்தே ஆக வேண்டும் என்பதுதான் விதி, என்று கூறுவார்கள்* 🌻 🌻 *ஆனால், ஒரு நல்ல மனிதனால் கட்டாயம் கஷ்டம் இல்லாமல் வாழ முடியும்* 🌻 🌻 *நமக்கு வாழ்க்கையில் ஒரு கஷ்டம் நேர்கிறது என்றால், அந்த கஷ்டம் அடுத்தவர்களால் உண்டாக்க படுவது அல்ல* 🌻 🌻 *‘நேற்று நாம் செய்த தவறு, இன்று நமக்கு கஷ்டமாக வருகிறது. அவ்வளவு தான்’. முதலில் இதை நாம் உணர வேண்டும்* 🌻 🌻 *அதாவது தரையில் இருக்கும் முல்லை நாம்தான் மிதித்து, காலில் குத்து கொண்டிருப்போம். இது நம்முடைய தவறு தான்* 🌻 🌻 *ஆனால் நம்முடைய மனமும், வாயும் என்ன சொல்லும்? அந்த ‘முள் குத்திவிட்டது’. முள் வந்து உங்களை குத்துச்சா* 🌻 🌻 *எந்த இடத்தில், எந்த கஷ்டம், நிகழ்ந்தாலும், அதற்கு நாம் காரணம் இல்லை, என்று நினைப்பதை முதலில் நாம் நிறுத்த வேண்டும்* 🌻 🌻 *நமக்கு ஏற்படக்கூடிய கஷ்டங்களுக்கு, நாம் தான் காரணமாக இருக்க முடியும்* 🌻 🌻 *ஆகையால் மகிழ்ச்சி வெளியில் இருப்பதாக நாம் தவறாக எண்ணுகிறோம்* 🌻 🌻 *அது நம் மனதில் தான் இருக்கிறது 🙏 👍👍👍* 🌻 🤲 முருகா இன்றைய 10-11-2025 🙏 நாளை இனிமையாக தந்தமைக்கு நன்றி🤲 🙏நாளைய பொழுது 11-11-2025 அனைவருக்கும் நலம் தரும் விடியலாக அமையட்டும்🙏 🙏இன்று நாங்கள் செய்த தவறுகளை மன்னித்து எல்லோருக்கும் 🙏 ⚜️#எல்லா #நன்மைகளும் #கிடைக்க #அருள் #தருவாய் #திருச்செந்தூர் #முருகா⚜️ 🌸 #கவலைகளை #மறக்க #கடவுள் #தந்த #வரமேதூக்கம் #எனவே #கவலையின்றி #நிம்மதியாக #தூங்குங்கள்😌 🌺நாளையபொழுது நல்லபடி #முருகன் அருளில் உள்ளபடி🙏 👍விடியட்டுமே நல்விடியல் என்று துவண்டிடாமல்தோல்வி பயத்தை வென்று 🙏 🙏 #ஓம் #சரவணா #பவ 🙏 #murugan #thiruchentur murug an #முருகன் #🕉️ஓம் முருகா #முருக பெருமான் 🙏🙏🙏🙏
murugan - ShareChat
01:39
நான் இறந்த பின் கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்.... அம்மா அப்பா என்னை கடைசியாக மடியில் வைத்துக்கொள்ள நினைக்கலாம்..!!! அக்கா தங்கை என் கை பிடித்து அழ நினைக்கலாம்..!! என் அண்ணன் என் முகம் பார்த்து கண்ணீர் விட நினைக்கலாம் கடைசியாய் ஒரு நொடி என் நெற்றியில் முத்தமிட நினைக்கலாம்...!!!! கணவர் கடைசி நிமிடத்திலாவது அருகில் இருக்க நினைக்கலாம்..!! என்மகன் என்னை தட்டி எழப்பி கட்டி அழ நினைக்கலாம்..!! தொலைந்த தோழியொருத்தி கடைசியாய் என் கரம் கோர்க்க வரலாம்..!! கூட பழகிய தோழிகள் பக்கத்து வீட்டுக்காரர்கள் கடைசியாய் கட்டித்தழுவி கதறி அழுதிட விரும்பலாம்..!! நான் அன்பைக் காட்டுவது தெரியா உறவு கடைசியாய் என் தலைக் கோத ஆசைப்படலாம்..!! உறவற்ற பெயரற்ற செய் நன்றி மறவா யாரோ கடைசியாய் என் பாதம் தொட