ShareChat
click to see wallet page
search
حَدَّثَنَا عَبْدَانُ، قَالَ أَخْبَرَنَا أَبُو حَمْزَةَ، قَالَ سَمِعْتُ الأَعْمَشَ، عَنْ سَالِمٍ، عَنْ كُرَيْبٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ قَالَتْ مَيْمُونَةُ وَضَعْتُ لِلنَّبِيِّ صلى الله عليه وسلم غُسْلاً، فَسَتَرْتُهُ بِثَوْبٍ، وَصَبَّ عَلَى يَدَيْهِ فَغَسَلَهُمَا، ثُمَّ صَبَّ بِيَمِينِهِ عَلَى شِمَالِهِ، فَغَسَلَ فَرْجَهُ، فَضَرَبَ بِيَدِهِ الأَرْضَ فَمَسَحَهَا، ثُمَّ غَسَلَهَا فَمَضْمَضَ، وَاسْتَنْشَقَ، وَغَسَلَ وَجْهَهُ وَذِرَاعَيْهِ، ثُمَّ صَبَّ عَلَى رَأْسِهِ، وَأَفَاضَ عَلَى جَسَدِهِ، ثُمَّ تَنَحَّى فَغَسَلَ قَدَمَيْهِ، فَنَاوَلْتُهُ ثَوْبًا فَلَمْ يَأْخُذْهُ، فَانْطَلَقَ وَهْوَ يَنْفُضُ يَدَيْهِ‏.‏ மைமூனா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள்: நான் நபி (ஸல்) அவர்களுக்காகக் குளிக்கும் நீரை வைத்தேன்; மேலும் அவர்களை ஒரு ஆடையால் மறைத்தேன். அவர்கள் (முதலில்) தமது கைகளின் மீது தண்ணீரை ஊற்றிக் கழுவினார்கள். பிறகு, தமது வலக்கையினால் இடக்கையின் மீது ஊற்றி, தமது மர்ம உறுப்பைக் கழுவினார்கள். பிறகு தமது கையைத் தரையில் அடித்துத் தேய்த்து, அதைக் கழுவினார்கள். பின்னர் வாய்க்கொப்பளித்தார்கள்; நாசிக்குத் தண்ணீர் செலுத்தி (சுத்தம் செய்தார்கள்); தமது முகத்தையும் முன்னங்கைகளையும் கழுவினார்கள். பிறகு தமது தலையின் மீது தண்ணீரை ஊற்றினார்கள்; உடல் முழுவதிலும் தண்ணீரை ஊற்றினார்கள். பிறகு அங்கிருந்து (சற்று) நகர்ந்து தமது கால்களைக் கழுவினார்கள். நான் அவர்களிடம் ஒரு துணியைக் கொடுத்தேன். ஆனால், அவர்கள் அதை வாங்கவில்லை. தமது கைகளை உதறியவாறு சென்றார்கள். ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 276 حَدَّثَنَا خَلاَّدُ بْنُ يَحْيَى، قَالَ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ نَافِعٍ، عَنِ الْحَسَنِ بْنِ مُسْلِمٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ شَيْبَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ كُنَّا إِذَا أَصَابَتْ إِحْدَانَا جَنَابَةٌ، أَخَذَتْ بِيَدَيْهَا ثَلاَثًا فَوْقَ رَأْسِهَا، ثُمَّ تَأْخُذُ بِيَدِهَا عَلَى شِقِّهَا الأَيْمَنِ، وَبِيَدِهَا الأُخْرَى عَلَى شِقِّهَا الأَيْسَرِ‏.‏ ஆயிஷா (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்: “எங்களில் ஒருவருக்கு ஜுனூபு (பெருந்தொடக்கு) ஏற்பட்டால், அவர் தமது இரு கைகளாலும் (தண்ணீர்) எடுத்துத் தமது தலையின் மீது மூன்று முறை (ஊற்றிக்) கொள்வார். பிறகு தமது கையால் தமது வலது புறத்தின் மீதும், மற்றொரு கையால் தமது இடது புறத்தின் மீதும் (தண்ணீரை ஊற்றிக்) கொள்வார்.” ஹதீஸ் தரம் : ஸஹீஹ் ஸஹீஹுல் புகாரி : 277 #🕌இஸ்லாம் #🕋யா அல்லாஹ் #🌜 RAMADAN🌛 #💗💫🌟🌠💗 ISLAMIC STATUS💗💫🌟🌠💗 # 🕋ALLAH is the CREATOR🕋