ல.செந்தில் ராஜ்
ShareChat
click to see wallet page
@senthilrajl
senthilrajl
ல.செந்தில் ராஜ்
@senthilrajl
I Am Born To Win, I AM DIVINE.Think Big.
🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉 🕉🙏🌺தேய்பிறை சோமவார பிரதோஷம் இன்று சிவபெருமானை வணங்கினால் இத்தனை நன்மைகளா?16/03/2026🌺🙏🕉 🕉சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் வீட்டில் பூஜை அறையில் காப்பரிசி படையலிட்டு சிவனை வணங்கலாம். 🕉சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். 🕉சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தியிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும். 🕉நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். 🕉தேய்பிறை சோமவார பிரதோஷம் 🕉சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 🕉எத்தனை பிரதோஷங்கள் 🕉பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. 🕉நந்தியிடம் வேண்டுதல் 🕉சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு 🕉வறுமை விலகும் 🕉பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்று ஆலயம் செல்ல முடியாத நிலை உள்ளதால் பூஜை அறையில் சிவன் படத்திற்கு வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்து வணங்கலாம். 🕉தடைகள் நீங்கும் ⚛அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும் 🕉அபிஷேக பொருட்கள் ⚛பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். 🕉என்ன படைக்கலாம் 🕉பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை சிவன் நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். வீட்டில் எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.🕉🙏🌺 🕉சிவ தரிசனம் ⚛பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு. முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ⚛பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம் ⚛சோமவார விரதத்தை மேற்கொள்ளும் நாளில் அதிகாலையில் பெண்கள், நீராடிய பிறகு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம் 🕉சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருள் உண்டு. திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என கூறப்படுகிறது. 🌺🙏🕉ஓம் நமசிவாய🕉🙏🌺 🌺🙏🕉சிவாய நம ஓம்🕉🙏🌼 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
01:44
🕉🙏🌺ஓம் நமசிவாய 🌺🙏🕉 🕉🙏🌺தேய்பிறை சோமவார பிரதோஷம் இன்று சிவபெருமானை வணங்கினால் இத்தனை நன்மைகளா?16/03/2026🌺🙏🕉 🕉சோமவார பிரதோசம் சிறப்பு வாய்ந்தது. இன்றைய தினம் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்றைய தினம் கோவிலுக்கு செல்ல முடியாத நிலை உள்ளதால் வீட்டில் பூஜை அறையில் காப்பரிசி படையலிட்டு சிவனை வணங்கலாம். 🕉சோமன் என்றால் சிவன், சோமவாரம் திங்கட்கிழமை, சிவனுக்கு உகந்த திங்கட்கிழமை பிரதோஷம் தீராத வினையெல்லாம் தீர்த்துவைப்பவன் வேதநாயகன், பரமேஸ்வரன். அதிலும், பிரதோஷ காலத்தில் திருநீலகண்டனை வழிபட்டால் அத்தனை தோஷங்களும் நீங்கும் என்கின்றன ஞானநூல்கள். 