விரும்பலாம்..!! என்னை விரும்பி வெறுத்த ஒருத்தர் என் முகம் காண வந்து நின்று அழுது கொண்டிருக்கலாம் ஒருமுறையாவது என் முகத்தைப் பார்த்து விட்டு செல்லட்டும்...!!! நீ இறந்து போனால் முதல் மாலை என்னுடையது தான் என்று ரோஜா மாலையை கையில் வைத்துக்கொண்டு உங்களை தேவைக்காகவோ உண்மையாகவோ நேசித்த உறவு வந்திருக்கலாம்...!!! மாலையை போட்டு விட்டு கண்ணீர் விட்டு செல்லட்டும் வழி விட்டு விடுங்கள் பெட்டியில் அடைக்காதீர்கள்...!!! உயிரற்று போனால்தானென்ன... கடைசியாய் எனக்கும் தேவையாய் சில வருடல்கள் இறந்த பின் என்னை கண்ணாடி பேழைக்குள் அடைக்காதீர்...!! எல்லாம் அந்த ஒரே ஒரு நாள் சில மணி நேரங்கள் மட்டுமே..!! கண்ணீருடன்.... #மரணம் #கொரனோ மரணம்
மரணம் - otaA otaA - ShareChat
இன்னும் சில ஆண்டுகளில் உங்களை மறந்து விடுவார்கள் எல்லோரும்.. என்னங்க அவசரமா ஓடுறீங்களா? பணம் சம்பாதிக்கணுமா? இதை படிக்க நேரம் இல்லையா? ஒரு நிமிஷம் மட்டும் இதை படிச்சிட்டு போங்களே! ப்ளீஸ்.. உங்கள் இறுதி ஊர்வலத்திற்குப் பின் ஒருசில மணிநேரங்களில் அழுகுரல்கள் முழுமையாக அடங்கியிருக்கும், அடுத்த வேளை உணவை அயல் வீட்டுக்காரர் கொண்டுவந்திருப்பார், இல்லை என்றால் ஆர்டர்கள் ஹோட்டலுக்கு சென்றிருக்கும், பேரன் பேத்திகள் ஓடிப்பிடித்து விளையாடிக் கொண்டிருக்க,.. வந்த கூட்டத்தில் ஓர் இளம்பெண்ணும் ஆணும் காதல் புன்னகையுடன் பரஸ்பரம் போன் நம்பர்கள் மாற்றிக்கொள்வர்... படுக்கப் போகும் முன் காலாற நடந்து வரலாமென சில ஆண்கள் தேநீர்க்கடை வரை சென்றிருப்பர்,.. சாப்பிட்ட இலைகளயும், குப்பைகளையும் இன்னும் கொஞ்சம் தள்ளிக் கொட்டியிருக்கலாம் என உங்கள் பக்கத்து வீட்டுக்காரர் மனதுக்குள் பொறுமிக்கொண்டிருப்பார்,.. ஒரு அவசர சூழ்நிலையால் நேரில் வர இயலவில்லையென உறவினர் ஒருவர் உங்கள் மகளிடம் போனில் பேசுவார். மறுநாள் விருந்தில், கறியில் காரம் போதவில்லையென ஓரிருவர் குறைபட்டுக்கொள்வார்கள், எலும்பை நீக்கி, கறியை மட்டும் குழந்தைக்கு ஒரு அம்மா ஊட்டிக்கொண்டிருப்பார்.. இத்தனை தூரம் வந்தாச்சு போற வழியில் அங்கேயும் பார்த்துவிட்டுப் போலாமா என வெளியூர் உறவுகள் சுற்றுலாத் திட்டங்கள் ரகசியாமாய் வகுத்திருப்பர், தன்னுடைய பங்குக்கு மேல் சிலநூறு ரூபாய்கள் அதிகமாக செலவாகிவிட்டதென ஒரு பங்காளி கணக்கிட்டு நொந்துகொண்டிருப்பார்.. கூட்டம் மெல்ல மெல்லமாய்க் கரையத் தொடங்கும்.. அடுத்து வரும் நாட்களில் நீங்கள் இறந்ததே தெரியாமல் உங்கள் தொலைபேசிக்கு சில அழைப்புகள் வரக்கூடும்,.. உங்கள் அலுவலகம் உங்கள் இடத்துக்கு வேறொருவரை அவசரமாகத் தேடத் துவங்கியிருக்கும், ஒரு