வேறுபாடு காரணமாக மோனிகா மதனை பிரிந்து இருந்த நிலையில் சந்தன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டு அவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 10 வயதில் ஒரு மகன் உள்ளார். சாந்தன் அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும் நிலையில் மோனிகா மகனை பார்த்துக்கொண்டே வீட்டிலிருந்து உள்ளார்.
அதிகமாக மொபைல் பயன்படுத்தும் பழக்கம் கொண்டிருந்த மோனிகா சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் செய்து அதனை இன்ஸ்டாகிராமில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அப்போது மோனிகாவுக்கும் காவல் நிலையத்தில் ஓட்டுநராக பணியாற்றும் காவலர் ராகவேந்திரா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ளன. இதனிடையே இருவரும் தொடர்ந்து பேசி வந்த நிலையில் இவர்களுடைய பழக்கம் நாளடைவில் திருமணத்திற்கு மீறிய உறவாக மாறியது. இதனைத் தொடர்ந்து மோனிகா சாந்தனை விட்டுவிட்டு காவலர் ராகவேந்திரா உடன் சேர்ந்து வாழ முடிவு செய்துள்ளார். இதற்கு கணவர் இடையூறாக இருக்கக் கூடாது என்று நினைத்து மோனிகா அவர் மீது அருகில் உள்ள காவல் நிலையத்தில் குடும்ப வன்முறை புகார் அளித்தார்.
இதனால் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணையும் மேற்கொண்டனர். இந்த நேரத்தை பயன்படுத்திக் கொண்ட மோனிகா வீட்டில் இருந்த நகைகள் மற்றும் 1.80 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு காவலர் ராகவேந்திரா உடன் ஊரைவிட்டு சென்றுள்ளார். பிறகு காவல் நிலையத்தில் இருந்து வீட்டுக்கு வந்த சந்தன் தனது மனைவியும் காவலரும் ஊரைவிட்டு சென்றதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். மேலும் இது குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்த நிலையில் இரண்டு கணவர்களை விட்டுவிட்டு மகனையும் தவிக்க விட்டு பெண் காவலருடன் சென்ற சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. #📺டிசம்பர் 16 முக்கிய தகவல் 📢 #வாழ்க்கையை அழிக்கும் கள்ளக்காதல் 💔 #காதல் செய் 💞 கள்ளக்காதல் செய்யாதே 💔