🕉சிவ ஆலயத்திற்கு சென்றாலே நந்தியின் காதில் கஷ்டங்களை கூறி வணங்குவது பலரது வழக்கம் பிரதோஷ நாளில் நந்தியிடம் அதிக வேண்டுகோள் வைப்பார்கள். பிரதோஷ வழிபாடு சிவனுக்கு உகந்தது. மாலை நேரத்தில் பிரதோஷ நேரத்தில் சிவனையும் நந்தியையும் வழிபட வேண்டும். 🕉நம்பிக்கையோடு நமசிவாய எனும் ஐந்தெழுத்து மந்திரத்தை உளமார ஜபித்து, பிரதோஷ காலத்தில் நந்தியம்பெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனையிலும், ஈஸ்வர பூஜையிலும் கலந்துகொண்டு இறைவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் தீவினை விலகும்; நன்மையெல்லாம் பெருகும். 🕉தேய்பிறை சோமவார பிரதோஷம் 🕉சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம் தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் நாம் ஒடுங்க அதுவே சரியான நேரம். பிரதோஷ நேரத்தில் சிவன் ஆடுகின்ற ஆனந்த நடனத்தை தேவர்களும், முனிவர்களும் கண்டுகளிப்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. 🕉எத்தனை பிரதோஷங்கள் 🕉பிரதோஷம் நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும், சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும். அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன. 🕉நந்தியிடம் வேண்டுதல் 🕉சிவபெருமானுக்கு பாதுகாவலனாக இருப்பதுதான் நந்தி. சிவனை பார்க்க செல்பவர்கள் அதன் காவலனான நந்தியிடம் தங்கள் குறைகளையும் வேண்டுதல்களையும் சொன்னால் நந்திபெருமான் சிவனிடம் கொண்டு சேர்ப்பார் என்பது நம்பிக்கை. அந்த வேண்டுதல் நிறைவேறவும் செய்யும். நந்தியின் காதில் சொல்லும் நடைமுறை என்பது எல்லா கோவில்களிலும் இருக்கிறது. பெரிய கோவிலில் உள்ள சிறிய நந்தியிடம் சொன்னால் மகா நந்திக்கும் கேட்கும். வேண்டுதல் சீக்கிரமே நிறைவேறும் என்பதுதான் இதன் கூடுதல் சிறப்பு 🕉வறுமை விலகும் 🕉பிரதோஷ நாளில் சிவனை தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும். பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சோம வார பிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது நம்பிக்கை. இன்று ஆலயம் செல்ல முடியாத நிலை உள்ளதால் பூஜை அறையில் சிவன் படத்திற்கு வில்வ மாலை, திராட்சை மாலை அணிவித்து வணங்கலாம். 🕉தடைகள் நீங்கும் ⚛அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் வாங்கித்தரலாம். சிவ பெருமானுக்கும் நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம். கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும் முன்னேற்றம் கிடைக்கும் 🕉அபிஷேக பொருட்கள் ⚛பிரதோஷத்தை முன்னிட்டு சிவனுக்கும் நந்திக்கும் என்ன பொருள் வாங்கிக்கொடுத்தால் என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம். பால் - நோய் தீரும் நீண்ட ஆயுள் கிடைக்கும். தயிர் - பல வளமும் உண்டாகும், தேன் - இனிய சாரீரம் கிடைக்கும். பழங்கள் - விளைச்சல் பெருகும், பஞ்சாமிர்தம் - செல்வம் பெருகும், நெய் - முக்தி பேறு கிட்டும். இளநீர் - நல்ல மக்கட் பேறு கிட்டும். சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும். எண்ணெய் - சுகவாழ்வு, சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம், மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும். 