வாரம் கழிந்து, உங்கள் இறப்புச் செய்தி கேள்விப்பட்டு, உங்கள் கடைசிப் பதிவு என்னவென ஆர்வம் கலந்த சோகத்தோடு சில பேஸ்புக் நண்பர்கள் தேடக்கூடும். இரண்டு வாரங்களில் உங்கள் மகன் மகளின் எமெர்ஜென்சி லீவு முடிந்து பணிக்கு திரும்பிடுவர், ஒரு மாதமுடிவில் உங்கள் வாழ்க்கைத்துணை டிவியில் வரும் ஏதோ ஒரு நகைச்சுவைக் காட்சிக்கு சிரிப்பார், அடுத்துவரும் மாதங்களில், உங்கள் நெருங்கிய உறவுகள் மீண்டும் சினிமாவுக்கும், பீச்சுக்கும் சகஜமாய்ச் செல்லத்துவங்கியிருப்பர், அத்தனை பேரின் உலகமும் எப்போதும்போல் மிக இயல்பாக இயங்கிக்கொண்டிருக்கும், ஒரு பெரிய ஆலமரத்தின் இலை ஒன்று வாடி உதிர்ந்ததற்கும், நீங்கள் வாழ்ந்து மறைந்ததற்கும் எள்ளளவும் வித்தியாசம் இல்லாதது போல, அத்தனையுமே சுலபமாய், வேகமாய், எந்தச் சலனமுமின்றி நடக்கும், மழை பெய்யும், தேர்தல் வரும், பேருந்துகளில் கூட்டம் வழக்கம்போலவே இருக்கும், ஒரு நடிகைக்குத் திருமணம் ஆகும், திருவிழா வரும், உலகக்கோப்பை கிரிக்கெட் திட்டமிட்டபடி நடக்கும், வண்ண வண்ணமாய் பூக்கள் பூக்கும், உங்கள் செல்லப்பூனை அடுத்த குட்டி ஈனும்.. நீங்களே வியக்கும் வேகத்தில் இந்த உலகத்தால் நீங்கள் மறக்கப்படுவீர்கள், இதற்கிடையில் உங்கள் முதல்வருடத் திதிகொடுத்தல் மட்டும் மிகச்சிரத்தையாக நடக்கும்.(இது கூட எங்காவது ஒரு பக்கம் மட்டும் தான்) கண்மூடித் திறக்கும் நொடியில் வருடங்கள் பல ஓடியிருக்கும், உங்களைப் பற்றிப் பேச யாருக்கும் எதுவுமே இருக்காது, என்றாவது ஒருநாள், பழைய புகைப்படங்களைப் பார்க்கையில் மட்டும், உங்கள் வாரிசுகளில் ஒருவர் உங்களை நினைவுகொள்ளக்கூடும், உங்கள் ஊரில், நீங்கள் நெருங்கிப் பழகிய ஆயிரம் ஆயிரம் பேர்களில், யாரோ ஒருவர் மட்டும், நீங்கள் இருந்ததாய், அபூர்வமாய் உங்களைப்பற்றிப் யாரிடமோ பேசக்கூடும்.. மறு பிறவி உண்மையென்றால் மட்டும் நீங்கள் வேறெங்கேயோ, வேறு எவராகவோ வாழ்ந்து கொண்டிருக்கக்கூடும்.. மற்றபடி, நீங்கள் எதுவுமே இல்லாமல் ஆகி, பேரிருளில் மூழ்கி பல பத்தாண்டுகள் ஆகியிருக்கும், இப்போது சொல்லுங்கள்.. உங்களை இத்தனை சீக்கிரம் மறக்கக் காத்திருக்கும் மனிதர்களில் யாரைத் திருப்திப்படுத்த இன்று, இப்போது, இவ்வளவு பதற்றமாய் ஓடிக்கொண்டிருக்கிறீர்கள்..? உங்கள் வாழ்க்கை , யாரையும் நீங்கள் திருப்தி படுத்த தேவையில்லை, யாரும் உங்களை திருப்தி படுத்தபோவதும் இல்லை. வாழுங்கள் உங்களுக்காகவும் வாழுங்கள்.. #இறப்பு பிறப்பு #இறப்பு #இதில் யாருடைய இறப்பு உங்களை மிகவும் வருத்தமடைய செய்தது.. #இறப்பு #மரணம்
இறப்பு பிறப்பு - ShareChat