🕉என்ன படைக்கலாம் 🕉பச்சரிசி, பாசிப்பருப்பு ஆகியவற்றை தண்ணீரில் ஊற வைத்து பிறகு அதை வடிகட்டி வெல்லம், தேங்காய்ப்பூ சேர்த்து காப்பரிசி தயாரிக்க வேண்டும். பிரதோஷ காலத்தில் இந்த காப்பரிசி நிவேதனத்தை சிவன் நந்திக்கு சமர்பிப்பது மிகவும் சிறப்பானது. நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பூஜை செய்யலாம். வீட்டில் எலுமிச்சை சாதமோ தயிர் சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்கு கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.🕉🙏🌺 🕉சிவ தரிசனம் ⚛பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது. பிரதோஷ காலத்தில் பார்வதியுடன் கூடிய சந்திரசேகரன் ரிஷப வாகனத்தில் ஆலயத்தை மூன்று முறை வலம் வருவதைப் பார்த்தால் சிறப்பு. முதல் சுற்றில் செய்யப்படும் வேதபாராயணத்தையும், இரண்டாம் சுற்றில் செய்யப்படும் திருமுறை பாராயணத்தையும், மூன்றாம் சுற்றில் நாதஸ்வர இன்னிசையையும் உடன் வலம் வந்தபடி கேட்பதால் தோஷங்கள் நீங்கும். பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றம் கிடைக்கும். ⚛பிரிந்தவரையும் ஒன்று சேர்க்கும் மகிமை வாய்ந்த சோமவார விரதம் ⚛சோமவார விரதத்தை மேற்கொள்ளும் நாளில் அதிகாலையில் பெண்கள், நீராடிய பிறகு, வீட்டில் விளக்கேற்றி விரதத்தைத் தொடங்கலாம் 🕉சோமன் என்ற சொல்லுக்கு பார்வதியோடு இணைந்த சிவபெருமான் என்ற பொருள் உண்டு. திங்கட்கிழமையை சோம வாரம் எனக் கூறுவார்கள். திங்கட்கிழமை சிவனுக்கு மிகவும் உகந்த நாள். திங்கட்கிழமை கடைபிடிக்கும் விரதம் சோமவார விரதம் என கூறப்படுகிறது. 🌺🙏🕉ஓம் நமசிவாய🕉🙏🌺 🌺🙏🕉சிவாய நம ஓம்🕉🙏🌼 #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏🏼ஓம் நமசிவாய - ShareChat
01:02
#🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 - ShareChat
00:10
🌼🔱🌼ஓம் நமசிவாய ஓம் 🌼🔱🌼 🌼🔱🌼ஓம் சங்கரா போற்றி 🌼🔱🌼 🌼🕉️🌼ஓம் தில்லை எம்பெருமானே போற்றி 🌼🕉️🌼 🌼🕉️🌼ஓம் தென்னாடுடைய சிவனே போற்றி 🌼🕉️🌼 🔱பராய்த்துறை மேவிய பரனே, போற்றி! சிராப்பள்ளி மேவிய சிவனே, போற்றி! மற்று ஓர் பற்று இங்கு அறியேன், போற்றி! குற்றாலத்து எம் கூத்தா, போற்றி! கோகழி மேவிய கோவே, போற்றி! ஈங்கோய்மலை எம் எந்தாய், போற்றி! பாங்கு ஆர் பழனத்து அழகா, போற்றி! கடம்பூர் மேவிய விடங்கா, போற்றி!🕉️ 🔱ஓம் நமசிவாய 🔱 🙏வாழ்க வளமுடன்🙏 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:22
#🥰அன்புடன் காலை வணக்கம்🌞 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #💐Have a nice day🤩
🥰அன்புடன் காலை வணக்கம்🌞 - ShareChat
00:59
#💐Have a nice day🤩 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🌻🌻காலை வணக்கம்🌻🌻 #🥰அன்புடன் காலை வணக்கம்🌞
💐Have a nice day🤩 - ShareChat
00:12
#ஓம்_சிவாய_நமஹ #சிவ_சிவாய_நமஹ..... #பிறவாமை_அருள்வாய் #பிரதோஷ_நாயகா... #ஒருநொடியில் பெரிதாய் என்னவாகிடுமென கேட்கிறாய்.. #ஒரு_நொடி_என்பது_அத்தனை_அலட்சியமா..?! ஒரு நொடிப் புன்னகை ஒரு நாளையே புத்துணர்வாக்கிடக்கூடும்.. ஒரு நொடி மன்னிப்பு ஒருவர் வாழ்வையே புதிதாக்கிடக்கூடும்.. ஒரு நொடி சந்தேகம் ஒரு பேரன்பை சட்டென களங்கப்படுத்திடக்கூடும்.. ஒரு நொடி உறவுகள் தேவை என நினைத்தால் வார்த்தைகளில் கவனம் வரும்.. ஒரு நொடியில் தவறவிட்ட வார்த்தை வாழ்நாள் முழுதும் வலி தரக்கூடும்.. #ஒரு_நொடி_என்பது_அத்தனை_சாதாரணமா..?! பிரசவ நேரத்தில் ஒரு நொடி என்பது எத்தனை வலுமிக்கதென்பதை.. மரணத்தின் இறுதி நிமிடங்களில் ஒரு நொடி என்பது எத்தனை விலைமதிப்பற்றதென்பதை.. ஓட்டப்பந்தய வீரனொருவனின் ஒரு நொடி என்பது எத்தனை பெறுமதியானதென்பதை.. முறிந்த உறவொன்றின் எதிர்ப்பாரா சந்திப்பில் ஒரு நொடி என்பது எத்தனை உணர்வுகளின் கலவையென்பதை.. ஒரு நொடி தானே.. என எத்தனை எத்தனை நொடிகளைதான் அலட்சியமாய் தவறவிடுவது..?! மறு நொடியென்பது நிச்சயமில்லா வாழ்விதில் ஒவ்வொரு நொடியும் ஈடில்லாப் பொக்கிஷமே.. இனி.. இப்போதே.. இந்த நொடியினை மிச்சமில்லாது கொண்டாடித்தீர்த்திடலாம்.... #சரணம்_சரணம் #மகேஷ்வரா ...._ #🙏🏼சிவ பெருமான் பாடல்கள் #🙏🏼ஓம் நமசிவாய #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
🙏🏼சிவ பெருமான் பாடல்கள் - ShareChat
01:17
விளம்பர மாடலை செதில் செதிலா செதச்சிட்டானுங்க சிரிக்காம பாருங்க 😂🤣🤣 #அரசியல்
அரசியல் - ShareChat
01:35
சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹சிவாயநம 🌹 அறிவோமா????? தந்தை யார்? தாய் யார்? மேலும் கேள்விகள் 🌹 பதிலும் அந்த 🌹 நமசிவாயத்திலே உள்ள அற்புதம் 🌹 திரு நாவுக்கரசப் பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🌹 திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் 🌹 #🙏ஹர ஹர மஹாதேவ்⭐ #🙏ஆன்மீகம் #🕉️சிவன் ஸ்டேட்டஸ்🎶 #🙏🏼ஓம் நமசிவாய #🙏🏼சிவ பெருமான் பாடல்கள்
🙏ஹர  ஹர மஹாதேவ்⭐ - ShareChat
00:30
♦️விக்னேஸ்வரா போற்றி... 🚩ஐந்து கரத்தனை யானை முகத்தனை இந்தி னிளம்பிறை போலும் எயிற்றனை நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினைப் புந்தியில் வைத்தடி போற்றுகின் றேனே. 🌹பொருள் விளக்கம்: ஐந்து கைகளையும், யானை முகத்தையும், சந்திரனது இளமை நிலையாகிய பிறைபோலும் தந்தத்தையும் உடையவரும், சிவபிரானுக்குப் புதல்வரும், ஞானத்தின் முடி நிலையாய் உள்ளவரும் ஆகிய விநாயகப் பெருமானை உள்ளத்தில் வைத்து, அவரது திருவடிகளைத் துதிக்கின்றேன். 🔹ஐந்து கரங்களில் வலப்புறக் கைகளில் ஒன்று பக்தர்களுக்கு அபயம் அளிப்பதாக காட்சி தருகிறது. 🔹மேல் வலப்புறக் கையில் அங்குசம் உள்ளது. இடப்புற மேல் கையில் பாச கயிறும், மற்றொ ரு இடக்கையில் மோதகமும் (கொழுக் க்ட்டை) வைத்தபடி விநாயகர்காட்சி தருகிறார். 🔹ஐந்தாவது கையான துதிக்கையில் அமுத கலசம் ஏந்தி கம்பீரமாக வீற்றிருக்கிறார். 🔹கொடியவர்களை ஒழிக்கும் ஆயுதமாக அங்கு சத்தையும், தம்மை வழிபடும் அடியவர்களுக் குத் துன்பம் தருவோரை தம் பாசக்கயிற்றால் அழிக்கவே அதனை கையில் ஏந்தியுள்ளார். 🔹மற்றொரு கையில் அவருக்கு பிடித்தமான கொழுக்கட்டையை வைத்துள்ளார். துதிக்கை யில் வைத்திருப்பது அமுதக் கலசம். 🔹அதாவது விநாயகரை மனமுருக வேண்டி வழி படுவோருக்கு அவர்களின் வாழ்நாள் முழுவதும் அமுதம் போன்ற திகட்டாத வாழ்வு கிடைக்கும் என்பதை இது உணர்த்துகிறது. 🌹ஶ்ரீ கஜமுக பாத நமஸ்தே... #👌இந்த நாள் நல்ல நாள்🤝 #🤞வாழ்த்துக்களுடன் நம்பிக்கை செய்தி🙏 #💐Have a nice day🤩 #🙏ஆன்மீகம் #🙏ஹர ஹர மஹாதேவ்⭐
👌இந்த நாள் நல்ல நாள்🤝 - ShareChat
00:15